Showing posts with label நடுத்தெரு. Show all posts
Showing posts with label நடுத்தெரு. Show all posts

பேசும் படம் தொடர்கிறது.... 20

அதிரைநிருபர் பதிப்பகம் | September 18, 2012 | , , , ,


அதிகம் கருத்துகளால் கதகதப்பான விவாதங்களெல்லாம் நடந்தேறியிருக்கிறது இதுவரை. இனி நம்ம மூன்றாம் கண்ணால் எழுதிய ஸாரி, எடுத்தவைகளின் முத்தாய்ப்பான பதிவுகளை ஏன் இன்னும் பதியவில்லை என்று இரண்டிரண்டாக ஏராளமான கண்கள் தேடிக் கொண்டிருக்கின்றன என்பதை இதுவரை விட்ட ராக்கெட்டிலிருந்து தகவல் வந்து கொண்டிருக்கிறது.

அதை எப்படி புறக்கனிக்க முடியும், எடுத்த படங்களை பதிய தவறினால், ஏன் இன்னும் பதியவில்லை ? அங்கே பதிவு போடுறது இல்லையா ? அப்படின்னா டேர்ம் சரியில்லையா ? அவுங்கல்லாம் அப்புடித்தான் ! நம்பாதியா ஹாக்கா,  வாங்க ஹாக்கா.... இப்புடியெல்லாம் காதுல விழுற மாதிரி பிரம்மையா இருக்கு. இதுக்குமேல் சும்மா இருந்தா சரியா வராது எடு கேமராவை போடு போட்டோவைன்னு வந்துட்டேன்.


மழை வருமா வாராதான்னு ஊரில் பட்டிமன்றமே வைக்காலம்


இப்புடியே போய் லெஃப்ட்டுல திரும்புனா சித்திக் பள்ளி வரும்ன்னு யாரைக்கேட்டாலும் சொல்லுவாங்க !!


இன்டெர்நெட் வருகை அதில்  மின்னஞ்சல் கடுதாசிகள் வந்ததுலே வெளிநாடு வாழ் குறிப்பாக வளைகுடா வாழ் அதிரையர்களின் மெயில் பாக்ஸ் அடிக்கடி நிறம்புகிறது. ஆனால் அன்றைய கடிதப் போக்குவரத்தின் ராக்கெட்டான மரியாதைக்குரிய தோனகானா அவர்களின் மெயில் பாக்ஸ் இதுவரை ஃபுல் ஆகாமலே இருக்கு. அவசியம் நம் அனைவராலும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு வி.ஐ.பி.இவர்கள்.


மேலே புறாக்களின் பார்கிங் ஏரியா, கிழே ஆட்டோக்களின் பார்கிங் ஏரியா !


உள்ளே வெளியே நடப்பவைகள் யாவுமே யதார்த்தமே !


முன்பெல்லாம் வாய்க்காலில் நீர் ஓடும் இப்வெல்லாம் வாய்க்காலில் பிளாஸ்டிக் பை தாங்க ஓடுது


நல்லா பார்த்துக் கொள்ளுங்கள் இதுதான் யானை விழுந்தான் குளம். இப்போ இங்கே குப்பை விழுந்து விழுந்து குப்பை விழுந்தான் குளமா போச்சி இனி இந்தப் பக்கம் டைனேசர் வந்தா கூட இதில் விழாது


இதுதான் நடுத்தெருவின் நடுத்தெரு


இந்த மாதிரி ஒரு அறிவிப்பு பலகை இன்னும் தேவையா ?


இந்த இடத்தை நிறையை பேர் மறந்துட்டு ஊருக்குள்ளே ஆட்டம் போடுறாங்க !!

Sஹமீது

கந்தூரி ஊர்வலம் - தடைவிதிக்க கோரிக்கை... 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 26, 2012 | , , , ,


அதிரையில் கடந்த செவ்வாய் கிழமையன்று (22-05-2012) கந்தூரி போதைக் குண்டர்களால் தக்வா பள்ளி அருகில் சகோதரர் அஹமது ஹாஜா தாக்கப்பட்டார், இதனைத் தொடர்ந்து பெரும் கலவரம் ஏற்படும் பீதி ஏற்பட்டது அதன் பின்னர் காவல்துறை ஆய்வாளர் செங்கமலக் கண்ணன் தலையிட்டு சூழலை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

தக்வா பள்ளி நிர்வாகம் தொழுகைக்கு இடையூறு விளைவித்த கந்தூரி போதைக் குண்டர்களின் செயலைக் கண்டித்தும், கந்தூரி என்ற அனாச்சார ஊர்வலம் இனிமேல் தக்வா பள்ளி மற்றும் நடுத்தெரு வழியாக செல்லத் தடை விதிக்க கோரியும் காவல்துறை ஆய்வாளரிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.



-அதிரைநிருபர் குழு

நாதியற்றுக் கிடக்குதப்பா! கேட்பாரில்லை! 24

அதிரைநிருபர் | July 30, 2010 | , ,

கடந்த சில மாதங்களாக அதிரை நடுத்தெருவில் சாலை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது, ஏனோ இன்னும் இது முடிவடையாமல் உள்ளது, இது பற்றிய ஒரு ஆதங்கம்.                          



Dear brothers,

Assalamu alaikum. Myself and other middle street dwellers are facing a crucial problem of prolonged delay in the construction of new road. Several months ago, it was promised to me by one of the leading personalities that the road construction will be completed 'within a month'. But I don't know for what reason it is delayed until now! I want to express my concern and disturbed feeling in an article. But, as you all know, our brothers are not receptive to constructive criticism. Therefore, I decided to compose a poem in Tamil which will not be read by all but a few educated mass. Readers may pardon me for this. If you understand the content of my poem, you may understand the reality of my feeling. Thanks for your taking trouble!


உடைத்தெடுத்தார் கீழ்ப்புறத்தின் படிகள் தம்மை

உயர்நோக்காம் சாக்கடையைச் சீர்ப டுத்த


இடைத்தரகர் பலபேர்கள் நின்றே செய்தார்


இதையடுத்து மாதங்கள் பலவாய் வீதி

துடைப்பதுபோல் தார்ச்சாலை அமைப்ப தற்காய்த்


தூரெடுத்துக் காவிமண்ணும் கல்லும் போட்டார்


நடுத்தெருவே காவிமயம் இதனால் ஆகி


நாதியற்றுக் கிடக்குதப்பா! கேட்பா ரில்லை!



Is there anybody from the undertakers who has got wisdom?

-அதிரை அஹ்மது

புகைப்படம் : நன்றி அதிரை எக்ஸ்பிரஸ்
குறிப்பு: புகைப்படம் மார்ச் மாதம் எடுத்தது.