Showing posts with label கந்தூரி போதை. Show all posts
Showing posts with label கந்தூரி போதை. Show all posts

கந்தூரி மாயை...! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | April 26, 2015 | , , , ,

இது ஒரு மீள்பதிவு
என்னிட முள்ளதொரு கேள்வி – என்
இனத் தவரிடம் கேட்க
முன்பென்று மில்லாத குரோதம் – உன்
உடன் பிறந்தோரிடம் எதற்கு?

அடங்கிய வருக்கேன் ஆராதனை – குழி
முடங்கியவருக்கா முழு அர்ச்சனை
கையில் நெய்யெனக் காப்பவனிருக்க –பொய்
கபுர்தனை வணங்குத லறிவா?

ஈடு இணையற்ற இறையை – எது
ஈருலக வாழ்விலும் விஞ்சும்
ஈனச் செயலாம் கந்தூரி – ஒரு
ஈமான் முறிக்கும் இழிவே

ஊர்வலம் என்றொரு ரனகளம் – நம்
ஊர்ச் சனங்களுக்கே கேவலம்
கொடியேற்றி மகிழும் யார்க்கும் – தம்
குடிகெட்டுப் போவது உறுதி

தோளோடு தோளாகத் தொழுது – நல்
விணையாம் நோன்பினை நோற்று
கணக்காக ஸகாத்தும் கொடுத்து – பின்
கபுர்தனில் கவிழ்தல் சரியா

கலைக் கூத்தாடி கணக்காய் – உன்
களியாட்டம் குமட்டும் குடலை
கண்டெந்தன் கண்கள் கலங்கும் – இக்
கவலையில் நெஞ்சமும் வலிக்கும்

போனது போகட்டும் தோழா – புது
பாதையைப் படைப்போம் நாமே
கந்தூரி கனவினி வேண்டாம் – நம்
சொந்தவூர் ரெண்டுபட வேண்டாம்

அவுலியாவிடம் உன் வேண்டுதல் – அது
முகவரி தவறிய கடிதமே
தீர்வுகள் வேண்டிய இறைஞ்சலை- நீ
தீர்ப்பவன் இடமே கேட்கவும்

இறுதிச் சடங்கென நேற்று – நாம்
உறுதியாய் முடிந்ததெனக் கொள்வோம்
கந்தூரி மாயையை வீழ்த்தி – புது
கலாச்சார மாற்றம் கொணர்வோம்

அல்லாஹ்வை மட்டுமே தொழுவோம் – அவன்
வல்லமை கொண்டே எழுவோம்
தர்கா கலாச்சாரம் ஒழிப்போம் – புது
தலைமுறை செழிக்க உழைப்போம்.


சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

கந்தூரி மாயை...! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | November 19, 2013 | , , , ,

இது ஒரு மீள்பதிவு
என்னிட முள்ளதொரு கேள்வி – என்
இனத் தவரிடம் கேட்க
முன்பென்று மில்லாத குரோதம் – உன்
உடன் பிறந்தோரிடம் எதற்கு?

அடங்கிய வருக்கேன் ஆராதனை – குழி
முடங்கியவருக்கா முழு அர்ச்சனை
கையில் நெய்யெனக் காப்பவனிருக்க –பொய்
கபுர்தனை வணங்குத லறிவா?

ஈடு இணையற்ற இறையை – எது
ஈருலக வாழ்விலும் விஞ்சும்
ஈனச் செயலாம் கந்தூரி – ஒரு
ஈமான் முறிக்கும் இழிவே

ஊர்வலம் என்றொரு ரனகளம் – நம்
ஊர்ச் சனங்களுக்கே கேவலம்
கொடியேற்றி மகிழும் யார்க்கும் – தம்
குடிகெட்டுப் போவது உறுதி

தோளோடு தோளாகத் தொழுது – நல்
விணையாம் நோன்பினை நோற்று
கணக்காக ஸகாத்தும் கொடுத்து – பின்
கபுர்தனில் கவிழ்தல் சரியா

கலைக் கூத்தாடி கணக்காய் – உன்
களியாட்டம் குமட்டும் குடலை
கண்டெந்தன் கண்கள் கலங்கும் – இக்
கவலையில் நெஞ்சமும் வலிக்கும்

போனது போகட்டும் தோழா – புது
பாதையைப் படைப்போம் நாமே
கந்தூரி கனவினி வேண்டாம் – நம்
சொந்தவூர் ரெண்டுபட வேண்டாம்

அவுலியாவிடம் உன் வேண்டுதல் – அது
முகவரி தவறிய கடிதமே
தீர்வுகள் வேண்டிய இறைஞ்சலை- நீ
தீர்ப்பவன் இடமே கேட்கவும்

இறுதிச் சடங்கென நேற்று – நாம்
உறுதியாய் முடிந்ததெனக் கொள்வோம்
கந்தூரி மாயையை வீழ்த்தி – புது
கலாச்சார மாற்றம் கொணர்வோம்

அல்லாஹ்வை மட்டுமே தொழுவோம் – அவன்
வல்லமை கொண்டே எழுவோம்
தர்கா கலாச்சாரம் ஒழிப்போம் – புது
தலைமுறை செழிக்க உழைப்போம்.


சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

அதிரை வர்த்தக மற்றும் கலாச்சார ? விழா - நடந்தது என்ன ? 26

அதிரைநிருபர் | May 04, 2013 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.


கடந்த ஒருமாத காலமாக அதிரையின் சாலைகளில் 'வர்த்தக, கலாச்சார விழா' நடக்கப் போவதாக ஃப்ளக்ஸ் விளம்பரங்கள் அறிவித்தன.
என்ன? எங்கு? எப்போது? என்பன பரம இரகசியமாக இருந்தன.
ஏப்ரல் இறுதி வெள்ளியில் விபரங்கள் வெளிவந்தன. கற்றோர் பலர் அதில் பொறுப்பு வகிப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அதிரையில் 'பெருஸ்ஸ்ஸ்ஸா' ஏதோ மாற்றம் வரப்போகிறது என்று பலரும் நம்பியதுபோல் நானும் நம்பினேன்.
அது எத்துணை மடத்தனம் என்பது 28.4.2013 மாலை தெரியவந்தது.
படித்தவர்கள் நடத்திய 'கலைச் சேவை'களை வீடியோவில் பார்த்து மனம் கனத்தது.
என்னைப் போலவே ஏமாறிப்போன சகோதரர்களுள் ஒருவரான 'மீடியா மேஜிக்' நிஜாமுத்தீன், 'வர்த்தகமாம்லோ ...' என்ற எண்ணத்தில் ஒரு ஸ்டால் போட்டிருந்தார். அது புத்திசாலித்தனமா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், அங்குள்ள அரங்கத்தில் நடைபெற்ற அசிங்கங்களை வீடியோ எடுத்துப் பத்திரப்படுத்தியது வெகு புத்திசாலித்தனம்.
இத்தனைக்கும் அரங்கக் கலை(?) நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெறப்படவில்லை என்ற தகவலையும் அவர் நேற்று காவல் நிலையத்திலிருந்து தெரிந்து வந்து சொன்னார்.
அரங்கம், அசிங்கங்களை அரங்கேற்றிய முதல் நாளே விழாவின் ஜாயிண்ட் செக்ரட்டரி செய்யது அஹ்மது கபீர் அவர்களை சந்தித்துத் தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறார் சகோ. நிஜாமுத்தீன். "சரி, சரி! பாட்டுகளைக் குறைத்துக் கொள்ளலாம்" என்ற அறிவுசீவித்தனமான பதில் கிடைத்திருக்கிறது. என்றாலும் அடுத்தடுத்த நாட்களில் அரங்கம் தொடர்ந்து அசிங்கமாகிக் கொண்டே வந்தது.
நேற்று 2.5.2013இல் அதிரை உலமாக்கள் சபை, கலாச்சாரத்தை(!) அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் பெரும் பொருட்செலவில் கலாச்சாரப் பொரட்சி நடைபெற்று வருவதால் "அரங்க நிகழ்ச்சிகளை நிறுத்தமுடியாது; யோசித்துச் சொல்கிறோம்" என்றெல்லாம் முட்டுக் கொடுக்கப்பட்டதை அறிந்த சகோ. நிஜாமுத்தீன் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் அனுப்பினார் (இணைப்பு).



இன்று மாலை ஐந்து மணியளவில் மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக் குழுவொன்று அதிரைக்கு வந்து, விழா இடத்தை ஆய்வு செய்யத் தொடங்கியது.
ஆய்வுக் குழுத் தலைவர் அழைத்ததன் பேரில் சகோ. நிஜாமுத்தீனோடு நானும் தம்பி ஜமாலுத்தீன் புகாரியும் விழாக் குழுவினரின் அலுவலகத்துக்குச் சென்றோம். "கோரிக்கைகள் யாவை?" எனக் கேட்டபோது,

1. பெண்களுக்கான தடுப்பு அல்லது சிறப்பு நேரம் அல்லது 'பெண்கள் மட்டும்' நாள் ஆகிய ஏதேனும் ஒன்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

2. கலாச்சாரக் கேடு விளைவிக்கும் அரங்க நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட வேண்டும்

3. தீயணைப்பு வண்டிகள் வேண்டும்.
4. ஆம்புலன்ஸ் வண்டி தயார் நிலையில் வேண்டும்.
5. பலமான பாதுகாப்பு ஏற்பாடு (செக்யூரிட்டி) வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை எழுதிக் கொடுத்து சகோ. நிஜாமுத்தீன் கையொப்பம் இட்டுக் கொடுத்தார்.
"பாட்டு, கூத்து, நாடகம் இனி அரங்கத்தில் நடக்காது. மற்றவை அனைத்தும் உடனடியாக ஏற்பாடு செய்யப்படும்" என அதிகாரி உறுதியளித்தார்.
"தடை செய்யப்பட வேண்டியவை இன்னும் வேறு பல இருக்கின்றன. சந்திப்போம்" எனக் கூறி விடைபெற்று மக்ரிபுத் தொழுகைக்கு விரைந்தோம்.
கடைசி நேரத்தில்தான் தெரியவந்தது. வந்த அதிகாரி நிஜாமின் காலேஜ்மேட்டாம்.

ஜமீல் M ஸாலிஹ்

கந்தூரி மாயை..... 25

அதிரைநிருபர் | June 04, 2012 | , , , ,

என்னிட முள்ளதொரு கேள்வி – என்
இனத் தவரிடம் கேட்க
முன்பென்று மில்லாத குரோதம் – உன்
உடன் பிறந்தோரிடம் எதற்கு?


அடங்கிய வருக்கேன் ஆராதனை – குழி
முடங்கியவருக்கா முழு அர்ச்சனை
கையில் நெய்யெனக் காப்பவனிருக்க –பொய்
கபுர்தனை வணங்குத லறிவா?


ஈடு இணையற்ற இறையை – எது
ஈருலக வாழ்விலும் விஞ்சும்
ஈனச் செயலாம் கந்தூரி – ஒரு
ஈமான் முறிக்கும் இழிவே


ஊர்வலம் என்றொரு ரனகளம் – நம்
ஊர்ச் சனங்களுக்கே கேவலம்
கொடியேற்றி மகிழும் யார்க்கும் – தம்
குடிகெட்டுப் போவது உறுதி


தோளோடு தோளாகத் தொழுது – நல்
விணையாம் நோன்பினை நோற்று
கணக்காக ஸகாத்தும் கொடுத்து – பின்
கபுர்தனில் கவிழ்தல் சரியா


கலைக் கூத்தாடி கணக்காய் – உன்
களியாட்டம் குமட்டும் குடலை
கண்டெந்தன் கண்கள் கலங்கும் – இக்
கவலையில் நெஞ்சமும் வலிக்கும்


போனது போகட்டும் தோழா – புது
பாதையைப் படைப்போம் நாமே
கந்தூரி கனவினி வேண்டாம் – நம்
சொந்தவூர் ரெண்டுபட வேண்டாம்


அவுலியாவிடம் உன் வேண்டுதல் – அது
முகவரி தவறிய கடிதமே
தீர்வுகள் வேண்டிய இறைஞ்சலை- நீ
தீர்ப்பவன் இடமே கேட்கவும்


இறுதிச் சடங்கென நேற்று – நாம்
உறுதியாய் முடிந்ததெனக் கொள்வோம்
கந்தூரி மாயையை வீழ்த்தி – புது
கலாச்சார மாற்றம் கொணர்வோம்


அல்லாஹ்வை மட்டுமே தொழுவோம் – அவன்
வல்லமை கொண்டே எழுவோம்
தர்கா கலாச்சாரம் ஒழிப்போம் – புது
தலைமுறை செழிக்க உழைப்போம்.


- சபீர்



காணொளி -- அதிரைநிருபர் குழு

கந்தூரி ஊர்வலம் - தடைவிதிக்க கோரிக்கை... 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 26, 2012 | , , , ,


அதிரையில் கடந்த செவ்வாய் கிழமையன்று (22-05-2012) கந்தூரி போதைக் குண்டர்களால் தக்வா பள்ளி அருகில் சகோதரர் அஹமது ஹாஜா தாக்கப்பட்டார், இதனைத் தொடர்ந்து பெரும் கலவரம் ஏற்படும் பீதி ஏற்பட்டது அதன் பின்னர் காவல்துறை ஆய்வாளர் செங்கமலக் கண்ணன் தலையிட்டு சூழலை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

தக்வா பள்ளி நிர்வாகம் தொழுகைக்கு இடையூறு விளைவித்த கந்தூரி போதைக் குண்டர்களின் செயலைக் கண்டித்தும், கந்தூரி என்ற அனாச்சார ஊர்வலம் இனிமேல் தக்வா பள்ளி மற்றும் நடுத்தெரு வழியாக செல்லத் தடை விதிக்க கோரியும் காவல்துறை ஆய்வாளரிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.



-அதிரைநிருபர் குழு

கந்தூரி போதை ::: நடந்தது என்ன !? - காணொளி 2

அதிரைநிருபர் பதிப்பகம் | May 24, 2012 | , , ,

கந்தூரி போதை வெறியாட்டத்தில் தாக்குதலுக்கு ஆளான சகோதரர் அஹமது ஹாஜா அவர்களிடம் நடந்தது என்ன !? அவரே தான் சார்ந்திருந்த சூழலையும் கலவரக்கார்களின் வெறியாட்டத்தையும் விளக்கிடும் காணொளி நடுநிலையாளர்களின் பார்வைக்கு !

மீண்டும் வழியுறுத்துகிறோம் !

கந்தூரி எனும் இழிவிலிருந்து நமதூர் என்றைக்கு விடுபடுகிறதோ அன்றைக்குத்தான் அதிரை முஸ்லிம்களின் மானம் காக்கப்படும்.