அல்லாஹ்வின் திருப்பெயரால்,
கடந்த சில வருடங்களாக யுனிகோட் ஃபாண்ட் எனும் ஒருங்குறி எழுத்துருக்களின் பேருதவியால் இணையத் தமிழில் பிரபலமடைய ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை தமிழ்கூறும் நம் சமூக மக்கள் ஊடகதுறையில் நுழைந்து அதன் தாக்கத்தால், மக்களுக்கு விழிப்புணர்வுகள் நிறைய ஏற்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக முஸ்லீம்களின் பங்களிப்பு ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் முஸ்லீம்கள் ஊடகத்துறையில் சாதிக்க வேண்டும் என்றால் பிற மதத்தவர்களோடு கருத்தாக்கங்களை கையாளும் முறைகள் சரியென்றே அதன் போக்கில் சென்று இஸ்லாத்திற்கு அவர்கள் அறியாமலே வேட்டு வைக்கிறார்கள் என்பதையும் உணராமல் இருக்க முடியாது.
நபி(ஸல்) அவர்களின் அடகஸ்தலம் பற்றிய சர்ச்சைகள் ஒரு சில முஸ்லீம் அமைப்புகளிடம் கருத்துமோதல் ஏற்பட்டு அதனைத் தொடர்ந்து ஆர்பாட்டம், போராட்டம் என்று நடத்திக் காட்டப்பட்ட்து. இந்தச் சூழலில் நம் முஸ்லீம் சகோதரர்கள் குர்ஆனின் போதனைகளையும், நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளை மறந்து படுகேவலாமாக ஏசிப்பேசி தங்களிடமிருக்கும் மீடியாக்களின் மூலம் ஒருவருக்கு ஒருவர் தரம் தாழ்ந்து சாடிக் கொண்டார்கள். இவ்வாறான சர்ச்சைகள் அநேக முஸ்லீம்களை முகம் சுளிக்க வைத்தது என்னவோ உண்மை. இரு முஸ்லீம் அமைப்புகள் ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டது யாரை திருப்தி படுத்த இவ்வாறு செய்கிறார்கள் என்பது புரியவில்லை?

ஷிர்க்கிற்கு வழிவகுக்கும் தர்காவழிபாடு, மெளலுத் பாடல்கள் என்று அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் காரியங்களில் ஈடுபட்ட மக்களை மீட்டெடுத்து நேர்வழியின் பக்கம் அழைக்கும் பணியில் அயராது ஒரு சில ஆலிம்கள், ஒரிரு அமைப்புகள் அதிரை போன்ற ஊர்களில் மிகத்தீவிரமாக கடந்த 25 வருடத்திற்கும் மேலாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அலஹ்மதுலில்லாஹ். இதன் காரணமாக கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தர்காக்களை, மெளலிதுகளை இழுத்து மூடும் நிலை உருவாகி வந்த சூழலில், அதற்கு கேடுவிழைவிக்கக்கூடிய வகையில் தொழில் நுட்ப வளர்ச்சியால் வந்த வலைத்தளங்கள் அந்த கேடுகெட்ட தர்கா வழிபாடு மெளலிதுகளுக்கு உரம் போட்டு உசுப்பேற்ற ஆரம்பித்து இன்று அவைகள் “வேதாளம் முருங்க மரத்தில் ஏறுகிறது” என்ற நிலை மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. கந்தூரி திருவிழா, மெளலித் திருவிழா என்று இஸ்லாத்தில் இல்லாத இணைவைப்புகளை இறைவழிபாடு என்று சொல்லி ஒரு கூட்டம் அறியாமையில் இருக்கிறதே, அவைகளை எடுத்துச்சொல்லி, கந்தூரி, மெளலித் விழாக்களுக்கு முக்கித்துவம் கொடுக்காமல், அவைகளை நடத்துபவர்களை கண்டித்து பதிவு போடுவதவற்கு பதிலாக, கந்தூரி பல எதிர்ப்புக்கு மத்தியில் நடந்தது, மெளலித் நிகழ்ச்சி படு விமர்சியாக நடந்தது என்று செய்திகள் வெளியிடும் அதிரை வலைத்தளங்கள் யாரை திருப்தி படுத்த இவ்வாறு செய்கிறார்கள்.
இது போல் மார்க்கத்துக்கு விரோதமாக நடக்கும் நிகழ்ச்சிகள் குறிப்பாக இரவு கேளிக்கைகள், இரவு விளையாட்டுகள், தொழுகைக்கு நேரம் ஒதுக்காத நிகழ்ச்சிகள், குர்ஆன் ஹதீசுக்கு மாற்றுக் கொள்கையுடையவர்களின் நிகழ்ச்சிகள், ஷஹீஹான ஹதீஸ் மறுப்பாளர்களின் நிகழ்ச்சிகள் என்று கொள்கையற்றுப் போய் அவைகள் அனைத்திற்கும் இலவசமாக அதிமுக்கியத்துவம் கொடுக்கும் அதிரை வலைத்தளங்கள் யாரை திருப்தி படுத்த இவ்வாறு செய்கிறார்கள்?
அன்மையில் அதிரையில் நடைபெற்ற கோவில் திருவிழா என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது ஒரு வலைத்தளம் அத்தகைய செயல் பெரும்பாலோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இணை வைப்பை தூண்டும் கந்தூரிச் செய்தியை தவிர்ப்போம் என்று கொள்கை கொண்ட தளத்தில் இணைவைக்கும் வணக்க வழிபாடுகள் செய்யும் ஹிந்துக்களின் கோவில் திருவிழாச் செய்தி வெளியிட்டு யாரை திருப்தி படுத்த இவ்வாறு செய்கிறார்கள்?
மரண அறிவிப்புகள், சாலை விபத்து தகவல், விளையாட்டுச் செய்தி, மீன் மார்கெட்டில் உள்ள மீன்கள் பற்றிய செய்தி, பல கொள்கைகளை கெண்ட இயக்கங்களின் செய்திகள், அரசு சார்ந்த செய்திகள் என்று இவைகளோடு சேர்த்து, கூடுதலாக கந்தூரி, மெளலித் நிகழ்வுச் செய்திகளை பதிவது மட்டும் தான் ஊடகத்தின் வேலையா? இது ஓர் முஸ்லீம் ஊடகவியாளர் செய்யும் வேலை இது மட்டும் தானா?
வட்டிக் கொடுமை , வரதட்சனைக் கொடுமை, ரியல் எஸ்டேட் பேர்வழிகள் செய்யும் அட்டூழியம், அரசு ஊழியர்கள் வாங்கும் லஞ்சம், தர்கா வழிபாடு, மெளலித் பாடல், இளைய சமூகத்தை சீரழிக்கும் சினிமா, சீரியல், facebook, whatsup, youtube இவைகள் பற்றி வழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ச்சியாக இறை மார்க்க நெறிகளை நினைவூட்டும் பதிவுகளை வெளியிடலாமே.
இணைவைப்புக் கொள்கையில் இருக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளான பிற மதத்தவரை நாமிருக்கும் இந்த அழகிய தூய இஸ்லாத்தின் பக்கம் அழைக்கும் பதிவுகள் இட வேண்டாமா?
ஐபேடுக்கு, டேபுக்கு அடிமையாகி இருக்கும் சிறுவர்களை கவரும் விதமாக பதிவுகள் வெளியிடலாம்..
பெண்மக்களை சென்றடையும் சமையல் குறிப்பு பதிவுகள் வெளியிடலாம்..
மருத்துவக்குறிப்பு பதிவுகள் வெளியிடலாம்..
கல்வி வழிகாட்டி, பள்ளி வளாகம் பர்றிய பதிவுகள் வெளியிடலாம்,,,
இன்னும், நடுநிலை என்று சொல்லிக் கொள்வதைவிட இயல்பாகவே இஸ்லாமிய சார்பாக இருக்கவும், எவ்வாறு வாழ்வியலோடு கலந்து குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் என்று மார்க்க நினைவூட்டல்கள் வெளியிடலாமே..
இவையல்லாமல் மெளலிதுகள், தர்கா வழிபாடு, போன்ற செய்திகளை வெளியிடுவதன் மூலம் முஸ்லீமகள் நடத்தும் வலைத்தளங்கள் யாரை திருப்தி படுத்த இவ்வாறு செய்கிறார்கள்?
அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித்தந்த மார்க்கம் இஸ்லாம், இதனை பிரச்சாரம் செய்ய அல்லாஹ் நமக்கு கொடுத்த பொக்கிஷமே, இந்த தகவல் தொழில்நுட்பம். இதன் வளர்ச்சியில் நமக்கு கிடைத்தவையே வலைத்தளங்கள். இதன் மூலம், எவ்வாறு மக்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் பயன்பெறும் விதமாக தகவல் கொடுத்து அல்லாஹ்வின் திருப்தியை பெறவேண்டும் என்ற அந்த தூய நோக்கம் நம் ஒவ்வொருவரிடம் வர வேண்டும்.
ஊடகத்துறையில் இருக்கும் முஸ்லீமாக நீங்கள், பின் வரும் இரண்டில் எதை எடுப்பீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.
1. அல்குர்ஆன் மற்றும் அல்ஹதீஸ் இவைகளின் வழிகாட்டுதலின்படி அல்லாஹ்வின் திருப்தியை பெற மட்டுமே தகவல்கள் பரிமாறி ஊடகத்துறையில் பணியாற்றுவது.
2. ஷிர்க்கு போன்ற பல கொள்கையுடைய மக்களை அனைவரின் திருப்தியை பெற மட்டுமே தகவல்கள் பரிமாறி ஊடகத்துறையில் பணியாற்றுவது.
அல்லாஹ்வின் திருப்தி முக்கியமா? பல கொள்கை மனிதர்களின் திருப்தி முக்கியமா? என்பதை முஸ்லீம் ஊடகவியளார்கள் முடிவு எடுத்து அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றவர்களாக நாம் அனைவரும் மாற முயலவேண்டும்.
அதிரைநிருபர் பதிப்பகம்


