அதன் ஒரு பகுதியாக அவர்கள் கையில் எடுத்திருக்கும் சர்ச்சை 'மாட்டுக் கறி', இதற்கு பேரூராட்சி மன்றம் தடைவிதித்து விட்டதாக பகிங்கமாக சுவரொட்டிகள் ஒட்டி ஊர் முழுவதும் பதற்றமான சூழலை பாஸீச விஷமிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.
நீண்ட நாட்களாக அமைதியான முறையில் தொழில் செய்துவரும் சகோதரர்களுக்கு இவ்வாறான தொந்தரவுகள் கொடுப்பதிலிருந்தும், ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தனித்து தகுந்த சட்ட ஆதாரங்களை முன்வைத்து அதற்கான ஆவண செய்வதை விடுத்து, ஏதோ தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை களம் இறக்கி அங்கே முஸ்லீம் விரோத கும்பலின் தலையீட்டால் கலகம் ஏற்படுத்தும் சதி அம்பலமாகியிருக்கிறது.
அன்பார்ந்த அதிரை சகோதரர்களே, முஸ்லீம்களின் ஒரு பொது அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் மார்கெட்டில், பாஸீச விரோதிகளின் ஆதிக்கம் நுழைய அனுமதிக்க வழிவகை செய்ய துணை போகாதீர்கள், வீணான பதற்றம் ஏற்படுத்தி சகோதரர்கள் மத்தியில் கலவர பீதியை ஏற்படுத்தும் கும்பலை சட்டபூர்மவாக தண்டிக்க முறையான நடவடிக்கைகளில் இறங்குவதற்கு ஒற்றுமையுடன் ஒன்றினையுங்கள்.
நம் சகோதரர்கள் அனைவரும் ஒற்றுமைகாத்து சகோதரத்துவம் பேனுவோம் இன்ஷா அல்லாஹ்....
-அதிரைநிருபர் குழு

