
துபாய் எனும் மந்திர வார்த்தையைக் கேட்டதும் சிறு வயதில் பலர் மத்தியில் மகிழ்ச்சி பொங்கும் . நான் படிக்கும் பருவத்தில் என்னுடைய தோழரும் மற்றுமொரு மாற்று மத தோழனும் வகுப்பைக் கட்டடிக்க முயற்சிக்கும் பொழுது வலுவாக மாட்டிக்கொண்டார்கள் அப்பொழுது அந்த ஆசிரியை அவர்களை கண்டிக்கும் பொழுது நம் சமுதாய தோழனைப் பார்த்து "நீயெல்லாம் உருப்படவே மாட்டே உனக்கு என்ன கவலை படிக்காமலே துபாய் பக்கம் போயிடுவே ஆனால் இவன் இங்கேயே நன்கு படித்து விட்டு பின்பு நல்லதொரு வேலையைத் தேட வேண்டும் என்றொரு கட்டாயத்தில் இருக்கிறான்" என்று ஆசிரியையே இப்படிச் சொல்லி பலரும் அதிர்ச்சியுற்றோம் (ஆசிரியரை மட்டும் நான் இங்கே தவறாகக் கூறவில்லை பெற்றோர்களுக்கும் பங்குண்டு)
ஐக்கிய அரபுக் குடியரசு எனப்படும் அமீரகக் கூட்டமைப்பிற்குள் ஒரு அங்கம்தான் துபாய். கடலில் மணலைக் கொட்டி, விரிந்த ஈச்சமர வடிவில் ஒரு தீவை உருவாக்கி, அதில் அடுக்கு மாடி ஆடம்பரக் குடியிருப்புகள்; இந்த உல்லாசத் தீவில் வீடு வாங்குவது ஒரு தனிச் சிறப்பான அந்தஸ்து என்ற மாயையில் உலக மகா கோடீசுவரர்கள் அதில் முதலீடு செய்யப் போட்டியிட்டனர். ஈச்சமர வடிவத் தீவுத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, “துபாய் வேர்ல்ட்” என்ற புதிய வீட்டுமனைத் திட்டத்தை துபாய் அரசு கொண்டு வந்தது. உலகப் பட வடிவில் உருவாக்கப்படும் இப்புதிய தீவில் அடுக்குமாடி ஆடம்பரக் குடியிருப்புகள் கட்ட, கட்டுமானக் கழகங்களும் நிதி நிறுவனங்களும் போட்டி போட்டன.
ஏழு பெருநகர அமீராட்சியும் தனித்தனி பட்ஜெட்டும் கொண்டுள்ள ஐக்கிய அரபுக் குடியரசில் ராஸ் அல் கைமாஹ், அபுதாபியைப் போல துபாயில் எண்ணெய் வளம் இல்லை. பெட்ரோலியம் உறிஞ்சி எடுக்கப்பட்டு வற்றத் தொடங்கிவிட்டதால்.
புதிய சட்டம் தீட்டினார்கள் கைலி அணிந்து செல்வது குற்றம் மீறினால் அபராதம் வசூலிக்க படுமென்று. பாஜாரில் ஒரு பக்கம் கைலி அணிந்து மானத்தோடு போனால் மறு பக்கம் ஒரு சில பெண்கள் அரை ஆடையுடன் செல்கிறார்கள் எங்கே போய்விட்டது இஸ்லாமிய கலாச்சாரம் யாருக்கு விதிக்கப்படுகிறது அபராதம் பாவம் பிழைப்பிற்காக வந்தவர்களிடத்திலா? மிகவும் கண்டிக்கதக்கது
புத்தாண்டு கொண்டாட்டங்களும் சீரழிவும் :
இசை,நடனம்,மது,உணவு,கேளிக்கைகளில் நடந்தேறும் அத்துமீறல்கள் என்று பண்பாட்டுக்கு ஒவ்வாத காரியங்கள் வருடந்தோறும் மிகை பட்டுக்கொண்டே இருகின்றது என்ற உண்மையை சமூக ஆர்வலர்கள் மிகவும் கவலையுடன் நோக்குகின்றனர்.
புத்தாண்டுகொண்டாட்டங்களை ஜரூராக ஏற்பாடு செய்து ஒரே இரவில் பணத்தை மூட்டை,மூட்டையாக அள்ளும் நிறுவனங்கள் தனியாக வருபவருக்கு ஒரு மாதிரிக்கட்டணம்,பெண்களுடன் வருபவருக்கு கட்டணசலுகை என்று ஆசை வலை விரித்து காலாச்சார பேரழிவுக்கு சிகப்புக்கம்பளம் விரிக்கின்றது என்பது அச்சபடவைக்கும் உண்மை.ஆண்களும்,பெண்களும் சேர்ந்து குடித்து ஆட்டம் போட்டு கேளிக்கை நடத்தி,இளையவர்களைக் கெடுக்கும் பாதைக்கு அழைத்து செல்லும் பாப் கலாச்சாரம் நாட்டில் நடக்கும் பயங்கரவாதத்தில் ஒன்று என்றால் மிகை ஆகாது.
இத்தகைய அந்நிய கலாச்சார சீரழிவு நம் நாட்டுக்கு வேண்டாம் .அது நாளைய மன்னர்களை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்ல வழிகோலாகிவிடும் என்று கதறும் கதறலை இந்த அமீரக மற்றும் இதர அரேபிய நாட்டு அரசாங்கம் வேடிக்கைப்பார்த்துகொண்டு வெறுமனே இருக்கின்றது.
புது வருட வினாடியை கொண்டாடுகிறோம் என்ற போர்வையில் குடித்துவிட்டு கேவலமான செயல்களை செய்யும் போது எங்கே போகிறது இந்த சமூகம் என என்ன வைக்கிறது"
இஸ்லாம் எனும் வாழ்வியல் கலாச்சாரத்தை-வாழ்க்கை நெறியை மக்கள் மனதில் புணரமைக்கும் வேலையை அவ்வப்போது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இறைத்தூதர்கள் தம் மக்களிடம் செய்து வந்தனர். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு இறைத்தூதர் வந்தார். அப்படி வந்தோரில்... ஒரு 25 இறைத்தூதர்களைப்பற்றியும் அவர்களின் வரலாற்று சம்பவங்களையும் கற்பதன் வாயிலாக இக்கால மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக வேண்டி, திருக்குர்ஆன் மூலம் இறைவனால் நமக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.
திருக்குர்ஆன் குறிப்பிடும் அந்த 25 இறைத்தூதர்கள்... ஆதம், இத்ரீஸ், நூஹ், ஹூத், ஸாலிஹ், இபுராஹீம், லூத், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாஃகூப், யூஸுஃப், அய்யூப், ஷுஐப், மூஸா, ஹாரூண், யூனுஸ், தாவூத், சுலைமான், இல்யாஸ், துல்கிப்லு, அல்யஸவு, ஜக்கரியா, யஹ்யா, ஈஸா, முஹம்மத் (இவர்கள் அனைவர் மீதும் இறைவனின் ஸலாம் உண்டாவதாக) ஆகியோர்..!
இவர்கள் அனைவருக்கும் இறைவனால் அருளப்பட்ட வாழ்வியல் நெறி ஒன்றுதான் -ஒரேகலாச்சாரம்தான்- அது இஸ்லாம்..! இதைத்தான், இவர்கள் தம் மக்களுக்கும் போதித்து... தாமும் அதன்படியே வாழ்ந்தும் காட்டும்படி இறைவனால் கட்டளையிடப்பட்டு கண்கானிக்கப்பட்டார்கள்.
உலகில் மனித குலத்துக்கு எதிராக நாம் உருவாக்கி வைத்துள்ள நமது பல தீய கலாச்சாரங்களை மட்டும் ஒழித்து மக்களின் வாழ்வியல் நெறியை செம்மை படுத்திக் கொண்டிருக்கிறது இஸ்லாம். பிற மனிதற்கு நன்மை பயக்கும் நல்ல கலாச்சாரங்களை இஸ்லாம் என்றுமே எதிர்த்ததுமில்லை; அழித்ததுமில்லை. எனவே, நல்ல கலாச்சாரங்களை எவர் சொன்னாலும் எடுத்துக்கொள்வோம். நம்மிடம் இருக்கும் தீய கலாச்சாரங்களை விட்டொழிப்போம்.
ஆதலால், தீய கலாச்சாரங்களை தூக்கி தூர வீசி எறிந்து விட்டு நல்ல கலாச்சாரத்தை மட்டுமே நம் வாழ்வினில் கைக்கொள்வோம் ....இன்ஷா அல்லாஹ்...
- அதிரை தென்றல் (Irfan CMP)