Showing posts with label கனவு. Show all posts
Showing posts with label கனவு. Show all posts

உள்ள ஆட்சியிலா? உருவாகப் போகும் ஆட்சியிலா ? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | August 23, 2015 | , , ,

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களையும் இளைஞர்களையும் பார்த்து கனவு காணுங்கள் என்று சொன்னார்கள், அதனால் நாங்களும் முன்னாள் மாணவர்கள்தானே என்றும் இளைஞர்கள்தானே என்ற மெதப்பில் இருக்கும் இந்த தருணத்தில் கனவு ஒன்றைக் கண்டு விட்டோம் அது என்னடான்னா அதிரைப்பட்டினத்தைச் சுற்றியே இருக்கு (மண்வாசனை யோடு) சரி நம்ம கணவு பலிக்குமா? எல்லாவற்றையும் வெளியில சொன்னா ! என்று யோசனையில் இருக்கும்போது உள்ளாட்சித் தேர்தலும் வந்துவிட்டது அட ! நம்மவங்க எல்லாத்தையும் பலிக்க வச்சுடுவாங்கன்னுதான் ஒரு கற்பனையாக இப்படி எழுதத் தோனுச்சு !

இன்றைய (உள்ள) ஆட்சியில் சொன்னது அன்று இலவசம் இலவசம் இலவசம் அவைகள் இன்று எவர் வசம் என்று தேடவும் ஆரம்பித்து விட்டனர் வாக்குப் பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்திய இலவசத்தில் மனவசப்பட்ட மக்கள்.

அதிரை தேர்வுநிலை பேரூராட்சி மன்றத் தேர்தல் களம் கண்ட அந்த நேரத்தில் எந்த ஒரு வேட்பாளரும் தேர்தல் அறிக்கைகள் என்று வெளியிட்டதாக எமக்குத் தெரியவில்லை ஒருவேளை இப்படியிருக்கலாமோ தேர்தல் அறிக்கை என்றொரு மரபு உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு இல்லாமலிருக்குமோ யாம் அறியோம்!?.

எது எப்படியிருந்தாலும் ! தேர்தல் என்று வந்தால் அறிக்கைப் போர் நடந்தால்தான் அந்தச் சமரில் காரமும் இருக்கும் தும்மலும் இருக்கும் !

சரி அவர்கள்தான் அப்படிச் செய்யவில்லை என்றால் நாம் சும்மாவா இருக்கமுடியும், ஆதலால் அவர்களின் சார்பாக பேருராட்சி மன்றத் தேர்தல் அறிக்கையை நாமே இங்கே சமர்பிப்போம் மக்களாகிய நீங்கள் தீர்ப்பை சொல்லுங்க பார்க்கலாம் !

- அதிகாலை அதிரை நகரினை அழகுற அனைவருக்கும் எழுந்திருக்க வைக்க வேண்டும் !

- காலைக் கதிரவன் கன்னிக் கதிரை வெளிக் கொணரும்போது எழும் சில்லென்ற புகையோடு கூடிய தெருக்கள் பெருக்கி எழும் புழுதியை ரசிக்க ரசிகர் மன்றங்கள் ஒவ்வொரு தெரு முணைகளில் வைத்திட வேண்டும்.

- இரவில் உறங்காத கொசுக்களை காலை முதல் மாலை வரை தாலாட்டி சீராட்டி உறங்க வைக்க தனி தொண்டர் படை அமைக்க வேண்டும்.

- குடிநீர் குழாயில் தண்ணீர் வரும்வரை வரும் காற்றை குழாய் வழியாக எடுத்துச் சென்று வீடுகளில் இருக்கும் மின் விசிறிகளை இயங்க வைக்கும் நவின வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

- கோடு போட்டு ரோடு போடாவிடினும் பாடுபட்டு கட்டிய வீட்டிற்குள் மழைநீரும், சாக்கடையும் நுழையாமல் நீண்டகால திட்டம் தீட்டி வடிகால் அமைத்திட வேண்டும் !

- வீட்டு வரி வசூல் செய்ய வீடுகளுக்கு வருபவர்கள் அது பேரூராட்சி கஜானாவுக்குள் சேர்கிறதா என்று உத்திரவாதம் தந்திட வேண்டும் !

- அதிவேக மின்சாரம் வேண்டாம், அளவான மின்சாரமும் அடிக்கடி அனைக்காத மின்சாரமும் வேண்டும் !

- சுற்றித் திரியும் பன்றிகளுக்கு ஊருக்கு ஒதுங்குப் புறத்தில் சங்கம் அமைத்து தெருவுக்குள் நுழையாமல் இருந்திட நடவடிக்கைகள் அவசியம் வேண்டும்.

- சாக்கடைதான் என்று நூறு சதவிகிதம் ஊர்ஜிதப் படுத்தப்பட வேண்டும் அப்போதுதான் மக்களுக்கு குடிநீருக்கும் சாக்கடைக்கும் வித்தியாசம் தெரியும் எது எங்கே இருக்கிறது என்ற நிலை தெரியாமல் தவிக்கும் இன்றைய நிலையில் !

- பிளாஸ்டிக் பைகளின் அராஜகத்தை அறவே அகற்ற முடியாவிட்டாலும் கண்டதும் அதனைச் சுட உத்தரவு போடவேண்டும் அதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற (???) பணியாளர்களை அமர்த்தி கு.பொ.வாரியம் ஒன்று உருவாக்கி அதறகு தகுந்த தலைவரை இன்றைய இளம் தலையை அங்கே அமர்த்தப்பட வேண்டும்.

- இரவில் சுற்றித் திரியும் திருடர்களையும் திருந்தாத தருதலைகளையும் கண்கானிக்க வீட்டுக்கு வீடு வாசலில் ஐ.பி.கேமராவெல்லாம் வைக்காமல் (அரசாங்க பணத்தை வீணடிக்காதீங்க ப்ளீஸ்) உறங்கும் காவல்துறைய தட்டி எழுப்பி நடைபயில அனுப்பி வைக்க வேண்டும். ஒருவேளை அவர்களே அந்த பணியை கையில் எடுத்துக் கொண்டால் இரவை பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றி அறிவிக்கவும்.

- கடைத்தெருவில் அதிநவின வசதியுடன் (குறிப்பாக வாங்கிப்போகும் மீன், இறைச்சி ஆகியவை கெடாமல் இருக்க ச்சில்லர் வசதியுடன்) கூடிய மெட்ரோ இரயில் நிறுத்தமும் மேம்பாலமும் அமைத்திட வேண்டிக் கொள்கிறோம் யோசனைக்கு இங்கிருக்கும் படத்தைக் மாதிரியாக பயண்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.


- பிலால் நகரிலிருந்து ஷிஃபா மருத்துவ மனை வரை பறக்கும் இரயில் வேண்டும் என்று கேட்டால் கிடைக்கவா போகிறது, ஆதலால் ஒரு யோசனை ஆங்காங்க தொங்கும் மின்சாரக் கம்பிகளை நன்றாக இழுத்துக் கட்டி அருகிலிருக்கும் வீட்டாருக்கு துணி காயப்போடும் வசதியை செய்து கொடுக்க வேண்டும் கண்டிஷன் மின்சாரம் தாக்குதல் நடக்கக் கூடாது !


- ஏற்கனவே அகல இரயில்பாதைக்கு போராடிக் கொண்டிருக்கும் அதிரைப் பெருநகர மக்களுக்கு ஆறுதலாக இரண்டு இரண்டாக தனியாக இருக்கும் தடங்களில் போலி விமானம் ஸாரி போயிங்க் விமானம் ஒன்றினை வாடகைக்கு எடுத்து அங்கே நிறுத்தினால் பெருமை பட்டுக் கொள்ளலாம்.


- செக்கடிக் குளத்தின் மேல் தொங்கு பாலம் கட்டித் தாருங்கள் என்று கேட்டால், நீங்களே வசூல் செய்து ஆகாயத்தில் இடத்தை வங்கித்தாருங்கள் அங்கே கட்டுவோம் என்று சொல்லும் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் இந்த உள்ளாட்சி மன்ற வேட்பாளர்களே, அதற்கான மாதிரியை இங்கே படத்தில் மாதிரி காட்டியிருக்கிறோம் எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்கிட்டு முறையாக என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்துக் கொள்ளுங்கள்.


 - கடற்கரைத் தெரு பள்ளி அருகே நவீன வசதியுடன் கூடிய பஸ்வசதி நிறுத்தம் அமைக்கப்பட வேண்டும் அங்கே அதிரை மாநகரில் அனைத்து தெருக்களின் வழியாக செல்ல பேருந்துகள் இயக்க வேண்டும், எதிர் காலத்தில் 4 நிமிடத்திற்கு ஒரு இரயில் / மெட்ரோ நமதூர் இரயில் நிலையத்திற்கு வந்து செல்ல இருப்பதால (!!!???) அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து தர வேண்டுகிறோம் !


- மேலத் தெருவிலிருந்து வண்டிப்பேட்டை வரை சுரங்க வழி இரயில் அமைத்திட இங்கே ஒரு மாதிரிப்படம் இணைத்திருக்கிறோம் இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து தெருக்களையும் ஒன்றினைக்கும் படியாக இந்த திட்டத்தை நிறைவேற்றிட வேட்பாளர்களை கெஞ்சி கதறி விரும்பிக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இன்னும் இருக்கிறது கனவுகளாக ! இதேபோல் உங்களிடமும் இருக்கும்தானே ! பகிர்ந்திடுங்களேன் பின்னூட்டத்தில் !

அபுஇபுறாஹிம்

மற்றும் – 2 20

ZAKIR HUSSAIN | August 12, 2014 | , , , ,

ஜெர்மனி

சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் வெற்றிபெற்றது  என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த வெற்றிற்க்கு பின்னனியில் எவ்வளவு பெரிய ட்ரைனிங் &  டிசிப்ளினும் இருக்கிறது என பார்த்தால் ஜெர்மனியிடம் மானுட உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம் எவ்வளவோ இருக்கிறது. டெக்னாலஜியில் எப்போதும் "பூந்து விலாசும்" திறமை ஜெர்மனிக்கு கைவந்த கலை. [BMW, Mercedes Benz, Audi] ஜெர்மனி பொதுவாகவே மிகவும் குளிரான நாடு. ஐஸ் கட்டிகள் சாலை ஓரம் மணல் மாதிரி கிடக்கும் சூழ்நிலையில் கால்பந்து விளையாண்ட விளையாட்டாளர்கள் உலகக்கிண்ண விளையாட்டு நடந்த பிரேசிலுடைய ட்ராப்பிக்கல் க்ளைமேட்டுக்கு அவர்களது உடம்பு ஒத்துப்போக 6 மாதத்திற்கு முன்பே வந்து பிரேசிலின் தலை நகரில் ஒரு ஸ்கூல் அளவுக்கு பெரிய பில்டிங் / க்ளினிக் [டாக்டர் மற்றும் மருந்துகளுடன்] வந்து தங்கி விட்டார்கள்.

6 மாதம் தொடர்ந்து விளையாட்டுதான் , பயிற்சியின் போது அவர்களது உடம்பு ப்ரேசிலின் தட்ப வெட்ப நிலையுடன் ஒத்துபோனது. அதை விட பெரிய விசயம் உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதி விளையாட்டு நடக்கும் ஸ்டேடியம் மாதிரியே அவர்கள் தங்கியிருந்த ஸ்கூல் மாதிரியான பில்டிங் பக்கத்தில் ஜெர்மனி கட்டியது.


அதைவிட பெரிய விசயம் என்னவென்றால் வெற்றிக் கோப்பையை வாங்கியவுடன் அவர்கள் கட்டிய அந்த ஸ்கூல் மாதிரியான பில்டிங் / க்ளினிக் / கால்பந்தாட்ட மைதானம் அனைத்தயும் பிரேசிலின் ஏழைக்குழந்தைகள் பயன் படுத்திக்கொள்ள தானமாக கொடுத்து விட்டு போயிருக்கிறார்கள்.

ஜெர்மனி உலகுக்கு கற்றுத் தரும் பாடம் இதில் தர்மம் / இலக்கை நோக்கி பயனிக்க அவர்கள் எடுத்துக் கொண்ட 6 மாதப் பயிற்சி. க்ளைமேட் ஒத்துக் கொள்ள அவர்கள் செய்த தியாகம். 

முதலில் பயிற்சியை பார்ப்போம். இன்றைய சூழலில் நிறைய பேற் வெற்றியை ஒரு தம்ப்ட்ரைவிலோ / அல்லது தாயத்திலோ [படிக்காத பார்ட்டிஸ்] கிடைக்குமா என்று ஏங்குகிறார்கள். இன்றைக்கு விமானம் ஏறி நாளைக்கு வெளிநாடு போய் நாளன்னைக்கு கார் / பெரிய வீடு / பெரிய சொத்து / பெரிய வசதியான வீட்டில் ஒரு சிவப்பான பொண்ணு மனைவியாக / அமுத சுரபியாக அல்லது பின் நம்பர் கேட்காத ஏ.டி.எம். மெஷினாக மாமனார் என்று செட்டிலாக நினைக்கிறார்கள்.

வாழ்க்கையில் பயிற்சி , கடினமான  & சந்தோசமான கால கட்டங்களை தாண்டாமல் கிடைக்கும் வெற்றியையும் பணத்தையும் பாதுகாப்பது அவ்வளவு சுலபமாக இருக்காது.

எந்த தொழிலும் பயிற்சியோ அல்லது படிப்பில் சிறப்போ இல்லாத இளைஞர்கள் சமயங்களில் வீட்டிலும் வெளியிலும் ஒரு செயற்கையான மதிப்புடன் அலையும்போது பெற்றோர்களை நினைத்து கவலைப்படத் தோன்றும்.

திருநங்கைகள் செய்த பாவம் என்ன ?

திருநங்ககைகளை நம் ஊர் பக்கத்தில் பிச்சை எடுப்பவர்களாகவும், சமூகம் கேவலமாக பார்க்கும் தொழில் செய்பவர்களாகவும் மட்டும் தான் பார்க்கிறது. உலகவரை படத்தில் ஒரு கவுரவ சிம்பளாக தெரியும் நகரங்களில் திருநங்கைகள் டிசைனராகவும் , பெரும் அளவில் காசு பார்க்கும் பெர்சனல் ஹெல்த் பொருட்களை விற்கும் பிசினஸ் உமன் / மென் ஆகத்தான் பார்க்கிறது.  நியூயார்க் , லண்டன் , டோக்கியோ , இங்கேயெல்லாம் இருக்கிறேன் என்று சொல்பவர்களை சமூகம் உயர்வாகத்தான் பார்க்கிறது. நகரத்துக்கும் மனிதனை மதிப்பதற்கும் எது பாலம் என்று இதுவரை சரியாக தெரியவில்லை.

திருநங்கைகள் ஆவதற்கு காரணமே அவர்களின் நடத்தையில் சின்ன வயதில் ஏற்படும் மாற்றத்தின்போது அதை திருத்தாமல் அவர்களை வீட்டை விட்டு துரத்தி அவமான சின்னமாக அவர்களை பார்ப்பதுதான் என்பது நிதர்சனம்.

அவர்களின் தடம் மாறிய வாழ்க்கைக்கு முழுக்க முழுக்க அவர்களே காரணம் என்பதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. சின்ன வயதிலிருந்தே அவர்கள் நடத்தப்படும் விதமும் , பிறந்த வீட்டிலேயே அன்பு இல்லாத சூழ்நிலையும் அவர்களை சமுதாயத்தின் குப்பையாக வெளியே வீசப்படுகிறார்கள். 

எல்லா வருமானத்தையும் வாங்கிக்கொண்டு வயதான காலத்தில் பெரியவர்களை கவுரவமாக வெளியே துரத்தும் சமுதாயம் தான் செய்தது சரி என்றே சொல்கிறது. ஆனால் தன்னால் துரத்தப்பட்ட இந்த மனிதர்களை நடு ரோட்டிலும் , பொது போக்குவரத்துகளிலும் சீண்டாமலும், அசிங்கமாகவும் , பல பட்டப்பெயர்களிலும் அழைப்பது ........நாம் கல்விபெற்றவர்கள்தானா என்பதை சந்தேகிக்க வைக்கிறது.  

ஊனமுற்றோர்களை நாம் மதிப்பது இல்லையா?... இவர்களின் [திருநங்கைகளின்] மனதை ஊனப்படுத்தியர்வர்களை பற்றி நாம் ஏதாவது சிந்திக்கிறோமா?. குறைந்தபட்சம் நாமாவது ஊனப்படுத்தாமல் இருப்போம். பிறப்பில் தவறுகள் இருப்பின் [Genetically malformed]   சில நாடுகள் அவர்களின் தவறை ஒரு நோயாளியின் குற்றமாகவே கருதுகிறது [ சிவில் சட்டங்கள் மட்டும்].  

மனித உரிமைச் சட்டங்களின் கடுமை வரும் நாளில் இவர்களை கொஞ்சமாவது கவுரவமாக வாழ விடும். 

அதற்கும் கல்வி ஒன்றே இருளைப்போக்கும்.

பொங்கியவன்

இதுவொன்றும் சரித்திர கதாநாயகனோ, சாண்டில்யன் கதையில் வருபவனோ, அல்லது சினிமா படத்தலைப்போ அல்ல.

ஃபேஸ் புக்கிலும், ஈமெயிலிலும் அநியாயத்துக்கு உணர்ச்சி வசப்பட்டு வசை பாடுபவர்களும், 10 வருசத்துக்கு முன் வந்த ஏதோ ஒரு போட்டோவை இப்போது நடக்கும் அவலத்துடன் சம்பந்தப்படுத்தி "எங்களுக்கும் தெரியும்ல" என முந்திக் கொள்பவர்களைத்தான்  சமூகம் இனிமேல் பொங்கியவனாக கருதும்.  உணர்ச்சிவசப்படுவதற்கு உண்மையான காரணம் , சரியான புரிதல் அறிவு இல்லாதது... இல்லையென்றால்  மற்றவனின் அங்கீகாரத்திற்காக ஏங்குவது. மற்றவனின் அங்கீகாரத்துக்கு ஏங்குவதின் வேர்... சின்ன வயதில் குடும்பமே சேர்ந்து "நொச்சு" கொட்டிய சூழ்நிலை. என்ன செஞ்சாலும் "வெளங்காதவன்" என்று பெயர் எடுத்த காரணம்.

சரி வேர் என்னவென்று பார்தாகி விட்டது, விளைவு தெரிய வேண்டாமா?

மதம் சார்ந்த விசயங்களில் இவர்கள் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள கடவது. மற்ற மதத்தினரும் படிக்கிறார்கள் என்பது தெரியாமல் மதங்களை இழிவு படுத்தினால்... விளைவு ஊரைச்சுற்றி போலீசும், அப்பாவி மக்களின் உயிரும், தேவையற்ற கோர்ட் வாயிதாக்களிலும் தன்னுடைய உழைக்கக்கூடிய வயதையே தொலைத்து விடக்கூடும்.

வெறுப்புகளை கொட்டி கூட்டம் சேர்க்க முடியாது. அன்பினால் மட்டும்தான் கூட்டம் சேரும். வெறுப்புடனும் கூட்டம் சேரும் அதன் ரினிவல் டைம் மிகக் குறைவு.

இப்போது தமிழகத்தை பிடித்திருக்கும் நோய்... "என் கருத்தை ஏற்காவிடில் நீ எனக்கு எதிரி" எனும் சிந்து சமவெளி காலத்து நோய்.

இதன் தாக்கம் தொடர்ந்து இருக்குமானால் தமிழகத்தை குறிப்பாக முஸ்லீம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களை முன்னேற்ற இன்னும் சில நூறு வருடங்களை கடக்க வேண்டி வரும்.

தவறு செய்தவர்கள்  என்று நீங்கள்  நினைத்த மனிதர்களை மன்னித்துப் பாருங்கள்....

உலகம் உங்களுக்கு மிகவும் அழகாகத்தெரியும்

ZAKIR HUSSAIN

உள்ள ஆட்சியிலா? உள்ளாட்சியிலா ? 19

அதிரைநிருபர் பதிப்பகம் | October 11, 2011 | , , ,

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களையும் இளைஞர்களையும் பார்த்து கனவு காணுங்கள் என்று சொன்னார்கள், அதனால் நாங்களும் முன்னாள் மாணவர்கள்தானே என்றும் இளைஞர்கள்தானே என்ற மெதப்பில் இருக்கும் இந்த தருணத்தில் கனவு ஒன்றைக் கண்டு விட்டோம் அது என்னடான்னா அதிரைப்பட்டினத்தைச் சுற்றியே இருக்கு (மண்வாசனை யோடு) சரி நம்ம கணவு பலிக்குமா? எல்லாவற்றையும் வெளியில சொன்னா ! என்று யோசனையில் இருக்கும்போது உள்ளாட்சித் தேர்தலும் வந்துவிட்டது அட ! நம்மவங்க எல்லாத்தையும் பலிக்க வச்சுடுவாங்கன்னுதான் ஒரு கற்பனையாக இப்படி எழுதத் தோனுச்சு !

இன்றைய (உள்ள) ஆட்சியில் சொன்னது அன்று இலவசம் இலவசம் இலவசம் அவைகள் இன்று எவர் வசம் என்று தேடவும் ஆரம்பித்து விட்டனர் வாக்குப் பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்திய இலவசத்தில் மனவசப்பட்ட மக்கள்.

அதிரை தேர்வுநிலை பேரூராட்சி மன்றத் தேர்தல் களத்தில் நிற்கும் எந்த ஒரு வேட்பாளரும் தேர்தல் அறிக்கைகள் என்று வெளியிட்டதாக எமக்குத் தெரியவில்லை ஒருவேளை இப்படியிருக்கலாமோ தேர்தல் அறிக்கை என்றொரு மரபு உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு இல்லாமலிருக்குமோ யாம் அறியோம்!?.

எது எப்படியிருந்தாலும் ! தேர்தல் என்று வந்தால் அறிக்கைப் போர் நடந்தால்தான் அந்தச் சமரில் காரமும் இருக்கும் தும்மலும் இருக்கும் !

சரி அவர்கள்தான் அப்படிச் செய்யவில்லை என்றால் நாம் சும்மாவா இருக்கமுடியும், ஆதலால் அவர்களின் சார்பாக பேருராட்சி மன்றத் தேர்தல் அறிக்கையை நாமே இங்கே சமர்பிப்போம் மக்களாகிய நீங்கள் தீர்ப்பை  சொல்லுங்க பார்க்கலாம் !

- அதிகாலை அதிரை நகரினை அழகுற அனைவருக்கும் எழுந்திருக்க வைக்க வேண்டும் !

- காலைக் கதிரவன் கன்னிக் கதிரை வெளிக் கொணரும்போது எழும் சில்லென்ற புகையோடு கூடிய தெருக்கள் பெருக்கி எழும் புழுதியை ரசிக்க ரசிகர் மன்றங்கள் ஒவ்வொரு தெரு முணைகளில் வைத்திட வேண்டும்.

- இரவில் உறங்காத கொசுக்களை காலை முதல் மாலை வரை தாலாட்டி சீராட்டி உறங்க வைக்க தனி தொண்டர் படை அமைக்க வேண்டும்.

- குடிநீர் குழாயில் தண்ணீர் வரும்வரை வரும் காற்றை குழாய் வழியாக எடுத்துச் சென்று வீடுகளில் இருக்கும் மின் விசிறிகளை இயங்க வைக்கும் நவின வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

- கோடு போட்டு ரோடு போடாவிடினும் பாடுபட்டு கட்டிய வீட்டிற்குள் மழைநீரும், சாக்கடையும் நுழையாமல் நீண்டகால திட்டம் தீட்டி வடிகால் அமைத்திட வேண்டும் !

- வீட்டு வரி வசூல் செய்ய வீடுகளுக்கு வருபவர்கள் அது பேரூராட்சி கஜானாவுக்குள் சேர்கிறதா என்று உத்திரவாதம் தந்திட வேண்டும் !

- அதிவேக மின்சாரம் வேண்டாம், அளவான மின்சாரமும் அடிக்கடி அனைக்காத மின்சாரமும் வேண்டும் !

- சுற்றித் திரியும் பன்றிகளுக்கு ஊருக்கு ஒதுங்குப் புறத்தில் சங்கம் அமைத்து தெருவுக்குள் நுழையாமல் இருந்திட நடவடிக்கைகள் அவசியம் வேண்டும்.

- சாக்கடைதான் என்று நூறு சதவிகிதம் ஊர்ஜிதப் படுத்தப்பட வேண்டும் அப்போதுதான் மக்களுக்கு குடிநீருக்கும் சாக்கடைக்கும் வித்தியாசம் தெரியும்  எது எங்கே இருக்கிறது என்ற நிலை தெரியாமல் தவிக்கும் இன்றைய நிலையில் !

- பிளாஸ்டிக் பைகளின் அராஜகத்தை அறவே அகற்ற முடியாவிட்டாலும் கண்டதும் அதனைச் சுட உத்தரவு போடவேண்டும் அதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற (???) பணியாளர்களை அமர்த்தி கு.பொ.வாரியம் ஒன்று உருவாக்கி அதறகு தகுந்த தலைவரை இன்றைய இளம் தலையை அங்கே அமர்த்தப்பட வேண்டும்.

- இரவில் சுற்றித் திரியும் திருடர்களையும் திருந்தாத தருதலைகளையும் கண்கானிக்க வீட்டுக்கு வீடு வாசலில் ஐ.பி.கேமராவெல்லாம் வைக்காமல் (அரசாங்க பணத்தை வீணடிக்காதீங்க ப்ளீஸ்) உறங்கும் காவல்துறைய தட்டி எழுப்பி நடைபயில அனுப்பி வைக்க வேண்டும். ஒருவேளை அவர்களே அந்த பணியை கையில் எடுத்துக் கொண்டால் இரவை பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றி அறிவிக்கவும்.

- கடைத்தெருவில் அதிநவின வசதியுடன் (குறிப்பாக வாங்கிப்போகும் மீன், இறைச்சி ஆகியவை கெடாமல் இருக்க ச்சில்லர் வசதியுடன்) கூடிய மெட்ரோ இரயில் நிறுத்தமும் மேம்பாலமும் அமைத்திட வேண்டிக் கொள்கிறோம் யோசனைக்கு இங்கிருக்கும் படத்தைக் மாதிரியாக பயண்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.


- பிலால் நகரிலிருந்து ஷிஃபா மருத்துவ மனை வரை பறக்கும் இரயில் வேண்டும் என்று கேட்டால் கிடைக்கவா போகிறது, ஆதலால் ஒரு யோசனை ஆங்காங்க தொங்கும் மின்சாரக் கம்பிகளை நன்றாக இழுத்துக் கட்டி அருகிலிருக்கும் வீட்டாருக்கு துணி காயப்போடும் வசதியை செய்து கொடுக்க வேண்டும் கண்டிஷன் மின்சாரம் தாக்குதல் நடக்கக் கூடாது !


- ஏற்கனவே அகல இரயில்பாதைக்கு போராடிக் கொண்டிருக்கும் அதிரைப் பெருநகர மக்களுக்கு ஆறுதலாக இரண்டு இரண்டாக தனியாக இருக்கும் தடங்களில் போலி விமானம் ஸாரி போயிங்க் விமானம் ஒன்றினை வாடகைக்கு எடுத்து அங்கே நிறுத்தினால் பெருமை பட்டுக் கொள்ளலாம்.


- செக்கடிக் குளத்தின் மேல் தொங்கு பாலம் கட்டித் தாருங்கள் என்று கேட்டால், நீங்களே வசூல் செய்து ஆகாயத்தில் இடத்தை வங்கித்தாருங்கள் அங்கே கட்டுவோம் என்று சொல்லும் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் இந்த உள்ளாட்சி மன்ற வேட்பாளர்களே, அதற்கான மாதிரியை இங்கே படத்தில் மாதிரி காட்டியிருக்கிறோம் எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்கிட்டு முறையாக என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்துக் கொள்ளுங்கள்.


 - கடற்கரைத் தெரு பள்ளி அருகே நவீன வசதியுடன் கூடிய பஸ்வசதி நிறுத்தம் அமைக்கப்பட வேண்டும் அங்கே அதிரை மாநகரில் அனைத்து தெருக்களின் வழியாக செல்ல பேருந்துகள் இயக்க வேண்டும், எதிர் காலத்தில் 4 நிமிடத்திற்கு ஒரு இரயில் / மெட்ரோ நமதூர் இரயில் நிலையத்திற்கு வந்து செல்ல இருப்பதால (!!!???) அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து தர வேண்டுகிறோம் !


- மேலத் தெருவிலிருந்து வண்டிப்பேட்டை வரை சுரங்க வழி இரயில் அமைத்திட இங்கே ஒரு மாதிரிப்படம் இணைத்திருக்கிறோம் இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து தெருக்களையும் ஒன்றினைக்கும் படியாக இந்த திட்டத்தை நிறைவேற்றிட வேட்பாளர்களை கெஞ்சி கதறி விரும்பிக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இன்னும் இருக்கிறது கனவுகளாக ! இதேபோல் உங்களிடமும் இருக்கும்தானே ! பகிர்ந்திடுங்களேன் பின்னூட்டத்தில் !

- அபுஇபுறாஹிம்

வளைகுடாவில் ஒரு 'வாப்பா' கனவு... 25

அதிரைநிருபர் பதிப்பகம் | July 16, 2011 | , , , ,

என்ன நிகழ்கிறது
என்
எண்ணங்கள் நெகிழ்கிறது...

சொன்ன தகவலொன்று
சிந்தையில்
சுற்றிச் சுழல்கிறது!

உனக்குள் நெளிகிறதா
என்
உயிரின் உதிரியொன்று...
வயிற்றில் வளர்கிறதா
என்
வாழ்க்கையின் கனவொன்று!

உணவு விடுதிகளில்
அன்பே
உணவுண்ண நேருகயில்
செவிக்குணவாய் வாய்ப்பதில்லை
சினுங்கும்
உன்
கண்ணாடி வளையோசை...
வாய்க்குள் உணவோ
விழுங்க
வழியின்றி சிக்குதடி!

தங்கும் அறையினிலும்
வேலை
செய்யும் துறையினிலும்
தவமே யிருந்தாலும்
தனிமை வாய்க்காது

இமைகள் திரையிட்டு
என்னைத்
தனிமைச் சிறையிட்டு
நம்
ஆசைக் கனவுகளை
அசைபோட்டுப் பார்க்கின்றேன்!

சீதனமாய் வேண்டாமென்ற
சொந்தவீடு கட்ட வேண்டும்
வாசற் படிகளின் வலமும் இடமும்
வாசச் செடிகளை வளமாய் இடனும்

உன்னை உடனிறுத்தி
என்னை உயிர்ப்பிக்க
சின்னதாய் வாய்த்தாலும்
வாகனம் வாங்க வேண்டும்

உன்
அசைவுகளை அறிவிக்க!

அழகான தொங்கட்டான்
கழுத்துக்கொரு மாலை
கைகளில் தங்க வளை
வருகையை பறைசாற்ற
வெள்ளியில் கொலுசுகள்
என
வாங்கப் பொருள் சேர்க்க
வங்கக் கடல் கடந்தேன்

மூன்றாம் கனவின்று
முதலில் கனிகிறதா
முல்லைப் பூம்பாதம் நம்
முற்றம் வருகிறதா

இனி,
நம் கனவுகளைச்
சற்று
களைத்துப் போட வேண்டும்
மொத்த கவனமுன்
நம்
மகவுக்குத் தர வேண்டும்o

பெற்று எடுக்கு முன்
பெயரொன்று தேட வேண்டும்
கற்றுக் கொடுக்கவும் நற்
காரியங்க ளறிய வேண்டும்

நம் பிள்ளை...
ரகசிய மொழிகளின்
திடமான மொழிபெயர்ப்பு!
வாசிக்க அலுக்காத
வசீகரப் பதிப்பு!

'வாப்பா' கனவை நீ
பிரசவிக்கும் காலம்வரை
வளைகுடா வாழ்க்கையில்
விடியட்டும் பொழுதுகள்!

- சபீர்
Sabeer abuShahruk,

கனாக்கண்டேன் தோழா !!! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | May 13, 2011 | , ,

ஊரில் ஒன்றாய் நாமிருந்த காலத்தை
உறக்கத்தில் நான் கண்டேன் தோழா!
நீ என்னருகே இருந்த நாட்களெல்லாம்
உள்ளத்தின் பெருநாட்கள்

காலைமாலை இறைக்கல்வி பயில
இறைஇல்ல பள்ளி சென்றோம்
இனிதே திருக்குர்'ஆனையும்
இன்முகத்துடன் ஓதி முடித்தோம்

பள்ளி ஒஸ்தாரிடம் அன்று வாங்கியஅடி
இன்று எம் வாழ்வின் மெத்தைப்படி
முறையே ஓதியவர் ஏற்றம் பெற்றார்
தவறியவர் தட்டுக்கெட்டுப்போனார்.

குளிக்கச்சென்ற தென்னந்தோப்பில்
ஆசிரியர் இன்றி பாடம் நடக்கும்
மைனாக்குருவிகளின் பள்ளிக்கூடம்
மத்தாப்பின்றி கொண்டாட்டம் சேரும்

ஒன்றாக பள்ளி சென்றோம்
நன்கு பாடம் படித்தோம்
பள்ளியில் படிக்க தவறியதை
டியூசனில் படித்து முடித்தோம்

உலகத்தை உருண்டையாய்
உருட்டிவிளையாண்ட பழிங்கியும்
சாட்டையை சட்டென சுழற்றி
சுற்றித்திரிய வைத்த பம்பரமும்

மேக்காற்றில் அசைந்தாடும்
வால் நீண்ட பட்டமும் அதற்கு
கட்டணமின்றி அனுப்பிய தந்தியும்
அதை பெற்றுக்கொண்ட பட்டமும்

கூறிய இருமுனைக்'கில்லி'யும்
ஆசானாய் அதன் நீண்ட கம்பும்
தேடிச்சேர்த்த ஜெமிலாட்டு மூடியும்
கொத்தனாரின்றி கட்டிமுடித்த மண்வீடும்

ஆயுதமாய் அட்டபில்லும்
அதில் அடிபட்ட சிட்டுக்குருவியும்
இரக்கப்பட வைத்து விடும் எம்மை
அதை பறக்க விட மனசு துடிக்கும்

தட்டுத்தடுமாறி அடித்த தட்டச்சும்
முற்றுப்பெறாத ஆங்கிலப்பயிற்சியும்
இன்று கனவுகளில் வந்து செல்லும்
உள்ளக்காயத்திற்கு மருந்து போடும்

உம்மாவிடம் அடம்பிடித்து வாங்கிய
அலிலப்பரும், ஜாமின்ட்ரி பாக்ஸும்
இன்று உள்ளத்தில் படம் வரைந்து
உற்சாகத்தில் கோட்டை எழுப்பும்.

ப.கோட்டையில் வாங்கிய பெருநாள்சட்டை
மடமட சப்தம் வந்த வேட்டி
மாமா தந்த ஓமக்ஸ் வாட்ச்சு
ஆசையுடன் அப்பாதந்த அல்வா துண்டு

முதலில் கைப்பிடித்த கல்லுக்குச்சியும்
பிறகு பழகிய கைநடன கணிப்பொறியும்
எம் மனசுக்குள் அரங்கம் அமைத்து
நடுவரில்லா பட்டிமன்றம் நடத்தும்

கப்பல் போன்ற ஊதா தொப்பியும்
காசில்லாமல் கரைசேரும் ஆசைகளும்
காட்சிகள் பல இங்கு அரங்கேறும்
நம் கனவுகளில் எல்லாம் நடந்தேறும்

கள்ளத்தனமாய் ஓட்டிய மோட்டார் சைக்கிளும்
காசில்லாமல் பழகிக்கொண்ட பாஸ்போர்ட்எடுக்குமுறை
எட்டுத்தப்பில் கனவில் வந்து செல்லும்
உள்ள ஏக்கத்துடன் மறைந்து போகும்

மாலை நேர விளையாட்டு
நம்மை எல்லாம் சீராட்டும்
மஹ்ரிப்பின் பாங்கு ஒலி
விளையாட்டிற்கு முடிவு கட்டும்

சுத்தம் செய்த எம் உடலும்
சுகமாய் இரவும் ஆரம்பமாகும்
இருள் வந்து இருக்கை அமைக்கும்
தெரு விளக்கு விழித்துக்கொள்ளும்

மின்வெட்டு பொட்டிக்கடையும்
குத்துவிளக்கில் மிளிரும் கொட்டகையும்
எண்ணெய் தடவிய காகிதமோ
தன்பக்கம் கொசுக்களை ஈர்த்தெடுக்கும்

மின்மினிப்பூச்சிகள் வானில் பறக்கும்
பாசஉம்மா தந்த காசில் உள்ளம் மிதக்கும்
நண்பர்கள் கூட்டம் ஒன்றாய் சேரும்
இன்பமாய் இனியதை வாங்கி திண்கும்

எங்கோ இருக்கும் எனக்கும்
அங்கே இருக்கும் உனக்கும்
இடையிடையே வந்து செல்லும்
உறக்கத்தில் மேய்ந்து செல்லும்

கருமையில்லா அரும்பு மீசையும்
கன்னத்தில் சிறுகுன்றுகளாய் பருவும்
மனதிற்குள் அலைபாயும் ஆசைகளும்
மல்லாக்க படுக்க வைத்த இதயமும்

சீராக வாரிச்சீவிய சிங்கார தலைமுடியும்
இன்று சின்னாபின்னமானது நாகரீகமாய்
பரட்டைத்தலையன் இன்று பெருமைப்பட்டான்
தலைசீவி வந்தவனை வெட்கப்படவைத்தான்.

அன்று மழையில் நனைந்த உடலும்
வெயிலில் அலைந்த களைப்பும்
பனியில் பார்த்த பாட்டுக்கச்சேரியும்
பரணில் வைக்கப்படாத நினைவுகளும்

மரணித்த நம்மவர்கள் போக
மீதி இருக்கும் நீயும், நானும்
தொலைத்த இன்பத்தை திரும்பிபெறுவோமோ?
அதற்கு முன் இறைவனடி சேர்வோமோ?

இன்று ரசிக்க நம் ரயிலடி சென்றாலும்
புசிக்க நல்ல பிரியாணி தின்றாலும்
இருக்க நல்ல இருக்கை கிடைத்தாலும்
அனுபவிக்க அருகில் நீ இல்லையடா தோழா!

அன்று விளையாடித்திரிந்த நாட்களில்
எங்கோ தொலைத்து வந்த இன்பம்
இன்று சல்லடையாய் தேடினாலும்
எங்கும் இல்லையடா தோழா!

இன்ஷா அல்லாஹ் இங்கு கனவுகள் தொடரும் காட்சிகள் படரும் காணத்தவறாதீர் கட்டணமேதுமில்லை.

- மு.செ.மு. நெய்னா முஹம்மது