Showing posts with label சட்டமன்றம். Show all posts
Showing posts with label சட்டமன்றம். Show all posts

நேற்று ! இன்று ! நாளை! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | February 17, 2016 | , , , , , , ,

இரண்டாம் பாகம் : பகுதி இரண்டு

தமிழ் நாட்டில் பெண்ணைப் பார்த்து திருமணம் பேசி முடிப்பது என்பது பாரம்பரியமான ஒரு பண்பாட்டின் பரிமாணம். ‘ தாயை தண்ணீர் எடுக்கும் இடத்தில் பார்த்தால் , மகளை வீட்டில் போய் பார்க்கவேண்டியதில்லை ‘ என்பதும் நம்மிடையே வழங்கப்படும் பழமொழிதான். காரணம் என்னவென்றால் அன்பு, பண்பு, அடக்கம், ஒடுக்கம் ஆகியவை வெளிப்படும் இடம் தண்ணீர் எடுக்கும் நீர் நிலைகள் அல்லது குழாயடிகள்தான். குடங்களை கேடயமாகத் தாங்கி பெண்கள் ஒருவருக்கொருவர் போட்டுக் கொள்ளும் குழாயடிச் சண்டைகள் தமிழ்நாடெங்கும் காலைவேளைகளில் காணக்கிடைக்கும் காட்சிகள்.

அதேபோல் சம்பந்தா சம்பந்தமில்லாத சத்தம் அதிகமாக கேட்கும் இடத்தையும் நாம் சந்தைக்கடை என்று வர்ணிப்போம். பள்ளி அல்லது கல்லூரி வகுப்புகளில் மாணவர்கள் படிப்பில் ஈடுபடாமல், சத்தமாகப் பேசிக் கொண்டு இருந்தால் இது என்ன வகுப்பா இல்லை சந்தைக் கடையா என்று சத்தம் போடும் ஆசிரியர்களை நமது அனுபவத்தில் கண்டு இருக்கிறோம். 

இதேபோல் குழாயடி, சந்தைக்கடை போன்ற உதாரணங்களுடன் சட்டமன்றத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தனிமனிதர்களிடையே தோன்றிய பகைமையின் காரணமாக பாராளுமன்ற , சட்டமன்ற ஜனநாயக மரபுகள் கூவம் நதியில் குளிக்கப் போய்விட்டன. காலம் காலமாக கற்றோராலும் கல்லாதோராலும் கட்டிக் காக்கப்பட்ட மனிதப் பண்புகளும் நடை முறை நாகரிகங்களும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அண்மைக் காலங்களில் இதன் நிருபணம் அதிகமாகி விட்டது. 

இன்றைய சட்டமன்ற நிகழ்வுகளை ஒப்பீடாக வைத்து பகுருதீன் ஒரு கற்பனை சித்திரத்தைத் தீட்டி இருக்கிறார். சற்று அதையும் பார்ப்போமே!

வானளாவி வளர்ந்த ஒரு மரத்தில் வட்ட மேசை மாநாடு !  கிளைக்கு ஒன்றாக கீசாரிப்பட்ட ஷைத்தான்கள் உட்கார்ந்து நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தன. அவைகளின் முகங்களில் ஒருவித ஏக்கம் குடிகொண்டிருந்தது. அன்றைக்கு அவர்களின் பொழுது போக்குக்கு ‘ பசாது’ ஒன்றுமில்லையே என்று ஷைத்தான்கள் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் ஒரு கரும்புகை எழுந்தது. மெல்ல மெல்ல அந்தக் கரும்புகை, வெண்புகையாக மாறியது. அந்த வெண்புகையிலிருந்து வெளிப்பட்டது ஒரு ஜின். அந்த ஜின்னின் கையில் ஒரு தமிழ் செய்தித்தாள்! ஷைத்தான்கள் தாங்கள் உட்கார்ந்திருந்த வட்ட மேசையிலிருந்து ஆர்வமாக எழுந்தன வானுலகம் போன ஜின்னை வழிமறித்தன. தங்களின் ‘பசாதுப்’ பசிக்கு இரை கிடைத்துவிட்டது என்ற ஆர்வம் அவைகளிடையே வெளிப்பட்டது.

ஹாவ்! ஹாவ்! என்று சப்தமிட்டவாறே ஷைத்தான்கள் ஜின்னை சூழ்ந்தன. ஜின் அமைதியாக தனது கரத்திலிருந்த செய்தித்தாளை நீட்டியது. நாய்கள் ரொட்டித் துண்டைக் கவ்வுவது போல அதைப் பறித்த ஷைத்தான்கள் செய்தித்தாளை விரித்துப் படித்தன. தலைப்புச் செய்தி இதுதான். 

“தமிழக சட்ட மன்றம் நாளை கூடுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்கள் முதல்வரின் அனுமதிகேட்டு வாயைத் திறந்த மன்றத்தின் முதல்வர் அறிவிப்பு! பரப்பரப்பான சூழ்நிலையில் கூடும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க் கட்சிகளும் அவைகளை எதிர்கொள்ள ஆளுங்கட்சியும் வரிந்து கட்டுகின்றன.” என்று அச்சடிக்கப்பட்ட செய்திகள் ‘நச்’ என்று இருந்தன. ஷைத்தான்களின் முகங்களில் நமுட்டுச் சிரிப்பு. 

ஷைத்தான்களில் சற்று விபரம் தெரிந்த ஒரு ஷைத்தான் இப்படிச் சொன்னது. “ கடந்த காலங்களில் சட்டமன்றம் கூடும்போது மக்கள் பிரச்னைகளை எழுப்ப எதிர்க் கட்சிகளும் அவற்றை எதிர்கொள்ள ஆளுங்கட்சியும் தயாராகின்றன என்றுதான் செய்திகள் வரும். ஆனால் இப்போது வரிந்து கட்டுகின்றன என்று ஊடகங்களே செய்திகள் வெளியிடுகின்றன என்றால் ஏதோ குஸ்தி நடக்கபோகிறது அதனால் நமக்கெல்லாம் நிறைய தீனி இருக்கிறது என்று அர்த்தம் “ என்று சொன்னது. 

“அப்படியானால் நாமும் போய் என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடுவோமா? “ என்று ஒரு ஷைத்தான் ஆர்வமுடன் கேட்டது. இந்தப் பிரேரணை ஒருமனதாக நிறைவேறியது. அவை உடனே கிளம்பின. ஒரு வாயு மண்டலம், கருநிறமாக எழுந்தது. மூன்று ஷைத்தான்களும் கண்சிமிட்டும் நேரத்தில் பூலோகத்தில் வந்திறங்கின. அவை இறங்கிய ஊர் சிங்காரச் சென்னை. சென்றடைந்த இடம் - சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதி. 

விடிந்தால் சட்ட மன்றம் கூடுகிறது. ஆளுநர் உரை அது இது என்று பாதுகாப்புப் பரபரப்பு. அதே நேரம் சட்ட மன்ற உறுப்பினர் விடுதியின் அனைத்து அறைகளும் மூடப்பட்டிருந்தன. ஒரே ஒரு துணிச்சலான ஷைத்தான் மட்டும் சாவித்துவாரத்தின் வழியே உற்றுப் பார்த்தது. உள்ளே உறுப்பினர்கள் அடுத்த நாள் கூட்டத்துக்கு அவசர அவசரமாகத் தயாராகி வருவதை அறிந்தது. ஆமாம்! உறுப்பினர்களின் உணவு மேஜை முன்னே சோமபானமும் சுறா பானமும். அருகில் அவர்கள் கடித்துத் துப்பிய செந்நிறம் தடவப்பட்ட கோழிகளின் எலும்புத் துண்டுகள். 

சரி ! அடுத்த அறையைப் பார்ப்போம் என்று பார்த்தால் அங்கும் அதே காட்சிகள். ஆளும் கட்சி உறுப்பினர்களின் அறைகளில் மட்டும்தானா என்றால் இல்லை! எல்லாக் கட்சி உறுப்பினர்களின் அறைகளிலும் இதே காட்சிகள். சரிதான்! இந்த மாதிரி அத்தியாவசிய விஷயங்களில் எல்லோரும் ஒற்றுமையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று ஷைத்தான்கள் சந்தோஷமாகப் பேசிக் கொண்டன. 

அதே நேரம், தங்களை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பிரதிநிதிகளாக பணியாற்றுகிறார்களோ இல்லையோ, பூலோகத்தில் தங்களுடைய பிரதிநிதிகளாக இவர்கள் வேலை செய்யத் தயாராகிறார்கள் என்பதை ஒரு ஷைத்தான் சுட்டிக் காட்டியது. இந்த சந்தோஷத்தைத் தாங்களும் கொண்டாட வேண்டுமென்று விடுதிக்கு அருகிலிருக்கும் டாஸ்மாக் பாருக்கு மூன்று ஷைத்தான்களும் சென்று மொடாக்குடி குடித்தன. 

குடித்துவிட்டு வெளியே வந்த ஷைத்தான்கள் நிலை தடுமாறி டாஸ்மாக் கடை வாசலில் மண்ணில் புரண்டு கிடக்கும் மனித ஷைத்தான்களுடன் தாங்களும் தடுமாறி விழுந்து புரண்டன. ஒரே ஒரு ஷைத்தான் மட்டும் கேரளாவுக்கு போன் போட்டு அங்கிருந்த ஒரு மரக்கிளையிலிருந்து  குட்டிச்சாத்தானை  அழைத்தது, “ மை டியர் குட்டிச் சாத்தான்! அடுத்த பஸ்ஸைப் பிடித்து அவசரமாக சென்னைக்கு வா !” என்று தகவலை தாக்கீதாக அனுப்பிவிட்டு , தானும் சாலை ஓரமாக சக ஷைத்தான்களுடன் படுத்துக் கொண்டது. 

பொழுதுவிடிந்தது! குட்டிச்சாத்தானும் குறிப்பிட்டபடி வந்து ஷைத்தான்களை துயிலெழுப்ப நால்வரும் கூப்பிடு தூரத்தில் இருந்த கூவத்தில் குளித்துவிட்டு சட்டமன்றம் நோக்கி நடந்தே சென்றன. சட்ட மன்றத்தின் பொதுமக்கள் நுழையும் வாயிலில் காத்திருக்காமல் அனைவரும் காற்றாக மாறி ‘ விஷ் ‘ என்று சட்டமன்றத்தின் பார்வையாளர் பகுதியில் ஒரு வசதியான இடத்தில் அமர்ந்தனர். 

அவை நடவடிக்கைகள் ஆரம்பமாயின. ஆளுநர் வந்தார். அம்பிகையே ஈஸ்வரியே என்று ஆலாபனை பாடிவிட்டு அமைச்சரவை தயாரித்துத் தந்த உரையைப் படித்துவிட்டு , சர்க்கரை போடாத காபியையும் குடித்துவிட்டு கிளம்பிப் போனார். 

ஆளுநர் உரையின் மீது விவாதம் ஆரம்பமானது. அவைத்தலைவர் சூரிய நமஸ்காரம் செய்வதுபோல் வானை நோக்கிக் கையை உயர்த்தி தென் சென்னைப் பக்கம் நோக்கி கும்பிட்டு விட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். 

விவாதம் தொடங்கலாம் என்று அவைத்தலைவர் அறிவித்ததுதான் தாமதம் எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த திமுகவினர் எழுந்தனர். ஆளுநர் உரையை கண்டிக்கிறோம் என்றார்கள் . சிறை தண்டனை அளிக்கப்பட்டு ஜாமீனில் இருக்கும் சீதேவியைப் புகழ்வதில் ஆளுநரும் தனது பங்கை ஆற்றியதை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்கள் . உடனே அந்தக் கட்சி உறுப்பினர்களும் கூடவே ஆதரவுக் கட்சிகளும் ஒரு விடுமுறை உற்சாகத்தில் வெளியேறின. 

அமைச்சர்கள் அமரும் பகுதியில் ஒரு அமைச்சர் தனது காலுக்கு ஒரு தைல பாட்டிலில் இருந்து தைலம் தடவிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த குட்டி சாத்தான் , “சாச்சா! அவர் என்ன தடவுகிறார்? ஏன் தடவுகிறார் என்று கேட்டது?” உடனே பெரிய சைத்தான் சொன்னது, “ ஒன்றுமில்லை! அண்மையில் நடந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது குத்தாட்டம் போட்ட அமைச்சர் அவர். அந்த வலி ஆடும்போது அவருக்குத் தெரியவில்லை- தெரிந்து கொள்ளும் நிலையிலும் அவர் இல்லை. இப்போது கால்வலிக்கிறது அதனால் தைலம் தேய்த்துக் கொண்டிருக்கிறார்" என்றது. அமைச்சர்களும் இப்படி ஆடுவார்களா என்ற சந்தேகத்துடன் அனைத்து ஷைத்தான்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் சட்டமன்றத்தின் நடுப்பகுதியில் கூச்சல் கேட்டது. 

வெளிநடப்பு செய்த எதிர்க் கட்சி உறுப்பினர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். 

அடுத்து ஒரு உறுப்பினர் , சட்டமன்றத்துக்கு வராத தலைவர்களைப் பற்றி ஒரு வினா எழுப்பினார். அதற்கு ஒரு ஆளும் கட்சி உறுப்பினர் அப்படி யாரும் வராமல் இல்லை ஒரு கிழவரும் ஒரு சிடிஜனும்தான் வருவதில்லை என்று கூறினார். கிழவர் யார் என்று அவரது கட்சியினருக்கும் சிடிசன் என்று அதாவது குடிமகன் என்று யாரைச் சொல்கிறார்கள் என்று அவரது கட்சியினருக்கும் விளங்கி அதை முன்னிட்டு சட்டமன்றம் சற்று நேரம் கோயம்பேடு ஹோல்சேல் மார்கெட் ஆனது. 

இப்படிப் பட்ட வார்த்தைகளால் மற்றவர்களின் உணர்வுகளைக் கிளறிப் பார்ப்பதும் தகுதி இழந்தவர்களுக்கு அளவுக்கு மீறி புகழாரம் சூட்டுவதும் இந்த மன்றத்தில் இப்போது நடை முறை என்று புரியாத ஷைத்தான்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன. 

திமுக உறுப்பினர் ஜே. அன்பழகன் எழுந்து தங்கள் கட்சி உறுப்பினர்கள் அமரும் இடத்தில் மூட்டைப் பூச்சி கடிப்பதாக ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு ஒரு அமைச்சர் இப்படியெல்லாம் கோமாளித்தனமாக பேசாதீர்கள் என்றதுதான் தாமதம் உடனே அங்கு ஒரு குருஷேத்திரப் போர் மூண்டது. அவைக் காவலர்கள் அழைக்கப்பட்டனர். அனைத்து திமுக உறுப்பினர்களும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இந்தக் கலவரத்தில் பல உறுப்பினர்களின் வேஷ்டிகள் அவிழ்ந்து விழுந்தன; அல்லது உருவப்பட்டன. பெண் உறுப்பினர்கள் தலை கவிழ்ந்தனர். 

இதைக் கண்ட ஷைத்தான்களுக்கு சந்தோசம் எல்லை மீறியது. உணவு இடைவேளை ! ஷைத்தான்கள் சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்தன. உணவுக்குப் பின் மீண்டும் உள்ளே போகவேண்டுமா என்ற பொருள்பட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன. மூத்த ஷைத்தான் பேசியது, “ இந்த பூலோகத்தில் நமக்குப் பிரதிநிதிகளாய் இந்த மன்ற உறுப்பினர்கள் இருக்கும்வரை நாம் பூலோகத்துக்கு வரவேண்டிய வேலையே இல்லை. நமது வேலையைத்தான் இவர்கள் பார்க்கிறார்கள் . ஆகவே நாம் மீண்டும் நமது மரத்துக்கே  போய் நிரந்தர ஒய்வு எடுக்கலாம் “ என்று சொல்லி கண்ணை மூடின ; உடனே உயரப்பறந்தன. குட்டிச் சாத்தானும் ஒரு ஆட்டோ பிடித்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குப் போனது. - என்று சித்திரம் தீட்டினார் பகுருதீன். 

இதோ! நான் பரிமாறும் ஒரு பழைய சோறும் ஊறுகாயும். 

முதலமைச்சர் காமராஜர்! அறிஞர் அண்ணா எதிர்க் கட்சித் தலைவர்! விலைவாசி உயர்வைப் பற்றி விவாதம்! அண்ணாவுக்கு வழங்கப்பட்டதோ கால்மணி நேரம். அவர் பேசியதோ முக்கால் மணி நேரம். காமராசர் பேச்சை ரசித்துக் கொண்டே எவரையும் குறுக்கிடக் கூடாது என்று கண்ணாலேயே உத்தரவு பிறப்பிக்கிறார். அண்ணா தனது பேச்சை நிறைவு செய்யும் போது, “ முதலமைச்சர் காமராசருக்கு , விலைவாசி உயர்வால் குடும்பங்கள் படும் கஷ்டங்கள் புரியாது. காரணம் அவர் பிரம்மச்சாரி. தனிக்கட்டை. குடும்பம் நடத்திப் பார்த்தால்தான் குடும்பங்கள் படும் கஷ்டம் தெரியும் ! “ என்று குறிப்பிட்டார். 

அண்ணாவுடைய பேச்சுக்கு அன்றைய சட்ட மன்ற உறுப்பினர் அனந்தநாயகி அம்மையார் பதில் அளித்தார். காமராஜரைப் பற்றி அண்ணா குறிப்பிட்டது பற்றி அவருக்கு கோபம் கொப்பளித்தது. “அண்ணா இப்படி முதல்வர் காமராசரைப் பற்றிக் கூறுகிறார். இவர் இப்படிப் பேசுவதால்தான் ஆண்டவன் இவருக்கு குழந்தையே இல்லாமல் செய்துவிட்டான்'. என்றார் அனந்த நாயகி. 

அவையில் இருந்த காமராஜர் உடனே எழுந்து கோபமாக தனது அறைக்குச் சென்றார். அனந்த நாயகிக்கு காமராஜரிடமிருந்து வந்தது ஒரு அவசர அழைப்பு. காமராஜர் தனது அறைக்கு வந்த அனந்த நாயகியிடம், “ஏம்மா! அண்ணாத்துரை அப்படி என்ன இல்லாததை சொல்லிவிட்டார். நான் பிரம்மச்சாரி தானே! ஆனால் அதற்காக நீ ஒரு பெண்ணாக இருந்தும் அண்ணாதுரைக்கு குழந்தை இல்லை என்று குத்திக் காட்டுகிறாயே அவர் மனம் எவ்வளவு வருத்தப்படும்? அவரது மனைவி இதைக் கேள்விப் பட்டால் எவ்வளவு வருத்தப்படுவார்? உடனே போய் அவரிடம் மன்னிப்புக் கேள்!" என்று சொன்னார். 

அனந்தனாயகியும் அவ்வாறே செய்தார். இப்போது சட்ட மன்றம் நடைபெறும் இதே இடத்தில்தான் இந்த நிகழ்வும் நடந்தது. 

ஒரு தலைவரை வாய்க்குவந்தபடிஎல்லாம் வசைபாடக் கூடாது என்று பயிற்சியளிக்கும் பாசறையாக அன்றைய சட்டமன்றம் இருந்தது. இன்றோ , எப்படிப் பேசினால் எதிர்க் கட்சிகளை சீண்டலாம் என்றே பயிற்சியளிக்கப்படுகிறது. முதல்வரை திருப்தி செய்வதற்காகவே பண்பாடற்ற வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன. அதைப் பார்த்தும் கேட்டும் முதல்வரும் குலுங்கக் குலுங்க சிரிக்கிறார். சபை நாகரிகமும் சந்தி சிரிக்கிறது. 

இப்படிப்பட்ட நாகரிகமற்ற அரசியல் அவலங்கள் இப்போது உச்சநிலையில் நின்று நிலவக்காரணம் நேற்றைய அரசியல் என்பது கட்சி சார்ந்த , கொள்கை சார்ந்த அரசியல். ஆனால் இன்றைய அரசியல் தனிநபர்களை முன்னிறுத்தி நடத்தப்படும் துதிபாடும் அரசியல். இதற்கு உதாரணம் எம்ஜியார், கருணாநிதி , ஜெயலலிதா, நரேந்திர மோடி ஆகியோர் மட்டுமல்ல மறைந்த மூப்பனார் முதல் வாசன் வரையும், வைகோ முதல் விஜயகாந்த் வரையும் சரத் குமார் முதல் மருத்துவர் ஐயா வரையும் மட்டுமல்லாமல் இயக்கங்களை இயக்குவோர் வரையும் கூட நீளும். நாளை என்ன நடக்குமோ?

இன்ஷா அல்லாஹ் அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சந்திக்கலாம்.

ஆக்கம்: முத்துப் பேட்டை பகுருதீன். B. Sc; 
கலந்தாய்வு மற்றும் உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.

நேற்று ! இன்று ! நாளை! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | February 28, 2015 | , , , , , , ,

இரண்டாம் பாகம் : பகுதி இரண்டு

தமிழ் நாட்டில் பெண்ணைப் பார்த்து திருமணம் பேசி முடிப்பது என்பது பாரம்பரியமான ஒரு பண்பாட்டின் பரிமாணம். ‘ தாயை தண்ணீர் எடுக்கும் இடத்தில் பார்த்தால் , மகளை வீட்டில் போய் பார்க்கவேண்டியதில்லை ‘ என்பதும் நம்மிடையே வழங்கப்படும் பழமொழிதான். காரணம் என்னவென்றால் அன்பு, பண்பு, அடக்கம், ஒடுக்கம் ஆகியவை வெளிப்படும் இடம் தண்ணீர் எடுக்கும் நீர் நிலைகள் அல்லது குழாயடிகள்தான். குடங்களை கேடயமாகத் தாங்கி பெண்கள் ஒருவருக்கொருவர் போட்டுக் கொள்ளும் குழாயடிச் சண்டைகள் தமிழ்நாடெங்கும் காலைவேளைகளில் காணக்கிடைக்கும் காட்சிகள்.

அதேபோல் சம்பந்தா சம்பந்தமில்லாத சத்தம் அதிகமாக கேட்கும் இடத்தையும் நாம் சந்தைக்கடை என்று வர்ணிப்போம். பள்ளி அல்லது கல்லூரி வகுப்புகளில் மாணவர்கள் படிப்பில் ஈடுபடாமல், சத்தமாகப் பேசிக் கொண்டு இருந்தால் இது என்ன வகுப்பா இல்லை சந்தைக் கடையா என்று சத்தம் போடும் ஆசிரியர்களை நமது அனுபவத்தில் கண்டு இருக்கிறோம். 

இதேபோல் குழாயடி, சந்தைக்கடை போன்ற உதாரணங்களுடன் சட்டமன்றத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தனிமனிதர்களிடையே தோன்றிய பகைமையின் காரணமாக பாராளுமன்ற , சட்டமன்ற ஜனநாயக மரபுகள் கூவம் நதியில் குளிக்கப் போய்விட்டன. காலம் காலமாக கற்றோராலும் கல்லாதோராலும் கட்டிக் காக்கப்பட்ட மனிதப் பண்புகளும் நடை முறை நாகரிகங்களும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அண்மைக் காலங்களில் இதன் நிருபணம் அதிகமாகி விட்டது. 

இன்றைய சட்டமன்ற நிகழ்வுகளை ஒப்பீடாக வைத்து பகுருதீன் ஒரு கற்பனை சித்திரத்தைத் தீட்டி இருக்கிறார். சற்று அதையும் பார்ப்போமே!

வானளாவி வளர்ந்த ஒரு மரத்தில் வட்ட மேசை மாநாடு !  கிளைக்கு ஒன்றாக கீசாரிப்பட்ட ஷைத்தான்கள் உட்கார்ந்து நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தன. அவைகளின் முகங்களில் ஒருவித ஏக்கம் குடிகொண்டிருந்தது. அன்றைக்கு அவர்களின் பொழுது போக்குக்கு ‘ பசாது’ ஒன்றுமில்லையே என்று ஷைத்தான்கள் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் ஒரு கரும்புகை எழுந்தது. மெல்ல மெல்ல அந்தக் கரும்புகை, வெண்புகையாக மாறியது. அந்த வெண்புகையிலிருந்து வெளிப்பட்டது ஒரு ஜின். அந்த ஜின்னின் கையில் ஒரு தமிழ் செய்தித்தாள்! ஷைத்தான்கள் தாங்கள் உட்கார்ந்திருந்த வட்ட மேசையிலிருந்து ஆர்வமாக எழுந்தன வானுலகம் போன ஜின்னை வழிமறித்தன. தங்களின் ‘பசாதுப்’ பசிக்கு இரை கிடைத்துவிட்டது என்ற ஆர்வம் அவைகளிடையே வெளிப்பட்டது.

ஹாவ்! ஹாவ்! என்று சப்தமிட்டவாறே ஷைத்தான்கள் ஜின்னை சூழ்ந்தன. ஜின் அமைதியாக தனது கரத்திலிருந்த செய்தித்தாளை நீட்டியது. நாய்கள் ரொட்டித் துண்டைக் கவ்வுவது போல அதைப் பறித்த ஷைத்தான்கள் செய்தித்தாளை விரித்துப் படித்தன. தலைப்புச் செய்தி இதுதான். 

“தமிழக சட்ட மன்றம் நாளை கூடுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்கள் முதல்வரின் அனுமதிகேட்டு வாயைத் திறந்த மன்றத்தின் முதல்வர் அறிவிப்பு! பரப்பரப்பான சூழ்நிலையில் கூடும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க் கட்சிகளும் அவைகளை எதிர்கொள்ள ஆளுங்கட்சியும் வரிந்து கட்டுகின்றன.” என்று அச்சடிக்கப்பட்ட செய்திகள் ‘நச்’ என்று இருந்தன. ஷைத்தான்களின் முகங்களில் நமுட்டுச் சிரிப்பு. 

ஷைத்தான்களில் சற்று விபரம் தெரிந்த ஒரு ஷைத்தான் இப்படிச் சொன்னது. “ கடந்த காலங்களில் சட்டமன்றம் கூடும்போது மக்கள் பிரச்னைகளை எழுப்ப எதிர்க் கட்சிகளும் அவற்றை எதிர்கொள்ள ஆளுங்கட்சியும் தயாராகின்றன என்றுதான் செய்திகள் வரும். ஆனால் இப்போது வரிந்து கட்டுகின்றன என்று ஊடகங்களே செய்திகள் வெளியிடுகின்றன என்றால் ஏதோ குஸ்தி நடக்கபோகிறது அதனால் நமக்கெல்லாம் நிறைய தீனி இருக்கிறது என்று அர்த்தம் “ என்று சொன்னது. 

“அப்படியானால் நாமும் போய் என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடுவோமா? “ என்று ஒரு ஷைத்தான் ஆர்வமுடன் கேட்டது. இந்தப் பிரேரணை ஒருமனதாக நிறைவேறியது. அவை உடனே கிளம்பின. ஒரு வாயு மண்டலம், கருநிறமாக எழுந்தது. மூன்று ஷைத்தான்களும் கண்சிமிட்டும் நேரத்தில் பூலோகத்தில் வந்திறங்கின. அவை இறங்கிய ஊர் சிங்காரச் சென்னை. சென்றடைந்த இடம் - சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதி. 

விடிந்தால் சட்ட மன்றம் கூடுகிறது. ஆளுநர் உரை அது இது என்று பாதுகாப்புப் பரபரப்பு. அதே நேரம் சட்ட மன்ற உறுப்பினர் விடுதியின் அனைத்து அறைகளும் மூடப்பட்டிருந்தன. ஒரே ஒரு துணிச்சலான ஷைத்தான் மட்டும் சாவித்துவாரத்தின் வழியே உற்றுப் பார்த்தது. உள்ளே உறுப்பினர்கள் அடுத்த நாள் கூட்டத்துக்கு அவசர அவசரமாகத் தயாராகி வருவதை அறிந்தது. ஆமாம்! உறுப்பினர்களின் உணவு மேஜை முன்னே சோமபானமும் சுறா பானமும். அருகில் அவர்கள் கடித்துத் துப்பிய செந்நிறம் தடவப்பட்ட கோழிகளின் எலும்புத் துண்டுகள். 

சரி ! அடுத்த அறையைப் பார்ப்போம் என்று பார்த்தால் அங்கும் அதே காட்சிகள். ஆளும் கட்சி உறுப்பினர்களின் அறைகளில் மட்டும்தானா என்றால் இல்லை! எல்லாக் கட்சி உறுப்பினர்களின் அறைகளிலும் இதே காட்சிகள். சரிதான்! இந்த மாதிரி அத்தியாவசிய விஷயங்களில் எல்லோரும் ஒற்றுமையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று ஷைத்தான்கள் சந்தோஷமாகப் பேசிக் கொண்டன. 

அதே நேரம், தங்களை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பிரதிநிதிகளாக பணியாற்றுகிறார்களோ இல்லையோ, பூலோகத்தில் தங்களுடைய பிரதிநிதிகளாக இவர்கள் வேலை செய்யத் தயாராகிறார்கள் என்பதை ஒரு ஷைத்தான் சுட்டிக் காட்டியது. இந்த சந்தோஷத்தைத் தாங்களும் கொண்டாட வேண்டுமென்று விடுதிக்கு அருகிலிருக்கும் டாஸ்மாக் பாருக்கு மூன்று ஷைத்தான்களும் சென்று மொடாக்குடி குடித்தன. 

குடித்துவிட்டு வெளியே வந்த ஷைத்தான்கள் நிலை தடுமாறி டாஸ்மாக் கடை வாசலில் மண்ணில் புரண்டு கிடக்கும் மனித ஷைத்தான்களுடன் தாங்களும் தடுமாறி விழுந்து புரண்டன. ஒரே ஒரு ஷைத்தான் மட்டும் கேரளாவுக்கு போன் போட்டு அங்கிருந்த ஒரு மரக்கிளையிலிருந்து  குட்டிச்சாத்தானை  அழைத்தது, “ மை டியர் குட்டிச் சாத்தான்! அடுத்த பஸ்ஸைப் பிடித்து அவசரமாக சென்னைக்கு வா !” என்று தகவலை தாக்கீதாக அனுப்பிவிட்டு , தானும் சாலை ஓரமாக சக ஷைத்தான்களுடன் படுத்துக் கொண்டது. 

பொழுதுவிடிந்தது! குட்டிச்சாத்தானும் குறிப்பிட்டபடி வந்து ஷைத்தான்களை துயிலெழுப்ப நால்வரும் கூப்பிடு தூரத்தில் இருந்த கூவத்தில் குளித்துவிட்டு சட்டமன்றம் நோக்கி நடந்தே சென்றன. சட்ட மன்றத்தின் பொதுமக்கள் நுழையும் வாயிலில் காத்திருக்காமல் அனைவரும் காற்றாக மாறி ‘ விஷ் ‘ என்று சட்டமன்றத்தின் பார்வையாளர் பகுதியில் ஒரு வசதியான இடத்தில் அமர்ந்தனர். 

அவை நடவடிக்கைகள் ஆரம்பமாயின. ஆளுநர் வந்தார். அம்பிகையே ஈஸ்வரியே என்று ஆலாபனை பாடிவிட்டு அமைச்சரவை தயாரித்துத் தந்த உரையைப் படித்துவிட்டு , சர்க்கரை போடாத காபியையும் குடித்துவிட்டு கிளம்பிப் போனார். 

ஆளுநர் உரையின் மீது விவாதம் ஆரம்பமானது. அவைத்தலைவர் சூரிய நமஸ்காரம் செய்வதுபோல் வானை நோக்கிக் கையை உயர்த்தி தென் சென்னைப் பக்கம் நோக்கி கும்பிட்டு விட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். 

விவாதம் தொடங்கலாம் என்று அவைத்தலைவர் அறிவித்ததுதான் தாமதம் எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த திமுகவினர் எழுந்தனர். ஆளுநர் உரையை கண்டிக்கிறோம் என்றார்கள் . சிறை தண்டனை அளிக்கப்பட்டு ஜாமீனில் இருக்கும் சீதேவியைப் புகழ்வதில் ஆளுநரும் தனது பங்கை ஆற்றியதை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்கள் . உடனே அந்தக் கட்சி உறுப்பினர்களும் கூடவே ஆதரவுக் கட்சிகளும் ஒரு விடுமுறை உற்சாகத்தில் வெளியேறின. 

அமைச்சர்கள் அமரும் பகுதியில் ஒரு அமைச்சர் தனது காலுக்கு ஒரு தைல பாட்டிலில் இருந்து தைலம் தடவிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த குட்டி சாத்தான் , “சாச்சா! அவர் என்ன தடவுகிறார்? ஏன் தடவுகிறார் என்று கேட்டது?” உடனே பெரிய சைத்தான் சொன்னது, “ ஒன்றுமில்லை! அண்மையில் நடந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது குத்தாட்டம் போட்ட அமைச்சர் அவர். அந்த வலி ஆடும்போது அவருக்குத் தெரியவில்லை- தெரிந்து கொள்ளும் நிலையிலும் அவர் இல்லை. இப்போது கால்வலிக்கிறது அதனால் தைலம் தேய்த்துக் கொண்டிருக்கிறார்" என்றது. அமைச்சர்களும் இப்படி ஆடுவார்களா என்ற சந்தேகத்துடன் அனைத்து ஷைத்தான்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் சட்டமன்றத்தின் நடுப்பகுதியில் கூச்சல் கேட்டது. 

வெளிநடப்பு செய்த எதிர்க் கட்சி உறுப்பினர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். 

அடுத்து ஒரு உறுப்பினர் , சட்டமன்றத்துக்கு வராத தலைவர்களைப் பற்றி ஒரு வினா எழுப்பினார். அதற்கு ஒரு ஆளும் கட்சி உறுப்பினர் அப்படி யாரும் வராமல் இல்லை ஒரு கிழவரும் ஒரு சிடிஜனும்தான் வருவதில்லை என்று கூறினார். கிழவர் யார் என்று அவரது கட்சியினருக்கும் சிடிசன் என்று அதாவது குடிமகன் என்று யாரைச் சொல்கிறார்கள் என்று அவரது கட்சியினருக்கும் விளங்கி அதை முன்னிட்டு சட்டமன்றம் சற்று நேரம் கோயம்பேடு ஹோல்சேல் மார்கெட் ஆனது. 

இப்படிப் பட்ட வார்த்தைகளால் மற்றவர்களின் உணர்வுகளைக் கிளறிப் பார்ப்பதும் தகுதி இழந்தவர்களுக்கு அளவுக்கு மீறி புகழாரம் சூட்டுவதும் இந்த மன்றத்தில் இப்போது நடை முறை என்று புரியாத ஷைத்தான்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன. 

திமுக உறுப்பினர் ஜே. அன்பழகன் எழுந்து தங்கள் கட்சி உறுப்பினர்கள் அமரும் இடத்தில் மூட்டைப் பூச்சி கடிப்பதாக ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு ஒரு அமைச்சர் இப்படியெல்லாம் கோமாளித்தனமாக பேசாதீர்கள் என்றதுதான் தாமதம் உடனே அங்கு ஒரு குருஷேத்திரப் போர் மூண்டது. அவைக் காவலர்கள் அழைக்கப்பட்டனர். அனைத்து திமுக உறுப்பினர்களும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இந்தக் கலவரத்தில் பல உறுப்பினர்களின் வேஷ்டிகள் அவிழ்ந்து விழுந்தன; அல்லது உருவப்பட்டன. பெண் உறுப்பினர்கள் தலை கவிழ்ந்தனர். 

இதைக் கண்ட ஷைத்தான்களுக்கு சந்தோசம் எல்லை மீறியது. உணவு இடைவேளை ! ஷைத்தான்கள் சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்தன. உணவுக்குப் பின் மீண்டும் உள்ளே போகவேண்டுமா என்ற பொருள்பட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன. மூத்த ஷைத்தான் பேசியது, “ இந்த பூலோகத்தில் நமக்குப் பிரதிநிதிகளாய் இந்த மன்ற உறுப்பினர்கள் இருக்கும்வரை நாம் பூலோகத்துக்கு வரவேண்டிய வேலையே இல்லை. நமது வேலையைத்தான் இவர்கள் பார்க்கிறார்கள் . ஆகவே நாம் மீண்டும் நமது மரத்துக்கே  போய் நிரந்தர ஒய்வு எடுக்கலாம் “ என்று சொல்லி கண்ணை மூடின ; உடனே உயரப்பறந்தன. குட்டிச் சாத்தானும் ஒரு ஆட்டோ பிடித்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குப் போனது. - என்று சித்திரம் தீட்டினார் பகுருதீன். 

இதோ! நான் பரிமாறும் ஒரு பழைய சோறும் ஊறுகாயும். 

முதலமைச்சர் காமராஜர்! அறிஞர் அண்ணா எதிர்க் கட்சித் தலைவர்! விலைவாசி உயர்வைப் பற்றி விவாதம்! அண்ணாவுக்கு வழங்கப்பட்டதோ கால்மணி நேரம். அவர் பேசியதோ முக்கால் மணி நேரம். காமராசர் பேச்சை ரசித்துக் கொண்டே எவரையும் குறுக்கிடக் கூடாது என்று கண்ணாலேயே உத்தரவு பிறப்பிக்கிறார். அண்ணா தனது பேச்சை நிறைவு செய்யும் போது, “ முதலமைச்சர் காமராசருக்கு , விலைவாசி உயர்வால் குடும்பங்கள் படும் கஷ்டங்கள் புரியாது. காரணம் அவர் பிரம்மச்சாரி. தனிக்கட்டை. குடும்பம் நடத்திப் பார்த்தால்தான் குடும்பங்கள் படும் கஷ்டம் தெரியும் ! “ என்று குறிப்பிட்டார். 

அண்ணாவுடைய பேச்சுக்கு அன்றைய சட்ட மன்ற உறுப்பினர் அனந்தநாயகி அம்மையார் பதில் அளித்தார். காமராஜரைப் பற்றி அண்ணா குறிப்பிட்டது பற்றி அவருக்கு கோபம் கொப்பளித்தது. “அண்ணா இப்படி முதல்வர் காமராசரைப் பற்றிக் கூறுகிறார். இவர் இப்படிப் பேசுவதால்தான் ஆண்டவன் இவருக்கு குழந்தையே இல்லாமல் செய்துவிட்டான்'. என்றார் அனந்த நாயகி. 

அவையில் இருந்த காமராஜர் உடனே எழுந்து கோபமாக தனது அறைக்குச் சென்றார். அனந்த நாயகிக்கு காமராஜரிடமிருந்து வந்தது ஒரு அவசர அழைப்பு. காமராஜர் தனது அறைக்கு வந்த அனந்த நாயகியிடம், “ஏம்மா! அண்ணாத்துரை அப்படி என்ன இல்லாததை சொல்லிவிட்டார். நான் பிரம்மச்சாரி தானே! ஆனால் அதற்காக நீ ஒரு பெண்ணாக இருந்தும் அண்ணாதுரைக்கு குழந்தை இல்லை என்று குத்திக் காட்டுகிறாயே அவர் மனம் எவ்வளவு வருத்தப்படும்? அவரது மனைவி இதைக் கேள்விப் பட்டால் எவ்வளவு வருத்தப்படுவார்? உடனே போய் அவரிடம் மன்னிப்புக் கேள்!" என்று சொன்னார். 

அனந்தனாயகியும் அவ்வாறே செய்தார். இப்போது சட்ட மன்றம் நடைபெறும் இதே இடத்தில்தான் இந்த நிகழ்வும் நடந்தது. 

ஒரு தலைவரை வாய்க்குவந்தபடிஎல்லாம் வசைபாடக் கூடாது என்று பயிற்சியளிக்கும் பாசறையாக அன்றைய சட்டமன்றம் இருந்தது. இன்றோ , எப்படிப் பேசினால் எதிர்க் கட்சிகளை சீண்டலாம் என்றே பயிற்சியளிக்கப்படுகிறது. முதல்வரை திருப்தி செய்வதற்காகவே பண்பாடற்ற வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன. அதைப் பார்த்தும் கேட்டும் முதல்வரும் குலுங்கக் குலுங்க சிரிக்கிறார். சபை நாகரிகமும் சந்தி சிரிக்கிறது. 

இப்படிப்பட்ட நாகரிகமற்ற அரசியல் அவலங்கள் இப்போது உச்சநிலையில் நின்று நிலவக்காரணம் நேற்றைய அரசியல் என்பது கட்சி சார்ந்த , கொள்கை சார்ந்த அரசியல். ஆனால் இன்றைய அரசியல் தனிநபர்களை முன்னிறுத்தி நடத்தப்படும் துதிபாடும் அரசியல். இதற்கு உதாரணம் எம்ஜியார், கருணாநிதி , ஜெயலலிதா, நரேந்திர மோடி ஆகியோர் மட்டுமல்ல மறைந்த மூப்பனார் முதல் வாசன் வரையும், வைகோ முதல் விஜயகாந்த் வரையும் சரத் குமார் முதல் மருத்துவர் ஐயா வரையும் மட்டுமல்லாமல் இயக்கங்களை இயக்குவோர் வரையும் கூட நீளும். நாளை என்ன நடக்குமோ?

இன்ஷா அல்லாஹ் அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சந்திக்கலாம்.

ஆக்கம்: முத்துப் பேட்டை பகுருதீன். B. Sc; 
கலந்தாய்வு மற்றும் உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.

நேற்று ! இன்று ! நாளை ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | February 14, 2015 | , , , , , ,

டில்லியில் ஆட்சி மாற்றமா? அரசியல் மாற்றமா?

வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றினால் ஆட்சியாளர்களுக்கு ஆபத்துவருமென்பது காலம்காலமாக மக்களிடையே நிலவி வரும் நம்பிக்கை. அது மூட நம்பிக்கைகளில் முதல் நம்பிக்கை என்பது ஒரு புறமிருக்க, இன்று கெஜ்ரிவால் என்கிற வால் நட்சத்திரம் தலைநகர் டில்லியில் தோன்றியதன் விளைவாக காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற ஆட்சியாளர்களுக்கு பெரும் குடைச்சலைக் கொடுத்துவிட்டது. ஆம் ஆத்மிக் கட்சி என்பது யானையின் காதுக்குள் புகுந்த சிற்றெறும்பாக மாறி விட்டது. 

பழுத்த பழங்களைத் தாங்கிய புளிய மரத்தைப் பிடித்து உலுக்கினால் பொல பொலவென்று பழங்கள் உதிர்ந்து கொட்டுவதுபோல் தலைநகர் டில்லியில் வாழும் அரசியல் அறிந்த மக்கள், தேர்தல் களத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டனர். இந்த உலுக்கால் குலுங்கிப் போய் நிற்கும் பழம் பெருச்சாளிகளைவிட கலங்கிப் போய் நிற்பவர்களே அதிகம். இந்தக் குலுக்களின் அதிர்வலையில் இரண்டு பழம் பெருச்சாளிகளைக் காணவே காணோம்.

இந்த மரம் உலுக்கப்படும்போது , ஆம் ஆத்மி என்கிற சாதாரண மனிதன் ஏந்தி நின்ற துணியில் 67 பழங்களும் ரத கஜ துரக பதாதிகள் மற்றும் கார்பரேட் கம்பெனிகளின் துணையுடன் நின்ற பாஜக என்ற அரசியல் மலைமுழுங்கி, ஏந்தி நின்ற துணியில் 3 பழங்களும் விழுந்தன. ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி’ என்ற நிலையில் காங்கிரஸ் ஏந்தி நின்ற துண்டில் மரத்தின் சருகான இலைகள் கூட உதிர்ந்து விழாமல், “ யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்றபின்னே வாங்கடா வாங்கடா வாங்க” என்று துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது, இந்தியாவைக் கட்டியாண்ட காங்கிரஸ். 

கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. டில்லியில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிஜேபிக்கு 32 இடங்களும் முதன்முதலாக அடையாளப்படுத்தும் விதத்தில் ஆம் ஆத்மிக்கு 29 இடங்களும் அன்று ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கு எதிர்காலத் தோல்வியை அடையாளப்படுத்தும் விதத்தில் 8 இடங்களையும் டில்லி மக்கள் வழங்கினர். காங்கிரசின் ஆதரவுடன் வேண்டாவெறுப்புடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மியை ஆதரவு தந்தவர்கள் என்ற பெயரில் காங்கிரசும் ஆட்சிக்கு வரப் போகிறோம் என்கிற மமதையில் பிஜேபியும் தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்தன. அரவிந்த் கேஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை விட்டு விலகினார். அன்றே அவருக்கு ஆதரவாக , பொதுமக்கள் தங்களது ஆதரவை அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசியல் வங்கிக் கணக்கில் செலுத்த ஆரம்பித்து விட்டனர். 

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் டில்லியைப் பொருத்தவரை மொத்தம் 7 இடங்களையும் ஒட்டு மொத்தமாக பாஜக கைப்பற்றியது. 2013 சட்டமன்றத் தேர்தலில் 33.7 சதவீதம் மட்டுமே பெற்ற பாஜக 46 சதவீத வாகுகளைப் பெற்று ஏழு இடங்களையும் பெற்று 13 சதவீத வாக்குகளை அதிகம் பெற்றது. இந்த அதிக வாக்குகளும் வளர்ச்சியும் பாஜகவின் ஆணவக் கணக்கைத் தொடங்கிவைத்தது. ஆனால் இப்போது நடைபெற்றுள்ள 2015 தேர்தலில் 32.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தனது சரிவுக் கணக்கை சந்தித்து மூன்று இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. 

வளர்ச்சியின் நாயகன் என்று வர்ணிக்கப்பட்டவரும் அவரது விளம்பர யுக்திகளும் அரசு இயந்திரங்களும் அமைச்சர் பெருமக்களும் ஆர் எஸ் எஸ் மற்றும் அவர்களின் அடிவருடிகளும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, உலகத்தில் யாருமே உளறமுடியாத வார்த்தைகளை எல்லாம் உளறி இனவெறியையும் மதவெறியையும் தோண்டியும் தூண்டியும் பெற்றது மூன்று இடங்கள் மட்டுமே.

காங்கிரசின் நிலையை நாம் பெரிதாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் தேர்தலுக்குப் பொறுப்பாளராக நியமத்த அஜய் மக்கன் அசத்தும் மக்கானாக இல்லாமல் ஒரு அசந்த மாக்கானாகவே செயல்பட்டார். காங்கிரசின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது லூசான சட்டையை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டு கூட்டங்களில் பேசும்போதே காங்கிரசுக்கு இந்தத் தேர்தலிலும் வாக்குகள் கிடைக்காது என்பது தெரிந்துவிட்டது. அரசியலில் இன்னும் பாடம் படிக்க வேண்டிய மாணவராகவே ராகுல் காந்தி பத்திரிகைகளுக்கும் மக்களுக்கும் இன்னும் தென்படுகிறார். இத்தனை பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்த இவரது அரசியல் பிளைட், டேக் ஆப் ஸ்டேஜுக்கு வர இன்னும் தாமதமாகிறது. மேலேகிளம்புமா அல்லது பிரியங்கா காந்தி வந்து பைலட் சீட்டில் உட்கார வேண்டுமா என்பது தெரியவில்லை. போகட்டும். 

ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் உடைய அணுகுமுறை தனிப்பட்ட ரீதியாக இருந்தது. எளிமை, இனிமை என்கிற வகையில் அவர் மப்ளரைக் கட்டிக் கொண்டு மக்களைக் கவர்ந்தார். வீட்டுக்கு வீடு சென்றார். மற்ற கட்சிகள் பணக்காரர்களையும் உயர்சாதிக்காரர்களையும் தேடிப் போய் வாக்குக் கேட்டபோது , சேரிகளையும் எளிய மக்கள் வாழும் குடியிருப்புகளையும் தேடித் தேடிப் போய் வாக்கு சேகரித்தார் கெஜ்ரிவால். 

1989 ஆம் ஆண்டு சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கனசங்க் பரிஷத் மாநில சட்டமன்றத்தின் மொத்தத் தொகுதிகளான 32 தொகுதிகளையும் வெற்றி கொண்டது. அதன்பின் இந்திய தேர்தல் சரித்திரத்தில் இப்போது எதிர்க் கட்சிகளுக்கு பேர் சொல்ல மூன்று பிள்ளைகளை மட்டும் விட்டு விட்டு ஆம் ஆத்மி டில்லியில் பெற்றுள்ளது. ஏற்கனவே 49 நாட்கள் தான் புரிந்த ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டிய அடிக்கல், ஒரு அரண்மனையாக மாறவேண்டுமென்றே மக்கள் இவ்வளவு பெரிய ஆதரவை அவருக்கு அளித்து இருக்கிறார்கள். மேலும் காங்கிரசுக்கு அளிக்கும் வாக்குகள் விழலுக்கு இழைத்த நீர் என்று வாக்குகள் பிரிந்து போகாமல் அவற்றைத் திரட்டி ஆம் ஆத்மிக்கு அளித்து அருமையாக திட்டமிட்டு வாக்களித்து இருக்கிறார்கள். 

நாட்டின் மற்ற இடங்களில் நடைபெறும் தேர்தலுக்கும் டில்லி பிரதேசத்தில் நடைபெறும் தேர்தலுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. டில்லி பன்னாட்டு தூதராலயங்களால் சூழப்பட்ட இடம் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதல்ல. தேர்தல் நடைமுறைகளும் தேர்தல் முடிவுகளும் அனைத்து நாடுகளாலும் அங்குலம் அங்குலமாக கவனிக்கப்படும். பதவி ஏற்ற நாளிலிருந்து வெளிநாடுகளிலேயே அதிகம் சுற்றி வந்த வளர்ச்சியின் நாயகன் மோடியின் முகத்தில் இப்போது வழியும் அசடை பன்னாட்டுத் தூதராலயங்கள் தங்களின் நாடுகளுக்குப் படம் பிடித்துக் காட்டிவிட்டன. கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த சொல்லும் எத்தனை நாளுக்குத் தாக்குப் பிடிக்கும்? எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்றிக் கொண்டே இருக்க இயலாது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கும் மோடிக்கும் உணர்த்தி விட்டன. அவர்கள் உணர்ந்தார்களா என்பதை காலம்தான் சொல்லும்.

ஆர் எஸ் எஸ் அடிவருடிகளுக்கு ஆசீர்வாதம் செய்து நாட்டை பிளவுபடுத்தும் கருத்துக்களுக்கு முதல் அடியை டில்லி மக்கள் தொடங்கி வைத்து இருக்கிறார்கள். இது ஒரு அரசியல் அடி . அதிலும் அரிச்சுவடியான அடி. இந்த அடியைத் தொடங்கிவைத்துள்ள தலைநகரின் குடிமக்களுக்கு நாடே நன்றி செலுத்துகிறது. 

மதக் கலவரங்களைத் தூண்டும் விதத்தில் சிறுபான்மை மற்றும் தாழ்த்தப் பட்டோருக்கு எதிரான விஷக் கருத்துக்கள் இந்த எட்டு மாதங்களுக்கு இடையில் எவ்வாறெல்லாம் தூவப்பட்டன என்பதை நாடே அறியும் . 

இந்துக்கள் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு சாமியார் சொன்னார். விட்டேனா பார்! என்று இன்னொரு சாமியார் போதாது போதாது பத்து குழந்தைகள் பெற வேண்டுமென்றார். குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் சங்கதிகள் பற்றி சாமியார்கள் பேசுவது கண்டு தலைநகரில் வாக்காளர்கள் முகம் சுளித்தனர். வாக்களிக்கும்போது பாஜகவின் சின்னத்தை சுளித்துக் கழித்தனர்.

பகவத் கீதையை நாட்டின் புனித நூலாக அறிவிக்கவேண்டுமென்று நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சொன்னார். பாராளுமன்றம் ஸ்தம்பித்தது. பார்த்துக் கொண்டிருந்த தலைநகரத்து மக்கள் தக்க சமயத்தில் பதில் தந்தார்கள். 

தேசத் தந்தை காந்தியை சுட்ட கோட்சேயை தேசபக்தன் என்றார்கள். கோட்சேக்கு நாடெங்கும் சிலை வைக்க வேண்டுமென்றார்கள். தலை நகரின் மக்கள் இந்த அருவருப்பான சொற்களுக்கு பதிலளிக்கக் காத்திருந்தனர். தருணம் வந்தது தண்டனை தந்தார்கள். 

இராமனைக் கடவுளாக ஏற்றவர்கள்தான் நாட்டின் உண்மையான தகப்பனுக்குப் பிறந்தவர்கள்; மற்றவர்கள் தவறாகப் பிறந்தவர்கள் என்று நாட்டு மக்களின் தன்மானத்தை சுரண்டிப் பார்த்தார்கள். தலைநகரின் மக்கள் சாட்டையால் அடித்து இருக்கிறார்கள். 

இராமனைக் கடவுளாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறட்டுமென்று முழங்கினார்கள். யார் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்று ஜனநாயக முறையில் மக்கள் அறிவித்து இருக்கிறார்கள். 

ஆட்சிக்கு வந்த இரண்டு வாரங்களில் உலகெங்கும் இருக்கும் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் பதினைந்து இலட்சம் என்று பறையறிவித்துவிட்டு ஆட்சிக் கட்டில் ஏறியதும் பதுங்கியவர்களுக்கு, மக்கள் தேர்தலில் படுகுழிவெட்டி இருக்கிறார்கள்.

இந்தியாவில் இருக்கும் அனைவரும் இந்துக்கள், அனைவரும் தாய் மதத்துக்கு திரும்ப வேண்டும் , போன்ற பொறுப்பற்ற கோஷங்கள், ஆக்ராவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களை இந்துக்களாக்கிய தவறான செயல்கள், தலைநகரில் பல தேவாலயங்களை தாக்கியது, பொருளாதார மந்தம், வானில் ஏறிய விலைவாசி அங்கேயே சுழன்று கொண்டிருப்பது, இஸ்ரேல் போன்ற பாசிச நாடுகளுடன் நேசம் காட்டும் வெளிநாட்டுக் கொள்கை , ஒபாமா காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டது, ஆஸ்திரேலியாவுக்கு அதானியை அழைத்துப் போய் அவருக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுத் தந்தது, அமித்ஷா போன்ற அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டதுடன் அவரைத் தலைவராகவும் ஆக்கியது , மேக் இன் இந்தியா என்று சொல்லிவிட்டு பத்து லட்சம் ரூபாய் பெறுமான கோட்டும் சூட்டும் லண்டனில் தைத்து வந்து ஒருநாள் கூத்துக்கு மொட்டை அடித்த விஷயம் இவைகள் எல்லாம் மக்கள் மன்றத்தில் மணலை அள்ளி அடித்த வேளையில் பிரதமர் பாராளுமன்றத்துக்கே வராமல் பாதாம்கீர் குடித்துக் கொண்டிருந்தது ஆகிய அனைத்தும் மக்களால் கவனிக்கப்பட்டன; பாஜாக பாசாகாது என்று மக்கள் சவுக்கடி கொடுத்து யமுனை நதியின் சாக்கடையில் தள்ளிவிட்டார்கள். 

முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு, ஒரு முன்னாள் ஐ. பி. எஸ் பெண் அதிகாரியைத் தேடிப் பிடித்ததில் ஆரம்பித்தது பாஜகவின் சறுக்கல் அல்ல கிறுக்கல். பதவி ஆசையில் மோடியைத் தேடி வந்த கிரண்பேடி, தான் போட்டி இட்ட தொகுதியிலேயே மண்ணைக் கவ்வி இருப்பதை ஆள்பிடிக்கும் பாஜகவுக்குக் கிடைத்த மரணஅடி என்றுதான் கூற வேண்டும். கிரேன்பேடி தேர்தலில் மட்டுமா தோற்றார்? Indian Police Service-ல் பாசானவர், Indian Political Service- லும் தோற்றார். ஊழலை ஒழிக்கும் இயக்கமான அண்ணா ஹசாரே நடத்திய இயக்கத்தில் இணைந்து தன்னை வெளிப்படுத்திய கிரேன்பேடி ஊழலில் திளைக்கத் தொடங்கி இருக்கும் பாஜகவில் சேர்ந்த பாசாங்கை மக்கள் ஆரம்ப நிலையிலேயே அழித்துவிட்டார்கள். இனி கிரேன்பேடியை Crane வைத்துத் தூக்க இயலுமா என்பது வினாக்குறிதான்.

2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தனது முதலமைச்சர் பதவியை விட்டு விலகிய கெஜ்ரிவால் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி மீண்டும் முதலமைச்சராக கனத்த பெரும்பான்மையுடன் பதவியேற்கிறார். இவரை வா! ராஜா! வா! என்று இந்திய நாடே வாழ்த்தி வரவேற்கிறது. ஒரு முன்னாள் அரசு அதிகாரி என்ற முறையிலும் படித்த இளைஞர் என்ற முறையிலும் டில்லி மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடே இவரிடமிருந்து பல நன்மைகளை எதிர்பார்க்கிறது. இவரது செயல்பாடுகளின் வெற்றியில் இவரது எதிர்காலமும் இருக்கிறது. 

டில்லி ஒரு மத்திய அரசின் நேரடிப் பார்வையில் இருக்கும் ஒரு மாநிலம்தான். முழு மாநில அந்தஸ்து பெற்ற மாநிலமல்ல. ஆகவே ரசம் வைக்க வேண்டுமென்றாலும் உப்புக்கும், புளிக்கும் மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும். டில்லியை சுற்றியுள்ள மாநிலங்கள்தான் டில்லிக்கு தேவைப்படும் நீர், மின்சாரம் போன்றவற்றைத் தந்து உதவ வேண்டும். டில்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் உ. பி தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது. மத்தியில் பாஜக; சுற்றிலும் தோல்வியால் கருகி, கருவிக் கொண்டிருக்கும் பாஜக.

ஆகவே அரவிந்த் கேஜ்ரிவால் உடைய கரங்களில் தரப்பட்டிருப்பது செங்கோல் அல்ல ; சர்க்கஸில் கம்பி மேல் நடப்பவர்கள் கைகளில் வைத்திருப்பார்களே அந்த வகை அடையாளக் கோள்தான். ஒரு துடைப்பத்தை மந்திரக் கோலாக வைத்து மாபெரும் சாதனைகளை அவர் நிகழ்த்திக் காட்ட வேண்டும். ஆண்டாண்டுகாலமாக ஆண்ட காங்கிரசுக்கும் இன்னும் இந்த நாட்டை நாம்தான் ஆள்வோமென்று ஆணவ எண்ணம் கொண்ட பாஜகவுக்கும் எதிர்காலங்களிலும் இந்தியா முழுதும் இதுபோல் உருவாகும் புதிய மாற்று அரசியல் சக்திகளுக்கு தன்னுடைய செயல்பாடுகளின் நிருபணத்தால், ஆம் ஆத்மி தலைமை தாங்காவிட்டாலும் வழிகாட்டியாகத் திகழவேண்டும். 

புதிதாகத் தோன்றும் கட்சிகள் பெரும் வெற்றியை ஈட்டுவது இந்திய வரலாற்றில் புதிதல்ல. அசாம் கன பரிஷத் இப்படித்தான் வென்றது. இன்று அதன் அட்ரசைத் தேட வேண்டி உள்ளது. தமிழ்நாட்டில் ஊழலை எதிர்த்து கட்சி ஆரம்பித்த எம்ஜியார் பெற்ற வெற்றியும் இந்தக் கணக்கில் வரும். ஆனால் இன்று அதே கட்சியின் முதல்வர்தான் ஊழல் குற்றவாளியாகி பதவி இழந்து நிற்கிறார். இதே போல் புதிதாக கட்சியை ஆரம்பித்த என் டி ராமராவும் தெலுங்கு தேசத்தில் பெரும் வெற்றியைப் பெற்றவர்கள்தான். பாண்டிச் சேரியில் என் . ஆர் காங்கிரசும் இவ்வாறு பெரும் வெற்றி பெற்ற கட்சிகளின் பட்டியலில் அடங்கும். ஆனால் போகப் போகத் தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் என்ற நிலையில் அவர்களது தொடக்கம் தந்த வெற்றியையோ புகழையோ அவர்களால் தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை. இந்த வரலாறுகளை கெஜ்ரிவால் கவனத்தில் கொள்ள வேண்டும் . 

ஒருபுறம் வேடன் ; மறுபுறம் நாகம்; இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் என்கிற நிலையில் பதவி ஏற்கும் அரவிந்த் கேஜ்ரிவால் தனது மிதமிஞ்சிய உற்சாகத்தின் காரணமாக ஏற்படும் உணர்வுகளைக் கட்டுப் படுத்திக் கொண்டு தனது நல்லாட்சியால் புகழ் பெற வேண்டும். கெஜ்ரிவாலின் தவறுகள் ‘புதிய பேயை விட பழைய பூதமே பரவா இல்லை’ என்கிற எண்ணத்தை மக்களுடைய மனதில் தப்பித் தவறிக் கூட தோற்றுவித்துவிடக் கூடாது. அவ்விதம் ஒரு தோற்றம் துரதிஷ்டவசமாக உண்டாகிவிடுமானால் ஜனநாயகத்தின் மீதும் மாற்று அரசியல் மீதும் நாட்டு மக்கள் வைத்த நம்பிக்கை நசிந்துவிடும். 

நல்லதையே நினைப்போம்! நாடு வாழ வாழ்த்துவோம்! இறைவனை இறைஞ்சுவோம்!

ஆக்கம் : முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc.
கலந்தாய்வு & உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி

நேற்று ! இன்று ! நாளை! – 4 19

அதிரைநிருபர் பதிப்பகம் | June 10, 2013 | , , , , , ,

தமிழக சட்டசபை மற்றும் அரசு நிர்வாகம் என்கிற எண்ணங்களில் நாம் எண்ணிப் பார்க்கிறபோது ஒரு சில தனிப்பட்ட உயர்ந்த குணசீலர்கள் மற்றும் தன்மையாளர்கள் நமது எண்ண அலைகளின் மேல்  மட்டத்தில் எழுந்து வருவதை தவிர்க்க முடியாது. காமராஜர் தனது அமைச்சரவையில் வெறும் எட்டு பேர்களை மட்டுமே வைத்து இருந்தார். அவர்கள் அனைவரும் தலை சிறந்த நிர்வாகிகள். அவர்களுள் சி. சுப்பிரமணியம், வெங்கட் ராமன், கக்கன் ஆகியோர் என்றுமே நினைவில் நிற்பார்கள். கடையநல்லூரைச் சேர்ந்த அப்துல் மஜீது என்பவரும் முஸ்லிம்களுடைய பிரதிநிதியாக காமராசரின் அமைச்சரவையில் பங்கேற்று இருந்தார்.  இவர்களிலும்        சி. சுப்ரமணியம் காமராசரை எதிர்த்து முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றவர் என்றாலும் அவரையும் அமைச்சரவையில் சேர்த்து கல்வியமைச்சர் பொறுப்புக் கொடுத்து அரவணைத்தது காமராசரின் கரங்கள். 

அதேபோல் வெங்கட் ராமன் தொழில் மற்றும் போக்குவரத்துத் துறைகள் அளிக்கப்பட்டு சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்தார். ஆனால் இவரது பிறந்த  ஊரான இராஜாமடத்துக்கோ அல்லது அதை அடுத்து இருக்கிற அதிராம்பட்டினத்துக்கோ தனது பதவி காலத்தில் எந்த நன்மையையும் செய்யவில்லை. சேதுரோடு என்பது  வேதாரணியத்தில் இருந்து இராமேஸ்வரம் வரை கடற்கரை வழியாக செல்வதுதான். வெங்கட்ராமன் மனது வைத்து இருந்தால் கருங்குளம் அருகில் நசுவினி ஆற்றிலும் இராஜமடம் அருகில் அக்கினி ஆற்றிலும் அன்றே பாலங்கள் கட்டி  சேதுரோட்டை போக்குவரத்துக்கு திறந்து விட்டு இருக்கலாம். ஆனால் தம்பிக்கோட்டை முக்கூட்டுச் சாலையில் இருந்து அதிரை நோக்கி வந்திருக்க வேண்டிய சேது சாலையை பட்டுக்கோட்டைக்கு உள்ளே திருப்பிவிட்டு பிறகு அதை சேதுபாவா  சத்திரத்தில் கொண்டுபோய் இணைத்த செயல் நம்மைப் பொருத்தவரையில் இவரது சாதனைப் பட்டியலில் ஒரு கரும்புள்ளி.  ஆனால் தமிழகமெங்கும் தொழில் மயமாவதில் காமராசருக்கு வலதுகரமாகத் திகழ்ந்தார். 

காமராசர் அவர்களின் அமைச்சரவையில் அங்கம் வகித்த பக்தவத்சலம் மக்களின் நினைவில் இருந்து மறைந்துவிட்டார். 1967 தேர்தல் முடிவுகள் வெளிவந்த நேரத்தில்      தி. மு. க வின் வெற்றியைப் பார்த்துவிட்டு “நாட்டில் விஷக்கிருமிகள் பரவி விட்டன” என்று சொல்லிய அவரின்  வார்த்தைகள் மட்டுமே இன்றும்  நிற்கின்றன. 

இவர்களுள் திரு. கக்கன் அவர்களைப் பற்றி தனி அத்தியாயம் எழுதலாம். கக்கன் அவர்களுக்கு அவருடைய சாதி இனம் பாராமல்   மிகப் பெரும் பொறுப்புகளை எல்லாம் காமராசர் அளித்து இருந்தார். கக்கனுக்குப் பிறகு அவரது இனத்தை அல்லது தலித் இனத்தை சார்ந்தவர்களுக்கெல்லாம் நிதி, உள்துறை, பொதுப்பணித்துறை , மக்கள் நல்வாழ்வுத் துறை, தொழில்துறை  போன்ற  முக்கியத்துறைகள் எந்த முதலமைச்சரின் அமைச்சரவையிலும்  வழங்கப்படவில்லை. பால் வளம், செய்திதுறை, பிறபட்டோர் நலம் போன்ற பெரும் அதிகாரமற்ற  துறைகளே வழங்கப்பட்டன/ பட்டிருக்கின்றன. ஆனால் திரு. கக்கன் காமராசரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். இன்னும் சொல்லப் போனால் இன்னொரு காமராசராகவேத் திகழ்ந்தார். 

கக்கன் அவர்களைப் பற்றி சொல்லத் தொடங்குமுன் காஞ்சியில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். அன்றைய காஞ்சி மடாதிபதி சந்திர சேகரப் பெரியவர் ஒரு முறை கக்கன் அவர்களை சந்தித்து ஆக வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டபோது , ஒரு தாழ்த்தப்பட்டவரை நேரடியாக கண்ணால் பார்க்கக் கூடாது என்பதற்காக, அமைச்சர் கக்கனுக்கும் தனக்கும் இடையில் ஒரு பசுமாட்டை நிறுத்தி வைத்துப் பார்த்தார் என்பது ஒரு களங்கம் நிறைந்த வரலாறு. அதனைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.   அப்பாவியான அமைச்சர் கக்கனின் எளிமையும், நேர்மையும் அவருடைய சுயமரியாதையைக் காப்பதற்குக் கூட பயன்படவில்லை என்பதை வேதனையுடன் குறிப்பிட விரும்புகிறேன். பார்ப்பனீயமும் சாதீயமும் வேரூன்றிய இந்த மண்ணில் இத்தகைய வேதனையான விஷயங்கள் நடப்பது வழக்கமே. 


கக்கன் என்கிற பெயர் நிகழ் காலம் முற்றிலுமாக  மறந்துவிட்ட பெயர். இவரை நினைவூட்ட சில வரிகளை  இங்கே எழுதுவது அவசியமாகிறது.  மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் கக்கன் பிறந்து நூறாண்டுக்கு மேலாகிறது.  காமராஜரையே மறந்துவிட்ட மக்கள்  கக்கனையா நினைவில் நிறுத்திப் போற்றப் போகிறார்கள்? பனித்துளியை விடவும் பரிசுத்தமான மனிதர் கக்கன். பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட புனிதர் அவர்.

சத்தியமூர்த்தி காமராஜரை தவிர்க்க முடியாமல் தழுவிக் கொண்டதுபோல், மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். பொது உடைமைக் கட்சியின் புகழ்பெற்ற  தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டு 5 நாட்கள் கடுமையான கசையடிக்குள்ளானார். சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றதைப் பார்த்தவர்கள் விழிநீர் சிந்தினர்.

காமராஜருக்கு உண்மையும், நேர்மையும், இளமையும் நிறைந்த கக்கனிடம் பெருமதிப்பிருந்தது. தான் முதலமைச்சராக ராஜாஜிக்கு பின் பொறுப்பேற்றதும், காமராஜர் கக்கனைத் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக்கினார். தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனத்தின் முதல் மனிதர் கக்கன். (இன்று குறைந்த காலம் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக பணியாற்றியவர்கள் தனியாக தொலைகாட்சி தொடங்கும் அளவுக்கு தனிப்பட்ட வசதி பெறுகிறார்கள்.) 1957-ல் காமராஜர் மீண்டும் முதல்வரானதும் கக்கனுக்கு அமைச்சரைவையில் இடம் கொடுத்தார். தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு,  அறநிலையத்துறை போன்ற பல்வேறு முக்கிய இலாக்காக்களை நிர்வாகித்தார். இவருக்குப் பின் எந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த அமைச்சரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் உள்துறை, பொதுப் பணித்துறை போன்ற முக்கியமான இலாக்காக்களின் பொறுப்பை ஏற்றதில்லை.


பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 -
தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார். விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார். 

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனை போய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘ உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி’  என்று கைகூப்பினார் கக்கன்.

திரு.  கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார். 

இன்று அந்த இடம் 5  கோடிக்கு  மேல் மதிப்புள்ளதாகும். 

எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மா பேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது. யார் யாருக்கோ நினைவுச் சின்னம் அமைக்கும் அரசுகள் கக்கனையும் அவரது நினைவையும் அம்போவென்று விட்டுவிட்டன.  ‘இன்று கக்கனை நினைப்போர் யாருமில்லை.  அவர் செய்த ஒரே பாவம் தாழ்த்தப்பட்டோர் காலத்தில். அதுவும் தோட்டியின்  மகனாகப் பிறந்ததுதான். பார்த்தால் பாவம், தொட்டால் தீட்டு என்னும் வர்ணாசிரம அகராதியில் அவர் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டார். ஏழையாகப் பிறந்து எளிமையாக வாழ்ந்து உயர்ந்த பதவிகளை பலகாலம் வகித்த போதும் ஏழையாகவே மறைந்த திரு. கக்கனை  இன்றைய உலகம் பிழைக்கத் தெரியாதவர்  என்றே பட்டம் தந்து பழி தூற்றும். மூன்று வருடம் வட்டச் செயலாளராக இருக்கும் ஒருவர் வாழும் ஆடம்பர வாழ்வை இன்று நாம் கட்சிக் கொடி தாங்கி ஓடும் கார்களின் வனப்பில்  காணலாம். அறுந்து போன செருப்பைத் தைக்க அரை ரூபாய் இல்லாமல் இருந்தவர்கள் அரசியலில் பதவி பெற்றுப் போடும் ஆட்டம் காண சகிக்கவில்லை. பத்து தலைமுறைக்கு சொத்து தேடி வைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே? தனது தலைமுறையிலேயே தரையில் படுத்துக் கொண்டு மருத்துவம் பார்த்த கக்கனைப் போன்றவர்கள் எங்கே?

ஒரு கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.  பொது வாழ்வுக்கு வந்த பின் எளிமையும் நேர்மையும் வாழ்வில் அங்கமாக இருக்க வேண்டுமென்று கக்கன் காமராசரிடம் கற்றுக் கொண்டு செயல் படுத்தினாரென்றால் காமராசருக்கு பெரியாரின் தாக்கம் இருந்தது என்பதை குறிப்பிட்டாக வேண்டும். பெரியாரின் தாக்கம் இல்லாமல் இருந்து இருந்தால் காமராசர்,  சத்திய மூர்த்தி என்கிற பார்ப்பனரின் சீடராக மட்டுமே இருந்து மறைந்து இருப்பார். அனைவருக்கும் கல்வி என்றும் மதிய உணவுத்  திட்டமென்றும் தனது ஆட்சிகாலத்தில் தொடங்கி நடத்திவர காமராசருக்கு பெரியார் உடைய சிந்தனைகளின் வெளிச்சம் உதவியது. அதனால்தான் நமது நினைவுகளில் உயர்ந்து நிற்கிறார். அதேபோல், அண்ணா முதல்வராக இருந்தார் என்பது சிறப்பல்ல. அவர் பெரியாரோடு இருந்தார் என்பதுதான் அவருக்கான சிறப்பு. பெரியாருக்கு எதிராக தீவிரமாக இயங்கிய மிக மோசமான முதலமைச்சரான பக்தவச்சலத்தை எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்களுக்குக்கூட அவருடைய  நினைவு மறந்து  இருக்கும் அல்லது மறத்துப் போய் இருக்கும். 

தமிழக முதலமைச்சராக பதவி வகித்தவர்களை பெரும்பாலும் மக்களே தேர்ந்தெடுத்தார்கள் என்று சொல்லலாம். பொதுத்தேர்தல் நடைபெறும்போதே இன்னார்தான் முதலமைச்சராக வருவார் என்று மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர் தலைமை தாங்கும் கட்சிக்கு வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். மக்களின் எண்ணத்தை தேர்ந்தெடுக்கப் பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களும் எதிரொலிப்பார்கள். இதே ரீதியில்தான் அண்ணா, எம்ஜியார், ஜெயலலிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். முதன் முதலில் காமராஜர் முதல்வரானதும், முதன் முதலாக கருணாநிதி முதல்வரானதும் அன்றைய சூழ்நிலையில் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூடி தேர்ந்தெடுக்கப்பட்டே. ஆகும் . அதன் பின் நடந்த தேர்தல்களில் இவர்கள் மக்கள் ஆதரவும் சேர்ந்து தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தனர். 

அந்த வகையில் பார்த்தால் காமராஜர் முதல்வரானது ஒரு நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில் . காமராசருக்கு முன்பு இராஜாஜிதான் தமிழ் நாட்டின் முதலமைச்சர். இராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித்திட்டம் அவரது பதவிக்கு வேட்டு வைத்தது. குலக் கல்வித்திட்டம் என்பது கிட்டத்தட்ட மனு நீதியோடு தொடர்புடையது. இராஜாஜி ஒரு பிராமணர் என்பதால் சாதிய அடிப்படையில் மற்றும் தொழில்களின் அடிப்படையில் கல்வித்திட்டத்தைக் கொண்டுவந்தார். அதாவது எந்தத் தொழில் செய்பவர்கள் ஆனாலும்            செய்பவர்களின் வீட்டுப் பிள்ளைகள்  காலை ஒரு நேரம் பள்ளிக்கூடம் போய் படித்துவிட்டு மலை நேரங்களில் அவரவர் சாதி, குல , இனத்துக்குரிய தொழில்களைச் செய்யப்  பழகிக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் கல்வித்திட்டம் அமைக்கப் பட்டது. அதாவது குயவர் இனத்தில் பிறந்த பிள்ளை மாலை வேளைகளில் சட்டி பானை செய்யப் போகவேண்டும் செருப்புத்தைக்கும் இனத்தில் பிறந்த பிள்ளைகள் சக்கிலியத் தொழிலையும் தோட்டிகளின் பிள்ளைகள் தோட்டி வேலைக்கும்  தச்சர் வீட்டில் பிறந்த பிள்ளைகளும் செல்ல வேண்டுமென்பதே குலக்கல்வித்திட்டம். பார்ப்பனப் பிள்ளைகள் மட்டும் இரு நேரமும் கல்வி கற்கும் வழி இது.  

மனுநீதி கூறிய வர்ணாசிரமக் கொள்கையின் அடிப்படையில் இந்தத்திட்டம் இருப்பதாகக் கூறி  நாடெங்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இராஜாஜி பதவி விலக வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியினரே கொந்தளித்தனர். பெரியார் உட்பட்ட திராவிட இயக்கங்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். அப்போது தமிழ் நாட்டின் காங்கிரஸ் தலைவர் காமராசர். அதனால்  இராஜாஜியை  சந்தித்து குலக்கல்வித்திட்டத்தை மட்டும் வாபஸ் பெற்றுக் கொண்டு முதல்வர் பதவியில் தொடரும்படி கோரினார். ஆனால் இரத்தத்தின்  அணுக்களில் பார்ப்பனீயம் கலந்துவிட்ட   இராஜாஜி , காமராஜரின் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தார். இதனால் பிரச்னை,  பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவிடம் சென்றது. நேரு இராஜாஜியை அழைத்து பதவி விலகி விடும்படியும்  வேறொரு முதல்வரைத் தேர்ந்தெடுக்க வழிவிடும்படியும் கட்டளை இட்டார். இதனால் இராஜாஜி பதவி விலக நேரிட்டது. 

அடுத்த  முதல்வராக வேண்டுமென்று காமராஜர் விரும்பவில்லை. ஆனால் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியினர் அவரே முதல்வராக வேண்டுமென்று ஒருமித்த குரலில் கூறினர். இருந்தாலும் இராஜாஜி கடைசி நிமிடம் வரை தனது இடத்தில் சி. சுப்ரமணித்தைக் கொண்டு வந்துவிட வேண்டுமென்று சட்டமன்றக் கூட்டத்தில் சுப்ரமணியத்தின் பெயரை முன் மொழிந்தார். ஆனால் போதுமான ஆதரவு இல்லாமல் சுப்ரமணியம் காமராசரிடம் தோற்றுப் போனார். இதே  இராஜாஜி  காமராஜர் முதல்வராக வருவதை விரும்பவில்லை. ஆனால் 1952 – ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நடைபெற்ற சட்டசபைக் காங்கிரஸ்  கட்சிக் கூட்டத்தில் ராஜாஜி பெயரை காமராஜர் முன்மொழிய ராஜாஜி முதல்வராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  காமராஜரின் முயற்சியால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு துவங்கிய ராஜாஜியின் ஆட்சி, ராஜாஜின் வீண் பிடிவாத்த்தால் குலக்கல்வித் திட்டம் வழியாக 1954 – இல் முடிவுக்கு வந்தது. அதுதான் காமராஜரின் ஆட்சிக் காலத்தை தமிழகம் காண முதல் துவக்கமாக அமைந்தது.

இருபதாம் நூற்றாண்டில் (1903 ஆம் ஆண்டு) பிறந்து பதவியை ஏற்ற முதலாமவர் காமராஜர்தான். இவருக்கு முன்பிருந்தவர்கள் அத்துணை பேரும் பத்தொன்பதாம்நூற்றாண்டில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் தமிழ்நாட்டின் உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது நினைத்தப் பார்த்திட முடியாத நிலையில், முதலமைச்சராக உயர்ந்தவர் காமராஜர். சென்னை மாகாணப் பிரதமராகப் பதவிப் பொறுப்பை ஏற்ற டி. பிரகாசமும் ஏழ்மையான குடும்பதில் பிறந்து, தன்னுடைய தனிப்பட்ட உழைப்பின் காரணமாக உயர்ந்தவர்தான். ஆனால், தன்னுடைய பொருளாதார நிலை உயர்ந்து, வாழ்க்கை மேம்பட்ட பின்னர் பொது வாழ்க்கைக்கு வந்தவர் டி. பிரகாசம். மாறாக வாழ்நாள் முழுவதும் தன்னுடைய பொருளாதார நிலை உயர்வைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் காமராஜர்.

அதே போல் அண்ணாவுடைய மறைவுக்குப் பின் தமிழகம் மற்றொரு முதல்வர் தேர்தலை சந்திக்க வேண்டிய கேட்ட சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டது.  இரா.நெடுஞ்செழியன்தான் இடைக்கால முதல்வராக இருந்தார். அமைச்சரவையிலும் இரண்டாம் இடம் அவருக்குத்தான். தி மு க வின் பொதுச் செயலாளராக அண்ணா காலத்திலேயே “தம்பி வா! தலைமை தாங்க வா!“ என்று அழைக்கப் பட்ட பெருமைகளுக்குரியவர். இரண்டு முதுகலைப் பட்டங்களுக்கு சொந்தக்காரர்.ஆனால் அரசியல் சதுரங்கத்தின் முதல்வர் போட்டியில் கருணாநிதியால் வீழ்த்தப் பட்டார். யாரும் எதிர்பாராமல் கருணாநிதி முதல்வரானார்.  இதன் பிறகே தமிழகத்தில் அரசியல் விளையாட்டு , சூதாட்டம் மிகுந்ததாக ஆனது.    

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
முத்துப் பேட்டை P. பகுருதீன். B.Sc;

நேற்று! இன்று! நாளை?- 1 16

அதிரைநிருபர் பதிப்பகம் | May 22, 2013 | , , , ,


தமிழக சட்டமன்றத்தின்  இவ்வாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும்  கூட்டத் தொடர் அண்மையில் நிறைவுற்றது. ஒரு அரசியல் நோக்கர் என்கிற முறையில், இப்போதெல்லாம் நடைபெறும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற நிகழ்வுகளை உற்று நோக்கிப் பார்க்கும்போது மனதில் பல ஒப்பீட்டு நினைவலைகள் எழுகின்றன. அவைகளை நமக்குள் அன்புடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவைத்தர எண்ணினேன்.

சட்டமன்றம்  கூடப் போகும் நாளைப் பற்றி ஊடகங்கள், பத்திரிகைகள் பரபரப்பு செய்தியாக முக்கியத்துவம் கொடுத்து சட்டமன்றம் கூடி சலசலப்பை ஏற்படுத்தும் முன்பே இவர்கள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தும் சடங்கை செய்துவிடுவார்கள். மானியக் கோரிக்கைகள் வர இருக்கின்றன – மசோதா தர இருக்கிறார்கள் - பரபரப்பான சூழ்நிலையில் சட்டமன்றம் கூடுகிறது- எதிர்க் கட்சிகள் வரிந்து கட்டுகின்றன- ஆளும் கட்சி ஒரு கை பார்க்க தயாராகிறது- அப்படி இப்படி என்று ஏதோ ரேக்ளா ரேசுக்குத் தயார் ஆவது போல செய்திகளை வெளியிடுவார்கள். 

பரிதாபத்துக்குரிய மக்களும் ஆஹா! சட்டமன்றம் கூடுகிறது – நமக்கு ஆகுமான பல நல்ல திட்டங்கள் வரப்  போகின்றன- என்று வாயில் ஈ போவதுகூடத் தெரியாமல் வாயைப் பிளந்து கொண்டு காத்திருப்பார்கள். சட்டமன்றம் கூடும் நாள் வரும். அன்று எதிர்க் கட்சிகள் சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று ஆரம்பிப்பார்கள். காரணம் சட்டமன்றத்தின் கேண்டீனில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தரும் தேநீரில் சர்க்கரை அதிகமாகப் போடுகிறார்கள் எதிர்கட்சிக் காரர்களுக்கு உப்பை அள்ளிப் போடுகிறார்கள் என்பது போல சில காரணம் இருக்கும். அதையும் மீறி உள்ளே போனால் சபாநாயகர் எதிர்கட்சிக்காரர்களை கூட்டாக  வெளியேற்றினார் என்றும் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே போடப்பட்டனர் என்றும்  எதிர்க் கட்சியினர் கோஷம் போட்டு வெளிநடப்பு செய்தனர் என்றும் - ஒரு குறிப்பிட்ட கட்சி உறுப்பினர் விவாதம் நடைபெறும்போது கடந்த வருடம் அவர் சாப்பிட்ட மட்டன் கறியில் ஒரு  பிசிறு பற்களுக்கிடையில் சிக்கிக் கொண்டிருந்ததை குச்சியால் குத்தி நோண்டிக் கொண்டிருந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி தொடர் முழுதும் நீக்கப் பட்டு இருப்பர் இல்லாவிட்டால் இவர் பல்லைக் கடித்தார் உதட்டைத் துருத்தினார்- என்று ஏதாவது குற்றம் சாட்டப்பட்டு தொடர் முழுதும் வெளியேற்றப்படுவார். 

கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை செலவு செய்து கோடான கோடி மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து தேர்ந்தெடுத்து சட்டமன்றத்துக்கு அனுப்பினால் சக்தியில் கல்லைப் போட்ட சங்கதிதான் நடக்கிறது. ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் வெட்டுப் பகை குத்துப் பகை- ஏட்டிக்குப் போட்டி. ஒன்றிலும் அனுசரணை ஒத்துப்போதல் தென்படுவதே இல்லை. தனிவாழ்வுபற்றிய விமர்சனங்கள், சட்டமன்றத்தின் தரத்தை குறைத்துவிடுகின்றன. மக்கள் நாளை நம்மைப் பார்த்து கேள்வி கேட்பார்களே என்கிற உணர்வு ஒரு துளி கூட இல்லை. சத்தம் கொஞ்சம் சூடு பிடித்தால் குழாயடி கூட வெட்கப்படும். சந்தைக்கடை கூட தற்கொலை செய்துகொள்ளும். எதிர்க் கட்சி உறுப்பினர்களை வெளியேற்றுவதில் ஏகபோக உரிமை சபாநாயகருக்கு. 

யார் இந்த சபாநாயகர்? வானளாவிய அதிகாரம் தனக்கு உண்டு என்று பறைசாற்றும்  சபாநாயகரும் ஒரு தொகுதியிலிருந்து மக்களால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப் பட்ட எம். எல் ஏ தான். ஆனால் அதே போல் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை சபாநாயகர் விரும்பினால் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப் பட்டு இருக்கிறது. இந்த அதிகாரத்தை வைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டப் படுகின்றனர். மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை பதவி நீக்கம் செய்தால் மக்களுக்கு என்ன மரியாதை? ஜனநாயகத்தின் யோக்கியதைதான் என்ன?

சட்டசபை வளாகத்தில் சபை நடவடிக்கைகளில் சற்றும் நாகரீகமோ சாதுர்யமோ  காணப்படுவது இல்லை. பழிவாங்கும் படலம் மாறி மாறி அரங்கேறுகிறது. மக்கள் பிரச்னைகள் புறந்தள்ளப் படுகின்றன. மக்களுக்கு பாராளுமன்ற சட்ட மன்றங்களின் மீது சபை நடவடிக்கைகளைக் காணும்போது நம்பிக்கைகள் பொய்த்துப் போகின்றன. 

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் 
தொகையறிந்த தூய்மையவர்”  என்று வள்ளுவர்  வரையறுக்கிறார்.

தூய அறிவாளர்கள் சொல்லின் பொருள் அறிந்து அவையின் தன்மை அறிந்து தாம் சொல்லப் போவதையும் நன்றாக  அறிந்தே எதையும் சொல்ல வேண்டும் என்பதே இதன் பொருள். 

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன 
கெடுப்பார் இலானும் கெடும் “  -என்பதும் வள்ளுவன் வாக்கே. 

இடித்துரைத்து சொல்லித்திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன் தன்னைக் கெடுப்பவர் இல்லாவிட்டாலும் தானாக கேட்டுப் போவான் என்பது இதற்குப் பொருள். 

ஆளும் கட்சியின் குறைபாடுகளை எதிர்க் கட்சிகள் எடுத்துரைக்கும் போது அதனை சீர்தூக்கி சரிசெய்து கொள்வது ஆளும் கட்சியின் கடமை. அதைவிடுத்து தான்தோன்றித்தனமாக ஆளும் கட்சி செயல்ப்படுமானால் அக்கட்சி அடுத்த தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்படும். இவை நாம் கண்டு வரும் வரலாற்றுப் படிப்பினைகள். 

இதைத்தான் அறிஞர் அண்ணாதுரை அவர்கள் 1957-62 சட்டமன்ற நிகழ்ச்சியில்  “ஆளும் கட்சி யானையின்  பலம் கொண்டதாக இருந்தாலும் அதை சரியான பாதையில் செலுத்த அங்குசம் என்ற ஒன்று வேண்டும்” என்று ஆளும் கட்சியை நோக்கி நறுக்கென்று மனதில் படும்படி சொன்னார். மேலும்,    

அதே 1962 ல் அண்ணா அவர்களின் கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம் பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றசாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்தைக்  கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்த நெடுஞ்செழியனை நோக்கி வைத்த குற்றசாட்டு, அண்ணாதுரையின் கட்சிக்கு  நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்பதாகும்  ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் கேலியுடன் தெரிவித்த குற்றசாட்டை மறுத்து “நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்.”

என்று நெடுஞ்செழியன் நயம்பட உரைத்தாராம். பின்னர் அது உண்மையில் நடந்தது. 

மற்றொருமுறை அரசின் மானியக் கோரிக்கைமீது அண்ணா பேசும்போது அன்றைய காங்கிரஸ் அமைச்சர்களில் ஒருவர் இத்தனை கோடி ரூபாய்களை மக்கள் நலனுக்காக செலவழிக்கிறோம் என்றார். இதற்கு பதில் அளித்த அண்ணா “ பத்து பேர் கையிலிருந்து மாறிய ஐஸ் கட்டியைப் போலத்தான் அரசின் திட்டங்கள் மக்களைப் போய் சேரும் சமயத்தில் இருக்கின்றன” என்று இடித்துரைத்தார். அன்றாவது பத்து பேர் கை மாறிய ஐஸ் கட்டியாகத் திட்டங்கள் மக்களைப் போய்ச் சேர்ந்தன. இன்றோ காற்றைக் கையில் பிடித்து காட்டாறு வெள்ளத்தில் கோட்டாறு மண்ணெடுத்து கூட கோபுரமும் மாட மாளிகையும் கட்டி கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு அரசின் திட்டங்கள் கடலில் கரைத்த சந்தனமாக அல்லவா போய்விட்டன? வருங்காலத்தில் சந்தனமும் இல்லாமல் வெறுங்கையை வைத்து கரைப்பதுபோல் கட்சி நாடகம் நடத்துவார்கள் அரசியல்வாதிகள். 

காங்கிரஸ் ஆட்சியில் ஒருமுறை அவை நடவடிக்கைகள் நடைபெறும்போது ஒரு ஆளும் கட்சி  உறுப்பினர் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த எதிக் கட்சி உறுப்பினர் இப்படித்தூங்கலாமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்குக் கலைஞர்  கூறிய கருத்து  அவையில் சிரிப்பலைகளை எழுப்பியது. கலைஞர் கூறினார் “ தூங்கலாம் ஆனால் குறட்டை விடக்கூடாது. தூங்குவது அவர் உரிமை குறட்டைவிட்டால் மற்றவர்களுக்கு இடையூறு. உரிமைப் பிரச்னை  “ என்றார். 

சட்டமன்றத்தில் அரசியல் நாகரீகம் பற்றிப் பேசும் புண்ணியவான்களுக்கு  கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் தொடர்புடைய ஒரு நிகழ்வை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 

சென்னை இராஜதானி சட்ட மன்றத்தில் காங்கிரஸ் ஆளும் கட்சி. இருபத்தி ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் குழு கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களை எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுத்து இருந்தது. சிறந்த எதிர்க் கட்சித் தலைவராக அவர்கள் பணியாற்றி வந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு அப்போது திரு. அனந்தன் நம்பியார் உட்பட இரண்டே   இரண்டு உறுப்பினர்கள்.   கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஒரு உரிமைப் பிரச்னை கொடுக்கப் பட்டு இருந்தது. அதை இன்னொரு நாள் எடுத்துக் கொள்வோம் என்று சபாநாயகர் கூறினார். 

இதற்குக் காரணம் இன்னொரு கம்யூனிஸ்ட் உறுப்பினர் வேறொரு தொழிலாளர் பிரச்னை காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததால் அவைக்கு வரமுடியவில்லை. எனவே கம்யூனிஸ்ட் கட்சி தந்திருந்த உரிமைப் பிரச்சனைய வழி மொழிய ஆள் இல்லை. ஒரு தீர்மானத்தை ஒருவர் முன் மொழிந்தால் மற்றொரு உறுப்பினர் வழி மொழிய வேண்டும். ஒரு உறுப்பினர் வர முடியாத நிலையில் வழிமொழிய முடியாமல் தீர்மானம் தள்ளுபடியாகக்  கூடிய நிலை ஏற்பட்டது. அப்போது யாருமே எதிர்பார்க்காமல் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் எழுந்து நான் வழி மொழிகிறேன் என்று கூறி சபையை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள். 

அப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் “இஸ்லாமியர்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஒத்துவராதே – ஏணி வைத்தாலும் எட்டாதே – எப்படி நீங்கள் வழிமொழிந்தீர்கள்?” என்று கேட்டார்கள். கண்ணியத்துக் குரிய காயிதே மில்லத் அவர்கள் சொன்னார்கள் “ எந்த ஒரு உறுப்பினரும் தனது கருத்தை இந்த அவையில்   பதிய    உரிமை உடையவர்கள். எதிர்பாராத சூழ்நிலையில் அவர்களின் கருத்து பதிவுசெய்யப் படாவிட்டால் அது ஜனநாயகத்தை ஊனமாக்கிவிடும். எனவேதான் வழிமொழிந்தேன். இங்கே இஸ்லாம் கம்யூனிசம் என்கிற பேச்சுக்கு இடமில்லை “ என்றார்கள். இஸ்லாத்தின் சகிப்புத்தன்மைக்கும் சகோதரத்துக்கும்  சான்று பகர்ந்த சம்பவம் அது. 

இதனால்தான் கண்ணியத்துகுரிய காயிதே மில்லத் அவர்களைப் பற்றி கலைஞர்  ஒருமுறை குறிப்பிட்ட போது “ அரசாள்வோர் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டியவை கனிவு! துணிவு! பணிவு!  நான் கனிவைகற்றுக் கொண்டது காயிதே மில்லத்திடம்! துணிவைக் கற்றுக் கொண்டது பெரியாரிடம்! பணிவைக் கற்றுக் கொண்டது அண்ணாவிடம்!  “ என்றார். 

இதேபோல் மற்றொரு சம்பவம் இங்கு நினைவு கூறத் தக்கது. கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் எதிர்க் கட்சித் தலைவராக பணியாற்றியபோது கல்வி அமைச்சராக பணியாற்றியவர் கோவை அவினாசிலிங்கம் அவர்களாவார். ஒரு விருந்தில் இருவரும் சந்திக்க நேர்ந்தது. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டதுடன் பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது காயிதே மில்லத் இடம் கல்வி அமைச்சர் “ இஸ்மாயில் சாஹிப்! உங்கள் மகன் இஞ்சிநீரிங் கல்லூரியில் நன்றாகப் படிக்கிறாரா ?” என்று கேட்டார்.  “ ஆமாம்! ஆமாம்! ஆனால் அவன் இஞ்சினியருக்குப் படிப்பது உங்களுக்கு எப்படித்தெரியும்? என்று  வியப்புடன் கேட்டார் காயிதே மில்லத். 

“எனக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்? அவருக்கு கல்லூரியில் இடம் கொடுத்ததே நான்தானே? (அவினாசிலிங்கத்தின் சொந்தக் கல்லூரி) விண்ணப்பத்தைப் பார்த்ததும் உங்கள் மகன் என்று தெரிந்தது. எதிர்க் கட்சித்தலைவரான உங்கள் மகனை நிராகரிக்க முடியுமா? உடனடியாக கொடுத்துவிட்டோம் என்று மகிழ்வுடன் கூறினார் திரு.  அவினாசி லிங்கம். பேச்சை அத்துடன் முடித்துக் கொண்ட கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அடுத்த நாள் தனது மகனை அழைத்து  "இன்றிலிருந்து நீ கல்லூரிக்குப் போக வேண்டாம் அந்தப் படிப்பையும் தொடர வேண்டாம்" என்று நிறுத்திவிட்டார். 

பலர் வற்புறுத்திக் கேட்டும் இப்படி மகனின் படிப்பை இடை நிறுத்தியதற்கான  காரணத்தை  உடனே அவர் கூறவில்லை. பல குடும்ப உறுப்பினர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு காரணத்தைச் சொன்னார் . அது, “ நான் எதிர்க் கட்சித் தலைவர் என்பதால் என் மகனுக்கு சீட் கொடுத்ததாக கல்வி அமைச்சர் சொல்கிறார். அப்படிப் பட்ட தயவு நமக்கு தேவை இல்லை.” 

இப்படிப்பட்ட பண்பாளர்களை இன்று ஹாங்காங்கில் வலை வாங்கி வந்து வங்காள விரிகுடாக் கடலில் இரட்டை மடி வீசி அரித்து சலித்துப்  பார்த்தாலும் சட்டமன்றங்களில் நாம் காண முடியுமா?

இன்ஷா அல்லாஹ் தொடரலாம். 
முத்துப் பேட்டை P. பகுருதீன் B.Sc;