Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

மழை 0

அதிரைநிருபர் பதிப்பகம் | September 27, 2016 | , ,


சுவனத்திலிருந்து இறங்கி வரும் ஷவர்!

கீழ்வானில் அதோ வெள்ளிக் கீற்றாகக் கண்ணைப் பறிக்கும் ஒரு மின்னல்!

அத்துடன் நீர்த் துளிகளைச் சுமக்கும் கருமேகங்கள் மெல்ல உரசுவதிலும் அதன் செல்ல உறுமல்களிலும் உதயமாகிப் பொழிவது மழை!

சரம்சரமாய்ப் பெய்தாலும் சொட்டச்சொட்டப் பெய்தாலும் அப்போதும் அதன் பெயர் மழைதான்!

அதற்கு அடை மழை. அந்தி மழை. அப்பு மழை. ஆலங்கட்டி மழை. கன மழை. காத்து மழை, குமுறும் மழை. கோடை மழை. திடீர் மழை. தொடர் மழை. தூறல் மழை. தூவும் மழை. சாரல் மழை. சுழி மழை. பனி மழை. பருவ மழை. பெய் மழை. பொடி மழை. வெக்கை மழை. வெள்ள மழை என்று என்ன பெயர் வைத்தாலும் மழை ஓர் அழகுதான்! பகலில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து அலுக்காமல் மனம் குளிர மழையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

ஆனால், "இரவின் இருளில் மழை பெய்வதில்லை. அதன் பேச்சுச் சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும்" என்றான் தற்காலக் கவிஞன் அபுஷாஹ்ருக்! அதுவும் சரிதான். இங்கே, நம்மூரில் மின்னல் வெட்டினால், மின்சாரம் போய்விடுமல்லவா!

எல்லாம் வல்லவன் அல்லாஹ் (ஜல்) சொல்கிறான்:

வறண்ட பூமியை நோக்கித் தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம் என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து அவர்களும் அவர்களின் கால்நடைகளும் உண்ணுகின்றனர். இதை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க மாட்டார்களா? (1)

அன்பின் வடிவாய் ஆகி நின்ற அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருள்மழை குறித்து அருளினார்கள்:

அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு(2) உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; தம் கால்நடைகளுக்கும் புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது ஒன்றுக்கும் உதவாத வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டுவந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டுவந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று உலகத் தூதர் (ஸல்) அவர்கள் உரைத்தார்கள்"
கடும் வெப்பத்தின்போது ஆறு, ஏறி, கடல், குளம் ஆகிய நீர்நிலைகளிலிருந்து உறிஞ்சப்படும் நீர், நீராவியாக மாறிக் காற்றுடன் கலந்து, ஆகாயம் சென்று பிறகு மழை மேகங்களாய் உருவாகின்றன! அது பின்னர், அல்லாஹ் (ஜல்) எங்கெங்கே எந்தெந்த அளவில் பொழியப்பட வேண்டுமென நாடுகின்றானோ, அங்கெல்லாம் மழை அருளப்படுகின்றது. மீண்டும் நிகழும் அதே நீர்சுழற்சி! அது ஏகன் இறைவனின் ஏற்பாடு!

“நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் தான் மேகங்களை மெதுவாக இழுத்து, பின்னர் அவைகளை ஒன்றாகச் சேர்த்து, ஒன்றின் மேல் ஒன்றாக இணையச் செய்கின்றான். அவற்றின் மத்தியிலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கின்றீர்” (3)

மழை பொழிவதால் வறண்டுபோன நிலம், உயிர் பெறுகின்றது. 'நீரின்றி அமையாது உலகு' என்பதுபோல் நீர் சிலமாதம் இல்லையென்றாலும் இடர் தரும் ஏராளமான இன்னல்களும் உணவுப் பற்றாக்குறைகளும் உண்டாகி, மனிதன் உட்பட உயிரினங்கள் அனைத்தும் பல கஷ்டங்களுக்கு உள்ளாகின்றன!

பாலைவனப் பிரதேசங்களில் மழையின்றிப் போய்விட்டால், அதன் சிரமம் எத்தகையது என்பதைச்சொல்ல வேண்டியதேயில்லை! அந்த ஆண்டு கொடுமையான பஞ்சம் மதீனாவைச் சூழ்ந்துகொண்டது. வானம் பொய்த்துப் போனது!

மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "மழை பெய்யாமற் போனதால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது, யா ரசூலல்லாஹ்" என்று முறையிட்டனர். அப்போது பொற்குணம் வாய்ந்த பூமான் நபியவர்கள், மக்களை ஊருக்கு வெளியே தொழும் திடலுக்கு புறப்பட்டு வருமாறு அறிவுறுத்தினார்கள். அத்தொழுமிடத்தில் சொற்பொழிவு மேடை ஒன்றை தயார் செய்யுமாறும் உத்தரவிட்டார்கள். ஆகவே, தொழுமிடத்தில் சொற்பொழிவு மேடை ஒன்று தயார் செய்யப்பட்டு அவர்களுக்குப் போடப்பட்டது.

செங்கதிரோன் தன் பொன்னிறக் கதிர்களை, கீழ்வானத்தின் விளிம்பில் சிந்திநின்ற அன்று காலை, செம்மல் நபி நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். பின்னர், சொற்பொழிவு மேடை மீது ஏறி நின்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து பெருமிதப்படுத்திவிட்டு,

"மக்களே, நீங்கள் உங்கள் நகரங்களில் மழைக் காலம் தொடங்குவது தாமதமாகவும் அதனால் வறட்சி நிலவுவதாகவும் முறையிட்டீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (ஜல்) இதுபோன்ற சூழ்நிலைகளில் அவனிடமே பிரார்த்தித்துக் கேட்க வேண்டும் என்று உங்களுக்குக் கட்டளை இட்டுள்ளான். மேலும், நீங்கள் இவ்வாறு அழைத்துப் பிரார்த்தித்தால் உங்களுக்கு மறுமொழி அளிப்பான் என்றும் உங்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளான்" என்று கூறினார்கள். பின்னர் அவர்கள்,

"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர்ரஹீம். மலிக்கியவ்மித்தீன். லாஇலாஹ இல்லல்லாஹு, யஃபஅலு மாயுரீது, அல்லாஹும்ம அன்த்தல்லாஹு லாஇலாஹ இல்லா அன்த்தல் ஃகனிய்யு, வ நஹ்னுல் ஃபுகராஹு அன்ஸில் அலைனல் ஃகைஸ், வஜ்அல் மாஅன்ஸல்த்த லனா குவ்வத்தன் வ பலாஃகன் இலாஹீன்"

என்று கூறி தமது கைகளை அவர்களின் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவு உயர்த்திய வண்ணமாகவே தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டு இருந்தார்கள்.

(தமிழில்: அகில உலகங்களின் இரட்சகனும் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் கூலி கொடுக்கப்படும் மறுமை நாளின் அதிபதியும் ஆகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்லாஹ்வைத் தவிர வழிபடத் தகுதியானவன் வேறு எவனுமில்லை. அவனே, நினைத்ததைச் செய்து முடிப்பவன். யா அல்லாஹ்! நீயே எங்களின் இறைவன் ஆவாய். எந்தத் தேவையும் அற்றவனாகிய உன்னைத் தவிர வழிபடத் தகுதியானவன் வேறு எவனுமில்லை. நாங்கள் எல்லோரும் உன்னிடமே தேவை உடையவர்கள். ஆகவே, நீ எங்களுக்கு மழையைப் பொழியச் செய்வாயாக. எங்களுக்குப் பொழிந்ததைப் பயனுள்ளதாகவும் சேமிப்பாகவும் எங்களின் தேவைகள் நிறைவடையும் ஒரு தவணைவரை ஆக்குவாயாக!)

பின்னர், தம் முதுகை மக்கள் பக்கம் திருப்பி, தமது கைகளை உயர்த்தியவாறு, தாம் அணிந்திருந்த போர்வையைக் கீழும் மேலுமாக மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர், மக்களை நோக்கியவாறு சொற்பொழிவு மேடையிலிருந்து இறங்கினார்கள். உடன், இரண்டு ரக்அத் 'மழைத் தொழுகை'யைத் தொழுவித்தார்கள்.

அப்போது வல்லமையும் உயர்வும் மிக்க அல்லாஹ் (ஜல்) மேகத்தைத் திரளச் செய்தான். மின்னல்வெட்டியது. தொடர்ந்து பெரும் இடி முழங்கியது. அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மழை கொட்டத் துவங்கியது. உலகம் செழிக்க வந்த உண்மைத் தூதர் (ஸல்) அவர்கள், இன்னும் திடலில் மழைத் தொழுகையை முடித்துக் கொண்டு மஸ்ஜித் நபவீக்கு வரவில்லை. அதற்குள், வீதியின் இரு மருங்கிலும் மழை ஆறாய் ஓடத் துவங்கியது!

மக்கள் தங்களின் இல்லங்களை நோக்கி ஓடுவதையும் மழையில் நனைய பயந்து ஓரமாய் ஒதுங்குவதையும் கண்ட மாண்பு நபியவர்கள் மடை திறந்த வெள்ளம் போல் மகிழ்ந்து சிரித்தார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்:

"அல்லாஹ் (ஜல்) அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவனாக இருக்கின்றான். நான் அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனுடைய தூதராகவும் இருக்கின்றேன் என்று நான் சாட்சியம் அளிக்கின்றேன்" என்று உரைத்தார்கள். (4)

இதுபோல் மற்றொரு முறை மழை பெய்த சம்பவத்தில், மனிதகுலத்தின் மாணிக்கம் (ஸல்) அவர்கள், மற்ற மக்களைப் போல் மழை கண்டு மருளாமல், தமது தலை, தோள், மார்பு ஆகிவற்றைத் திறந்து விட்டவர்களாக, வெளியே சென்று சுவனத்திலிருந்து மண்ணகம் பெறும் அருட்கொடைகளைத் தமது உடம்பில் நேரடியாகப் பெற்று அம்மழைக்கான தம் பங்கை மிகவும் ரசித்து அனுபவித்தார்கள்! இவ்வாறு, ஏனைய மனிதர்களிடமிருந்து இது போன்ற விஷயங்களில் வித்தியாசப் பட்டவர்களாகவே விளங்கினர் வெற்றிகளின் நாயகர் வேந்தர் நபி (ஸல்) அவர்கள்.

அந்த வெற்றி வேந்தரின் வித்தியாசமான தோற்றம்தான் என்ன!

“அன்றொரு நாள், அது ஒரு பௌர்ணமி இரவு! எனக்கு முன்னால் மட்டும் இரண்டு நிலவுகள்! விழிகளை உயர்த்தி விண்ணில் தவழ்ந்து வரும் வானத்து நிலவைப் பார்க்கின்றேன். பேரொளி வீசும் நிலவொன்று என் முன்னால் நிற்பதையும் காண்கின்றேன். இன்னும் சற்று நெருங்கிப் பார்த்தால், நெஞ்சைச் சுண்டியிழுக்கும் ராஜ கம்பீர அழகு! அழகும் சௌந்தர்யமும் ஒன்றாய் வடிவெடுத்த ஒரு தோற்றம்! ஆற்றலும் வல்லமையும் சீராகக் கலந்த ஒரு வார்ப்பு! அவர் மனிதருள் ஒருவராய்ப் பிறந்தவர்தான்! எனினும், அவரது மாசு மறுவற்ற முகம் வெண்ணிலவைக் காட்டிலும் அதிகமாய் ஜொலித்து நின்றது! இறுதியாக, அந்தச் சிவப்பு ஆடைகளுக்குள் அழகுக்கு அழகாய் தோன்றி நின்ற இந்த மண்ணகத்தின் வண்ணஒளி அண்ணல் நபியே, அந்த விண்ணகத்து நிலவை விடவும் பேரழகு எனும் முடிவையே கடைசியில் நான் கண்டேன்!” என்றார், நபிமணி என்ற நந்தவனத்தில் பூத்த நற்குண மலர்களின் நறுமணத்தைச் சுவாசித்து மகிழும் பாக்கியம் பெற்ற நபித் தோழர்களுள் ஒருவரான ஜாபிர் இப்னு ஸும்ரா (ரலி).(5)

அதே ஆண்டு மீண்டும் மதீனாவைப் பஞ்சம் சூழ்ந்தது! அது ஒரு வெள்ளிக்கிழமை. கற்கண்டு மொழியில் சொற்கொண்டு வந்த காஸிமின் தந்தை (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் உரையாற்றிக் கொண்டிருந்த வேளை ஒரு கிராமவாசி எழுந்தார். 'யா ரசூலல்லாஹ்! பருவ மழை பொய்த்துவிட்டது! அள்ளித் தரும் அல்லாஹ்வைக் கொண்டு அவன் அருள் மழையைப் பொழியச் செய்யுமாறு வேண்டுங்கள்' என்றார்.

அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தார்கள். அதில் மழை மேகம் என்று ஏதும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மண்ணகத்திற்குப் புத்துயிர் கொடுக்கும் அருள்மழையைப் பொழிந்து தங்களைக் கருணைக் கண் கொண்டு நோக்குமாறு பணிவுடன் இறைவனைப் பிரார்த்தித்தார்கள்.

உடனே மழை மேகங்கள் ஒன்றோடொன்று திரண்டு சூழ்ந்தன! மழைக் காற்று மாருதமாய் மக்களிடம் குளிர்ந்து வீசி வந்தது. அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்வதற்குள் மழை பொழியத் துவங்கியது. இதையடுத்து மதீனாவின் நீர் வழிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன! மழை என்றால் மழை! வானமே பொத்துக் கொண்டது போல் இடைவிடாத மழை! அதுவும் இரவு பகலாக ஏழு நாட்கள் அடுத்த ஜும்ஆ தினம் வரை அம்மழை நீடித்தது. 

இந்த வார ஜும்ஆ உரையின்போது வேறொரு மனிதர் எழுந்து நின்றார். நாவலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் மக்களின் கவனத்தைக் குவித்துச் சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

அந்த மனிதரோ குறுக்கிட்டவராக, 'அல்லாஹ்வின் தூதரே! இடைவிடாத தொடர் மழையினால் நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். எங்களின் பொருட்கள் கெட்டுப்போகத் துவங்கிவிட்டன! எங்களின் வீடுகளோ இம்மழையைத் தாங்காமல் இடிந்து விழுந்து விடும் நிலையில் இருக்கின்றன! எனவே, எங்களைவிட்டும் மழையை நிறுத்துமாறு உங்களுடைய இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்றார்.

இதைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் அத்தனைப் பற்களும் தெரியும்படி அழகாகச் சிரித்தார்கள். பிறகு அறிவின் தென்றலாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! எங்களுக்காக மழையைப் பொழிந்தருள்! அது எங்களின் மீதல்ல! அது எங்களின் சுற்றுப்புறங்களில் உள்ள மலைகளின் மீதும் மானாவாரி நிலங்களின் மீதும் நிலத்தில் நிலைத்திருக்கும் மரங்கள் மீதும் இன்னும் நிறையக் காத்திருக்கும் நீர்நிலைகள் மீதும் மற்றும் நீர்நிலைகள் பாய்ந்தோடும் பள்ளத்தாக்குகள் மீதும் உன் அருள்மழையைப் பொழியச் செய்வாயாக! தயை கூர்ந்து எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே!' என்று மூன்று முறை பிரார்த்தித்தார்கள்.

அதன் விளைவாக, மழை நகருக்குள் பொழிவதை உடனே நிறுத்திக் கொண்டது! அந்தத் திரண்ட மேகங்கள் மதீனாவிலிருந்து விலகி, அதன் வலப் பக்கமாகவும் இடப்பக்கமாகவும் பிரிந்து சென்றன. மதீனாவைச் சுற்றி மழை பொழிகிறது. ஆனால் மதீனாவுக்குள் சிறிதும் பெய்யவில்லை. தான் தேர்ந்தெடுத்த தூதரின் உயர்ந்த மதிப்பையும் தன்னுடைய நேசத்திற்குரிய தூதரின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் இறைவன் மக்களுக்கு அன்று தெள்ளத் தெளிவாக நேரடியாகவே காட்டினான்! (6)

‘தங்களின் துஆ'வை அப்படியே, அந்தக் கணமே ஏற்றுக்கொண்டு பலனை நிறைவேற்றித்தந்த அல்லாஹ்வின் மகத்தான அருள் நிறைந்த செயல் இந்த புவனத்தின் பொன்மணியாம் நம் நபிமணியைப் புளகாங்கிதம் அடைய வைத்தது! எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் போற்றி "அல்ஹம்துலில்லாஹ்" என்றனர்.

சற்று நேரத்தில், தமக்கு மிக ஆதரவாய் இருந்த தம் பெரிய தந்தையை சட்டென்று நினைவு கூர்ந்தார்கள்:

'இன்று என் பெரிய தந்தை அபூதாலிப் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் இயற்றிய கவிதையை அவரே உணர்வு பூர்வமாகப் பாடி மகிழ்ந்திருப்பார்’ என்றார்கள்.' அப்போது, அங்கிருந்த அபீதாலிபின் வீரத்திருமகன் அலீய் அபுல்ஹஸன் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கவிதை அதே பாணியில் இப்போது பாடப்பட வேண்டுமா?" என்று கேட்டுவிட்டு, தன் தந்தையின் அதே தொனியில் அதே இனிமையுடன் பாடத் தொடங்கினார்:

"அழகே அழகான வெண்மை நிறம் ஒளிர்பவர் எவரோ, 
அவரால் வான்மழைக்கே பெரும் கோரிக்கை எழுப்பப்படும்!
அதுமட்டுமின்றி,
அனாதைப் பிஞ்சுகளின் ஆதரவகம் அவர்தான்! அந்த 
ஆதரவற்ற விதவைகளின் காவலனும் அவரேதான்!" (7)

இதுபோன்று காத்தமுன் நபியவர்கள் கவிதையை ரசித்ததாக இன்னொரு நிகழ்ச்சியும் கூறப்படுகின்றது:

நான், அகிலத்தின் இருளை அகற்றிட வந்த அண்ணல் நபி (ஸல்) யின் அவையில் நூற்றுக்கு மேற்பட்ட தடவை அமர்ந்திருக்கின்றேன். அப்போது அவர்களின் தோழர்கள் சில நேரம் கவிதை பாடுவார்கள். அறியாமைக் காலத்தில் நிகழ்ந்த சில சம்பவங்கள் குறித்தும் நினவூட்டுவார்கள். ஈமான் கற்பித்த இனிய நபியவர்கள் அதை அமைதியுடன் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். சில சமயம் தம் தோழர்களுடன் சேர்ந்து சிரிக்கவும் செய்தார்கள். (8)

இவ்வாறு, மாண்பு நிறைந்த மங்காத அறிவுச் சுடரான அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அர்ரஹ்மானிடம் வேண்டிப்பெற்ற அருள் மழைத் தூறல்கள் இந்த அவனிக்கு வந்து மண்ணுறையும் பல்லுயிர்களும் புத்துணர்வுடன் நலம் பெற்று வாழப் பயன்பட்டன! இன்னும் அந்த அருள் மழைத் துளிகளில் எஞ்சிய நினைவலைகள் அதோ அந்த பசும்புல் வனங்களிலும் பாலை மணல் வெளிகளிலும் மலைச் சிகரங்களிலும் இதமாய் வீசும் தென்றலிலும் சலசலத்து ஓடும் நீரலைகளிலும் நீக்கமறவே நிறைந்திருக்கின்றன! அல்லாஹ்வின் அருளை அழகாய் அடைந்திருக்கின்றன!

o o o 0 o o o
ஆதாரங்கள் :
(1) அல்குர்ஆன் 32:27
(2) புஹாரி 79: அபூ மூஸா (ரலி)
(3) அல்குர்ஆன்: 24:43
(4) அபூதாவூத் 992: அன்னை ஆயிஷா (ரலி)
(5) திர்மிதீ 2811: ஜாபிர் இப்னு ஸும்ரா (ரலி)
(6) புஹாரி 6093: அனஸ் பின் மாலிக் (ரலி)
(7) புஹாரி 1009: இப்னு உமர் (ரலி)
(8) திர்மிதீ 3087: ஜாபிர் பின் சமுரா (ரலி)
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இக்பால் M. ஸாலிஹ்

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 6 11

அதிரைநிருபர் பதிப்பகம் | December 08, 2015 | , , ,


கடந்த வாரப் பதிவை...!

“மனிதநேயத்தின் அடிப்படையிலான அழைப்புப் பணி பற்றிய பல வரலாறுகள், சிந்தனைகள் ஏராளம்  உள்ளன. “ என்று சொல்லி நிறைவு செய்து இருந்தோம். 

இந்த மனித நேய சிந்தனைகளுக்கு இரை போடுவது போல் இயற்கையின் விளையாட்டு, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் புரட்டிப் போட்டு விட்டன என்பவை நாம் அறிந்தவையே. இந்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் அடைந்த துயரங்கள் எழுத்தால் வடிக்க இயலாதவை. அதே போல் மக்களின் இந்தத் துயரக் கண்ணீரைத் துடைக்க பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தொண்டர்கள் முன்வந்து தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் துயருற்ற மக்களுக்கு உதவினார்கள். 

இந்தத் துயர் துடைக்கும் பணியில் இஸ்லாமிய இயக்கங்களின் இறையச்சத்தோடு கூடிய ஈடுபாடும் பாராட்டுதலுக்குரியது. முதலாவது மழையால் வீடிழந்து இருக்க இடமில்லாமல் தவித்த மக்களுக்கு இன மத பேதமின்றி அழைப்புவிடப்பட்டு தலைநகரின் அனைத்துப் பள்ளிவாசல்களின் கதவுகளும் திறக்கப்பட்டன. அவ்வாறு வந்து தங்கிய மக்களுக்கு உணவும் தயாரித்து வழங்கப்பட்டது. கோயில்களில் தங்கியவர்களுக்கூட சைவ உணவு தயாரித்து வழங்கப்பட்ட செய்தி, மற்றவர்களை மதிக்கும் இஸ்லாத்தின் மாண்பின் உச்சத்தைப் பறைசாற்றியது. 

இதில் பாராட்டப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் தொட்டதற்கெல்லாம் நீயா? நானா ? என்று கச்சை கட்டும் பல்வேறு இயக்கங்களின் தொண்டர்கள் இந்த துயர் துடைக்கும் பணியில் இணைந்தகரங்களுடன் பணியாற்றினார்கள் என்பதுதான். முஸ்லிம் தாய்மார்கள் தங்களால் இயன்றவரை தங்களின் இல்லங்களில் உணவு தயாரித்து அல்லலுறும் அண்டை அயலாருக்கு அளித்தார்கள் என்கிற செய்திகளும் படங்களும் சமூக வளத் தளங்களிலும் பகிரப்பட்டன. இப்படிப்பட்ட மனித நேயம் மிக்க செயல்கள்தான் அழைப்புப் பணியின் ஆணிவேர் என்பதை நாம் பலமுறை குறிப்பிட்டு வற்புறுத்தி வருகிறோம். 

முஸ்லிம்கள் செய்துவரும் மட்டற்ற மனித நேய சேவைகளை தமிழக முதல்வர் மனம் திறந்து பாராட்டி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் எண்ணற்ற பிற மத சகோதர சகோதரிகள் முஸ்லிம்களின் தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டி சமூக வலைதலங்களில் பாராட்டியும் நன்றி தெரிவித்தும் பதிவுமழைகளை பொழிந்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நெருக்கடியான நேரங்களில் மனங்களை வெல்லும் வகையில் இரவு பகலாக இணைந்து பணியாற்றுவதுதான் இறைவனுக்குப் பிடித்தமான அழைப்புப் பணியின் அரிச்சுவடியாகும். இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அனைவருக்கும் இறைவன் தனது அருள்மழையைப் பொழிவானாக! 

அவரவருக்கு இயன்ற அளவு தங்களது சொந்தப் பணத்தைத் திரட்டி பலருக்கு சாதி மத பேதமின்றி சோறு போட்டு இருக்கிறார்கள். ஒரு பெயர் சொல்ல விரும்பாத பெரியமேட்டைச் சேர்ந்த முஸ்லிம் செல்வந்தர், நூறு மூட்டை அரிசியைக் கொடுத்து இந்த மக்களுக்கு இன பேதம் இல்லாமல் உணவுதயாரித்துக் கொடுக்க ஆகும் செலவையும் கொடுத்து இருக்கிறார். அரசும் இராணுவமும் தரவேண்டிய படகுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் பசியோடு இருப்பவர்களுக்கு உணவளிக்க தங்களது கரங்களாலேயே மூங்கில் கம்புகளால் மிதவைகளைத் தயாரித்து அதில் உணவுப் பொட்டலங்களை ஏற்றி இடுப்பளவு நீரில் நின்று விநியோகம் செய்த சகோதரர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்

முஸ்லிம்களை நோக்கி, மாட்டுக்கறி சாப்பிடுபவன் என்றும் பாகிஸ்தானுக்குப் போய்விடுங்கள் என்றும்  பலவாறு பழிதூற்றியவர்களுக்கும் முஸ்லிம்களைப் பார்த்து உயிர்களைக் கொல்லும் தீவிரவாதிகள் என்று பழிச்சொல்லையும் இழிச்சொல்லையும் பங்கீடு செய்து கொண்டிருந்தவர்களுக்கும் வாடகைக்குக் கூட முஸ்லிம்களுக்கு வீடுதரத் தயங்கியவர்களுக்கும் தங்களது சேவைகளால் அமைதியாக பதில் அளித்து இருக்கிறார்கள் தமிழக முஸ்லிம்கள்.

முஸ்லிம்கள் விதைத்த இத்தகையத் தொண்டுகள், சமூக வலைத்தளங்களில் இதயபூர்வ அன்பின் அறுவடைகளை அள்ளித் தந்து இருக்கிறது . இந்தப் பதிவுகள் உணர்வுகளின் ஓடை!. அவைகளில் சிலவற்றை எடுத்துப் பதிவதில் அளவற்ற ஆனந்தமும் பெருமிதமும் அடைகிறேன். 

இதோ இந்த சகோதரர் இப்படி எழுதுகிறார். அவர் பெயர் அய்யா சாமி. 

Ayya Samy 

“இதுவரை எதிரிகளாகப் பார்த்த இஸ்லாமியர்களை என் குடும்பத்தில் ஒருவராகப் பார்க்க வைத்தது சென்னையில் அவர்கள் ஆற்றிய தொண்டு. 

எங்கு திரும்பினாலும் இஸ்லாமியத் தொண்டர்கள், 

ச்சீ! இவர்களையா இத்தனை நாள் நான் திட்டித்தீர்த்தேன்? நினைத்தாலே அறுவறுப்பாக இருக்கிறது. 

தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த தவ்ஹீத் பனியன் போட்டிருந்த ஒரு இருபது வயது மதிக்கத்தக்க சிறுவனை அழைத்துக் கேட்டேன். 

இதற்கெல்லாம் உங்கள் அமைப்பு பணம் தருகிறதா? 

என்னை அடிக்காத குறையாக அவர் முறைத்துப் பார்த்துவிட்டு அல்லாஹ்வுக்காக செய்கிறோம். எங்கள் சம்பளப் பணத்தைக் கூட இந்த நிவாரணத்துக்காக  கொடுத்துவிட்டோம் என்றார். 

அவருக்கு அருகில் இணைந்து இருந்த ம ம க தொண்டரிடமும் இதே கேள்வி கேட்டேன். போய் வேலையைப் பாருய்யா! தேவையில்லாத கேள்வி கேட்காதே என்று சினந்தார். “ 

அரக்கோணம் சாமியப்பன் என்பவர் இப்படி எழுதி இருந்தார். 

“இந்த முஸ்லிம்கள் செய்கின்ற பணிகளுக்கிடையே அவர்களிடம் இன்னும் கொஞ்சம் பேசிக் கொண்டு இருந்தால் நானும் ஒரு பனியனை மாட்டிக் கொண்டு அவர்களுடன் பணியாற்றுவதுடன் அவர்களின் செயலால் முகமதிய மதத்துக்கே மாறி இருப்பேன் போல. 

உங்கள் எல்லோருக்கும் ஒரு மிலிடரி சல்யூட் முஸ்லிம் பாய்ஸ்.” 

Renold Robinson Roy

“ஐயா முஸ்லிம் தம்பிகளா!  எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாட்களாய்... உங்களையும் உங்கள் அன்பு நெஞ்சங்களையும் இந்த உலகிற்கு காட்டுவதற்காகவே இந்த வெள்ளம் சென்னை இல் வந்தது போல... 

நன்றிகள் கோடி !! “

Prakash Muthusamy 

சென்னையில் காணும் இடங்களிலெல்லாம் இஸ்லாமியத் தோழர்கள் . மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். இவர்களையா இந்த பத்திரிகைகள், மீடியாக்கள் தீவிரவாதிகள் என்று எங்களை நம்ப வைத்தது? வருந்துகிறேன். எந்த ஜாதி எந்த மதம் என்று கூட பார்க்காமல் இறந்தவர்களின் பிணத்தைக் கூட எடுத்து வருகிறார்கள். ராணுவம் நுழையத் தயங்கிய இடங்களில் எல்லாம் அனைத்து இஸ்லாமிய இயக்கத் தோழர்கள் களப்பணி செய்தது உண்மையில் என்னை ஆச்சரியப்படவைத்தது. நிச்சயம் இவர்களுக்குப் பின்னால் ஒரு ரோல்மாடல் இருக்க வேண்டும் . அது அவர்கள் உயிரினும் மேலாக நினைக்கக் கூடிய நபிகள் நாயகமாகத்தான் இருக்க வேண்டும். சல்யூட் என் இஸ்லாமியத் தோழர்களுக்கு. “ 

Radha Radha 

“ இவர்கள்தான் தீவிரவாதிகள்.

தன் சொந்த நாட்டு மக்களுக்கு கஷ்டம் என்ற உடன் தனது உடலை, தனது பொருளை ஓடி வந்து தியாகம் செய்கிறார்களே இவர்கள்தான் தீவிரவாதிகள். 

வாருங்கள்! எங்களிடம் தீட்டு இல்லை! ஜாதி இல்லை! மதவெறி இல்லை !. உங்களுக்காக எங்களுடைய மசூதிகள் உணவுடனும் உடையுடனும் காத்திருக்கிறது வாருங்கள் என்றார்கள் இவர்கள்தான் தீவிரவாதிகள் .

...................................................................................................................................................................

ஒரு இந்துவாக நான் இன்று இஸ்லாமிய சகோதரர்கள் முன் தலைகுனிகிறேன். 

.....................................! இனியும் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்காதீர்கள். அன்பின் இஸ்லாமிய சொந்தங்களே! உங்கள் பணிகளைக் கண்டு நான் கண்ணீர் வடிக்கிறேன். அல்லாஹ் நாடினால் நான் இஸ்லாத்தை ஏற்கவும் தயங்க மாட்டேன். “

இன்னும் ஏராளம் ஆனால் இடம் போதாது. சிலவற்றை மட்டும் இந்த பேசுபொருளுடன் தொடர்புடையது என்பதால் இங்கு  அடையாளப்படுத்தி இருக்கிறேன். 

நமது நாடு ஒரு மத சார்பற்ற நாடு. இங்கு பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மதச் சடங்குகள், பல்வேறு வழிபாட்டு முறைகள் , பல்வேறு வாழ்க்கை நடைமுறைகள் வழக்கத்தில் இருக்கின்றன. பல நேரங்களில் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய இறை வழிபாட்டு முறைகளை நிறைவேற்றும்போது மற்ற மதத்தவர்கள் அதை சகித்துக் கொள்ளாமல் எதிர்ப்பதும் இங்கு அடிக்கடி பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது. 

இதற்குக் காரணம் , மனித நேயப் பண்பாடுகளின் குறைபாடே. இந்தியாவின் ஆன்மீக சாரம், பல தலைமைதாங்கும் பெரியோரின் சகிப்புத் தன்மையில்தான் ஊடுருவி இருக்கிறது. இதற்கு எடுத்துக் காட்டாக ஒரு சம்பவத்தை இங்கு சுட்டினால் பொருத்தமாக இருக்கும். 

இந்த நிகழ்ச்சியை மறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர், அபுல் கலாம் தனது Limited Minds என்ற நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். அதை தமிழில் திரு. மு. சிவலிங்கம் அவர்கள் மொழியாக்கம் செய்து இருக்கிறார். இதோ சகிப்புத் தன்மைக்கு சான்றான அந்த அருமையான சம்பவம் அபுல் கலாம் அவர்களின் வார்த்தைகளிலேயே. 

“ காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு வெகு அருகில் 300 வருட பாரம்பரியம் கொண்ட மசூதி உள்ளது. இந்த மசூதி தொடர்பான ஒரு சம்பவத்தை முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் என்னிடம் சொல்லி இருந்தார். . 

இந்த மசூதியின் ஜமாஅத் அமைப்பினரும் மாவட்ட அதிகாரிகளும் மசூதியை வேறு ஒரு பொருத்தமான இடத்துக்கு மாற்றியமைப்பது என முடிவெடுத்தார்கள். இப்போதைய இடம் மடத்துக்கும் மசூதிக்கும் அசவுகரியமாக இருப்பதால் இந்த முடிவுக்கு வந்திருந்தார்கள். 

வரலாற்றுப் புகழ்பெற்றுள்ள மசூதிக்கு ஏராளமானோர் வந்து கொண்டிருப்பதாலும் அது போலவே மடத்திலும் பெருந்திரளானோர் கூடுவதாலும் போக்குவரத்தைப் பராமரிப்பது சிரமமான வேலையாகிவிட்டது.

எனவே புதிய இடத்தில், மசூதியை மறுபடியும் நிர்மாணித்துக் கொடுப்பது மடத்தின் பொறுப்பு எனவும் முடிவு செய்து இருந்தார்கள். எப்படியோ இந்த விஷயம் பரமாச்சாரிய சுவாமிகளுக்கு எட்டியது. இந்த யோசனையை சுவாமிகள் மிகக்கடுமையாக எதிர்த்தார்கள். 

காலை நாலரை மணி ஆனதும் மசூதியிலிருந்து வரும் தொழுகைக்கான அழைப்புதான் தமது தெய்வீகக் கடமைகளுக்காகத தம்மை துயிலெழச் செய்யும் ஒலியாக அமைந்திருக்கிறது என்று சுவாமிகள் சொன்னார்கள். வேறு பல காரணங்களுக்காகவும் இந்த மசூதியை வேறொரு இடத்தில் நிர்மாணம் செய்வதை சுவாமிகள் எதிர்த்தார்கள். 

மாவட்ட அதிகாரிகளிடமும் மடத்து நிர்வாகிகளிடமும் தமது கருத்தைத திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டு பரமாச்சாரிய சுவாமிகள் மவுனத்தில் ஆழ்ந்தார்கள். கடைசியில் மசூதியை இடம் மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது. 

சுவாமிகளை சந்திப்பதற்காக நான் காஞ்சிபுரம் சென்றிருந்தபோது அந்தப் பழமையான மசூதியில் தொழுகை நடத்தினேன். சுமார் ஐம்பது மாணவர்கள் புனித குர் ஆனைக் கற்றுக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் அமர்ந்து குர் ஆனில் இடம்பெற்றுள்ள சூராவான அல்ஹம்தை ஓதச்சொன்னேன். 

காஞ்சிபுரத்தில் , வேத பாராணயமும் குர் ஆன் ஓதுவதும் அருகருகே தொடர்ந்து கொண்டிருக்கும் காட்சியைக் காணும் பேறு பெற்றேன். இதில்தான் இந்திய சாரத்தின் மகிமை அடங்கியுள்ளது “ 

என்று அபுல்கலாம் குறிப்பிடுகிறார். இந்தக் குறிப்பு நமது சிந்தனைக்கு இரை போடும் ஒரு சிறு செய்தியாக இருக்கலாம். ஆனால் இந்த நாட்டில் நிலவ வேண்டிய சகிப்புத் தன்மைக்கும் ஒத்துப் போகும் தன்மைக்கும் இணைந்து வாழும் தன்மைக்கும் எடுத்துக் காட்டாகவும் சான்றாகவும் திகழ்கிறது. 

முஸ்லிம்களின் மீது அநியாயமாக பழி சுமத்தும் பலருக்கு நாம் தியாகங்களிலும் நேசங்களிலும் தேவையான நேரத்துக்கு கை கொடுத்து காப்பாற்றும் தன்மையிலும் யாருக்கும் சளைத்தவர்களல்ல என்பதை நிருபித்து இதயங்களை வெல்லும் நிலைமையில் இருக்கிறோம். 

மனித நேயம், ஒற்றுமை, உதவும் மனப்பான்மை , இன்றைக்கு இஸ்லாத்துக்கு வானளாவிய புகழ்மொழிகளை வரவழைத்துத்தந்து இருக்கிறது. இஸ்லாத்தை நோக்கிப் பல இதயங்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. 

இத்தகைய மனித நேயப்பணிகளும் புரிந்துணர்வும்தான்  அழைப்புப் பணிக்கு நாம் அமைக்கும் வரவேற்பு வளைவுகள். 

இன்ஷா அல்லாஹ் தொடரும். 

இபுராஹீம் அன்சாரி

மாமழை... மாநகர்! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | December 02, 2015 | , , , ,

தத்தளிக்கிறது என்
தலைநகர்
தவிதவிக்கிறது என்
தமிழினம்

குடியிருப்புகளுக்குள் புகுந்தும்
குடிசைகளை விழுங்கியும்
குடிகெடுக்கிறது கனமழை,
குடிக்க மட்டும்
குவளை நீர்கூட
குடத்தில் இல்லை

தார்ச்சாலையெல்லாம்
நீர்ச்சாலையாகிவிட
மிதக்கிறது மாநகர்

வருடம் முழுதும்
வறண்டுகிடந்த
வாய்க்கால்களும் கால்வாய்களும்
குளங்களும் குட்டைகளும்
ஏரிகளும் ஆறுகளும்
தாகம் தீரக்
குடித்து முடித்து
கொப்பளித்த தண்ணீரில்
குலைகிறது தலைநகர்

நகரை
நீர் வார்த்து மூழ்கடித்தபின்
நிவாரணம் எனும் பெயரில்
நிர்வாணப் படுத்தும்
நிர்வாகம்

வடிகால்களைச் சீரமைத்து
நீர்நிலைகளைத் தூர்வாரி
தமிழகத்தைத் தயார்படுத்தத்
தவறிய அரசாங்கம்
சோற்றுப்பொட்டங்களைக் கொண்டு
ஓட்டுவங்கியைத் தக்க வைக்கும்

தண்ணீர்ப் பற்றாக்குறையில்
தகித்திருந்த தமிழகம்
உபரிநீரை வெளியேற்றும்
உதவாக்கரை நிர்வாகம்
உச்சகட்டச் சீர்கேடு

போக்குவரத்துத் துண்டிக்கப்பட
போசனத்துக்கு வழியில்லையே
வான் வழி மீட்புக்குழு
ஏன் வரவில்லை

பேரிடர் மேலாண்மைப் படை
தயார் நிலையில் உள்ளனவாம்
பிணங்களைப் பொருக்கவா

தலைவர்கள்
'வலியுறுத்திக் கொள்வதில்'
சோலியாயிருக்க
தொண்டர்கள் மீள
வழி மூடிக்கிடக்க
விழி நீரும் சேர்ந்தே
வெள்ளமாய் ஓடுகிறது

நீர்மேலாண்மை
மழைநீர் சேகரிப்பு
எல்லாம்
ஏட்டுச்சுரைக்காயாக
ஏமாற்ற...

தமிழகம் எப்போதும்
தள்ளாடியே சீவிக்கிறது
'தண்ணி'யில் அல்லது
தண்ணீரில்!

அல்லாஹ் காப்பாற்று!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

நபிமணியும் நகைச்சுவையும்...! :::: மழை :::: 2

அதிரைநிருபர் பதிப்பகம் | November 05, 2015 | , ,

மழை!

சுவனத்திலிருந்து இறங்கும் ஷவர்!

கீழ்வானில் அதோ வெள்ளிக் கீற்றாக கண்ணைப் பறிக்கும் ஒரு மின்னல்!

அத்துடன் நீர்த்துளிகளைச் சுமக்கும் கருமேகங்கள் மெல்ல உரசுவதிலும் அதன் செல்ல உறுமல்களிலும் உதயமாகிப் பொழிவது மழை!

சரம்சரமாய்ப் பெய்தாலும் சொட்டச்சொட்டப் பெய்தாலும் அப்போதும் அதன் பெயர் மழைதான்!

அதற்கு அடை மழை. அந்தி மழை. அப்பு மழை. ஆலங்கட்டி மழை. கன மழை. காத்து மழை, குமுறும் மழை. கோடை மழை. திடீர் மழை. தொடர் மழை. தூறல் மழை. தூவும் மழை. சாரல் மழை. சுழி மழை. பனி மழை. பருவ மழை. பெய் மழை. பொடி மழை. வெக்கை மழை. வெள்ள மழை என்று என்ன பெயர் வைத்தாலும் மழை ஓர் அழகுதான்! பகலில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து அலுக்காமல் மனம் குளிர மழையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

ஆனால், "இரவின் இருளில் மழை பெய்வதில்லை. அதன் பேச்சுச் சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும்" என்றான் தற்காலக் கவிஞன் ஒருவன்! அதுவும் சரிதான். இங்கேநம்மூரில் மின்னல் வெட்டினால், மின்சாரம் போய்விடுமல்லவா!

எல்லாம் வல்லவன் அல்லாஹ் (ஜல்) சொல்கிறான்:

வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம் என்பதை அவர்கள் காணவில்லையா? அதன்மூலம் பயிர்களை வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து அவர்களும் அவர்களது கால்நடைகளும் உண்ணுகின்றனர். இதை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க மாட்டார்களா? (1)

அன்பின் வடிவாய் ஆகி நின்ற அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருள்மழை குறித்து அருளினார்கள்:

அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; தம் கால்நடைகளுக்கும் புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது ஒன்றுக்கும் உதவாத வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்(2)

கடும் வெப்பத்தின்போது ஆறுஏறி, கடல், குளம் ஆகிய நீர்நிலைகளிலிருந்து உறிஞ்சப்படும் நீர், நீராவியாக மாறி காற்றுடன் கலந்து ஆகாயம் சென்று பிறகு மழை மேகங்களாய் உருவாகின்றன! அது பின்னர், அல்லாஹ் (ஜல்) எங்கெங்கே எந்தந்த அளவில் பொழியப்பட வேண்டுமென நாடுகின்றானோ, அங்கெல்லாம் மழை அருளப்படுகின்றது. மீண்டும் நிகழும் அதே நீர்சுழற்சி! அது ஏகன் இறைவனின் ஏற்பாடு!

நீர் பார்க்கவில்லையாநிச்சயமாக அல்லாஹ் தான் மேகங்களை மெதுவாக இழுத்து, பின்னர் அவைகளை ஒன்றாகச் சேர்த்து அதன்பின்ஒன்றின் மேல் ஒன்றாக இணையச் செய்கின்றான். அவற்றின் மத்தியிலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கின்றீர் (3)


மழை பொழிவதால் வறண்டுபோன நிலம், உயிர்பெறுகின்றது. 'நீரின்றி அமையாது உலகு' என்பதுபோல் நீர் சிலமாதம் இல்லையென்றாலும் இடர் தரும் ஏராளமான இன்னல்களும் உணவுப் பற்றாக்குறைகளும் உண்டாகி மனிதன் உட்பட உயிரினங்கள் அனைத்தும் பல கஷ்டங்களுக்கு உள்ளாகின்றன!

பாலைவனப் பிரதேசங்களில் மழையின்றிப் போய்விட்டால், அதன் சிரமம் எத்தகையது என்பதைச்சொல்ல வேண்டியதேயில்லை! அந்த ஆண்டு கொடுமையான பஞ்சம் மதீனாவைச் சூழ்ந்து கொண்டது. வானம் பொய்த்துப் போனது!

மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "யா ரசூலல்லாஹ், மழை பெய்யாமற் போனதால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது" என்று முறையிட்டனர். அப்போது பொற்குணம் வாய்ந்த பூமான் நபியவர்கள், மக்களை ஊருக்கு வெளியே தொழும் திடலுக்கு புறப்பட்டு வருமாறு அறிவுறுத்தினார்கள். அத்தொழுமிடத்தில் சொற்பொழிவு மேடை ஒன்றை தயார் செய்யுமாறும் உத்தரவிட்டார்கள். ஆகவே, தொழுமிடத்தில் சொற்பொழிவு மேடை ஒன்று தயார் செய்யப்பட்டு அவர்களுக்குப் போடப்பட்டது.

செங்கதிரோன் பொற்கதிரை அதன் விளிம்பில் சிந்தவந்த அன்று காலை, செம்மல் நபி நாயகம்(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். பின்னர்,சொற்பொழிவு மேடை மீது ஏறி நின்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து பெருமிதப்படுத்திவிட்டு,

"மக்களே,நீங்கள் உங்கள் நகரங்களில் மழைக்காலம் தொடங்குவது தாமதமாகவும் அதனால் வறட்சி நிலவுவதாகவும் முறையிட்டீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (ஜல்) இதுபோன்ற சூழ்நிலைகளில் அவனிடமே பிரார்த்தித்துக் கேட்க வேண்டும் என்று உங்களுக்குக் கட்டளை இட்டுள்ளான். மேலும், நீங்கள் இவ்வாறு அழைத்துப் பிரார்த்தித்தால் உங்களுக்கு மறுமொழி அளிப்பான் என்றும் உங்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளான்" என்று கூறினார்கள். பின்னர் அவர்கள்,

"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர்ரஹீம். மலிக்கியவ்மித்தீன். லாஇலாஹ இல்லல்லாஹு, யஃபஅலு மாயுரீது, அல்லாஹும்ம அன்த்தல்லாஹு லாஇலாஹ இல்லா அன்த்தல் ஃகனிய்யு, வ நஹ்னுல் ஃபுகராஹு அன்ஸில் அலைனல் ஃகைஸ், வஜ்அல் மாஅன்ஸல்த்த லனா குவ்வத்தன் வ பலாஃகன் இலாஹீன்"

என்று கூறி தனது கைகளை அவர்களின் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவு உயர்த்திய வண்ணமாகவே தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டு இருந்தார்கள்.

(தமிழில்: அகில உலகங்களின் இரட்சகனும் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் கூலி கொடுக்கப்படும் மறுமை நாளின் அதிபதியும் ஆகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்லாஹ்வைத் தவிர வழிபடத் தகுதியானவன் வேறு எவனுமில்லை. அவனே, நினைத்ததைச் செய்து முடிப்பவன். யா அல்லாஹ்! நீயே எங்களின் இறைவன் ஆவாய். எந்தத் தேவையும் அற்றவனாகிய உன்னைத் தவிர வழிபடத் தகுதியானவன் வேறு எவனுமில்லை. நாங்கள் எல்லோரும் உன்னிடமே தேவை உடையவர்கள்.  ஆகவே, நீ எங்களுக்கு மழையைப் பொழியச் செய்வாயாக. எங்களுக்குப் பொழிந்ததைப் பயனுள்ளதாகவும் சேமிப்பாகவும் எங்களின் தேவைகள் நிறைவடையும் ஒரு தவணைவரை ஆக்குவாயாக!)

பின்னர், தம் முதுகை மக்கள் பக்கம் திருப்பி, தமது கைகளை உயர்த்தியவாறு, தாம் அணிந்திருந்த போர்வையை கீழும் மேலுமாக மாற்றிப் போட்டுக்  கொண்டார்கள். பின்னர், மக்களை நோக்கியவாறு சொற்பொழிவு மேடையிலிருந்து இறங்கினார்கள். உடன், இரண்டு ரக்அத் 'மழைத்தொழுகை'  தொழுவித்தார்கள்.

அப்போது வல்லமையும் உயர்வும் மிக்க அல்லாஹ் (ஜல்) மேகத்தைத் திரளச் செய்தான். மின்னல்வெட்டியது. தொடர்ந்து பெரும் இடி முழங்கியது.  அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மழைக் கொட்டத் துவங்கியது. உலகம் செழிக்க வந்த உண்மைத் தூதர் (ஸல்) அவர்கள்இன்னும் திடலில் மழைத் தொழுகையை முடித்துக் கொண்டு மஸ்ஜித் நபவீக்கு வரவில்லை. அதற்குள், வீதியின் இரு மருங்கிலும் மழை ஆறாய் ஓடத்துவங்கியது!

மக்கள் தங்களின் இல்லங்களை நோக்கி ஓடுவதையும் மழையில் நனைய பயந்து ஓரமாய் ஒதுங்குவதையும் கண்ட மாண்பு நபியவர்கள் மடை திறந்த வெள்ளம் போல் மகிழ்ந்து சிரித்தார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்:

"அல்லாஹ் (ஜல்) அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவனாக இருக்கின்றான். நான் அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனுடைய தூதராகவும் இருக்கின்றேன் என்று நான் சாட்சியம் அளிக்கின்றேன்" என்று உரைத்தார்கள். (4)

இதுபோல் மற்றொருமுறை மழைபெய்த சம்பவத்தில், அண்ணலார் அவர்கள், மற்ற மக்களைப் போல் மழைகண்டு மருளாமல், தமது தலை, தோள், மார்பு ஆகிவற்றைத் திறந்து விட்டவர்களாக, வெளியே சென்று சுவனத்திலிருந்து மண்ணகம் பெறும் அருட்கொடைகளைத் தமது உடம்பில் நேரடியாகப் பெற்று அம்மழைக்கான தம் பங்கை மிகவும் ரசித்து அனுபவித்தார்கள்! இவ்வாறு, ஏனைய மனிதர்களிடமிருந்து இது போன்ற விஷயங்களில் வித்தியாசப் பட்டவர்களாகவே விளங்கினர் வெற்றிகளின் நாயகர் வேந்தர் நபி (ஸல்) அவர்கள்.

அந்த வெற்றிவேந்தரின் வித்தியாசமான தோற்றம்தான் என்ன!

அன்றொரு நாள், அது ஒரு பௌர்ணமி இரவு! எனக்கு முன்னால் மட்டும் இரண்டு நிலவுகள்! விழிகளை உயர்த்தி விண்ணில் தவழ்ந்து வரும் வானத்து நிலவைப் பார்க்கிறேன். பேரொளி வீசும் நிலவொன்று என் முன்னால் நிற்பதையும் காண்கின்றேன். இன்னும் சற்று நெருங்கிப் பார்த்தால், நெஞ்சை சுண்டியிழுக்கும் ராஜகம்பீர அழகு! அழகும் சௌந்தர்யமும் ஒன்றாய் வடிவெடுத்த ஒரு தோற்றம்! ஆற்றலும் வல்லமையும் சீராகக் கலந்த ஒரு வார்ப்பு! அவர் மனிதருள் ஒருவராய்ப் பிறந்தவர்தான்! எனினும், அவரது மாசு மறுவற்ற முகம் வெண்ணிலவைக் காட்டிலும் அதிகமாய் ஜொலித்து நின்றது! இறுதியாக, அந்த சிவப்பு ஆடைகளுக்குள் அழகுக்கு அழகாய் அமைந்துள்ள இந்த மண்ணகத்து நிலவே, அந்த விண்ணகத்து நிலவை விடவும் பேரழகு எனும் முடிவையே கடைசியில் நான் கண்டேன்! (5)

அதே ஆண்டு மீண்டும் மதீனாவைப் பஞ்சம் சூழ்ந்தது! அது ஒரு வெள்ளிக்கிழமை. கற்கண்டு மொழியில் சொற்கொண்டு வந்த காஸிமின் தந்தை (ஸல்) அவர்கள் ஜும்ஆ வின் உரையாற்றிக் கொண்டிருந்தவேளை ஒரு கிராமவாசி எழுந்தார். 'யா ரசூலல்லாஹ்! பருவ மழை பொய்த்து விட்டது! அள்ளித் தரும் அல்லாஹ்வைக் கொண்டு அவன் அருள் மழையைப் பொழியச் செய்யுமாறு வேண்டுங்கள்' என்றார்.

அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வானத்தை அண்ணார்ந்து பார்த்தார்கள். அதில் மழைமேகம் என்று ஏதும் இல்லாமல் வெறிச் சோடிக்கிடந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் மண்ணகத்திற்கு புத்துயிர்  கொடுக்கும் அருள்மழையைப் பொழிந்து தங்களைக் கருணைக்கண் கொண்டு நோக்குமாறு பணிவுடன் இறைவனைப் பிரார்த்தித்தார்கள்.

உடனே மழை மேகங்கள் ஒன்றோடொன்று திரண்டு சூழ்ந்தன! மழைக் காற்று மாருதமாய் மக்களிடம் குளிர்ந்து வீசி வந்தது. அவர்கள் அந்த இடத்தை விட்டும் நகர்வதற்குள் மழை பொழியத் துவங்கியது. இதையடுத்து மதீனாவின் நீர்வழிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன! மழை என்றால் மழை! வானமே பொத்துக் கொண்டது போல் இடைவிடாத மழை! அதுவும் இரவு பகலாக ஏழு நாட்கள் அடுத்த ஜும்ஆ தினம் வரை அம்மழை நீடித்தது. 

இந்த வார ஜும்ஆ உரையின்போது வேறொரு மனிதர் எழுந்து நின்றார். நாவலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் மக்களின் கவனத்தைக் குவித்துச் சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

அந்த மனிதரோ குறுக்கிட்டவராக, 'அல்லாஹ்வின் தூதரே! இடைவிடாத  தொடர் மழையினால் நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். எங்களின் பொருட்கள் கெட்டுப்போகத் துவங்கிவிட்டன! எங்கள் வீடுகளோ இம்மழையைத் தாங்காமல் இடிந்து விழுந்து விடும் நிலையில் இருக்கின்றன! எனவே, எங்களைவிட்டும் மழையை நிறுத்துமாறு உங்களுடைய இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்றார்.

இதைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் அத்தனைப் பற்களும் தெரியும்படி அழகாகச் சிரித்தார்கள். பிறகு அறிவின் தென்றலாம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! எங்களுக்காக மழையைப் பொழிந்தருள்! அது எங்களின் மீதல்ல! அது எங்களின் சுற்றுப்புறங்களில் உள்ள மலைகளின் மீதும் மானாவாரி நிலங்களின் மீதும் நிலத்தில் நிலைத்திருக்கும் மரங்கள் மீதும் இன்னும் நிரையக் காத்திருக்கும் நீர்நிலைகள் மீதும் மற்றும் நீர்நிலைகள் பாய்ந்தோடும் பள்ளத்தாக்குகள் மீதும் உன் அருள்மழையைப் பொழியச் செய்வாயாக! தயை கூர்ந்து எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே!' என்று  மூன்று முறைப் பிரார்த்தித்தார்கள்.

அதன் விளைவாக, மழை நகருக்குள் பொழிவதை உடனே நிறுத்திக் கொண்டது! அந்தத் திரண்ட மேகங்கள் மதீனாவிலிருந்து விலகி, அதன் வலப் பக்கமாகவும் இடப்பக்கமாகவும் பிரிந்து சென்றன. மதீனாவைச் சுற்றி மழை பொழிகிறது. ஆனால் மதீனாவுக்குள் சிறிதும் பெய்யவில்லை. தான் தேர்ந்தெடுத்தத் தூதரின் உயர்ந்த மதிப்பையும் தன்னுடைய நேசத்திற்குரிய தூதரின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் இறைவன் மக்களுக்கு அன்று தெள்ளத் தெளிவாக நேரடியாகவே காட்டினான்! (6)

தங்களின் துஆ' வை அப்படியே, அந்த கணமே ஏற்றுக்கொண்டு பலனை நிறைவேற்றித்தந்த அல்லாஹ்வின் மகத்தான அருள் நிறைந்த செயல் இந்த  புவனத்தின் பொன்மணியாம் நம் நபிமணியைப் புளகாங்கிதம் அடைய வைத்தது! எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் போற்றி "அல்ஹம்துலில்லாஹ்" என்றனர்.

சற்று நேரத்தில்தமக்கு மிக ஆதரவாய் இருந்த தம் பெரியதந்தையை சட்டென்று நினைவு கூர்ந்தார்கள்:

'இன்று அபூதாலிப் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் இயற்றிய கவிதையை அவரே உணர்வு பூர்வமாகப் பாடி மகிழ்ந்திருப்பார்' அப்போது அபீதாலிபின் வீரத்திருமகன் அலீய் அபுல்ஹஸன் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கவிதை அதே பாணியில் இப்போது பாடப்பட வேண்டுமா?" என்று கேட்டுவிட்டு, தன் தந்தையின் அதே தொனியில் அதே இனிமையுடன் பாடத்தொடங்கினார்:

"அழகே அழகான வெண்மை நிறம் ஒளிர்பவர் எவரோ
அவரால் வான்மழைக்கே பெரும் கோரிக்கை எழுப்பப்படும்!

அதுமட்டுமின்றி,
அனாதைப் பிஞ்சுகளின் ஆதரவகம் அவர்தான்! அந்த 
அனாதரவான விதவைகளின் காவலனும் அவரேதான்!" (7)

இதுபோன்று காத்தமுன் நபியவர்கள் கவிதையை ரசித்ததாக இன்னொரு நிகழ்ச்சியும் கூறப்படுகின்றது:

நான், அகிலத்தின் இருளை அகற்றிட வந்த அண்ணல் நபி (ஸல்) யின் அவையில் நூற்றுக்கு மேற்பட்ட தடவை அமர்ந்திருக்கின்றேன். அப்போது அவர்களின் தோழர்கள் சில நேரம் கவிதை பாடுவார்கள். அறியாமைக் காலத்தில் நிகழ்ந்த சில சம்பவங்கள் குறித்தும் நினவூட்டுவார்கள். ஈமான் கற்பித்த இனிய நபியவர்கள் அதை அமைதியுடன் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். சில சமயம் நபித்தோழர்களுடன் சேர்ந்து சிரிக்கவும் செய்தார்கள். (8)

இவ்வாறு, மாண்பு நிறைந்த மங்காத அறிவுச் சுடரான அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அர்ரஹ்மானிடம் வேண்டிப்பெற்ற அருள் மழைத்தூறல்கள் இந்த அவனிக்கு வந்து மண்ணுறையும் பல்லுயிர்களும் புத்துணர்வுடன் நலம் பெற்று வாழப் பயன்பட்டன! இன்னும் அந்த அருள் மழைத்துளிகளில் எஞ்சிய நினைவலைகள் அதோ அந்த பசும்புல் வனங்களிலும் பாலை மணல் வெளிகளிலும் மலைச் சிகரங்களிலும் இதமாய் வீசும் தென்றலிலும் சலசலத்து ஓடும் நீரலைகளிலும் நீக்கமறவே நிறைந்திருக்கின்றன! அல்லாஹ்வின் அருளை அழகாய் அடைந்திருக்கின்றன!

o o o 0 o o o
Sources:
(1) அல்குர்ஆன் 32:27
(2) புஹாரி 79: அபூ மூஸா (ரலி)
(3) அல்குர்ஆன்: 24:43
(4) அபூதாவூத் 992: ஆயிஷா (ரலி)
(5) திர்மிதீ 2811: ஜாபிர் இப்னு ஸும்ரா (ரலி)
(6) புஹாரி 6093: அனஸ் பின் மாலிக் (ரலி)
(7) புஹாரி 1009: இப்னு உமர் (ரலி)
(8) திர்மிதீ 2777: ஜாபிர் பின் சமுரா (ரலி)
இது தொடர் : 23 லிருந்து மிள்பதிவாக பதிக்கப்பட்டிருக்கிறது
இக்பால் M.ஸாலிஹ் 

நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 14, 2015 | , , , , ,

அறிவியல் கதிர் - நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி - பேராசிரியர் கே. ராஜு

நம் நாட்டில் நகரங்களாக இருந்தாலும் கிராமங்களாக இருந்தாலும் பருவகாலங்களில் அடைமழை, மற்ற காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகிய இரண்டையும் மாறிமாறி சந்திப்பது வழக்கமாகிவிட்டது. 

நகரங்களில் ஏராளமான அடுக்குமாடி வீடுகள் அடுத்தடுத்து கட்டப்படுகின்றன. இந்த வீடுகளுக்குத் தேவையான தண்ணீரைப் பெற 200 அடி வரையும் அதற்குக் கீழேயும் ஆழத்தில் குழாய்க் கிணறுகள் (bore wells) தோண்டப்படுகின்றன. நிலத்தடி நீர்வளத்தைப் புதுப்பிக்காமல் இந்த குழாய்க் கிணறுகளிலிருந்து எத்தனை நாட்களுக்குத் தண்ணீரைப் பெற முடியும்? மழைநீரைச் சேகரிக்கவில்லையெனில் அது சாக்கடை நீருடன் கலந்து நகரை மேலும் மாசுபடுத்தும் வேலையையே செய்யும். 

தற்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மழைநீரை வீணாக்காது அதன் ஒவ்வொரு துளியையும் சேமித்துப் பயன்படுத்திட மழைநீர் சேகரிப்பு மையங்களை உருவாக்கி நிலத்தடி நீரை வலுப்படுத்துவது  ஒன்றே இப்பிரச்சனைக்குத் தீர்வாக இருக்க முடியும். 

சென்னை போன்ற மாநகரங்களில் பெருவாரியான மக்களிடையே இது குறித்துப் போதுமான விழிப்புணர்வு இல்லை.  நிபுணர்களிடமிருந்து இது பற்றித் தெரிந்துகொள்ள உதவும் அறிவியல் சுற்றுச்சூழல் மையங்களை (Centre of Science and Environment - CSE)  நாடு முழுதும் உருவாக்க அவற்றின் நிறுவன இயக்குநர் அனில் அகர்வால் திட்டமிட்டார். அதன்படி அமைக்கப்பட்டதுதான் சென்னை மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள மழைநீர் மையம் (Rain Centre Chennai). ஆகாஷ் கங்கா என்ற அமைப்பு இந்த மையத்தை நிறுவி பராமரித்து வருகிறது. 

பொதுமக்கள் இந்த மையத்தை அணுகி தங்கள் வீடுகளுக்கேற்ற மழைநீர் சேகரிப்பு மாடலைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு தக்க ஆலோசனைகளைப் பெற முடியும்.   மொட்டை மாடியில்  விழும் மொத்த மழைநீரும் சென்று அடையும் வகையில் சேகரிப்பு மையத்தை உருவாக்க வேண்டும். இதைத் திறம்படச் செய்தால் கிணறுகளிலும் குழாய்க் கிணறுகளிலும் உள்ள நீரின் தரமும் அளவும் மேம்படும். கைபேசிகளை அவ்வப்போது ரீசார்ஜ் செய்துகொள்வதுபோல், நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும். 

இதற்கு 4லிருந்து 8 மீட்டர் ஆழம் உள்ள குழியை பொருத்தமான விட்டத்தில் தோண்டி அதில் பிவிசி குழாயை முழு ஆழத்திற்கும் வருமாறு பதிக்க வேண்டும்.  ஜல்லிகள், கூழாங்கற்களை இட்டு நிரப்பி அவற்றின் வழியே மழைநீர்  சென்று குழியின் அடிப்பாகத்தை அடையுமாறு செய்ய வேண்டும். 

இது ஒரு சேகரிப்பு மாடல். வீட்டின் அளவைப் பொறுத்து மாடலின் தன்மையும் மாறும். முன்பு சென்னையைச் சுற்றி 3000 ஏரிகள் இருந்திருக்கின்றன. இன்று ஏரிகள் எல்லாம் கட்டடங்களாக மாறி எஞ்சியிருப்பவை மூன்றில் ஒரு பகுதி ஏரிகளே. 

இவற்றைப் பாதுகாப்பது, புதிய நீர்நிலைகளை உருவாக்குவது, மழைநீரைச் சேகரிப்பது போன்ற பன்முக நடவடிக்கைகளின் மூலமே எதிர்காலத்திற்கான தேவைகளைச் சமாளிக்க முடியும். 

மேற்கொண்டு தகவல் வேண்டுவோர் சென்னை மழைநீர் மையத்தின்  இயக்குநர் திரு. சேகர் ராகவனை 96770 43869 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: முதுவை ஹிதாயத்
www.mudukulathur.com

பரிந்துரை : அதிரை அஹ்மது

மலை மேல் மழை... [காணொளி...] 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 17, 2014 | , , , ,


ஊர் ஞாபகம் அதிகம் வரவைக்கும் காலம்தான் அழகிய மழைக்காலம்...

ஊரில் (நல்ல) மழையாமே !?

மலைமேல் விழும் மழையே...! ஓடோடிவா...!

எங்களூரில் பள்ளங்கள் தோண்டி வைத்திருக்கின்றனர் குளங்கள் நிறைவதற்கு, தடுக்கி விழ அல்ல உன்னை தடுத்து அங்கே விழவைத்து நாங்கள் எழத்தான்.

நாங்கள்தான் சாலையை கடக்க கரடுமுரடான பாதைகளை தவிர்ப்பதில் மும்முரமாக இருப்போம், ஆனால்... மழையே உனக்கென்ன எங்கிருந்தாலும் பள்ளம் தேடித்தானே பாய்ந்து செல்வாய் அதனை சமநிலைப்படுத்துவதற்கு...!

இனி...,! இந்த காணொளியை இரண்டு காதுகளில் ஹெட்ஃபோன் வைத்துக் கொண்டு பாருங்கள் எந்தச் சூழலில் நீங்கள் இருந்தாலும் மழையருகில் இருந்து கொண்டு அதில் நனைந்த உணர்வு ஏற்படும்.


அபூஇப்ராஹிம்

பெருநாள் இரவு ஒளி மழை ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2014 | , , , ,

மழையில்லா இரவில் துபாயில் இன்று ஒளி மழை !

இந்த ஒளி மழை பெய்வதற்கு பொறுப்பேற்றிருக்கும் நிறுவனத்தில் பணியிலிருக்கும் முக்கியமான ஒருவரின் அருகில் இருந்து கொண்டு அதன் நுணுக்கங்களை தெரிந்து கொண்டே ஆடிய கைகளில் சிக்கிக் கொண்ட கேமராவில் தட்டுப்பட்ட துளிகள் !

இந்த வெளிச்சமும் அதில் காணும் வலைவுகளுக்குக்குள் ஏதேனும் அரபி எழுத்து தெரிகிறது என்று அர்த்தங்கள் கொடுத்தால் நான் எப்படிங்க பொறுப்பாக முடியும் ! :)?

இவ்வகை வானவேடிக்கைகள் நிறைந்த விரையங்களில் உடண்பாடில்லை, இருப்பினும் வெகு சில நிமிடங்களே நிகழ்த்த முடிந்த ஒளி மழைக்கான செலவு, அதற்கான ஆயத்தங்கள், எத்தனை பணியாட்கள், எவ்வாறு அதனை இயங்கச் செய்கிறார்கள், அதன் பாதுகாப்பு எப்படி கையாளப்படுகிறது என்ற அனுபவ நுணுக்கங்கள் அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட முடிந்தது.

குறிப்பு : கேமராவை கையில் எடுத்து நீண்ட நாட்களானதால் சிக்கியதை அள்ளிப் போட்டிருக்கிறேன்...



























அபூஇப்ராஹீம்