தாய்மடி… தங்கமடி!
அம்மா !
என் தாயே!
ஏன் தாயே

எந்த தயை
இல்லாமல் இருந்தாயே!
இப்படி
நோயில் விழுந்தாயே!
உன்
வயிற்றில்
பிறந்தவனல்ல நான் !
ஆயினும்
அவ்வப்போது என்னையும்
ஊட்டி வளர்த்திருக்கிறாய்.
நான் அனாதை என்பதை
மாற்றி வைத்திருக்கிறாய்.
உன்னை நினைத்து
நான் அழவதா?
இறக்கம்
கொண்டு மெளனமாவதா?
இத்தனைக் காலம்
நீ கடந்து வந்ததை
நினைத்துப் பார்க்கிறேன்
இமை இரண்டையும்
நனைத்துப் பார்க்கிறேன்.
நீ
பிறந்த இடம்
வறுமையின் துயர்
வந்த இடமல்ல
மாட மாளிகையும் அல்ல!
அல்லாடும் அன்றாடங்
காட்சியுமல்ல!
நடுத்தர ஆசிரியருக்கு
பிறந்த மகவு நீ!
ஆசிரியனுக்கு பிறந்தாலும்
படிப்பில் பிடிப்பில்லாமல் போனதனால்
பாட்டி அரவனைத்தும்
கல்வியை புறக்கனித்தாய்!
வாலிபப் பருவத்தில்
ஒரு பருந்திடம் உனை ஒப்படைத்தாய்
பருந்து அன்றாடம்
அருந்தும் மதுவுக்கும்
சேர்த்து நீ உழைதாய்!
காலச் சூழ்நிலையில்
மூன்று
முத்தான பிள்ளைகள்
பெற்றெடுத்தாய்.
காலன்
உன் கணவனான
அந்த கயவனை
அள்ளிச் சென்றதும்,
முத்துக்களை வளர்க்கவே
நீ மூச்சு முட்டிப் போனாய்
உன் பனியிடத்தில்
அனாதையாய்
கிடந்த என்னையும்
எடுத்து வளர்த்தாய்.
இன்றோ
நீ நோயில்
ஆஸ்பத்திரியில் படுத்த போது
வீடே பட்டினி!
சொல்லால் அடித்தச் செல்லமே... !
மகளே!

என்னுயிரின் பிரதியே!
உன் தாயின் வயிற்றில்
பத்து மாதம் இருந்தாய்!
நானோ
பதினெட்டு வருடமாய்
உன்னை இதயத்திலும்
என் உயிரிலும் சுமக்கிறேன்
என்னுயிரைக் தந்து
உனை வளர்க்கிறேன் - ஆனால்
நீ சொல்கிறாய் உனக்கு உயிரென
அவனைக் காட்டி!
போகட்டும்!
உன் விருப்பம்
என ஒத்துக் கொண்டாலும்
அவன் இல்லையே அம்மா!
நல் குணத்தினனாய்!
நீ
கேட்ட பொம்மைகள் வாங்கித்தந்தேன்.
நீ
கேட்ட ஆடைகள் வாங்கித் தந்தேன்.
நீ
கேட்ட எல்லாமும் உனக்குத் தந்தேன்.
என்
பிரியத்தையும் உனக்குத் தந்தேன்
நீ கேட்காத சுதந்திரமும் உனக்குத் தந்தேன்
நீ இன்று கேட்பதுவோ
உனக்கு என்றும்
நான் தந்த
ஏதும் தராத காதலை!
அது பொய் காதல்!
மனப்புணர்ச்சி அல்ல
இனக்கவர்ச்சி!
என
புரிந்து கொள்ளாத - உன்
பிடிவாதம்...
பித்துப் பிடித்தவன் போல்
நான் செத்துச் செத்துப்
பிழைக்கிறேன்.
நீ
சிறுவயதில்
உணர்வற்று சடமாய்,
முக்கால் பினமாய் இருந்த போது
உனக்கு தாயாய், தந்தையாய்
என் உயிர் மேல் வைத்து
காத்து,
பின்
நீ நல்குணம் ஆகும் வரை
நான் நடைப்பினமாய்
வாழ்ந்து வந்தேன்.
குடம் குடமாய்
என் கண்ணீர் வடிகிறதே!
உதிரம் கொதிக்கிறதே!
இதயம் விட்டு ,விட்டு வெடிக்கிறதே!
இவையாவும்
உனக்கு
காதல் மயக்கத்தால்
புரியாமல் போனது
என் வாழ்வின் சாபமா?
என்னை ஜடமாக்கியது
இன்று நீ சொன்ன சொல்
“நான் உணர்வற்ற ஜடமல்ல!”
தீர்ப்பைத் திருத்து !?
நான் போகிறேன் மண்ணே!
என்னை விட்டு என்றும் அகலாத
உன்னை விட்டு!
நான் பிறந்து
பாதம் பதிந்த மண்ணே!
என்னைச் சுமந்த
அன்னையையும் சுமந்த அன்னையே!
உன்னை விட்டுப்
போகிறேன்.

உன் நினைவுகளை விட்டல்ல
என் பந்தங்களை விட்டு!
மண்ணின் மைந்தர்களை விட்டு
நாகரிகம் வளர்ந்த
இந்த காலத்தில்
ஏன் இம்மண்ணில்
அநாகரீக சமூகம் பிரசவித்தாய்?
பெண்பிள்ளை பிறந்தால்
கள்ளிப்பாலூற்றி கொல்லும்
உள்ளம் ஏன்தான்
உன் மைந்தருக்கு
மட்டும் வந்ததோ?
பெண்ணை மணம் முடிக்க
வரதட்சனை எனும் நோய்
சக மனிதனுக்குள் வந்ததெப்படி?
ஊட்ட சத்து இல்லாத
ஊட்டமா உன் மார்பின் பால்?
அடுத்தவன் கால் வாரி
கெடுத்தவன் தான்
இந்த மண்ணில் அதிகம்.
ஊர் என்றால்
ஒத்து வாழ் என்பது
தீமையையும் சகித்து வாழ்வதா?
நன்மை தீமை பிரித்து
பகுத்து வாழ்வதா?
கீழ் குணம் கொண்டு
வாழாமல் இருப்பதே,
மேல் என்ணம்
கொண்டவர்களின் கொள்கை
அவர்களைச் சுமந்த என் மண்னே
அதில்தானே என்னையும் சுமந்தாய்
நியாயம் கேட்ட என்னை
உன்னைவிட்டுத்
தள்ளி வைப்பதாய்
ஊர் பெரியவர்கள்
என அழைத்துகொள்ளும்
மமதை கூட்டம்
சொல்லி வைத்ததும்
கொள்ளி வைத்ததாய்
நான் உணர்ந்தேன்
துணிந்தேன்,
மண்ணா?
நேர்மையா?
வாய்மையா?
என்றாவது என் ஊரும்
வருந்தி திருந்தும் என்ற
நம்பிக்கையோடு
முடிவு செய்தேன்...
ஊரையே நான்
ஒதுக்கி வைப்பதென்று!
- CROWN