Showing posts with label நாளை. Show all posts
Showing posts with label நாளை. Show all posts

நேற்று! இன்று! நாளை! - தொடர் - 22 23

அதிரைநிருபர் பதிப்பகம் | September 18, 2016 | , , , ,

கவிஞர் வைரமுத்து ஒரு கவிதை எழுதி இருந்தார்.

பசுவினைப் பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்
காம்பினில் விஷம் என்று கரக்கவா முடியும்? 

– என்பது அந்தப் பாடல் வரிகளாகும். காஞ்சி மடாதிபதி பற்றி அந்தப் பாடலின் வரிகளை சற்று எதுகை மோனையுடன் மாற்றி எழுதினால் இப்படி எழுதலாம் (கவிக் குடும்பத்தோர் மன்னிப்பார்களாக!)

பாம்பினைப் பசுவென்று சாட்சி சொல்ல முடியும்
காம்பினில் விஷம் என்று கரக்கவா முடியும்? 

– என்பதே மாற்றப்பட்ட வரிகள். 

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரை ஒரு பாம்பு என்று பலர் வர்ணிக்கிறார்கள். இந்தப் பாம்பை ஒரு பசு என்று சாட்சிதான் சொல்ல முடியும். ஆனால் இப்படிப் பொய் சாட்சி சொன்ன காரணத்தால் , இந்தப் பாம்பு பசு கறக்கும் பாலை சுரக்குமா? கறக்குமா? அல்லது அதன் இயல்பான விஷத்தைத்தான் சுரக்குமா? பாம்பு எப்படி பசுவின் வேஷம் போட்டாலும் பாம்பு பாம்புதான்.

சங்கராச்சாரியாரை ஜெகத் குரு என்று கண்மூடித்தனமாகப் போற்றும் பொதுமக்கள் புரிந்து கொள்வதற்காக அங்கே இங்கே எல்லாம் போகாமல், மகாபாரதத்தின் ஒரு காட்சியை இங்கு விவரிக்க விரும்புகிறோம். இறுதிப் போர் நடக்கும் முன்பே போரின் கொடுமைகளை அர்ஜுனன் நினைத்துப் பார்க்கிறான். அர்ஜுனனின் அச்சத்தைப் போக்குவதற்காக, கிருஷ்ணன் இவ்வுலகில் மனிதனின் தோற்றம் பற்றி அவனுக்கு விளக்குகிறார்.

“அர்ஜுனா ! நீ புல்லாய் புழுவாய் மீனாய் பறவையாய் பிறந்து பின் மனிதனானாய் . உன் பயணம் மிகப் பெரியது . நீ அர்ஜுனனாக இருப்பது இப்பயணத்தின் ஒரு பகுதி. ஒரு சிறிய புள்ளி. இந்தப் பயணம் தொடரும். பயணம் தொடர்வதற்காக உடல் அழியும். நீ உடல் அல்ல, ஆன்மா. ஆன்மாவின் பயணம் மிகப் பெரியது. காமக்குரோதம் நீக்கி மூலாதார சக்தியைத் தூண்டிவிட்டு அனாதகம் என்கிற சக்தியை நோக்கி நடந்து, ருசி, பசி, வாசனைகளை விலக்கி, இன்னும் நடந்து விசுத்தி என்ற இடத்தை அடைந்து, அந்த சக்தியின் துணையோடு ஆஞ்ஞை அடைந்தால் பரமானந்தமான சஹஸ்ரம் அடையலாம். இதுவே ஆத்ம பயணத்தின் வழி" என்கிறார்.

அதாவது அடிப்படையில் இந்து தர்மம் என்பது காமம், குரோதம், மோகம் ஆகிய மன வன்மங்களை துறந்துவிடச் சொல்கிறது . அதிலும் குறிப்பாக ஒரு மதத்தின் மரியாதைக்குரிய தலைமை பீடத்தில் இருப்பவர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் வாழ்ந்து காட்டுவது அவசியமாகும். இந்த அடிப்படைத் தகுதிக்கு காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி தகுதிபடைத்தவராக வாழ்ந்தாரா என்பதே நம் முன் நிற்கும் விடை பெற இயலாத வினா.

சங்கர மடத்தை நிறுவிய ஆதி சங்கரரைப் பற்றியோ அவரது புனித நோக்கங்கள் அல்லது செயல்பாடுகள் நெறிமுறைகள் பற்றி விமர்சனங்கள் எழவில்லை. அவருடைய கொள்கைகளை ஏற்பவர்களும் சரி ஏற்காதவர்களும் சரி அவரது தனிப்பட்ட வாழ்வைப் பற்றி சந்தேகப் படவில்லை. அதே போல்தான் சுவாமி விவேகானந்தரும் வாழ்ந்தார். தான் நம்பியதை அவர் உபதேசித்தார். தனிமனித வாழ்வில் ஒழுக்கத்தை அவர் சீர் குலைத்தாக எவரும் அவரை நோக்கி குற்ற விரலை நீட்டவில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, தயானந்த சரஸ்வதி மதுரை ஆதீனம் போன்றவர்களைப் பற்றி யாரும் விமர்சித்ததாக நாங்கள் படிக்கவில்லை. அப்படி விமர்சனத்துக்குரிய செயல்களில் அவர்கள் ஈடுபட்ட செய்திகளும் இல்லை. இதே காஞ்சியில் மடாதிபதியாக இருந்து மறைந்த முன்னாள் பெரியவர் சந்திரசேகர் சுவாமி பற்றி விரலை அல்ல புருவத்தை கூட உயர்த்தியவர்கள் கிடையாது. ஆனால் இப்படிப்பட்ட பெரியவர்கள் இருந்த இடத்துக்கு வந்த ஜெயேந்திரர் பற்றி மட்டும் ஏன் விமர்சனங்கள் வருகின்றன? காரணம் நெருப்பு இல்லாமல் புகையவில்லை. காஞ்சி மடத்தின் வரலாறு பற்றி விக்கிபீடியாவிடம் கேட்டால் அது இப்படிக் கூறுகிறது.

“காஞ்சி சங்கர மடம் (Kanchi Sankara matha) தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஓர் இந்து சமய துறவியர் இருப்பிடமாகும். இது காஞ்சி காமகோடி பீடம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆதி சங்கரர் இங்கு சமாதியடைந்ததாகவும் இந்த மடத்தை நிறுவியதாகவும் கூறப்படுகிறது. இந்த மடத்தின் தலைவர்கள், பீடாதிபதிகள், மற்றநான்கு (சிருங்கேரி, துவாரகா, பூரி, சோதிர்மத்) சங்கரமடத் தலைவர்களைப் போலவே, "சங்கராச்சாரியர்" என்றப் பட்டத்துடன் விளங்குகின்றனர். காஞ்சி மடம் கும்பகோணத்தில் இருந்த 18ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் புகழ்பெறத் துவங்கியது. சிலர் இதனை சிருங்கேரி மடத்தின் கிளையாகக் கருதுகின்றனர். இன்று தென்னிந்தியாவில் உள்ள முதன்மையான இந்து சமய அமைப்புகளில் ஒன்றாக இந்த மடம் விளங்குகிறது.

நவம்பர் 2004ஆம் ஆண்டு இந்த மடத்தின் பீடாதிபதிகளாக இருந்த செயந்திர சரசுவதி மற்றும் விசயேந்திர சரசுவதி சுவாமிகள் இருவரும் சங்கர்ராமன் கொலை வழக்கில் கைதானதை அடுத்து இதற்கு இழுக்கு ஏற்பட்டது."

சங்கர ராமன் கொலை வழக்கில் சிக்குவதற்கு முன்பாகவே ஜெயேந்திரர் மீது அரசல் புரசலாக சில பாலியல் தொடர்பான செய்திகள் கசிந்தன. கோடம்பாக்கத்தில் இருந்துதான் கிசுகிசுக்கள் வரவேண்டுமென்ற நியதிகள் மாறி ஒரு பெரும்பான்மை மதத்தைப் பின்பற்றும் மக்கள் மதித்து, நம்பி வழிபடும் பாரம்பரியமும் புனிதமும் மிக்கதாக மக்கள் கருதும் மதச் சார்பின்றி நமது மரியாதைக்கும் உரிய காஞ்சி மடத்தில் இருந்தும் கிசுகிசுக்கள் கசிய ஆரம்பித்தன எனபது ஒரு துரதிஷ்டமான நிலை. காமம் குரோதம் மோகம் போன்ற மனதின் வன்மங்களை மறந்தவர்களும் துறந்தவர்களும் தலைமைதாங்கும் மதத்தின் மடத்தில் காமத்தின் அடிப்படையிலான காரியங்களும், குரோதத்தின் அடிப்படையிலான கொலை போன்றவையும் நடந்ததாக கூறப்பட்டது . இந்தக் காரியங்களுக்கு முன்னோட்டமாக பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சியடையும்படி திடீரென்று அங்கு ஒரு சம்பவம் நடந்தது. அதாவது உலகப் புகழ் பெற்ற மடத்தின் தலைவராக இருந்த ஜெயேந்திரர் திடீரென்று காணாமல் போய்விட்டார். ஒரு உடலுக்குத் தலை இல்லாமல் போனது. முண்டம் மற்றும் துடித்துக் கொண்டு இருந்தது. தலையைத்தேடி இந்த நாட்டின் தலையே தலைக் காவிரி என்கிற இடத்துக்கு ஆளனுப்பித் தேடியது. ஆகவே ஜெயேந்திரர் மீது சங்கர ராமன் கொலை வழக்கு தொடரப் படுமுன்பே இவரது நன்னடத்தை பற்றிய சான்றிதழ் திருப்தி இல்லை என்றே வழங்கப் படக் காரணமானார்.

இது நடந்தது 1986 ல் . எல்லாப் பத்திரிகைகளிலும் வந்த விபரப்படி, ஜெயேந்திரர் தனது துறவறத்துக்கு அடையாளமான இழக்கக்கூடாத தண்டத்தை எங்கோ போட்டு விட்டு யாருக்கும் தெரியாமல், வெங்கட்ராமன் என்பவரின் பெண்னுடன் எங்கோ மாயமானார். ஒருவேளை அவருக்கு துறவறம் கசந்து இருக்கலாம். இல்லறத்தை நாடி இருக்கலாம். இது தனிமனித உணர்வுகளின் அடிப்படையில் ஒரு தனிமனிதர் எடுக்கும் முடிவு. உடல் இச்சைகளை அடக்கத் தாக்குப் பிடிக்காத துறவறம் அவரை மடத்தைவிட்டு ஒடி ஒளியச் சொன்னது. ஒரு மாதத்திற்கு மேல் குடும்பம் நடத்தினார். அப்போது மாயமாக மறைந்த சங்கராச்சாரி அவர்களை , சிபிஐ தேடிக் கண்டுபிடித்து தலைக் காவிரிக்கு போய் அந்தப் பெண்ணை இவரிடமிருந்து பிரித்துக் கூட்டிக் கொண்டு வந்த தகவல்கள் மிகவும் ஆச்சரியமானவை. மாயமாய் மறைந்த தலைவர் மாயாஜாலமாக காஞ்சிக்குக் கொண்டு வரப்பட்டார். இதற்குக் காரணம் அன்றைய குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனின் தலையீடு. அந்தக் கால இடைவெளியில் சின்ன சங்கராச்சாரி விஜயேந்திரரை நியமித்தது சங்கரமடம். இதுதான் இன்று இரண்டு சங்கராச்சாரிகள் இருப்பதன் காரணம்.

அடுத்து, பிரபலமான பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சங்கராச்சாரியார் தன்னிடம் முறை தவறி நடந்து கொண்டது குறித்து நவம்பர் 29, 2004 தேதி புகார் கொடுத்தார்.

அப்போது நிருபர்களுக்கு அனுராதா ரமணன் கொடுத்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் அதிர்ச்சியளிப்பவையாக இருந்தன.

“1992 ஆம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் இன்னொரு பெண்ணும் (இவர் தான் சங்கராச்சாரியாரிடம் அறிமுகப்படுத்தியவர்) மடத்துக்கு சென்றோம். அங்கு உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டு இருந்தோம் அப்போது சங்கராச்சாரியார் ஆன்மீகம் பற்றி பேசினார். நான் தலை குனிந்து எழுதிக் கொண்டு இருந்தேன். ஆன்மீகவாதியின் பேச்சு திடீரென்று ஆபாசமாக மாறியது. அப்போது நான் என் தலையை நிமிர்த்தி அவரை பார்த்தேன். அப்போது எனக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னுடன் வந்து இருந்த பெண் சங்கராச்சாரியாருடன் மிக நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு இருந்தார். அவர் என்னிடம் மிக ஆபாசமாக பேசினார். அவரது விருப்பத்துக்கு என்னையும் இணங்கும்படி வற்புறுத்தினார். என்னால் கோபத்தை தாங்கிக் கொள்ளமுடியாமல் நீயெல்லாம் மனுஷனா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன். அப்போது ஒரு வார பத்திரிகையில் எனக்கு ஏற்பட்ட துன்பத்தை தொடராக எழுதி வந்தேன். அப்போதும் எனக்கு மிரட்டல் வந்தது. அதே போல போலீசில் புகார் கொடுக்க முடியாத படி அவர்கள் எனக்கு பல தொல்லைகள் கொடுத்தார்கள் “ என்று விதவையான அனுராதா ரமணன் கூறினார்.

தினபூமியில் (5.12.04) அன்று வெளிவந்த செய்தி. "காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அடிக்கடி இளம்பெண்கள் பலரை மடத்துக்கே வரவழைத்து சந்தித்திருக்கிறார். இதில் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த அனுராதா என்ற பெண்ணும் ஒருவர். இதேபோல, கும்பகோணம் வனஜா, ஆந்திராவைச் சேர்ந்த ஜெயா உள்ளிட்டப் பெண்கள் ஜெயேந்திரரை அடிக்கடி சந்தித்துள்ளதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காஞ்சி சங்கர மடத்துடனும், ஜெயேந்திரருடனும் நெருங்கிய தொடர்புவைத்திருந்த நடிகைகளில் சொர்ணமால்யா முக்கியமானவர். இது நடக்க, சில ஆண்டுகளுக்கு முன்புதான் சொர்ணமால்யாவுக்கு திருமணம் நடந்தது. ஆனால், திடீரென்று தன் கணவரிடமிருந்து சொர்ணமால்யா விவாகரத்துக் கோரினார். இந்த விவகாரம் சங்கர மடத்திலும் வைத்து பஞ்சாயத்து செய்யப்பட்டது. சங்கராச்சாரியாருடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, கணவரிடமிருந்து நிரந்தரமாகப் பிரிய சொர்ணமால்யா முடிவெடுத்தார்.

சொர்ணமால்யா தன் கணவரை பிரிந்து விடுவதற்கு ஜெயேந்திரரே ஆலோசனை வழங்கினார். இந்தச் சூழ்நிலையில் காண்ட்ராக்டர் ரவி சுப்ரமணியம் மூலம் சென்னையில் சொர்ணமால்யாவுக்கு வீடு ஒன்றை ஜெயேந்திரரே வாங்கி கொடுத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சொர்ணமால்யா அடிக்கடி சங்கர மடத்துக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதேபோல சங்கர மடப்புள்ளிகளும் சென்னையில் உள்ள சொர்ணமால்யாவின் வீட்டுக்கே தேடிச் சென்று அவரைச் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சொர்ணமால்யாவுக்கும் சங்கர மடத்திற்கும் இருந்த நெருக்கம் குறித்து பரபரப்பான தகவல்களை அவரின் கணவரே காவல்துறையிடம் கூறினார்.

சங்கரராமன் கொலை வழக்கிலும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப் பட்ட வழக்கிலும் இன்னும் புழல் சிறையில் இருக்கும் ரவி சுப்பிரமணியம் தந்த முதல் வாக்குமூலத்தில் ஜெயேந்திரர் பல பெண்களுடன் இருந்துள்ளதை நேரில் பார்த்ததாக ரவி சுப்பிரமணியம் அதிர்ச்சிகரமான தகவல்களைக் கூறினார். சங்கர ராமன் வழக்கில் இவர்தான் பிரதானசாட்சி. பின்னர் என்ன காரணமோ முதல் பிறழ் சாட்சியாகவும் மாறினார்.

இன்னொரு திருவிளையாடலும் வெளிவந்தது இப்படி ஒரு வாக்குமூலம் மூலம். “நான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவன். என் மனைவி சித்ரா, , நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். 1994ம் ஆண்டில் எனக்கும்மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியதால் பிரிந்துவிட்டோம். தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த நான் பின்னர் கட்டட காண்ட்ராக்ட் எடுத்து செய்ய ஆரம்பித்தேன். என் நண்பர் விஸ்வநாதன் மூலமாக காஞ்சி மடத்துடன் தொடர்பு கிடைத்தது. விஸ்வநாதனின் அக்காள் லீலாவுக்கும் ஜெயேந்திரருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. லீலாவும் ஜெயேந்திரரும் மணிக்கணக்கில் டெலிபோனில் அரட்டை அடிப்பது வழக்கம். அவர் மூலமாக ஜெயேந்திரரின் அறிமுகம் கிடைத்தது.

1995ம் ஆண்டில் நான், விஸ்வநாதன், அவரது மனைவி சரஸ்வதி மூன்று பேரும் தாம்பரத்தில் ஜெயேந்திரர் தங்கியிருந்த கல்யாண மண்டபத்தில் அவரை சந்திக்கப் போனோம். இரவு நேரத்தில் ஜெயேந்திரரை நாங்கள் தனித்தனியாக சந்திக்க வைக்கப்பட்டோம். பின்னர் மூவரும் வீட்டுக்குத் திரும்பியபோது, தன்னிடம் ஜெயேந்திரர் தகாத முறையில் நடக்க முயன்றதாக சரஸ்வதி எங்களிடம் கூறினார். இதையடுத்து ஜெயேந்திரரை கண்டிக்குமாறு லீலாவிடம் சொன்னோம். அவரும் ஜெயேந்திரருடன் பேசினார். இதைத் தொடர்ந்து சரஸ்வதியிடம் டெலிபோனிலேயே ஜெயேந்திரர் மன்னிப்பு கேட்டார்.

அதே சமயம் நானும் லீலாவும் தொடர்ந்து, அடிக்கடி காஞ்சி மடத்துக்கு சென்று வந்தோம். லீலாவுடன் மணிக்கணக்கில் ஜெயேந்திரர் தனியே பூட்டிய அறையில் இருப்பார். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்து போனதால், என்னை சங்கராகல்லூரிக் குழுவின் உறுப்பினராக ஜெயேந்திரர் நியமித்தார். அந்தக் கல்லூரிக்காக கட்டடம் கட்ட ரூ. 1.6 கோடி செலவிட திட்டமிட்டார். அந்தப் பணியை என்னிடம் தந்தார். நான் கட்டித்தந்தேன். இதையடுத்து காஞ்சி மடத்தின் பல கட்டட வேலைகளை எனக்குத் தந்தார் ஜெயேந்திரர்.

ஜெயேந்திரருக்கு பெண்கள் விஷயத்தில் நிறைய தொடர்பு இருந்தது. மதிய நேரத்திலேயே தனது அறைக்குள் பல பெண்களுடன்அவர் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

மடத்தின் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் இயக்குனர் நடராஜனின் மனைவி பிரேமா, ஹைதராபாத்தில் ஆல் இந்தியாரேடியோவில் வேலை பார்க்கும் பெண் ஆகியோரை ஜெயேந்திரருடன் தவறான நிலையில் நான் பார்த்திருக்கிறேன்.

மருத்துவமனையில் கேண்டீன் வைத்திருக்கும் பத்மாவையும் மதிய நேரத்தில் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன். மடத்துக்குச்சொந்தமான நசரத்பேட்டை பள்ளியின் முதல்வர் ரேவதியும் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன்.

மதிய ஓய்வு நேரத்தில், பக்தர்களை சந்திக்காதபோது இவர்களுடன் இருந்துள்ளார் ஜெயேந்திரர். இதைத் தவிர நிறைய புளு பிலிம் படங்களையும் ஜெயேந்திரர் பார்ப்பார். மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரை இதெல்லாம் நடக்கும்.
2000ம் ஆண்டில் ஒருநாள் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் ஜெயேந்திரர் இருந்தார். அநத நேரத்தில் ஒரு மிகப் பெரியதொழிலதிபரின் மனைவி ஜெயேந்திரரை சந்திக்க வந்துவிட்டார். அவர் மிகப் பெரிய இடம் என்பதால் அனுமதி இல்லாமலேயேஜெயேந்திரரின் அறைக்குள் நுழைய வந்துவிட்டார்.

இதனால் பக்கத்து அறையில் இருந்த என்னை அவரசமாக அழைத்த ஜெயேந்திரர், அந்த ஆந்திரா பெண்ணின் கணவரைப் போல நடிக்குமாறு கூறினார். ஜெயேந்திரின் அறைக்குள் அரைகுறை ஆடையுடன் இருந்த அந்த இளம் பெண்ணின் அருகில் அவரதுகணவர் போல நடித்தேன். தொழிலதிபரின் மனைவி வந்துவிட்டுப் போகும் வரை அப்படியே உட்கார்ந்திருந்தேன். இப்படியெல்லாம் இத்யாதி இத்யாதி.

இவ்வளவு தூரம் தனது தவறான நடத்தைகளால் ஒரு புனிதமான இடம் என்று போற்றப்படும் இடத்தின் தலைவர் நடந்திருப்பது அவரது அந்தரங்க நம்பிக்கைக்குரிய ரவி சுப்ரமணியாலேயே மேற்கண்டவாறு எல்லாம் வாக்குமூலமாகத்தரப்பட்டு பத்திரிகைகளில் வெளியானவைதான். அப்படி ஒரு நடத்தை இருந்த ஒருவர், கொலையும் செய்ய முகாந்திரம் இருந்து இருக்கும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து. பல சாதாரண தனி மனிதர்களின் வாழ்வில் காம வெறியாட்டம் கொலையில் முடிந்த கதைகளை அன்றாடம் பார்க்கிறோமே!

இதே சங்கராச்சாரியார் ஒரு பிராமணராக இருந்ததாலும் உயர்ந்த இடத்தின் செல்வாக்கு இருந்ததாலும் தற்போது தப்பித்துக் கொண்டார். ஆனால், இதே போல ஒரு வழக்கு கற்பழிப்பு, கொலை ஆகியவற்றுக்காக வேறொரு சாமியார் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். அவர்தான் பிரேமானந்தா சாமியார். பாவம்தான் இவர். தவறுகள் செய்ததுதான் செய்தார் ஒரு சூத்திரனாகப் பிறந்துதான் அவற்றை செய்ய வேண்டுமா? ஒரு பிராமணராக இருந்து இருந்தால் இவரும் தப்பித்து இருக்கலாமோ என்றே தோன்றுகிறது.

தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் காஞ்சிபுரத்தில் சங்கரராமன் குடும்பத்தினரை செய்தியாளர்கள் சந்தித்தார்கள். . கண்ணீரோடு முடங்கிக் கிடந்த சங்கரராமனின் மனைவி பத்மா, சோகம் அப்பிய முகத்துடன் பேசினார். 'என் கணவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதவர். பாவிகள் அவரைத் துள்ளத் துடிக்க அவர் வேலை செய்த கோயிலிலேயே வெட்டிக் கொன்னாங்க. கொலையில சம்பந்தப்பட்டவங்க பெரிய இடம்னு தெரிஞ்ச பிறகும் விடாம வழக்கை நடத்த ஒத்துழைப்பு தந்தோம். 

ஒருநாள், விசாரணைக்காக போனபோது நீதிமன்ற வளாகத்திலேயே வெச்சி மூணு பேர், 'சாட்சியத்தை மாத்தி சொல்லலைன்னா உன் பிள்ளைங்களை ஆசிட் தொட்டியில வீசிடுவோம். அடையாளம் தெரியாம போயிடுவாங்க’னு மிரட்டினாங்க. கோயில்ல வெச்சி ஒரு உயிரைப் பறிக்கத் துணிஞ்சவங்க... இதையும் செய்திடுவாங்கங்கன்னு பயந்து போனேன். அவருதான் போயிட்டாரு... என் பிள்ளை களையாவது காப்பாத்து வோம்னு நீதிமன்றத்துல மாத்திச் சொல்லவேண்டியதாகிடுச்சி'' என்ற பத்மாவின் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. துடைத்துக்கொண்டு தொடர்கிறார். ''போலீஸ்காரங்க அடையாள அணிவகுப்புக்கு தனி வேன்ல அழைச்சிட்டுப்போனாங்க. நீதிமன்றத்துல குற்றவாளிகளை சரியா நான் அடையாளம் காட்டினேன். உயிருக்கு பயந்துதான் இந்தக் காரியத்தைச் செய்தேன். 

அவ்வளவு அச்சுறுத்தல் இருந்த சூழலில், எங்களை மறுபடியும் தனி வேன்ல கூட்டிட்டு வந்து வீட்டுல விட்டிருக்கலாம். ஆனா, போலீஸ்காரங்க, சர்வசாதாரணமா பஸ்ல திரும்பிபோகச் சொன்னாங்க. எப்போ என்ன நடக்குமோன்னு பயந்துக்கிட்டுத்தான் பஸ் ஏறினேன். 

அன்னிக்கு நடுராத்திரி 12 மணிக்கு தன்னந்தனியா வீடுவந்து சேர்ந்தோம். அதுல இருந்து யாரையுமே நாங்க நம்பலை. யார் மேலயும் நம்பிக்கை வைக்கிற நிலையில நாங்க இல்லை. நாங்க யாரைப் பகைச்சிக்கிட்டோமோ அந்தப் பெரியவங்க எதையும் செய்யத் துணிந்தவங்க. குற்றவாளிகளை அடையாளம் காட்டிட்டு வந்த அன்றைக்கு எங்க உயிருக்கு ஏதாவது ஆகியிருந்தா யார் பொறுப்பு? 

அநாதையாதானே இருக்கோம்? இனி நமக்கு யாரும் பாதுகாப்பில்லைனு முடிவுபண்ணித்தான் சாட்சியை மாத்திச் சொன்னோம். ஆனா, அந்த ஒரு காரணத்துக்காக எங்க ஒத்துழைப்பு இல்லைன்னு அரசு வக்கீல் சொல்லியிருக்கார். இது நியாயமா? அதுக்காக அவா அத்தனை பேரையும் விட்டுர்றதா?'' என்று கேட்ட பத்மா, எதையோ யோசித்தவராக இருந்தார்.

''கடவுள் எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கார். அவா பெரிய இடம். அவாளை எதிர்த்துப் போராட எங்களிடம் தெம்பும் திராணியும் இல்லை. நான் ஜெயலலிதா அம்மாவைத்தான் நம்புறேன். வழக்கை இத்தோட விட்டுடாம மறுபடியும் அப்பீல் போக நடவடிக்கை எடுக்கணும். எத்தனை வருஷமானாலும் எங்களுக்கு நீதி கிடைக்கணும். இது முதல்வர் அம்மாவுக்கு கண்ணீரோட நான் வைக்கிற கோரிக்கை'' என்றார் வழிந்த கண்ணீரை துடைத்தபடி.

அம்மா பேசுவதை கலங்கிய நிலையில் கவனித்தபடி இருந்தார் அவரது மகன் ஆனந்த் சர்மா. 'குற்றம் நிரூபணம் ஆகாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சங்கரராமன் கொலையில் இவர்களுக்குத் தொடர்பில்லை என்றால் சங்கரராமனை கொன்றது யார்? தன்னைத்தானே கத்தியால் வெட்டிக்கொண்டு செத்துப்போக என் தந்தை என்ன மனநோயாளியா?

2001-ல் சீனா செல்ல இருந்த ஜெயேந்திரரை, 'மடாதிபதிகள் கடல் கடந்து செல்லக்கூடாது’ என வழக்குப் போட்டுப் போகவிடாமல் என் தந்தை தடுத்தார். தொடர்ந்து மடத்தின் அட்டூழியங்களை வெளியில் சொன்னார். ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்களின் முறைகேடான செயல்களைச் சொந்தப் பெயரிலும் புனைபெயர்களிலும் புகார்களாக எழுதினார். இதற்கு ஆதாரமான கடிதங்களை முக்கிய ஆதாரங்களாக காவல் துறையினர் எங்கள் வீட்டிலிருந்து கொண்டுசென்றனர்.

அதிலேயே என் தந்தைக்கும் ஜெயேந்திரர் தரப்புக்கும் இருந்த பகை வெளிப்படையாகத் தெரியும். உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்கு மூலமாகவே இதைக் கூறியிருக்கிறேன். அடையாள அணிவகுப்பிலும் சரியான குற்றவாளிகளை அடையாளம் காட்டினோம். அதை ஏற்றுக் கொண்டனர். ஆனால், புதுவை நீதிமன்றத்தில் முதல் விசாரணையின் போது உயிர் பயத்தினால் நாங்கள் சாட்சியத்தை மாற்றிச் சொல்ல வேண்டியதானது. ஏற்கெனவே கொலை பாதகம் செய்த அவர்களின் மிரட்டலுக்கு எங்களைப் போன்ற சாமான்யன் பயப்படாமல் இருக்க முடியுமா? ஆண்டவன் நீதிமன்றத்தில் நிச்சயம் அவர்களுக்கு தண்டனை உண்டு'' என்றார் விரக்தியும் வேதனையும் கலந்த குரலில்.

சங்கரராமனின் மருமகன் கண்ணனிடம் பேசியபோது, 'இந்தத் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. போதிய ஆதாரங்கள் இருந்தும் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் விடுவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.'' என்று சொன்னார்.-

இங்கு குறிப்பிட்டவை வெகு சிலவே. தட்ஸ்தமிழ், தினபூமி நாளிதழ்களில் வந்த துண்டு செய்திகளை கொண்டு தொகுத்துள்ளேன். ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய இதழ்களின் பழைய பதிப்புகளை புரட்டி பார்த்தால் தான் சங்கராச்சாரி ஜெயந்திரரின் உண்மையான முகம் ஒளிமயமாகத் தெரியும்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சில வினோதமான வழக்குகளுடன் சந்திக்கலாம். 
தொடரும்...
ஆக்கம்: முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc.,
உருவாக்கம் : இபுராஹிம் அன்சாரி

நேற்று ! இன்று! நாளை! - தொடரிலிருந்து ரிவைண்ட் ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | March 26, 2016 | , , , , , ,

நாவலர் நெடுஞ்செழியன் கட்சியில் மூத்தவர். அனுபவம் நிறைந்தவர், கட்சியின் முக்கியப் பொறுப்புகள் பலவற்றில் இருந்தவர். முக்கியமாக, அண்ணாவின் நம்பிக்கையைப் பெற்றவர். அண்ணா இருந்த போதே கட்சியின் பெரிய பதவியான  பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தவர். முதல்வர் பதவிக்குத் தகுதியானவர். இன்னொரு பக்கம், கருணாநிதிக்கும் கட்சிக்குள் நல்ல செல்வாக்கு. தட்ட வேண்டிய இடத்தில் தட்டி வெட்ட வேண்டிய இடத்தில் வெட்டி குட்ட வேண்டிய இடத்தில் குட்டி வளர்ந்த சுறுசுறுப்பான இளைஞர். கடுமையான உழைப்பாளி. கட்சி வளர்ச்சிக்காக நிதி சேகரிப்பதில் வல்லவர். தொண்டர்கள் மத்தியில் மாவட்டமெங்கும் இணைந்து பழகி ஒட்டி உறவாடி   நன்கு அறிமுகமானவர்.


போட்டி ஏற்பட்டுவிட்டது. வாக்கெடுப்பு நடத்தவேண்டிய சூழல். திடீரென நெடுஞ்செழியன் எழுந்தார்.  ‘தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படுவதை நான் விரும்பவில்லை. ஒரு மனதாக என்னைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் மட்டுமே நான் தேர்தலில் நிற்பேன் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்துள்ளேன். எனக்குப் போட்டி ஏற்பட்டுவிட்ட நிலையில், நான் போட்டியிட விரும்பவில்லை. போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறேன்’ சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த அறையில் இருந்தும் வெளியேறிவிட்டார். கூட்டத்தில் லேசான சலசலப்புகள் ஏற்பட்டன. எனினும், முக்கியப் போட்டியாளர் விலகிக் கொண்டதால் திமுக சட்டமன்றக் குழுவின் தலைவராக கருணாநிதி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உண்மையில் அடுத்த முதல்வர் யார் என்ற பேச்சு எழுந்தவுடனேயே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலரையும் அழைத்துப் பேசத் தொடங்கி விட்டார் எம்.ஜி.ஆர். பேசப்பேச பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கருணாநிதிக்கு இருப்பது எம்.ஜி.ஆருக்குப் புரிந்துவிட்டது. விளைவு, முடிவெடுக்காமல் இருந்தவர்களையும் கருணாநிதியின் பக்கம் திருப்பத் தொடங்கினார். அதை எம்.ஜி.ஆரே பின்னாளில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் வெளியிட்டார். 

இதுகுறித்து நாவலர் நெடுஞ்செழியன் தனது சுயசரிதையில் ‘கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் திமுக எம்.எல்.ஏக்களை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து விருந்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆதித்தனாரும் தன் பங்குக்கு நிறைய உதவிகளைப் பொருளாதார ரீதியாகச் செய்து கொடுத்தார்’ என்று எழுதியிருக்கிறார்.

பெரிய அளவில் கருணாநிதிக்கு ஆதரவு உருவாகியிருக்கிறது என்று தெரிந்ததும் நேராக கருணாநிதியிடம் சென்று பேசினார் எம்.ஜி.ஆர். பெரும்பாலானோரின் விருப்பத்தைத் தட்டிக்கழிக்கவே கூடாது என்று எம்.ஜி.ஆரும் மற்ற திமுக முன்னணித் தலைவர்களும் முடிவெடுத்தனர்.   பெரியாரின் ஆதரவும் கருணாநிதிக்கே இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் தொடர்ந்து முதலியார் இனத்தவர்கள் முதல்வராக வந்த நிலை மாறி ஒரு பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வரட்டுமே என்றுதான்.  பக்தவத்சலத்தை தொடர்ந்து அண்ணா அதன்பின் நெடுஞ்செழியன் என்றால் தொடர்ந்து மூன்று முதலியார்களே முதல்வராக வந்திருப்பார்கள்.  

ஆக, அடுத்த முதலமைச்சராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. அந்த அமைச்சரவையில் யார், யார் இடம்பெறுவது என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நெடுஞ்செழியன். ‘ நான் திமுக சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்றுவேன். கலைஞர் கருணாநிதி அமைக்கப்போகும் அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன். எப்போதும்போல் கழகத் தொண்டினை ஆற்றிக்கொண்டு வருவேன்.’ என்று சொன்னதோடு நிறுத்தாமல் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குச் சென்று தன்னுடைய அறையைக் காலி செய்யும் முயற்சியில் இறங்கினார். அதைப் பார்த்த க. ராசாராம் எம்.பி கருணாநிதிக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாகக் கோட்டைக்கு வந்த கருணாநிதி, நேரே நெடுஞ்செழியனின் அறைக்குச் சென்று அவரிடம் பேசினார். துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். அவை முன்னவராகவும் நீங்களே இருங்கள் என்றார். சட்டமன்றத்தில் உங்களுக்கு அடுத்த இருக்கையில் நான் அமர்கிறேன் என்று சொல்லி நெடுஞ்செழியனின் கைகளைப் பற்றிக் கொண்டார். ஆனால் நெடுஞ்செழியனோ எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை. நான் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரமாட்டேன்; ஒரு முடிவுக்கு வந்தால் மாறமாட்டேன் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

அதிருப்தி காரணமாக அப்படியொரு முடிவை எடுத்திருந்தார் நெடுஞ்செழியன். ஆனாலும் கட்சியின் மூத்தவரான அவரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள விரும்பினார் கருணாநிதி. உடனடியாக என்.வி. நடராசன், ப.உ. சண்முகம், ஏ. கோவிந்தசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று நெடுஞ்செழியனிடம் பேசினர். பெரியாரும் நெடுஞ்செழியனை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினார். இந்த நெருக்கடியான நேரத்தில் நாவலரும் மற்றவர்களும் கண்ணைமூடிக்கொண்டு கலைஞரை ஆதரிக்கவேண்டும் என்றார் பெரியார்.

இதனைத் தொடர்ந்து 10 பிப்ரவரி 1969 அன்று கருணாநிதி தலைமையில் திமுக அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.  

தி மு கவின் வரலாற்றில் நெடுஞ்செழியனின் பங்கு மகத்தானது. நாடெங்கும் சுற்றிப் பேசி நடமாடும் பல்கலைக் கழகம் என்று புகழப் பட்டவர். 1953 ல் திமுக நடத்திய மும்முனைப் போராட்டம் திராவிட இயக்க வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை. அப்போது அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு ஐவர் வழக்கு என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் அவர்களே திமுகவின் ஐம்பெருந்தலைவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் கருணாநிதி யின் பெயர் இல்லை.  

பொதுச்செயலாளர் பொறுப்பை கட்சியின் மற்ற தலைவர்களுக்கும் கொடுக்க விரும்பியபோது அண்ணா முதலில் தேர்வுசெய்தது நெடுஞ்செழியனின் பெயரைத்தான். அப்போது நடந்த மாநாட்டில், ‘தம்பி வா, தலைமை ஏற்கவா!’ என்று நெடுஞ்செழியனுக்கு அழைப்பு விடுத்தார் அண்ணா. பின்னாளில் அண்ணாவுக்கும் ஈ.வெ.கி. சம்பத்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, திமுக பிளவுபட்டது. 1961 ல் திமுகவில் இருந்து வெளியேறினார் ஈ.வெ.கி. சம்பத். அதன்பிறகுதான் நெடுஞ்செழியனுக்கு முதன்முறையாக இரண்டாம் இடம் கிடைத்தது. ஆம். முதன்முறையாக திமுகவின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார் நெடுஞ்செழியன். சட்டையைக் கிழித்துவிட்டு சம்பத்தைதி மு க`விலிருந்து வெளியேற்ற வேலூர் பொதுக் குழுவில் கருவியாக செயல்பட்டவர் கருணாநிதி என்கிற செய்தியும் அன்று பேசப்பட்டது. 

தமிழ் தேசியக் கட்சி என்னும் புதிய கட்சியைத் தொடங்கிய சமயத்தில், திமுக மீது கொள்கை ரீதியாக பல தாக்குதல்களைக் கொடுத்தார் ஈ.வெ.கி. சம்பத். அப்போது அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதினார் நெடுஞ்செழியன். சம்பத் எழுப்பிய  விமரிசனங்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையிலும் கொள்கை தொடர்பாக திமுக தொண்டர்களுக்குப் புரிதலை ஏற்படுத்தும் வகையிலும் அந்தப் புத்தகம் அமைந்தது.  ‘ அன்று திராவிடர் கழகம் பிரிவதற்குத் தந்தை காரணமாக இருந்தார். இன்று திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவதற்குத் தனயன் காரணமாக இருக்கிறார்’ என்பது அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வரிகள். ( சம்பத் பெரியாரின் அண்ணன் மகன்). 

அன்று முதல் திமுகவின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் சமயங்களில் எல்லாம் நெடுஞ்செழியன் முக்கியப்பங்கு ஆற்றினார். பிரிவினைத் தடைச்சட்டம் அமலுக்கு வந்ததன்மூலம் திமுகவுக்கு ஆபத்து ஏற்பட்டபோது திமுகவின் கொள்கை சற்றே திருத்தியமைக்கப்பட்டது. அப்போது அவைத்தலைவராக இருந்தவர் நெடுஞ்செழியன். 1965ல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடங்கும் முடிவை திமுக எடுத்தபோது அவைத்தலைவராக இருந்தவர் நெடுஞ்செழியன். 1962 தேர்தலுக்குப் பிறகு நெடுஞ்செழியன்தான் சட்டமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  

இன்னும் சொல்லப்போனால் 1967ல் திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியபோது முதல்வர் பதவிக்கு அண்ணாவின் பெயரை முன்மொழிந்தவர் நெடுஞ்செழியன். திமுகவின் முதல் அமைச்சரவையில் கல்வி அமைச்சரானார் நெடுஞ்செழியன். கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த அவருக்கு, ஆட்சியிலும் அதே இடம் கிடைத்தது.

அண்ணா மறைவுக்குப் பிறகு முதன்முறையாக முதலிடத்தை நெருங்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்காலிக  முதல்வரானார். பதவி நிரந்தரமாகவே அவர் வசம் இருந்துவிடும் என்று நினைத்தார். ஆனால் அந்த இடத்தில்தான் அரசியல் காய்நகர்த்தல்கள் அண்ணாவின் சவ அடக்கம் நடக்குமுன்னே தொடங்கின. அண்ணா இருக்கும்வரை எந்தப்பதவிக்கும் போட்டி போடாமல் இருந்த நெடுஞ்செழியன் முதன்முறையாக முதல்வர் பதவிக்காக கலைஞருடன் போட்டியிட வேண்டிய சூழல் உருவானது. அப்போது மேலே குறிப்பிட்டபடி எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கலைஞரின் பக்கமே இருந்தனர். விளைவு, கலைஞர் முதல்வரானார்.

கருணாநிதி ஆதரவாக எம்.ஜி.ஆர் செயல்பட்டதில் நெடுஞ்செழியனுக்கு பலத்த அதிருப்தி. கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் எம்.ஜி.ஆர் திமுக எம்.எல்.ஏக்களை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து விருந்து கொடுத்ததும். ஆதித்தனாரும் தன் பங்குக்கு நிறைய உதவிகளைப் பொருளாதார ரீதியாகச் செய்துகொடுத்ததும் பெரும் மன உளைச்சலைக் கொடுத்தது. 

தொடர்ந்து கட்சியின்  பொதுச்செயலாளர் பதவிக்கும் இருவருக்கும்   போட்டி உண்டாகும் சூழ்நிலை  ஏற்பட்டது. கட்சி நிர்வாகப் பணிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தலைவர் பதவி உருவாக்கப் பட்டு , திமுக தலைவராக கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் வந்தனர். அண்ணா மறைந்த பிறகு அவரது எண்ணங்களுக்கு மாறான முதல் அத்து மீறல் இதுவே.  இப்போதும் கலைஞரின் பக்கமே எம்.ஜி.ஆர் இருந்தார்.

1972ல் கலைஞருக்கு எதிராக எம்.ஜி.ஆர் போர்க்கொடி தூக்கியபோது எம்.ஜி.ஆருக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியவர் நெடுஞ்செழியன்.  அத்துடன் பொதுக் கூட்டங்களில் எம் ஜி யாரை காரசாரமாகத் தாக்கிப் பேசினார். அண்ணா தி மு கவின் தேர்தல் சின்னம் இரட்டை இலை  என்று அறிவிக்கப் பட்டபோது “ இரட்டை இல்லையா? முளைத்து மூன்று இலை  கூட விடவில்லை “ என்று நையாண்டி பேசினார்.  பதிலுக்கு எம் ஜியாரும் சர்க்காரியா கமிஷனில் கொடுத்த ஊழல் பட்டியலில் ஒரு  நிறுவனத்தில் சென்னை ஜெமினி மேம்பாலம் கட்டும் ஒப்பந்தம் பெற்றுத்தர வைர நெக்லசை பரிசாகப்  பெற்றார் என்று நெடுஞ்செழியன் மீது குற்றம் சாட்டி இருந்தார். 

என்றாலும், அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களும் தேர்தல் முடிவுகளும் நெடுஞ்செழியனை எம்.ஜி.ஆரின் பக்கம் கொண்டுசேர்த்துவிட்டன. முதலில் திமுகவில் இருந்து விலகி, மக்கள் திமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சியை நடத்த முடியவில்லை. பிறகு எம்.ஜி.ஆர் முதல்வரானதும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார். எம்ஜியாரால்  ப. உ . சண்முகம் உட்பட்ட பல முன்னாள் தி மு கவினர் இவ்விதம் அரவணைக்கப் பட்டனர். கருணாநிதி வசம்  தி மு க  சென்று சேர்ந்துவிட இவைகள் காரணமாயின. பேராசிரியர் அன்பழகனைத்தவிர ஒட்டு மொத்த திமுகவின் முன்னணித் தலைவர்கள் எம்ஜியாரோடு ஐக்கியம் ஆயினர்.  

நாஞ்சில் மனோகரன் அதிமுகவில் இருந்தவரை அவருக்குத்தான் இரண்டாம் இடம். அவர் வெளியேறியபிறகு அதிமுகவின் இரண்டாம் இடம் நெடுஞ்செழியன் வசம் வந்தது. அன்று தொடங்கி எம்.ஜி.ஆர் மறையும் வரை கட்சியிலும் ஆட்சியிலும் நிரந்தர இரண்டாம் இடம் அவருக்குத்தான். நிதியமைச்சர் என்ற முக்கியத்துவம் வாய்ந்த துறை அவர் வசமே இருந்தது. இடையில் எம்.ஜி.ஆர் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது தற்காலிக முதல்வராகச் செயல்பட்டார்.

எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தபோது மீண்டும் தற்காலிக முதல்வர் பதவி கிடைத்தது. அப்போது அதிமுக இரண்டு கூறுகளாகப் பிரிந்தது. நெடுஞ்செழியன், ஜெயலலிதா உள்ளிட்டோர் ஒரு பிரிவாகவும் ஜானகி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் இன்னொரு பிரிவாகவும் இயங்கினர். பிறகு ஜெயலலிதாவுடனும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா – நெடுஞ்செழியன் இடையே நடந்த கருத்துமோதலின்போது பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் ரசனை குறைவானவை.

இங்கு எழுதப் பட முடியாத வார்த்தைகளால் ஒதுக்கப் பட்ட  அலட்சியப்படுத்தப்பட்ட பின்னரும் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும இரண்டாம் இடம் பெற்றுக்கொண்டவர் சகிப்புத்தன்மைக்குப் பெயர் போன நாவலர்.  ஜெயலலிதாவுடன் மனஸ்தாபமானபோது ஒரு சுவாரசியம். சுயேட்சையாக சட்டசபைக்கு போட்டியிட்டு நெடுஞ்செழியன் மயிலாப்பூர் தொகுதியில்  ஐநூறு ஓட்டுக்கள் மட்டுமே  வாங்கினார். அப்போது அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் திரைப்பட நடிகர் எஸ்.வி சேகர் இவரை விட அதிக ஓட்டு வாங்கினார். நடமாடும் பல்கலைக் கழகம் என்று நாடறிந்த ஒரு அனுபவம் பெற்ற அரசியல்வாதியின் அடையாளம் அலங்கோல அரசியலால் இப்படி வெளிப்பட்டது. தன்னை உணர்ந்தார். தனது பலத்தை யும் அறிந்தார். 

1991ல் ஜெயலலிதா வெற்றிபெற்று ஆட்சி அமைத்தபோது நெடுஞ்செழியனுக்கு அமைச்சரவையில் இரண்டாம் இடம் கிடைத்தது. அதன்பிறகு நெடுஞ்செழியனின் அரசியல் வாழ்க்கையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமில்லை. அண்ணா, கருணாநிதி எம்ஜியார், ஜெயலலிதா என்கிற  பல முதலமைச்சர்களின் அவையில் இரண்டாம் இடம் நெடுஞ்செழியனுக்கு நிறந்தரமாகிப் போனது. 12 ஜனவரி 2000 அன்று மரணம் அடைந்தார். 

திராவிட இயக்கத் தலைவர்களில் அதிகம் எழுதியவர்கள் என்று பட்டியல் போட்டால் அதில் நெடுஞ்செழியனுக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக, அவர் எழுதிய திராவிட இயக்க வரலாறு புத்தகத்தைச் சொல்லவேண்டும். அதிமுக தொண்டர்களுக்கு வரலாறு புரியவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட புத்தகம் என்று முன்னுரையில் பதிவுசெய்திருப்பார். திராவிட இயக்க வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் விரும்புவோர் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.

நெடுஞ்செழியனுக்கும் கருணாநிதிக்கும் ஏற்பட்ட மனத்தாங்களில் இவர்கள் பரிமாறிக்கொண்ட நாகரிகமான அரசியல் சொல்லாடல்கள் பலருக்கு உதாரணமாகத் திகழ வேண்டியவை. ஆனாலும் ஒரு முறை நெடுஞ்செழியனைப் பற்றி கருணாநிதி “ அவர் மனைவி பேச்சைக் கேட்பவர் ” என்று சொன்னபோது அதற்கு நெடுஞ்செழியன் சொன்ன பதில் , “ ஆமாம் ! நான் மனைவி பேச்சை கேட்பவன்தான். ஏனென்றால் நான் கேட்பதற்கு மனைவி மட்டுமே எனக்கு உண்டு “ என்று சொன்னார். இந்த வார்த்தைகள்,   பல சொல்ல மறந்த கதைகளை   ‘ கனிந்த மொழியில் ‘ சொல்லாமல் சொல்லும்.   

அரசியல் வாழ்வில் நெடுஞ்செழியன் தொட்ட உயரங்கள் முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், வெற்றிக்கோட்டின்  மூச்சுக்காற்று முகத்தில் படும் அளவுக்கு நெருங்கியபிறகும் கோட்டைக் கடக்கமுடியாத வருத்தம் இறுதிவரை அவருக்கு இருந்திருக்கும். 

பல ஆண்டுகளாக தமிழக அரசியலை உற்று நோக்கும் பலருக்கு ஒரு ஆதங்கம் இருக்கலாம். ஒரு வேளை கருணாநிதியை எம் ஜி யார் ஆதரிக்காமல் நெடுஞ்செழியனை  அன்று முதல்வராக்கி இருந்து இருந்தால் அதன் பிறகு நடைபெற்ற அதிகாரப் போட்டிகளையும்  அறிவியல் ரீதியான ஊழல்களையும்  சட்டமன்ற குடுமிப்பிடி சண்டைகளையும்  நரகல் மொழி நாடகங்களையும்  இன்று வரை அரங்கேறிக் கொண்டு இருக்கும் பகைமை அரசியலையும் தமிழகத்தின் வரலாறு பார்க்காமலேயே இருந்திருக்கக் கூடும். அதே நேரம் திமுகவினர் வர்ணித்தது போல் வெண்டைக்காயாகவும் தான் ஒரு அரசியல் அசடு என்றும்  நிருபித்த நெடுஞ்செழியனின் நிர்வாக திறமையின்மையால் கட்சியும் ஆட்சியையும் இதுவரை காணாமலும் போயிருந்து இருக்கலாம். யார் கண்டது. ?

மீண்டும்   சந்திக்கலாம். இன்ஷா அல்லாஹ்….
முத்துப் பேட்டை  P. பகுருதீன் .B.Sc;

நேற்று ! இன்று ! நாளை ! - தொடரிலிருந்து ரிவைண்ட்... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | March 19, 2016 | , , , , , ,

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடி இருந்த எம்ஜியாரின் இதயத்தை இடையில் சில காலம்  பிரிந்து இருந்த அடிமைப் பெண் ஆக்கிமிக்கத்தொடங்கினார். இதற்கு சில பார்ப்பன சக்திகள் துணை இருந்ததாகக் கூறுகிறார்கள். மெல்ல  மெல்ல கட்சியிலும் பின்னர் ஆட்சியிலும் அதிகாரங்களைப் பிடித்துக் கொள்ள  ஜெயலலிதாவோடு எம்ஜியாரின் கடந்தகால உறவையும் அதன் நெருக்கத்தையும் உரிமையையும் பயன்படுத்த மந்திர ஆலோசனைகள் நடைபெற்றன. இவற்றை ஆர். எம் வீரப்பன் மோப்பம் பிடித்தார். ஆனாலும் ஜெயலலிதா எம்ஜியாரின் அந்தரங்கத்தின் அரசியானார். அதனால் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் என்கிற பதவி ஜெயலலிதாவிடம் தூக்கித்தரப் பட்டது. மேலும் இராஜ்ய சபை உறுப்பினராகவும் ஆக்கப் பட்டார். 

கட்சிக்காக காலமெல்லாம் கஷ்டங்களைச் சுமந்த  ஆர். எம். வீரப்பன், எஸ். டி. எஸ். மற்றும் கே. ஏ.கே ஆகியோர் உள்ளூர ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். ஆனால்  “நினைப்பதை நடத்தியே முடிப்பவன் நான்! நான்! நான்! “  என்கிற எம்ஜியாரின் முன்  அவை எடுபடாமல் போயின. உலக வரலாற்றில் ஆட்சி அதிகாரத்தில் உச்சத்தில் இருந்த பலரின் வரலாறு ஒரு பெண்ணின் ஓரக் கண்பார்வையில்  ஒன்றுமில்லாமல் போனதை பார்த்து இருக்கிறோம். இதற்கு எம்ஜியாரும் விதிவிலக்காகவில்லை.

கட்சிக்கு சோதணை வரும் நேரங்களிலெல்லாம், உள்கட்சிப் பூசல்கள் வெளிவரும் நேரங்களில் எல்லாம் எதையாவது சொல்லி பிரச்னையை திசை திருப்புவது எம்ஜியாருக்குக் கை வந்த கலையாக இருந்தது. ஆர். எம். வீரப்பனுக்கு திருமதி ஜானகி அம்மையாரின் மறை முக ஆதரவும் இருந்தது. அத்துடன் ஆர் எம் வீரப்பனுக்கு கருணாநிதியுடன் இரகசிய உறவு இருந்ததாகவும் ஜெயலலிதாவுக்கு ராஜீவ் காந்தி உடைய ஆதரவு இருந்ததாகவு ம் செய்திகள் கசிந்தன.

இப்படிப் பட்ட சூழ்நிலையில் எல்லா மனிதர்களுக்கும் ஏற்படுவதுபோல் எம்ஜியாருக்கும் மரணம் வந்தது. தான் இறந்தால் தனது இறப்பை முதலில் கருணாநிதிக்குத் தெரியப் படுத்திவிட்டே பத்திரிகைகளுக்கு அறிவிக்க வேண்டுமென்று எம்ஜியார் ஒரு வாய்மொழி உதத்தரவை தனது செயலருக்கும் ஜானகி அம்மையாருக்கும் இட்டு இருந்தார். அதன்படி விடியற்காலை யாரும் அறியாத வண்ணம் கருணாநிதி ஆற்காடு வீராசமியுடன் இராமவரம் தோட்டத்துக்கு சென்று இறுதி அஞ்சலியை முதலில் செலுத்திவிட்டு சென்றதும்  எம்ஜியார் இறந்த விஷயம் நெடுஞ்செழியனால் அரசுமுறையாக  அறிவிக்கப் பட்டது.  மக்கள் இந்த மரணத்தை ஏற்கவே மறுத்தனர். தமிழக தலை நகரம்  அல்லோகலப் பட்டது. அழுகுரல்கள் அடுத்த கண்டத்துக்கும் கேட்டன. அன்று மட்டும் கூவம் ஆறு, மக்களின் கண்ணீரைத் தாங்கி ஓடியது. சென்னை நகரம்  தவிடு பொடியானது. அண்ணா சாலையில் திராவிடக் கழகம் நிறுவிய கருணாநிதியின் உருவச்சிலை சிதைக்கப் பட்டது. சமூகவிரோதிகளால்  கடைகள் சூறையாடப் பட்டன.

எம்ஜியாரின் மரணம் ஜெயலலிதாவுக்குத் தெரிவிக்கப் படவில்லை. வீறு கொண்டு எழுந்த ஜெயலலிதா இராமவரம் தோட்டம் நோக்கிப் புயலெனப் புறப்பட்டார். ஆனால் இராமவரம் தோட்டத்தில் ஜெயலலிதா வாயிலிலேயே தடுக்கப் பட்டார்.       அதையும் மீறி லிப்டில் ஏறி , மாடிக்குப் போனார். லிப்டிலேயே வைத்துப் பூட்டினார்கள். எம்ஜியார் உடலை பார்க்க விடாமல் பலவாறு தடுக்கப் பட்ட ஜெயலிதாவுக்கு ‘ உனக்கும் எனக்கும்தான் பொருத்தம் இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம் “ என்று இருவரும் பாடியதன் பொருள் தெரிந்தது, மீண்டும் வீறு கொண்டு எழுந்தார். இன்று போல் ஜெயலலிதாவுக்கு துணை நிற்க யாரும் இல்லை. இன்று அவரோடு இருப்பவர்களில் பெரும்பான்மையானோர் எம்ஜியாரைப் பார்க்க விடாமல் நெட்டித் தள்ளியவர்களே. அன்றைய நிலையில் தனிமரமாக நின்ற ஜெயலலிதாவின் மனதில் உறுதி மட்டும் இருந்தது.

அதோடு எம்ஜியார் உடைய உடல், பொது  மக்களின் அஞ்சலிக்காக வைக்கப் பட்ட இராஜாஜி மண்டபத்துக்கு வந்தார். அங்கும் அவருக்கு அதே வரவேற்பு. ஆனாலும் கையறு நிலையில்  கதறிக் கொண்டு நின்றார். அந்த நேரம் உலகமே பார்த்துக் கொண்டிருக்க, அரசு வாகனத்தில் எம்ஜியாரின் உடல் ஏற்றப் பட்டு இறுதி சடங்கு நடக்கவிருந்த திசை நோக்கி அரசு வாகனம் நகரத் தொடங்கியது. அப்போது தலைவிரி கோலமாக மகாபாரத பாஞ்சாலியின் கோபத்தோடு ஓடிவந்த ஜெயலலிதா  அந்த டிரக்க்கின்  பின்புறம் தாவி ஏறினார். அவர் தனது மார்பளவுக்குத் தாவி டிரக்கில் ஏறியபோது அவரது மார்பில் பெண்ணென்றும் பாராமல் சில பல உதைகள் விழுந்தன. ஆனால் ஜெயலலிதா பிடியைத் தளர்த்தவில்லை. பலரும் கூடி அவரை டிரக்கிலிருந்து கீழே தள்ளவே முற்பட்டனர்.  மக்கள் கூட்டம் இதைப் பார்த்துக் கொண்டு இருந்தது. அப்போதே சில அறியாப் பெண்கள் அடிமைப் பெண் படத்தில் பேச நடக்க முடியாமல் இருந்த தலைவருக்கு பேசவும் நடக்கவும் சொல்லிக் கொடுத்த உனக்கா இந்தக் கதி என்று கூக்குரலிட்டனர். மக்களின் இந்த அறியாமைதான் இன்றுவரை ஜெயலலிதாவுக்கு அறுவடையைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

தைரியத்தின் மொத்த உருவாகவோ அல்லது இதைவிட்டால் அனுதாபம் தேட வரு வாய்ப்பு அரிது என்றோ அந்த சூழ்நிலையை தனக்கு அனுதாப அலையாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்தார்  ஜெயலலிதா.

அடுத்த முதல்வர் யார் என்ற பெரும் கேள்வி எழுந்தபோது , முதலில்  மறுத்த எம்ஜியாரின் மனைவி  வி. ஏன். ஜானகியை ஆர். எம். வீ மிகவும் கட்டாயப்படுத்தி  பதவி ஏற்க வைத்தார். ஜெயலலிதா பக்கத்திலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அணி திரண்டனர். ஜெயலலிதாதான் முதல்வராக வரவேண்டும் அவரே அரசியல் எம்ஜியாரின் வாரிசு என்று எம்ஜியாரால் அடையாளம் காட்டப்பட்டவர் என்கிற விவாதம் வைக்கப்பட்டது. ஜானகி அம்மையார் எம்ஜியாருடைய சட்ட பூர்வமான மனைவியாக இருந்தாலும் ஜெயலலிதாவும்  அந்தத் தகுதிக்கு கிட்டத்தட்ட உரியவராகவும் தலைவரின் இறுதிக் காலத்தில் அவரது அன்புக்கு உரியவராகவும் கட்சியில் பொறுப்புகள் வழங்கப் பட்டவராகவும் கல்வியறிவும் நாவன்மையும் பெற்றவராகவும் ஜெயலலிதா இருந்ததால் அவரே முதல்வராக வேண்டுமென்று அணிதிரண்ட அணி தோல்வி கண்டது. ஜானகி அம்மையார் முதல்வராக பதவி ஏற்றார்.

சட்டமன்றத்தில் சந்தித்துக் கொள்ளலாம் என்று இரு அணியினரும் சங்கல்பம் மேற்கொண்டனர். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்ற நிலையில் கருணாநிதியும் காய் நகர்த்த்னார். சட்டமன்றம் கூடியது. சக்களத்திகளின் சண்டையை சட்டமன்றம் பார்த்து சந்தி சிரித்தது.   பாரம்பரியம் மிக்க தமிழக  சட்டமன்றத்தில் மாட்டப் பட்டிருந்த முன்னாள் முதல்வர்களின் படங்கள் மவுனமாக  இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தன. அதிலும் பக்தவத்ச்சலத்தின் படம் காமராஜரின் படத்தை பார்த்து கண்சிமிட்டிக் கேட்டது “ விஷக் கிருமிகள் பரவிவிட்டன “ என்று அன்று சொன்னது இன்று நடப்பதைப் பார்த்தீர்களா என்பது அதன் பொருள் . ஒரு வழியாக ஜானகி அரசு கலைக்கப்பட்டது. மீண்டும் தேர்தல் வந்தது.

எம்ஜியார் காலத்தில் கால் தவறி விழுந்த கருணாநிதி, ஏமாளிகளின் தோள்களில் ஏறி மீண்டும் அரியணை ஏறினார். கடந்த தேர்தலுக்குப் பின் வெற்றி விழாவில் கட்டிக் கொள்வதற்கு கருணாநிதி எடுத்துவைத்திருந்த பட்டுவேட்டிக்கும்  இருமனைவிகளின் பட்டுப் புடவைகளுக்கும் உடுத்தி மகிழும் வேலை வந்தது.

இந்த முறை கருணாநிதி அடக்கி வாசித்தார். கட்சிகாரர்களையும் அடக்கிவைத்து இருந்தார். அரசு அலுவலகங்களில் எம்ஜியார் காலத்தில் நகராமல் இருந்த பல கோப்புக்கள் நகர ஆரம்பித்தன. அரசு அலுவலர்களின் அவலங்கள் துடைக்கப் பட்டன. அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள விகிதப்படி சம்பளம்  வழங்க உத்தரவிடப் பட்டன. அப்போது நல்லாட்சி நடத்திக் கொண்டிருந்த கருணாநிதிக்கு விடுதலைப்புலிகள் மூலமாக வந்தது ஆபத்து.

காங்கிரசுடன் நெருக்கமான உறவு வைத்து  இருந்த ஜெயலலிதாவின் நெருக்கடி மற்றும் இலங்கைச் சூழ்நிலை காரணமாக அன்றைய ஆளுநர் பர்னாலாவிடமிருந்து கட்டாயப் படுத்தி ஒரு அறிக்கை கேட்கப் பட்டு அவர் அதைத்தர மறுத்த நிலையில் காஞ்சிமடம், ஆர். வெங்கட்ராமன், ஜெயலலிதா ஆகிய பிராமணக் கூட்டணி செய்த சதியால்   இந்திய இறையாண்மைக்கு கருணாநிதியின்  தமிழகத் தலைமை ஆபத்து எற்படுத்திவிடுமென்று காரணம் காட்டப்பட்டு ஆட்சி கலைக்கப் பட்டது.  கருணாநிதி  பதவி இழந்தார். ஜனநாயகத்தின் கழுத்து இந்திய ஜனாதிபதியாலேயே நெரிக்கப் பட்டது. அரசியல் சட்டத்தின் பக்கங்கள் அழுக்காகிப் போயின. 

வந்தது மறுதேர்தல். இம்முறை மக்கள் அனுதாபம் கருணாநிதியின் பக்கம். மீண்டும் அரியணை ஏறுவார் என்று உலகம் எதிர்பார்த்த நிலையில் அந்த எண்ணத்தில் மண் அல்ல வெடி விழுந்தது. அந்தத் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீ பெரும்புதூருக்கு வந்த இந்திய அரசியலின் இளம் நட்சத்திரம்- இந்திராவின் மைந்தன் இராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளினால் வெடிவைத்துக் கொல்லப் பட்டார்.

ஒரு நாள் போட்டிகளில் கடைசி  ஓவரில் ஆட்டத்தின் திசை மாறுவதுபோல் ராஜீவின் மரணத்தால்  எழுந்த  அனுதாபத்தின்  அலை சுனாமியாக அடித்தது. இந்திரா காங்கிரசும் ஜெயலலிதாவும் இணைந்த கூட்டணி அமோக வேற்றி பெற்றது. பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பது போல் விடுதலைப் புலிகளுக்கு  பாம்பென்று அறியாமல் அனுதாபப் பால் வார்த்த குற்றத்துக்காக கருணாநிதி தண்டிக்கப் பட்டார். தமிழினம் என்றும் தமிழினத் தலைவர் என்றும் கொண்டாடப் பட்ட கருணாநிதியும் அவர் கட்சியும் கொலை செய்யத் தூண்டினார்கள் என நாடெங்கும் சுவர்களில் ஒட்டப்  பட்ட சுவரொட்டி மக்களின் மனங்களிலும் ஒட்டிக கொண்டது அவர்களின் மனதை மாற்றி ஆட்சியைப் பறித்தது. அத்துடன் தனது சுய வெற்றி  வரலாறு விட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக கருணாநிதி மட்டுமே அந்தத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினரானார். திமுகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது. ராஜீவ் காந்தியின் இறப்பின் மேல் ஜெயலலிதாவுக்கு சிம்மாசனம் போடப் பட்டது,

ஜெயலலிதா தமிழக முதல்வரானார். 

பிறகு? ஜெயலலிதாவின் ஆட்சியையும் சசிகலாவின் நிழல் ஆட்சியையும். பார்க்கலாமே!

இன்ஷா அல்லாஹ். தொடரும்...
ஆக்கம்: P. முத்துப் பேட்டை  பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி

நேற்று ! இன்று ! நாளை! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | February 17, 2016 | , , , , , , ,

இரண்டாம் பாகம் : பகுதி இரண்டு

தமிழ் நாட்டில் பெண்ணைப் பார்த்து திருமணம் பேசி முடிப்பது என்பது பாரம்பரியமான ஒரு பண்பாட்டின் பரிமாணம். ‘ தாயை தண்ணீர் எடுக்கும் இடத்தில் பார்த்தால் , மகளை வீட்டில் போய் பார்க்கவேண்டியதில்லை ‘ என்பதும் நம்மிடையே வழங்கப்படும் பழமொழிதான். காரணம் என்னவென்றால் அன்பு, பண்பு, அடக்கம், ஒடுக்கம் ஆகியவை வெளிப்படும் இடம் தண்ணீர் எடுக்கும் நீர் நிலைகள் அல்லது குழாயடிகள்தான். குடங்களை கேடயமாகத் தாங்கி பெண்கள் ஒருவருக்கொருவர் போட்டுக் கொள்ளும் குழாயடிச் சண்டைகள் தமிழ்நாடெங்கும் காலைவேளைகளில் காணக்கிடைக்கும் காட்சிகள்.

அதேபோல் சம்பந்தா சம்பந்தமில்லாத சத்தம் அதிகமாக கேட்கும் இடத்தையும் நாம் சந்தைக்கடை என்று வர்ணிப்போம். பள்ளி அல்லது கல்லூரி வகுப்புகளில் மாணவர்கள் படிப்பில் ஈடுபடாமல், சத்தமாகப் பேசிக் கொண்டு இருந்தால் இது என்ன வகுப்பா இல்லை சந்தைக் கடையா என்று சத்தம் போடும் ஆசிரியர்களை நமது அனுபவத்தில் கண்டு இருக்கிறோம். 

இதேபோல் குழாயடி, சந்தைக்கடை போன்ற உதாரணங்களுடன் சட்டமன்றத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தனிமனிதர்களிடையே தோன்றிய பகைமையின் காரணமாக பாராளுமன்ற , சட்டமன்ற ஜனநாயக மரபுகள் கூவம் நதியில் குளிக்கப் போய்விட்டன. காலம் காலமாக கற்றோராலும் கல்லாதோராலும் கட்டிக் காக்கப்பட்ட மனிதப் பண்புகளும் நடை முறை நாகரிகங்களும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அண்மைக் காலங்களில் இதன் நிருபணம் அதிகமாகி விட்டது. 

இன்றைய சட்டமன்ற நிகழ்வுகளை ஒப்பீடாக வைத்து பகுருதீன் ஒரு கற்பனை சித்திரத்தைத் தீட்டி இருக்கிறார். சற்று அதையும் பார்ப்போமே!

வானளாவி வளர்ந்த ஒரு மரத்தில் வட்ட மேசை மாநாடு !  கிளைக்கு ஒன்றாக கீசாரிப்பட்ட ஷைத்தான்கள் உட்கார்ந்து நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தன. அவைகளின் முகங்களில் ஒருவித ஏக்கம் குடிகொண்டிருந்தது. அன்றைக்கு அவர்களின் பொழுது போக்குக்கு ‘ பசாது’ ஒன்றுமில்லையே என்று ஷைத்தான்கள் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் ஒரு கரும்புகை எழுந்தது. மெல்ல மெல்ல அந்தக் கரும்புகை, வெண்புகையாக மாறியது. அந்த வெண்புகையிலிருந்து வெளிப்பட்டது ஒரு ஜின். அந்த ஜின்னின் கையில் ஒரு தமிழ் செய்தித்தாள்! ஷைத்தான்கள் தாங்கள் உட்கார்ந்திருந்த வட்ட மேசையிலிருந்து ஆர்வமாக எழுந்தன வானுலகம் போன ஜின்னை வழிமறித்தன. தங்களின் ‘பசாதுப்’ பசிக்கு இரை கிடைத்துவிட்டது என்ற ஆர்வம் அவைகளிடையே வெளிப்பட்டது.

ஹாவ்! ஹாவ்! என்று சப்தமிட்டவாறே ஷைத்தான்கள் ஜின்னை சூழ்ந்தன. ஜின் அமைதியாக தனது கரத்திலிருந்த செய்தித்தாளை நீட்டியது. நாய்கள் ரொட்டித் துண்டைக் கவ்வுவது போல அதைப் பறித்த ஷைத்தான்கள் செய்தித்தாளை விரித்துப் படித்தன. தலைப்புச் செய்தி இதுதான். 

“தமிழக சட்ட மன்றம் நாளை கூடுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்கள் முதல்வரின் அனுமதிகேட்டு வாயைத் திறந்த மன்றத்தின் முதல்வர் அறிவிப்பு! பரப்பரப்பான சூழ்நிலையில் கூடும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க் கட்சிகளும் அவைகளை எதிர்கொள்ள ஆளுங்கட்சியும் வரிந்து கட்டுகின்றன.” என்று அச்சடிக்கப்பட்ட செய்திகள் ‘நச்’ என்று இருந்தன. ஷைத்தான்களின் முகங்களில் நமுட்டுச் சிரிப்பு. 

ஷைத்தான்களில் சற்று விபரம் தெரிந்த ஒரு ஷைத்தான் இப்படிச் சொன்னது. “ கடந்த காலங்களில் சட்டமன்றம் கூடும்போது மக்கள் பிரச்னைகளை எழுப்ப எதிர்க் கட்சிகளும் அவற்றை எதிர்கொள்ள ஆளுங்கட்சியும் தயாராகின்றன என்றுதான் செய்திகள் வரும். ஆனால் இப்போது வரிந்து கட்டுகின்றன என்று ஊடகங்களே செய்திகள் வெளியிடுகின்றன என்றால் ஏதோ குஸ்தி நடக்கபோகிறது அதனால் நமக்கெல்லாம் நிறைய தீனி இருக்கிறது என்று அர்த்தம் “ என்று சொன்னது. 

“அப்படியானால் நாமும் போய் என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடுவோமா? “ என்று ஒரு ஷைத்தான் ஆர்வமுடன் கேட்டது. இந்தப் பிரேரணை ஒருமனதாக நிறைவேறியது. அவை உடனே கிளம்பின. ஒரு வாயு மண்டலம், கருநிறமாக எழுந்தது. மூன்று ஷைத்தான்களும் கண்சிமிட்டும் நேரத்தில் பூலோகத்தில் வந்திறங்கின. அவை இறங்கிய ஊர் சிங்காரச் சென்னை. சென்றடைந்த இடம் - சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதி. 

விடிந்தால் சட்ட மன்றம் கூடுகிறது. ஆளுநர் உரை அது இது என்று பாதுகாப்புப் பரபரப்பு. அதே நேரம் சட்ட மன்ற உறுப்பினர் விடுதியின் அனைத்து அறைகளும் மூடப்பட்டிருந்தன. ஒரே ஒரு துணிச்சலான ஷைத்தான் மட்டும் சாவித்துவாரத்தின் வழியே உற்றுப் பார்த்தது. உள்ளே உறுப்பினர்கள் அடுத்த நாள் கூட்டத்துக்கு அவசர அவசரமாகத் தயாராகி வருவதை அறிந்தது. ஆமாம்! உறுப்பினர்களின் உணவு மேஜை முன்னே சோமபானமும் சுறா பானமும். அருகில் அவர்கள் கடித்துத் துப்பிய செந்நிறம் தடவப்பட்ட கோழிகளின் எலும்புத் துண்டுகள். 

சரி ! அடுத்த அறையைப் பார்ப்போம் என்று பார்த்தால் அங்கும் அதே காட்சிகள். ஆளும் கட்சி உறுப்பினர்களின் அறைகளில் மட்டும்தானா என்றால் இல்லை! எல்லாக் கட்சி உறுப்பினர்களின் அறைகளிலும் இதே காட்சிகள். சரிதான்! இந்த மாதிரி அத்தியாவசிய விஷயங்களில் எல்லோரும் ஒற்றுமையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று ஷைத்தான்கள் சந்தோஷமாகப் பேசிக் கொண்டன. 

அதே நேரம், தங்களை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பிரதிநிதிகளாக பணியாற்றுகிறார்களோ இல்லையோ, பூலோகத்தில் தங்களுடைய பிரதிநிதிகளாக இவர்கள் வேலை செய்யத் தயாராகிறார்கள் என்பதை ஒரு ஷைத்தான் சுட்டிக் காட்டியது. இந்த சந்தோஷத்தைத் தாங்களும் கொண்டாட வேண்டுமென்று விடுதிக்கு அருகிலிருக்கும் டாஸ்மாக் பாருக்கு மூன்று ஷைத்தான்களும் சென்று மொடாக்குடி குடித்தன. 

குடித்துவிட்டு வெளியே வந்த ஷைத்தான்கள் நிலை தடுமாறி டாஸ்மாக் கடை வாசலில் மண்ணில் புரண்டு கிடக்கும் மனித ஷைத்தான்களுடன் தாங்களும் தடுமாறி விழுந்து புரண்டன. ஒரே ஒரு ஷைத்தான் மட்டும் கேரளாவுக்கு போன் போட்டு அங்கிருந்த ஒரு மரக்கிளையிலிருந்து  குட்டிச்சாத்தானை  அழைத்தது, “ மை டியர் குட்டிச் சாத்தான்! அடுத்த பஸ்ஸைப் பிடித்து அவசரமாக சென்னைக்கு வா !” என்று தகவலை தாக்கீதாக அனுப்பிவிட்டு , தானும் சாலை ஓரமாக சக ஷைத்தான்களுடன் படுத்துக் கொண்டது. 

பொழுதுவிடிந்தது! குட்டிச்சாத்தானும் குறிப்பிட்டபடி வந்து ஷைத்தான்களை துயிலெழுப்ப நால்வரும் கூப்பிடு தூரத்தில் இருந்த கூவத்தில் குளித்துவிட்டு சட்டமன்றம் நோக்கி நடந்தே சென்றன. சட்ட மன்றத்தின் பொதுமக்கள் நுழையும் வாயிலில் காத்திருக்காமல் அனைவரும் காற்றாக மாறி ‘ விஷ் ‘ என்று சட்டமன்றத்தின் பார்வையாளர் பகுதியில் ஒரு வசதியான இடத்தில் அமர்ந்தனர். 

அவை நடவடிக்கைகள் ஆரம்பமாயின. ஆளுநர் வந்தார். அம்பிகையே ஈஸ்வரியே என்று ஆலாபனை பாடிவிட்டு அமைச்சரவை தயாரித்துத் தந்த உரையைப் படித்துவிட்டு , சர்க்கரை போடாத காபியையும் குடித்துவிட்டு கிளம்பிப் போனார். 

ஆளுநர் உரையின் மீது விவாதம் ஆரம்பமானது. அவைத்தலைவர் சூரிய நமஸ்காரம் செய்வதுபோல் வானை நோக்கிக் கையை உயர்த்தி தென் சென்னைப் பக்கம் நோக்கி கும்பிட்டு விட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். 

விவாதம் தொடங்கலாம் என்று அவைத்தலைவர் அறிவித்ததுதான் தாமதம் எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த திமுகவினர் எழுந்தனர். ஆளுநர் உரையை கண்டிக்கிறோம் என்றார்கள் . சிறை தண்டனை அளிக்கப்பட்டு ஜாமீனில் இருக்கும் சீதேவியைப் புகழ்வதில் ஆளுநரும் தனது பங்கை ஆற்றியதை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்கள் . உடனே அந்தக் கட்சி உறுப்பினர்களும் கூடவே ஆதரவுக் கட்சிகளும் ஒரு விடுமுறை உற்சாகத்தில் வெளியேறின. 

அமைச்சர்கள் அமரும் பகுதியில் ஒரு அமைச்சர் தனது காலுக்கு ஒரு தைல பாட்டிலில் இருந்து தைலம் தடவிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த குட்டி சாத்தான் , “சாச்சா! அவர் என்ன தடவுகிறார்? ஏன் தடவுகிறார் என்று கேட்டது?” உடனே பெரிய சைத்தான் சொன்னது, “ ஒன்றுமில்லை! அண்மையில் நடந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது குத்தாட்டம் போட்ட அமைச்சர் அவர். அந்த வலி ஆடும்போது அவருக்குத் தெரியவில்லை- தெரிந்து கொள்ளும் நிலையிலும் அவர் இல்லை. இப்போது கால்வலிக்கிறது அதனால் தைலம் தேய்த்துக் கொண்டிருக்கிறார்" என்றது. அமைச்சர்களும் இப்படி ஆடுவார்களா என்ற சந்தேகத்துடன் அனைத்து ஷைத்தான்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் சட்டமன்றத்தின் நடுப்பகுதியில் கூச்சல் கேட்டது. 

வெளிநடப்பு செய்த எதிர்க் கட்சி உறுப்பினர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். 

அடுத்து ஒரு உறுப்பினர் , சட்டமன்றத்துக்கு வராத தலைவர்களைப் பற்றி ஒரு வினா எழுப்பினார். அதற்கு ஒரு ஆளும் கட்சி உறுப்பினர் அப்படி யாரும் வராமல் இல்லை ஒரு கிழவரும் ஒரு சிடிஜனும்தான் வருவதில்லை என்று கூறினார். கிழவர் யார் என்று அவரது கட்சியினருக்கும் சிடிசன் என்று அதாவது குடிமகன் என்று யாரைச் சொல்கிறார்கள் என்று அவரது கட்சியினருக்கும் விளங்கி அதை முன்னிட்டு சட்டமன்றம் சற்று நேரம் கோயம்பேடு ஹோல்சேல் மார்கெட் ஆனது. 

இப்படிப் பட்ட வார்த்தைகளால் மற்றவர்களின் உணர்வுகளைக் கிளறிப் பார்ப்பதும் தகுதி இழந்தவர்களுக்கு அளவுக்கு மீறி புகழாரம் சூட்டுவதும் இந்த மன்றத்தில் இப்போது நடை முறை என்று புரியாத ஷைத்தான்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன. 

திமுக உறுப்பினர் ஜே. அன்பழகன் எழுந்து தங்கள் கட்சி உறுப்பினர்கள் அமரும் இடத்தில் மூட்டைப் பூச்சி கடிப்பதாக ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு ஒரு அமைச்சர் இப்படியெல்லாம் கோமாளித்தனமாக பேசாதீர்கள் என்றதுதான் தாமதம் உடனே அங்கு ஒரு குருஷேத்திரப் போர் மூண்டது. அவைக் காவலர்கள் அழைக்கப்பட்டனர். அனைத்து திமுக உறுப்பினர்களும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இந்தக் கலவரத்தில் பல உறுப்பினர்களின் வேஷ்டிகள் அவிழ்ந்து விழுந்தன; அல்லது உருவப்பட்டன. பெண் உறுப்பினர்கள் தலை கவிழ்ந்தனர். 

இதைக் கண்ட ஷைத்தான்களுக்கு சந்தோசம் எல்லை மீறியது. உணவு இடைவேளை ! ஷைத்தான்கள் சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்தன. உணவுக்குப் பின் மீண்டும் உள்ளே போகவேண்டுமா என்ற பொருள்பட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன. மூத்த ஷைத்தான் பேசியது, “ இந்த பூலோகத்தில் நமக்குப் பிரதிநிதிகளாய் இந்த மன்ற உறுப்பினர்கள் இருக்கும்வரை நாம் பூலோகத்துக்கு வரவேண்டிய வேலையே இல்லை. நமது வேலையைத்தான் இவர்கள் பார்க்கிறார்கள் . ஆகவே நாம் மீண்டும் நமது மரத்துக்கே  போய் நிரந்தர ஒய்வு எடுக்கலாம் “ என்று சொல்லி கண்ணை மூடின ; உடனே உயரப்பறந்தன. குட்டிச் சாத்தானும் ஒரு ஆட்டோ பிடித்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குப் போனது. - என்று சித்திரம் தீட்டினார் பகுருதீன். 

இதோ! நான் பரிமாறும் ஒரு பழைய சோறும் ஊறுகாயும். 

முதலமைச்சர் காமராஜர்! அறிஞர் அண்ணா எதிர்க் கட்சித் தலைவர்! விலைவாசி உயர்வைப் பற்றி விவாதம்! அண்ணாவுக்கு வழங்கப்பட்டதோ கால்மணி நேரம். அவர் பேசியதோ முக்கால் மணி நேரம். காமராசர் பேச்சை ரசித்துக் கொண்டே எவரையும் குறுக்கிடக் கூடாது என்று கண்ணாலேயே உத்தரவு பிறப்பிக்கிறார். அண்ணா தனது பேச்சை நிறைவு செய்யும் போது, “ முதலமைச்சர் காமராசருக்கு , விலைவாசி உயர்வால் குடும்பங்கள் படும் கஷ்டங்கள் புரியாது. காரணம் அவர் பிரம்மச்சாரி. தனிக்கட்டை. குடும்பம் நடத்திப் பார்த்தால்தான் குடும்பங்கள் படும் கஷ்டம் தெரியும் ! “ என்று குறிப்பிட்டார். 

அண்ணாவுடைய பேச்சுக்கு அன்றைய சட்ட மன்ற உறுப்பினர் அனந்தநாயகி அம்மையார் பதில் அளித்தார். காமராஜரைப் பற்றி அண்ணா குறிப்பிட்டது பற்றி அவருக்கு கோபம் கொப்பளித்தது. “அண்ணா இப்படி முதல்வர் காமராசரைப் பற்றிக் கூறுகிறார். இவர் இப்படிப் பேசுவதால்தான் ஆண்டவன் இவருக்கு குழந்தையே இல்லாமல் செய்துவிட்டான்'. என்றார் அனந்த நாயகி. 

அவையில் இருந்த காமராஜர் உடனே எழுந்து கோபமாக தனது அறைக்குச் சென்றார். அனந்த நாயகிக்கு காமராஜரிடமிருந்து வந்தது ஒரு அவசர அழைப்பு. காமராஜர் தனது அறைக்கு வந்த அனந்த நாயகியிடம், “ஏம்மா! அண்ணாத்துரை அப்படி என்ன இல்லாததை சொல்லிவிட்டார். நான் பிரம்மச்சாரி தானே! ஆனால் அதற்காக நீ ஒரு பெண்ணாக இருந்தும் அண்ணாதுரைக்கு குழந்தை இல்லை என்று குத்திக் காட்டுகிறாயே அவர் மனம் எவ்வளவு வருத்தப்படும்? அவரது மனைவி இதைக் கேள்விப் பட்டால் எவ்வளவு வருத்தப்படுவார்? உடனே போய் அவரிடம் மன்னிப்புக் கேள்!" என்று சொன்னார். 

அனந்தனாயகியும் அவ்வாறே செய்தார். இப்போது சட்ட மன்றம் நடைபெறும் இதே இடத்தில்தான் இந்த நிகழ்வும் நடந்தது. 

ஒரு தலைவரை வாய்க்குவந்தபடிஎல்லாம் வசைபாடக் கூடாது என்று பயிற்சியளிக்கும் பாசறையாக அன்றைய சட்டமன்றம் இருந்தது. இன்றோ , எப்படிப் பேசினால் எதிர்க் கட்சிகளை சீண்டலாம் என்றே பயிற்சியளிக்கப்படுகிறது. முதல்வரை திருப்தி செய்வதற்காகவே பண்பாடற்ற வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன. அதைப் பார்த்தும் கேட்டும் முதல்வரும் குலுங்கக் குலுங்க சிரிக்கிறார். சபை நாகரிகமும் சந்தி சிரிக்கிறது. 

இப்படிப்பட்ட நாகரிகமற்ற அரசியல் அவலங்கள் இப்போது உச்சநிலையில் நின்று நிலவக்காரணம் நேற்றைய அரசியல் என்பது கட்சி சார்ந்த , கொள்கை சார்ந்த அரசியல். ஆனால் இன்றைய அரசியல் தனிநபர்களை முன்னிறுத்தி நடத்தப்படும் துதிபாடும் அரசியல். இதற்கு உதாரணம் எம்ஜியார், கருணாநிதி , ஜெயலலிதா, நரேந்திர மோடி ஆகியோர் மட்டுமல்ல மறைந்த மூப்பனார் முதல் வாசன் வரையும், வைகோ முதல் விஜயகாந்த் வரையும் சரத் குமார் முதல் மருத்துவர் ஐயா வரையும் மட்டுமல்லாமல் இயக்கங்களை இயக்குவோர் வரையும் கூட நீளும். நாளை என்ன நடக்குமோ?

இன்ஷா அல்லாஹ் அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சந்திக்கலாம்.

ஆக்கம்: முத்துப் பேட்டை பகுருதீன். B. Sc; 
கலந்தாய்வு மற்றும் உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.

நேற்று ! இன்று ! நாளை! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | February 28, 2015 | , , , , , , ,

இரண்டாம் பாகம் : பகுதி இரண்டு

தமிழ் நாட்டில் பெண்ணைப் பார்த்து திருமணம் பேசி முடிப்பது என்பது பாரம்பரியமான ஒரு பண்பாட்டின் பரிமாணம். ‘ தாயை தண்ணீர் எடுக்கும் இடத்தில் பார்த்தால் , மகளை வீட்டில் போய் பார்க்கவேண்டியதில்லை ‘ என்பதும் நம்மிடையே வழங்கப்படும் பழமொழிதான். காரணம் என்னவென்றால் அன்பு, பண்பு, அடக்கம், ஒடுக்கம் ஆகியவை வெளிப்படும் இடம் தண்ணீர் எடுக்கும் நீர் நிலைகள் அல்லது குழாயடிகள்தான். குடங்களை கேடயமாகத் தாங்கி பெண்கள் ஒருவருக்கொருவர் போட்டுக் கொள்ளும் குழாயடிச் சண்டைகள் தமிழ்நாடெங்கும் காலைவேளைகளில் காணக்கிடைக்கும் காட்சிகள்.

அதேபோல் சம்பந்தா சம்பந்தமில்லாத சத்தம் அதிகமாக கேட்கும் இடத்தையும் நாம் சந்தைக்கடை என்று வர்ணிப்போம். பள்ளி அல்லது கல்லூரி வகுப்புகளில் மாணவர்கள் படிப்பில் ஈடுபடாமல், சத்தமாகப் பேசிக் கொண்டு இருந்தால் இது என்ன வகுப்பா இல்லை சந்தைக் கடையா என்று சத்தம் போடும் ஆசிரியர்களை நமது அனுபவத்தில் கண்டு இருக்கிறோம். 

இதேபோல் குழாயடி, சந்தைக்கடை போன்ற உதாரணங்களுடன் சட்டமன்றத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தனிமனிதர்களிடையே தோன்றிய பகைமையின் காரணமாக பாராளுமன்ற , சட்டமன்ற ஜனநாயக மரபுகள் கூவம் நதியில் குளிக்கப் போய்விட்டன. காலம் காலமாக கற்றோராலும் கல்லாதோராலும் கட்டிக் காக்கப்பட்ட மனிதப் பண்புகளும் நடை முறை நாகரிகங்களும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அண்மைக் காலங்களில் இதன் நிருபணம் அதிகமாகி விட்டது. 

இன்றைய சட்டமன்ற நிகழ்வுகளை ஒப்பீடாக வைத்து பகுருதீன் ஒரு கற்பனை சித்திரத்தைத் தீட்டி இருக்கிறார். சற்று அதையும் பார்ப்போமே!

வானளாவி வளர்ந்த ஒரு மரத்தில் வட்ட மேசை மாநாடு !  கிளைக்கு ஒன்றாக கீசாரிப்பட்ட ஷைத்தான்கள் உட்கார்ந்து நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தன. அவைகளின் முகங்களில் ஒருவித ஏக்கம் குடிகொண்டிருந்தது. அன்றைக்கு அவர்களின் பொழுது போக்குக்கு ‘ பசாது’ ஒன்றுமில்லையே என்று ஷைத்தான்கள் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் ஒரு கரும்புகை எழுந்தது. மெல்ல மெல்ல அந்தக் கரும்புகை, வெண்புகையாக மாறியது. அந்த வெண்புகையிலிருந்து வெளிப்பட்டது ஒரு ஜின். அந்த ஜின்னின் கையில் ஒரு தமிழ் செய்தித்தாள்! ஷைத்தான்கள் தாங்கள் உட்கார்ந்திருந்த வட்ட மேசையிலிருந்து ஆர்வமாக எழுந்தன வானுலகம் போன ஜின்னை வழிமறித்தன. தங்களின் ‘பசாதுப்’ பசிக்கு இரை கிடைத்துவிட்டது என்ற ஆர்வம் அவைகளிடையே வெளிப்பட்டது.

ஹாவ்! ஹாவ்! என்று சப்தமிட்டவாறே ஷைத்தான்கள் ஜின்னை சூழ்ந்தன. ஜின் அமைதியாக தனது கரத்திலிருந்த செய்தித்தாளை நீட்டியது. நாய்கள் ரொட்டித் துண்டைக் கவ்வுவது போல அதைப் பறித்த ஷைத்தான்கள் செய்தித்தாளை விரித்துப் படித்தன. தலைப்புச் செய்தி இதுதான். 

“தமிழக சட்ட மன்றம் நாளை கூடுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்கள் முதல்வரின் அனுமதிகேட்டு வாயைத் திறந்த மன்றத்தின் முதல்வர் அறிவிப்பு! பரப்பரப்பான சூழ்நிலையில் கூடும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க் கட்சிகளும் அவைகளை எதிர்கொள்ள ஆளுங்கட்சியும் வரிந்து கட்டுகின்றன.” என்று அச்சடிக்கப்பட்ட செய்திகள் ‘நச்’ என்று இருந்தன. ஷைத்தான்களின் முகங்களில் நமுட்டுச் சிரிப்பு. 

ஷைத்தான்களில் சற்று விபரம் தெரிந்த ஒரு ஷைத்தான் இப்படிச் சொன்னது. “ கடந்த காலங்களில் சட்டமன்றம் கூடும்போது மக்கள் பிரச்னைகளை எழுப்ப எதிர்க் கட்சிகளும் அவற்றை எதிர்கொள்ள ஆளுங்கட்சியும் தயாராகின்றன என்றுதான் செய்திகள் வரும். ஆனால் இப்போது வரிந்து கட்டுகின்றன என்று ஊடகங்களே செய்திகள் வெளியிடுகின்றன என்றால் ஏதோ குஸ்தி நடக்கபோகிறது அதனால் நமக்கெல்லாம் நிறைய தீனி இருக்கிறது என்று அர்த்தம் “ என்று சொன்னது. 

“அப்படியானால் நாமும் போய் என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடுவோமா? “ என்று ஒரு ஷைத்தான் ஆர்வமுடன் கேட்டது. இந்தப் பிரேரணை ஒருமனதாக நிறைவேறியது. அவை உடனே கிளம்பின. ஒரு வாயு மண்டலம், கருநிறமாக எழுந்தது. மூன்று ஷைத்தான்களும் கண்சிமிட்டும் நேரத்தில் பூலோகத்தில் வந்திறங்கின. அவை இறங்கிய ஊர் சிங்காரச் சென்னை. சென்றடைந்த இடம் - சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதி. 

விடிந்தால் சட்ட மன்றம் கூடுகிறது. ஆளுநர் உரை அது இது என்று பாதுகாப்புப் பரபரப்பு. அதே நேரம் சட்ட மன்ற உறுப்பினர் விடுதியின் அனைத்து அறைகளும் மூடப்பட்டிருந்தன. ஒரே ஒரு துணிச்சலான ஷைத்தான் மட்டும் சாவித்துவாரத்தின் வழியே உற்றுப் பார்த்தது. உள்ளே உறுப்பினர்கள் அடுத்த நாள் கூட்டத்துக்கு அவசர அவசரமாகத் தயாராகி வருவதை அறிந்தது. ஆமாம்! உறுப்பினர்களின் உணவு மேஜை முன்னே சோமபானமும் சுறா பானமும். அருகில் அவர்கள் கடித்துத் துப்பிய செந்நிறம் தடவப்பட்ட கோழிகளின் எலும்புத் துண்டுகள். 

சரி ! அடுத்த அறையைப் பார்ப்போம் என்று பார்த்தால் அங்கும் அதே காட்சிகள். ஆளும் கட்சி உறுப்பினர்களின் அறைகளில் மட்டும்தானா என்றால் இல்லை! எல்லாக் கட்சி உறுப்பினர்களின் அறைகளிலும் இதே காட்சிகள். சரிதான்! இந்த மாதிரி அத்தியாவசிய விஷயங்களில் எல்லோரும் ஒற்றுமையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று ஷைத்தான்கள் சந்தோஷமாகப் பேசிக் கொண்டன. 

அதே நேரம், தங்களை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பிரதிநிதிகளாக பணியாற்றுகிறார்களோ இல்லையோ, பூலோகத்தில் தங்களுடைய பிரதிநிதிகளாக இவர்கள் வேலை செய்யத் தயாராகிறார்கள் என்பதை ஒரு ஷைத்தான் சுட்டிக் காட்டியது. இந்த சந்தோஷத்தைத் தாங்களும் கொண்டாட வேண்டுமென்று விடுதிக்கு அருகிலிருக்கும் டாஸ்மாக் பாருக்கு மூன்று ஷைத்தான்களும் சென்று மொடாக்குடி குடித்தன. 

குடித்துவிட்டு வெளியே வந்த ஷைத்தான்கள் நிலை தடுமாறி டாஸ்மாக் கடை வாசலில் மண்ணில் புரண்டு கிடக்கும் மனித ஷைத்தான்களுடன் தாங்களும் தடுமாறி விழுந்து புரண்டன. ஒரே ஒரு ஷைத்தான் மட்டும் கேரளாவுக்கு போன் போட்டு அங்கிருந்த ஒரு மரக்கிளையிலிருந்து  குட்டிச்சாத்தானை  அழைத்தது, “ மை டியர் குட்டிச் சாத்தான்! அடுத்த பஸ்ஸைப் பிடித்து அவசரமாக சென்னைக்கு வா !” என்று தகவலை தாக்கீதாக அனுப்பிவிட்டு , தானும் சாலை ஓரமாக சக ஷைத்தான்களுடன் படுத்துக் கொண்டது. 

பொழுதுவிடிந்தது! குட்டிச்சாத்தானும் குறிப்பிட்டபடி வந்து ஷைத்தான்களை துயிலெழுப்ப நால்வரும் கூப்பிடு தூரத்தில் இருந்த கூவத்தில் குளித்துவிட்டு சட்டமன்றம் நோக்கி நடந்தே சென்றன. சட்ட மன்றத்தின் பொதுமக்கள் நுழையும் வாயிலில் காத்திருக்காமல் அனைவரும் காற்றாக மாறி ‘ விஷ் ‘ என்று சட்டமன்றத்தின் பார்வையாளர் பகுதியில் ஒரு வசதியான இடத்தில் அமர்ந்தனர். 

அவை நடவடிக்கைகள் ஆரம்பமாயின. ஆளுநர் வந்தார். அம்பிகையே ஈஸ்வரியே என்று ஆலாபனை பாடிவிட்டு அமைச்சரவை தயாரித்துத் தந்த உரையைப் படித்துவிட்டு , சர்க்கரை போடாத காபியையும் குடித்துவிட்டு கிளம்பிப் போனார். 

ஆளுநர் உரையின் மீது விவாதம் ஆரம்பமானது. அவைத்தலைவர் சூரிய நமஸ்காரம் செய்வதுபோல் வானை நோக்கிக் கையை உயர்த்தி தென் சென்னைப் பக்கம் நோக்கி கும்பிட்டு விட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். 

விவாதம் தொடங்கலாம் என்று அவைத்தலைவர் அறிவித்ததுதான் தாமதம் எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த திமுகவினர் எழுந்தனர். ஆளுநர் உரையை கண்டிக்கிறோம் என்றார்கள் . சிறை தண்டனை அளிக்கப்பட்டு ஜாமீனில் இருக்கும் சீதேவியைப் புகழ்வதில் ஆளுநரும் தனது பங்கை ஆற்றியதை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்கள் . உடனே அந்தக் கட்சி உறுப்பினர்களும் கூடவே ஆதரவுக் கட்சிகளும் ஒரு விடுமுறை உற்சாகத்தில் வெளியேறின. 

அமைச்சர்கள் அமரும் பகுதியில் ஒரு அமைச்சர் தனது காலுக்கு ஒரு தைல பாட்டிலில் இருந்து தைலம் தடவிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த குட்டி சாத்தான் , “சாச்சா! அவர் என்ன தடவுகிறார்? ஏன் தடவுகிறார் என்று கேட்டது?” உடனே பெரிய சைத்தான் சொன்னது, “ ஒன்றுமில்லை! அண்மையில் நடந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது குத்தாட்டம் போட்ட அமைச்சர் அவர். அந்த வலி ஆடும்போது அவருக்குத் தெரியவில்லை- தெரிந்து கொள்ளும் நிலையிலும் அவர் இல்லை. இப்போது கால்வலிக்கிறது அதனால் தைலம் தேய்த்துக் கொண்டிருக்கிறார்" என்றது. அமைச்சர்களும் இப்படி ஆடுவார்களா என்ற சந்தேகத்துடன் அனைத்து ஷைத்தான்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் சட்டமன்றத்தின் நடுப்பகுதியில் கூச்சல் கேட்டது. 

வெளிநடப்பு செய்த எதிர்க் கட்சி உறுப்பினர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். 

அடுத்து ஒரு உறுப்பினர் , சட்டமன்றத்துக்கு வராத தலைவர்களைப் பற்றி ஒரு வினா எழுப்பினார். அதற்கு ஒரு ஆளும் கட்சி உறுப்பினர் அப்படி யாரும் வராமல் இல்லை ஒரு கிழவரும் ஒரு சிடிஜனும்தான் வருவதில்லை என்று கூறினார். கிழவர் யார் என்று அவரது கட்சியினருக்கும் சிடிசன் என்று அதாவது குடிமகன் என்று யாரைச் சொல்கிறார்கள் என்று அவரது கட்சியினருக்கும் விளங்கி அதை முன்னிட்டு சட்டமன்றம் சற்று நேரம் கோயம்பேடு ஹோல்சேல் மார்கெட் ஆனது. 

இப்படிப் பட்ட வார்த்தைகளால் மற்றவர்களின் உணர்வுகளைக் கிளறிப் பார்ப்பதும் தகுதி இழந்தவர்களுக்கு அளவுக்கு மீறி புகழாரம் சூட்டுவதும் இந்த மன்றத்தில் இப்போது நடை முறை என்று புரியாத ஷைத்தான்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன. 

திமுக உறுப்பினர் ஜே. அன்பழகன் எழுந்து தங்கள் கட்சி உறுப்பினர்கள் அமரும் இடத்தில் மூட்டைப் பூச்சி கடிப்பதாக ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு ஒரு அமைச்சர் இப்படியெல்லாம் கோமாளித்தனமாக பேசாதீர்கள் என்றதுதான் தாமதம் உடனே அங்கு ஒரு குருஷேத்திரப் போர் மூண்டது. அவைக் காவலர்கள் அழைக்கப்பட்டனர். அனைத்து திமுக உறுப்பினர்களும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இந்தக் கலவரத்தில் பல உறுப்பினர்களின் வேஷ்டிகள் அவிழ்ந்து விழுந்தன; அல்லது உருவப்பட்டன. பெண் உறுப்பினர்கள் தலை கவிழ்ந்தனர். 

இதைக் கண்ட ஷைத்தான்களுக்கு சந்தோசம் எல்லை மீறியது. உணவு இடைவேளை ! ஷைத்தான்கள் சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்தன. உணவுக்குப் பின் மீண்டும் உள்ளே போகவேண்டுமா என்ற பொருள்பட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன. மூத்த ஷைத்தான் பேசியது, “ இந்த பூலோகத்தில் நமக்குப் பிரதிநிதிகளாய் இந்த மன்ற உறுப்பினர்கள் இருக்கும்வரை நாம் பூலோகத்துக்கு வரவேண்டிய வேலையே இல்லை. நமது வேலையைத்தான் இவர்கள் பார்க்கிறார்கள் . ஆகவே நாம் மீண்டும் நமது மரத்துக்கே  போய் நிரந்தர ஒய்வு எடுக்கலாம் “ என்று சொல்லி கண்ணை மூடின ; உடனே உயரப்பறந்தன. குட்டிச் சாத்தானும் ஒரு ஆட்டோ பிடித்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குப் போனது. - என்று சித்திரம் தீட்டினார் பகுருதீன். 

இதோ! நான் பரிமாறும் ஒரு பழைய சோறும் ஊறுகாயும். 

முதலமைச்சர் காமராஜர்! அறிஞர் அண்ணா எதிர்க் கட்சித் தலைவர்! விலைவாசி உயர்வைப் பற்றி விவாதம்! அண்ணாவுக்கு வழங்கப்பட்டதோ கால்மணி நேரம். அவர் பேசியதோ முக்கால் மணி நேரம். காமராசர் பேச்சை ரசித்துக் கொண்டே எவரையும் குறுக்கிடக் கூடாது என்று கண்ணாலேயே உத்தரவு பிறப்பிக்கிறார். அண்ணா தனது பேச்சை நிறைவு செய்யும் போது, “ முதலமைச்சர் காமராசருக்கு , விலைவாசி உயர்வால் குடும்பங்கள் படும் கஷ்டங்கள் புரியாது. காரணம் அவர் பிரம்மச்சாரி. தனிக்கட்டை. குடும்பம் நடத்திப் பார்த்தால்தான் குடும்பங்கள் படும் கஷ்டம் தெரியும் ! “ என்று குறிப்பிட்டார். 

அண்ணாவுடைய பேச்சுக்கு அன்றைய சட்ட மன்ற உறுப்பினர் அனந்தநாயகி அம்மையார் பதில் அளித்தார். காமராஜரைப் பற்றி அண்ணா குறிப்பிட்டது பற்றி அவருக்கு கோபம் கொப்பளித்தது. “அண்ணா இப்படி முதல்வர் காமராசரைப் பற்றிக் கூறுகிறார். இவர் இப்படிப் பேசுவதால்தான் ஆண்டவன் இவருக்கு குழந்தையே இல்லாமல் செய்துவிட்டான்'. என்றார் அனந்த நாயகி. 

அவையில் இருந்த காமராஜர் உடனே எழுந்து கோபமாக தனது அறைக்குச் சென்றார். அனந்த நாயகிக்கு காமராஜரிடமிருந்து வந்தது ஒரு அவசர அழைப்பு. காமராஜர் தனது அறைக்கு வந்த அனந்த நாயகியிடம், “ஏம்மா! அண்ணாத்துரை அப்படி என்ன இல்லாததை சொல்லிவிட்டார். நான் பிரம்மச்சாரி தானே! ஆனால் அதற்காக நீ ஒரு பெண்ணாக இருந்தும் அண்ணாதுரைக்கு குழந்தை இல்லை என்று குத்திக் காட்டுகிறாயே அவர் மனம் எவ்வளவு வருத்தப்படும்? அவரது மனைவி இதைக் கேள்விப் பட்டால் எவ்வளவு வருத்தப்படுவார்? உடனே போய் அவரிடம் மன்னிப்புக் கேள்!" என்று சொன்னார். 

அனந்தனாயகியும் அவ்வாறே செய்தார். இப்போது சட்ட மன்றம் நடைபெறும் இதே இடத்தில்தான் இந்த நிகழ்வும் நடந்தது. 

ஒரு தலைவரை வாய்க்குவந்தபடிஎல்லாம் வசைபாடக் கூடாது என்று பயிற்சியளிக்கும் பாசறையாக அன்றைய சட்டமன்றம் இருந்தது. இன்றோ , எப்படிப் பேசினால் எதிர்க் கட்சிகளை சீண்டலாம் என்றே பயிற்சியளிக்கப்படுகிறது. முதல்வரை திருப்தி செய்வதற்காகவே பண்பாடற்ற வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன. அதைப் பார்த்தும் கேட்டும் முதல்வரும் குலுங்கக் குலுங்க சிரிக்கிறார். சபை நாகரிகமும் சந்தி சிரிக்கிறது. 

இப்படிப்பட்ட நாகரிகமற்ற அரசியல் அவலங்கள் இப்போது உச்சநிலையில் நின்று நிலவக்காரணம் நேற்றைய அரசியல் என்பது கட்சி சார்ந்த , கொள்கை சார்ந்த அரசியல். ஆனால் இன்றைய அரசியல் தனிநபர்களை முன்னிறுத்தி நடத்தப்படும் துதிபாடும் அரசியல். இதற்கு உதாரணம் எம்ஜியார், கருணாநிதி , ஜெயலலிதா, நரேந்திர மோடி ஆகியோர் மட்டுமல்ல மறைந்த மூப்பனார் முதல் வாசன் வரையும், வைகோ முதல் விஜயகாந்த் வரையும் சரத் குமார் முதல் மருத்துவர் ஐயா வரையும் மட்டுமல்லாமல் இயக்கங்களை இயக்குவோர் வரையும் கூட நீளும். நாளை என்ன நடக்குமோ?

இன்ஷா அல்லாஹ் அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சந்திக்கலாம்.

ஆக்கம்: முத்துப் பேட்டை பகுருதீன். B. Sc; 
கலந்தாய்வு மற்றும் உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.

நேற்று ! இன்று ! நாளை ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | February 21, 2015 | , , , , , ,

இரண்டாம் பாகம் : பகுதி ஒன்று.
அன்பானவர்களே!

முகமன் கூறி மகிழ்கிறோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி. இதற்கு முன் இதே தலைப்பில் பல அரசியல் நிகழ்கால சம்பவங்கள் ஆகியவற்றை விளக்கமாகவும் விமர்சனமாகவும் எழுதிக் கொண்டிருந்தோம். மோதலோடு காதல் கொண்ட சோதரர்களுடன் ஏற்பட்ட ஒரு துரதிஷ்டவசமான கருத்து மோதல் எல்லாம் அந்த எழுத்துத் தொடருக்கு இடையிலே ஏற்பட்ட எங்களால் மறக்க இயலாத சம்பவம். 

இப்போது நாட்டில், வளமும் பொருளாதார வளர்ச்சியும் வளர்ந்திருக்கிறதோ இல்லையோ நகைச்சுவை உணர்வு வளர்ந்திருப்பதைப்  பார்க்கலாம். நாட்டை ஆளும் பொறுப்புக்கு வந்திருப்பவர்களிடமும் அவர்களைச் சார்ந்தோர்களிடமும் இந்த நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருப்பதை பலரின் பேச்சுக்கள் மூலம் நாம் அன்றாடம் அறியலாம். அந்த வகையில் இந்தத் தொடர், பத்திரிகை இலக்கணத்தில் Satire என்று சொல்லப்படும் முறையில், அதாவது தமிழில் அங்கதம் என்கிற இலக்கண வகையில் பகிரப்படுமென்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறோம். நையாண்டி கலந்த விமர்சனங்கள் மற்றும் விளக்கங்கள் நிறையவே இருக்குமென்று சொல்லலாம். ஆனால் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் தோண்டிப் பார்ப்போமே தவிர, நோண்டிப் பார்க்க மாட்டோம். யார் மனமும் புண்படாமல் நடப்புகளை நகைச்சுவையுடன் சொல்வதே எமது நோக்கம். சிரிப்பு வந்தால் சிரிக்கலாம்; சிந்திக்கத் தெரிந்தால் சிந்திக்கலாம்; வழக்கம்போல் நிந்திப்பவர்கள் நிந்திக்கலாம். புழுதிவாரித் தூற்றினாலும் ஏற்றதொரு கருத்தை எடுத்தியம்புவோம். 

இந்த வாரம், ஜனநாயகம் என்கிற ஒரு உயர்ந்த கோட்பாடு படும் நாய்படாத பாட்டைப் பற்றிப் பார்க்கலாம். 

இப்போது நாட்டில் - அதுவும் தமிழ்நாட்டில் அடிபட்டு, பின்புறத்தைத் தடவிக் கொண்டே ஓடிக்கொண்டு இருக்கிற ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவன் ஜனநாயகம்தான். அண்மையில் திருவரங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிகம் அடிபட்ட ஜீவன் அது. ஜனநாயகத்தை, ஆளுக்கொரு தடிகொண்டு அவரவர் சக்திக்கேற்ப கதறக் கதற அடித்தவர்கள் மாநிலத்தை ஆளும் கட்சியினர் மட்டுமல்ல; மாநிலத்தை ஆண்ட கட்சியினரும் மத்தியில் ஆளும் கட்சியினரும்தான். 

ஜனநாயக முறையில் நடைபெற்ற இடைத்தேர்தல் என்பது பெயரளவுக்குத்தான். ஆனால் ஜனநாயகத்துக்கு விரோதமான அத்தனை செயல்களும் அங்கே அரங்கேறின . முதலாவது அந்த இடைத் தேர்தல், ஒரு திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் என்பதை விளக்க வேண்டியதில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வரைத் தேர்ந்தெடுத்த தொகுதியில் அந்த மாநில முதல்வரின் மீது பதினெட்டு ஆண்டுகள் வழக்கு நடைபெற்று அதில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு அவரது பதவி பறிக்கப்பட்டதால் நடைபெற்ற தேர்தல்தான் திருவரங்கத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல் என்பது நம் அனைவருக்கும் தெரியும். 

உண்மையான ஜனநாயகத்தை செயல்பட விட்டிருந்தால் நியாயமாக இந்தத் தேர்தலின் தீர்ப்பு எப்படி வந்திருக்க வேண்டும்? ஆனால் எப்படி வந்துள்ளது? இப்போது வென்று இருப்பவர் முன்னாள் முதல்வர் பெற்ற வாக்குகளைவிட இரண்டு மடங்கு வாக்குகள் அதிகமாக வாங்கி வெற்றி பெற்று இருக்கிறாரே! அப்படியானால் முன்னாள் முதல்வரை விட இப்போது வென்று இருப்பவர் பெரிய படிப்பாளியா? திறமைசாலியா? மக்கள் செல்வாக்குப் பெற்றவரா? நிர்வாகம் தெரிந்தவரா? அனுபவசாலியா? இருபத்தெட்டு வேட்பாளர்களைத் தோற்கடித்து , வென்றவர் வளர்மதிதானே தவிர, அவ்வளவாக மதி  வளர்ந்தவரல்ல. 

அது போகட்டும் . வென்ற கட்சி மட்டுமென்ன தனது நான்காண்டு கால மாநில ஆட்சியில் மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்தி மாநிலத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக்குவோம் என்ற தனது தேர்தல் கால கோஷத்தை செயல்படுத்திய கட்சியா? 

பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் மதுக்கடைகள் . மதுக் கடைகளின் வாசலில் பட்டப்பகலில் மண்ணில் வீழ்ந்து கிடக்கும் மண்ணின் மைந்தர்கள் ,

கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளைகள் இவற்றின் மூலம் இமாலயத்தின் கின்ஜன் ஜங்கா உயரத்துக்கு ஊழல் முறைகேடுகள் , 

அன்றாடம் கொலை, கொள்ளைகள், கற்பழிப்பு, முதியோர்களை கன்னி வைத்துக் கொலை செய்யும் கூட்டங்களின் வளர்ச்சி, சங்கிலித் தொடர் சங்கிலி பறிப்பு நிகழ்வுகள் , 

78 ஆயிரம் கோடிக்கு மேல் அரசு செலுத்த வேண்டிய வரலாற்றில் இடம்பெறும் கடன் சுமைகள்,

அமைச்சர்கள் , அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பந்தாடப்பட்டு பயமுறுத்தப்பட்டு நிர்வாகத்தில் நீதி செலுத்த முடியாத நிலைகள், 

இரண்டாயிரம் ஆரம்பப்பள்ளிகளை மூடிய நிகழ்வுகள் காரணமாக தனியாருடைய கல்விக் கொள்ளைக்கு கதவைத் திறந்துவிட்ட காட்சிகள், 

எதிர்க்கட்சிகளை சட்டமன்றத்தில் பேசவிடாமல் முடக்கிப் போடுவது , சீண்டி விடுவது  அல்லது வெளியேற்றும் வேடிக்கைகள்,

மக்கள் மன்றத்தில் , எதிர்க் கட்சிகள் ஆளும்கட்சியை விமர்சித்துப் பேசினால் புற்றீசல் போல புறப்பட்டுவரும் அவதூறு வழக்குகள், 

முந்தைய திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே, ஆசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூல்நிலையத்தை முடக்கிப் போட்டத்துடன், அந்த நூல் நிலையத்தில்       சேகரிக்கப்பட்டிருந்த கிடைப்பதற்கரிய சொத்துக்களான நூல்களைத் தூக்கிப் பரண் மேல் போட்டது, 

அதே போல மக்களின் பலகோடி ரூபாயில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை முடக்கிப் போட்டது, 

செம்மொழிப் பூங்காவை செயலிழக்க வைத்ததுடன் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் கை வைத்து மக்களைத் திண்டாட வைத்தது, 

காலில் விழும் கலாச்சாரம், தனிமனித வழிபாடு, நீதிமன்றம் தண்டித்தவரின் உருவப்படத்தை அரசு அலுவலகங்களிலும் அரசு விழாக்களில் வரும் ஊர்திகளிலும் தைரியமாக வைத்து, மரபுகளை மண்ணைத் தோண்டிப் புதைத்தது, 

முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்திவைத்து அனாதைகளான முதியோர்களை பிச்சைக்காரர்களாக அலையவிட்டது, 

மின்சாரவெட்டு காரணமாக சிறு குறுந்தொழில்களின் முடக்கம், பெருந்தொழில்கள் எதுவும் தொடங்காமை, இயங்கிக் கொண்டிருக்கும் நோக்கியா முதலிய தொழில்களும் மூடப்பட்டதை பார்த்தும் வாயை மூடிக் கொண்டிருந்தது, 

சத்துணவில் பல்சுவை உணவு தருகிறோம் என்று அதற்காக ஒதுக்கிய 103 கோடி ரூபாய் என்கிற முழுப் பூசணிக்காய் சோற்றில் மறைக்கப்பட்ட மாயம், 

சாதாரண மக்கள் பயன்படுத்தும் ரேஷன் கார்டுகளில் கூட கடந்த இரண்டு வருடங்களாக உள்தாள் மட்டுமே ஒட்டப்படும் நிர்வாகக் குறைபாடுகள், 

கிட்டத்தட்ட 127733 கோடி ரூபாய் அளவுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக 110 விதியின் கீழ் நற்பணி அறிவிப்புகளை மட்டும் கரவொலிகளுக்கு இடையே அறிவித்துவிட்டு பிறகு அவற்றைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் விட்டுவைத்து இருப்பது, 

தயாராக இருக்கும் மெட்ரோ இரயில் திட்டத்தை பெங்களூரில் விழுந்த இடி காரணமாக, இன்னும் தொடங்கி வைக்காமலிருப்பது,  

போக்குவரத்துத் துறைத் தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய நிலுவைத்தொகை, PF, பணிக்கொடை போன்றவற்றைத் தராமல் இன்னும் நிறுத்தி வைத்திருப்பது, 

இப்படி இந்தக் குறைகளின் பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே போகும். மொத்தத்தில் தமிழ்நாட்டில் பிரச்னை இல்லாத மாவட்டங்களே இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் தாதுமணல் மற்றும் அணுஉலை பிரச்னை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு பிரச்னை, இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர் பிரச்னை, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ பிரச்னை, மதுரையில் கிரேனைடு பிரச்னை, சென்னை மற்றும் இதர மாநகரங்களில் சட்ட ஒழுங்கு பிரச்னை என தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா- அரசு இயந்திரம் இயங்குகிறதா? முதலமைச்சர் என்ற ஒருவர் இருக்கிறாரா என்ற கேள்வியை நடுநிலையாளர்களின் மத்தியில் கிளப்பி விட்டு விட்டு இருக்கிறது. 

இந்த நிலையில், திருவரங்கம் இடைத்தேர்தல் வெற்றி, இந்த ஆட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றிதழ் என்று அமைச்சரவை மட்டுமல்ல ஆளுநர் உரையும் சொந்தம் கொண்டாடுவதைப் பார்க்கும் போது, ‘சிரிப்புத்தான் வருகுதைய்யா உலகைக் கண்டால் சிரிப்புத்தான் வருகுதைய்யா’    என்றுதான் பாடத் தோன்றுகிறது. 

நாம் மேலே பட்டியலிட்ட இந்த ஆட்சியின் குறைபாடுகள் அனைத்தையும் மக்கள் அறியாமலா வாக்களித்தார்கள்? இல்லை. அறிந்து இருக்கிறார்கள்; பொது இடங்களில் இவை பற்றி விவாதித்தார்கள்; ஆட்சியின் குறைகள் அனைத்தையும் விமர்சித்தார்கள். ஆனால் எல்லா விமர்சனங்களுக்கும் ஒரு சர்வரோக நிவாரணி இருக்கிறது. அந்த நிவாரணி, பாதாளம் வரை பாயும்; பத்தும் செய்யும். அவலமான ஆட்சிக்கு மக்கள் வழங்கியுள்ள வெற்றி மனப்பூர்வமானதா ? பணப் பூர்வமானதா?

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்பது எல்லா இடைத்தேர்தல்களிலும் நிருபிக்கப்பட்டு இருக்கிறது. அதிகாரம் , பணப்பட்டுவாடா , அமைச்சர்களின் தலையீடுகள் ஆகிய அத்துமீறல்களின் முன் நீதியும் நியாயமும் மனசாட்சியும் மண்டியிட்டு ஜனநாயகத்தை மரணப்படுக்கையில் தள்ளிவிட்டன. 

மக்கள் நினைப்பதை செய்வதுதான் ஜனநாயகம். மக்கள் விருப்பத்தை வாக்குச் சீட்டுகளின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள உதவும் கருவிதான் ஜனநாயகம். ஆனால் இந்த வலிமை வாய்ந்த ஜனநாயகம் இன்று, தன்னலவாதிகளின் அத்துமீறல் அரசியலால், ஒரு குவாட்டர் சாராயத்துக்கும் ஒரு பொட்டலம் பிரியாணிக்கும் போன் ரீசார்ஜுக்கும் சாப்பாட்டு டோக்கனுக்கும் விற்கப்படுகிறது. 

ஆளும் கட்சியினர் பணம் கொடுத்து வாக்குகளை வாங்குகிறார்கள் என்று அவர்களை விரல் நீட்டிக் குற்றம் சொல்லும் தகுதி எதிர்க் கட்சியான திமுகவுக்காவது இருக்கிறதா என்று ஆராய்ந்தால் இந்தத் திட்டத்தை திருமங்கலத்தில் தொடங்கிவைத்தவர்களே அவர்கள்தான் என்கிற கசப்பான உண்மை நமக்கு நினைவுக்கு வருகிறது. இரசாயனத்துக்கும் பெளதீகத்துக்கும் பார்முலா படித்துப் பழக்கப்பட்டவர்கள், திருமங்கலம் பார்முலா என்ற இடைத் தேர்தல் பார்முலா அறிமுகமானபோது அதிர்ந்தார்கள். இப்படிப்பட்ட அரசியல் அத்துமீறலை அறிமுகப்படுத்திய திமுக பாய்ந்த எட்டு அடியை இன்று அதிமுக பதினாறு அடி பாய்கிறது. இதைக் குற்றம் சொல்லும் தகுதி திமுகவுக்கு இருக்கிறதா? இன்று ஆட்சிக் கட்டிலில் திமுக இருந்தாலும் , இதே கதைதான் நடக்கும்; அப்போது அதிமுக அதை எதிர்க்கும். நடிகர்கள்தான் வேறு; ஆனால் கதை ஒன்றுதான். 

மத்தியில் ஆளும் கட்சியாகிவிட்டோம் என்கிற ஒரே மமதையில் திராவிடக் கட்சிகளுக்கு நாங்கள்தான் மாற்று என்று மார்தட்டி சவுண்ட் விட்ட பாஜக வினரும் ஜாமீன் இழந்தார்கள். ஆனால் அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார். எச்சங்களையும் உண்மையான மிச்சங்களையும் அவர்கள் பார்க்கப்பழகிக் கொள்ள வேண்டும் என்பது ஒரு புறம்; தமிழ்நாடு என்றைக்கும் பெரியாரின் விழுதுகள் விழுந்த பூமி என்பதையும் அவர்கள் முதலில் உணரவேண்டும்.  

“நீங்கள் அத்தனை பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள்! – உங்கள் 

ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் ! “ என்று கண்ணதாசன் கேட்டது இவர்கள் அனைவரையும்தான். 

நாடு போகும் போக்கில், ஜனநாயகம்படும்பாட்டில் இன்னொரு முறை கண்ணதாசனைத்தான் துணைக்கு அழைக்க வேண்டி இருக்கிறது. 

“கற்பாம் ! மானமாம்! கண்ணகியாம் ! சீதையாம் ! 
கடைத்தெருவில் விற்குதடா! ஐயோ பாவம்! 
காசிருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம் ! ” 

உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் , ‘செந்தமிழ்நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே’ என்று பாரதியால் பாடப்பட்ட தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை விலைபோகும் நிலைக்குத் தள்ளிய அத்தனை பேரும் குற்றவாளிகளே!. 

உயர்ந்த சிந்தனைகள், உரத்த கோட்பாடுகள், உயர்ந்த நிலையிலான அரசியல் நிர்ணய முறைகள் உதவாக்கரைகளின் கரங்களில் மாட்டிக் கொண்டு தங்களது மூச்சை விடும் நாளை எதிர் நோக்கிக் கிடக்கின்றன. 

இதற்கு என்னதான் முடிவு? யார்தான் இந்த இக்கட்டிலிருந்து ஜனநாயகத்தை மீட்க முடியும்? விடை ? 

வெகுதூரத்திலாவது ஏதாவது ஒரு சிறு புள்ளியாகவாவது மாற்று அரசியல் என்கிற வெளிச்சம் தெரிகிறதா? தென்படுகிறதா? தேடுவோம்! இன்ஷா அல்லாஹ். 

ஆக்கம்: முத்துப் பேட்டை பகுருதீன். B. Sc; 
கலந்தாய்வு மற்றும் உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி