Showing posts with label நாசர் மவ்லவி. Show all posts
Showing posts with label நாசர் மவ்லவி. Show all posts

ரமளான் காணொளி: நபி தோழர் அபூபக்கர் (ரழி) அவர்கள் 1

அதிரைநிருபர் | June 12, 2016 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அல்லாஹ்வின் பேருதவியால் இந்த வருடம் ரமளான் மிகச் சிறப்பாக அனைவருக்கும் அமைந்திருக்கலாம் இன்ஷா அல்லாஹ்...

இன்றைய மார்க்க சொற்பொழிவு:

தலைப்பு: நபிதோழர் அபூபக்கர் (ரழி) அவர்கள்

உரை: மவ்லவி முஹம்மது நாஸர் அவர்கள்


அதிரைநிருபர் குழு

உணவுக்கான அவசர உதவி கோரி மடல் 4

அதிரைநிருபர் | December 27, 2012 | , , , ,

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


என் அன்புச் சகோதரர்களுக்கோர்  வேண்டுகோள்..

السلام عليكم ورحمة الله وبركاته

தற்போது இலங்கை முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும் அதனால் மக்கள் அடைந்துவரும் சிரமங்களும் செய்தி ஊடகங்கள் வழியாக தாங்கள் அறிந்திருப்பீர்கள். இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பமுடியாமல் மக்கள் மிகுந்த சிரமப்பட்டுவருகின்றனர். இதற்கிடையில் எமது ஊரான மன்னார் மாவட்ட முசலி பிரதேச சபைக்குட்பட்ட கரடிக்குளி மற்றும் அதைச்சூழவுள்ள பகுதிகளான மறிச்சுக்கட்டி, பாலைக்குளி போன்ற பகுதிகள் நான்கு பக்கங்களும் வெள்ளத்தினால் பாதைகள் மூடப்பட்ட நிலையில் சுமார் ஓரு வார காலமாக மிகவும் கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எற்கனவே 22 வருட அகதி வாழ்வை அனுபவித்த இவர்கள் மிக அண்மையில் தான் ஓலைக்குடிசைகளில் மீண்டும் தம் வாழ்வை தொடங்கினார்கள். இதற்கிடையில் மீண்டுமொரு சோதனை.


இந்நிலையிலிருந்து விடுபட இவர்களுக்காக பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்வதோடு. முடியுமாக இருந்தால் இந்த மூன்று ஊர்களிலும் மொத்தம் 800 குடும்பங்கள் வாழ்கிறார்கள் இவர்கள் மிகவும் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள். மின்சாரம் போக்குவரத்து போன்ற எந்த வசதிகளும் இதுவரை அங்கு செய்து கொடுக்கப்படவில்லை. இவர்களின் மிக அத்தியாவசியமான உணவுக்கு தங்களில் யாராவது தனியாகவோ கூட்டாகவோ ஏற்பாடு செய்தால். அதனை மிக அவசரமாக கடல் வழியாக அந்த மக்களிடம் கொண்டு சேர்க்க நாம் தயாராகவுள்ளோம்.




இது மனிதாபிமான அடிப்படையில் அவசரமாக செய்யப்பட வேண்டிய உதவியாகும். குறைந்தது மூன்று நாட்களுக்கு தேவையான உணவு ஏற்பாட்டினை மூன்று கிராமங்களுக்குமோ அல்லது மூன்றில் ஒரு கிராமத்துக்கோ செய்வதற்கு உதவி செய்யுமாறு தங்களை அல்லாஹ்வுக்காக வேண்டிக்கொள்கிறோம். அண்ணளவாக சராசரி ஒரு குடும்பத்திற்கான உணவுக்கு அவசியமான பொருட்களும் அதற்கான பெறுமதிகளும்


5 kg அரிசி (1 kg70/) 350

2 kg கோதுமை மாவு (1 kg100/) 200

2 kg சீனி 105(1 kg105/) 210

1 250g பால்மா 200/ 200

1 மீன்டின் 96/ 105

250g பருப்பு 55

200g தேயிலை 70

மொத்தம் 1190 (இலங்கை ரூபாய்)

ஒரு குடும்பக்கிற்கு சராசரி 1190 (இலங்கை ரூ) தங்களின் இயல்புக்கு ஏற்ப குடும்பங்களை பொறுப்பேற்கலாம்

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றன என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி 2442


தேவைப்படின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளவும்

மௌலவி முஹம்மது நாஸர் 0094755216164 0094774224217

தௌபீக் ஆசிரியர் 0094713555993

அஸ்மல் டெய்லர் 0094775993812

Account Details:
T Thahir Mohammed Nasar
A/C No. 8148001279
Commercial Bank of Ceylon
Puttalam Branch
Sri Lanka

தகவல்: மௌலவி முஹம்மது நாஸர்

தொலைபேசி 0094774224217
Email: ttmnasar@yahoo.com / ttmnasar@gmail.com
Website / www.onlinenasar.com

நன்றி: AIM


இலங்கை முஸ்லீம்களின் வரலாறு... உண்மை நிலவரம்.. அவசியம் கேட்க வேண்டிய சொற்பொழிவு.


பெருநாளை எப்படி கொண்டாட வேண்டும்? - காணொளி 1

அதிரைநிருபர் | August 16, 2012 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அவசியம் காணவேண்டிய காணொளி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்த வருட புனித ரமளான் மாதம் இன்றுடனோ அல்லது நாளையுடனோ  நிறைவை எட்டி பெருநாளை கொண்டாட ஆயத்தமாக உள்ளோம். இத்தருணத்தில் பெருநாளை எப்படி நாம் கொண்டாட வேண்டுமென்பது தொடர்பாக இலங்கை மவ்லவி நாசர் அவர்கள் சென்ற வருடம் (27-ஆகஸ்ட்-2011) துபாய் - தவ்ஹீத் இல்லத்தில் நிகழத்திய ரமழான் தொடர் சொற்பொழிவின் காணொளியினை உங்கள் பார்வைக்காக பதிகிறோம். இது ஒரு மிகவும் அவசியமான உரை என்பதால் சிறிதேனும் நேரம் ஒதுக்கி  பொறுமையுடன் இந்த காணொளியை முழுமையாக கண்டு பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.



இந்த காணொளி உரையின் சாரம் கேட்ட பிறகாவது நம்முடைய பெருநாள் கொண்டாட்டங்களை நபிவழியில் அமைத்து அனைவரோடும் அன்பையும்,சந்தோசத்தையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டு சகோதரத்துவத்தை வலுப்படுத்த முயற்சிகளெடுப்போம், இன்ஷா அல்லாஹ் !.

அதிரைநிருபர் குழு

ரமளான் காணொளி: தஜ்ஜால் மற்றும் யாஜூஜ் மஃஜூஜ் கூட்டம் 1

அதிரைநிருபர் | August 15, 2012 | , ,


அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அல்லாஹ்வின் பேருதவியால் இந்த வருடம் ரமளான் மிகச் சிறப்பாக அனைவருக்கும் அமைந்திருக்கலாம் இன்ஷா அல்லாஹ்...

இன்றைய மார்க்க சொற்பொழிவு:

தலைப்பு: தஜ்ஜால் மற்றும் யாஜூஜ் மஃஜூஜ் கூட்டம்

உரை: மவ்லவி முஹம்மது நாஸர்



அதிரைநிருபர் குழு

பெருநாள் கொண்டாடுவது எப்படி? 4

அதிரைநிருபர் | August 29, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்த வருட புனித ரமழான் மாதம் இன்றுடனோ அல்லது நாளைய தினத்திலோ  நிறைவை எட்டி பெருநாளை கொண்டாட ஆயத்தமாக உள்ளோம். இத்தருணத்தில் பெருநாளை எப்படி நாம் கொண்டாட வேண்டுமென்பது தொடர்பாக இலங்கை மவ்லவி நாசர் அவர்கள் நேற்றைய முன்தினம் (27-ஆகஸ்ட்-2011) துபாய் - தவ்ஹீத் இல்லத்தில் நிகழத்திய ரமழான் தொடர் சொற்பொழிவின் காணொளியினை உங்கள் பார்வைக்காக பதிகிறோம். இது ஒரு அவசியமான உரை என்பதால் சிறிது அவகாசம் எடுத்து பொருமையுடன் இந்த காணொளியை முழுமையாக கண்டு பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.


இந்த காணொளி உரையின் சாரம் கேட்ட பின்னராவது நம்முடைய பெருநாள் கொண்டாட்டத்தை நபிவழியில் அமைத்து அனைவரோடும் அன்பையும்,சந்தோசத்தையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டு சகோதரத்துவத்தை வலுப்படுத்த முயற்சிகளெடுப்போம், இன்ஷா அல்லாஹ் !.

- அதிரைநிருபர் குழு