Showing posts with label மாட்டுக்கறி. Show all posts
Showing posts with label மாட்டுக்கறி. Show all posts

மாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (2) 7

அதிரைநிருபர் பதிப்பகம் | January 12, 2015 | , , , ,

கடந்த அத்தியாயத்தில் மாட்டுக்கறி உணவாக சாப்பிடப்படுவது வேதகாலம்தொட்டு பரவலாக இருந்த பழக்கம்தான் என்பதையும், இந்த உணவுப் பழக்கம் மத ரீதியான சடங்குகளிலும், மரியாதை நிமித்தமாகவும் மேற்கொள்ளப்பட்டன என்பதையும், விவேகானந்தர் போன்ற மகான்கள்  என்று  போற்றப்பட்டோரும் இதனை ஏற்றுக் கொண்டும்  குறிப்பிட்டும் இருககிறார்கள் என்பதையும் ஆதாரங்களுடன் பார்த்தோம். அப்படி இருந்த மாட்டுக்கறி பின்னர் ஏன் இப்படியானது? ஒரு உணவுப் பதார்த்தத்துக்கு  எப்படி மத சாயம் பூசப்பட்டது? என்பதை இப்போது காணலாம். 

முன் அத்தியாயத்தில் பார்த்தபடி வேதகாலத்தில் பசுக்கள் கொல்லப்பட்டாலும் ,        உண்ணப்பட்டாலும் அதில் ஒரு விதிவிலக்கு இருந்திருக்கிறது. அதாவது அந்தப் பசுக்களில் கூட “அக்ஞா” என்று அழைக்கப்பட்ட பசுக்கள் இருந்திருக்கின்றன.  “அக்ஞா” என்ற சொல்லுக்கு கொல்லத் தகாதவை என்று அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. இந்த கொல்லத் தகாத பசுக்கள் எவை என்றால் அவை ஒரு பிராமணருக்கு, ஒரு பலி நடத்திய பிறகு தட்சணையாக- கூலியாக – உயிருடன் கொடுக்கப்படும் பசுக்களாகும். அதாவது ஒரு பிராமணருக்கு கூலியாக கிடைத்த பசு மட்டுமே புனிதமானது அது கொல்லப்படக்கூடாதது; உண்ணப்படக்கூடாதது. இந்த புனிதப்பசுவின் அரிச்சுவடி இப்படித்தான் ஆரம்பிக்கிறது. 

அத்துடன் புத்த, சமண மதங்கள் தோன்றி வளரும்போது பொதுவாக விலங்குகளை வதை செய்வது, அறுப்பது, உண்பது வெறுக்கப்பட காரணமானது. உயிர்  வதைக்கு பொதுவான கருத்து விதைக்கப்பட்டது. அதில் கூட பசுவுக்கு என்று தனியான அந்தஸ்து பிரச்சாரப்படுத்தப்படவில்லை. பிற உயிர்களைக் கொல்லாதே என்கிற பொதுப்பிரிவில்தான் வந்தன. ஆகவே வன்முறைக்கு எதிரான  முறைகளை உபநிடதக் கொள்கைகள் வலியுறுத்தியதித்தத் தொடர்ந்தும்,  புத்தம், சமணம் ஆகியவற்றின் எழுச்சி,  வைணவத்தின் மையக்கருத்து ஆகியன தாம் விலங்குகளைக் கொல்லாமையை உறுதிப்படுத்தின. 

ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் இந்திய சமூகம் நில பிரபுத்துவம், ஜமீன்தார் முறை போன்றவற்றிற்கு மெல்ல மாறத்தொடங்கிய சூழல் வளர்ந்தபோது பசு புனிதமானது என்கிற தத்துவமும் வளர்த்தெடுக்கப்படத்தொடங்கியது.  நிலப்பிரபுத்துவம், குறு நில மன்னர்கள் என்கிற அமைப்புகள் மலரத்தொடங்கியபோது சில சட்டங்கள், சம்பிரதாயங்கள் அரசமைப்பில் உருவாக்கப்பட்டன. அந்தப் பணிகளில் ஆளுமை செலுத்திய பிராமணர்கள், மாட்டிறைச்சி தின்பதை தடுத்து நிறுத்த சட்டமாக்க அரசர்களுக்கு ஆலோசனை சொன்னார்கள். இதற்கு காரணம் மாடுகள் பெருமளவில் விவசாயத்துக்கு பயன்படவேண்டும் – உணவுக்காக அழிக்கப்படக்கூடாது என்பதே. அதோடு கூடவே அரசவைய்ல் வேலை செய்துவந்த பிராமணர்களுக்கு பெருமளவில் பசுக்களே தானமாக வழங்கப்பட்டன. அவை புனிதப்பசுக்களாக நடத்தப்பட்டன. வேளாண்மைச் சமூகத்திலும்  பசுக்களின் பொருளியல் மதிப்பு அந்நிலையை முதன்மைப்படுத்தின. அத்துடன் பசுக்களின் பாலும் உணவாகப் பயன்பட்டதும், பாலைத்தொடர்ந்த அதன் சார்பு உணவுகளான தயிர், வெண்ணெய், நெய் போன்றவைகளுக்கும் பஞ்சம் வரக்கூடாது என்கிற எண்ணத்திலும் அவைகளைத்தருகிற பசுக்களுக்கு, விலங்குகளுக்கு மத்தியில் ஒரு வி.ஐ. பி அந்தஸ்து தரப்பட்டது. 

தாயைப்போல பால் தருவதால் பசு இப்படி கோ மாதா என் குல  மாதா என்று கொண்டாடப்பட்டது. “ பாதிப்புள்ளே பொழைக்குதப்பா பசும்பாலைத் தாய்ப்பாலா நம்பி” என்று அந்தக்காலத்திலேயே இருந்ததிருக்கும் போலத்தோன்றுகிறது. இந்த அடிப்படையில் சட்டத்தில் ஏற்பட்ட நடைமுறைகளுக்கு  'கலிவர்ஞா' என்று பெயர். இந்த முறைப்படி , முன் நடந்த முறைகள் மாற்றப்பட்டன பசுவைக் கொல்வது தவறு என்று பார்ப்பன கருத்துக்கள் பிரச்சாரமாய் பரவத்தொடங்கின. 

அத்துடன் மக்களிடம் உயர்வு தாழ்வு கற்பித்த வேதங்கள் உயர்ந்தொரையும் , தாழ்ந்தோரையும்  வேறுபடுத்திப்பார்க்க கையில் எடுத்த ஒரு ஆயுதமாகவும் மாட்டிறைச்சி இருந்தது. மாட்டிறைச்சி தின்போர் புலையர் என்றும், சூத்திரன் என்றும், தாழ்த்தப்பட்டோன் என்றும் முத்திரை குத்தப்பட்டனர். சுருக்கமாக ,  பெற்ற  தாய்க்கு சமமாக  பால் தரும் பசுவை    அறுத்து புசிப்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று தாழ்த்தப்பட்டோரை தரம் பிரிக்கவும் புனிதப்பசு கருவியாயிற்று.  

இந்தியாவை பல்வேறு காலங்களில் ஆண்ட வெவ்வேறு ஆட்சியாளர்களாலும்  பசு அரசியல் கருவியாக்கப்பட்டது. “இவன் ரெம்ப நல்லவண்டா” என்று மற்றவர்களால்     மதிக்கப் படவேண்டுமேன்று எண்ணிய அரசர்கள் தங்களின் கைகளில் குத்திக்கொண்ட அக்மார்க் முத்திரை இந்த  புனிதபசு கொள்கை. இதற்கு இந்த அரசர்களை தூண்டியவர்கள்      அரசவைகளில் திவான்களாகவும் ,ராஜ ரிஷிகளாகவும் நிழல் நிர்வாகம் செய்த பிராமணர்களே. இந்த சூழ்ச்சிக்கு  மொகலாய மன்னர்களும் தப்பவில்லை.  

சமணர்களையும் பார்ப்பனர்களையும் மதிக்கும் பொருட்டு நல்லெண்ணத்தை பறைசாற்றும்  வகையில்  பசுக்களைக் கொல்வதற்கு மொகலாயப் பேரரசர்களான பாபர், அக்பர், ஜஹாங்கீர், ஒளரங்கசீபு ஆகியோர் தடை விதித்தனர்.  'நாம் இந்துக்கள் இம்மண்ணின் மைந்தர்களாகிய நாம் பசுக்களைக் கொல்வதோ அதன் வழி பார்ப்பனர்களை ஒடுக்குவதோ கூடாது' என்று பசுக்களையும் பார்ப்பனர்களையும் காப்பாற்ற வந்த அவதாரமாகக் கருதப்படும் மாமன்னர் சிவாஜி பறைசாற்றியிருக்கிறார்.

'சிக் குகா' அல்லது 'நாம்தாரி' என்னும் பெயரில் 1870-களில் பஞ்சாப்பில் தொடங்கப்பட்ட 'இந்து பசுப் பாதுகாப்புப் படை' தான் முதலில் பசுக்களை அரசியல் கருவியாக்கியது; அவர்களுடைய இக்கருத்தியல் பின்னர் தயானந்த சரஸ்வதி அவர்களால் 1882-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'முதல் கோரக்கினி சபை'யால் வலுப்படுத்தப்பட்டது. இவ்வமைப்புத் தான் குறிப்பிட்ட பிரிவு மக்களின் சின்னமாகப் பசுவை அடையாளப்படுத்தியது. 

மேலும் சுவாமி தயானந்த சரஸ்வதி , ஆரிய சமாஜ் என்கிற ஒரு இயக்கத்தை தோற்றுவித்து பசுவின் புனிதம் பற்றி நாடெங்கும் பரவலாக ஒரு இயக்கம் நடத்தினார். ஆரிய சமாஜம் என்பது வேறு பல நல்ல கருத்துக்களையும்  மக்களிடம் பிரச்சாரம் செய்தது. அவற்றுள் சில சிலை வணக்கம் ஒழிக்கப்படவேண்டும், குழந்தை மணம் தடுக்கப்பட வேண்டும், விதவை மணம் ஊக்குவிக்கப்பட வேண்டும், பிறப்பிலேயே மனுநீதியால் விதிக்கப்பட்ட சாதிப் பாகுபாடுகள் அகற்றப்பட வேண்டும் ஆகியனவாகும். இத்துடன் பசுவை போற்றவேண்டும் என்கிற கருத்தும் சுவாமி தயானந்த சரச்வதியால் போதிக்கப்பட்டது. உயர் சாதியினர் இந்த சுவாமி தயானந்தா சரஸ்வதி போதித்த ஏனைய கருத்துக்களை வசதியாக புறக்கணித்துவிட்டு பசுவைப் போற்றவேண்டும், போஷிக்க வேண்டும் என்கிற கருத்தை  மட்டும் பிடித்து தொங்கினர்.  

மாடுகளின் ,  அதிகஅளவு எடை கொண்ட  மாமிச கறி  அளவினை உத்தேசித்தும், விலை குறைவாக கிடைப்பதை உத்தேசித்தும், அன்றாட உணவுக்கும்,  பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில் அவர்களின் மார்க்க நம்பிக்கையான பலி இடுவதற்கும் ஏழைகளுக்கு தானம் செய்வதற்கும்  முஸ்லீம்கள் , மாடுகளை அதிக அளவில் வாங்கத்தொடங்கியபோது சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிரச்சாரத்தால்  மாட்டுக்கறி உண்ணும  முஸ்லிம்களை  நோக்கி , அதியே காரணமாக்கி  1880-களிலும் 1890-களிலும் கலவரங்களை ஏற்படுத்தினார்கள். 

இவ்வாறு பசுவதை என்பது செய்யக்கூடாதது- பசுபுனிதமானது என்றெல்லாம்  கடும் பிரச்சாரம் நிகழ்ந்தாலும் ,  1888-ம் ஆண்டில் வடமேற்கு மாகாண உயர் நீதிமன்றம், 'பசு புனிதமான பொருள் அல்ல  என்று  தீர்ப்பு அளித்தது. இது  அவர்களுடைய வேகத்தை மட்டுப்படுத்தியது.; ஆனால் கோபத்தை அதிகப்படுத்தியது. நீதிமன்றத்தில் மூக்குடைந்தவர்கள் காவி உடையணிந்து தடி எடுக்க ஆரம்பித்தனர். இந்து – முஸ்லீம்களுக்கிடையில் ஏற்பட்ட பல கலவரங்களுக்கு பசுவே கருப்பொருள் ஆனது.  கோ மாதா கொல்லப்படுகிறாள் என்று உணர்ச்சியை தூண்டிவிட்டார்கள். 

1893-ம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தின் அஜாம்கர் மாவட்டத்தில் கலவரம் நடந்தது. அக்கலவரத்தால் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். 1912-13-ல் அயோத்தியாவில் கலவரம் மூண்டது. 1917-ல் ஷாகாபாத்தில் பெரிய கலவரம் மூண்டது. பல முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்; அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. 

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும்  பல துன்பமான நிகழ்வுகள் பசுவின் பொருட்டால் நடைபெற்றன.  பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று 1966-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள மதவாத அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியைப் பாராளுமன்றம் முன்பு நடத்தின. அப்போது மூண்ட கலவரத்தில் எட்டுப் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். காந்தியடிகளின் ஆன்மீக வாரிசாகக் கருதப்படும் ஆச்சாரிய வினோபா பாவே பசுவதையைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 1979-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உண்ணாவிரத  போராட்டம் நடத்தினார். இப்படியாகப் பசு அரசியல் கருவியானது.

பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று சொன்ன ஆதிக்க சாதி அமைப்புகள் எவையும் 'பசுவைக் கொல்லக்கூடாது என்று வேதங்களிலோ பார்ப்பன எழுத்துகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை' என்பதையும் 'காலாகாலமாகப் பசு தின்னப்பட்டு வந்திருக்கிறது' என்பதையோ காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

இதனால் -

உண்ண உணவின்றி அவதிப்படும் ஏழை மனிதனை பற்றி கவலைப்படாமல் மாட்டைப்பற்றி கவலைப்பட்டோர்-

மாட்டுக்கறியை உண்ணக்கூடாது ஆனால் மாட்டு  மூத்திரத்தை குடிக்கலாம், வீட்டிலும், உடைகளிலும், உச்சந்தலைகளிலும்  தெளித்துக்கொள்ளலாம் என்றும் ஒவ்வாத  சாத்திரம் பேசியோர்-

பைபிளில் கூட ஆதம் -  ஏவாளுக்கு எல்லாவற்றையும் படைத்து அனுபவிக்கக் கொடுத்த இறைவன் ஒரு பழத்தைக் காட்டி சுவைக்கக்கூடாது என்று  தடுத்த கதை இருக்கிறது. ஆனால் எந்த நான்கு வேதங்களிலும் , உபநிதங்களிலும் மாட்டை அறுப்பதும்  புசிப்பதும்  தடுக்கப்படவில்லையே என்று சிந்திக்காதோர்-

மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம் கூட பசு அவதாரம் எடுத்ததாக குறிப்பிடப்படவில்லையே - பன்றி  அவதாரம்கூட எடுத்தார்- நரகலை தின்னும் பன்றிக்கு வேதங்கள் கொடுத்த மதிப்புக்கூட பசுக்கு கொடுக்கவில்லையே அதை ஏன்           புனிதமாக்கவேண்டுமென்று என்று யோசிக்க அறிவுபூர்வமாக மறுத்தோர்-  

ஆள் திரட்டுவதற்கும், அரசியல் நடத்துவதற்கும் பசு மாட்டை பயன்படுத்த ஆரம்பித்தனர். அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கெதிராக பாவப்பட்ட பசுவை புனிதமாக்கி, பசுவின் பெயரால் நாட்டில் பல வன்முறை கலவரங்களை நடத்தினர்.  

அடுத்த அத்தியாயத்தில் நிறைவுறும்.
இபுராஹீம் அன்சாரி


மாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (1) 10

அதிரைநிருபர் பதிப்பகம் | January 10, 2015 | , , , , , ,


மாட்டுக்கறி என்ற பெயர் கேட்டதும் சும்மா அதிருதா? அதிர வேண்டாம் ; பதற வேண்டாம்; இந்த ஆக்கத்துக்கு அதிரை வேண்டாம். போபாலில் ஆரம்பித்து, அகில இந்தியாவில் மாட்டுக்கறி என்கிற பிரச்சனையைத்தான் அலசப் போகிறோம்.  இந்த அலசல்  அதிரை என்கிற குண்டு சட்டியில் குதிரை ஓட்ட அல்ல. பன்னெடுங்காலமாகவே மாட்டை அறுப்பதும், மாட்டுக்கறி வியாபாரம் செய்வதும் சாப்பிடுவதும் மாபாதகம் என்றும்,ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் மட்டுமே இவை தொடர்பான தொழில்களில், நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதும்,அவர்களை தீண்டத்தகாதவர்களாகவும், ஜீவகாருண்யம் அற்றவர்களாகவும், இரக்கமற்ற பாவிகளாகவும் சித்தரித்து தீட்டப்பட்டுள்ள கபட சித்திரங்கள் யாவற்றையும் அழிக்கும்  நோக்கில்தான். நாம் முதலில் போபாலுக்குப் போகப்போகிறோம். பிறகு புதுடில்லிக்கும் போவோம்.

பி ஜெ பி அரசாளும் மத்தியப் பிரதேச அரசு பசுவதை தடுப்புக்காகச் சட்டத்தைத் திருத்த முடிவு செய்திருக்கிறது. இம்முடிவின் மீது  நடுநிலை மற்றும் நன்னெறி பரப்பும் அறிஞர்களால் எதிர்ப்புக்கனை தொடுக்கப்பட்டுள்ளது. இது தனி நபர சுதந்திரத்தில் அரசின் அப்பட்டமான தலையீடு என்றும், ஏழைகளுக்கு எதிரான ஏற்றுக் கொள்ளப்பட முடியாத கொடுமை என்றும் சித்தரிக்கப்படுகிறது. இந்நிலையில்  'பசுவின் புனிதத்தன்மை' பற்றிய புராண இதிகாச சாஸ்திர சம்பிரதாய மற்றும் வரலாற்று குறிப்புகள்  பற்றியும் அந்த குரிப்புகளை வைத்து சானா பானாக்கள் நாட்டைத் துண்டாட எப்படி பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றியும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மேலும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தோர் மேலும்   உயர்சாதியினர் இந்த பசுவதை, மாட்டுக்கறி ஆகிய அஸ்திரங்களை எப்படி உபயோகிக்கின்றனர் என்பதைப் பற்றியும் சற்று ஆதாரங்களோடு அலசலாம்.           (இவர்களின் ஊளா  பாலாக்களை அலசி அலசியே நமக்கு  தண்ணீர் பில் எகிறிவிட்டது).

முதல் ஓவரை வீசும்  முன்பு,  ஒரு சிறு கவனக் குறிப்புத் தந்து விட எண்ணுகிறேன். இந்த ஆக்கத்தில் சில இராமாயண,  மஹாபாரத காட்சிகளை, ஆதாரங்களை குறிப்பிட்டு இருப்பேன்.இந்த ஆதாரங்கள் கம்ப இராமயணத்தில் இல்லையே, இராஜாஜி எழுதிய வியாசர் விருந்திலும், பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்திலும் இல்லையே என்று தமிழ் புலமை படைத்த / படித்த யாரும் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடாதீர்கள்.  இந்த இதிகாசங்களில் இருந்து என்னால் காட்டப்படும் ஆதாரங்கள் ஒரிஜினல் இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. கம்பர் எழுதியதும், இராஜாஜி, பாரதியார் எழுதியதும் தழுவல்கள் மட்டுமல்ல அவைகள் வழுவல்கள்; வளவலாக்கள்.; கொழகொழாக்கள்; பசப்பல்கள்; ரீல்கள்; புருடாக்கள்; காதில் சுற்றும் பூக்கள். தமிழ்ப் பண்பாடு கருதி மறைக்கப்பட்ட உண்மைகள். உதாரணமாக இராவணன் சீதையை எங்கே கை வைத்து தொட்டு தூக்கிச்சென்றான் என்பதை வால்மீகி ராமாயணம்  குறிப்பிடும் விதமும் இடமும் வேறு; அந்த இடம் வித்தியாசமானதல்ல ஆனால்  விபரீதமானது. இருந்தாலும், ஒரு பெரும் எடையுள்ள பெண்ணை  கடல் கடந்து ஆகாயத்தில்  தூக்கிச்செல்ல வசதியானது. இந்த சம்பவத்தை கம்பராமாயணம் குறிப்பிடும் விதம்  தமிழ்பண்பாட்டை ஒட்டியது. தொடாமல் தூக்கினானாம்; ஆகாயத்தில்  பறந்தானாம். நம்பமுடியுமா? ஆகவே இந்த ஆக்கத்தில் ஒரிஜினல் இதிகாசங்கள் குறிப்பிடும் ஆதாரங்களையே கையாண்டு இருக்கிறேன்.     

முதலாவதாக, இந்திய துணைக் கண்டத்தில் மாடுகளை உணவுக்காக அறுக்கும் வழக்கத்தை முஸ்லிம்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள் என்று சானா பானாவினர் கூறுகிறார்கள். ஆனால் வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வரத்தொடங்கும் முன் காலத்திலிருந்தே மாடுகளை உணவுக்காகவும் வேண்டுதல்களுக்காகவும், யாகங்களுக்காகவும் அறுத்து பலியிட்டு புசிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கு இதிகாச,  பிராமண, சமண, புத்த இலக்கியம் மற்றும் வரலாறுகளில் இருந்து சான்றுகள் இருக்கின்றன. 

விலங்குகளைப் பலியிடுதல் என்பது வேத காலத்தில் சாதாரணமான ஒன்றாக இருந்திருக்கிறது. பொதுப் பலியிடுதலுக்கு முன் செய்யப்படும் முன்னேற்பாட்டுச் சடங்காகிய 'அக்கினித் தேயம்' என்னும் சடங்கில் பசுதான் கொல்லப்பட்டது. 

பலியிடுதலில் முதன்மையான ஒன்றாகிய 'அசுவமேத யாகத்'தில் அறுநூறு விலங்குகளும் பறவைகளும் கொல்லப்படும் அப்படிக் கொல்லப்பட்ட பின் பலியிடுதலின் நிறைவைக் குறிப்பிடும் வகையில் இருபத்தோரு பசுக்கள் கொல்லப்படும். இந்த இருபத்தியொரு பசுக்கள் கொல்லப்படாவிட்டால் அந்த யாகம் பொய்த்துவிட்டதாக அர்த்தம். அத்துடன் இராஜசூய யாகம், வாஜ்பேய யாகம் ஆகியவற்றிலும் விலங்குகள் பலியிடப்படும். இதேபோல் மற்றொரு முதன்மையான யாகமாக கருதப்படும் கொசவ யாகத்தில் பசுக்கள் மற்றும் கன்றுகள்  பயமுறுத்தும் தேவதைகளுக்காக பலியிடப்பட்டன. ஆகவே எல்லாவகையான யாகங்களிலும் பசுக்கள் கொல்லப்பட்டன. அவை புசிக்கப்பட்டன.   

'வேதக் கருத்துகளிலும் தர்மசாத்திரங்களிலும் உணவுக்காக பசுக்கள் கொல்லப்பட்டதும் மாட்டிறைச்சி தின்னப்பட்டதும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. 'பசு விருப்பமான உணவு' என வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யக்ஞ வல்கீய முனிவர் கூற்றின்படி , பசு இறைச்சியைத் தின்பதை வலியுறுத்துவது வேதங்களில் உள்ளது. விருந்தினர்களை வரவேற்கும் போது பசுக்களைக் கொன்று உணவாகப் படைப்பது பெருமைக்குரிய ஒன்று என வேதங்களும் அவற்றிற்குப் பிந்தைய கருத்துகளும் சொல்கின்றன. இறுதிச் சடங்குகளின் போது பிராமணர்கள் பசுக்களைக் கொன்று தின்றதற்கான பல்வேறு எழுத்துச் சான்றுகள் இருக்கின்றன. 

பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போ என்று தகப்பன் தசரதன் ஆணையிட்டான்  என்று இராமனுக்கு சொல்லப்பட்டபோது இராமனுடைய உடனடி பதிலாக இருந்ததாக வால்மீகி இராமாயணம் குறிப்பிடுவது “ நான் நாட்டையும், மணிமுடியையும் , அரண்மனை வாசத்தையும் இழப்பதுடன் சுவைதரும் மாமிச உணவுகளையும் துறந்து காட்டுக்குப் போய் பதினான்கு வருடங்கள் காய்களையும் பழங்களையும் புசிக்க வேண்டுமா?” என்பதுதான்.               
(AYODHYA KANDAM  CHAPTERS 20, 26, 94).

அது மட்டுமா? வால்மீகி கூறுவதையும், நாம்  எடுத்துக்காட்டுவதையும் ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் நிச்சயம் இருப்பார்கள். ஆனால்  ஒருவர் இருக்கிறார் அவர் கூறுவதை நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அவர்தான் வீரத்துறவி என்று பெயர் பெற்ற சுவாமி விவேகானந்தர். இதோ அவரே கூறுகிறார். 

"You will be astonished if I tell you that, according to the old ceremonials, he is not a good Hindu who does not eat beef. On certain occasions he must sacrifice a bull and eat it."  “ வேதக் கருத்துக்களின் அடிப்படையில் மாட்டுக்கறியை உணவாகக் கொள்ளாத ஒருவர் நல்ல ஹிந்துவாக இருக்க முடியாது என்று நான் கூறினால் நீங்கள் திகைப்படைவீர்கள். சில சமய சடங்குகளில் ஒரு ஹிந்து ஒரு காளை மாட்டை அறுத்து பலியிடுவதோடு உட்கொள்ளவும் வேண்டும் ” என்று விவேகானந்தர் கூறுகிறார். 

"There was a time in this very India when, without eating beef, no Brahmin could remain a Brahmin;"  இந்திய பழக்கங்களில் மாட்டுக்கறி உண்ணாத பிராமணர் ஒரு சிறந்த பிராமணராகவே இருக்க முடியாது.   இதையும் கூறியவர் கறிக்கடை காதர் பாட்சா அல்ல. சாட்சாத் விவேகாகனந்தரே.
[The complete works of Swami Vivekananda, Volume 3, Pg 536]

மேலும் கீழ்க்கண்ட விளக்க நூல் எப்படி மாட்டை அறுப்பது என்று பிராமணர்களுக்கு வழிகாட்டுகிறது. 
[Aitareya Brahman, Book 2, para 6 and 7]

அடுத்து,  Purv Mimansa Sutra Adhyaya 3, Pada 6, Sutra 18, the Shabarbhasya says,
संति च पशुधर्माः- उपाकरणं, उपानयं, अक्ष्णया बंधः, यूपे नियोजनम्, संज्ञपनं, विशसनमित्येवमादयः 

There are also certain details to be performed in connection with the animals, such as (a) Upaakaranam [Touching the animal with the two mantras], (b) Upaanayanam [Bringing forward], (c) Akshanyaa-bandhah [Tying with a rope], (d) Yoope niyojanam [Fettering to the Sacrificial Post], (e) Sanjnapanam [Suffocating to death], (f) Vishasanam [Dissecting], and so forth.

அதாவது அறுக்கப்படப்போகும் மாட்டை எங்கே தொடுவது, எப்படிக் கொண்டுவருவது, கழுத்திலும் அறுக்கப்படும் கம்பிலும் கயிற்றால் எப்படிக் கட்டுவது, எப்படி அறுப்பது என்கிற வழிமுறைகளை இந்த ஸ்லோகம சொல்லித்தருகிறது.   
[Shabhar bhashya on Mimamsa Sutra 3/6/18; translated by Ganganath Jha]

இந்த ஆதாரங்களை நான் சுருக்கமாக குறிப்பிடுகிறேன்.மிகவும்  விரிவாகப்போனால் இந்த ஆக்கம் வீங்கிவிடும்.பல முகமூடிகள் கிழிந்துவிடும். யாராவது எதிர்த்து விளக்கம்  கேட்டால் விபரம் சொல்வேன்.

வேதகாலத்தை அடுத்து, இடைக்கால வரலாற்றுக் குறிப்புகளிலும் நமது வாதத்துக்கு வலு சேர்க்க  ஏராளமான சான்றுகள்  இருக்கின்றன.  ஆச்சாரம் மிகுந்த பிராமணர்கள் பசியைப் போக்குவதற்காக காளை இறைச்சியையும் நாய் இறைச்சியையும் தின்றதை மனுசாத்திரம்  கூறுகிறது. 

படித்த பார்ப்பனரைப் பெரிய காளையைப் படைத்தோ ஆட்டைப் படையலாக்கியோ வரவேற்க வேண்டும் என்று யக்ஞவல்கீய ஸ்மிருதி (கி.மு. 100-300) சொல்கிறது. மகாபாரதத்தில் வரும் கதா பாத்திரத்தில்  முக்கால்வாசிப் பேர் அசைவ உணவு தின்பவர்கள்தான்.  இரந்திதேவ அரசரின் அடுக்களையில் மட்டும் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் பசுக்கள் அடித்துக் கொல்லப்பட்டு உணவாக்கப்பட்டன. மற்ற தானியங்களுடன் இந்த இறைச்சியும் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டன. கொழுத்த கன்றை அடித்து உணவாக்கி இராமனுக்குப் பரத்வாஜ முனிவர் படையலாக்கினார் என்று தெரிகிறது.  

மதம் சார்ந்த இலக்கியங்களில் மட்டுமல்ல. மதச்சார்பற்ற இலக்கியங்களிலும் இப்படிச் சான்றுகள் காட்ட முடியும். இந்திய மருத்துவ முறைகளில் மாட்டிறைச்சி மருந்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. மாட்டிறைச்சியைத் தின்பது பற்றிக் காளிதாசர், பவபுத்தி, இராஜசேகரர், ஸ்ரீஹர்சர் ஆகியோருடைய எழுத்துகளில் இருக்கும் குறிப்புகள் நிறைய சொல்கின்றன.
(ஆதாரம் : THE MYTH OF THE HOLY COW BY DR. D.N. JHA).

இப்படியெல்லாம் தங்களால் சப்புக்கொட்டி சுவைக்கப்பட்ட மாட்டுக்கறி , அந்த கறி தரும் மாடு எப்படி மதவாதிகளால் புனிதத்தின் அடையாளமாக்கப்பட்டது?

தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

மாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (2) 11

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2012 | , , , ,

கடந்த அத்தியாயத்தில் மாட்டுக்கறி உணவாக சாப்பிடப்படுவது வேதகாலம்தொட்டு பரவலாக இருந்த பழக்கம்தான் என்பதையும், இந்த உணவுப் பழக்கம் மத ரீதியான சடங்குகளிலும், மரியாதை நிமித்தமாகவும் மேற்கொள்ளப்பட்டன என்பதையும், விவேகானந்தர் போன்ற மகான்கள்  என்று  போற்றப்பட்டோரும் இதனை ஏற்றுக் கொண்டும்  குறிப்பிட்டும் இருககிறார்கள் என்பதையும் ஆதாரங்களுடன் பார்த்தோம். அப்படி இருந்த மாட்டுக்கறி பின்னர் ஏன் இப்படியானது? ஒரு உணவுப் பதார்த்தத்துக்கு  எப்படி மத சாயம் பூசப்பட்டது? என்பதை இப்போது காணலாம். 

முன் அத்தியாயத்தில் பார்த்தபடி வேதகாலத்தில் பசுக்கள் கொல்லப்பட்டாலும் ,        உண்ணப்பட்டாலும் அதில் ஒரு விதிவிலக்கு இருந்திருக்கிறது. அதாவது அந்தப் பசுக்களில் கூட “அக்ஞா” என்று அழைக்கப்பட்ட பசுக்கள் இருந்திருக்கின்றன.  “அக்ஞா” என்ற சொல்லுக்கு கொல்லத் தகாதவை என்று அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. இந்த கொல்லத் தகாத பசுக்கள் எவை என்றால் அவை ஒரு பிராமணருக்கு, ஒரு பலி நடத்திய பிறகு தட்சணையாக- கூலியாக – உயிருடன் கொடுக்கப்படும் பசுக்களாகும். அதாவது ஒரு பிராமணருக்கு கூலியாக கிடைத்த பசு மட்டுமே புனிதமானது அது கொல்லப்படக்கூடாதது; உண்ணப்படக்கூடாதது. இந்த புனிதப்பசுவின் அரிச்சுவடி இப்படித்தான் ஆரம்பிக்கிறது. 

அத்துடன் புத்த, சமண மதங்கள் தோன்றி வளரும்போது பொதுவாக விலங்குகளை வதை செய்வது, அறுப்பது, உண்பது வெறுக்கப்பட காரணமானது. உயிர்  வதைக்கு பொதுவான கருத்து விதைக்கப்பட்டது. அதில் கூட பசுவுக்கு என்று தனியான அந்தஸ்து பிரச்சாரப்படுத்தப்படவில்லை. பிற உயிர்களைக் கொல்லாதே என்கிற பொதுப்பிரிவில்தான் வந்தன. ஆகவே வன்முறைக்கு எதிரான  முறைகளை உபநிடதக் கொள்கைகள் வலியுறுத்தியதித்தத் தொடர்ந்தும்,  புத்தம், சமணம் ஆகியவற்றின் எழுச்சி,  வைணவத்தின் மையக்கருத்து ஆகியன தாம் விலங்குகளைக் கொல்லாமையை உறுதிப்படுத்தின. 

ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் இந்திய சமூகம் நில பிரபுத்துவம், ஜமீன்தார் முறை போன்றவற்றிற்கு மெல்ல மாறத்தொடங்கிய சூழல் வளர்ந்தபோது பசு புனிதமானது என்கிற தத்துவமும் வளர்த்தெடுக்கப்படத்தொடங்கியது.  நிலப்பிரபுத்துவம், குறு நில மன்னர்கள் என்கிற அமைப்புகள் மலரத்தொடங்கியபோது சில சட்டங்கள், சம்பிரதாயங்கள் அரசமைப்பில் உருவாக்கப்பட்டன. அந்தப் பணிகளில் ஆளுமை செலுத்திய பிராமணர்கள், மாட்டிறைச்சி தின்பதை தடுத்து நிறுத்த சட்டமாக்க அரசர்களுக்கு ஆலோசனை சொன்னார்கள். இதற்கு காரணம் மாடுகள் பெருமளவில் விவசாயத்துக்கு பயன்படவேண்டும் – உணவுக்காக அழிக்கப்படக்கூடாது என்பதே. அதோடு கூடவே அரசவைய்ல் வேலை செய்துவந்த பிராமணர்களுக்கு பெருமளவில் பசுக்களே தானமாக வழங்கப்பட்டன. அவை புனிதப்பசுக்களாக நடத்தப்பட்டன. வேளாண்மைச் சமூகத்திலும்  பசுக்களின் பொருளியல் மதிப்பு அந்நிலையை முதன்மைப்படுத்தின. அத்துடன் பசுக்களின் பாலும் உணவாகப் பயன்பட்டதும், பாலைத்தொடர்ந்த அதன் சார்பு உணவுகளான தயிர், வெண்ணெய், நெய் போன்றவைகளுக்கும் பஞ்சம் வரக்கூடாது என்கிற எண்ணத்திலும் அவைகளைத்தருகிற பசுக்களுக்கு, விலங்குகளுக்கு மத்தியில் ஒரு வி.ஐ. பி அந்தஸ்து தரப்பட்டது. 

தாயைப்போல பால் தருவதால் பசு இப்படி கோ மாதா என் குல  மாதா என்று கொண்டாடப்பட்டது. “ பாதிப்புள்ளே பொழைக்குதப்பா பசும்பாலைத் தாய்ப்பாலா நம்பி” என்று அந்தக்காலத்திலேயே இருந்ததிருக்கும் போலத்தோன்றுகிறது. இந்த அடிப்படையில் சட்டத்தில் ஏற்பட்ட நடைமுறைகளுக்கு  'கலிவர்ஞா' என்று பெயர். இந்த முறைப்படி , முன் நடந்த முறைகள் மாற்றப்பட்டன பசுவைக் கொல்வது தவறு என்று பார்ப்பன கருத்துக்கள் பிரச்சாரமாய் பரவத்தொடங்கின. 

அத்துடன் மக்களிடம் உயர்வு தாழ்வு கற்பித்த வேதங்கள் உயர்ந்தொரையும் , தாழ்ந்தோரையும்  வேறுபடுத்திப்பார்க்க கையில் எடுத்த ஒரு ஆயுதமாகவும் மாட்டிறைச்சி இருந்தது. மாட்டிறைச்சி தின்போர் புலையர் என்றும், சூத்திரன் என்றும், தாழ்த்தப்பட்டோன் என்றும் முத்திரை குத்தப்பட்டனர். சுருக்கமாக ,  பெற்ற  தாய்க்கு சமமாக  பால் தரும் பசுவை    அறுத்து புசிப்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று தாழ்த்தப்பட்டோரை தரம் பிரிக்கவும் புனிதப்பசு கருவியாயிற்று.  

இந்தியாவை பல்வேறு காலங்களில் ஆண்ட வெவ்வேறு ஆட்சியாளர்களாலும்  பசு அரசியல் கருவியாக்கப்பட்டது. “இவன் ரெம்ப நல்லவண்டா” என்று மற்றவர்களால்     மதிக்கப் படவேண்டுமேன்று எண்ணிய அரசர்கள் தங்களின் கைகளில் குத்திக்கொண்ட அக்மார்க் முத்திரை இந்த  புனிதபசு கொள்கை. இதற்கு இந்த அரசர்களை தூண்டியவர்கள்      அரசவைகளில் திவான்களாகவும் ,ராஜ ரிஷிகளாகவும் நிழல் நிர்வாகம் செய்த பிராமணர்களே. இந்த சூழ்ச்சிக்கு  மொகலாய மன்னர்களும் தப்பவில்லை.  

சமணர்களையும் பார்ப்பனர்களையும் மதிக்கும் பொருட்டு நல்லெண்ணத்தை பறைசாற்றும்  வகையில்  பசுக்களைக் கொல்வதற்கு மொகலாயப் பேரரசர்களான பாபர், அக்பர், ஜஹாங்கீர், ஒளரங்கசீபு ஆகியோர் தடை விதித்தனர்.  'நாம் இந்துக்கள் இம்மண்ணின் மைந்தர்களாகிய நாம் பசுக்களைக் கொல்வதோ அதன் வழி பார்ப்பனர்களை ஒடுக்குவதோ கூடாது' என்று பசுக்களையும் பார்ப்பனர்களையும் காப்பாற்ற வந்த அவதாரமாகக் கருதப்படும் மாமன்னர் சிவாஜி பறைசாற்றியிருக்கிறார்.

'சிக் குகா' அல்லது 'நாம்தாரி' என்னும் பெயரில் 1870-களில் பஞ்சாப்பில் தொடங்கப்பட்ட 'இந்து பசுப் பாதுகாப்புப் படை' தான் முதலில் பசுக்களை அரசியல் கருவியாக்கியது; அவர்களுடைய இக்கருத்தியல் பின்னர் தயானந்த சரஸ்வதி அவர்களால் 1882-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'முதல் கோரக்கினி சபை'யால் வலுப்படுத்தப்பட்டது. இவ்வமைப்புத் தான் குறிப்பிட்ட பிரிவு மக்களின் சின்னமாகப் பசுவை அடையாளப்படுத்தியது. 

மேலும் சுவாமி தயானந்த சரஸ்வதி , ஆரிய சமாஜ் என்கிற ஒரு இயக்கத்தை தோற்றுவித்து பசுவின் புனிதம் பற்றி நாடெங்கும் பரவலாக ஒரு இயக்கம் நடத்தினார். ஆரிய சமாஜம் என்பது வேறு பல நல்ல கருத்துக்களையும்  மக்களிடம் பிரச்சாரம் செய்தது. அவற்றுள் சில சிலை வணக்கம் ஒழிக்கப்படவேண்டும், குழந்தை மணம் தடுக்கப்பட வேண்டும், விதவை மணம் ஊக்குவிக்கப்பட வேண்டும், பிறப்பிலேயே மனுநீதியால் விதிக்கப்பட்ட சாதிப் பாகுபாடுகள் அகற்றப்பட வேண்டும் ஆகியனவாகும். இத்துடன் பசுவை போற்றவேண்டும் என்கிற கருத்தும் சுவாமி தயானந்த சரச்வதியால் போதிக்கப்பட்டது. உயர் சாதியினர் இந்த சுவாமி தயானந்தா சரஸ்வதி போதித்த ஏனைய கருத்துக்களை வசதியாக புறக்கணித்துவிட்டு பசுவைப் போற்றவேண்டும், போஷிக்க வேண்டும் என்கிற கருத்தை  மட்டும் பிடித்து தொங்கினர்.  

மாடுகளின் ,  அதிகஅளவு எடை கொண்ட  மாமிச கறி  அளவினை உத்தேசித்தும், விலை குறைவாக கிடைப்பதை உத்தேசித்தும், அன்றாட உணவுக்கும்,  பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில் அவர்களின் மார்க்க நம்பிக்கையான பலி இடுவதற்கும் ஏழைகளுக்கு தானம் செய்வதற்கும்  முஸ்லீம்கள் , மாடுகளை அதிக அளவில் வாங்கத்தொடங்கியபோது சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிரச்சாரத்தால்  மாட்டுக்கறி உண்ணும  முஸ்லிம்களை  நோக்கி , அதியே காரணமாக்கி  1880-களிலும் 1890-களிலும் கலவரங்களை ஏற்படுத்தினார்கள். 

இவ்வாறு பசுவதை என்பது செய்யக்கூடாதது- பசுபுனிதமானது என்றெல்லாம்  கடும் பிரச்சாரம் நிகழ்ந்தாலும் ,  1888-ம் ஆண்டில் வடமேற்கு மாகாண உயர் நீதிமன்றம், 'பசு புனிதமான பொருள் அல்ல  என்று  தீர்ப்பு அளித்தது. இது  அவர்களுடைய வேகத்தை மட்டுப்படுத்தியது.; ஆனால் கோபத்தை அதிகப்படுத்தியது. நீதிமன்றத்தில் மூக்குடைந்தவர்கள் காவி உடையணிந்து தடி எடுக்க ஆரம்பித்தனர். இந்து – முஸ்லீம்களுக்கிடையில் ஏற்பட்ட பல கலவரங்களுக்கு பசுவே கருப்பொருள் ஆனது.  கோ மாதா கொல்லப்படுகிறாள் என்று உணர்ச்சியை தூண்டிவிட்டார்கள். 

1893-ம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தின் அஜாம்கர் மாவட்டத்தில் கலவரம் நடந்தது. அக்கலவரத்தால் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். 1912-13-ல் அயோத்தியாவில் கலவரம் மூண்டது. 1917-ல் ஷாகாபாத்தில் பெரிய கலவரம் மூண்டது. பல முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்; அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. 

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும்  பல துன்பமான நிகழ்வுகள் பசுவின் பொருட்டால் நடைபெற்றன.  பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று 1966-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள மதவாத அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியைப் பாராளுமன்றம் முன்பு நடத்தின. அப்போது மூண்ட கலவரத்தில் எட்டுப் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். காந்தியடிகளின் ஆன்மீக வாரிசாகக் கருதப்படும் ஆச்சாரிய வினோபா பாவே பசுவதையைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 1979-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உண்ணாவிரத  போராட்டம் நடத்தினார். இப்படியாகப் பசு அரசியல் கருவியானது.

பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று சொன்ன ஆதிக்க சாதி அமைப்புகள் எவையும் 'பசுவைக் கொல்லக்கூடாது என்று வேதங்களிலோ பார்ப்பன எழுத்துகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை' என்பதையும் 'காலாகாலமாகப் பசு தின்னப்பட்டு வந்திருக்கிறது' என்பதையோ காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

இதனால் -

உண்ண உணவின்றி அவதிப்படும் ஏழை மனிதனை பற்றி கவலைப்படாமல் மாட்டைப்பற்றி கவலைப்பட்டோர்-

மாட்டுக்கறியை உண்ணக்கூடாது ஆனால் மாட்டு  மூத்திரத்தை குடிக்கலாம், வீட்டிலும், உடைகளிலும், உச்சந்தலைகளிலும்  தெளித்துக்கொள்ளலாம் என்றும் ஒவ்வாத  சாத்திரம் பேசியோர்-

பைபிளில் கூட ஆதம் -  ஏவாளுக்கு எல்லாவற்றையும் படைத்து அனுபவிக்கக் கொடுத்த இறைவன் ஒரு பழத்தைக் காட்டி சுவைக்கக்கூடாது என்று  தடுத்த கதை இருக்கிறது. ஆனால் எந்த நான்கு வேதங்களிலும் , உபநிதங்களிலும் மாட்டை அறுப்பதும்  புசிப்பதும்  தடுக்கப்படவில்லையே என்று சிந்திக்காதோர்-

மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம் கூட பசு அவதாரம் எடுத்ததாக குறிப்பிடப்படவில்லையே - பன்றி  அவதாரம்கூட எடுத்தார்- நரகலை தின்னும் பன்றிக்கு வேதங்கள் கொடுத்த மதிப்புக்கூட பசுக்கு கொடுக்கவில்லையே அதை ஏன்           புனிதமாக்கவேண்டுமென்று என்று யோசிக்க அறிவுபூர்வமாக மறுத்தோர்-  

ஆள் திரட்டுவதற்கும், அரசியல் நடத்துவதற்கும் பசு மாட்டை பயன்படுத்த ஆரம்பித்தனர். அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கெதிராக பாவப்பட்ட பசுவை புனிதமாக்கி, பசுவின் பெயரால் நாட்டில் பல வன்முறை கலவரங்களை நடத்தினர்.  

அடுத்த அத்தியாயத்தில் நிறைவுறும்.
இபுராஹீம் அன்சாரி


மாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (1) 34

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2012 | , , , , , ,


மாட்டுக்கறி என்ற பெயர் கேட்டதும் சும்மா அதிருதா? அதிர வேண்டாம் ; பதற வேண்டாம்; இந்த ஆக்கத்துக்கு அதிரை வேண்டாம். போபாலில் ஆரம்பித்து, அகில இந்தியாவில் மாட்டுக்கறி என்கிற பிரச்சனையைத்தான் அலசப் போகிறோம்.  இந்த அலசல்  அதிரை என்கிற குண்டு சட்டியில் குதிரை ஓட்ட அல்ல. பன்னெடுங்காலமாகவே மாட்டை அறுப்பதும், மாட்டுக்கறி வியாபாரம் செய்வதும் சாப்பிடுவதும் மாபாதகம் என்றும்,ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் மட்டுமே இவை தொடர்பான தொழில்களில், நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதும்,அவர்களை தீண்டத்தகாதவர்களாகவும், ஜீவகாருண்யம் அற்றவர்களாகவும், இரக்கமற்ற பாவிகளாகவும் சித்தரித்து தீட்டப்பட்டுள்ள கபட சித்திரங்கள் யாவற்றையும் அழிக்கும்  நோக்கில்தான். நாம் முதலில் போபாலுக்குப் போகப்போகிறோம். பிறகு புதுடில்லிக்கும் போவோம்.

பி ஜெ பி அரசாளும் மத்தியப் பிரதேச அரசு பசுவதை தடுப்புக்காகச் சட்டத்தைத் திருத்த முடிவு செய்திருக்கிறது. இம்முடிவின் மீது  நடுநிலை மற்றும் நன்னெறி பரப்பும் அறிஞர்களால் எதிர்ப்புக்கனை தொடுக்கப்பட்டுள்ளது. இது தனி நபர சுதந்திரத்தில் அரசின் அப்பட்டமான தலையீடு என்றும், ஏழைகளுக்கு எதிரான ஏற்றுக் கொள்ளப்பட முடியாத கொடுமை என்றும் சித்தரிக்கப்படுகிறது. இந்நிலையில்  'பசுவின் புனிதத்தன்மை' பற்றிய புராண இதிகாச சாஸ்திர சம்பிரதாய மற்றும் வரலாற்று குறிப்புகள்  பற்றியும் அந்த குரிப்புகளை வைத்து சானா பானாக்கள் நாட்டைத் துண்டாட எப்படி பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றியும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மேலும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தோர் மேலும்   உயர்சாதியினர் இந்த பசுவதை, மாட்டுக்கறி ஆகிய அஸ்திரங்களை எப்படி உபயோகிக்கின்றனர் என்பதைப் பற்றியும் சற்று ஆதாரங்களோடு அலசலாம்.           (இவர்களின் ஊளா  பாலாக்களை அலசி அலசியே நமக்கு  தண்ணீர் பில் எகிறிவிட்டது).

முதல் ஓவரை வீசும்  முன்பு,  ஒரு சிறு கவனக் குறிப்புத் தந்து விட எண்ணுகிறேன். இந்த ஆக்கத்தில் சில இராமாயண,  மஹாபாரத காட்சிகளை, ஆதாரங்களை குறிப்பிட்டு இருப்பேன்.இந்த ஆதாரங்கள் கம்ப இராமயணத்தில் இல்லையே, இராஜாஜி எழுதிய வியாசர் விருந்திலும், பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்திலும் இல்லையே என்று தமிழ் புலமை படைத்த / படித்த யாரும் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடாதீர்கள்.  இந்த இதிகாசங்களில் இருந்து என்னால் காட்டப்படும் ஆதாரங்கள் ஒரிஜினல் இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. கம்பர் எழுதியதும், இராஜாஜி, பாரதியார் எழுதியதும் தழுவல்கள் மட்டுமல்ல அவைகள் வழுவல்கள்; வளவலாக்கள்.; கொழகொழாக்கள்; பசப்பல்கள்; ரீல்கள்; புருடாக்கள்; காதில் சுற்றும் பூக்கள். தமிழ்ப் பண்பாடு கருதி மறைக்கப்பட்ட உண்மைகள். உதாரணமாக இராவணன் சீதையை எங்கே கை வைத்து தொட்டு தூக்கிச்சென்றான் என்பதை வால்மீகி ராமாயணம்  குறிப்பிடும் விதமும் இடமும் வேறு; அந்த இடம் வித்தியாசமானதல்ல ஆனால்  விபரீதமானது. இருந்தாலும், ஒரு பெரும் எடையுள்ள பெண்ணை  கடல் கடந்து ஆகாயத்தில்  தூக்கிச்செல்ல வசதியானது. இந்த சம்பவத்தை கம்பராமாயணம் குறிப்பிடும் விதம்  தமிழ்பண்பாட்டை ஒட்டியது. தொடாமல் தூக்கினானாம்; ஆகாயத்தில்  பறந்தானாம். நம்பமுடியுமா? ஆகவே இந்த ஆக்கத்தில் ஒரிஜினல் இதிகாசங்கள் குறிப்பிடும் ஆதாரங்களையே கையாண்டு இருக்கிறேன்.     

முதலாவதாக, இந்திய துணைக் கண்டத்தில் மாடுகளை உணவுக்காக அறுக்கும் வழக்கத்தை முஸ்லிம்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள் என்று சானா பானாவினர் கூறுகிறார்கள். ஆனால் வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வரத்தொடங்கும் முன் காலத்திலிருந்தே மாடுகளை உணவுக்காகவும் வேண்டுதல்களுக்காகவும், யாகங்களுக்காகவும் அறுத்து பலியிட்டு புசிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கு இதிகாச,  பிராமண, சமண, புத்த இலக்கியம் மற்றும் வரலாறுகளில் இருந்து சான்றுகள் இருக்கின்றன. 

விலங்குகளைப் பலியிடுதல் என்பது வேத காலத்தில் சாதாரணமான ஒன்றாக இருந்திருக்கிறது. பொதுப் பலியிடுதலுக்கு முன் செய்யப்படும் முன்னேற்பாட்டுச் சடங்காகிய 'அக்கினித் தேயம்' என்னும் சடங்கில் பசுதான் கொல்லப்பட்டது. 

பலியிடுதலில் முதன்மையான ஒன்றாகிய 'அசுவமேத யாகத்'தில் அறுநூறு விலங்குகளும் பறவைகளும் கொல்லப்படும் அப்படிக் கொல்லப்பட்ட பின் பலியிடுதலின் நிறைவைக் குறிப்பிடும் வகையில் இருபத்தோரு பசுக்கள் கொல்லப்படும். இந்த இருபத்தியொரு பசுக்கள் கொல்லப்படாவிட்டால் அந்த யாகம் பொய்த்துவிட்டதாக அர்த்தம். அத்துடன் இராஜசூய யாகம், வாஜ்பேய யாகம் ஆகியவற்றிலும் விலங்குகள் பலியிடப்படும். இதேபோல் மற்றொரு முதன்மையான யாகமாக கருதப்படும் கொசவ யாகத்தில் பசுக்கள் மற்றும் கன்றுகள்  பயமுறுத்தும் தேவதைகளுக்காக பலியிடப்பட்டன. ஆகவே எல்லாவகையான யாகங்களிலும் பசுக்கள் கொல்லப்பட்டன. அவை புசிக்கப்பட்டன.   

'வேதக் கருத்துகளிலும் தர்மசாத்திரங்களிலும் உணவுக்காக பசுக்கள் கொல்லப்பட்டதும் மாட்டிறைச்சி தின்னப்பட்டதும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. 'பசு விருப்பமான உணவு' என வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யக்ஞ வல்கீய முனிவர் கூற்றின்படி , பசு இறைச்சியைத் தின்பதை வலியுறுத்துவது வேதங்களில் உள்ளது. விருந்தினர்களை வரவேற்கும் போது பசுக்களைக் கொன்று உணவாகப் படைப்பது பெருமைக்குரிய ஒன்று என வேதங்களும் அவற்றிற்குப் பிந்தைய கருத்துகளும் சொல்கின்றன. இறுதிச் சடங்குகளின் போது பிராமணர்கள் பசுக்களைக் கொன்று தின்றதற்கான பல்வேறு எழுத்துச் சான்றுகள் இருக்கின்றன. 

பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போ என்று தகப்பன் தசரதன் ஆணையிட்டான்  என்று இராமனுக்கு சொல்லப்பட்டபோது இராமனுடைய உடனடி பதிலாக இருந்ததாக வால்மீகி இராமாயணம் குறிப்பிடுவது “ நான் நாட்டையும், மணிமுடியையும் , அரண்மனை வாசத்தையும் இழப்பதுடன் சுவைதரும் மாமிச உணவுகளையும் துறந்து காட்டுக்குப் போய் பதினான்கு வருடங்கள் காய்களையும் பழங்களையும் புசிக்க வேண்டுமா?” என்பதுதான்.               
(AYODHYA KANDAM  CHAPTERS 20, 26, 94).

அது மட்டுமா? வால்மீகி கூறுவதையும், நாம்  எடுத்துக்காட்டுவதையும் ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் நிச்சயம் இருப்பார்கள். ஆனால்  ஒருவர் இருக்கிறார் அவர் கூறுவதை நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அவர்தான் வீரத்துறவி என்று பெயர் பெற்ற சுவாமி விவேகானந்தர். இதோ அவரே கூறுகிறார். 

"You will be astonished if I tell you that, according to the old ceremonials, he is not a good Hindu who does not eat beef. On certain occasions he must sacrifice a bull and eat it."  “ வேதக் கருத்துக்களின் அடிப்படையில் மாட்டுக்கறியை உணவாகக் கொள்ளாத ஒருவர் நல்ல ஹிந்துவாக இருக்க முடியாது என்று நான் கூறினால் நீங்கள் திகைப்படைவீர்கள். சில சமய சடங்குகளில் ஒரு ஹிந்து ஒரு காளை மாட்டை அறுத்து பலியிடுவதோடு உட்கொள்ளவும் வேண்டும் ” என்று விவேகானந்தர் கூறுகிறார். 

"There was a time in this very India when, without eating beef, no Brahmin could remain a Brahmin;"  இந்திய பழக்கங்களில் மாட்டுக்கறி உண்ணாத பிராமணர் ஒரு சிறந்த பிராமணராகவே இருக்க முடியாது.   இதையும் கூறியவர் கறிக்கடை காதர் பாட்சா அல்ல. சாட்சாத் விவேகாகனந்தரே.
[The complete works of Swami Vivekananda, Volume 3, Pg 536]

மேலும் கீழ்க்கண்ட விளக்க நூல் எப்படி மாட்டை அறுப்பது என்று பிராமணர்களுக்கு வழிகாட்டுகிறது. 
[Aitareya Brahman, Book 2, para 6 and 7]

அடுத்து,  Purv Mimansa Sutra Adhyaya 3, Pada 6, Sutra 18, the Shabarbhasya says,
संति च पशुधर्माः- उपाकरणं, उपानयं, अक्ष्णया बंधः, यूपे नियोजनम्, संज्ञपनं, विशसनमित्येवमादयः 

There are also certain details to be performed in connection with the animals, such as (a) Upaakaranam [Touching the animal with the two mantras], (b) Upaanayanam [Bringing forward], (c) Akshanyaa-bandhah [Tying with a rope], (d) Yoope niyojanam [Fettering to the Sacrificial Post], (e) Sanjnapanam [Suffocating to death], (f) Vishasanam [Dissecting], and so forth.

அதாவது அறுக்கப்படப்போகும் மாட்டை எங்கே தொடுவது, எப்படிக் கொண்டுவருவது, கழுத்திலும் அறுக்கப்படும் கம்பிலும் கயிற்றால் எப்படிக் கட்டுவது, எப்படி அறுப்பது என்கிற வழிமுறைகளை இந்த ஸ்லோகம சொல்லித்தருகிறது.   
[Shabhar bhashya on Mimamsa Sutra 3/6/18; translated by Ganganath Jha]

இந்த ஆதாரங்களை நான் சுருக்கமாக குறிப்பிடுகிறேன்.மிகவும்  விரிவாகப்போனால் இந்த ஆக்கம் வீங்கிவிடும்.பல முகமூடிகள் கிழிந்துவிடும். யாராவது எதிர்த்து விளக்கம்  கேட்டால் விபரம் சொல்வேன்.

வேதகாலத்தை அடுத்து, இடைக்கால வரலாற்றுக் குறிப்புகளிலும் நமது வாதத்துக்கு வலு சேர்க்க  ஏராளமான சான்றுகள்  இருக்கின்றன.  ஆச்சாரம் மிகுந்த பிராமணர்கள் பசியைப் போக்குவதற்காக காளை இறைச்சியையும் நாய் இறைச்சியையும் தின்றதை மனுசாத்திரம்  கூறுகிறது. 

படித்த பார்ப்பனரைப் பெரிய காளையைப் படைத்தோ ஆட்டைப் படையலாக்கியோ வரவேற்க வேண்டும் என்று யக்ஞவல்கீய ஸ்மிருதி (கி.மு. 100-300) சொல்கிறது. மகாபாரதத்தில் வரும் கதா பாத்திரத்தில்  முக்கால்வாசிப் பேர் அசைவ உணவு தின்பவர்கள்தான்.  இரந்திதேவ அரசரின் அடுக்களையில் மட்டும் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் பசுக்கள் அடித்துக் கொல்லப்பட்டு உணவாக்கப்பட்டன. மற்ற தானியங்களுடன் இந்த இறைச்சியும் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டன. கொழுத்த கன்றை அடித்து உணவாக்கி இராமனுக்குப் பரத்வாஜ முனிவர் படையலாக்கினார் என்று தெரிகிறது.  

மதம் சார்ந்த இலக்கியங்களில் மட்டுமல்ல. மதச்சார்பற்ற இலக்கியங்களிலும் இப்படிச் சான்றுகள் காட்ட முடியும். இந்திய மருத்துவ முறைகளில் மாட்டிறைச்சி மருந்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. மாட்டிறைச்சியைத் தின்பது பற்றிக் காளிதாசர், பவபுத்தி, இராஜசேகரர், ஸ்ரீஹர்சர் ஆகியோருடைய எழுத்துகளில் இருக்கும் குறிப்புகள் நிறைய சொல்கின்றன.
(ஆதாரம் : THE MYTH OF THE HOLY COW BY DR. D.N. JHA).

இப்படியெல்லாம் தங்களால் சப்புக்கொட்டி சுவைக்கப்பட்ட மாட்டுக்கறி , அந்த கறி தரும் மாடு எப்படி மதவாதிகளால் புனிதத்தின் அடையாளமாக்கப்பட்டது?

தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

அதிரையில் “மாட்டுக்கறி” வியாபாரத்திற்கு தடையா ? - அதிர்ச்சி ரிப்போர்ட் ! 26

அதிரைநிருபர் பதிப்பகம் | June 20, 2012 | , , , ,


அதிரையில் அமைதியை குலைக்க பின்னப்பட்டிருக்கும் சதி அம்பலமாகியிருக்கிறது, அமைதியாக அனைத்து சமுதாயத்தவரும் சகோதர பாசத்தோடு இன-மத பேதமின்றி உறவாடி வரும் அதிரை மக்கள் மத்தியில் பாஸீச கும்பலொன்று தனது வேலையை அரங்கேற்றி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அவர்கள் கையில் எடுத்திருக்கும் சர்ச்சை 'மாட்டுக் கறி', இதற்கு பேரூராட்சி மன்றம் தடைவிதித்து விட்டதாக பகிங்கமாக சுவரொட்டிகள் ஒட்டி ஊர் முழுவதும் பதற்றமான சூழலை பாஸீச விஷமிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

நீண்ட நாட்களாக அமைதியான முறையில் தொழில் செய்துவரும் சகோதரர்களுக்கு இவ்வாறான தொந்தரவுகள் கொடுப்பதிலிருந்தும், ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தனித்து தகுந்த சட்ட ஆதாரங்களை முன்வைத்து அதற்கான ஆவண செய்வதை விடுத்து, ஏதோ தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை களம் இறக்கி அங்கே முஸ்லீம் விரோத கும்பலின் தலையீட்டால் கலகம் ஏற்படுத்தும் சதி அம்பலமாகியிருக்கிறது.


அன்பார்ந்த அதிரை சகோதரர்களே, முஸ்லீம்களின் ஒரு பொது அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் மார்கெட்டில், பாஸீச விரோதிகளின் ஆதிக்கம் நுழைய அனுமதிக்க வழிவகை செய்ய துணை போகாதீர்கள், வீணான பதற்றம் ஏற்படுத்தி சகோதரர்கள் மத்தியில் கலவர பீதியை ஏற்படுத்தும் கும்பலை சட்டபூர்மவாக தண்டிக்க முறையான நடவடிக்கைகளில் இறங்குவதற்கு ஒற்றுமையுடன் ஒன்றினையுங்கள்.

நம் சகோதரர்கள் அனைவரும் ஒற்றுமைகாத்து சகோதரத்துவம் பேனுவோம் இன்ஷா அல்லாஹ்....

-அதிரைநிருபர் குழு