Showing posts with label 2013. Show all posts
Showing posts with label 2013. Show all posts

அதிரை உலா - 2013 24

அதிரைநிருபர் பதிப்பகம் | December 31, 2013 | , , , ,

2013 - வது  வருடம் விடைபெறும் தருவாயில் இருக்க  அதனை விடை கொடுத்து அனுப்பும் முன்னர் சென்ற வருட உலகம், சென்ற வருட இந்தியா என்றெல்லாம் பல்வேறு ஊடகங்களிலும் கண்டு வருகிறோம். அவைகளையெல்லாம் விடுத்து நாமும் 2012ம் வருடத்தில் பார்த்தது போலவே இவ்வருடமும்  அதிரையின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காண்போம்.


1.பல்லாண்டுகளாய் சாக்கடையும் ஆக்கிரமிப்பும் நிறைந்த நடுத்தெரு பள்ளியின் பின்புறமுள்ள செட்டியா குளத்திற்கு தமிழ்நாடு அரசு மூலம்  நபார்டு உதவி திட்டத்தின் கீழ்  50 லட்சம் ஒதுக்கி அவ்வப்போது  பணி நடந்து முடியும் தருவாயில் உள்ளது. 


2.மக்களின் மடமையை பயன்படுத்தி அவர்களின் மூட நம்பிக்கைக்கு புகைமூட்டி அதில் குளிர்காய எடுத்துக் கொண்ட ஆயுதமாக  இந்த புதிய கல்லறை, அதுவும் ஏற்கனவே இருக்கும் கல்லறைக் கட்டிடத்திற்கு அருகிலேயே புதியதொரு கல்லறை ஜொஹரா அம்மாள் என்று பெயரிட்டு!


3.செக்கடிப்பள்ளிக்கு சொந்தமான அதன் மேட்டுப் பகுதிகளில் பல கட்டிடமாகவும் கீத்துக் கொட்டகைகளாகவும் இருக்க, மற்றொரு கட்டிடம் செக்கடிப்பள்ளி நிர்வாகம் பேரில் கட்டி வருகையில் திடீரென்று அங்கே பேரூராட்சி சார்பில் "இது பேரூராட்சிக்கு சொந்தமான இடம்" என பெயரிட்டு போர்டு  வைத்து கட்டிட தளவாட சாமான்களை பேரூராட்சி அள்ளிச் சென்றது, பேரூராட்சி தலைவரின் கவனத்திற்கு வராமலே! பின்னர்  நிர்வாக  (அரசியலில் நீயா நானா) குளறுபடிகள் கலைந்து அத்தகைய அறிவிப்பு போர்டு நீக்கப்பட்டு பேரூராட்சி தலைவரின் தலையீட்டின் பேரில் செக்கடி பள்ளி நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட்டன. 


4. மார்ச் மாத்தத்தில் தக்வாபள்ளிக்கு புதிய நிர்வாகம் வந்தது. பதவி ஏற்பு விழாவுக்கு கூடாது அல்லது சர்ச்சை என நன்கறிந்த   மெளலிது ஓதி நார்சாவுடன் முரண்டு செய்தார்கள். சில முடிவெடுப்பதில் சிலரை கலக்காமலேயே செயல்பட்டதாக வழக்கும் தொடர்ந்தனர். அதோடு மட்டுமல்லாமல் பல்லாண்டுகளாய் மார்க்க பயான் செய்த ஹைதர் அலி ஆலிம் அவர்களை நீக்க வழி தெரியாமல் 10 நாள் சஸ்பென்ஸ் மற்றும் மைக் கிடையாது போன்ற சட்டமன்ற சமாச்சாரமெல்லாம் நடந்து முடிந்தன.


5. அல் அமீன் பள்ளி விவகாரத்தில் பல ஆண்டுகளாய் நிலச் சர்ச்சைக்கு தீர்வு கிடைத்து சாதகமான தீர்வு கிடத்தது ஒட்டு மொத்த அதிரையருக்கும் குறிப்பாக "அதிரை எக்ஸ்ப்ரஸ்" வலைத் தளத்தின் முன்னெடுப்பகளுக்கும் கிடைத்த வெற்றியாகும். விரைவில் பிரம்மான்ட பள்ளி உருவாகி தொழுகையால் நிரம்ப துஆ செய்வோமாக!


6. மார்க்க அறிஞர் ஒருவரை பழிவாங்கும் திட்டத்தில் பல சூழ்ச்சிகள் செய்தார்கள். மேலும் பல அதிரைவாசிகளுக்கு ஊரில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு சிலர் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தனிப்பட்ட அலைபேசி மற்றும் தொலைபேசி அழுத்தங்கள், மிரட்டல்கள், செய்ததோடு அல்லாமல் தக்வா பள்ளி பயான் தொடர்பான செய்திகளை முடக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள்.  ஒரு கட்டத்தில் நம்மவர்களே நம்மவர் மீது வழக்கு தொடர்ந்து அவர்களை கைது செய்ய காவல் துறை பள்ளிக்கு வந்தும் பின் அவரே நானே வருகிறேன் என்று காவல் துறைக்கு போயும் பின்னர் பலதரப்பு பேச்சு வார்த்தை நடத்தி ஓரளவு சுமூக தீர்வுடன் அல்லாஹ்வின் நாட்டபடி அதிரையிலேயே இருக்கிறார்கள்.


7. அதிரையர்களுக்கு பொழுது போக்கு அம்சங்கள் என்ற புதிய முயற்சியாக வர்த்தக திருவிழா என்ற பெயரில்  ஏப்ரல் 28 முதல் மே 12 வரை  ஒரு குழுவினர் சார்பாக நடத்தப்பட்டது. இது கந்தூரிக்கு மாற்றாகவும் மார்க்கத்திற்கு உட்பட்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  முதல் நாள் இரவு அரங்கேற்றிய நிகழ்ச்சியொன்றில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால்  வெளிப்படுத்த முடியாத இரட்டை அர்த்தமுள்ள கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் இது இப்படியே தொடர்வது மார்க்க விரோதம் என கருதி ஒரு புறம் ஆலிம்கள் தலையீட்டின் பேரிலும் மறுபுறம் கலெக்டரின் தலையீட்டின் பேரிலும் கலை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விழா தொடர்ந்தது.


8. கடந்த மேயில் கடற்கரை தெருவில் கல்வி விழிப்புணர்வு மாநாடு அன்னை ஆயிசா மகளிர் கல்லூரி நிறுவனர் சலீம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவுடன் சிறப்பாக நடை பெற்றது.


9. கடந்த ஜூனில் கடைத்தெரு மார்க்கெட்டில் புதிதாக கடைகள் கட்டும் நோக்கில் திட்டமிட்டு அஸ்திவார மட்டம் வரை தற்போது எழுந்துள்ளது. துவக்க நிகழ்வில் அடிக்கல் நாட்டு சம்பவ முறையில் சர்ச்சைகள் எழுந்தன. நிர்வாகத்தின் நல்ல நோக்கம் சீக்கிரம் நிறைவேறட்டும். இன்சா அல்லாஹ்.


10.  அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் மேற்பார்பார்வையில் பெண்களால் அதிரையில்  இயங்கி வரும் அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் ஸனது (பட்டம்) வழங்கு விழா கடந்த  ஜூனில் அன்னை ஆயிசா அறிவியல் கலை மகளிர்கல்லூரி தாளாளர் பேராசிரியை சயீதாபானு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள    சிறப்பாக நடைபெற்றது.


11. பேராசிரியர்கள் அப்துல் காதர், பரகத் இவர்களுக்கு பதிலாக இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் மூத்த முதல்வராக டாக்டர் எஸ்.எம் அன்வர் பாட்ஷா அவர்கள்  பள்ளியின் நிர்வாகத்தால் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


12. சகோ. M.ஜமால் முஹம்மது அவர்களின் மகன் J.மீராசாகிப் குரூப் தேர்வுகளில் வெற்றிகரமாகத் தேர்ச்சிபெற்று 2014 ஆம் ஆண்டு நடைபெறும் I A S தேர்வு எழுதவுள்ளார். பொறியியல் பட்டம் பெற்றுள்ள J.மீராசாகிப், சென்னை அண்ணா சாலையிலுள்ள அழகிய கடன் I A S  அகாடமியில் இதற்கான பயிற்சிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 


13. காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில்  கா.மு.மே.பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் SKM ஹாஜா முகைதீன் அவர்களின் தலைமையுரையுடன், இணையதள எழுத்தாளரும் அதிரைநிருபர் வலைத்தளத்தின் மூத்த பங்களிப்பாளருமான சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் சிறப்புரையை ஆற்றி  பேசியதுடன்  பட்டிமன்றப் பேச்சாளர் சகோதரர் அண்ணா சிங்கார வேலு அவர்கள் தனக்கே உரித்தான நகைச்சுவை மற்றும் சிந்திக்க வைத்த பேச்சுடன்  அதிரைநிருபர் வலைதளத்தால் கவுரவித்து வழங்கப் பட்ட “நபிகள் நாயகம்” என்கிற வரலாற்று நூல் நினைவுப் பரிசாக ஆசிரிய ஆசிரியைகளுக்கு வழங்கப்பட்டது.  அத்துடன் ஆசிரியர் தினம் பற்றிய கவிஞர் சபீர் அவர்களின் கவிதை படி எடுத்து அனைவருக்கும் வழங்கப் பட்டது.  நிகழ்ச்சியில் அதிரை அறிஞர் பன்னூலாசிரியர் அதிரை அகமது, பேராசிரியர் அப்துல் காதர், கணிணி தமிழ் அறிஞர் ஜமீல் எம். ஸாலிஹ், மூத்த சகோதரர் முகமது பாரூக். நாவலர் நூர் முகமது, பெற்றோர் சங்க  தலைவர் செய்யது, எல்.எம்.எஸ். அபூபக்கர்,ஆகியோர் உட்பட கலந்து கொண்டு சிறப்பித்தனர்.   


14. கடந்த அக்டோபரில் கடைத்தெரு மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டு மிகப் பெரும் சேதம் ஏற்பட்டது. இதிலும் அரசியல் வாதிகள் அத்தனை பேரும் தனக்கே உரிய பானியில் ஆதாயம் அடைய முற்பட்டனர். உண்மை அல்லாஹ்வுக்கே வெளிச்சம். இன்னும் கயறு தொழிற்சாலை தீ, சமாதி கூரை தீ, வீடுகள் தீக்கிரை என தொடர்கதையாக உள்ளது. அதிரைக்கென்று தீயணைப்பு வாகனம் ஒதுக்குவதில் அரசின் மெத்தனம் உடனடியாக களையப்பட வேண்டும். வெளியூரில் இருந்து வரும் தீயணைப்பு வாகன தமதித்தால் அவர்கள் மீதே கோபத்தை காட்டி தாக்கிய வேதனைச் சம்பவமும் கடைத்தெருவில் அரங்கேறியது.


15. K M A ஜமால் முஹம்மது அவர்கள் ஆரசியல் ஆதாயம் இல்லாமல் பொது நலனில் அக்கரை கொண்டு பல்வேறு தேவை அறிந்து அரசுக்கு சட்ட ரீதியாக கோரிக்கை வைத்து  அவ்வப்போது சேவையில் சாதித்து வருகிறார். இவரைப் போல தெருவுக்கு நாலு பேர் சமுக அக்கரை கொண்டால் அரசியலே தோற்பது நிச்சயம்.


16. அதிரை தாருத்தவ்ஹீத்  மார்க்க பிரச்சாரங்கள் சிறப்பாக செய்து வருவதுடன் கடந்த இரு சாமதித்திருவிழாவுக்கு எதிராக நேரடி அணுகுமுறை, மற்றும் குறைந்த பட்சமாக  அதனால் மின் துண்டிப்பு தவிர்க்கப்பட மனுச் செய்தும் அதில் வெற்றியும் கண்டது. இன்னும் தொடர் நடவடிக்கைகளால் மார்க்க விரோதங்கள்  முற்றிலும் ஒழியும் என்பதில் ஐயமில்லை. 


17. கடந்த காலம் அதிகமான விபத்துகளை அதிரை சந்திக்க நேர்ந்தது. குறிப்பாக ரமலான் மாத வாக்கில்  அதிகமான வாகன, உயிர் சேதம் ஏற்பட்டது. 


18. தெருவில் இறங்கி காலி குடங்களுடன் போராட்டம் என்பதெல்லாம் பத்திரிகையில் படித்த செய்தி அன்று. இன்றோ அதிரையில் பெண்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது அதிரை பேருராட்சி!


19. பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் சட்டத்தாலும் செயலாலும் தடுக்க முடியாமல் தோல்வியுற்ற பேரூராட்சி இன்று சாலைகளில் அலையும்  ஆடு மாடுகளை பிடிப்பதிலும் சட்டம் போட்டு 'லூஸ்' விட்டு அதிலும் தோல்வி கண்டுள்ளது. ஆளுமையின் குறையா அல்லது ஆள்பவரை பிடிக்காத அரசியல்  சதியா? பாவம் அதிரை!


20. ஈ.சி. ஆர் சாலையில் மூன்றடுக்காய் பிரம்மாண்டமாய் காட்சி தரும் இறையில்லம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில்  மீதி வேலை முடித்திட நிதிக்காக காத்திருக்கிறது. இன்சா அல்லாஹ் வழி கிடைக்கும். 


21. சி.எம்.பி.லைனில் அமைந்த  ALM ஸ்கூலில் ஜூம்மா மட்டும் நடந்த இடத்தில் ஐவேளைக்கும் தொழுகைக்கும் மஸ்ஜிதும் உருவாக்கி எளிய முறையில் திறப்பு விழா கண்டு அதிரை மஸ்ஜித் எண்ணிக்கையை மேலும் ஒன்று கூட்டியுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.


22. கடந்த தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற S.அப்துல் அஜீஸ் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டார்., புதிய பொறுப்பு அதிரைக்கும் இஸ்லாமியர்களுக்கும் பெருமை சேர்க்க அல்லாஹ் நாடுவானாக!


23. பேரூராட்சி தலைவர் அன்றிலிருந்து இன்று வரை ஏகப்பட்ட சவால்களையும் எதிர்ப்புகளையும் வழக்குகளையும்  எதிர் கொண்டு அதிரைக்காக! போராடி வருகையில் அரசியல் காழ்ப்புணர்வால் திட்டங்கள் கேன்சலாகிய கதையாகவே உள்ளன. நேர்மையும் உண்மையும் வெற்றியாகட்டும். 


24. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, பெருநாள் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி இறைவன் அருளால் மிகச் சிறப்பாக சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் தலைமையில்  நடந்தேறியது, இந்நிகழ்ச்சியின் நோக்கம், பிற சமுதாயத்தினர் மத்தியில் இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வுகளைக் களைந்து, அவர்களுக்கு இஸ்லாத்தைப்  பற்றிய நற்போதனைகளை எடுத்துக் கூறுவதும், இஸ்லாமியர்களுக்கும் பிற சமுதாயத்தினருக்குமிடையே உள்ள புரிந்துணர்வை வளர்த்து, நம்மை சுற்றியுள்ள   வட்டாரத்திலும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நன்னோக்கத்தில் நமதூர் இளைஞர்களின் மனதில் உதித்ததே இந்த ஈத்-மிலன் நிகழ்ச்சி. இந்த வருடத்தின் ஹைலைட் நிகழ்வு இது.


25. அல்லாஹ்வின் நாட்டப்படி மஸ்ஜிதின் கம்பீர தோற்றத்திற்கும், மனம் குளிர இயற்கையை ரசிக்கவும் மண் வளம் கூடிடவும் அல்லாஹ் தந்த அருட்கொடை. இதுபோல் அதிரையின் எல்லா குளமும் நிரம்பிட மனம் ஒன்றிய வலிமையையும்,  மழைநீரையும்  அனைத்து ஆறு ஏரி வளங்கள் வாயிலாகவும் வாய்ப்புகளை தந்தருள்வானாக! 


* இன்ஷா அல்லாஹ் அடுத்த வருட அதிரை-உலாவில் அதிரைக்கு இரயில் போக்குவரத்து, ஷிஃபாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், பாதாளச் சாக்கடைத் திட்டம், அனைத்து குளத்திலும் தண்ணீர், விபத்தே இல்லாப் போக்குவரத்து  இன்னும் எல்லாம் இன்பமாய் காண்போமாக! மார்க்க நெறிக்குட்பட்டு!

M.H.ஜஹபர் சாதிக்
pictures supplied

அதிரையில் ADT நடத்தும் ரமளான் தொடர் சொற்பொழிவு ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | July 25, 2013 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்ஹம்துலில்லாஹ் ! அதிரை தாருத் தவ்ஹீத் இப்புனித ரமளான் மாதத்தில் தினசரி காலை 11 மணியிலிருந்து பகல் 12 மணிவரையில் பெண்களுக்கென்று பிலால் நகர் ADT தர்பியா மையத்தில் தனியாக சொற்பொழிவும், இதேபோல் இரவு 10:15 மணி முதல் 11:30 மணி வரை ஆண்களுக்கும் பெண்களும் பொதுமேடை சொற்பொழிவு நிகழ்வு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.


மாஷா அல்லாஹ் ! மவ்லவீ முர்ஷித் அப்பாஸி அவர்களால் வழங்கப்படும் இந்த தொடர் சொற்பொழிவு நல்லதொரு வரவேற்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது !

அதிரையில் பெண்களும் ஆண்களும் ஏராளமாக நேரிலும் தங்களது வீடுகளில் இருந்த வண்ணம் ஒலிபெருக்கி வாயிலாகவும் கேட்டு பயன்பெறுகிறார்கள் என்ற தகவல்கள் மகிழ்வை தருகிறது !

வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் அதிரை சகோதரர்களுக்கும் இந்த அற்புதமான தொடர் சொற்பொழிவை கேட்க அதிரைநிருபர் வலைத்தளத்தில் தினமும் இரவு தொடர் சொற்பொழிவை நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 75லிருந்து 95 வரை பார்வையாளர்கள் நேரலையாக பார்க்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட காணொளியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ் !



மேலும் மீதமிருக்கும் ரமளானுடைய நாட்களிலும், இவ்வாறான பயனுள்ள சொற்பொழிவுகளை கேட்டு நம் வாழ்விலும் அதற்கேற்றார்போல் பக்குவப்படுத்திக் கொண்டு குர்ஆன் ஹதீஸ் வழியில் நடக்கவும் இறுதிவரை நிலைத்திருக்கவும் அல்லாஹ் அருள்புரிவானாக !

அதிரைநிருபர் பதிப்பகம்

ஐக்கிய அரபு அமீரகவாழ் அதிரைவாசிகளுக்கு ABM இன் அன்பான வேண்டுகோள் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 13, 2013 | , , , , , , ,

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிரை பைத்துல்மால் கடந்த 20 வருடங்களாக உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு அளப்பரிய சேவைகளைச் செய்து வருவதை அறிவீர்கள். அதிரைவாசிகளிடமிருந்து பெறப்படும் ஜகாத், ஃபித்ரா மற்றும் ஸதகா மூலம் இவற்றை மார்க்கம் வரையுறுத்துள்ளபடி பகிர்ந்தளித்து வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும் வெளிநாடுகளிலுள்ள அதிரைவாசிகளின் நன்கொடைகளைத் திரட்டி வழமைபோல் சேவைகள் தொய்வின்றி தொடர தங்கள் பங்களிப்பை மனமுவந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அதிரைவாசிகளிடமிருந்து ஃபித்ரா தொகையாக தலா 15/- (பதினைந்து திர்ஹம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஃபித்ரா உதவிகள் ரமலான் மாதத்திற்குள் பகிர்ந்தளிக்கப்பட்டு விடும். பிற உதவிகளுக்கு ஜகாத் மற்றும் ஸதகா மூலம் ஆண்டு முழுமைக்கும் திட்டமிடப்பட்டு அதற்கேற்ப நிதி ஒதுக்கப்படுகிறது. ஆகையால், தங்களின் ஜகாத் தொகையை முழுவதுமோ அல்லது குறிப்பிட்ட பகுதியையோ அதிரை பைத்துல்மாலுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

துபாய் மற்றும் அபூதாபியில் கீழ்கண்ட பிரதிநிதிகளிடம் அதிரை பைத்துல்மாலுக்கான நிதியுதவிகளைச் செலுத்தலாம்.

துபாய்        :      S.M.A.சாகுல் ஹமீது - 0503792167
                             M.Z.அமீன்            - 0505050922                       
                             N.ஜமாலுதீன்         - 0504737200
                             ஜாஃபர் அலி         - 0504364388

அபூதாபி:          S.அபுல் கலாம்        - 0567822844
                             A.முஹம்மது யூசுப்  - 0558084073

இவண்,

செயலர்
அதிரை பைத்துல்மால்
துபை கிளை

1993-2011 ஆண்டுவரை அதிரை பைத்துல்மால் மூலம் வழங்கப்பட்ட முக்கிய உதவிகள்:



சேவைகள்
ரூபாய்
வட்டியில்லா கடன்
6,599,050
மாதாந்திர உதவித்தொகை
1,744,550
கல்வி உதவிகள்
556,509
திருமண உதவிகள்
512,070
மருத்துவ உதவிகள்
229,291
கத்னா உதவிகள்
143,301
பிற உதவிகள்
140,695
மொத்தம்
9,925,466


2012-2013 ஆம் ஆண்டில் அதிரை பைத்துல்மால் மூலம் வழங்கப்பட்ட முக்கிய உதவிகள்:



சேவைகள்
ரூபாய்
வட்டியில்லா கடன்கள்
3,772,000
மாதாந்திர உதவிகள்
403,800
கல்வி உதவிகள்
26,640
திருமண உதவிகள்
37,000
மருத்துவ உதவிகள்
42,500
கத்னா உதவிகள்
29,425
பிற உதவிகள்
326,510
மொத்தம்
4,637,875
பரிந்துரை : N.ஜமாலுதீன்

பத்தாம் வகுப்பு தேர்வில் அதிரை பள்ளி மாணாக்களின் எழுச்சி ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | May 31, 2013 | , , , ,

அதிரையின் பிரதான பள்ளிகளான காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள், பெண்கள்) மற்றும் இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (ஆண்கள் பெண்கள்) மாணாக்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறார்கள்.

வழமைபோல் மாணவிகளின் ஆளுமை வெற்றிப் படிக்கட்டுகளை எட்டிப் பிடிப்பதில் முன்னனியில் இருக்கிறார்கள், இதுபோல் வரும் காலங்களில் மாணவர்களும் தொடர்ந்து தங்களது நிலைகளை மேலும் உயர்த்திக் கொண்டு தங்களின் படிப்பில் கவனம் சிதைக்கும் எக்காரியத்திலும் ஈடுபடாமல் சிறப்பான வெற்றிகளைப் பெற வேண்டும் இன்ஷா அல்லாஹ் !

முதல் மூன்று இடங்களை எடுத்தவர்கள் மட்டுமல்ல பதின்ம பருவத்தின் சவலாக இருக்கும் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி கண்ட அனைத்து மாணாக்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

சாதனை படைத்த மாணவ மாணவிகளின் பெற்றொர்களின் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

மேலும் இது போன்று கல்வியில் சாதனைகள் பல பெற்று பெற்றவர்களுக்கும் சமுதாயத்திற்கும் நம் நாட்டிற்கும் நற்பெயர் வாங்கித்தர வேண்டும் என்று வல்ல அல்லாஹ்விடம் து ஆ செய்கிறோம்.

அன்பு மாணவச் செல்வங்களே ! பெற்றோர்க்கு உகந்த பிள்ளைகளாகவும், அவர்களின் உள்ளம் குளிரும் நன்மக்களாகவும் இருந்து அவர்களுக்கு நற்பெயரை என்றென்றும் நிலைத்திருக்க வையுங்கள் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்