Showing posts with label harmys. Show all posts
Showing posts with label harmys. Show all posts

வள்ளுவ, காந்தி நாட்டு இஸ்லாமியன்... நுனிப்புல் -1 5

அதிரைநிருபர் பதிப்பகம் | August 09, 2016 | , , , , ,

(முன்குறிப்பு ;- சந்தேகேமே வேண்டாம் இது முழுக்க நுனிப்புல் மேய்ச்சல்தான் .ஆனால் இந்த எழுத்தின்  எண்ணங்கள்  தொலை நோக்குடவை .ஆழ்ந்த திறன் பெற்றவர்கள் இதை விரிவாக்கம் அல்லது திருத்தம் செய்யலாம் )

மொழி :-

நாம் நிலைக்கொண்டிருக்கும் நம்  மண்ணின் மொழியான தமிழை மிக நாம் மிக நுட்பமாக அணுக வேண்டும் .நாம் பேசும் தமிழ் மொழியை குறித்து தெளிவு வேண்டும் .ஆராய்தல் மிக அவசியம்.

இது ஒரு பொதுவான மொழியாகும் .நமக்கும் ,சகோதர இந்துக்கள் ,,இந்துத்துவாவினர் (மனு தர்மத்தினர் ),கிறிஸ்தவர்கள் ,மற்றும் சிலருக்கும் தமிழ் பொதுவான மொழியாகும் . 

நீண்ட கால மற்றும் நிகழ் கால தமிழை திருவள்ளுவர் மற்றும் பாரதியை கடக்காமல் அறியமுடியாது .இதில் நாமறிந்த வரையில் திருவள்ளுவரின் தமிழில் மத அடையாளங்கள் இல்லை (தற்போது திருவள்ளுவரை இந்துத்துவாவில் (இந்துக்கள் அல்ல, மனு தர்மத்தினர்) அங்கமாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன). தமிழக பகுதிகளும், தமிழும் எந்த மத அடையாளங்களும் இல்லாமல் இருந்து வந்துள்ளது. மனு தர்மத்தினர் தமிழகப்பகுதிகளை ஆக்கிரமித்த உடன் தமிழை மெல்ல மெல்ல ஆக்ரமித்து கொண்டதன் பாரதூர விளைவுதான் பாரதியாரின் தமிழில் சுதந்திரம், மானுட கவிதைகளுடன் மதம் சார்ந்த தமிழும் எட்டிப்பார்த்தது .அது பாரதியாரின் தவறு அல்ல .இங்கு தான் நம்மை நாமே ஆயிரமாயிரம் கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது .அதுதான் தமிழுக்கான இஸ்லாமியரின் பங்கு என்ன ? விடை வெகு சொற்பமே !.இங்கு தான் நாம் மிக அலட்சியமாக இருந்து விட்டோம் .இருக்கிறோம் .நாம் உள்வாங்கிய அழகிய நம் மார்க்கத்தின் இலக்கியங்களை முழு அளவில் தமிழ் மயமாக்க வில்லை .

அரபி என்னும் மொழியை நாம் வெறும் மொழியாக பார்க்க தவறியதுதான் நாம் தமிழை முழுமைக்கொள்ள முடியாமல் போனது.கண்ணியமிக்க நம் நபி(ஸல் ) அவர்களின் இறுதிநாட்களில் மொழிகள் குறித்த அவர்களின் பேச்சு மிக முக்கியமாக கவனிக்க பட வேண்டியது .

அரபியைப்போல் தமிழும் மிக ஆழமானவை .நம் அழகிய மார்க்கத்தை அரபி மொழியின் அடிவேர் வரை எடுத்து சென்றது போல் தமிழில் இதுவரை இல்லை .தமிழில் உள்ள பல வகையான மொழியின் உட்கூறின் வடிவங்களிலும் நம் மார்க்கத்தின் மகிமைகள் வேர் விட செய்தல் மிக அவசியம் .நாம் பேசும் தமிழை பொதுவானதாக வைத்திருப்பதை நாம் உறுதி செய்தல் அவசியம் .

நாம் எழுதும் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கும் போது உறுதி செய்தல் அவசியம் .எவ்வாறுஎனில் ,

1.சகோதர இந்துக்களின் இலக்கியமோ அல்லது காவியங்களோ வருமானால் அதை நம் சகோதர இந்துக்களின் (இந்துத்துவாவினர் அல்ல) தமிழ் இலக்கியம் என்றே நாம் பதிய வேண்டும்.

2.இந்துத்துவாவினரின் (மனு தர்மத்தினரின்) இலக்கியங்களை  இந்துத்துவாவினரின் தமிழ் இலக்கியம் என்றே நாம் பதிய வேண்டும் .

3.கிறிஸ்தவர்களின் இலக்கியங்களை கிறிஸ்தவர்களின் தமிழ் இலக்கியம் என்றே நாம் பதிய வேண்டும் .

மேலே சொல்லப்பட்டதைபோலே நம் மார்க்கத்தின் இலக்கியங்களை இஸ்லாமியரின் தமிழ் இலக்கியம் என்றே பதிய வேண்டும்.

நம் மொழியின் மீது இந்த புரிதல் அவசியம். இந்த புரிதல்கள் இல்லையென்றால் தற்போதைய பெருபான்மை வாதம் சத்தத்தில் நம் தமிழ் மொழி நம்மை விட்டு அந்நியப்படுத்தப்படும் .

--வள்ளுவ ,காந்தி நாட்டு இஸ்லாமியன்--

-harmys-
Abdul Rahman

தண்ணீர்... ! 25

அதிரைநிருபர் | May 30, 2016 | , ,

நீ அதிசயம் மட்டுமல்ல ...
ஆச்சரியமான ஆசான் ....
                                                                                                   
உன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே ....
உன் பாகுபாடில்லாத அனுகுமுறை யால்
நீ போகும், நிற்கும் ,நடக்கும்,ஓடும் இடமெல்லாம் சுகமே ....

நீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை
அதனால் நீ தளர்வதுமில்லை
பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும்
உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ....


சுத்தத் தங்கமாக வலம் வந்து
மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும்
நீ உண்மையில் ஒரு சீர்திருத்தவாதி .....
அழுத்தமாக நீ செய்யும் தியாகம் ....நன்மையின் உச்சம் ..

நீ பயணித்த பாதையில்தான்
உயிரினம் வாழுமிடம் அமைத்தது ...
உன் வருகையால் அடைந்த தைரியம்...அளவிடற்கரியது ...

உன் சலசலப்பில் நாங்கள்
உன்னை பருகினோம் ,
உன்னில் நீந்தினோம் ,
உன்னில் பயணித்தோம் ,
உன் வரவால் பயிரிட்டோம் ...
உன்னால் நாங்கள் அடையும் சுகம் ...விவரிக்கமுடியதது ...


உன் பருவ காலங்களில் நீ
வரும் வழியெல்லாம் உன்னுடன் நீ
அழைத்து வரும் துள்ளல் தரும் இதம்.... எப்படிச் சொல்வேன் ?...

நீ பாய்ந்த பிரதேசங்களில் எல்லாம்
தரை நிலமாக இருந்தவை எல்லாம்
பூஞ்சோலை யாய் மாறியது ....
உயிரினம் சுவாசிக்க ....புசிக்க .....
மட்டுமல்ல ..ரசிக்க வும் !!!!

ஆனால்..........?

நீ பயணித்த வழியில் வாழுமிடம்
அமைத்த உயிரினம் .....

உன் வழியை ,
உன் பாதையை ,
சில மாதங்கள் நீ தங்குமிடத்தை எல்லாவற்றையும்
உயிரினங்கள் அடைத்து கூடு கட்டிகொண்டன .....

உன் வரவை அவர்களே (உயிரினங்கள் ) தடுத்து கொண்டார்கள் ..
இழப்பு ....யாருக்கு ?...
நீரின்றி அமையாது உலகம் .......

சிந்திப்போமா?.....நாளை விடியலுக்கு .....

-அப்துல் ரஹ்மான்
--harmys--

சிப்பிக்குள் சூரியன் ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | February 25, 2016 | , , , , , ,


கடலில்  அலைகள்  மிதக்கின்றன !
சிப்பிகளும்  கனவுகளோடு !
மாபெரும் கனவுகளோடு
எட்டும்  என நம்பிக்கையோடு மிதக்கின்றன !

***                ****               ***
கடல் உள்ளிருந்து  சூரியனை
நேசிக்கும்  சிப்பிகளுக்கு
எப்படியாயினும்  சூரியனை
கருவாய் கொள்ள
கோடி ஆசைகள் !

****              ****            ******
எப்படி  நடக்கும்  எனத்தெரியாது !
எந்த  வியுகமுமில்லை !
எப்படி சூரியனை  கருவாய் கொள்ளவது ?!
நம்பிக்கை மட்டுமே ஒற்றைப்பிடி !

******          *******        ***********
முதல் இலக்கு கடல்கறைக்கு !
நகர்தல்  தொடங்கின !
அலைகள்  மேல்  மிதந்தன !
அலை அடித்து ! !
கறைக்கு  வாசம் !
முதல் வெற்றி !

****       *****   ********
இருப்பதோ  ஒரு சூரியன் !
அதை கருவாய் கொள்ள
ஆயிரம்மாயிரம்  சிப்பிகள் !
ஆனாலும்  கோடி  நம்பிக்கைகள் !

*****        *****      *******
சந்தேக ஓலமிட்ட  சில
சிப்பிகள்  மீண்டும்
நகர்ந்தன  கடல் நோக்கி !
திடமாய்  நின்றவைகள் மட்டும்
கனவுகளை  மீண்டும்  மீண்டும்
புதுபித்து மீட்டிக்கொண்டிருந்தன !

*****         ******     *******
எல்லாக் காலப்பருவமும்
கடந்துப் போயின !
மழைக்காலப்  பருவத்தை  தவிர!
மாற்றங்கள்  நிகழவில்லை !
கனவுகளும் தடுமாறத்  தொடங்கின !

*****       ******       ********
அந்தப்பொழுது  ஒரு மாலை !
சூரியன்  மறையும்  பொழுது !
சிப்பிகள்  கிழக்கிலும் !
சூரியன் மேற்கிலும் !
சூரியனைக்  கருவாய்  கொள்ளும்
கனவு  முழுவதுமாய்  கரைய
தொடங்கிய  கணத்தில்
கிழக்கிற்கும் மேற்கிற்கும்
நடுவில்  மழை !!!!!!!!!!

*****      ******        ********
மழைத்  துளிகளில்
ஒற்றை  சூரியன்
ஆயிரமாயிரம்  சூரியனானது !
ஒவ்வொரு  மழைத்துளியும்
சூரியன் பிம்பம்மானது !
ஆனந்த  கொண்டாட்டம்
சிப்பிகளுக்கு !!
ஆவல்  தீர ஆயிரமாயிரம்
சிப்பிகள்  சூரியனை
கருவாய்  கொண்டது !!!!!!!!

&&&&&&      &&&&    &&&&
அந்தோ பரிதாபம் !
இந்த  உலகின்  கனவுகளும்
இயற்கையின்  நிஜமும்
வேறு வேறு என
நெற்றிலடித்து
  பூமியும் ,சூரியனும்
தங்களின் அடுத்தச்
சுற்றை  ஆரம்பிக்கத்  தொடங்கியது !!!!

----------------
ஹர்மிஸ்

கன்னிப்பொழுது...! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | September 29, 2015 | , ,




பெரு வெடிப்பின்  சீற்றம்
குறைந்து  அமைதி தவழ்ந்த
அந்த புதிய பொழுதுகளின்  போது
தன்  ஆளுமையை  அழுத்தமாக
அனைத்திலும் பதித்தது சூரியன்...!
ஆனால்  ஒன்றை  தவிர...
அன்றுதான்  அதற்கும்
சூரியனுக்கும்  முதல் பரிச்சியம் !
அது ?....

கோபம்  தனந்த  சூரியன்
உக்கிரமாக  உதித்தது
அது மட்டும்
பணியவில்லை ! திமிறியது !
 சூரியனின் உக்கிரம் உச்சத்தை  தொட
 அது  கருகியதே  அன்றி   தன்
இயல்பை  தொலைக்கவில்லை !

சூரியன்  மேகத்தை
தூதிற்கு  அழைத்தது
மேகத்தினூடே  மெலிதாய்
நுழைந்து  தன்  ஜாலத்தை
அதனிடம்  காட்டியது !
அந்தோ ! பரிதாபம்  அதற்கும்
மயங்கவில்லை ! அதன்
இயல்பை தொலைக்கவில்லை  !

தளராத சூரியன்
துணைக்கு  மரம்
செடிகளின் இலைகளை
 இணைத்துக்கொண்டு
அதன் மீது
மென்மையாய்  படர்ந்தது !
ஆவலாய்  சூரியன்  காத்திருக்க
அதுவோ
அன்புடன்  நிராகரித்தது !

மனம் வெதும்பி  சூரியன்
நகர  ஆரம்பிக்க
உடன் பிறப்பான
நிலா   சோகத்தின்  காரணம்   விசாரித்தது !
சூரியன்  தன்  முயற்சியை
எடுத்துரைக்க   ஆவலாய்
நிலா  கேட்டது !

நிலா  சூரியனிடம்  சொன்னது
நீ சென்று வா
நான்  உன் அன்பை அதனிடம்
சேர்கிறேன்  என  கூறி
சூரியனின்  ஒளி  எனும்
அன்பை பெற்று
புதிதாய்  ஒரு
வெண்கலப்  பொழுதை
பாய்ச்சியது
அட்டகாசமாய்
மொட்டு  வெடித்து
சிதறி  இதழ்களை
விரித்து  சிரித்தது
நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera)
என்ற தாமரை !!!!!!!

-Harmys

பயணிகள் கவனத்திற்கு... ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | January 05, 2015 | , , ,

மண்ணறை விமானப் பயணத்திற்கு உங்களை வரவேற்கிறோம் !

நாம் இவ்வுலகை விட்டுச் செல்ல இருக்கும் அடுத்த இடம் மண்ணறை. அதற்கான பயண ஏற்பாடுகளையும் அங்கே செல்லும் வழிமுறைகளையும் வேறு எங்கும் உங்களால் கண்டிருக்க முடியாது. ஆனால்,  அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் காணலாம். நம் மண்ணறை விமானம், இதர விமானங்களான, இந்தியன் ஏர்லைன், கல்ஃப் ஏர், எமிரேட்ஸ் போல் இருக்காது.

இவைகளின் கட்டுப்பாடான 30 கிலோ அனுமதி என்ற வரையறைகள் இல்லை. மண்ணறை விமானம் எவ்வித கட்டுபாடுகளின்றி அதிக எடை, குறைந்த எடை என்ற பாகுபாடுகள் இன்றி அதற்கான கட்டணங்கள் ஏதும் செலுத்தாமல் செல்ல வல்ல அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அருட்கொடை.

இவ்விமானத்தில் செல்ல, விரும்பிய ஆடைகள் அணியவேண்டியதில்லை. வாழும்போது உடுத்திய ஆடைகளுக்கு அவசியமில்லை. உங்களுக்காக பிரத்தியேகமாக வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுடன் வெள்ளை நிறத்தினாலான ஆடை. அதையும் உடுத்தி விடப்படும்; அதற்கான சிரத்தை நீங்கள் எடுக்க வேண்டியதில்லை. விலையுயர்ந்த நறுமனங்களான சேனல், பெகொ, ரபானெ இருக்காது. ஆனால், அருமையான மனம் வீசும் சந்தனம் கரைத்துத் தெளிக்கப்படும்.

பயணிகளின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இந்தியாவுக்கோ, பிரிட்டனுக்கோ, அமெரிக்காவுக்கோ, இலங்கைக்கோ உரியதாக இருக்காது. ஆனால், அது நிச்சயம் இஸ்லாம் என்பதாக இருக்கும். பயணிப்பவரின் விசாவுக்கு கால அவகாசமெல்லாம் கிடையாது, அவைகள் ஆறு மாதத்தில் முடிவடைவதுமில்லை. அங்கே "அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை". 

விமானத்தினுள் அழகிய பணிப்பெண்கள் இருப்பதில்லை. விமானத்தின் தலைமை இஸ்ராயில் (அலை) மட்டுமே இருப்பார். பயணிப்பவருக்கு முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்றெல்லாம் இருக்காது,

விமானம் தரையிறங்குமிடம் லண்டன் விமான நிலையமோ ஜித்தா விமான நிலையமோ அல்ல, நேராக மையவாடி என்று அழகுற பெயரிடப்பட்ட தனித்தளம். அங்கே குளிரூட்டப்பட்ட தனி தங்குமிடமோ அல்லது பஞ்சு பொருத்திய நடை மேடையோ இருக்காது. அனால் ஆறு அடி நீளம் கொண்ட புதைகுழி (கப்ருஸ்தான்) தான் உங்களின் இருப்பிடம்.

அங்கே குடியுரிமை அதிகாரிகள் இருக்கமாட்டாகள். ஆனால், முன்கர் நக்கீர் என்ற அல்லாஹ்வால் நியமிக்கப்பட மலக்கு இருப்பார்கள். அவர்களின் கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதிலைக் கொண்டே எவ்விடம் உங்களுக்கு ஏற்றது என்பதை பரிந்துரை செய்வார்கள். அங்கே சுங்க இலாகா அதிகாரிகளோ, உளவு கண்டெடுப்பானோ (டிடெக்டர்) இருந்திடாது. மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கிருந்து உங்களை இறுதியான இடத்திற்கு கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கே தோட்டங்களின் கீழே ஆறுகள் ஓடும் அந்த சுவர்கத்தில் அல்லது கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பும் இருக்கும்.

இந்த பயனத்திற்காக செலவுகளிருக்காது, மொத்தமாக இலவசப் பயணம். உங்களுக்கு சேமிப்பு என்பது கையில் வருவதுமில்லை. இந்த விமானம் தீவிரவாத விஷமிகளால் கட்த்தப்படமாட்டாது, சாப்பாடுகள் என்று ஏதும் பரிமாறப் படமாட்டாது ஆதலால் ஹலாலா / ஹராமா, வேறு ஜீரனக் கோளாறு அல்லது அலர்ஜி என்ற பாதிப்புகள் பற்றிய கவலை வேண்டாம். காத்திருப்பு அறைகள் அங்கில்லை. ஆதலால் காலதாமதம் என்பது கடந்து விட்டதாகவே இருந்திடும். கவலை வேண்டாம்.

இந்த விமானம் குறித்த நேரத்தில் கிளம்பக் கூடியது; அதேபோல் சென்று சேரும் நேரம் குறித்தபடி இருக்கும். விமானத்தின் அகத்தினுள் பொழுதுபோக்குகள் பற்றி கவலை வேண்டாம். காரணம் அங்கே உங்களுடைய கேட்கும் மற்றும் உணரும் திறன் மறைக்கப்பட்டிருக்கும்.

இந்தப் பயணத்திற்கான முன்பதிவு பற்றியெல்லாம் கவலை வேண்டாம். அது ஏற்கனவே முன்பதிவு செய்திட்ட திரும்பிச் செல்லும் பயணம்தான். அதுவும் தாயின் கருவில் உருவாகும்போதே நிச்சயிக்கப்பட்ட பயணமே.

ஆஹா ! ஒரு நல்ல செய்தி ! உங்களின் அருகில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்ற கவலையே வேண்டாம். நீங்கள் மட்டும்தான் அதில் பயணம் செய்வீர்கள். அந்தப் பயணத்தின் சுகமான அனுபவத்தைப் பெறுவீர்கள். அதுவும் நீங்கள் மட்டுமே. அதில் ஒரு சின்ன தூக்கம் தான், பயணம் முழுவதும் உங்களை எழுப்பும் எவ்வித எச்சரிக்கையின்றி தூங்கலாம்.  

அப்படின்னா ! நீங்க தயாராக இருங்கள். தயவு செய்து உண்மையின்பால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருங்கள். முஸ்லீம் சகோதர சகோதரிகள் நிச்சயம் மார்க்க கடமைகளையும் அதன் வழிகாட்டல்களையும் உறுதியோடு கடைபிடியுங்கள்.

எனவே, அன்புச் சகோதர சகோதரிகளே, நல்லமல்கள் கொண்டு உங்களின் பயணப் பொதிகளின் (நன்மைகளின்) எடைகளை அதிகமாக்கி, ட்ரான்ஸிட்டில் சொர்க்கம் செல்ல தயாராகுங்கள். அவற்றை சலுகையாகவும் போனஸாகவும் பெற உகந்த புனித மிக்க மாதம் (ரமளான்) உங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது... 
யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் !!!
மூலாக்கம் : Tausif Rahmathullah (ஆங்கிலம்)
தகவல் : அப்துர்ரஹ்மான் - harmys

இந்த ஆக்கம் ஆங்கிலத்திலிருந்து தழுவி நமது வழக்குச் சூழலுக்கு ஏற்றவாறு தமிழில் மொழியாக்கம் செய்து இங்கே தந்திருக்கிறோம்...

தண்ணீர்...! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | August 17, 2014 | , ,

நீ அதிசயம் மட்டுமல்ல ...
ஆச்சரியமான ஆசான் ....
                                                                                                   
உன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே ....
உன் பாகுபாடில்லாத அனுகுமுறை யால்
நீ போகும், நிற்கும் ,நடக்கும்,ஓடும் இடமெல்லாம் சுகமே ....

நீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை
அதனால் நீ தளர்வதுமில்லை
பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும்
உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ....


சுத்தத் தங்கமாக வலம் வந்து
மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும்
நீ உண்மையில் ஒரு சீர்திருத்தவாதி .....
அழுத்தமாக நீ செய்யும் தியாகம் ....நன்மையின் உச்சம் ..

நீ பயணித்த பாதையில்தான்
உயிரினம் வாழுமிடம் அமைத்தது ...
உன் வருகையால் அடைந்த தைரியம்...அளவிடற்கரியது ...

உன் சலசலப்பில் நாங்கள்
உன்னை பருகினோம் ,
உன்னில் நீந்தினோம் ,
உன்னில் பயணித்தோம் ,
உன் வரவால் பயிரிட்டோம் ...
உன்னால் நாங்கள் அடையும் சுகம் ...விவரிக்கமுடியதது ...


உன் பருவ காலங்களில் நீ
வரும் வழியெல்லாம் உன்னுடன் நீ
அழைத்து வரும் துள்ளல் தரும் இதம்.... எப்படிச் சொல்வேன் ?...

நீ பாய்ந்த பிரதேசங்களில் எல்லாம்
தரை நிலமாக இருந்தவை எல்லாம்
பூஞ்சோலை யாய் மாறியது ....
உயிரினம் சுவாசிக்க ....புசிக்க .....
மட்டுமல்ல ..ரசிக்க வும் !!!!

ஆனால்..........?

நீ பயணித்த வழியில் வாழுமிடம்
அமைத்த உயிரினம் .....

உன் வழியை ,
உன் பாதையை ,
சில மாதங்கள் நீ தங்குமிடத்தை எல்லாவற்றையும்
உயிரினங்கள் அடைத்து கூடு கட்டிகொண்டன .....

உன் வரவை அவர்களே (உயிரினங்கள் ) தடுத்து கொண்டார்கள் ..
இழப்பு ....யாருக்கு ?...
நீரின்றி அமையாது உலகம் .......

சிந்திப்போமா?.....நாளை விடியலுக்கு .....

அப்துல் ரஹ்மான்
--harmys--
இது ஒரு மீள்பதிவு

யார் அங்கே ? எங்கே போனார்கள்? - தேடல் - 3 14

அதிரைநிருபர் பதிப்பகம் | March 18, 2014 | , , ,

முதிர் நிலா!

நிலைக் கண்ணாடி முன்
நின்றிருந்த நிலா
தடாகத்தில் பிம்பத்தைப்போல
தத்தளிக்காமல்
திருத்தமாயிருந்ததால்
தன்னையே பார்த்துக்கொண்டு
வெகுநேரம் நின்றிருந்தது

அகத்தின் நிலைமையை
முகம் காட்ட
கண்ணாடி அதை
அப்பட்டமாகப்
பிரதிபலித்துக் கொண்டிருந்தது

விழிகளில்
விடை தெரியாக் கேள்விகளும்
இதழ்களில்
இனம்புரியா இன்னல்களும்
புத்தியில்
பதிலில்லாப் புதிர்களும்
பதிந்து கிடந்தன

கொட்டித்தீர்ந்துபோன
கோடைமழைக்குப் பிறகு
எஞ்சியிருக்கும் மேகத்தைப் போல
கொட்டித் தீர்ந்துபோகுமுன்
மிஞ்சியிருக்கும்
மெலிந்த கூந்தலில்
மலர்சூடாத
மாலைநேரக் கனவுகள்
கரைந்து கரைந்து
கண்களின் வழியே
கரையைக் கடந்தன

காத்திருப்பின் உச்சம்
வரையறுக்கப்படாததால்
வளர்பிறை காலங்களில்கூட
தேய்ந்துதேய்ந்து
வடிவை
இழந்து கொண்டிருந்தது நிலா

எப்படி இடம் மாற்றிப் பார்த்தாலும்
ரசம் கொட்டிப்போன கண்ணாடியின்
ஒரு சில இடங்கள்
நிலவின்
வடுக்களாகவே தோன்றின

இந்த
நிலைக்கண்ணாடி நிலா
நிலை தடுமாறி
தலை தொங்கிப் போகுமுன்
வலக்கரம் பற்றும்
வாழ்க்கை ஒன்று
வாய்த்து விட வேண்டும்!

Harmys அப்துல் ரஹ்மான் எழுதியதல்ல.
(அடுத்தது?)

கன்னிப்பொழுது...! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | March 03, 2013 | , ,


பெரு வெடிப்பின்  சீற்றம்
குறைந்து  அமைதி தவழ்ந்த
அந்த புதிய பொழுதுகளின்  போது
தன்  ஆளுமையை  அழுத்தமாக
அனைத்திலும் பதித்தது சூரியன்...!
ஆனால்  ஒன்றை  தவிர...
அன்றுதான்  அதற்கும்
சூரியனுக்கும்  முதல் பரிச்சியம் !
அது ?....

கோபம்  தனந்த  சூரியன்
உக்கிரமாக  உதித்தது
அது மட்டும்
பணியவில்லை ! திமிறியது !
 சூரியனின் உக்கிரம் உச்சத்தை  தொட
 அது  கருகியதே  அன்றி   தன்
இயல்பை  தொலைக்கவில்லை !

சூரியன்  மேகத்தை
தூதிற்கு  அழைத்தது
மேகத்தினூடே  மெலிதாய்
நுழைந்து  தன்  ஜாலத்தை
அதனிடம்  காட்டியது !
அந்தோ ! பரிதாபம்  அதற்கும்
மயங்கவில்லை ! அதன்
இயல்பை தொலைக்கவில்லை  !

தளராத சூரியன்
துணைக்கு  மரம்
செடிகளின் இலைகளை
 இணைத்துக்கொண்டு
அதன் மீது
மென்மையாய்  படர்ந்தது !
ஆவலாய்  சூரியன்  காத்திருக்க
அதுவோ
அன்புடன்  நிராகரித்தது !

மனம் வெதும்பி  சூரியன்
நகர  ஆரம்பிக்க
உடன் பிறப்பான
நிலா   சோகத்தின்  காரணம்   விசாரித்தது !
சூரியன்  தன்  முயற்சியை
எடுத்துரைக்க   ஆவலாய்
நிலா  கேட்டது !

நிலா  சூரியனிடம்  சொன்னது
நீ சென்று வா
நான்  உன் அன்பை அதனிடம்
சேர்கிறேன்  என  கூறி
சூரியனின்  ஒளி  எனும்
அன்பை பெற்று
புதிதாய்  ஒரு
வெண்கலப்  பொழுதை
பாய்ச்சியது
அட்டகாசமாய்
மொட்டு  வெடித்து
சிதறி  இதழ்களை
விரித்து  சிரித்தது
தாமரை !!!!!!!

-Harmys

தடம்...! 26

அதிரைநிருபர் பதிப்பகம் | July 02, 2012 | , , , ,

ஆறாவது நாளானது அன்று
சூரியன் மறைந்து,
தொடர் மழை...
பள்ளியும் விடுமுறை
நான்காம் வகுப்பு
நண்பர்களோடு கும்மாளத்திலும்
வருத்தமொன்று தொற்றிட்டு
விடுமுறையே ஆனாலும் சூரியனின்றி
விளையாட்டும் ரத்தானது
நாளை விடியலில் சூரியோதயம்
நிச்சயம் எனும் நம்பிக்கையோடு கலைந்தோம் .

*****

அன்றிரவும் மழை
உறக்கமும் தொடர்ந்தது
விடியலில் அம்மா எழுப்புகிறாள் !
மறுத்து முரண்டு புறண்ட !
என்னை நெருங்கி
என் காதில் சொன்ன சங்கதி
என்றோ நான் கேட்ட
கேள்விக்கான பதில்
துள்ளி எழுந்து
எட்டு கதவுகள் கொண்ட
நீண்ட வீட்டை
புயலன கடந்து
கொல்லைபுரத்தை அடைந்தேன்...

******

ஆசையான கேள்விக்கு பதில்
மறுபடியும் எப்ப நிகழும்
எனத்  தெரியாது
அந்த கணங்களை மெல்ல
என் மனதில் பதிகிறேன்
மெதுவாக கொல்லைபுற
தரையில் காலடி பதிக்கிறேன்
சில்லென காற்று கன்னத்தை தழுவியது
வானம் பார்க்கிறேன் பிறந்த குழந்தையின்
உள்ளத்தினைப்போலே தெளிவாய்
எதிரே பெரியம்மா வீட்டின் மாடியில்
புகைகூடு புகைத்தது
அருகில் உள்ள மாமி வீட்டின்
கன்றுகுட்டி சப்தமிட்டுக் கொண்டிருந்தது
எங்கள் வீட்டு  வேலைக்காரி
அடுக்களையில்
சிரட்டையை வெடித்துக்கொண்டிருந்தாள்

******

மீண்டும் ஒரு அடி நகர்ந்தேன்...
விலாக்கொல்லையில் முருங்கை
மரம் குறுக்கிட்டது
உலுப்பினேன்
நேற்றுப்பெய்த மழையில்
பிடித்து வைத்த நீரையும்
உதிரும் பூக்களையும்  என்
முகத்தில் தெளித்திற்று...

*****

மீண்டும் ஒரு அடி நகர்ந்தேன்
புட்டு புட்டு என கொல்லை சந்தில்
புட்டுக்காரி கத்தினாள்
மீண்டும் அதை நோக்கி நெருங்குகிறேன்
அதன் பக்க வாட்டில் இருக்கும்
நண்பனின் வீட்டில் நண்பனின் தாத்தா
புகைத்த சுருட்டின் புகை மிதந்தது
நெருங்கிவிட்டேன்  அதை
அது
'என் முகத்தை மிகத் தெளிவாக
வானத்தின் பின்னணியில்
அழகாய்  காட்டிற்று '

என்றோ கேட்ட கேள்வி
இன்றைய தலைமுறைக்கு
கனவிலும் எட்டாத அந்த கேள்வி

'எப்போது நம் வீட்டின்
கிணறு தண்ணீரால்
நிரம்பி வழியும் ?'

இனி என்றும் கிடைக்காத பதில்
அன்று கிடைத்த பதில்
'எழுந்திரு தொடர் மழையில்
நம் வீட்டு கிணறு நிரம்பி வழிகிறது '

------------

இன்றுள்ள புதிய தலைமுறைக்கு
இந்த 'இதம் ' கிடைக்காத
காரணம் யாதோ ?

-Harmys

வரம்பு... 24

அதிரைநிருபர் பதிப்பகம் | March 07, 2012 | , , , , ,

ஒரு தேன்கூடு
அதில் ராணித் தேனீக்கு ஒரு கவலை
தேன் கொள்ளச் செல்லும் தேனீக்களில் சில
திரும்பி வருவதில்லை என்று....
காரணமும் அறிந்தது ராணி !

நடு வானில் கூட்டம் என கட்டளையிட்டது ராணி.
தேனீக் கள் கூடின ராணிக்கு முன்னே...
அனைத்தும் காற்றில் தங்களை நிலைப்படுத்திக்கொண்டன.
ராணி ஆரம்பித்தது,


ஈக்களே!
தேன் கொள்ளச் செல்லும் நம்மவர்களில் சிலர்
திரும்பாததால் கூட்டை முழுதாக்குவது கடினம் என்றுரை த்தது
திரும்பாதல் காரணம் அறிவீர்களா என வினவியது
தேன்கொள்ள தூர தேசம் செல்லுவது என்றது ஒரு தேனீ
இல்லையென்றது ராணி
வேறு கூட்டிற்கு மாறுவது என்றது இன்னொரு தேனீ
மறுத்தது ராணி
பிறரிடம் போரிட்டு மடிவது என்றது மற்றொரு தேனீ
மீண்டும் மறுத்து ராணி சொன்னது
என் பின்னே பறந்து வாருங்கள் உங்களுக்கு
விடை கிடைக்கும் என்று ராணி பறந்தது
தேனீக் கள் பின் தொடர்ந்தன....


ராணி வந்தடைந்த இடம்
தேன் கொள்ளும் பூவயல்
ராணி முன்னேயும் தேனீக்கள் பின்னேயும்
பூவயலின் மேல் பறந்தன....
மறுபடியும் ராணி ஆரம்பித்தது
ஈக்களே ! நமக்கென்று தேன் கொள்ள இந்த
பூவயலில் நிறைய செடிகளின் பூக்கள் உள்ளன
அதில் மட்டும் தேன் கொள்ளல்
நம் எல்லையாகும்
அதோ தனியாக தெரியும் அந்த செடியின் பூக்கள்
மிகவும் கவர்பவை
ஆனால் அதன் தேன் கொண்டு
திரும்புதல் கடினம்
அது நம்மை அழித்துவிடும்
அதில் தேன் கொள்ள முயலுவது
வரம்பு மீறலாகும்
அதுவே நம்மில் சிலர்
திரும்பாத காரணமாகும் .
வரம்பு மீறல் : அழிவின் வாசல்
என உணர்த்தியது ராணி

-Harmys
படங்கள் : A.R.Mohamed Yousuf

திருமணம் ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | December 12, 2011 | , , , ,

ஓர்
அழகிய பூஞ்சோலை
இரண்டு வண்ணத்துப் பூச்சிகள்
ஒன்று
அழகிய ஓவியங்கள் தன் மீது கொண்டது
மற்றொன்று
ஓவியம் இல்லாதது....

அழகிய ஓவியம் கொண்டது
தென் திசையை நோக்கி
தன் இறகை விரித்து மடக்கியது
அதில்
வெளியான சிறு காற்று
சற்று தொலைவில் நிலைகொண்டிருந்த
ஈரமான
தென்றல் காற்று குவியலில்
சிறிய
உந்துதல் ஏற்படுத்தியது
உந்துதலில் ,
எதிர்பட்ட வெளியெல்லாம்
சுகந்த தென்றல் காற்று வீசி
சூழலை ரம்மியமாக்கியது.....

நம்மில் சில ஆண்மை கொண்ட
கைமாறு வாங்காமல் மனமுடித்த
கதாநாயகன் ,
சமுதாயத்தின் மீது ஏற்படுத்திய
நன்மையான அதிர்வை போல.....

ஓவியம் இல்லா வண்ணத்துப் பூச்சி
கிழக்கு நோக்கி
தன் இறகை விரித்து மடக்கியது
அதில்
வெளியான சிறு காற்று
படிப்படியாக முன்னேறி
வெகு தொலைவில் நிலை கொண்டிருந்த
புயல் காற்று மண்டலத்தில்
ஒரு
உந்துதல் ஏற்படுத்தியது ..
உந்துதலில் ,
எதிர்பட்ட வெளியெல்லாம்
பெரும் புயலாக மாறி
சர்வ நாசம் செய்தது.....

கைமாறு வாங்கி மனமுடித்த
கையாலாகாதவன்
நம் சமுதாயத்தை
நாசம் செய்தது போல....
(see wikipedia :Butterfly effect)

---Harmys---

பயணிகள் கவனத்திற்கு... ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2011 | , , ,


மண்ணறை விமானப் பயணத்திற்கு உங்களை வரவேற்கிறோம் !

நாம் இவ்வுலகை விட்டுச் செல்ல இருக்கும் அடுத்த இடம் மண்ணறை. அதற்கான பயண ஏற்பாடுகளையும் அங்கே செல்லும் வழிமுறைகளையும் வேறு எங்கும் உங்களால் கண்டிருக்க முடியாது. ஆனால்,  அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் காணலாம். நம் மண்ணறை விமானம், இதர விமானங்களான, இந்தியன் ஏர்லைன், கல்ஃப் ஏர், எமிரேட்ஸ் போல் இருக்காது.

இவைகளின் கட்டுப்பாடான 30 கிலோ அனுமதி என்ற வரையறைகள் இல்லை. மண்ணறை விமானம் எவ்வித கட்டுபாடுகளின்றி அதிக எடை, குறைந்த எடை என்ற பாகுபாடுகள் இன்றி அதற்கான கட்டணங்கள் ஏதும் செலுத்தாமல் செல்ல வல்ல அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அருட்கொடை.

இவ்விமானத்தில் செல்ல, விரும்பிய ஆடைகள் அணியவேண்டியதில்லை. வாழும்போது உடுத்திய ஆடைகளுக்கு அவசியமில்லை. உங்களுக்காக பிரத்தியேகமாக வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுடன் வெள்ளை நிறத்தினாலான ஆடை. அதையும் உடுத்தி விடப்படும்; அதற்கான சிரத்தை நீங்கள் எடுக்க வேண்டியதில்லை. விலையுயர்ந்த நறுமனங்களான சேனல், பெகொ, ரபானெ இருக்காது. ஆனால், அருமையான மனம் வீசும் சந்தனம் கரைத்துத் தெளிக்கப்படும்.

பயணிகளின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இந்தியாவுக்கோ, பிரிட்டனுக்கோ, அமெரிக்காவுக்கோ, இலங்கைக்கோ உரியதாக இருக்காது. ஆனால், அது நிச்சயம் இஸ்லாம் என்பதாக இருக்கும். பயணிப்பவரின் விசாவுக்கு கால அவகாசமெல்லாம் கிடையாது, அவைகள் ஆறு மாதத்தில் முடிவடைவதுமில்லை. அங்கே "அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை". 

விமானத்தினுள் அழகிய பணிப்பெண்கள் இருப்பதில்லை. விமானத்தின் தலைமை இஸ்ராயில் (அலை) மட்டுமே இருப்பார். பயணிப்பவருக்கு முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்றெல்லாம் இருக்காது,

விமானம் தரையிறங்குமிடம் லண்டன் விமான நிலையமோ ஜித்தா விமான நிலையமோ அல்ல, நேராக மையவாடி என்று அழகுற பெயரிடப்பட்ட தனித்தளம். அங்கே குளிரூட்டப்பட்ட தனி தங்குமிடமோ அல்லது பஞ்சு பொருத்திய நடை மேடையோ இருக்காது. அனால் ஆறு அடி நீளம் கொண்ட புதைகுழி (கப்ருஸ்தான்) தான் உங்களின் இருப்பிடம்.

அங்கே குடியுரிமை அதிகாரிகள் இருக்கமாட்டாகள். ஆனால், முன்கர் நக்கீர் என்ற அல்லாஹ்வால் நியமிக்கப்பட மலக்கு இருப்பார்கள். அவர்களின் கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதிலைக் கொண்டே எவ்விடம் உங்களுக்கு ஏற்றது என்பதை பரிந்துரை செய்வார்கள். அங்கே சுங்க இலாகா அதிகாரிகளோ, உளவு கண்டெடுப்பானோ (டிடெக்டர்) இருந்திடாது. மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கிருந்து உங்களை இறுதியான இடத்திற்கு கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கே தோட்டங்களின் கீழே ஆறுகள் ஓடும் அந்த சுவர்கத்தில் அல்லது கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பும் இருக்கும்.

இந்த பயனத்திற்காக செலவுகளிருக்காது, மொத்தமாக இலவசப் பயணம். உங்களுக்கு சேமிப்பு என்பது கையில் வருவதுமில்லை. இந்த விமானம் தீவிரவாத விஷமிகளால் கட்த்தப்படமாட்டாது, சாப்பாடுகள் என்று ஏதும் பரிமாறப் படமாட்டாது ஆதலால் ஹலாலா / ஹராமா, வேறு ஜீரனக் கோளாறு அல்லது அலர்ஜி என்ற பாதிப்புகள் பற்றிய கவலை வேண்டாம். காத்திருப்பு அறைகள் அங்கில்லை. ஆதலால் காலதாமதம் என்பது கடந்து விட்டதாகவே இருந்திடும். கவலை வேண்டாம்.

இந்த விமானம் குறித்த நேரத்தில் கிளம்பக் கூடியது; அதேபோல் சென்று சேரும் நேரம் குறித்தபடி இருக்கும். விமானத்தின் அகத்தினுள் பொழுதுபோக்குகள் பற்றி கவலை வேண்டாம். காரணம் அங்கே உங்களுடைய கேட்கும் மற்றும் உணரும் திறன் மறைக்கப்பட்டிருக்கும்.

இந்தப் பயணத்திற்கான முன்பதிவு பற்றியெல்லாம் கவலை வேண்டாம். அது ஏற்கனவே முன்பதிவு செய்திட்ட திரும்பிச் செல்லும் பயணம்தான். அதுவும் தாயின் கருவில் உருவாகும்போதே நிச்சயிக்கப்பட்ட பயணமே.

ஆஹா ! ஒரு நல்ல செய்தி ! உங்களின் அருகில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்ற கவலையே வேண்டாம். நீங்கள் மட்டும்தான் அதில் பயணம் செய்வீர்கள். அந்தப் பயணத்தின் சுகமான அனுபவத்தைப் பெறுவீர்கள். அதுவும் நீங்கள் மட்டுமே. அதில் ஒரு சின்ன தூக்கம் தான், பயணம் முழுவதும் உங்களை எழுப்பும் எவ்வித எச்சரிக்கையின்றி தூங்கலாம்.  

அப்படின்னா ! நீங்க தயாராக இருங்கள். தயவு செய்து உண்மையின்பால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருங்கள். முஸ்லீம் சகோதர சகோதரிகள் நிச்சயம் மார்க்க கடமைகளையும் அதன் வழிகாட்டல்களையும் உறுதியோடு கடைபிடியுங்கள்.

எனவே, அன்புச் சகோதர சகோதரிகளே, நல்லமல்கள் கொண்டு உங்களின் பயணப் பொதிகளின் (நன்மைகளின்) எடைகளை அதிகமாக்கி, ட்ரான்ஸிட்டில் சொர்க்கம் செல்ல தயாராகுங்கள். அவற்றை சலுகையாகவும் போனஸாகவும் பெற உகந்த புனித மிக்க மாதம் (ரமளான்) உங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது... 

யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் !!!

மூலாக்கம் : Tausif Rahmathullah (ஆங்கிலம்)
தகவல் : அப்துர்ரஹ்மான் - harmys

இந்த ஆக்கம் ஆங்கிலத்திலிருந்து தழுவி நமது வழக்குச் சூழலுக்கு ஏற்றவாறு தமிழில் மொழியாக்கம் செய்து இங்கே தந்திருக்கிறோம்...

வீடு திரும்ப விடை கிடைக்குமா? கண்ணீர் (நிஜம்)கதை 11

அதிரைநிருபர் | July 27, 2011 | , ,

அன்பு சகோதரர்களே,

1980-ஒரு சிலர் மட்டும் நமதூரில் வெளிநாட்டில் இருந்தார்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்களை துன்பப்படுத்துகிறார்கள் என்று ஒரு சிலர் கூற என் மனம் படபடத்தது . ஏனென்றால்  எனக்கு வெளிநாடு செல்ல விசா ரெடியாக உள்ள நேரம் , என்ன செய்வதென்று தெரியாமல் நான் குற்றாலத்தில் போய் ஒளிந்து இருந்தேன் . எனது நண்பர் ஒருவருக்கு நான் இருக்கும் இடம் தகவல் அறிய என்னை அணுகி நீ இனி வெளிநாடு போகவேண்டாம் என மனதை மாற்றி வீட்டுக்கு அழைத்துவந்து , பின்பு வீட்டிலுள்ளவர்கள் என்னை சமாதனம் செய்து விசா வந்தாச்சு என்ன செய்வது ஒரு வருடம் முடிந்தவுடன் ஊர் வந்துவிடு என்று என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள் .


சென்னை வந்து சேர்ந்ததும் ரயில் நிலையத்தில் மக்கள் நெரிசலை கண்டேன் . மனம்  படபடத்தது. அழைத்து வந்த agent என்னை ஒன்னும் பயப்படவேண்டாம் நாம் பம்பாய்தான் போறோம் என்று சற்று புன்னகையுடன் கூற நான் மன பதட்டத்தில் அமைதியாக இருந்தேன் . இரண்டு நாள் ரயில் பயணம் கழித்து பம்பாய் வந்து சேர்ந்தேன் .ஒரு ரிக்சா வண்டியில் பயணம் செய்து ஒரு பள்ளிவாசலை அடைந்தோம் . அங்கு ஏராளமான தமிழ் பேசும் நண்பர்களை கண்டேன் .சற்று மனதுக்கு ஆறுதலாக இருந்தது .மறுநாள் காலை agent என்னை பார்க்கவேண்டும் என்றார் .


காலையில் அவசர அவசரமாக வாய் மாத்திரம் கொப்பளித்து விட்டு பேண்டை மாட்டிக்கொண்டு agent -  பார்க்க சென்றோம் .காலை 11- மணி அளவில் அவரை பார்த்தேன் . நாளை காலை உனக்கு பிளைட் என்றார் . நானும் என்னை அழைத்து வந்தவரும் வெளிய வந்து டீ சாப்பிட்டதும் போய் பிளைட் டிக்கெட்டை வாங்கிகொண்டு தங்கி இருந்த பள்ளிவாசலை அடைந்தோம் . காலையும்,மதியமும் சாப்பிடவில்லை . கண்கள் செய்வதறியாது கலங்கியதை கண்டு ஒரு வெளிஊர் நண்பர் சாப்பிட்டாயா என்று கேட்டவுடன் கண்கள் இல்லை என்று கூற , வார்த்தைகளில் ஆமாம் என்று கூறினேன். இதை புரிந்து கொண்ட நண்பர் என்னை ஹோட்டலுக்கு அழைத்து சென்று வயரும்,மனமும் நிறைய சாப்பாடு வாங்கி தந்தார் . என்னுடைய வாழ்கையில் மறக்க முடியாத சம்பவங்களில் அதுவும் ஒன்று .


மறுநாள் அல்லாஹ்வின் கிருபையால் நான் சவூதி அரேபியா வந்து சேர்ந்தேன் . வந்து பார்த்ததும் அனைத்து இடங்களிலும் மணல் ,மலை தூரத்திற்கு ஒன்று மட்டும் கண்களில் தென்படும் அளவுக்கு இருந்தது சவூதி அரேபியா . நான் என்னுடைய அரபியை பார்பதற்கு இரண்டு நாட்கள் ஆனது . இரண்டு நாட்களும் விமான நிலையத்தில் தான் இருக்கநேரிட்டது . காரணம் என்னை அழைப்பதற்கு யாரும் வரவில்லை .இரண்டு நாள்களுக்கு சாப்பாடு நான் ஊரில் இருந்து வரும்போது என் மனைவி கொடுத்தனுப்பிய அவல் எனக்கு கை கொடுத்தது .பின்பு
  ஒரு காவல்துறை அதிகாரி என்னுடைய அரபியை தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து என்னை அவரிடம் ஒப்படைத்தார் .


எனக்கு வாய்த்த அரபியோ ஒரு நல்லவர் எனக்கு வேண்டிய எல்லா தேவைகளையும் செய்து கொடுத்தார் . எனக்கு வேலை மளிகை கடை போன்ற ஒரு கடையில் .இங்கு இதை பக்கால என்பார்கள்.


நான் ஊரிலிருது வரும்போது எனக்கு மூன்று பெண் குழந்தைகள் .நான் இங்கு வருகின்ற சமயத்தில் தென்காசி சென்று என் குடும்பத்தாருடன் எடுத்த கருப்பு வெள்ளை போட்டோவை என் கையோடு கொண்டு வந்தேன் . இரவு வேலை முடிந்து வந்தவுடன் என் குடும்பத்தாருடன் எடுத்த போட்டோவை நான் பார்த்தேன் என் கண்களில் மளமளவென கண்ணீர் வழிந்தது .யாரும் இல்லாத
  ரூமில் நான் சப்தமிட்டு அழுதேன். என்னையே  பிரமிக்க வைத்தது .அன்று கலங்கிய கண்கள் சிறுது காலங்களுக்கு பிறகு நான் நாடு போய்வந்த பின்பு எனக்கு மீண்டும் இரண்டு குழந்தைகள் பிறந்தன அதில் ஒன்று ஆண்மகன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .

இத்தனை காலங்கள் நான் இங்கு கழித்து நான் தேடிய செல்வங்களில் என்னுடைய அனைத்து பெண் குழந்தைகளை சிறப்பாக வாழக்கூடிய அளவுக்கு அவர்களுக்கு நல்ல கணவர் அமைத்து கொடுத்தேன் . என் மகனையும் பட்ட படிப்பு படிக்க வைத்தேன் . ஆனாலும் எனக்கு இன்னும் சுமை குறையவில்லை. என் மகன் எனக்கு கை கொடுப்பான் என நினைத்திருந்தேன் . அவன் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் சுட்ரிதிரிவதாக  என்  மனைவி என்னிடம் கூறினாள். காலங்கள் கடந்தால் எனக்கு கை கொடுப்பான் என நினைத்திருந்த என் மகனும் கை கொடுக்கவில்லை . தயவுசெய்து என் மகனை போன்று எந்த ஆண்மகனும் இருந்துவிடாதீர்கள் .


இப்போது சவூதி அரேபியா 6-ஆண்டுகளுக்கு அதிகமாக இருப்பவர்கள் ஊர் திரும்பவேண்டும் என்று ஓர் உத்தரவு பிறப்பித்தவுடன் எப்படி வெளிநாடு வேண்டாம் என ஓடி ஒழிந்தேன் அன்று இருந்த மனநிலை போன்று இன்றும் எனக்கு இருக்கிறது . காரணம் என்று பார்த்தால் சேமிப்பு இல்லாத வாழ்க்கை.
தற்போது நமதூர் நண்பர்கள் ஊருக்கு போய் வரும்போது பிற நண்பர்களிடம் தன்னை பெருமையடிதுக் கொள்வதை பார்த்திருக்கிறேன் , எப்படி என்றால் நான் லீவில் 50 ஆயிரம் செலவு செய்தேன் ஒரு லட்சம் செலவு செய்தேன் என்று சொல்கிறார்கள் . ரிஜ்க் என்பது ஒரு குறிப்பிட்ட காலங்களில் தான் வரும் நாம் அதை சரிவர பயன்படுதிக்கொள்ளவில்லை என்றால் அல்லாஹ் அதன் பரக்கத்தை நிறுத்திவிடுவான் . முறையான திட்டமிதுதல் இல்லாமல் இனி வரும் காலங்களில் என்னை போன்று இருக்காமல் முறையாக திட்டமிட்டு உங்களுடைய வரவுகளையும் ,செலவுகளையும் அமைத்துக்கொள்ளுங்கள்.


அன்பான சகோதரர்களே , நண்பர்களே இது என்னுடைய வாழ்கையில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வு , இதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .

மேலும் என்னுடைய ஒரு அன்பான வேண்டுகோள் என்னவென்றால் உங்களுடைய வரவுகளையும் , செலவுகளையும் முறையாக திட்டமிட்டு எதிர்கால வாழ்க்கைக்காக சேமிப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.


அல்லாஹ் உங்கள் குடும்பத்திற்கும் , என் குடும்பத்திற்கும் நல் அருள் புரிவானாக ! ஆமீன்.



இப்படிக்கு

கண்ணீரோடு…!

ஒரு கடையநல்லூர்வாசி.



 தகவல்: அப்துல் ரஹ்மான்  ---harmys---

மேகமே... மேகமே ...! ! ! 31

அதிரைநிருபர் பதிப்பகம் | July 18, 2011 | , ,

மேகமே மேகமே
அழகழகான ஓவியங்கள்

நீ காட்டும் போதே
எண்ணங்களின் பிரதிபலிப்போ
என எண்ணத்தோன்றும்....

சந்தோசமான மனநிலையில்
உன்
ஓவியங்கள் யாவும் கவிதையே....

சோர்வடைந்த நேரத்தில்
காற்றின் மேல் உன் படிமங்கள்
அசைவின்றி படுத்துறங்கும்....

அந்தி வேலையில்
மலையோடு
நீ
முட்டி மோதும் ஜல்லிக்கட்டு.
அதி காலையில்
வானில்
சிறிதாய் உதயகிரணம்
நீ
அயர்ந்து
மலையின் மடியில்
உறங்கும் அழகை
காணாத கண்ணும் கண்தானோ ?

எத்தனையோ இரவுகளில்
நீ
நிலவின் அருகில் வேகமாக ஓடி
நிலவு ஓடுவதாக
காட்சி மாற்றும் வித்தை...
சுகானுபவம்!

நீ
எங்களை
சூழாத தருணங்களில்
மரத்தோகைகளும் பூக்களும் செடியும்
தளர்ந்து விடும்...
அழகிய மயிலும் தன் வண்ணத்தோகைகளை
வருத்ததுடன் மறைத்து கொள்ளும்.....

நீ
எங்களை
சூழும் செய்தியை
மழைக்குமுன் வீசும் காற்று
உலகெங்கும் அறிவிக்கும்,
அப்பொழுது
மரத்தோகைகளும் பூக்களும் செடிகளும்
ஆனந்தக் கூத்தாடும்
மயிலும் தன்
தோகையை விரித்து
கும்மாளமிடும் அழகு ..நீ
எங்களுக்கு தந்த
ஆனந்தமன்றோ !



எங்கள் மனதில்
கோபம் போட்டி பொறாமை
கருணையின்மை இருக்கும்போதெல்லாம்
வானில் உன்னை நோக்கினால்
கண்களுக்கு புலப்படாத
தூரத்தில் மறைந்து கொள்கிறாய்!

எங்கள் மனதில்
கருணை எனும் பசுமை மரம்
ஆழ வேர்பிடித்து உயர்ந்தோங்கி
வளர்ந்தால்
நீயும் ஆவலாய்
எங்களை மொத்தமாக சூழ்ந்து அரவணைத்து
அன்பென்ற மழை பெய்கிறாய்!

நீ
எங்களுக்கு
எப்பொழுதும்
அருகில் இருக்கணும்
அதற்கு
கருணை மரம் தழைக்கனும்...
தழைக்கும் !


அப்துல் ரஹ்மான்
-----Harmys ----------

எங்கள் ஆசான்கள் ! - இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் பள்ளி 14

அதிரைநிருபர் பதிப்பகம் | May 11, 2011 | , ,

நமதூர் காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் மதிற்பிற்குரிய ஆசான்களை பற்றி எழுதியதை போல நமதூர் இமாம் ஷாபி பள்ளியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் எங்கள் மனதில் நீங்கா நினைவுகளோடு மிக உயர்ந்த இடத்தை பெற்றிருக்கும் மதிப்பிற்குரிய ஆசான்களை இங்கு நினைவு கூற ஆவலோடு விழைகிறேன். எல்லா ஆசான்களும் மரியாதைக்கு உரியவர்களே !

ஜனாபா மெஹர்பான் உஸ்தாத்

முழுமையான மார்க்க அறிவும் ,அதை எத்தி வைக்க அவர்கள் கடைபிடிக்கும் கண்டிப்பு, மாணவர்களையும் தாண்டி மாணவனின் பெற்றோர் வரை எதிரொலிக்கும். அற்புதமான இந்த உஸ்தாதின் மாணவனாக இருந்ததில் என்னை போன்ற மாணவர்களுக்கு பெருமை. தற்போது மன்னார்குடியில் பெண்கள் மதரசா நடத்தி வருவதாக கேள்விப்பட்டேன். எங்கள் உஸ்தாதின் (ஆசிரியை) மார்க்கத்தின் மீதான அலாதியான பற்று 25 வருடங்களை கடந்து இன்றும் என் கண்கள் முன்னால் நிழலாடுகின்றன !

ஜனாபா ஜைபுன்னிஷா மேடம்

எங்கள் பள்ளியின் பிரின்சிபாலின் சிறப்பு அவர்களின் கலகலப்பும் அதே விகிதத்தில் கலந்த கண்டிப்பும். நான் ஓரளவுக்கு நன்றாக படிக்கும் மாணவன் இருந்தும் botany பாடத்தில் கொஞ்சம் குறைவாக இரண்டு தேர்வுகளில் மார்க் எடுத்திருந்தேன். மேடம் என் உம்மாவை அழைத்து உங்கள் மகன் வீட்டிலிருக்கும்போது violet கலர் (botany பாடப் புத்தகத்தின் நிறம்) புத்தகம் படிக்கிறானா என்று தினமும் கவனிக்க சொன்னதுமட்டுமில்லாமல் எனக்கென்று அவர்கள் வீட்டில் தனியாக fees வாங்காமல் டியூஷன் எடுத்தது என் வாழ்நாள் முழுதும் மறக்காது. மேடத்தின் தன்னலமற்ற உழைப்பு இன்றும் என் நினைவில் நிற்கின்றன !

ஜனாபா ஆப்தாப் பேகம் மேடம் (Mrs. பரகத் சார்)

இவர்களை நாங்கள் சமாதான புறா என்றுதான் அழைப்போம். நம் பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று மிக அழகாக சொன்னது இன்றும் என் மனதில். இவர்களை சிறந்த சிற்பி என்று கூட சொல்லலாம் ஏனென்றால் நம்முடைய கேரக்டர்,அணுகுமுறை எப்படி இருக்க வேண்டுமென்று அன்றே personality development பற்றி 7 ஆம் வகுப்பிலே கற்று தந்தவர்கள் .creativity யை ஆர்வபடுத்துவதில் இவர்கள் ஒரு classic டீச்சர்.

ஒரு முறை ஆங்கில பாடத் தேர்வின் திருத்திய பரீட்சைத் தாள்களை எங்கள் வகுப்பில் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது என் விடை தாளில் நான் பதிலை தவறாக ஆனால் சொந்த ஆங்கில நடையில் மனப்பாடம் செய்யாமல் எழுதியதை பாராட்டியதை நினைத்தாலே இன்னிக்கும். எங்களுக்கு ஆங்கிலம் நன்றாக எழுத பேச வர வேண்டும் என்று அவர்களுடைய வீட்டில் அவர்களுடைய கணவர் நம்மூர் போற்றும் பேராசிரியர் பரகத் சாரை வைத்து எங்களுக்கு படம் எடுத்ததை தன்னலமற்ற சேவையின் உச்சம்.

இதில் இடம் பெறாத ஆசான்களும் என் நெஞ்சில் மரியதை கூரியவர்களே ! மேலும் மேலே உள்ள என் மரியதைக்கு உரிய ஆசான்கள் ஹஜ்ஜு கடமைமுடிதிருந்தால் ஹாஜிமா என்று பெயருக்கு முன்னாள் போட்டுக்கொள்ளவும்.

இமாம் ஷாஃபி முன்னாள் / இந்நாள் மாணவர்களே உங்கள் அனுபவங்களை பின்னூட்டமாக தொடருங்கள்......

நமக்கு பாடம் சொல்லி தந்த நம் ஆசான்கள் அனைவரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை என்றும் பிரார்தித்தவனாக !.

என்றும் நன்றியுடன்,

- அப்துல் ரஹ்மான்
- harmys -