(முன்குறிப்பு ;- சந்தேகேமே வேண்டாம் இது முழுக்க நுனிப்புல் மேய்ச்சல்தான் .ஆனால் இந்த எழுத்தின் எண்ணங்கள் தொலை நோக்குடவை .ஆழ்ந்த திறன் பெற்றவர்கள் இதை விரிவாக்கம் அல்லது திருத்தம் செய்யலாம் )
மொழி :-
நாம் நிலைக்கொண்டிருக்கும் நம் மண்ணின் மொழியான தமிழை மிக நாம் மிக நுட்பமாக அணுக வேண்டும் .நாம் பேசும் தமிழ் மொழியை குறித்து தெளிவு வேண்டும் .ஆராய்தல் மிக அவசியம்.
இது ஒரு பொதுவான மொழியாகும் .நமக்கும் ,சகோதர இந்துக்கள் ,,இந்துத்துவாவினர் (மனு தர்மத்தினர் ),கிறிஸ்தவர்கள் ,மற்றும் சிலருக்கும் தமிழ் பொதுவான மொழியாகும் .
நீண்ட கால மற்றும் நிகழ் கால தமிழை திருவள்ளுவர் மற்றும் பாரதியை கடக்காமல் அறியமுடியாது .இதில் நாமறிந்த வரையில் திருவள்ளுவரின் தமிழில் மத அடையாளங்கள் இல்லை (தற்போது திருவள்ளுவரை இந்துத்துவாவில் (இந்துக்கள் அல்ல, மனு தர்மத்தினர்) அங்கமாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன). தமிழக பகுதிகளும், தமிழும் எந்த மத அடையாளங்களும் இல்லாமல் இருந்து வந்துள்ளது. மனு தர்மத்தினர் தமிழகப்பகுதிகளை ஆக்கிரமித்த உடன் தமிழை மெல்ல மெல்ல ஆக்ரமித்து கொண்டதன் பாரதூர விளைவுதான் பாரதியாரின் தமிழில் சுதந்திரம், மானுட கவிதைகளுடன் மதம் சார்ந்த தமிழும் எட்டிப்பார்த்தது .அது பாரதியாரின் தவறு அல்ல .இங்கு தான் நம்மை நாமே ஆயிரமாயிரம் கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது .அதுதான் தமிழுக்கான இஸ்லாமியரின் பங்கு என்ன ? விடை வெகு சொற்பமே !.இங்கு தான் நாம் மிக அலட்சியமாக இருந்து விட்டோம் .இருக்கிறோம் .நாம் உள்வாங்கிய அழகிய நம் மார்க்கத்தின் இலக்கியங்களை முழு அளவில் தமிழ் மயமாக்க வில்லை .
அரபி என்னும் மொழியை நாம் வெறும் மொழியாக பார்க்க தவறியதுதான் நாம் தமிழை முழுமைக்கொள்ள முடியாமல் போனது.கண்ணியமிக்க நம் நபி(ஸல் ) அவர்களின் இறுதிநாட்களில் மொழிகள் குறித்த அவர்களின் பேச்சு மிக முக்கியமாக கவனிக்க பட வேண்டியது .
அரபியைப்போல் தமிழும் மிக ஆழமானவை .நம் அழகிய மார்க்கத்தை அரபி மொழியின் அடிவேர் வரை எடுத்து சென்றது போல் தமிழில் இதுவரை இல்லை .தமிழில் உள்ள பல வகையான மொழியின் உட்கூறின் வடிவங்களிலும் நம் மார்க்கத்தின் மகிமைகள் வேர் விட செய்தல் மிக அவசியம் .நாம் பேசும் தமிழை பொதுவானதாக வைத்திருப்பதை நாம் உறுதி செய்தல் அவசியம் .
நாம் எழுதும் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கும் போது உறுதி செய்தல் அவசியம் .எவ்வாறுஎனில் ,
1.சகோதர இந்துக்களின் இலக்கியமோ அல்லது காவியங்களோ வருமானால் அதை நம் சகோதர இந்துக்களின் (இந்துத்துவாவினர் அல்ல) தமிழ் இலக்கியம் என்றே நாம் பதிய வேண்டும்.
2.இந்துத்துவாவினரின் (மனு தர்மத்தினரின்) இலக்கியங்களை இந்துத்துவாவினரின் தமிழ் இலக்கியம் என்றே நாம் பதிய வேண்டும் .
3.கிறிஸ்தவர்களின் இலக்கியங்களை கிறிஸ்தவர்களின் தமிழ் இலக்கியம் என்றே நாம் பதிய வேண்டும் .
மேலே சொல்லப்பட்டதைபோலே நம் மார்க்கத்தின் இலக்கியங்களை இஸ்லாமியரின் தமிழ் இலக்கியம் என்றே பதிய வேண்டும்.
நம் மொழியின் மீது இந்த புரிதல் அவசியம். இந்த புரிதல்கள் இல்லையென்றால் தற்போதைய பெருபான்மை வாதம் சத்தத்தில் நம் தமிழ் மொழி நம்மை விட்டு அந்நியப்படுத்தப்படும் .
--வள்ளுவ ,காந்தி நாட்டு இஸ்லாமியன்--
-harmys-
Abdul Rahman


















