Showing posts with label UAE. Show all posts
Showing posts with label UAE. Show all posts

தேசியத் தினம் 45 26

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2016 | , , , , , , ,


ஷேக்குகள் எழுவரின்
போஷாக்குக் குழந்தை
அமீரகம்!

இந்தக்
கூட்டமைப்பின் வெற்றி
ஒற்றுமைக்கான அங்கீகாரம்
உலகுக்கான முன்னுதாரணம்

இந்த ஒற்றுமை
நாற்பத்திஐந்து ஆண்டுகாலப்
பத்தியம்
நன்மையைத் தேடித்தந்த
வைத்தியம்

தொழுகைக்குப் பிறகும்
தோளோடு தோள் நின்றதால்
தோல்வி யறியாத
தேசமாகிப்போனது அமீரகம்

ஒன்றுமில்லாதத் துவக்கம்
என்றுமில்லாத வளர்ச்சி
எனினும்...
மாய மந்திரமல்ல
நேயம், தந்திரமல்ல!

அமீரகம்...
ஊரில்
ஊதாரியாகத் திரிந்த
உதவாக்கரைப் பலருக்கு
உலகத்தைக் காட்டியது

உழைப்பை மதித்தது
ஊதியம் கொடுத்தது
திறமையைக் கண்டெடுத்துத்
திரவியம் தந்தது

வாழ்க்கையில்
பிந்திய மனிதர்களின்
இந்திய வயிற்றுக்கு
பந்தியே வைத்தது!

அரசியல் தலைவன் என்னும்
அடர்த்தியான விஷத்தையும்
தல தளபதி யென்னும்
மதிமயக்கும் யுக்தியையும்
நம்நாட்டில் விட்டுவிட்டு
உழைத்து வாழ
உகந்த இடம் அமீரகம்!

சுதந்திர நாட்டில்
சுகாதாரச் சீரழிவு
ஷேக்குகள் நாட்டிலோ
சீக்குகள் மிகக்குறைவு

இயற்கை வளமிருந்தும்
எல்லைகளகன்ற இடமிருந்தும்
எம் நாட்டிலோ
எல்லாத் துறைகளிலும்
கையூட்டு
பொதுப் பணிகளில்
சதவிகித வெட்டு
இருபத்தியோராம் நூற்றாண்டிலும்
இருள்சூழ மின்வெட்டு

எந்த வளமும்
இல்லயெனினும்
யானைப் பலம்
அமீரகத்திற்கு

ஊழலால் உழன்று
உதவியின்றி மிரண்டு
அலைகழிக்கப்பட்ட இந்தியனை
அரவணைத்தது அமீரகம்

வகைக்கேற்ப அவரவர்க்கு
வருமானத்தை வழங்கியது
வாழ்க்கையை
வரையறுத்துத் தந்தது

படிக்காதவருக்கும்
துபை என்னும் அடைமொழி
படித்தெடுத்தப் பட்டம்போல்
பெயரோடுச் சேர
ஊர் மதித்தது

இந்தியாவில்
கனவுகளில் மட்டுமே வாய்த்த
காட்சிகளெல்லாம்
நனவானது அமீரகத்தில்

நம்நாட்டு முன்னோரும்
நானும்
பின் வருவோரும்
உண்ணவும் உடுக்கவும்
உறையுள் உருவாக்கி உய்க்கவும்
உதவி இத்தேசம்

நபிமொழி உணர்ந்து
நாகரிகத்தைச் சற்றே
நன்முறைப்படுத்தி
எல்லைமீறலைக் கொஞ்சம்
இழுத்துப் பிடித்தால்
நானிலத்தில் நிகரின்றி
நிமிர்ந்து நிற்கும் இந்நாடு.

நம்
நாட்டுப்பற்றுக்கு நடுவில்
கொஞ்சம்
நன்றிக்கடன் பட்டு
வாழ்த்துவோம் அமீரகத்தை1

....ஈஷி பிலாதி... எமராத்தி!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

கோனார் ஹாஜியார்! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | July 14, 2013 | , , , , ,

(ஊரில் என் நண்பர் எஸ். அப்துல் கபூர் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் யு. ஏ. இ யில் இருந்தபோது நடந்ததாக ஓர் உண்மை நிகழ்வைப் பற்றி விவரித்தார்.)  

ஷார்ஜா ஷேக்கிடம் யு. ஏ. இ. அரபி ஒருவர் சமையல்காரராகப் பணியாற்றினார்.  அவரிடம் சில கொழுத்த மாடுகள் இருந்தன.  கேரளத்து சமையல்காரர் ஒருவரும் அவரிடம் வேலை பார்த்துவந்தார்.  அரபிக்கோ மாட்டில் பால் கறப்பது புதிய அனுபவம்.  அதனால் சமையல்காரரைப் பால் கறக்கப் பணித்தார் அந்த ‘அர்பாபு’.  இரண்டு மூன்று நாட்கள் பயந்து பயந்து பால் கறந்தார் அந்த மலையாளி.

மூன்றாவது நாள் ‘அர்பாபிடம்’ போய் நின்று தலையைச் சொரிந்தார்.  ‘என்ன?’ என்பது போல் பார்த்த அரபியிடம், ஒரு நல்ல யோசனையைக் கூறினார் மலையாளி.  ‘இந்த வேலைக்கு அண்ணாச்சிதான் லாயக்கு’ என்று நினைத்தாரோ என்னவோ, தன் பரிந்துரையை அர்பாபிடம் சொன்னார்:  “எங்க நாட்டில் மாட்டில் பால் கறக்க என்றே சிலர் இருக்கிறார்கள்.  பலதியாவில் எனக்குத் தெரிந்த ஒருவர் வேலை பார்க்கிறார்.  ஊரில் அவருக்குப் பால் கறப்பதுதான் தொழில்.

அரபியும் உடன்பட்டார்.  அதற்கு அடுத்த வாரமே, மதுரை ஜில்லாவின் சிவகங்கையைச் சேர்ந்த கோனார் ஒருவர் அங்கு வந்து சேர்ந்தார்.  அன்றிலிருந்தே அவருடைய காலை – மாலைப் பணி தொடர்ந்தது. அவர் பால் கறக்கும் லாவகத்தைப் பார்த்துப் பூரித்துப் போனார் அரபி.

“அச்சா ஹே!” என்று பாராட்டி மகிழ்ந்தார்.  மலையாளியையும் பாராட்ட மறக்கவில்லை.  காலையும் மாலையும் பால் கறப்பது மட்டும்தான் அந்த ‘இந்து’க் கோனாருக்கு வேலை.  பலதியா வேலையும் செய்துவந்தார்.  

ஒரு நாள் சமையல் அறையில் புகுந்த அர்பாப், “கோனார், ஹமாரே சாத் கானா காஏகா?” என்று கையை வாயில் வைத்து சைகை காட்டினார்.  கோனார் புரிந்துகொண்டு, மலையாளியைப் பார்த்தார்.  அவனோ, ‘வேண்டாம்’ என்று சைகை காட்டுமாறு அவருக்குக் கட்டளையிட்டான். அன்றைய தினம் இந்த நிகழ்ச்சியோடு முடிந்தது.

கோனாரின் பணியையும் பணிவையும் தினமும் கண்டு மகிழ்ந்த அரபி, தான் சாப்பிடும்போதெல்லாம் கோனாரையும் அழைக்கத் தவறுவதில்லை.  கோனாரும் பவ்வியமாகத் தவிர்த்துவந்தார்.  அவருக்கு முதல் ’எஜமான்’ மலையாளிதான் என்று கருதியிருந்ததால், ‘அர்பாப்’ கூப்பிட்டபோதெல்லாம், கோனார் மலையாளியைப் பார்ப்பார்.  அப்போது மலையாளி, நாக்கைக் கடித்துத் தலையை ஆட்டித் தன் பக்கம் கோனாரைக் கூப்பிட்டு, தனித் தட்டில் சாப்பாட்டைப் போட்டுக் கொடுத்துவிடுவான்.  

ஒரு நாள், அரபி வலுக்கட்டாயமாகக் கோனாரின் கையைப் பிடித்து இழுத்துத் தன்னுடன் விரிப்பில் இருக்கச் செய்தார்.  “அர்பாப்!  அவன் காஃபிர்!” என்றான் மலையாளி.  “கியா ஃபரக் ஹே?  ஓ ஆத்மி நை?” என்று கேட்டு வாயடைக்க வைத்தார் ‘அர்பாப்’.  அன்று கோனாருக்கு ராஜ மரியாதை!  ஆனால் அவரின் உள் மனத்திலோ உறுத்தல்.  ஒரு வழியாக அன்றைய தினம் கழிந்தது.  

“இனிமேல் நீ அர்பாபோடு சேர்ந்து சாப்பிடக் கூடாது” என்று எச்சரிக்கை செய்துவைத்தான் மலையாளி.  கோனாருக்கோ குழப்பம்.  ‘அரபி முதலாளி அன்போடு கூப்பிட்டுத் தன்னுடன் சாப்பிடச் சொல்கிறார்.  ஆனால், இந்த மலையாளியோ தடை செய்கிறான்!’ புரியவில்லை நம் கோனாருக்கு.  ஒரு நாள் முதலாளியிடம் கேட்டுவிட்டார், அரைகுறை அரபியிலும் இந்தியிலும்.  முதலாளியின் முகம் சிவந்தது!  உடன் எழுந்து சென்று சமையல்கார மலையாளியின் கன்னத்தில் ஓர் அறை விட்டார்!  “ஓ ஆத்மி நை?  ஓ பி இன்சான்! தும் பி இன்சான்!”

இந்த நிகழ்வைக் கண்கூடாகக் கண்ட கோனாருக்கு இன்ப அதிர்ச்சி!  இஸ்லாம் எங்கே, எதில் இருக்கிறது என்ற நினைவு துளிர்விடத் தொடங்கியது.  அடுத்த நாள் அர்பாபிடம் தன் திடமான தீர்மானத்தை வெளியிட்டார் கோனார்.

“நல்லா யோசிச்சுக்கோ.  ஒரு நாள் தீர்மானம் மட்டும் போதாது.  உன் மனைவி மக்கள் ஊரில் இருக்கிறார்கள்.  அவர்கள் நிலை என்ன என்று பார்த்துக்கொள்” என்று உபதேசம் செய்தார் அர்பாபு, இந்தியில்தான்.

“நான் இன்றைக்கே இஸ்லாத்தில் சேரவேண்டும்.” கொள்கையில் உறுதியானார் கோனார்.  சம்மந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்குக் கூட்டிச் சென்றார் அர்பாப்.  அங்குள்ளவர்கள் அவருக்கு ‘ஷஹாதா’ சொல்லிக்கொடுத்து, “ஒரு வருஷம் விடாமல் ஒரு பள்ளியில் ஐந்து வேளையும் தொழுது, அந்தப் பள்ளி இமாமிடம் சான்றிதழ் வாங்கிவந்தால், ‘இப்ராஹீம்’ என்று பெயர் மாற்றம் செய்து தருகிறோம்” என்றார்கள்.

அப்பணியை நிறைவு செய்து, சான்றிதழ் பெற்ற பின்னர் நம் ‘கோனார்’ செய்த அடுத்த பணி என்ன தெரியுமா?  அவ்வாண்டின் ஹஜ்ஜை நிறைவேற்றி ‘ஹாஜியார்’ ஆனார்!

இதற்கிடையில் இரண்டு வருடங்கள் சென்றுவிட்டன.  ஊருக்குப் போகும் தவணையும் வந்தது.  மனைவிக்குக் கடிதம் எழுதினார்.  தான் இப்போது முஸ்லிமாக இருப்பதால், இருவருக்கும் இடையில் இருந்த திருமண பந்தம் முறிந்துவிட்டது என்றும், தாம் ஊர் வருவதற்குள் அவளும் பிள்ளைகளும் உள்ளூர் ஜமாஅத்தின் முன்னிலையில் இஸ்லாத்தைத் தழுவி இருக்க வேண்டும் என்றும், ஊர் வந்த பின்னர் திருமண பந்தத்தைப் புதுப்பிக்கவேண்டும் என்றும் அறிவித்திருந்தார்.  அவர் விருப்பப்படியே, காரியங்கள் நடந்தேறின.  

சில நாட்களின் பின் பாய் பயணமானார் பம்பாய் வழியாக.  சென்னைக்கு வந்து, அங்கிருந்து ரயிலில் சிவகங்கை வந்தவருக்கோ ஆச்சரியம்!  முஸ்லிம் ஜமாத்தின் பெருங்கூட்டம் அங்கே கூடியிருந்தது, மாலைகள் சகிதம்!  ‘நாரே தக்பீர்!  அல்லாஹு அக்பர்!’ அர்த்தம் தெரியாமல் அங்கு வந்த முஸ்லிம்கள் கோஷமெழுப்பினர். 

முஸ்லிம்களின் இன்முகங்களும், கட்டித் தழுவல்களும், அன்று யாருக்குமே கிடைக்காத வரவேற்பும்,  இப்ராஹீம் பாயை மகிழ்ச்சியின் எல்லைக்கே இழுத்துச் சென்றது!  

கோனார் புதிய உலகத்திற்கே போனார்!

அதிரை அஹ்மது

அன்னாந்து பார்த்தது கேமரா ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | July 05, 2013 | , , , , , ,

அட ! இதைத்தான் பார்த்துட்டோமேன்னு அலுப்புத் தட்டினாலும் பரவாயில்லைங்க. மெய்யாலுமே பாஸ் இது நானே என் சொந்தக் கைகொண்டு எடுத்த ஃபோட்டோங்க அதுவும் இடதுகை விரல்கள் கேமராவின் பாடியை(!!) பிடித்துக்கொள்ள வலதுகை விரல்கள் கொண்டு விழிலென்ஸை உருட்டி உருட்டி ஒரு நிலைக்குள் வந்ததும் ஆள்காட்டி விரல் கொண்டு கஷ்டப்பட்டு அழுத்தி எடுத்த படங்கள் !

அல்கைல் ரோட்டில் காலைநேரப் பயணத்தில் காரை ஓரம் கட்டி இந்த தூரம் சுருக்கி ரசித்து எடுத்த படம் !


ஒரு மீட்டிங் அட்டெண்ட் செய்துவிட்டு அல்புர்ஜ் கலிஃபா டவரிலிந்து வெளியில் வரும்போது அன்னாந்து பார்த்தேன் அட ! கேமராவும் கையில் இருந்தது... வானம் பார்த்தது கேமரா !


படம் எடுக்க D90 நிக்கானுடன் அங்கே நிக்கனும்னு நிற்கவில்லை எல்லாமே எதேச்சையாக நடந்த நிகழ்வுகள் !

நம்புங்க !

அபூஇப்ராஹீம்

தேசியத் தினம் 41 (புதிய கீதம்) 52

அதிரைநிருபர் பதிப்பகம் | December 02, 2012 | , , , , , , ,

ஷேக்குகள் எழுவரின்
போஷாக்குக் குழந்தை
அமீரகம்!

இந்தக்
கூட்டமைப்பின் வெற்றி
ஒற்றுமைக்கான அங்கீகாரம்
உலகுக்கான முன்னுதாரணம்

இந்த ஒற்றுமை
நாற்பத்தியோரு ஆண்டுகாலப்
பத்தியம்
நன்மையைத் தேடித்தந்த
வைத்தியம்

தொழுகைக்குப் பிறகும்
தோளோடு தோள் நின்றதால்
தோல்வி யறியாத
தேசமாகிப்போனது அமீரகம்

ஒன்றுமில்லாதத் துவக்கம்
என்றுமில்லாத வளர்ச்சி
எனினும்...
மாய மந்திரமல்ல
நேயம், தந்திரமல்ல!

அமீரகம்...
ஊரில்
ஊதாரியாகத் திரிந்த
உதவாக்கரைப் பலருக்கு
உலகத்தைக் காட்டியது

உழைப்பை மதித்தது
ஊதியம் கொடுத்தது
திறமையைக் கண்டெடுத்துத்
திரவியம் தந்தது

வாழ்க்கையில்
பிந்திய மனிதர்களின்
இந்திய வயிற்றுக்கு
பந்தியே வைத்தது!

அரசியல் தலைவன் என்னும்
அடர்த்தியான விஷத்தையும்
தல தளபதி யென்னும்
மதிமயக்கும் யுக்தியையும்
நம்நாட்டில் விட்டுவிட்டு
உழைத்து வாழ
உகந்த இடம் அமீரகம்!

சுதந்திர நாட்டில்
சுகாதாரச் சீரழிவு
ஷேக்குகள் நாட்டிலோ
சீக்குகள் மிகக்குறைவு

இயற்கை வளமிருந்தும்
எல்லைகளகன்ற இடமிருந்தும்
எம் நாட்டிலோ
எல்லாத் துறைகளிலும்
கையூட்டு
பொதுப் பணிகளில்
சதவிகித வெட்டு
இருபத்தியோராம் நூற்றாண்டிலும்
இருள்சூழ மின்வெட்டு

எந்த வளமும்
இல்லயெனினும்
யானைப் பலம்
அமீரகத்திற்கு

ஊழலால் உழன்று
உதவியின்றி மிரண்டு
அலைகழிக்கப்பட்ட இந்தியனை
அரவணைத்தது அமீரகம்

வகைக்கேற்ப அவரவர்க்கு
வருமானத்தை வழங்கியது
வாழ்க்கையை
வரையறுத்துத் தந்தது

படிக்காதவருக்கும்
துபை என்னும் அடைமொழி
படித்தெடுத்தப் பட்டம்போல்
பெயரோடுச் சேர
ஊர் மதித்தது

இந்தியாவில்
கனவுகளில் மட்டுமே வாய்த்த
காட்சிகளெல்லாம்
நனவானது அமீரகத்தில்

நம்நாட்டு முன்னோரும்
நானும்
பின் வருவோரும்
உண்ணவும் உடுக்கவும்
உறையுள் உருவாக்கி உய்க்கவும்
உதவி இத்தேசம்

நபிமொழி உணர்ந்து
நாகரிகத்தைச் சற்றே
நன்முறைப்படுத்தி
எல்லைமீறலைக் கொஞ்சம்
இழுத்துப் பிடித்தால்
நானிலத்தில் நிகரின்றி
நிமிர்ந்து நிற்கும் இந்நாடு.

நம்
நாட்டுப்பற்றுக்கு நடுவில்
கொஞ்சம்
நன்றிக்கடன் பட்டு
வாழ்த்துவோம் அமீரகத்தை!

....ஈஷி பிலாதி... எமராத்தி!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

திர்ஹம் 45/=க்காக ! என்னங்க நடந்தது சார்ஜாவில் !? 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 29, 2012 | , , , , ,


நேற்றைய தினம் கல்ஃப் நியூஸ் பத்திரிகையை மேய்ந்து கொண்டிருக்கும் போது வழமையான தகவல்களும், ஒருசில நெருடல்களும் இருக்கும் அந்தச் செய்தித் தாளில் சட்டென்று நம் கவனத்தை இழுத்த செய்தி ஏதோ ஒரு விடயத்தை மறைமுகமாக சொல்வதுபோல் இருந்தது.

அந்தச் செய்தியின் சாரம் இதுவே... !

கிளியரன்ஸ் சேல்ஸ்"ல் வாங்கிய முடிவெட்டும் மெஷின் (trimmer) திர்ஹம் 45/-க்கு வாங்கியவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று திரும்பி வந்து அது வேலை செய்யவில்லை என்று திரும்பிக் கொடுக்க வந்திருக்கிறார். கடைக்காரருக்கும் அந்த கஸ்டமருக்கும் வாக்குவாதம் தொடர்ந்ததோடு அன்றைய பொழுதின் இரவு 10:30 மணிக்கு அந்த கஸ்டமர் தனது பரிபாளங்களுடன், மறைக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு அந்த கடைக்காரை தாக்கியிருக்கின்றனர்.

இந்த சம்பவம் சார்ஜா அல்குரைர் மார்கெட்டிற்கு புதுசு, இதுமாதியான சம்பவங்கள் என்றுமே நடந்ததில்லை(யாம்), அனைவரும் அதிர்ச்சியிலும் தாக்கப்படுபவரை பாதுகாக்க சென்றவர்களுகெல்லாம் கத்திக் கீறல்கள், கத்தி குத்து அடி உதை. ஏதோ சினிமா போர்க்களம் போல் இருந்தது என்று சுற்றியிருந்தவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

திர்ஹம் 45/-க்கு அந்த இடத்தையே போர்க்களம் போன்று மாற்றியவர்களின் வன்மனம் எதைச் சொல்கிறது... ?

Row over Dh45 hair trimmer triggers deadly Sharjah knife frenzy

Sharjah attack survivor recounts the terrifying moment when his assailants pinned him to the ground and thrust a knife into his chest
By Mazhar Farooqui, Deputy EditorPublished: 22:17 June 27, 2012 ::: நன்றி : GULFNEWS.com

Sharjah: The survivor of a horrendous attack that left one dead and four injured in Sharjah’s bustling Al Ghuwair Market in Rolla said his knife wounds will heal but the scars will constantly remind him how men can turn into savage beasts – for something as trivial as a dispute over a Dh45 hair trimmer.


“Even the most absurd movie plot will not have 15-20 men fighting with swords and knives over a trimmer,” said Khalil Mattumal, smiling wryly through the pain.

The 33-year-old Indian suffered multiple stab wounds when he tried to save a relative from the wrath of the armed men last Saturday night. It was a futile attempt. His relative Mohammad Sharief 33,  succumbed to his wounds at the hospital.

“I could have been dead too,”  said Mattumal as he recalled the terrifying moment when his assailants pinned him down to the ground and thrust a knife into his chest. “There were two of them. One of them was burly. There was a crazed frenzy in his eyes as he slashed me with a  knife. As I lay bleeding heavily, I thought of my daughter. I thought I would never see her again.” 

Mattumal’s elder brother Nooruddin, 40, rushed to their aid with a friend, Hisan, from a neighbouring shop but they were outnumbered.   

“They were so many of them and they were armed with stick, swords and knives. We didn’t stand a chance,” said Nooruddin, who got stabbed in the stomach and was rushed to Kuwait Hospital. He was discharged on Monday afternoon. “I have been living in Sharjah for almost two decades. I have never seen anything more frightening.”  

Mattumal said both he and the deceased hail from Kasargod, Kerala. “Sharief has left behind two small children. Now they will grow up without him in the knowledge that their father  was killed over something so petty. My wounds will heal but the stitch marks will always remind me of how  men turn into animals when they lose sanity,” said Mattumal.

According to him, Sharief got into an argument with a Pakistani customer who wanted to return a hair trimmer he bought from a clearance sale on Friday evening at Sharief’s electronic shop.

What started off as a minor dispute snowballed into a major fight the following night when the customer returned with several of his friends and stormed Sharief’s shop around 10.30pm.

On Sunday, the Al Ghuwair market remained closed as a mark of respect for Sharief who had run his shop there for the past 15 years. Sharjah Police have  rounded  20 Pakistani men in connection with the crime.


-அதிரைநிருபர்-குழு

துபாய் - ஓர் மந்திரச் சொல் ! 36

அதிரைநிருபர் பதிப்பகம் | March 24, 2012 | , , , , ,


துபாய் எனும் மந்திர வார்த்தையைக் கேட்டதும் சிறு வயதில் பலர் மத்தியில் மகிழ்ச்சி பொங்கும் . நான் படிக்கும் பருவத்தில் என்னுடைய தோழரும் மற்றுமொரு மாற்று மத தோழனும் வகுப்பைக் கட்டடிக்க முயற்சிக்கும் பொழுது வலுவாக மாட்டிக்கொண்டார்கள் அப்பொழுது அந்த ஆசிரியை அவர்களை கண்டிக்கும் பொழுது நம் சமுதாய தோழனைப் பார்த்து "நீயெல்லாம் உருப்படவே மாட்டே உனக்கு என்ன கவலை படிக்காமலே துபாய் பக்கம் போயிடுவே ஆனால் இவன் இங்கேயே நன்கு படித்து விட்டு பின்பு நல்லதொரு வேலையைத் தேட வேண்டும் என்றொரு கட்டாயத்தில் இருக்கிறான்" என்று ஆசிரியையே இப்படிச் சொல்லி பலரும் அதிர்ச்சியுற்றோம் (ஆசிரியரை மட்டும் நான் இங்கே தவறாகக் கூறவில்லை பெற்றோர்களுக்கும் பங்குண்டு)

ஐக்கிய அரபுக் குடியரசு எனப்படும் அமீரகக் கூட்டமைப்பிற்குள் ஒரு அங்கம்தான் துபாய். கடலில் மணலைக் கொட்டி, விரிந்த ஈச்சமர வடிவில் ஒரு தீவை உருவாக்கி, அதில் அடுக்கு மாடி ஆடம்பரக் குடியிருப்புகள்; இந்த உல்லாசத் தீவில் வீடு வாங்குவது ஒரு தனிச் சிறப்பான அந்தஸ்து என்ற மாயையில் உலக மகா கோடீசுவரர்கள் அதில் முதலீடு செய்யப் போட்டியிட்டனர். ஈச்சமர வடிவத் தீவுத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, “துபாய் வேர்ல்ட்” என்ற புதிய வீட்டுமனைத் திட்டத்தை துபாய் அரசு கொண்டு வந்தது. உலகப் பட வடிவில் உருவாக்கப்படும் இப்புதிய தீவில் அடுக்குமாடி ஆடம்பரக் குடியிருப்புகள் கட்ட, கட்டுமானக் கழகங்களும் நிதி நிறுவனங்களும் போட்டி போட்டன. 

ஏழு பெருநகர அமீராட்சியும் தனித்தனி பட்ஜெட்டும் கொண்டுள்ள ஐக்கிய அரபுக் குடியரசில் ராஸ் அல் கைமாஹ், அபுதாபியைப் போல துபாயில் எண்ணெய் வளம் இல்லை. பெட்ரோலியம் உறிஞ்சி எடுக்கப்பட்டு வற்றத் தொடங்கிவிட்டதால்.

புதிய சட்டம் தீட்டினார்கள் கைலி அணிந்து செல்வது குற்றம் மீறினால் அபராதம் வசூலிக்க படுமென்று. பாஜாரில் ஒரு பக்கம் கைலி அணிந்து மானத்தோடு போனால் மறு பக்கம் ஒரு சில பெண்கள் அரை ஆடையுடன் செல்கிறார்கள் எங்கே போய்விட்டது இஸ்லாமிய கலாச்சாரம் யாருக்கு விதிக்கப்படுகிறது அபராதம் பாவம் பிழைப்பிற்காக வந்தவர்களிடத்திலா? மிகவும் கண்டிக்கதக்கது 

புத்தாண்டு கொண்டாட்டங்களும் சீரழிவும் :

இசை,நடனம்,மது,உணவு,கேளிக்கைகளில் நடந்தேறும் அத்துமீறல்கள் என்று பண்பாட்டுக்கு ஒவ்வாத காரியங்கள் வருடந்தோறும் மிகை பட்டுக்கொண்டே இருகின்றது என்ற உண்மையை சமூக ஆர்வலர்கள் மிகவும் கவலையுடன் நோக்குகின்றனர்.

புத்தாண்டுகொண்டாட்டங்களை ஜரூராக ஏற்பாடு செய்து ஒரே இரவில் பணத்தை மூட்டை,மூட்டையாக அள்ளும் நிறுவனங்கள் தனியாக வருபவருக்கு ஒரு மாதிரிக்கட்டணம்,பெண்களுடன் வருபவருக்கு கட்டணசலுகை என்று ஆசை வலை விரித்து காலாச்சார பேரழிவுக்கு சிகப்புக்கம்பளம் விரிக்கின்றது என்பது அச்சபடவைக்கும் உண்மை.ஆண்களும்,பெண்களும் சேர்ந்து குடித்து ஆட்டம் போட்டு கேளிக்கை நடத்தி,இளையவர்களைக் கெடுக்கும் பாதைக்கு அழைத்து செல்லும் பாப் கலாச்சாரம் நாட்டில் நடக்கும் பயங்கரவாதத்தில் ஒன்று என்றால் மிகை ஆகாது.

இத்தகைய அந்நிய கலாச்சார சீரழிவு நம் நாட்டுக்கு வேண்டாம் .அது நாளைய மன்னர்களை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்ல வழிகோலாகிவிடும் என்று கதறும் கதறலை இந்த அமீரக மற்றும் இதர அரேபிய நாட்டு அரசாங்கம் வேடிக்கைப்பார்த்துகொண்டு வெறுமனே இருக்கின்றது.

புது வருட வினாடியை கொண்டாடுகிறோம் என்ற போர்வையில் குடித்துவிட்டு கேவலமான செயல்களை செய்யும் போது எங்கே போகிறது இந்த சமூகம் என என்ன வைக்கிறது"

இஸ்லாம் எனும் வாழ்வியல் கலாச்சாரத்தை-வாழ்க்கை நெறியை மக்கள் மனதில் புணரமைக்கும் வேலையை அவ்வப்போது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இறைத்தூதர்கள் தம் மக்களிடம் செய்து வந்தனர். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு இறைத்தூதர் வந்தார். அப்படி வந்தோரில்... ஒரு 25 இறைத்தூதர்களைப்பற்றியும் அவர்களின் வரலாற்று சம்பவங்களையும் கற்பதன் வாயிலாக இக்கால மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக வேண்டி, திருக்குர்ஆன் மூலம் இறைவனால் நமக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.

திருக்குர்ஆன் குறிப்பிடும் அந்த 25 இறைத்தூதர்கள்... ஆதம், இத்ரீஸ், நூஹ், ஹூத், ஸாலிஹ், இபுராஹீம், லூத், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாஃகூப், யூஸுஃப், அய்யூப், ஷுஐப், மூஸா, ஹாரூண், யூனுஸ், தாவூத், சுலைமான், இல்யாஸ், துல்கிப்லு, அல்யஸவு, ஜக்கரியா, யஹ்யா, ஈஸா, முஹம்மத் (இவர்கள் அனைவர் மீதும் இறைவனின் ஸலாம் உண்டாவதாக) ஆகியோர்..!

இவர்கள் அனைவருக்கும் இறைவனால் அருளப்பட்ட வாழ்வியல் நெறி ஒன்றுதான் -ஒரேகலாச்சாரம்தான்- அது இஸ்லாம்..! இதைத்தான், இவர்கள் தம் மக்களுக்கும் போதித்து... தாமும் அதன்படியே வாழ்ந்தும் காட்டும்படி இறைவனால் கட்டளையிடப்பட்டு கண்கானிக்கப்பட்டார்கள்.

உலகில் மனித குலத்துக்கு எதிராக நாம் உருவாக்கி வைத்துள்ள நமது பல தீய கலாச்சாரங்களை மட்டும் ஒழித்து மக்களின் வாழ்வியல் நெறியை செம்மை படுத்திக் கொண்டிருக்கிறது இஸ்லாம். பிற மனிதற்கு நன்மை பயக்கும் நல்ல கலாச்சாரங்களை இஸ்லாம் என்றுமே எதிர்த்ததுமில்லை; அழித்ததுமில்லை. எனவே, நல்ல கலாச்சாரங்களை எவர் சொன்னாலும் எடுத்துக்கொள்வோம். நம்மிடம் இருக்கும் தீய கலாச்சாரங்களை விட்டொழிப்போம்.

ஆதலால், தீய கலாச்சாரங்களை தூக்கி தூர வீசி எறிந்து விட்டு நல்ல கலாச்சாரத்தை மட்டுமே நம் வாழ்வினில் கைக்கொள்வோம் ....இன்ஷா அல்லாஹ்...

- அதிரை தென்றல் (Irfan CMP)