Showing posts with label கலக்கல். Show all posts
Showing posts with label கலக்கல். Show all posts

தேவையில்லாமல் ஏன் எசல வேண்டும்? (ஒரு விமானப்பயண அனுபவம்) 11

அதிரைநிருபர் பதிப்பகம் | November 26, 2013 | , , , , , ,


ஒரு தடவை தம்மாமிலிருந்து கொழும்பு வழியாக திருச்சிக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மூலமாக ஊர் திரும்பும் சமயம்  சுங்க,குடியுரிமைச் சட்டங்களெல்லாம் நம்மை நொங்கெடுத்த பின் விமானத்திற்குள் பிரவேசித்தேன். அவரவர் இருக்கையில் அமர்ந்த பின் விமானப் பணிப்பெண்கள் விமானத்தின் சட்ட திட்டங்களையும், ஆபத்துக் காலங்களில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் கை,கால்,கண் செய்கையில் சப்தமின்றி விளக்க ஆரம்பித்தனர்.

நம் இருக்கைக்கு கீழே பொறுத்தப்பட்டுள்ள அந்த உயிர்காக்கும் பலூனை கழுத்தில் மாட்டி அதனுடன் உள்ள குழாயை வாயில் வைத்து ஊதும் பொழுது எல்லோர்க்கும் என்னவ்வோ திக்குதிக்கென்று குமீர்ப்பு,  சொலேர்ப்பாகவும் தான் இருக்கும். எல்லோரும் தங்களை அவரவர் இருக்கையில் நன்கு பெல்ட் கொண்டு கட்டிப்போட்டுக் கொண்டதும் விமானம் ஓடுபாதையில் மெல்ல,மெல்ல நகர்ந்தது. நாமும் பயண து'ஆவை ஓதிக்கொண்டோம். பிறகு அதன் வேகம் கூடிக்கொண்டே தரையை எட்டி உதைத்து வானிற்குத்தாவியது. போதிய உயரம் அடைந்ததும் விமானம் பறப்பது செங்குத்து நிலையிலிருந்து சமநிலைக்கு கொண்டு வரப்பட்ட பின் விமானத்திற்குள் விளக்குகள் எரியவைக்கப்பட்டன. எல்லோர் முகத்திலும் பூரிப்பு தான் களரியில் சகனுக்காக காத்துக்கிடக்கும் நம்மைப்போல.

விமானப் பணிப்பெண்கள் நம்மூரில் கலியாணப்பத்திரிக்கை மாதிரி வாய்க்கூப்பாடின்றி வெறும் கை நார்சா தருவது போல் அந்த சாப்பாட்டு மெனு கார்டை இருக்கையிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுத்துச்சென்று கொண்டிருந்தனர். அதில் வெள்ளடை ஆட்டுத்தலையாணமோ, ரால் போட்ட ப்ராச்சப்பம் கடல்பாசியோ, அப்பம் உளுந்துக்கஞ்சியுமோ, இடியப்பம் முட்ட மொளவு தண்ணியாணமோ, முட்ட ரொட்டி முர்தபாவுமோ தேடியும் எம் கண்களுக்குத்தென்படவில்லை.

அவரவர் இருக்கைக்கு முன் மடக்கி வைக்கப்பட்டுள்ள அந்த தட்டுகள் விரிக்கப்பட்டு பரிச்சை ஹாலில் வினாத்தாளை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் மாணவர்கள் போல் சாப்பாட்டை எதிர்பார்த்து எல்லோரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். 

அந்த சம்பிரதாய மெனு கார்டில் உள்ள ஐயிட்டங்களில் சிலவற்றையே நமக்கு தந்து பரிமாறப்பட்டது. ஆனால் 'குடி'காரர்களின் பானங்கள் மட்டும் குளிர் ஆவி பறக்க வேண்டிய அளவை விட அவர்களுக்கு பரிமாறப்பட்டது. 'காஞ்ச மாடு கம்புல விழுந்த கதையாக' அவரவர் மறு சோறு, புளியாணம் கேட்பது போல் பணிப்பெண்களிடம் கேட்டு, கேட்டு வாங்கி குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். 

கொஞ்ச நேரத்தில் டாய்லெட் சென்றால் ரொம்ப நாளுச்செண்டு குடிச்சி ஒத்துக்கிடாதவர்கள் வாந்தி எடுத்து அந்த வாஷ் பேஷனையே நிரப்பி வைத்திருந்தனர் (வாஷ் பேஷனின் சர்சராக்குழிகள் அடைத்துக்கொண்டன) இது போன்ற குடிகாரர்களுக்காக இனி ஒவ்வொரு விமானக்கழிவறைகளிலும் நமதூர் தென்னங்குச்சியால் செய்யப்பட்ட வெளக்கமரு ஒன்று வைத்தால் நல்லது.

கழிவறை செல்லும் வழியில் உள்ள வரிசையில் எனக்கு இருக்கை கிடைத்திருந்தது. சாப்பாட்டுத்தட்டுகள் சாப்பிட்ட பின் திரும்பிப்பெறப்பட்டு எல்லோருக்கும் தேநீர் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. வருடங்கள் பல கழிந்த பின் ஊருக்குப்போகும் சந்தோசத்தில் சிலருக்கு டீ குடிப்பதா? தண்ணீர் குடிப்பதா? ஜூஸ் குடிப்பதா? என்றக்குழப்பத்தில் வாயும், வயிறும் ஓடவில்லை. 

எல்லோரும் உணவு உண்ட பின் கொஞ்சம், கொஞ்சமாக உறங்க ஆரம்பித்தனர். விமானம் நடுநிசியில் வானுக்கும், கடலுக்கும் நடுவில் பறந்து கொண்டிருந்தது. குளிராக இருந்ததால் நானும் போர்வை ஒன்றை கேட்டு வாங்கி போர்த்திக்கொண்டு உறங்க ஆரம்பித்தேன். நல்ல அசந்த தூக்கம். திடீரென என் இருக்கை அருகே ஒருவர் தொப்பென்ற சப்தத்துடன் விழுந்து கிடந்தார். நானும் விமானத்திற்குத்தான் ஏதேனும் கோளாறு வந்து விட்டதோ என்றெண்ணி பதறியவனாக திடுக்குண்டு முழிச்சிட்டேன். 

பிறகு என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் தான் அறிந்து கொண்டேன். ஒரு மடாக்குடியன் அதிகளவு குடித்து விட்டு கழிப்பறை அருகே நடைபாதையில் வாந்தி எடுத்து மயக்கதில் விழுந்து கிடக்கிறான் என்று. பிறகு ஆத்திரத்தில் அவனை முதுகில் லேசாக ஒரு தட்டு தட்டி "ஏன்டா இப்புடி செய்றீங்க? அறிவுகெட்டவனே நாலு,அஞ்சு மணி நேரத்துக்குப்பிறகு ஊருக்குப்போய் நல்லா குடிச்சிக்கிட வேண்டியது தானே?" என்று ஆத்திரத்தில் அங்கேயே அவனை திட்டினேன்.

பிறகு வெட்கப்பட்டோ, வேதனைப்பட்டோ தட்டுத்தடுமாறி மெல்ல எழுந்து அவன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். விமானப்பணிப்பெண் ஒருத்தி அவன் வாந்தி எடுத்த இடத்திற்கு வந்து அதன் மேல் ஒரு போர்வையை போர்த்திச்சென்றாள் ஏதோ வாந்திக்கு குளுவுற மாதிரி. என் இருக்கையிலிருந்து அவளை அழைத்தேன். எஸ் என்று அவளும் வந்து நின்றாள். பிறகு அவளிடம் கேட்டேன் "ஏன் இப்படி அளவுக்கு அதிகமாக வாந்தி எடுக்குமளவுக்கு நீங்கள் மதுவை பயணிகளுக்கு பரிமாறுகிறீர்கள்?" என்று. இப்பொழுது அவன் வழியில் வாந்தி எடுத்து விட்டானே உன்னால் அதை உடனே கழுவி சுத்தம் செய்ய முடியுமா? என்றேன்.

அதற்கவள் பேக்கபேக்க என்று முழித்து விட்டு சாரி சார், பயணிகள் கேட்கும் அளவு அவர்களுக்கு மது பரிமாற வேண்டுமென்று எங்கள் விமான நிறுவனத்தின் கட்டளை என்று சொன்னாள். குடிகாரர்களுக்கு வேண்டுமென்றால் ஆஹா, என்னா உபசரிப்பு? என்றிருக்கலாம். அது விமானத்தை அசுத்தப்படுத்தும் அளவுக்கு ஆகி விடுவது கூட மேலிட நாற்காலிகளுக்கு கொஞ்சம் விளங்கியும் வியாபார லாப நோக்கிற்காக அதை கண்டு கொள்வதில்லை.

கூலிக்கு மாரடிக்கும் அவளிடம் போய் வாக்குவாதம் செய்து என்ன பயன்? என்றெண்ணியவனாக என் உறக்கத்தைத்தொடர ஆரம்பித்தேன்.

இதே போன்ற அனுபவம் ஏர் இந்தியாவில் ஒரு முறை பயணிக்கும் பொழுதும் ஏற்பட்டது. ஒருவன் இருக்கையில் இருந்து நன்கு குடித்து விட்டு பிறகு எழுந்து சென்று பின்னால் காலியாக உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டான் மீண்டும் ஒரு ரவுண்டு குடிப்பதற்காக. அதை கவனித்த ஒரு வயதான விமான பணி ஆண் தமிழிலேயே இப்படி அவனிடம் கேட்டார் "ஏன்யா இப்படி அலைறே, உன் எடத்திலெ உக்காருய்யா" என்று.

கடைசியில் விமானமும் ஒரு வழியாக கொழும்பு வந்திறங்கி மாற்று விமானத்தின் மூலம் திருச்சியும் வந்திறங்கினேன். நம்மை சாவடிக்கும் சுங்கச்சாவடி சட்டதிட்டங்கள் வரிசைக்குப்பின் முறையே நிறைவேறி பின் சாமான்கள் சுழலும் பெல்ட் பக்கம் வந்து நின்றேன். கொஞ்ச தூரத்தில் என்னிடம் குடி மயக்கத்தில் நடு வானில் அடிவாங்கிய அந்த இளைஞனும் நின்று என்னையே வெறிக்க,வெறிக்க குருகுருவென்று பார்த்துக்கொண்டிருந்தான். ஆஹா, நம்மளை அடையாளம் கண்டுகொண்டு விட்டானே? உள்ளூர்க்காரனாக இருந்து திருச்சி ஏர்போர்ட்டை விட்டு நாம் வெளியேறும் சமயம் நம்மை அடியாள் வைத்து டின்னுக்கட்டிருவானோ? என மனதின் ஓரத்தில் கொஞ்சம் பயம் வர ஆரம்பித்து விட்டது. அவனை கேர் செய்யாமல் நான் என் சாமான்கள் வரும் வழியை மட்டும் நோக்கிக்கொண்டிருந்தேன். 

இருந்தாலும் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவன் பெட்டி ஒன்று சக்கர பெல்ட்டில் சுழன்று வந்து கொண்டிருந்தது. அதை பார்த்த அவன் உடனே லபக்குண்டு எடுத்தான். எதார்த்தமாக அந்த பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை நோக்கினேன். அஸ்தஹ்ஃபிருல்லாஹ்!!! அதில் முஸ்லிம் பெயர் எழுதப்பட்டிருந்தது (பயத்தில் அந்த பெயரை மனதில் பதிய வைக்க முடியாமல் போனது). உடனே நேராக அவனிடம் சென்று அடப்பாவிப்பயலே என்று ஒரு கன்னத்தில் அரை விட்டு வர மனம் நாடியது. ஏன் தேவையில்லாமல் அவனிடம் சென்று எசல வேண்டுமென்று விட்டு விட்டு என்னை அழைத்துச்செல்ல திருச்சி விமான நிலையம் வந்திருந்த என் தகப்பனார், பிள்ளைகளுடன் நல்லபடி அன்று ஊர் வந்து சேர்ந்தேன். அல்ஹம்துலில்லாஹ்....... 

விமானத்தில் சில நேரங்கள் நம்ம ஆளுஹலும் யாருக்குத் தெரியப்போவுது? என்று குடித்து விடுவது ஒரு வேதனையான, விழிப்புணர்வு இல்லாத பாவச்செயலாகிவிடுகிறது. சகோ. அர. அப்துல் லத்திஃப் தன் கட்டுரையில் குறிப்பிட்டது போல அமெரிக்காவிலிருந்து வருபவர்கள் அடக்கமாகத்தான் வருகிறார்கள். இந்தியாவிற்கு அக்கம்பக்கத்து நாடுகளிலிருந்து வருபவர்கள் தான் அலிச்சாட்டியம் அதிகம் செய்கிறார்கள். 

இது தாங்க நடந்துச்சி.......

மு.செ.மு. நெய்னா முஹம்மது
இது ஒரு மீள்பதிவு

இத்தியாதி இத்தியாதி...! [கட்டற்ற கலக்கல்] 45

அதிரைநிருபர் பதிப்பகம் | October 01, 2013 | , , , , , ,

இன்ன கட்டுக்குள் அடங்கிவிடும் என்று சொல்லவிட இயலாத சில விஷயங்களை இப்படியொரு தலைப்பின்கீழ் பார்த்துவிடலாம் என்று எண்ணி இறங்கியாயிற்று, பார்க்கலாம்.

முதலில் ஒரு பழைய நினைவு:

தலைப்பு: “ஙே !!! “

கைகால் வலிக்குக் ‘கோடாலி’த் தைலம் மற்றும் பச்சைத் தைலம் ஆகியவற்றைப்போல, கொஞ்சம் கூடுதல் உபாதைகளுக்கு நிவாரணமாக நான் என் நண்பர் முகமதலியை உபயோகிப்பதுண்டு. அப்படித்தான் ஒரு முறை பட்டுக்கோட்டையின் பாழாய்ப்போன தூசு மண்டலச் சுற்றுச் சூழலில், ஊரிலேயே சுலபமாகக் கிடைக்குக்கூடிய ஒரு பொருளைத் தேடி அலைந்ததில் ஜலதோஷம் இருமல் என்று தொண்டையையும் தொண்டை சார்ந்த பகுதிகளையும் தொற்றுநோய் தாக்கி கஷ்ட்டப்பட்டேன்.

உள்ளூர் மருத்துவரின் ‘காப்பி பேஸ்ட்’ மருந்துச் சீட்டும் பிருஷ்ட்டத்தில் ஊசியும் சுடுகஞ்சியும் வெப்பத்தைச் சற்றே குறைத்தனவேயன்றி பூரண குணம் தரவில்லை.  உபரியாக ஊசி போட்ட இடத்தில் வலி வேறு. இனிமையாகப் பேசக்கூட முடியாத அளவிற்கு வாய் கசந்தது. ஸ்ட்டீரியோஃபோனிக் இருமல் எந்த ரிதமுமின்றி தாறுமாறான ட்டெம்ப்போவில் ஒலித்ததால் எனக்கே எரிச்சலைத் தந்தது.

நம்ம அலிதான் தஞ்சாவூருக்கு அழைத்துப் போய் அந்தச் சிறப்பு மருத்துவரிடம் காட்ட வைத்தார். அந்த சி.மருத்துவர் மேலோட்டமாகப் பரிசோதித்துவிட்டு, "சிகரெட் பிடிப்பீர்களா?" என்று கேட்டுவிட்டு "ஆம்" என்றதால், "இது வேறொண்ணுமில்லே, 'ஸ்மோக்கர்ஸ் ப்ரொங்க்கைட்டிஸ்தான்' என்று சொன்னார். சொன்னவர் மருந்து எழுதித்தராமல் அவர்தம் பங்காளி லேபுக்குப் போய் சில மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துவரச் சொல்லி எழுதிக் கொடுத்தார். அப்படி எழுதும்போது அவர் கண்களில் பளிச்சிட்ட இலச்சிணையை வரைந்து அனுப்பியிருந்தால் இப்போதுள்ள ரூபாய்க்கான இலச்சிணைக்குப் பதிலாக நம்முடையதுத் தேர்வாகியிருக்கும், அந்த அளவுக்கு கரன்ஸி பளிச்சிட்டது அவர் கண்களில். நாங்களும் எல்லாச் சோதனைகளும் செய்துகொண்டு முடிவுகளோடு வந்தோம்.

இந்த இடத்தில் அந்த மருத்துவரின் பரிசோதனை அறையின் வடிவமைப்பு எப்படி இருந்தது என்று சொல்வது மிகமிக அவசியம். அவர் நோயாளிகளைப் பரிசோதிக்கும் அறையில் ஒரு தடுப்புத்திரை அமைந்திருக்கும். அதற்கு இந்தப் பக்கமாக அடுத்த நோயாளி காத்திருக்க அந்தப் பக்கம் புது நோயாளியைப் பரிசோதிப்பார்.

நாங்களிருவரும் காத்திருக்கும்போது அப்படித்தான் ஒரு புது நோயாளியை டாக்டர் பரிசோதித்துக் கொண்டிருக்க, டாக்டருக்கும் அந்த நோயாளிக்கும் இடையே நடந்த சம்பாஷனை எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது.

"சொல்லுங்க, என்ன செய்யுது?"

"நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல். ஒரு வாரமா அவதிப்படுறேன் டாக்டர்"

"டெஸ்ட் எழுதித்தாரேன். பார்த்திட்டு வந்துடுங்க, மருந்து சாப்பிட்டாச் சரியாயிடும்"

"ஒன்னும் பயப்படற மாதிரி இல்லையே டாக்டர்?"

"அதெல்லாம் ஒன்னுமில்லே. இது ஸ்மோக்கர்ஸ் ப்ரொங்க்கைட்டிஸ். சிகரெட்டை குறைச்சிடுங்க"

"......”

"என்ன? சொல்றது புரியுதா? சிகரெட்டைக் குறைச்சாத்தான என்னால் குணப்படுத்த முடியும்"

"ஆனா டாக்டர்..."

"என்ன? சொல்லுங்க"

"நான் என் ஆயுளுக்கும் இதுவரை சிகரெட்டோ பீடியோ பிடிச்சதே இல்லையே!!!"

நானும் அலியும் ஒரே ஒரு எழுத்தின் பக்கத்தில் மூன்று ஆச்சரியக் குறிகள் போட்டுப் பார்வையைப் பரிமாறிக்கொண்டு பேந்தப்பேந்த விழித்தோம்.

" ஙே !!! "
*******************************

தலைப்பு: ‘சீ!’

ஓர் இழுப்பு இழுத்துக் கொண்டே லொக்கு லொக்கு என்று இருமி, "இந்தச் சனியனை விடவே முடியலையே" என்று அலுத்துக் கொள்பவர்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கும். ஏனெனில், நானும் அப்படியொரு அவஸ்த்தையைப் பலகாலம் அனுபவித்திருக்கிறேன்.

ஒரு நாளைக்கு 20க்கு மேல் மால்பரோ ஒயிட்ஸ் பிடித்து வந்த காலங்களில் அந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று நான் செய்யாத முயற்சிகள் இல்லை, எல்லாம் ஜெயிப்பதுபோல் தோன்றி, வெற்றியைக் கண்ணில் காட்டி படாரென மீண்டும் தலைகுப்புற கவிழ்த்துவிட்டுவிடும் சக்தி வாய்ந்த கெட்ட பழக்கம் ஸ்மோக்கிங்.

இப்போது நினைத்துப் பார்த்தாலும் சிரிப்புத்தான் வருகிறது. புகை பிடிக்கும் பழக்கத்தால் நிறைய அவதிப்பட்டு விட்டதால் அதை விடுவதற்காக என்னென்னவெல்லாமோ செய்து பார்த்துவிட்டேன்.  ஒரேயடியாக விட முடியவில்லை. அந்த ‘அர்ஜ்’ ஏற்பட்டவுடன் நாக்கின் உணர்வு மொட்டுகள் அவற்றின் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு நிக்கோட்டினுக்காக ஏங்கி நிற்கும்.

ஆதலால், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தால் நிக்கோட்டினின் தீவிரம் குறைந்து விட்டுவிட சுலபமாகும் என்று எண்ணி திட்டம்போட்டு கட்டம்போட்டு குறைத்தேன். 7 மணிக்கு ஒன்று 8 மணிக்கு ஒன்று என்று துவங்கி மெல்ல மெல்ல 7க்கு ஒன்று என்றால் 7:30க்கு அடுத்தது என்று இடைவெளியைக் கூட்டிக்கூட்டி வந்தேன். இரண்டு குழந்தைகளுக்கு இடையே நல்ல இடைவெளி விடச்சொல்வார்கள்; நானோ இரண்டு சிகரெட்களுக்கு இடையே நல்ல இடைவெளி விட்டு அடுத்தடுத்த வெண்சுருட்டுகளைத் தாமதித்தேன். இப்படியாக ஒரு சமயத்தில் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 என்று குறைந்ததும், ‘இதோ இப்ப விட்டுவிடப் போகிறோம் என்கிற நேரத்தில்’ வாரக் கடைசி நாளாகிய ஏதாவது ஒரு வியாழக்கிழமை இரவில், ரெட்டுக்கு ஃபாலோ போடமுடியாத கேரம் போர்டோ; ரம்மி செட்டாகாத சீட்டுக்கட்டோ  மீண்டும் ஒரு பாக்கெட்டில் கொண்டுபோய் நிறுத்திவிடும்.  ப்ரோஜக்ட் படுதோல்வி அடைந்து நிக்கோட்டினின் அராஜக ஆக்ரமிப்பு கோலோச்சும்.  நேரம் குறைத்துக் குறைத்து பிடித்துவந்த சிகரெட் கணக்குகளின் குறிப்புச் சீட்டு என் சட்டைப்பையில் எஞ்சியிருக்க, மீண்டும் துவங்கும் திட்ட அமலாக்கம்.

என்னதான் செய்ய? விட முடியவில்லையே என்கிற ஆதங்கம் பாடாய்ப் படுத்தியது.  இந்நிலையில்தான் கதையில் ஒரு ட்விஸ்ட் வந்தது.  என்னவென்றால், தேரா துபையில் ஒரு வருட காலம் பிரம்மச்சாரிய வாழ்க்கை வாழ்ந்து வந்தபோது உடல்நிலை சரியில்லாமல் ஸ்மோக்கர்ஸ் ப்ராங்கைட்டிஸ் வந்து முதல் இத்தியாதியில் பட்ட அவதிகள் எல்லாம் பட்டேன். வேலைக்குச் செல்லாமல் விடுப்பெடுத்து தலை கிளப்ப முடியாமல் கிடந்தபோது கீழே போய் சிகரெட் வாங்கக்கூட முடியாமல் போனது.  சற்றே குணம் கிடைத்து சிகரெட் நினைப்பு வந்தபோது மூன்று நாட்களாகிவிட்டிருந்தது.  ‘அட! மூன்று நாட்களாக நான் ஸ்மோக் பண்ணலையா?’ ஆச்சரியமாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது.  ‘இன்னொரு நாள் இருந்து பார்ப்போமே’ என்று நான்காவது நாளையும் கடந்தபோது வெற்றி என்னைத் தழுவிக்கொண்டது.  சிகரெட்டை விட்டுவிட்டேன். ஹுர்ரே!

சிக்ரெட்டை விட்ட பிறகு எப்போதுமே சுவாசித்துக் கொண்டிருந்த கார்ப்பரேஷன் குப்பைலாரி வாடை மறைந்து போனது, நன்றாகப் பசித்தது, உணவு ருசித்தது, சுறுசுறுப்பு கூடிப்போயிற்று.   காரிலும் அலுவலகத்திலும் காற்றில் நறுமணம் இருந்தது.  வாழ்க்கை சலவைசெய்ததுபோல் தூய்மையாகவும் சுத்தமாகவும் இருந்தது.  உதடு மெல்லமெல்ல கருமை இழந்து ப்பிங்க்கானது.  கையோடு, பல் ஆஸ்பத்திரிக்குப் போய் பற்களை தூர்வாரி தார் நிக்கோட்டின் ஆகியவற்றை சுரண்டியெடுத்து புதைந்துபோயிருந்த பல்லின் ஒரிஜினல் நிறத்தைப் மீட்டெடுத்தேன். அதற்குப் பிறகு சிரிக்கும்போது தன்னம்பிக்கை கூடிப்போய்விட்டிருந்தது. 

புகையே பிடிக்காதவர்களால் அனுமானமாக புத்திதான் சொல்ல முடியும்.  புகைபிடித்து அவதியுற்றுப் பின்னர் விட்டவர்களால்தான்  அதன் சாதக(?) பாதகங்களை அனுபவரீதியாக விளக்கிச் சொல்லி , தற்போது இந்தப் பழக்கத்தில் இருப்பவர்களை மீட்க முடியும்.  சிகரெட்டை விட்டப் பிறகு மேற்சொன்ன சாதகங்கள் மட்டுமல்ல, இன்னும் வெளியே சொல்ல கூச்சப்படுமளவுக்கு நன்மையான  மேட்டர்ஸும் உண்டு.  காதைக் கொடுங்கள் சொல்கிறேன். 

“வாணாம்பா. விட்டுடுங்கப்பா...சீ!"

*******************************

தலைப்பு: “தீ”

சிகரெட்
விரலிடுக்கில் சிக்கிய வாழ்க்கை
நசுக்கப்படுவது உறுதி!

உதடுகளில் வாழும் உயிர்
உமிழப்படுவது உறுதி!

புகைப்பவருக்குள் புழங்கும் பூதம்
புண்ணாக்கப் போவது உறுதி!

ஆக்ஸிஜனை அசிங்கப்படுத்தும் அருவருப்பு
அணுஅணுவாய் அரிக்கப்போவது உறுதி!

சிகரெட்
சில்லரையாகச் செலவு வைத்து
மொத்தமக மூழ்கடிக்கும் கடன்.

சிகரெட்
சுவாச உருப்புகளில் போடப்பட்டத்
தார்ச்சாலை
பூக்களின்மேல் போர்த்தப்பட்டக்
கேன்வாஷ்

சிகரெட்....
தொடர்கதைபோல நீளும்  வாழ்க்கையை
சிறுகதையாக்கும் அவசரம்...
சிலசமயம்
துணுக்காக முடித்துவிடும் அபாயம்!

உணர்க:
வாயில் புகைகிறதெனில்
உள்ளே
உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது
தீ!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

தேவையில்லாமல் ஏன் எசல வேண்டும்? (ஒரு விமானப்பயண அனுபவம்) 21

அதிரைநிருபர் பதிப்பகம் | November 10, 2012 | , , , , , ,


ஒரு தடவை தம்மாமிலிருந்து கொழும்பு வழியாக திருச்சிக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மூலமாக ஊர் திரும்பும் சமயம்  சுங்க,குடியுரிமைச் சட்டங்களெல்லாம் நம்மை நொங்கெடுத்த பின் விமானத்திற்குள் பிரவேசித்தேன். அவரவர் இருக்கையில் அமர்ந்த பின் விமானப் பணிப்பெண்கள் விமானத்தின் சட்ட திட்டங்களையும், ஆபத்துக் காலங்களில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் கை,கால்,கண் செய்கையில் சப்தமின்றி விளக்க ஆரம்பித்தனர்.

நம் இருக்கைக்கு கீழே பொறுத்தப்பட்டுள்ள அந்த உயிர்காக்கும் பலூனை கழுத்தில் மாட்டி அதனுடன் உள்ள குழாயை வாயில் வைத்து ஊதும் பொழுது எல்லோர்க்கும் என்னவ்வோ திக்குதிக்கென்று குமீர்ப்பு,  சொலேர்ப்பாகவும் தான் இருக்கும். எல்லோரும் தங்களை அவரவர் இருக்கையில் நன்கு பெல்ட் கொண்டு கட்டிப்போட்டுக் கொண்டதும் விமானம் ஓடுபாதையில் மெல்ல,மெல்ல நகர்ந்தது. நாமும் பயண து'ஆவை ஓதிக்கொண்டோம். பிறகு அதன் வேகம் கூடிக்கொண்டே தரையை எட்டி உதைத்து வானிற்குத்தாவியது. போதிய உயரம் அடைந்ததும் விமானம் பறப்பது செங்குத்து நிலையிலிருந்து சமநிலைக்கு கொண்டு வரப்பட்ட பின் விமானத்திற்குள் விளக்குகள் எரியவைக்கப்பட்டன. எல்லோர் முகத்திலும் பூரிப்பு தான் களரியில் சகனுக்காக காத்துக்கிடக்கும் நம்மைப்போல.

விமானப் பணிப்பெண்கள் நம்மூரில் கலியாணப்பத்திரிக்கை மாதிரி வாய்க்கூப்பாடின்றி வெறும் கை நார்சா தருவது போல் அந்த சாப்பாட்டு மெனு கார்டை இருக்கையிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுத்துச்சென்று கொண்டிருந்தனர். அதில் வெள்ளடை ஆட்டுத்தலையாணமோ, ரால் போட்ட ப்ராச்சப்பம் கடல்பாசியோ, அப்பம் உளுந்துக்கஞ்சியுமோ, இடியப்பம் முட்ட மொளவு தண்ணியாணமோ, முட்ட ரொட்டி முர்தபாவுமோ தேடியும் எம் கண்களுக்குத்தென்படவில்லை.

அவரவர் இருக்கைக்கு முன் மடக்கி வைக்கப்பட்டுள்ள அந்த தட்டுகள் விரிக்கப்பட்டு பரிச்சை ஹாலில் வினாத்தாளை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் மாணவர்கள் போல் சாப்பாட்டை எதிர்பார்த்து எல்லோரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். 

அந்த சம்பிரதாய மெனு கார்டில் உள்ள ஐயிட்டங்களில் சிலவற்றையே நமக்கு தந்து பரிமாறப்பட்டது. ஆனால் 'குடி'காரர்களின் பானங்கள் மட்டும் குளிர் ஆவி பறக்க வேண்டிய அளவை விட அவர்களுக்கு பரிமாறப்பட்டது. 'காஞ்ச மாடு கம்புல விழுந்த கதையாக' அவரவர் மறு சோறு, புளியாணம் கேட்பது போல் பணிப்பெண்களிடம் கேட்டு, கேட்டு வாங்கி குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். 

கொஞ்ச நேரத்தில் டாய்லெட் சென்றால் ரொம்ப நாளுச்செண்டு குடிச்சி ஒத்துக்கிடாதவர்கள் வாந்தி எடுத்து அந்த வாஷ் பேஷனையே நிரப்பி வைத்திருந்தனர் (வாஷ் பேஷனின் சர்சராக்குழிகள் அடைத்துக்கொண்டன) இது போன்ற குடிகாரர்களுக்காக இனி ஒவ்வொரு விமானக்கழிவறைகளிலும் நமதூர் தென்னங்குச்சியால் செய்யப்பட்ட வெளக்கமரு ஒன்று வைத்தால் நல்லது.

கழிவறை செல்லும் வழியில் உள்ள வரிசையில் எனக்கு இருக்கை கிடைத்திருந்தது. சாப்பாட்டுத்தட்டுகள் சாப்பிட்ட பின் திரும்பிப்பெறப்பட்டு எல்லோருக்கும் தேநீர் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. வருடங்கள் பல கழிந்த பின் ஊருக்குப்போகும் சந்தோசத்தில் சிலருக்கு டீ குடிப்பதா? தண்ணீர் குடிப்பதா? ஜூஸ் குடிப்பதா? என்றக்குழப்பத்தில் வாயும், வயிறும் ஓடவில்லை. 

எல்லோரும் உணவு உண்ட பின் கொஞ்சம், கொஞ்சமாக உறங்க ஆரம்பித்தனர். விமானம் நடுநிசியில் வானுக்கும், கடலுக்கும் நடுவில் பறந்து கொண்டிருந்தது. குளிராக இருந்ததால் நானும் போர்வை ஒன்றை கேட்டு வாங்கி போர்த்திக்கொண்டு உறங்க ஆரம்பித்தேன். நல்ல அசந்த தூக்கம். திடீரென என் இருக்கை அருகே ஒருவர் தொப்பென்ற சப்தத்துடன் விழுந்து கிடந்தார். நானும் விமானத்திற்குத்தான் ஏதேனும் கோளாறு வந்து விட்டதோ என்றெண்ணி பதறியவனாக திடுக்குண்டு முழிச்சிட்டேன். 

பிறகு என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் தான் அறிந்து கொண்டேன். ஒரு மடாக்குடியன் அதிகளவு குடித்து விட்டு கழிப்பறை அருகே நடைபாதையில் வாந்தி எடுத்து மயக்கதில் விழுந்து கிடக்கிறான் என்று. பிறகு ஆத்திரத்தில் அவனை முதுகில் லேசாக ஒரு தட்டு தட்டி "ஏன்டா இப்புடி செய்றீங்க? அறிவுகெட்டவனே நாலு,அஞ்சு மணி நேரத்துக்குப்பிறகு ஊருக்குப்போய் நல்லா குடிச்சிக்கிட வேண்டியது தானே?" என்று ஆத்திரத்தில் அங்கேயே அவனை திட்டினேன்.

பிறகு வெட்கப்பட்டோ, வேதனைப்பட்டோ தட்டுத்தடுமாறி மெல்ல எழுந்து அவன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். விமானப்பணிப்பெண் ஒருத்தி அவன் வாந்தி எடுத்த இடத்திற்கு வந்து அதன் மேல் ஒரு போர்வையை போர்த்திச்சென்றாள் ஏதோ வாந்திக்கு குளுவுற மாதிரி. என் இருக்கையிலிருந்து அவளை அழைத்தேன். எஸ் என்று அவளும் வந்து நின்றாள். பிறகு அவளிடம் கேட்டேன் "ஏன் இப்படி அளவுக்கு அதிகமாக வாந்தி எடுக்குமளவுக்கு நீங்கள் மதுவை பயணிகளுக்கு பரிமாறுகிறீர்கள்?" என்று. இப்பொழுது அவன் வழியில் வாந்தி எடுத்து விட்டானே உன்னால் அதை உடனே கழுவி சுத்தம் செய்ய முடியுமா? என்றேன்.

அதற்கவள் பேக்கபேக்க என்று முழித்து விட்டு சாரி சார், பயணிகள் கேட்கும் அளவு அவர்களுக்கு மது பரிமாற வேண்டுமென்று எங்கள் விமான நிறுவனத்தின் கட்டளை என்று சொன்னாள். குடிகாரர்களுக்கு வேண்டுமென்றால் ஆஹா, என்னா உபசரிப்பு? என்றிருக்கலாம். அது விமானத்தை அசுத்தப்படுத்தும் அளவுக்கு ஆகி விடுவது கூட மேலிட நாற்காலிகளுக்கு கொஞ்சம் விளங்கியும் வியாபார லாப நோக்கிற்காக அதை கண்டு கொள்வதில்லை.

கூலிக்கு மாரடிக்கும் அவளிடம் போய் வாக்குவாதம் செய்து என்ன பயன்? என்றெண்ணியவனாக என் உறக்கத்தைத்தொடர ஆரம்பித்தேன்.

இதே போன்ற அனுபவம் ஏர் இந்தியாவில் ஒரு முறை பயணிக்கும் பொழுதும் ஏற்பட்டது. ஒருவன் இருக்கையில் இருந்து நன்கு குடித்து விட்டு பிறகு எழுந்து சென்று பின்னால் காலியாக உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டான் மீண்டும் ஒரு ரவுண்டு குடிப்பதற்காக. அதை கவனித்த ஒரு வயதான விமான பணி ஆண் தமிழிலேயே இப்படி அவனிடம் கேட்டார் "ஏன்யா இப்படி அலைறே, உன் எடத்திலெ உக்காருய்யா" என்று.

கடைசியில் விமானமும் ஒரு வழியாக கொழும்பு வந்திறங்கி மாற்று விமானத்தின் மூலம் திருச்சியும் வந்திறங்கினேன். நம்மை சாவடிக்கும் சுங்கச்சாவடி சட்டதிட்டங்கள் வரிசைக்குப்பின் முறையே நிறைவேறி பின் சாமான்கள் சுழலும் பெல்ட் பக்கம் வந்து நின்றேன். கொஞ்ச தூரத்தில் என்னிடம் குடி மயக்கத்தில் நடு வானில் அடிவாங்கிய அந்த இளைஞனும் நின்று என்னையே வெறிக்க,வெறிக்க குருகுருவென்று பார்த்துக்கொண்டிருந்தான். ஆஹா, நம்மளை அடையாளம் கண்டுகொண்டு விட்டானே? உள்ளூர்க்காரனாக இருந்து திருச்சி ஏர்போர்ட்டை விட்டு நாம் வெளியேறும் சமயம் நம்மை அடியாள் வைத்து டின்னுக்கட்டிருவானோ? என மனதின் ஓரத்தில் கொஞ்சம் பயம் வர ஆரம்பித்து விட்டது. அவனை கேர் செய்யாமல் நான் என் சாமான்கள் வரும் வழியை மட்டும் நோக்கிக்கொண்டிருந்தேன். 

இருந்தாலும் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவன் பெட்டி ஒன்று சக்கர பெல்ட்டில் சுழன்று வந்து கொண்டிருந்தது. அதை பார்த்த அவன் உடனே லபக்குண்டு எடுத்தான். எதார்த்தமாக அந்த பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை நோக்கினேன். அஸ்தஹ்ஃபிருல்லாஹ்!!! அதில் முஸ்லிம் பெயர் எழுதப்பட்டிருந்தது (பயத்தில் அந்த பெயரை மனதில் பதிய வைக்க முடியாமல் போனது). உடனே நேராக அவனிடம் சென்று அடப்பாவிப்பயலே என்று ஒரு கன்னத்தில் அரை விட்டு வர மனம் நாடியது. ஏன் தேவையில்லாமல் அவனிடம் சென்று எசல வேண்டுமென்று விட்டு விட்டு என்னை அழைத்துச்செல்ல திருச்சி விமான நிலையம் வந்திருந்த என் தகப்பனார், பிள்ளைகளுடன் நல்லபடி அன்று ஊர் வந்து சேர்ந்தேன். அல்ஹம்துலில்லாஹ்....... 

விமானத்தில் சில நேரங்கள் நம்ம ஆளுஹலும் யாருக்குத் தெரியப்போவுது? என்று குடித்து விடுவது ஒரு வேதனையான, விழிப்புணர்வு இல்லாத பாவச்செயலாகிவிடுகிறது. சகோ. அர. அப்துல் லத்திஃப் தன் கட்டுரையில் குறிப்பிட்டது போல அமெரிக்காவிலிருந்து வருபவர்கள் அடக்கமாகத்தான் வருகிறார்கள். இந்தியாவிற்கு அக்கம்பக்கத்து நாடுகளிலிருந்து வருபவர்கள் தான் அலிச்சாட்டியம் அதிகம் செய்கிறார்கள். 

இது தாங்க நடந்துச்சி.......

மு.செ.மு. நெய்னா முஹம்மது

இரயிலடிக்கு போவோமா !? - ஃபோட்டூன் 18

அதிரைநிருபர் பதிப்பகம் | May 04, 2011 | , , , ,


கம்பன் ஏமாற்றினாலும் கழகங்களின் தலைவர்கள் காற்று வாங்க இங்கே வந்திருக்காங்க...

இவர்களோடு நீங்களும் அங்கே சென்றால் என்ன பேசுவீர்கள் ?

ஓட்டு வேட்டை முடிந்ததும் ஓய்வெடுக்க வந்திருக்கும் இடமோ அதிரைப்பட்டினம்... ஒருவேளை மின்சார இரயில் வருமென்று காத்திருக்காங்களோ ?

இனி உங்கபாடு.. ஜமாய்ங்க மக்களே !

- அபுஇபுறாஹீம்