Showing posts with label m1. Show all posts
Showing posts with label m1. Show all posts

வாங்க மலையேறலாம்.... 5

அதிரைநிருபர் பதிப்பகம் | January 06, 2016 | , , , ,

அந்த இன்ப அதிர்ச்சி என்னவென்றால் புகைப்படத்தில் உள்ள இந்த அழகிய அல்லாஹுவின் பள்ளிவாசல்தான். பாங்கு ஓசை கேட்டுத்தான் பள்ளிக்கு தொழுவதற்குப் போவோம். ஆனால், இந்தப் பள்ளிவாசலைப் பார்த்ததும் மனம் தொழச் சொன்னது. அப்படி ஒர் அழகு பார்ப்பதற்கு தாஜ் மஹால் போன்று அற்புதமாக இருந்தது.


கொச்சின் ரோடு போக்குவரத்து நெருக்கடியான ஊர். ஆனாலும், சாலை விசாலமாக இருந்தது.கொச்சினைச் ‘சின்ன துபாய்’ என்று சொல்லலாம். அந்த அளவுக்குக் கட்டிடங்கள் பெருகி இருந்தது. கொச்சினில் "ஹலால் சாப்பாடு எங்கு கிடைக்கும்" என ஒரு 'இக்காவை' விளித்து சோதித்தபோது அரை கிலோ மீட்டரில் ஒரு அரபிக் ரெஸ்டாரென்ட் உள்ளது என்று சொல்லி வயிற்றில் 'சாயா வார்த்தார்' (வயிற்றில் பால் வார்ப்பது தமிழ் நாட்டுலதான்) அதன் பிறகு பத்து கண்களும் அரபிக் ரெஸ்டாரென்ட் எங்கு உள்ளது என்று ஆட்டோ போகஸ்சில் தேடி அலைந்து கண்டு பிடித்தது.


வண்டியை நிறுத்தியதும் நான்கு பேரும் இறங்கி போன மாயம் புரியவில்லை ஹோட்டல் உள்ளே ஏற்கனவே புகுந்து விட்டனர் நான் வண்டியை பார்க் செய்துவிட்டு போகும் போது மெனு கார்டை எடுத்து படித்துகொண்டு இருந்தார்கள். அரபிக் ஸ்டைல் சுட்ட கோழி இரண்டும் குசும்பாய் குபுசும் ஆர்டர் செய்தோம் நண்பருக்கு கிரேவி ஐட்டம் வேண்டும் என்று அடம் பிடித்ததால் ஒரு பெப்பர் சிக்கனும் ஆர்டர் செய்து விட்டு 'கொரைய சமயம்' வெயிட் செய்தோம் நாங்கள் மட்டும் அல்ல பக்கத்தில் வந்திருந்த அரபிகளும் தான்.


இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு நேராக கோவளம் பீச் இரவு 11:00 க்கு வந்தடைந்தோம் ஹோட்டல் தேடி அலைந்தே மணி 1 ஆகிவிட்டது பிறகு ஒரு பஞ்சாபி ஹோட்டலில் ரூம் போட்டு (பல்லே பலே பாங்டாவெல்லம் பார்க்கல) தங்கி விட்டு காலை கோவளம் பீச்சை நடந்து பார்க்கக் கிளம்பினோம் (நீண்ட பீச்சைச் சுற்றிப்பார்க்க முடியாதல்லவா) கிளம்பினோம் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த அந்த கோவளம் பீச் தற்போது தலைகீழ் மாற்றமாக இருந்தது எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள் முளைத்து இயற்க்கை அழகை மறைத்து விட்டது போட்டோ எடுக்க கூட மனம் இல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் எனும் ஊருக்குப் பயணப்பட்டோம்.


இந்த மாத்தூரில் இரண்டு மலைகளுக்கு இடையேவா பாலம் போட்டுள்ளார்கள் இது என்ன ஒரு செய்தியா? என்று நினைக்க வேண்டாம் இதுதான் செய்தியே காரணம் பாலம் என்றால் கிழே நீர் ஓடும் பாலத்தில் பஸ் ஓடும்  ஆனால் இந்த பாலத்தில் நீர் ஓடும் பலத்தின் சைடில் நடக்க வேண்டி சிமென்ட் தட்டு போட்டு ஆள் போக வர சிறிய பாதை அமைத்து இருப்பார்கள்.


நான் இங்கு பல முறை போய் வந்துள்ளேன் முதல் முறை சென்ற போது அண்ணன் N.A.ஷாகுல் சாரும் வந்திருந்தார் பாலத்தில் நடந்து போய் கீழே பார்த்ததும் எங்களுக்கு தலை சுற்றியது அப்படி ஒரு உயரம் அண்ணன் NAS  பாலத்தின் நடுவே போனதும் பயம் வந்து என் கையை பிடித்துக்கொண்டார் நானும் என்னை அறியாமல் அவர் கையை பிடித்துகொண்டேன் அப்படி ஒரு திரில்லிங் அந்த பாலத்தில். முதன் முதலில் போனபோது .எப்படி திரில்லிங் இருந்ததோ அதேபோல் எத்தனை முறை போனாலும் அதே திரில்லிங் இருக்கிறது அந்த பாலத்தில்.

இந்த மாத்தூர் பாலத்தினை கட்டிய விவரங்களை போட்டோ பார்க்கவும் இங்குச் சுற்றி உள்ள மலைகளில் செவ்வாழை மற்றும் அண்ணாசி பழம் விளைகின்றது இதன் சுவை வேறு எங்கும் நான் பாத்ததில்லை நான் எப்போது சென்றாலும் செவ்வாழை கட்டை வாங்கி வந்து வீட்டு கொல்லையில் வைத்து வாழையை வளர்த்து விடுவேன்.

இந்த முறை சென்றபோதும் வாழை கட்டை வாங்கி வந்தேன் அதோடு அங்கு ஒரு புதிய பழம் ஒன்றை பார்த்தேன் பலாப்பழம் போல் சிறிதாக இருத்தது துரியான் பலமும் அல்ல அதன் பெயர் மறந்து விட்டது பெயர் அறிந்தவர்கள் அதன் போட்டோ பார்த்துவிட்டு பெயரை பின்னுட்டம் இடவும் அதன் சுவை கொஞ்சம் புளிப்பும் இனிப்புமாக இருந்தது.


இந்த மாத்தூர் பாலத்தில் நடந்து போகும்போதே வெயிலும் மழையும் மாறி மாறி வரும் பாலத்தின் கீழும் நீர் ஓடும் பாலத்தின் மேலேயும் நீர் ஓடிக்கொண்டிருக்கும் நாங்கள் பாலத்தின் மேலே போய் பல போட்டோக்கள்  எடுத்துக்கொண்டு மறுமுனையில் இருந்து பாலத்தின் கிழே வந்து ஓடிக்கொண்டிருந்த குளிர்ந்த நீரில் ஒரு நீண்ட குளியல் போட்டு பயணக்களைப்பைத் தீர்த்துக்கொண்டோம் இங்கு குளிப்பதில் வேறு ஒரு சுகமும் உண்டு சிறு சிறு மீன் குஞ்சுகள் நம் கால் பாதத்தை கொத்திக் கொண்டே இருக்கும் அதன் சுகத்தை அனுபவிக்க நீரின் உள்ளே கால்களை அசைக்காது இருக்கவேண்டும்.


மாத்தூர் தொடிப்பாலத்தை விட்டு பிரிய யாருக்கும் மனம் வரவில்லை நீண்ட நேரம் அங்கு இருந்துவிட்டு கன்னியாகுமரி நோக்கி பயணப்பட்டோம். இங்கே கன்னியாகுமரி வந்ததும் ஒரே ஜன நெருக்கடி எங்கு பார்த்தாலும் நெரிசல் இதை பார்த்ததும் ஊருக்கு கிளம்பி விடலாம் என்ற எண்ணம் ஏற்ப்பட்டது.

சரி வந்தது வந்து விட்டோம் விவேகனந்தர் பாறைக்கு போய் வரலாம் என்று படகுத்துறைக்கு போனால் அங்கு 4 மணிகெல்லாம் படகு போக்குவரத்து நிறுத்தப்படும் என்று சொல்லி விட்டார்கள்.


நண்பர்கள் கொஞ்சம் வீட்டிற்கு சாமான்கள் வாங்கலாம் என்று சொல்லி ஒரு காதி கிராஃப்ட் கடைக்குள் நுழைந்ததும் கண்ணில் பட்டது ஒரு உண்டியல் அது மரத்தால் இழைக்கப்பட்டு அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது அதை பார்த்ததும் 'அலாவுதீன் காக்காவின் கடன் வாங்கலாம் வாங்க' என்ற கட்டுரையில் சேமிப்பு பற்றிச் சொன்னது நினைவு வந்து அங்கு இருந்த அழகிய உண்டியலை வாங்கிக்கொண்டு அங்கு இருந்து இரவு எட்டு மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு இரண்டு மணிக்கு நம் ஊர் வந்து சேர்ந்தோம் என்னதான் நாம் அழகான ஊர்களுக்கு போய் வந்தாலும் குப்பை கூளம் சாக்கடை நிறைந்த அந்த அதிரைப்பட்டினம் வந்ததும் மனதுக்கு ஒரு குதூகலம்தான். அப்படி என்னதான் ஈர்ப்பு உள்ளதோ இந்த அதிரைப்பட்டினத்தில் (அதை உங்க ஊட்டம்மாவிடம் கேளுங்கள் என்று யாரும் பின்னூட்டம் இட்டுவிடாதீர்கள்).

எவ்வளவு தூசி இருந்தாலும் அத்தனை அசெளகரியங்களிலும் நாம் வாழ்ந்த சின்ன வயதின் நினைவுகள் ஒட்டிக் கொண்டிருக்கிறது. சுற்றிப்பார்த்தது சொர்க்க பூமியானாலும் கவலை இல்லாமல் அலைந்த தெரு, புளியமரம், விளையாட்டுத் திடல், கடற்கரை, ரயில்வே ஸ்டேசன் அனைத்தையும் தனக்குள் பொக்கிசமாக வைத்திருப்பது என் அதிரைப்பட்டினம்தான். என்னைப் பொருத்தவரை எத்தனை முறை ஊருக்குள் வந்தாலும் அத்தனை முறையும் ஒரு விதமான இனம் புரியாத பரபரப்பான சந்தோசத்தை தருவது நம் ஊரின் தனிப்பெருமை.

அதிரைப்பட்டினத்தை தவிர்த்து எழுதுவது என்னால் முடியாத விசயம். நான் இன்னும் எத்தனை ஊர்களுக்கு வேண்டுமானாலும் எதிர்காலத்தில் போய் வரலாம், அத்தனையிலும் என் வேர்கள் இருக்கும் அதிரைப்பட்டினத்துக்கு நான் வரும் சந்தோசத்தை தராது. அந்த சந்தோசம் வார்த்தைகளுக்கு வசப்படாது.

தொடர் நிறைவுறுகிறது...  :)

Sஹமீத்

வாங்க மலையேறலாம் - தொடர் நிறைவு ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | November 08, 2011 | , , , ,

அந்த இன்ப அதிர்ச்சி என்னவென்றால் புகைப்படத்தில் உள்ள இந்த அழகிய அல்லாஹுவின் பள்ளிவாசல்தான். பாங்கு ஓசை கேட்டுத்தான் பள்ளிக்கு தொழுவதற்குப் போவோம். ஆனால், இந்தப் பள்ளிவாசலைப் பார்த்ததும் மனம் தொழச் சொன்னது. அப்படி ஒர் அழகு பார்ப்பதற்கு தாஜ் மஹால் போன்று அற்புதமாக இருந்தது.


கொச்சின் ரோடு போக்குவரத்து நெருக்கடியான ஊர். ஆனாலும், சாலை விசாலமாக இருந்தது.கொச்சினைச் ‘சின்ன துபாய்’ என்று சொல்லலாம். அந்த அளவுக்குக் கட்டிடங்கள் பெருகி இருந்தது. கொச்சினில் "ஹலால் சாப்பாடு எங்கு கிடைக்கும்" என ஒரு 'இக்காவை' விளித்து சோதித்தபோது அரை கிலோ மீட்டரில் ஒரு அரபிக் ரெஸ்டாரென்ட் உள்ளது என்று சொல்லி வயிற்றில் 'சாயா வார்த்தார்' (வயிற்றில் பால் வார்ப்பது தமிழ் நாட்டுலதான்) அதன் பிறகு பத்து கண்களும் அரபிக் ரெஸ்டாரென்ட் எங்கு உள்ளது என்று ஆட்டோ போகஸ்சில் தேடி அலைந்து கண்டு பிடித்தது.


வண்டியை நிறுத்தியதும் நான்கு பேரும் இறங்கி போன மாயம் புரியவில்லை ஹோட்டல் உள்ளே ஏற்கனவே புகுந்து விட்டனர் நான் வண்டியை பார்க் செய்துவிட்டு போகும் போது மெனு கார்டை எடுத்து படித்துகொண்டு இருந்தார்கள். அரபிக் ஸ்டைல் சுட்ட கோழி இரண்டும் குசும்பாய் குபுசும் ஆர்டர் செய்தோம் நண்பருக்கு கிரேவி ஐட்டம் வேண்டும் என்று அடம் பிடித்ததால் ஒரு பெப்பர் சிக்கனும் ஆர்டர் செய்து விட்டு 'கொரைய சமயம்' வெயிட் செய்தோம் நாங்கள் மட்டும் அல்ல பக்கத்தில் வந்திருந்த அரபிகளும் தான்.


இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு நேராக கோவளம் பீச் இரவு 11:00 க்கு வந்தடைந்தோம் ஹோட்டல் தேடி அலைந்தே மணி 1 ஆகிவிட்டது பிறகு ஒரு பஞ்சாபி ஹோட்டலில் ரூம் போட்டு (பல்லே பலே பாங்டாவெல்லம் பார்க்கல) தங்கி விட்டு காலை கோவளம் பீச்சை நடந்து பார்க்கக் கிளம்பினோம் (நீண்ட பீச்சைச் சுற்றிப்பார்க்க முடியாதல்லவா) கிளம்பினோம் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த அந்த கோவளம் பீச் தற்போது தலைகீழ் மாற்றமாக இருந்தது எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள் முளைத்து இயற்க்கை அழகை மறைத்து விட்டது போட்டோ எடுக்க கூட மனம் இல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் எனும் ஊருக்குப் பயணப்பட்டோம்.


இந்த மாத்தூரில் இரண்டு மலைகளுக்கு இடையேவா பாலம் போட்டுள்ளார்கள் இது என்ன ஒரு செய்தியா? என்று நினைக்க வேண்டாம் இதுதான் செய்தியே காரணம் பாலம் என்றால் கிழே நீர் ஓடும் பாலத்தில் பஸ் ஓடும்  ஆனால் இந்த பாலத்தில் நீர் ஓடும் பலத்தின் சைடில் நடக்க வேண்டி சிமென்ட் தட்டு போட்டு ஆள் போக வர சிறிய பாதை அமைத்து இருப்பார்கள்.


நான் இங்கு பல முறை போய் வந்துள்ளேன் முதல் முறை சென்ற போது அண்ணன் N.A.ஷாகுல் சாரும் வந்திருந்தார் பாலத்தில் நடந்து போய் கீழே பார்த்ததும் எங்களுக்கு தலை சுற்றியது அப்படி ஒரு உயரம் அண்ணன் NAS  பாலத்தின் நடுவே போனதும் பயம் வந்து என் கையை பிடித்துக்கொண்டார் நானும் என்னை அறியாமல் அவர் கையை பிடித்துகொண்டேன் அப்படி ஒரு திரில்லிங் அந்த பாலத்தில். முதன் முதலில் போனபோது .எப்படி திரில்லிங் இருந்ததோ அதேபோல் எத்தனை முறை போனாலும் அதே திரில்லிங் இருக்கிறது அந்த பாலத்தில்.

இந்த மாத்தூர் பாலத்தினை கட்டிய விவரங்களை போட்டோ பார்க்கவும் இங்குச் சுற்றி உள்ள மலைகளில் செவ்வாழை மற்றும் அண்ணாசி பழம் விளைகின்றது இதன் சுவை வேறு எங்கும் நான் பாத்ததில்லை நான் எப்போது சென்றாலும் செவ்வாழை கட்டை வாங்கி வந்து வீட்டு கொல்லையில் வைத்து வாழையை வளர்த்து விடுவேன்.

இந்த முறை சென்றபோதும் வாழை கட்டை வாங்கி வந்தேன் அதோடு அங்கு ஒரு புதிய பழம் ஒன்றை பார்த்தேன் பலாப்பழம் போல் சிறிதாக இருத்தது துரியான் பலமும் அல்ல அதன் பெயர் மறந்து விட்டது பெயர் அறிந்தவர்கள் அதன் போட்டோ பார்த்துவிட்டு பெயரை பின்னுட்டம் இடவும் அதன் சுவை கொஞ்சம் புளிப்பும் இனிப்புமாக இருந்தது.


இந்த மாத்தூர் பாலத்தில் நடந்து போகும்போதே வெயிலும் மழையும் மாறி மாறி வரும் பாலத்தின் கீழும் நீர் ஓடும் பாலத்தின் மேலேயும் நீர் ஓடிக்கொண்டிருக்கும் நாங்கள் பாலத்தின் மேலே போய் பல போட்டோக்கள்  எடுத்துக்கொண்டு மறுமுனையில் இருந்து பாலத்தின் கிழே வந்து ஓடிக்கொண்டிருந்த குளிர்ந்த நீரில் ஒரு நீண்ட குளியல் போட்டு பயணக்களைப்பைத் தீர்த்துக்கொண்டோம் இங்கு குளிப்பதில் வேறு ஒரு சுகமும் உண்டு சிறு சிறு மீன் குஞ்சுகள் நம் கால் பாதத்தை கொத்திக் கொண்டே இருக்கும் அதன் சுகத்தை அனுபவிக்க நீரின் உள்ளே கால்களை அசைக்காது இருக்கவேண்டும்.


மாத்தூர் தொடிப்பாலத்தை விட்டு பிரிய யாருக்கும் மனம் வரவில்லை நீண்ட நேரம் அங்கு இருந்துவிட்டு கன்னியாகுமரி நோக்கி பயணப்பட்டோம். இங்கே கன்னியாகுமரி வந்ததும் ஒரே ஜன நெருக்கடி எங்கு பார்த்தாலும் நெரிசல் இதை பார்த்ததும் ஊருக்கு கிளம்பி விடலாம் என்ற எண்ணம் ஏற்ப்பட்டது.

சரி வந்தது வந்து விட்டோம் விவேகனந்தர் பாறைக்கு போய் வரலாம் என்று படகுத்துறைக்கு போனால் அங்கு 4 மணிகெல்லாம் படகு போக்குவரத்து நிறுத்தப்படும் என்று சொல்லி விட்டார்கள்.


நண்பர்கள் கொஞ்சம் வீட்டிற்கு சாமான்கள் வாங்கலாம் என்று சொல்லி ஒரு காதி கிராஃப்ட் கடைக்குள் நுழைந்ததும் கண்ணில் பட்டது ஒரு உண்டியல் அது மரத்தால் இழைக்கப்பட்டு அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது அதை பார்த்ததும் 'அலாவுதீன் காக்காவின் கடன் வாங்கலாம் வாங்க' என்ற கட்டுரையில் சேமிப்பு பற்றிச் சொன்னது நினைவு வந்து அங்கு இருந்த அழகிய உண்டியலை வாங்கிக்கொண்டு அங்கு இருந்து இரவு எட்டு மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு இரண்டு மணிக்கு நம் ஊர் வந்து சேர்ந்தோம் என்னதான் நாம் அழகான ஊர்களுக்கு போய் வந்தாலும் குப்பை கூளம் சாக்கடை நிறைந்த அந்த அதிரைப்பட்டினம் வந்ததும் மனதுக்கு ஒரு குதூகலம்தான். அப்படி என்னதான் ஈர்ப்பு உள்ளதோ இந்த அதிரைப்பட்டினத்தில் (அதை உங்க ஊட்டம்மாவிடம் கேளுங்கள் என்று யாரும் பின்னூட்டம் இட்டுவிடாதீர்கள்).

எவ்வளவு தூசி இருந்தாலும் அத்தனை அசெளகரியங்களிலும் நாம் வாழ்ந்த சின்ன வயதின் நினைவுகள் ஒட்டிக் கொண்டிருக்கிறது. சுற்றிப்பார்த்தது சொர்க்க பூமியானாலும் கவலை இல்லாமல் அலைந்த தெரு, புளியமரம், விளையாட்டுத் திடல், கடற்கரை, ரயில்வே ஸ்டேசன் அனைத்தையும் தனக்குள் பொக்கிசமாக வைத்திருப்பது என் அதிரைப்பட்டினம்தான். என்னைப் பொருத்தவரை எத்தனை முறை ஊருக்குள் வந்தாலும் அத்தனை முறையும் ஒரு விதமான இனம் புரியாத பரபரப்பான சந்தோசத்தை தருவது நம் ஊரின் தனிப்பெருமை.

அதிரைப்பட்டினத்தை தவிர்த்து எழுதுவது என்னால் முடியாத விசயம். நான் இன்னும் எத்தனை ஊர்களுக்கு வேண்டுமானாலும் எதிர்காலத்தில் போய் வரலாம், அத்தனையிலும் என் வேர்கள் இருக்கும் அதிரைப்பட்டினத்துக்கு நான் வரும் சந்தோசத்தை தராது. அந்த சந்தோசம் வார்த்தைகளுக்கு வசப்படாது.

தொடர் நிறைவுறுகிறது...  :)

-Sஹமீத்

வாங்க மலையேறலாம் - தொடர் - 3 25

அதிரைநிருபர் பதிப்பகம் | October 30, 2011 | , , ,



சிறிது தூரம் சென்றதும் மலைக்குள் மலைத்து நிற்கும்படியாக உயர்ந்த அதே நேரத்தில் உறுதியான ஒரு சுவர் பார்த்ததும் வண்டியை நிறுத்தச்சொல்லி மிரட்டியது அதுதான் வால் பாறை டேம் (போட்டோ டேம்)அண்ணார்ந்து பார்த்தால் கழுத்து வலி வந்து விடும் அப்படி ஒரு உயரம். மழை பெய்து பெய்து அந்த கம்பீரமான சுவர் பாசிபிடித்து வழுவழு என்று இருந்தது. அங்கிருந்து கொட்டும் நீர் ஓடுவதற்காக ஒரு குட்டி பாலம் (போட்டோ பாலம்) சென்னை மெரீனா நேப்பியர் பாலத்தை நான்காக பிரித்து அதில் ஒரு பார்ட் இங்கு வைக்கப்பட்டதுபோல் இருந்தது ஆனால் அந்த நேப்பியர் பாலத்தின் துர்நாற்றம் இங்கு இல்லை. மக்கள் நடமாட்டம் இல்லாததால் அந்த இடம் முழுக்க படு சுத்தமாக இருந்தது மேலும் அது சுத்தமாக இருக்க இன்னுமொரு காரணம் தினமும் பத்து அல்லது பதினைந்து முறை மழையில் குளித்துவிடுவதுதான்.



ஈரமான மலை ரோட்டில் டயர் வழுக்கிக்கொண்டு வால்பாறை டவுன் வந்துசேரவும் ஜும்மா தொழுகை நேரம் நெருங்கியது அங்கு வந்து, "பள்ளிவாசல் எங்கு உள்ளது” என்று கேட்டு விசாரித்து வந்தால் பள்ளிவாசலுக்கு அருகிலே மார்க்கெட்டும் இருந்தது (நம்ம ஆளுங்க ஒரு செட்டப்பத்தான் தங்கி இருப்பாங்களோ? மார்க்கெட் பக்கத்திலேயே) ஒழுச் செய்வதற்கு அகலில் கைவைத்த உடன் ஐஸை தொட்டதுபோல் ஒரு குளுமை. தொழுகை ஆரம்பிக்கும் முன்பே மீண்டும் மழை தொடங்கியது,பள்ளிவாசலும் பள்ளிக்கு தொழ வந்தவர்களும் மிக எளிமையாகவே இருந்தனர் ஆனால் அங்கு தொழுகை நேரங்களைக் காட்டக் கூடிய போர்டு டிஜிட்டலில் மிக கம்பீரமாகத் தொழுகை நேரத்தை காட்டிக்கொண்டு இருந்தது.

தொழுகை முடிந்தும் மழை கொட்டிக்கொண்டே இருந்தது பள்ளி வாசலுக்கு வெளியே ஒரு கபுரும் அதன் மேல் போர்த்தப்பட்ட பச்சை துனியும் மல்லிகைப்பூ வாசமுமாக இருந்தது அந்த கபுர்.  ஜூம்மா முடிந்து வரும் ஒருசிலர் அந்த மழையையும் பொருட்படுத்தாது பத்தியும் மல்லிகை பூவும் வாங்கி வந்து சாத்திவிட்டு போகின்றார்கள். ஒரு சிலரோ அதைக் (கபுரை) கண்டுகொள்ளவே இல்லை அந்த லிஸ்டில் நாமும்… 


இதற்கிடையே நல்ல சாப்பாடு எங்கு கிடைக்கும் என்று நம்ம ஆளுங்க கடை எங்கு உள்ளது போன்ற விவரங்களை ஸ்மெல் செய்து கையுடன் ஒரு ஆளையும் அழைத்து கொண்டு வந்தார் நண்பர். 


ஹோட்டல் இடத்தை காட்டுவதற்கு வந்த அவர் ஒரு ஹோட்டலை காண்பித்து “இதுதான் இங்கு உள்ளதிலே நல்ல ஹோட்டல்” என்று சொல்லி ஒரு ஹோட்டலை காண்பித்தார் அங்கு உள்ளே சென்றதும்.


“இருக்கி இருக்கி" என்று மலையாளத்தில் இருக்கையில் அமரச் சொன்னார்.  


சாப்பிட அமர்ந்ததும் உணவு பரிமாறப்பட்டது. சாப்பிடும் இடம் தமிழ் நாடாக இருந்தாலும் சாப்பாட்டில் மலையாள வாடைதான் இருந்தது. பாம்பு திங்கும் ஊருக்கு வந்தால் நடுத் துண்டு நமக்குத்தான் என்பது போல் ஆளாளுக்கு ஆத்துக் கெண்டையை அடித்து பிடித்து சாப்பிட்டு முடித்து விட்டு அங்கு சில சீன்களை பார்த்து விட்டு (தேயிலை தோட்ட போட்டோ) ஆலப்புழை நோக்கி பயணப்பட்டோம்.


தமிழ்நாடு பார்டர் காட்டு இலாகா சோதனைச் சாவடி அங்கு கெடுபிடி ஜாஸ்தியாக இருந்தது. 


"இந்த வழியாக ஆலப்புழை போகவேண்டாம். நீங்கள் ஆழியார் அணை போய் அங்கிருந்து போய்விடுங்கள். அதுதான் பாதுகாப்பானது" என்று தடுத்துவிட்டனர். 


நண்பர்களுக்கு வந்த நோக்கமே கெட்டுப்போய் விட்டதே என்று ஒரே டென்சன் அனைவரையும் அமைதிப் படுத்திவிட்டு நாகர் கோவிலில் உள்ள (காட்டு இலாகாவில் ஹை போஸ்ட்டில் உள்ளார்) ஒரு நண்பரை போனில் அழைத்து விவரம் சொன்னேன். அவர் சோதனைச் சாவடி விவரம் அனைத்தையும் கேட்டு விட்டு “பத்து நிமிடத்தில் உங்களுக்கு அனுமதி கிடைக்கும் வண்டிக்குள் போய் உட்கார்ந்து இருங்கள். குளிரும் மழையுமாக இருக்கும்”  என்று சொன்னார் அதன் படி வண்டியில் வந்து அமர்ந்து இருந்தோம் 

அடுத்த சில நிமிசத்தில் சோதனைச் சாவடியில் இருந்து ஒரு ஆள் வந்து அழைத்தார். அங்கு போய் அதிகாரியை பார்த்ததும் அந்த அதிகாரி சொன்னார்.


"நாகர் கோயில் டிப்பார்ட் மெண்ட்டில் இருந்து உங்களை இந்த வழியாக போக அனுமதிக்கும்படி தகவல் வந்துள்ளது" என்று சொல்லி அனுமதி கொடுத்தார்.


நண்பருக்கு குதுகலம் தாங்க முடியவில்லை. காட்டு இலாகா அதிகாரிகள் வண்டியை ஒரு சோதனை செய்தனர் அதனூடே..


“வண்டி கண்டிசனா” என்று கேட்டார். 


நாம் “ஆம் வண்டி கண்டிசன் தான்” என்று சொல்லி முடிப்பதற்குள்...


“டீசல் நிறைய உள்ளதா?” என்று கேட்டு விட்டு “இனி கேரளாவில்தான் டிசல் கிடைக்கும்” என்றார். 


நாம் முன் கூட்டியே டேங்ஃபுல் செய்துகொண்டு வந்தது நல்லதாக போய்விட்டது மேலும் அந்த அதிகாரி கூறினார் 


"ரோடு சுமாராகத்தான் இருக்கும் போக்குவரத்து எதுவும் இருக்காது மெதுவா போங்க ஆனா சீக்கிரமா கேரளா பாரஸ்ட் ‘செக் பாய்ன்ட்டை தாண்டிவிடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது எங்களுக்கும் நல்லது” என்று அனுமதி கொடுத்து வழியனுப்பி வைத்தார்  

புறப்பட்ட அரை மணி நேரத்தில் கேரளா பார்டர் வந்தது. அங்கிருந்த செக் போஸ்ட்டில்...


"எத்தனை ஆள்காரு" என்று கேட்டார் 


"ஐந்துபேர் (ஒருகாரு)"  என்று சொன்னதும் 


அடுத்த கேள்வி “வண்டிண்ட அகத்து எத்தர பிளாஸ்டிக் பாட்டில் உண்டு”  


நாம், “எட்டு அன்னம் உண்டு” 


"ஈ எட்டு பாட்டிலும் லாஸ்ட் செக் போஸ்டில் கானிக்கனும் பாட்டில்களை பொரத்தூ கலையாம் பாடில்ல" என்று சொல்லி ஒருகடிதம் கொடுத்து பாட்டில் எட்டு உள்ளது என்று எழுதி கொடுத்தார்.

சிறு சிறு பிளாஸ்டிக் பைகளை எல்லாம் வாங்கி அங்கு உள்ள ஒரு பையில் போட்டு வைத்துக் கொண்டார்கள் இதல்லாம் எதற்கு என்றால் அங்கு  வருவோரும் போவோரும் பொறுப்பு இல்லாமல் பிளாஸ்டிக் குப்பைகளை வீசிவிட்டு போவதை மிருகங்கள் தின்று விட்டு "மரித்து" விடுகின்றனவாம் அதனால் தான் இத்தனை கெடுபிடி அங்கு போகும் வழி நெடுக கரடு முரடு ரோடுதான் ஆங்காங்கே மேகம் வந்து சூழ்ந்து வண்டிக்கும் நமக்கும் அடிக்கடி ரெஸ்ட் கிடைத்தது குளிரில் பயணம் செய்வதால் நண்பர்களுக்கு பசி தலை தூக்கியது யதார்த்தமாக நூர் லாஜ் அல்வாவும் நானாகத்தான் கேக்கும் நான் எடுத்து வந்தது அங்கு பதார்த்தமா பங்கு போட்டு நடு காட்டில் திங்கப்பட்டது.

ஒரு வழியாக காட்டு வழி பயணத்தை முடித்து விட்டு நாட்டுக்குள் போகும்போது அந்த கடைசி செக் போஸ்டில் பிளாஸ்டிக் பாட்டில்களை காட்டிய பின் நாட்டுக்குள் (கேரளா) போக அனுமதி கொடுத்தார்கள் அங்கு இருந்து ஆலப்புழா சென்றடைய இரவு பதினோருமணி ஆகிவிட்டது .இந்த  ஆலப்புழா அழகிய பெயர் இதை ஆங்கிலத்தில் ஆழப்பி என்று அசிங்கமா விளிகின்றார்கள்!


அடுத்தநாள் காலை ஒரு ஹோட்டலில் புகுந்து குலா புட்டை புட்டு புட்டு தின்று விட்டு பேக் வாட்டர் போட்டிங் போய் சுற்றி பார்த்து விட்டு அதன் உள்ளேயே (போட்டோஸ்) உள்ளே ஒரு ஹோட்டலில் அநியாய விலை கொடுத்து சாப்பிட்டோம் இங்கு கிராமத்து வீடுகளைப்போல் படகுகள் கட்டி நாள் வாடகைக்கு கொடுகின்றார்கள் படகுகளில் ஏசி ரூம் மற்றும் சாதா ரூம்  உண்டு அதற்கு ஏற்ப வாடகை அங்கு பிடிக்கும் மீன்களை உடனே பொரித்தும் சுட்டும் சுவையாக பரிமாறுகின்றார்கள் மீனின் விலை யானை விலையாக உள்ளது இங்கு பல நாட்டு டூரிஸ்ட் வந்து குவிவதால் பல ஆயிரக் கணக்கான குடும்பங்கள் நன்றாக பிழைப்பு நடத்துகின்றன.




எனக்கு தெரிந்து முத்துபேட்டை அருகே உள்ள லகூன்னை கொஞ்சம் சீர் செய்து படகு இல்லங்கள் அமைத்தால் பல வெளிநாட்டு டூரிஸ்ட் வந்து போக ஆரம்பிப்பார்கள் சுற்றி உள்ள ஊர்களுக்கு(நம் ஊருக்கும்தான்) நல்ல ஒரு தொழிலாக அமையும் இங்கு உள்ள மீன்களின் சுவையோ தனிதான் உதாரணமாக இந்த ஊர் கொடுவா மீன் இதை சொன்னாலே வாயில் உமிழ் நீர் சுரக்கும் இந்த மீன்களை வெளிநாட்டினர் சுவை அறிந்தால் முத்துப்பேட்டை லகூனுக்கு வந்து குவிந்து விடுவார்கள் லகுனை சுற்றி பார்த்ததில் கிட்டத்தட்ட ஆலப்புழை போலவே உள்ளது ஆனால் இது யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே உள்ளது இந்த ரகசியத்தை வெளியிட்டு ஊரையும் அத்தனை சுற்றி உள்ள ஊரையும் நல்ல ஒரு டுரிஸ்ட் நகரமாக ஆக்கலாம். 

மாலை நான்கு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி நோக்கி பயணம் ஆனோம் புறப்பட்ட சற்று நேரத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது... 

தொடரும்...
- Sஹமீத்

வாங்க மலையேறலாம் - தொடர் - 2 18

அதிரைநிருபர் பதிப்பகம் | October 22, 2011 | , , ,

மாடு முறைத்தது, காதுகளை விடைத்தது, கெத்துடன் பார்த்தது, மூக்கின்  வழியாக புஷ் புஷ் என்று மூசு விட்டது,  ஜல்லிக்கட்டுப் பிடிக்குத் தயாராவதுபோல் வலது காலை பூமியில் இரண்டு மூன்று முறைக் கீறியது, அப்படியே எங்களை நோக்கிப் பத்து கால் பாய்ச்சலில் ஓடி வந்தது. நான் தலையை சிலிர்த்துக் கொண்டேன்.  மாடு அங்கேயேதான் நின்றது.  ஆனால், “ஷென்பகமே ஷென்பகமே” என்று யாரோ பாடினால் எப்படி கவனிக்குமோ அப்படி அதன் கவணத்தை ஏதோ கவர்ந்திருக்க வேண்டும்.  இதழ்களில் (?) புன்னகைத் தவழ எங்களைப் பார்த்தது. பிறகு, மாடு என்ன நினைத்ததோ தெரியவில்லை ரோட்டை விட்டு விலகி பள்ளத்தில் இறங்கி நின்று எங்களை மீண்டும் பார்த்துக் கொண்டே நின்றது அப்போது நான் கேமராவை எடுத்து ஒரு கிளிக் அடித்தேன் (விடுவோமா?) இருட்டும் நேரமாக இருந்ததால் மாட்டின் கண்கள் மட்டும் பளிச்சென கேமராவில் சிக்கியது அப்போது வண்டியில் இருந்த நண்பர்.


"ஏண்டா உனக்கு ஃபோட்டோ எடுக்க நேரங்காலமே தெரியாதா? உசுரை கைல பிடிச்சிக்கிட்டு இருக்கின்றோம் நீ கேமராவை கைல பிடிச்சிக்கிறே" என்று சொல்லி வாய் மூடுவதற்குள் வண்டி வேகம் எடுத்து கடல் மட்டத்தை நோக்கி சீறி பாய்ந்தது. 


ஒரு வழியாக பொள்ளாச்சி வந்து சேர்ந்தோம் அங்கு ஒரு ரூம் (சூட்) எடுத்து (யோசிக்கவல்ல!!!) இரவு உணவை முடித்து விட்டு பகலில் அடித்த அரட்டைக்கெல்லாம் சேர்த்து இரவில் அடித்தோம் குறட்டையாக ! 


நல்ல அசந்த தூக்கம் குறட்டைகளின் கொட்டம் சற்று தணிந்திருந்தன அந்த நேரத்தில் யாரோ தலைமாட்டில் நிற்பதுபோல் ஒரு உள்ளுணர்வு மனதுக்குள் தோன்றியது தூக்க கலக்கத்தில் லேசா முழித்துப்பார்த்தேன் தலைமாட்டில் ஒரு உருவம் நின்றுகொண்டு இருந்தது.

"யாரது"

என்று கேட்டும் பதில் இல்லை பயம் ஒருபக்கம் இருட்டு ஒருபக்கம் பயம் காட்டியது திரும்பவும்..

"யாரது"

என்று மீண்டும் அலட்டினேன் அப்போதும் பதில் இல்லை ஆளும் நகரவில்லை ஒருவாறாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எழுந்து லைட்டை போட்டு பார்த்தால் நண்பர் சுபுஹு தொழுது கொண்டிருந்தார்.


பிறகு உறக்கத்திலிருந்த நாங்களும் எழுந்து தொழுது விட்டு பொள்ளாச்சியை விட்டு புறப்பட்டோம் இந்த பொள்ளாச்சி மண்ணுக்கும் அதிரைப்பட்டினத்து மண்ணுக்கும் ஒரு வியாபார தொடர்பு உள்ளது என்ன வென்றால் நமதூரைப்போல் இங்கும் எங்கு பார்த்தாலும் உயர்ந்த தென்னை மரங்கள் அதிகம் இங்கு தேங்காய் உற்பத்தி குறைந்தால் நமதூரில் தேங்காய் விலை கூடும் இங்கு தேங்காய் உற்பத்தி கூடினால் நமதூரில் தேங்காய் விலை வீழ்ச்சி அடையும். இப்படி ஒரு ரகசிய லிங்க் நமதூருக்கும் பொள்ளாச்சிக்கும் நீண்ட நாட்களாக உண்டு.

நண்பரின் விருப்பத்திற்கு இணங்க, போகும் வழியில் கிராமத்து இட்லி கடையை கண்டதும் தானாக கார் அதன் அருகே ஒதுங்கியது,  இட்லி சூடாக வாழை இலையில் பரிமாறப்பட்டது தேங்காய்ச் சட்டினியும் மிளாகாய்s சட்டினியும் சாம்பாரும் கூட சேர்ந்து இட்லியை கணக்கு வழக்கு இல்லாமல் அள்ளிக்கொண்டு போனது நண்பரிடம் டேபிளில் கோடு போட்டு வைச்சுக்கச் சொன்னா அவரும் சேர்ந்து கட்டிக் கொண்டிருந்தார் அதனால் எத்தனை இட்லி வைத்தோம் என்று கடைக்கார பெண்மணியும் குழம்பிப் போய்விட்டார் எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்று சாப்பிட்ட எங்களுக்கும் தெரியவில்லை கடைசியில் ஒருவாறாக கணக்குப் போட்டு அதற்கு மேலாகவும் கொஞ்சம்  பணத்தைக் கொடுத்துவிட்டு நாக்கில் உராய்ப்பின் உமிழ் நீர் அடங்குவதற்குள் ஆழியார் அணையை வந்தடைந்தோம்.

நுழைவாயிலில் நுழைவுச் சீட்டை எடுத்துக்கொண்டு அணைக்குக் கீழ் உள்ள பூங்காவைக் கடந்துச் செல்லுகையில் பூங்கா வழியாக அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் சலசல வென்றும் மீன்குஞ்சுகள் பலபல வென்றும் ஓடியது கவிக் காக்காவின் இரட்டை கிளவியை நினைவு படுத்தியது அங்கு வந்திருந்த பெரும்பாலோனோர் கிராமத்து ஜனங்களாகவே இருந்தனர் இவர்கள்தான் நீரையும் மண்ணையும் நேசிப்பவர்களாக இருப்பார்களோ என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டு அணைக்கட்டின் மேலே ஏறினோம்


அணையின் மேல் நின்று பார்த்தால் சுற்றிலும் தென்னை மரங்கள் குளிர் காற்றின் தாலாட்டில் தலை அசைத்துகொண்டு இருந்தன அணையை ஒட்டிய  மலைகளும் மலைமீது மோதும் மேகங்களும் மோதிய மேகங்கள் சிதறி அங்கும் இங்கும் காற்றில் மிதக்கும் அந்த காட்சியைப் பார்க்கும் நம்மை பரவசத்தில் ஆழ்த்தியது பரவசத்தில் ஆழ்த்தியக் காட்சிகளைச்  சுட்டுக்கொண்டு (ஃபோட்டோ) அணையை விட்டு வெளியே வந்தாலும் அணையின் காட்சிகள் மனதில் அணையாது அப்படியே இருந்தன.


அணையை ஒட்டிய மலைகளை ஏறிக் கடந்தால் வால்பாறை வரும் இந்த வால் பாறை தமிழ் நாட்டின் சிரபுஞ்சி என்று சொல்லும் அளவிற்கு மழை பெய்துகொண்டே இருக்கும் அன்று வெள்ளிகிழமை என்பதால் ஜூம்மா தொழுகையை வால் பாறையில் தொழலாம் என்ற நோக்கில் கார் வால்பாறையை நோக்கி மலை ஏறத் தொடங்கியது இந்த மலையும் இரண்டாவது கியர் மூன்றாவது கியருக்குத்தான் அதிக வேலை வைத்தது மலை ஏறிக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்ட ஆரம்பித்தது எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியவில்லை அப்படி ஒரு பேய் மழை மலை மீது பெய்துகொண்டு இருந்தது இந்த மழையில் மலை மீது வண்டி ஓட்டுவது புத்திசாலித்தனம் அல்ல என்று முடிவு செய்து கொஞ்சம் விசாலமான ரோட்டில் காரை நிறுத்தி கார் உள்ளேயே சூழ்நிலை  கைதியாக இருந்தோம் மழைவிடுவதாகத் தெரியவில்லை இப்படி மாட்டிக் கொண்டேமே என்ற பதற்றத்திலிருக்கும் போது யாருமே எதிர்பாராதவிதமாக அப்படி ஒரு நிகழ்வு நடந்தது.

மலையேற்றம் தொடரும்...

- Sஹமீது


வாங்க மலையேறலாம் ! 40

அதிரைநிருபர் பதிப்பகம் | October 17, 2011 | , , ,

அதிரைப்பட்டினத்திலிருந்து காலை ஆறு மணிக்கு புறப்பட்ட இன்னோவா கார் தஞ்சாவூருக்குச் சற்றே முன்பாக காலை பசியாறிட அங்கே கண்ணில் பட்ட ரோட்டோரக் கடையில் அந்தக் கார் நின்றது. அங்கு ஆளுக்கு நான்கு (பேச்சுக்குத்தான் நான்கு) இட்லியை புட்டு குடலுக்குள் வீசி விட்டு அடுத்து புட்டுகள் கிடைத்திடும் கேரளாவை நோக்கி (வேகமாக) சீறிப் பாய்ந்தது கார். தஞ்சாவூர் ரிங் ரோட்டை அடைந்ததும் வேகம் எடுத்து போய்கொண்டிருந்தபோது, “என்னப்பா நீ சவுதி துபாய்லே கார் ஓட்டுற மாதிரி ஹாரன் அடிக்காமே கார் ஓட்டுறே. இந்தியாவுலே கார் ஒட்டுரமாதிரி ஹாரன் அடித்து ஒட்டுப்பா” என்று நண்பரும் டிரைவிங் டிப்ஸ் (!??) இடையிடையே கொடுத்தார் நமக்கு.


திருச்சி வழியாக திண்டுக்கல் தாண்டி டாப் சிலிப் என்னும் மலை உச்சிக்கு போகும் வழியில் காட்டு இலாகாவின் சோதனைச் சாவடி எதிர்பட்டது.

அங்கே "எங்கு போகின்றீர்கள்?" என்ற அசட்டுத்தனமான கேள்விக்கு 

சீரியசாக "மலைக்குத்தான்" என்ற நம் பதிலை கேட்டதும்

"வண்டி எங்கிருந்து வருது?" என்ற அடுத்த கேள்விக்கு (வண்டி ஜப்பான் டெக்நாலஜி ஆனால் தயாரிப்பு இந்தியாதான் என்று மனதில் நினைத்துக்கொண்டு)  

"அதிராம் பட்டினம்" என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனிக்கையில்

"தலைக்கு பத்து வீதம் ஐந்து பேருக்கு அம்பது ரூபா கொடுங்க" என்று ஒரு அழகான கணக்கைச் சொன்னார் காலில் ஷூ இல்லாத அந்த 'காட்டு' இலாக்கா அதிகாரி.


சோதனைச் சாவடியை தாண்டியதும் மலை ஏற்றம் தொடங்கியது கார் இரண்டாவது மூன்றாவது கியரை தாண்ட முடியவில்லை அப்படி ஒரு மலை ஏற்றம் கண்ணுக்கு குளிர்சியாக பசுமையான காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சியை தந்தது. கண்ணுக்கு வந்த குளிர்ச்சி உடலுக்கும் வரட்டுமே என்று கார் ஏசியை அனைத்து விட்டு விண்டோ கிளாசை இறக்கியதும் இயற்கையான ஏசி மூக்கு வழியாக புகுந்து குடல் வரை வந்து கும்மாளம் அடித்தது வைற்றுக்குள்.

மலை ரோட்டின் அள்ளித் தெளித்த ஹேர் பின்(களின்) வளைவுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு கார் முன்னுக்கு போய் ஒருவழியாக டாப் ஸ்லிப்பை அடைந்தது அங்கும் எங்கு பார்த்தாலும் இயற்கை பச்சை சாயம் பூசி பசுமை மரங்களின் கிளைகளும் பச்சை நிறத்தில் பாசி படர்ந்திருந்தது. 


உள்ளூர குடலுக்கு புகுந்த குளிர் போட்ட கும்மாளத்தில் பசி பல்ஸை எகிற வைத்தது அங்கே ஏதேனும் சாப்பிட கடைகள் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் உற்றுப் பார்க்கும் முன்னே அட அருகிலேயே இருப்பதை பார்த்து விட்டதும் அதனைப் பார்த்த அடுத்த வினாடியே அந்த இடத்தில் ஆஜர் அங்கு சுட்டிருந்த பலம் பூரிகளை சூட்டோடு சூடாக உள்ளே தள்ளியும் சூடே தெரியவில்லை அத்தனை குளிர்.  அங்கு நிறைந்திருந்த கருங்குரங்குகள் கிளைக்கு கிளை தாவி அப்பப்போ நம்மை பார்த்தது அந்த பார்வை “உன்னால் முடியுமா" என்று கேட்பதுபோல் இருந்தது. 


அங்கிருந்த முக்கியமான இடங்களை எல்லாம் சுட்டுக் கொண்டு (அதாங்க ஃபோட்டோ கிராஃபியாமே) திரும்பவும் டீ கடை வந்து சுடச் சுட டீ யை 'சர்பத்' குடிப்பதுபோல் குடித்துவிட்டு மலை இறங்க எத்தனித்தபோது ஒரு காட்டு இலாகா அதிகாரி ஒரு செக் வைத்தார்.

"ஆறுமணி பஸ் போகும் அதான் பின்னால் போங்கள் தனியாக போனால் காட்டு மாடு வழிமறிக்கும்" என்று ஒரு பிட்டை தூக்கி போட்டார் இந்த தகவலை கேட்டதும் இருந்த குளிர் போய் குளிர் ஜுரம் வந்து வந்திடும் சூழல் உருவானது.


ஒருவாறாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பஸ் வரும்வரை காத்திருக்காமல் அதற்கு முன்பாக நாம் சென்று விடுவோம் என்ற குருட்டு தைரியத்தில் புறப்பட்டு விட்டோம் சரியாக நடு வழி வந்ததும் (அதுவும் நடுவிலே) நடுபாதையில் காட்டு மாடும் அதன் அழகான குழந்தையும் ரோட்டை (அடைத்துக் கொண்டு) மறைத்து கொண்டு நின்றது.

காட்டு மாடு நின்றதை பார்த்ததும் அநிச்சை செயலாக என் கால் பிரேக்கை அழுத்தியது இன்னொவாவும் அப்படியே நின்றது நடுரோட்டில் காட்டு மாட்டுக்கும் எங்களுக்கும் இடைவெளி சுமார் பதினைந்து அடிதான் அந்த குளிரிலும் அனைவருக்கும் வியர்த்து விட்டது வண்டியை திருப்பும் அளவுக்கு  ரோடு வசதியும் இல்லை. 


மாடு எங்களை உற்றுப் பார்க்க மாட்டை நாங்கள் பாசமாக பார்க்க அருகிலிருந்த நண்பர் 

"ஹாரன் அடிப்பா மாடு ஒதுங்கிடும்" என்றதும் 

மற்றவர் "டேய் இது நாட்டு மாடு அல்ல ஒதுங்கிப் போறதுக்கு காட்டு மாடுடா உனக்கு வண்டியைப் பற்றி தெரிந்ததெல்லாம் ஹாரனைப் பற்றி மட்டும்தான் வேறு எதுவும் தெரியாது கொஞ்சம் சும்மா இருடா" என்று கடிந்ததும் நண்பர் கப்சிப் ஆகிவிட்டார்.

மாடு எங்களை உற்றுப் பார்க்க மாட்டை நாங்கள் பாசமாக பார்க்க...  மாட்டின் அளவும் அதன் பார்வையும் அத்தனைக் குளிரிலும் உள்ளே எங்களுக்கு வேர்த்தது. சட்டென்று எங்கள்மேல் பாய்ந்து ஒரு முட்டு முட்டினாலே காரின் கண்ணாடி உடைந்து உள்ளே இருக்கும் எங்களுக்கும் ஜல்லிக்கட்டுத் தெரியாததால் எலும்பு முறிவு ஏற்படலாம் என்று ஏதேதோ எண்ணி பயந்து நடுங்க, அடுத்து மாடு செய்ததை நாங்கள் என்றுமே மறக்க மாட்டோம்...

தொடரும் 

அசத்தல் காக்கா ஜாகிர் மட்டும்தான் தொடரும் போடுவாரா நாங்களும் போடுவோம்ல !!!

- Sஹமீது


 ||| தொடர் - 1 ||| தொடர் - 2 ||| தொடர் - 3 |||