Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

பகையன்று நகை! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | November 06, 2016 | , , ,



பகையன்று நகை!

வாழ்க்கை  என்பது  வாய்கெடச்  சிரிப்பதும்,
சீழ்க்கை  யடித்துச்  சிரிப்பை  மூட்டலும்,
சிறப்பாம்  வாழ்வைச்  சிரிப்பாய்  ஆக்கிப்
பொறுப்பாய்  வாழாப்  பொய்மை  மக்களின்
கானல்  வாழ்வைக்  கடைப்பிடித்  தொழுகல்
ஈனம்  அன்றோ!  இதுதான்  வாழ்வா?

மாறாய் –

உளத்திலும்  சொல்லிலும்  உண்மையைத்  தேக்கி,
அளப்பரும்  அருளால்  ஆண்டவன்  தந்த
நல்ல  வாய்ப்பாம்  நகைச்சுவை  தன்னை
மெல்ல  எடுத்து  மிகையிலா  விதத்தில்
சொல்லிடா  திருப்பதும்،  சோகம்  ததும்ப
மல்லிட்  டிருப்பதும்  வாழ்க்கையா?  சொல்வீர்?

உண்மையில் –

நகைச்சுவை  யென்று  நமக்கெலா  முண்டு!
பகைச்சுவை  யன்றது;  பண்பு  நபியார்
பயனுறு  வாழ்வில்  பளிச்சிடச்  செய்த
நயனுடை  நாயன்  நல்கிய  வரமது!
மிகைப்படப்  பேசி  மெய்மறக்  காமல்
நகைச்சுவை  நுகர்வோம்!  நாயனைப்  புகழ்வோம்!

அதிரை அஹ்மத்

முத்தலாக்கின் மூடுபொருள்! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2016 | , , ,


மோகத்திற்கு முப்பதும்
ஆசைக்கு அறுபதுமென
தொண்ணூற்றி ஓராம் நாள்
திகட்டிற்று வாழ்க்கை

சமைந்த நாள்முதல்
சமைக்கவே இல்லை போலும்
உண்ணக் கொடுத்ததிலெல்லாம்
உப்பு, புளி கூடியது

துவைத்து உலர்த்திய
துணிமணியி லெல்லாம்
ஈர வாடை இருந்தது
எதிர்ச் சொற்கள் சொல்லியே
எரிச்சல் கூட்டியது

ஆயிரெத்தெட்டுக் காரணங்கள்
அவளுக்கெதிராய்
ஒன்றுகூட நினைவில்லை
ஒருமித்து வாழ்வதற்கு

முதல் தலாக்குக்குப் பிறகு
முதுகில் முளைத்தது சிறகு

முறுக்கித் திரிந்தது இளமை
சொல்பேச்சுக் கேட்காதவளின்
சோலியை முடித்த
செருக்கோடு

***
இரண்டாம் தலாக்குக்குப் பிறகும்
இளகி வரக்காணோம்.

பிடிவாதம் என்றொரு நோய்
மண வாழ்வின்
அடிநாதம் கசக்கவைக்கும் எட்டிக்காய்
குடிகெடுக்கும் கோட்டானின் வாய்

உடல்வாதம்கூட
ஒரு பக்கமே இழுக்கும்
உறுப்புகளை வளைக்கும்
பிடிவாதம் எந்த
மனத்தினையும் சுருக்கும்
மனிதனையே முடக்கும்

முயலுக்கு மூன்று கால்கள்
மூச்சுமுட்ட முழங்கும்
நாலாவது காலை
கண்டாலும் மறுக்கும்

காண்பதையும் கேட்பதையும்
கொள்கை யென்று ஏற்கும்
தீர விசாரிக்காது
தீர்வுகளை எட்டும்

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுகளைப் போடும்
ஒட்டடை படிந்ததுபோல்
உள்ளத்தைப் பாழாக்கும்

மாற்றமில்லாக் கோட்பாடுகளில்
ஏற்ற இறக்கம் தேடும்
வரிகளுக்கிடையேதான்
வாசிக்க நாடும்

****
மூன்றாம் தலாக்குக்கு
முதல் நா ளிரவில்
விட்டம் நோக்கிய
வெற்றுப் பார்வையில்
விழிகளில் நீர்

கண்டதும் களித்ததும்
காத்திருந்து புசித்ததும்
தலைவலித் தைலத்தோடு
உயிர் தோய்த்துத் தேய்த்ததும்

கைப்பிடித்த நாள்முதல்
கதி நீயே என்றதும்
கண்ணுக்கெட்டாத் தூரத்தை
கைகோர்த்துக் கடந்ததும்

வாழ்ந்த வாழ்க்கையின்
வசந்தம் நினைத்துக்
கனிந்தது உள்ளம்

மனைவியின் அன்பு
நினைவினைத் தீண்ட
மாசற்ற சேவைகள்
மனதினில் தோன்ற

சில்லரைச் சச்சரவுகளை
நல்லதைக் கொண்டு வெல்ல
மறுநாள் காலை
மனைவிக்காக விடிந்தது

இறைவனின் கருணையால்
இருவரும் இணைய
முத்தலாக்கின் மூடுபொருள்
முழுதும் புரிந்தது!

துலாக்கோலில் நிறுத்தறிய
பலாக்காயல்ல வாழ்க்கை
நிலாக்கால நினைவுகளை
தலாக்கென்று வெட்ட வேண்டாம்!

 சபீர் அஹ்மது அபுஷாரூக்

இயற்கை இன்பம் – 20 2

அதிரைநிருபர் பதிப்பகம் | August 20, 2016 | , , , ,

விழுஞாயிறு


நாள்முழுதும் உழைத்துழைத்து நாடி தளர்ந்து
  நலிவுற்ற உயிர்களுக்கு நல்ல ஓய்வைக்
கேள்வியின்றி இரவதனைப் போர்வை யாகக்
  கிழக்குமேற்கும் மங்கிடவே ஆக்கித் தந்தே
நாள்முடித்து நற்கடமை செய்யும் ஆதவன்
  நாமுறங்கிப் புத்துணர்வை இன்ப மாக
மீள்வருகை நாளைஎன்ற எதிர்பார்ப் போடு
  மேற்றிசையில் மறைகின்றான் இறைநாட் டத்தால்.

அதிரை அஹ்மத்

மனசாட்சி ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | March 28, 2016 | , , ,


உள்ளமதில் நிலைகொண்டு
உண்மைதனை உரக்கச்சொல்லி
மனிதநேயம் மாறிடாது
மனதினுள்ளே ஒரு சாட்சியாய்
மதிசெய்திடுமோர் ஆட்சியாம்

கண்காணா தவறுகளை - இனம்
காண்பது  மனதன்றோ
கல்நெஞ்ச மனம்கூட
கரைந்திடுமே  மனசாட்சியாலே

ஆயிரம் சாட்சி வந்தாலும்
அகத்தில் உறுதியாய் மனசாட்சி
ஆறறிவு மனிதனுக்கு
ஆழ்மனதை ஆளும் கட்சி

பொய்சாட்சி சொல்வோர்க்கும்
பொல்லாங்கு செய்வோர்க்கும்
மனசாட்சி மட்டும் போதும்
மனம் திருந்த நல்ல தருணம்

எண்ணிலடங்கா சம்பவங்கள்
இவ்வுலகில் அனுதினமும்
அத்தனைக்கும் அடித்தளமே
அதன் தீர்வு மன சாட்சியிலே

இறைசாட்சி முதல் சாட்சி
இருக்கணும் அங்கு நிலைநிறுத்தி
மறையோனை தொழுதிடவும்
வேணுமங்கு மனசாட்சி

மனசாட்சி மறந்து போனால்
மனிதனவன் மிருகமாவான்
மறவாத மனமிருந்தால்
மகிழ்வுகளை வாரியணைபான்

மனசாட்சி இல்லாதோர்
மனித இனம் அல்லாதோர்
மனதினிலே இரக்கமுள்ளோர்
புனிதரான மனிதராவர்

அதிரை மெய்சா

பிச்சைப் பாத்திரம் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | January 31, 2016 | , , ,


பிச்சைப் பாத்திரம்
பிச்சைக்காரன் என்கிற முத்திரையை
குத்தும் பாத்திரம்

உதவாக்கரைகளுக்கும் உணவளிக்கும்
உன்னதப் பாத்திரம்

இக்கதாபாத்திரத்தில்
சதாஅழுது புலம்பி
கண்கலங்கி நிற்கும் பாத்திரம்

உழைத்து வியர்வை சிந்தாமல்
ஊர்சுற்றி வலம்வந்து
உணவைச் சேகரிக்க
உறுதுணையாயிருக்கும்
ஒப்பற்ற பாத்திரம்

சோம்பேறிகளுக்கு வாழ்வளித்து
சுயநல வாதிகளுக்கு கைகொடுத்து
சாம்ராஜ்யத்தை அழிக்கும் பாத்திரம்

எஞ்சிய உணவையும்
எச்சிலைச் சோற்றையும்
வஞ்சகமில்லாமல் வாங்கி
வயிற்ரை நிரப்பிக் கொள்ள
உதவும் பாத்திரம்

ஒற்றைப் பாத்திரத்தில்
ஒன்பது வகை உணவு
ஓராயிரம் கனவுடன்
ருசித்திடும் நாவு

ஏக்கம் நிறைந்திட்ட
இல்லாதோர்வாழ்வில்
ஏகமாய் மகிழ்விக்கும்
இன்பப் பாத்திரமாம்

யார் வைத்த பெயரோ
அன்றுமுதல் இப்பாத்திரத்துக்கு
பஞ்சமில்லை

இப்பாத்திரம் கையிலிருக்கும் வரை
இவ்விதி என்றும் மாறப்போவதில்லை

பிச்சைப் பாத்திரத்தை தூக்கியெறி
கதாபாத்திரத்தை கையிலெடு
முயற்ச்சிசெய்து முன்னுக்குச் செல்
முன்னேற்றப் பாதையை கவனத்தில் கொள்

ஏற்றமுடன் உழைக்கத் துவங்கு
ஏறெடுத்து பார்க்கும் உலகு

உடல் களைக்கும்வரை உழைத்துப் பழகு
வழி கிடைக்கும்வரை உறங்கமறு

மாற்றமுடன் நீ நடக்க
மதியை கூறாய் தீட்டிக்கொள்
நாட்டமுடன் நடந்தேறும்
நாட்டுமக்கள் திரும்பிப்பார்ப்பர்

போற்றும் உந்தன் திறமையைத்தான்
புகழில் உயர்ந்து நின்றுடுவாய்
தன்னைநம்பு தலை நிமிர்வாய்
தவறாமல்செல் வழிகாண்பாய்

மாற்றத்தை நீநன்கு உணர்ந்திடுவாய்
ஏற்றத்தை நீயென்றும் பெற்றிடுவாய்

தோற்றத்தில் நீ அன்று
பிச்சைக்காரன்
தொய்வின்றி முயற்ச்சித்தால்
வெற்றிக்காரன்

நட்பும் உறவும் வந்து சேர
நாடிய அனைத்தையும்
நீ பெறுவாய்
நலமுடன் என்றும் வாழ்ந்திடுவாய்

அதிரை மெய்சா

குடும்பன் குறிப்புகள்! 33

அதிரைநிருபர் பதிப்பகம் | January 20, 2016 | , , ,

குடும்ப(ஸ்த)ன் பற்றிய
குறிப்புகளைச் சுருக்கி வரைக?

நீண்ட நியமக்காரனாம்
குடும்பன் குறிப்புகள்
சுருக்கி வரைதல்
சுலபமல்ல!

சில்லென்ற உணர்வு
சிலீரென வியாபிக்க
சின்னவளின் சிறுநீர்
துயிலெழுப்பும் பின்னிரவுகள்

சோற்றிலா குழம்பிலா
சமைத்து வைத்த சட்டியிலா
என
சொல்லிவிட முடியாதபடி
இழையோடும்
மனையாள் கூந்தல் உதிர்த்த
ஒற்றை நீள் உரோமம்
விரலில் சிக்கும் வினாடிகள்

சொற்பத் தொகை கூடுதலால்
தனக்கென
விருப்பப்பட்ட உடையை
வாங்காமல் தவிர்த்து,
மூத்தவள் முகவாட்டம்
பொறுக்க மாட்டாமல்
மும்மடங்கு விலையெனினும்
ஒப்பணைச் சாதனங்கள்
வாங்கித் தரும் வாஞ்சை

வயதேற்றும் வலிகளையும்
உடல் வதைக்கும் உபாதையினையும்
பொறுத்துப் புறக்கணித்து,
மணிநேர தலைவலி
மகனுக்கு வந்துவிடின்
மனம் சகிக்கா பரிதவிப்பு

உழைத்தலுக்கும் பணிச்சுமையோ
உறவழுத்தும் மனச்சுமையோ
தானேற்றுத் தானிருந்து
அன்பையும் அரவணைப்பையும்
விருப்பத்தையும் மட்டுமே
வீடு சேர்க்கும் அர்ப்பணிப்பு

கழுத்துப் பட்டி கடின் மடிப்பில்
சாயம் வெளுத்தச்
சட்டைகளைத் தானணிந்து,
கட்டியவள் மகிழ்ந்திருக்க
பட்டெடுக்கும் பதவிசு

கால் பதிந்து பள்ளமான -தன்
காலணியைத் துறக்க
கறாராய்க் கணக்குப் பார்த்து,
கண்மணியாம் பிள்ளைகட்கு
உடைகளுக்குப் பொருத்தமாக
நடையழகுக் காலணிகள்
வகைவகையாய் வாங்கித்தரும்

வாரயிறுதி நாட்களில்
ஊர் சுற்றிக்காட்டும்
உற்சாகமூட்ட
விளையாட்டில் செலவழிக்கும்

எஞ்சிய பீட்ஸாக்களும் -உருகி
மிஞ்சும் ஐஸ்க்ரீமும்
பிள்ளைகள் ஒதுக்கிவிட
காசுவிரயக் கணக்குப் பார்த்து
தான் தின்று தடுமாறும்
கூடிய கெட்டக் கொழுப்போடும்
எகிறிய இனிப்பு நீரோடும்

குடும்பன் குறிப்புகள்
ஆணாணுக்கு வேறுபடும்
குடும்பநலம் மட்டுமே
எவனுக்கும் வலிமை தரும்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

Pain...worth it! - வலி வழிச் செய்திகள்! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | October 12, 2015 | , , , , ,


Pain...worth it!

Pain...
in different forms
are needed in life !

so that
they can carve your soul
into
what they have to appear.

and
you cannot escape from
what has been decreed
upon you !

You
just have to pray
you will be
able to bear them !

And
you will be
surprised by your own self
for
what you have turned into !

Keep praying
for your sanity !

Keep praying
for your peace of mind !

The curves
on your lips
may change with time.

but
despite that..
oh human !
you are stronger
than
you have imagined l

You have this control
that
God has given you !

You can choose the path

You seem
you are trapped  -but
you have to look up into the sky
and realise...
Everything
soon
will end.

And
you will realise
the purpose of your life.

And
it will be all worth it.
the day
where your Creator smiles at you
for being pleased with you.

Hope for it ..
Work for it...
And may you reach that goal.
Insha Allah !

Shahnaz Sabeer Ahmed MBBS III year
வலி வழிச் செய்திகள்!

வலி
அதன் மாறுபட்ட பரிமாணங்களில்
வாழ்க்கைக்குத் தேவைதான்

அப்போதுதான் -அந்த
வலி
உணர்த்த வேண்டியது
ஆன்மாவில் ஆழப்பதியும்

உம்மீது
சுமத்தப்பட்டவையிலிருந்து
நீர் யாரும்
தப்பிவிட முடியாது

மாறாக
தூயவனைத் தொழுவதன் மூலம்
அதைத்
தாங்கிகொள்ள இயலுவதையும்

எத்துணைக் கடினமாக
அது உம்மை
மாற்றிக்காட்டியது என்பதையும்
கண்டு
உம்மீது நீரே
ஆச்சர்யப்பட்டுப்போவீர்

நுன்மதிக்கும் நிம்மதிக்கும்
தொடர்ந்து
தொழுது வாருங்கள்

காலமும்
கருப்பொருளும்
உமது
உதட்டு வளைவுகளின்
உரு மாற்றலாம்

ஆனபோதிலும்
ஓ மானிடரே
நீவிர்
கருதியிருப்பதைவிட
கடும் வலுவானவர் ஆவீர் நீர்
அறிக

அத்தகைய
கட்டுப்படுத்தும் சாதுர்யம்
உமக்கு
ஆண்டவன் கொடுத்த அருள்

உமது பாதையை
நீரே தேர்ந்தெடுக்கலாம்

பொறிக்குள் சிக்கிவிட்டதாக
உமக்குத் தோன்றலாம்
அவ்வாறல்ல
ண்ணாந்து சற்றே
ஆகாயம் பார்க்கையில்
உணர்வீர்கள்:
யாவும்
சடுதியில்
தீர்ந்துபோகும் என!

அத்தருணம் உமக்கு
வாழ்க்கையின் தாத்பரியம்
தெளியும்
உம் படைப்பின் நோக்கம்
புரியும்

உலகைப் படைத்தவன்
உம்மைப் பொருந்திக்கொண்டு
உம்மீது
புன்னகைக்கும்
அந்நாளில்...
எல்லா வலிகளும்
ஏற்புடையதாகவே அறிவீர்...

அதற்கான நம்பிக்கை கொள்வீர்
அதை நோக்கிச் செயல்படுவீர்

அவ்வாறே
ஆண்டவன் நாடிவிடட்டும்
இலக்கை
நீர்
எட்டிவிட!

தமிழில்: ஷஹ்னாஸ் வாப்பா

ஆடவரும் பெண்டிரும்! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | August 11, 2015 | , , , ,


எத்தனை வழிகளில்
இதயம் தந்தாலும்
ஒற்றை மெளனத்தில்
உள்ளம் உடைப்பர்
பெண்டிர்

மன அழுத்தம்
முடியுதிர்வு
நீரிழிவு
என
ஏதாவது
புறக்காரணங்களால்
புறக்கணிப்பர் அகவாழ்வை

வயதாகும் உடல்
ஏனோ
உள்ளத்தையும் உணர்வுகளையும்
தன்னோடு
இழுத்துச் செல்லாமல் விட்டுவிடுவதால்
இளமைப் பிரம்மையில்
இயல்பான
இழப்புகளைக் கண்டு
பயந்துபோய்
பின் தங்கிவிடுகிறது
ஆண்களின் ஆன்மா

பார்த்திருந்தால் மட்டுமே
பசிமறந்திருந்த பண்டு
அன்பென்ற அகத்திற்குள்
அனைத்தையும் அடக்கியோர்
சொற்ப வலிகள்
மற்றும்
சுய வேதனைக்காக
அன்பை அற்பமாக்குகின்றனர்

முதுமை நோக்கிய பயணத்தில்
இளமைச் சிதைவு
இயல்பானது
நிறுத்தி வைக்கப்பட்டு
மீண்டும் முடுக்க
காலம்
கடிகார முட்களல்ல,
கழட்டிவைத்து
பிறகு பொருத்த
இதயம்
மின்கலமும் அல்ல

காலம்
கரும் கேசத்தை
ஆங்காங்கே
வெள்ளை மையால்
அடிக்கோடிட்டு அறிவுறுத்துவது
யதார்த்தத்தைதான்

முடிவுதிர்வை
ஏற்க
மனமுதிர்வு வேண்டும்;
முழங்கால் வலியைத்
தள்ளி வைக்கலாம்
தவிர்க்க முடியாது

எல்லா இழைகளையும்
ஏதாவது ஒரு
முடிச்சில் இணைக்கப் பார்ப்பதுவே
எல்லா
ஆடவருக்கும் பெண்டிருக்கும்
இன்பம் பயக்கும் சீவிதம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

காவந்து பண்ணும் கலை ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | March 28, 2015 | , , ,


(*)உழவுக்கு மாடு
ஒத்துழைக்க மறுத்தால்
எந்திரம் கொண்டு
எம் நிலம் உழுவோம்.

(*)வான் வழங்காது
வஞ்சகம் செய்திட்டால்
கேணி நீரிறைத்து
காணி நனைப்போம்.

(*)பொல்லாத பூச்சிகளின்
தொல்லை ஒழிப்பதற்கு
கொல்லி மருந்தடித்து
கொஞ்சம் காத்திட்டோம்.

(*)வளறும் பயிர்மேய
வரும் கால்நடைகள்,
தீண்ட விடாது
தடுக்குமெம் கைத்தடி.

(*)அறுத்து கதிரடித்து
விலைநெல் முக்காலும்
விளைநெல் காலுமென
வீட்டினுல் பிரித்துவைத்தோம்.

(*)கையகப் படுத்திய
கதிர்தந்த நெல்மணிகள்
பத்தாயம் ஒன்றில்
பத்திரமாய் எங்களிடம்.

(*)சர்க்கார் கண்படாது
சாமர்த்தியமாய் எம்நிலத்தை
எப்படி மடித்து
எதற்குள் மறைப்பதென்னும்

சூட்சுமம் தெரிந்தால்
சொல்லுங்கள் எம்மக்காள் !
ஆட்சியில் இருப்போர்-நிலத்தை
அபகரிக்கும் முன்னம்!

அதிரை என்.ஷஃபாத்

Loneliness ! - தனிமை ! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | December 19, 2014 | , , , , ,



Loneliness !


Some fear loneliness


but it is
in the loneliness
where
we analyse ourselves


A sudden hit realisation
about reality,
about people around you,
the answer
to reason of our existence


Surely
mankind is ever forgetting


It is better
to seclude ourselves
than fear loneliness,
rather creating delusion
that this is the life .


Does the word "loneliness" exist
for those
who believe in Allah ?!


How wonderfull it feels
to feel the everlasting
love for Him!
And never
to depart away from Him!


The feeling
you have everyday
where you anticipate
the day you return to Him ?!


To be able
to be close to Him


The feeling
that you are among
those
who are loved by Him ?!


Yes,
The thought of
having the reward
as going to heaven
is really pleasing,


but the thought of
returning back
to Him
is even more pleasing !


Makes you
want to strive hard
in this world
to please Him.


We all belong to Him
and
we all return back to Him
is
the
undeniable sweet truth !!!


Shahnaz Sabeer Ahmed
MBBS III year

தனிமை !


தனிமையை
அஞ்சுவர் சிலர்


ஆனால்
சுய சோதனைக்கும்
தன்மையை அறியவும்
தகுநிலை தனிமையே


நம்
இருப்பின் தாத்பரியத்தையும்;
சக மானுடத்தையும்;
சட்டென நமைத் தாக்கும்
எதார்த்தங்களின் நிதரிசனத்தையும்
உணர உகந்தது தனிமையே!


தனிமையை அஞ்சுவதைவிட
நாமே
வலியத் தனித்திருப்பது சிறந்தது.
அந்நிலை
'தனிமைதான் வாழ்க்கை'
என்கிற
மாயையிலிருந்து மீட்டெடுக்கும்...
முள்ளை
முள்ளால் எடுப்பதுபோல!


திண்ணமாக
மனிதகுலம் எப்போதுமே
மறதியின் பிடியில்


அல்லாஹ்வின்மீது
நம்பிக்கை கொண்டோர்க்கு
தனிமை என்றொரு
இருப்பு இருக்கிறதா என்ன?


அவன்மீது மிகைக்கும்
அழியா அன்பை உணர்வதுவும்;
அவனைவிட்டு என்றுமே நீங்காதிருப்பதுவும்
எத்துணை அருமையானது!


அவனை மீண்டடையும்
நாளை எதிர்பார்த்திருப்பதும்;
அவனை நெருங்கிச் செல்வதும்;
அவனால் நேசிக்கப்படுவோரில்
ஒருவராக இருப்பதை
உணர்வதும்...
எத்துணை உன்னதமானது!


இன்னும்,


நல்லெண்ணங்களுக்கான
கூலியாகக் கிடைக்கும்
சுவர்க்கத்தைப் பற்றிய நினைவு
ஆனந்தமானது


அதைவிட
அவனையே மீண்டடையப்போகிறோம்
என்கிற நினைவு
அதீத ஆனந்தமானது


அந்த நினைவு மட்டுமே
அவனின்
பொருத்தம் நாடி நடக்கக்
கடினமாகப் போராட வைக்கும்


நாம் யாவரும்
அவனுடையவர்கள்;
அவனையே
மீண்டடைவோம்


என்பதுவே
மறுக்க முடியாத
இனிமையான உண்மை!


தமிழில்: சபீர் அஹ்மத் அபுஷாஹ்ருக்