பழகு மொழி - 07 1

அதிரைநிருபர் பதிப்பகம் | April 22, 2012 | , , ,

(1):4 முற்றியலுகரம் (ஒரு மாத்திரை)

முற்றியலுகரத்தைச் சரியாக ஒலிப்பதற்கு இதழ்கள் இரண்டையும் குவிக்கும் முயற்சி தேவை.


(1):4:1 ஓரெழுத்து முற்றியலுகரம்

'' என்ற தனித்த உயிரெழுத்தும் காட்டுகளாக ஆளப்படும்
கு, சு, டு, து, பு, று
ஙு, ஞு, ணு, நு, மு, னு
யு, ரு, லு, வு, ழு, ளு
ஆகிய தனித்த உகர உயிர்மெய் அனைத்தும் முற்றியலுகரமாகும்.


(1):4:2 ஈரெழுத்து முற்றியலுகரம்

ஒரு சொல் இரண்டு எழுத்துகளில் அமைந்து, முதல் எழுத்து, குறிலாகவும் இரண்டாவது (இறுதி) எழுத்து

கு, சு, டு, து, பு, று
ணு, மு, னு
யு, ரு, லு, வு, ழு, ளு

ஆகிய எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் முற்றியலுகரமாகும்.

குறிப்பு:

ஙு, ஞு, நு, ஆகிய மூன்றும் சொல்லின் இறுதியில் வாரா.

காட்டுகள்:

கு, சு, டு, து, பு, று
ணு, கிமு, னு
யு, ரு, லு, வு, ழு, ளு

(1):4:3 மூன்று+ எழுத்து முற்றியலுகரம்

ஒரு சொல் மூன்று எழுத்துகளுடனோ மேற்பட்டோ அமைந்து, அதன் இறுதி எழுத்து

ணு, மு, னு
யு, ரு, லு, வு, ழு, ளு

ஆகிய எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் முற்றியலுகரமாகும்.

குறிப்பு:

ஙு, ஞு, நு, ஆகிய மூன்றும் சொல்லின் இறுதியில் வாரா.

காட்டுகள்:

பண்ணு, பரமு, பவுனு
சரயு, தனியொரு, அதிவலு, தழுவு, ஈரேழு, தெள்ளு

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.
-ஜமீல் M.சாலிஹ்

1 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

தமிழ் நம் தாய்மொழி தான். யாரும் மறுக்க இயலாது. அதுக்காக இப்புடியா? முடியலெ.......ஜமீல் காக்கா, அஹ்மது சாச்சா போன்ற சில நம்மூர்க்காரர்களால் தமிழ் இலக்கணம் முறையே கற்கப்பட்டு நமக்கு மாத்திரை தந்து அவ்வப்பொழுது இங்கு மருத்துவம் செய்வது கண்டு ஆச்சர்யமடையாமல் இருக்க முடியவில்லை.

இதில் ஒரு வெள்ளைக்கார‌ கவிஞன்/அறிஞன் ஒருவன் நம் தமிழகத்துக்கு வந்து தமிழை முறையே கற்று 'வீரமாமுனிவர்' என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

இப்பொ உள்ள‌ புள்ளைய‌ல்வொல்லாம் த‌மிழை ட‌மில் என்று எழுத‌ ஆர‌ம்பித்து விட்ட‌ காலம் இது. இதுலெ எல‌க்க‌ண‌த்தை ப‌த்தி என்னெத்தெ சொல்ற‌து?

வாழ்த்துக்க‌ள் காக்கா.....

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.