Showing posts with label சுர்மா. Show all posts
Showing posts with label சுர்மா. Show all posts

கண்கள் இரண்டும் - தொடர் - 34 7

அதிரைநிருபர் பதிப்பகம் | April 28, 2014 | , ,


சுர்மா – இத்மித் – குஹ்ல் என்னும் கண்-மை இட்டுக் கொள்வதை வழிபாடாகவே கருதுகிறது இஸ்லாம். அது நபிவழி (சுன்னத்) என்னும் அந்தஸ்த்தில் உள்ள காரியம். அது ஒப்பனையோ கற்பனையோ அல்ல. ஆன்மிகத்தின் அம்சம்.

’இத்மித்’ என்று அரபியில் அழைக்கப்படும் மூன்றாம் ஆண்டிமொனி சல்ஃபைடு பற்றி நபிகள் நாயகம் நயந்துரைத்த மொழிகள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபி-மொழி:

“உங்கள் அஞ்சனங்களில் சிறந்தது இத்மித். அது பார்வையைத் தெளிவாக்குகிறது, இமையின் முடிகளை வளர்த்துகிறது” (நூற்கள்: சுனன் நஸாயீ #5113, சுனன் அபுதாவூத் #3837).

நபித்தோழர் அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

“நபி (ஸல்) தன் கண்களுக்கு மை இடுகையில் வலக் கண்ணில் மூன்று முறையும் இடக் கண்ணில் இரண்டு முறையும் இடுவார்கள்” (நூல்: முஸன்னஃப் இப்னு அபீஷைபா) 

சைக்கிள் கம்பியின் முனையை கூராக்கி சுர்மா டப்பாவுக்குள் தேய்த்து கண்களின் கீழும் இமைகளின் மேற்பரப்பிலும் ஒரு கோடு போடுவர் சில சமயம் கோடு போடும் போது இலேசாக கண்களுக்குள்ளும் சுர்மா தூள் சிதறி விழும் கண்கள் எறிந்து பின்னர் குளிர்ச்சியாக இருக்கும். சுர்மா இடுவது கண்ணுக்கு குளிர்ச்சி .

அந்த காலத்தில் பெரு நாட்களில் பள்ளிவாசல்களில் சில சுர்மா வியாபாரிகள் எல்லூருக்கும் கண்களில் சுருமாவிட்டு விடுவார்கள் பெருநாள் தொழுகை தொழப்போ னவர்கள் ஒவ்வொருவரும் வீடு திரும்பும்போது அவர்களின் கண்கள் எடுப்பாக காட்கியளிக்கும் அதை கானு துணைவியாருக்கோ அளவிலா மகிழ்ச்சியில் துணைவியாரிடமிருந்து கிடைக்க வேண்டியவை அதிகமாகவே கிடைக்கும் இப்பொழுதெல்லாம்  எங்கே ம்.. ஹூம் அந்த சுர்மா வியாபாரிகளை பார்க்கவே முடிவதில்லை

இஸ்மித் என்ற   (கருப்பு) கற்களால் சுர்மா இடுங்கள் அது பார்வையை கூர்மையாக்கும் இமைகளின் முடியை வளரசெய்யும்  என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்  என அறிவிக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள்   (நபி ஸல்) அவர்களிடம் சுர்மாகூடு ஒன்று இருந்தது ஒவ்வொரு இரவிலும் இருகண்களிலும் மூன்று தடவை இட்டுக்கொள்வர்கள் என்றும் அறிவித்தார்கள்  நூல் :திர்மிதி 1757

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: எவர் சுருமா தீட்டுகிறாரோ அவர் ஒற்றைப்படையாக தீட்டுவாராக. எவர் (அவ்வாறு) செய்தாரோ அவர் நல்லதை செய்தவராவார்! எவர் (அவ்வாறு) செய்யவில்லையோ அதனால் தவறில்லை. 

கண்களுக்கு சுர்மா இடுவதினால் கண்பார்வையை கூர்மையக்குவதோடு கண் இமை முடிகளையும் வளரசெய்கிறது என்றும் மேலும் நபி (ஸல் ) அவர்களின் காலத்தில் கண்வலிக்கும் கண் நோய்களுக்கும் மருந்தாக இந்த சுர்மா பயன்பட்டிருக்கிறது

இஸ்லாமிய பார்வையில் முதல் தரமான சுர்மா

நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்தபோது, அவருடைய இறைவன் அவரிடம் பேசினான்; அப்போது மூஸா: ‘என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக!’ என்று வேண்டினார். அதற்கு அவன், ‘மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது. எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!’ என்று கூறினான். ஆகவே, அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியை தோற்றுவித்தபோது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், ‘(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்; ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்” (அல்குர்ஆன்: 7:143)

அன்று கருகிய சினாய் மலை   எகிப்தின்  சினாய் குடாவிலுள்ள ஒரு மலையாகும். இது கடல் மட்டத்திலிருந்து 2,285 [மீற்றர்] உயரமானதாகும். சூழவுள்ள சமவெளியிலிருந்து செங்குத்தாக உயர்ந்து காணப்படுகிறது. இந்த மலையிலிருந்து பெறப்பட்ட  கருகிய கற்களையும்   தூள்களை கொண்டும்  யுனானி முறையில் கற்களை மருத்துவ முறையில் தேய்த்து எடுக்கப்பட்டு சுத்தமான முறையில் சுர்மா தயாரிக்கப்படுகிறது இதுவே அன்றைய அரபியர்கள் பயன் படுத்திய முதன்மை தரம் வாய்ந்தவையாகும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது இந்த தயாரிப்பின்                         

மருத்துவ பயன்கள்  ஒவ்வாமை இமைப்படல அழற்சி மற்றும் கண்களை குளிர்விக்கவும் பயன்பட கூடிய ஒரு மருத்துவ  பொருளாக பயன்படுகிறது .

சுர்மா வின் பயன்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும் பொழுது சுர்மா இடுங்கள் அது  கண் பார்வையை கூர்மையாக்கும் என்கிறார்கள் அதுபோலவே இன்றைய ஆராய்ச்சியாளர்கள்  சுர்மாவின் பயன்கள் பற்றி கூறுகையில் சுர்மா தயாரிக்கப் பயன்படும் கலினா சல்பேட்டின் பொதுவான குணம் அசுத்தங்களை சுத்தகரிக்க கூடிய ஒரு தாதுப்பொருள் என்றும் சுத்தமான   சுர்மா இடுவதினால் கண்கள் சுத்தமடைவதுடன் சூரிய கதிர்களால் ஏற்படும் கண் நோய்களையும் போக்கவல்லது கண்நோய்கள் வராமல் தடுக்கும் கண்களுக்கு ஒளியூட்டக் கூடிய ஒரு சிறந்த மருத்துவ பொருள் என்றும் அவர்களது ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்து இருக்கிறர்கள் அரபு நாடுகளிலும் எகிப்திலும் பரவலாக சுர்மா பயன்படுதக் கூடியவர்களின் கண்களில் கண் நோய்கள் இல்லாமல் இருப்பதாகவும்   அறிவித்திருக்கிறார்கள்

இந்த சுர்மா கலினா [ஈயத் தாது]  galena (lead sulfide) மற்றும் சில கூட்டுப்பொருட்களைக்கொண்டு  தயாரிக்கப்படுகிறது ஆரம்பகாலம்  முதல் எகிப்தில் செங்கடலுக்கு அருகில் வெட்டியெடுக்கப்பட்ட Galena  சினாய் மலையில் கிடைக்ககூடிய Galena கொண்டும்  தயாரிக்கப்பட்டு வந்தது  இன்று சிலசமயங்களில் எகிப்து கிராமபுறங்களில்  சில வெள்ளை கார்பனேட், குங்கிலியம் கொண்ட வாசனை பொருட்கள்  சூரியகாந்தி விதைகள் மற்றும் பாதாம் கிளிஞ்சல்களின் புகைக்கரி,ஆகியவற்றின் மூலமும்  தயாரிக்கப்படுகிறது.  இந்தியாவில் ஆயுர்வேத , சித்த மருத்துவத்திலும் சுர்மா தயரிப்பினயும் சுர்மாவின் பயன்களையும் காணமுடிகிறது இம் மருத்துவத்தில்  சந்தனக்கட்டை,மஞ்சள், கரிசலாங்கண்ணி ,ஆமணக்கு எண்ணெய்.  சுத்தமான நெய்  கொண்டு பலவிதமான  பதப்படுத்தி எரியூட்ப்பட்ட புகைகரி மூலம் சுர்மா தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது .

சுர்மா என்பது மிகவும் பழமை வாய்ந்த ஒரு கண்மருத்துவ மற்றும் அலங்கார பொருள் என்றாலும் அலங்காரத்தை விட கண் மருத்துவமே மேலோங்கி இருப்பதை நாம் பார்க்கிறோம் பண்டைய எகிப்தியர்கள் அவர்களின் பாரம்பரிய விசயமாக இதனை கருதினார்கள்  மேற்கு ஆப்ரிக்கா பகுதிகளில்  ஆண்களும் பெண்களும் பயன்படுத்துகிறார்கள் .இந்தியாவில் அதிகமாக பெண்களே பயன் படுதக்க்கூடியவர்களாக இருக்கிறார்கள்

நாம் இடும் சுர்மா முக்கியமாக  தரம் வாய்ந்தக இருக்க வேண்டும் ஒருசமயம் நாம் மலிவான விலையிலும் தரமற்ற சுர்மாவினை இடும் பொழுது அதனுடைய விளைவு மிக பயங்கரமானதாக  இருக்கும் என்று  அறிவியல் ஆய்வாளர்களும் .. ஆராய்ச்சியாளர்களும் மிகவும் வலியுறுத்தி கூறுகிறார்கள்  கலினா அல்லாத சில ததுப்போருட்களின் மூலம் தயாரிக்கபடும்  சுர்மா பயன்படுத்துவதினால் போதை மற்றும்  இரத்த சோகை  கண்நோய்கள் மற்றும் இதன் மூலம் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் …

பண்டைய கால எகிப்தியர்களின்  சினாய் மலையிலிருந்து பெறப்பட்ட  கருகிய கற்களையும்   தூள்களை கொண்டும்  யுனானி முறை தயாரிப்பான சுர்மா முதல் தரமாக இருக்கிறது எகிப்தியர்களின்சுர்மா  இடுவதினால் கண்களுக்கு எந்த தீங்கும் இல்லை எனவும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் .. 

ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டார். ('இத்தா'வில் இருந்த அவளுடைய கண்ணில் வலி ஏற்பட்டதால்) அவளின் கண்கள் குறித்து அவ(ளுடைய உறவின)ர்கள் அஞ்சினர். எனவே, அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அப்பெண் அஞ்சனம் (சுர்மா) இட்டுக்கொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அவள் அஞ்சனம் இடவேண்டாம். (அறியாமைக் காலத்தில் கணவன் இறந்தபின்) மனைவி அவளுடைய 'ஆடைகளிலேயே மோசமானதில்' அல்லது 'மோசமான வீட்டில்' தங்கியிருப்பாள். (கணவர் இறந்து) ஒருவருடம் கழிந்து விட்டால் (அவ்வழியாகக்) கடந்து செல்லும் ஏதேனும் ஒரு நாய் மீது ஒட்டகச் சாணத்தை அவள் வீசியெறிவாள். (அந்த அவலம் இப்போது இல்லை.) எனவே, அவள் நான்கு மாதம் பத்து நாள்கள் கழியும் வரை அஞ்சனம் இட வேண்டாம்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) (நூல்கள் - புகாரி 5336, 5338, முஸ்லிம் 2975-2977, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ)

கண்களுக்கு சுர்மா இடுவது பார்வையைக் கூர்மையாக்குவதோடு இமைகளின் முடியை வளரச்செய்யும் என்றும்  மேலும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கண் வலிக்கு மருந்தாகவும் சுர்மா பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் மேல்கண்ட அறிவிப்புகளிலிருந்து அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் தமது மேனியை பராமரிப்பதற்காக பிரத்தியேக ஏதும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார் என அறிவிப்புகள் எவற்றையும் நாமறியவில்லை.

இங்கே குறுப்பிடப்பட்டுள்ள சில கம்பனிகளின் தயாரிப்புகள் பயன்படுத்துபவர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது சிறந்த சுர்மா இட்டு சுன்னாவினை பேண அல்லாஹ் அருள் புரிவானாக நபிகளாரின் மருத்துவத்தில் சுர்மா இடுவது பற்றி நபிகளாரின் தோழர்கள் மூலம் நாம் அறிய முடிகிறது இறைதூதராக அனுப்பப்பட்ட நமது கண்மணி நாயகம் ஸல் அவர்களின் வாக்கினை மெய்ப்பிக்கும் வண்ணமாக அவர்கள் காட்டித்தந்த அனைத்திலும் நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது …. சுபுஹகாணல்லாஹ்..

சுர்மா பற்றிய அணைத்து தகவல்களும் நன்றியுடன் பிரபஞ்சகுடில் என்ற தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது

இனி அடுத்த தொடரில் கண் இல்லாதோரின் கல்வி பற்றி தொடரும்

(வளரும்)

அதிரை மன்சூர்

கண்கள் இரண்டும் - தொடர்-33 7

அதிரைநிருபர் பதிப்பகம் | April 21, 2014 | , ,


சுர்மா

அந்தக் கரிய கல்லினை ஒரு கூழாங்கல்லில் தேய்த்து விரலால் தொட்டெடுத்துக் கண்களின் கீழிமைகளில் தீட்டிக் கொண்டேன். “மை போட்டது போல் இருக்கிறது” என்று கேலி பேசினாள் அவள்.

கண்கள் பெண்களுக்கு மட்டும் இருக்கும் பாகம் அல்லவே? ஆண்கள் மையிட்டுக் கொண்டால் ஆகாதா? யாரும் அப்படி இட்டுக் கொண்டதே இல்லையா என்ன? -இப்படிச் சிந்தித்தேன்.

இதனைத் தொடர்ந்து சரம் சரமாய் எண்ணங்கள் உதிக்கத் தொடங்கின. கண்-மைச் சிந்தனைகள்.

”கண்ணுக்கு மை அழகு
கவிதைக்குப் பொய் அழகு”

என்னும்வைர முத்துவின் வரிகள் தவழ்ந்தது என் நினைவில். கண்ணுக்கு மை எப்படியோ அப்படித்தான் கவிதைக்குப் பொய்.

அதாவது கற்பனை. மை என்பது இயற்கையிலேயே கண்ணில் இல்லாத ஒன்றுதானே? அதனை ஒப்பனையாகத்தான் கண்ணுக்கு எழுதுகிறார்கள். அது போல் கற்பனை என்பது பொய்தான். ஆனால் கண் உண்மையாக இருப்பது போல் கவிதை உண்மையாக இருக்க வேண்டும். மையே கண் ஆகி விடாது. பொய்யே கவிதை ஆகி விடாது.

அழகிய கண்களுக்கு மை தீட்டினால் அழகு அதிகம் ஆகும். ஆனால் இயல்பிலேயே ஒன்றரைக் கண்ணாக இருப்பதற்கு மை தீட்டுவதால் அழகு வந்துவிடாது அல்லவா? கவிதையும் அப்படித்தான். கேவலமான சிந்தனைகளுக்குக் கற்பனை அலங்காரம் அழகு சேர்க்காது.

பெண்கள் தங்கள் கண்களுக்கு அஞ்சனம் தீட்டி அழகுபடுத்திக் கொள்ளும் பழக்கம் மிகவும் தொன்மையான ஒன்று. மண்ணில் அது கலவையாகக் கிடைக்குமே அன்றித் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை. சொல்லப் போனால் பெண்மை பேணும் கண்-மையும்கூட தனிமைக்கு எதிரானதுதான்!

இரண்டாம் லெட் சல்ஃபைடு என்பது மற்றொரு வஸ்து. இது காரீயம் என்னும் உலோகத்தின் கலவை. கலீனா என்பது இதன் செல்லப் பெயர். காரிகையின் கண்ணுக்குக் காரிய வீரியம் நல்கும் போலும். இதில் கொஞ்சமாக வெள்ளியின் சல்ஃபைடுக் கலவையும் இருக்குமாம்.

அல் நிறத்து அஞ்சனத்தை ஒளிமிகு விழியில் எழுதிக் கல் தரத்து நெஞ்சுகளைக் கரைக்கும் அந்தப்புரத்து அழகிகள் அற்றை நாள் எகிப்திலும் கிரேக்கத்திலும். அவர்கள் மேலிமைக்கு கொஹ்ல் கொண்டு கறுமையும் கீழிமைக்கு ’மலச்சைட்’ (காப்பர் ஹைட்ராக்ஸைடுத் தாது) தாமிரக் கலவையால் பச்சை நிறமும் தீட்டி அலங்கரித்தனர். பார்க்கும் கண்களிலேயே கரிய நிறமும் பச்சை நிறமும் தோன்றுதடா நந்தலாலா!

அந்நாட்களில் எதிரிகள் மீது ஏவப்படும் கணைகளின் முனைகள் கொடிய விஷத்தில் முக்கி எடுத்தவையாக இருக்கும். காயத்தோடு எவரும் தப்பிக்க முடியாமல் அது காயத்தை உயிர் உலர்ந்த கட்டை ஆக்கிவிடும்! புறப்போரின் இந்த மரபை அகப்போரில் ’அப்ளை’ செய்து பார்த்தேன். சிந்தை ஒரு சிறு கவிதையை உடனே ’சப்ளை’ செய்தது. ’வில் வில் வில் உன் விழியம்பில் எனைத் தாக்காதே’ என்று பாடிய கவிஞர் வாலியின் பாணியில்:

“அம்பாகப் பாய்ச்சுகிறாள் அவளின் விஷனை
மையென்று வைக்கிறாள்
அதன் முனையில் விஷமாக

’அல்-குஹ்ல்’ என்னும் அரபிச் சொல்லின் அடியாகப் பிறந்த ஆங்கிலச் சொல் ஆல்கஹால் (alcohol). ஆல்கஹால் என்றால் மது / சாராயம். ஆனால் அரபியில் மதுவுக்கு ஷராப்/ நபீத் /ஃகம்ர் என்று பெயர்(கள்)! ’குஹ்ல்’ என்பது கண்-மைதான்.

”மை எழுதிய கண்களால
வசியம் வார்க்கிறாள்
ஆண்களின் மனதில்”

மேல் வர்க்கத்துப் பெண்கள் தம் கண்களுக்கு மை தீட்டுவது அழகின் பாற்பட்ட ஒன்றாக இருந்தாலும், எகிப்திய எத்தியோப்பிய அரேபியப் பகுதிகளில் பாலைவனத்தில் வாழ்க்கை நடத்தி வந்த மக்கள் – ஆண் பெண் இருபாலரும் – தம் கண்ணுக்கு மை இட்டுக் கொண்டது அழகு கருதி அல்ல.

பாலை எனும் பாவையின் மேனி முழுதும் பகலவனின் வெய்யில் எனும் பசலை படர்ந்து தகிக்கும் காட்சி காண்போருக்குக் கண் கூசும்! பார்த்துக் கொண்டே இருந்தால் எரிச்சலும் உண்டாகும்! அந்நிலைக்கு ஆகாமல் விழிகளைக் காக்கும் பொருட்டு அவர்கள் அஞ்சனம் அப்பிக் கொண்டனர். ஆமாம், மையின் கறுப்பு வெய்யில் ஒளியை உள்வாங்கிக் கொள்வதால் அதன் அடர்த்தி குறைந்து மிதமாகவே கருவிழிப் பாவை மீது படும்!

பண்டைய இந்தியாவில் பாவையர் தம் விழிப் பார்வை கூர்மை பெறும் பொருட்டு இமைகளின் விளிம்பில் இட்டுக் கொண்ட மை, சந்தனத் திரி எரியும் விளக்கின் புகையை ஆமணக்கு எண்ணெய்யில் (விளக்கெண்ணெய்யில்) படிய வைத்து வழித்துத் தயாரிப்பது.

விட்டில் பூச்சிகள் கவரப்பட்டு விழுகின்ற
விளக்கின் புகை கொண்டு மை செய்தது
விழிகளையே விளக்காக்கித் தம் காதலரை
விட்டில் பூச்சிகளாய்க் கவர்வதற்கா?

வரலாறும் அறிவியலும் இப்படிச் செப்ப இலக்கியத்தின் பக்கம் என் இதயம் திரும்பியது.

”கண்ணுள்ளார் காதலவர் ஆகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து” (1126)

என்று காதலி ஒருத்தி சொல்வதாகப் பாடுகிறார் திருவள்ளுவர்.

‘கண்ணில் என் காதலர் இருக்கிறார். மறைவார் என்பதால் மை எழுத மாட்டேன்’ என்று இதற்குப் பொருள். ‘இமைக்கும் நேரம் கூட இடைவெளி இன்றி அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். எனவே கோலம் போடக் காலம் இல்லை’ என்பது மணக்குடவர் இக்குறளுக்கு எழுதிய உரையில் காணப்படும் கருத்து!

இக்கருத்தையே கொஞ்சம் மாற்றி அப்துல் ரகுமான் இப்படிச் சொன்னார்:

‘வீட்டுக்குள் அவர். வாசலில் எதற்கு வரவேற்புக் கோலம்?’

அப்துல் ரகுமானின் கஸல் துளி ஒன்று என் சிந்தனை மீது சில்லென்று தெரித்தது.
“கண்ணுக்கு மை தீட்டக்
கோல் எடுக்கிறாள்
அந்தோ
யாருடைய விதி
எழுதப்படப் போகிறதோ?”

நானும் ஏதாவது சொல்லிப் பார்க்க நாடினேன். சட்டென்று தோன்றின இவ்வரிகள்:

“அவளின் கருவிழிகள்
இரு கவிதைகள்
அதற்கு
அவளே வரைகிறாள்
மையால் உரை”

“கண்ணுக்கு மை என்பது அளவாக எடுத்து நிதானமாகத் தீட்டப்பட வேண்டும். கோதி எடுத்து அப்பிக் கண்ணையே மறைத்து விடக்கூடாது. அது போல் வேதத்திற்கு இயற்றப்படும் உரை அளவாக இருக்க வேண்டும். நிதானமாக எழுதப்பட வேண்டும். மூலக் கருத்தையே மறைப்பதாக இருக்கக் கூடாது.” 

கண்களுக்கு இடும் சுர்மா பற்றிய இத்தொடர்  அடுத்தவாரத் தொடரையும் அலங்கரிக்கும்
(வளரும்)
அதிரை மன்சூர்