தமிழகத்தில் விரைவில் முஸ்லிம்களுக்காக ஒரு மருத்துவ கல்லூரி! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2013 | , , , ,


சமீபத்தில் ஆஸ்திரேலியா வருகை தந்த கவிகோ அப்துல் ரஹ்மான் அவர்களை எங்கள் இல்லத்தில் தங்க வைத்து உபசரிக்கும் ஒரு வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தி தந்தான். 

இங்கு சிட்னி, மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கு விஜயம் செய்து இஸ்லாத்தில் ஒற்றுமையின் அவசியத்தைப் பற்றி பல்வேறு கூட்டங்களில் பேசிய அவர்கள், தமிழ் நாட்டில் முஸ்லிம்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரி துவங்குவதற்காக அவர்கள் வக்ப் வாரிய தலைவராக இருந்தபோது எடுத்த முயற்சிகளைப் பற்றியும், அது பல்வேறு காரணங்களினால் இயலாமல் போனதைப் பற்றியும், அந்த முயற்சியை மறுபடியும் துவங்கி இருப்பதை எடுத்துக் கூறினார்கள்.

இந்த மருத்துவ கல்லூரி, சமுதாய சிந்தனையில் எந்த வித லாப நோக்கமும் இல்லாமல் தொடங்கப்பட இருக்கிறது. இதை துவங்க அவர்களுக்கு 50 ஏக்கர் நிலத்தை இலவசமாக  அளிக்க திருநெல்வேலியை சார்ந்த ஒரு சகோதரர் முன் வந்துள்ளார். இதைப்பற்றிய கவிக்கோவின் காணொளியை இங்கே பதிக்கப்பட்டிருக்கிறது.


மருத்துவக் கல்லூரி பற்றிய மேலும் விபரங்கள் தேவைப்பட்டால் கீழ்கண்ட என்னுடைய தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோதொடர்பு கொள்ளலாம் : email: msahib@gmail.com   Phone: +61 433 077 660.

நாமும் பங்கெடுத்துக் கொண்டு ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஈடுபாட்டுடன் செயல்பட்டால், இன்ஷா அல்லாஹ், நமதூருக்கு உள்ள டாக்டர்கள் பற்றாக்குறை நமது வம்சங்களுக்கு நீங்கும்.  

இன்ஷா அல்லாஹ், கவிக்கோ அவர்களை நமதூருக்கு வரவைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். எங்களது முயற்சி கை கூடியதும் தெரியப்படுத்துகிறோம்.

தகவல் : மீரான் சாஹிப் - ஆஸ்திரேலியா

கண்கள் இரண்டும் - தொடர் - 5 28

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2013 | , , , ,


அதிகாலையில் கண் விழிப்பவர்கள்

அதிகாலையில் கண் விழிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ரோகாம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பி வைப்பார்கள் என்று கூறியுள்ளனர். 

இரவு நேரங்களில் விடிய விடிய வேலை பார்ப்பவர்களும் ஆட்டம் போடுபவர்களும் மன அழுத்தத்தினாலும், உடல் பருமனுடனும் இருப்பார்கள் என்று கூறுகிறது அந்த ஆய்வு முடிவு. 1,068க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. வார இறுதி கொண்டாட்டம் வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மறுநாள் காலை 10க்கு அல்லது 12 மணிக்கு இன்னும் சிலபேர் பகல் 2 மணிக்கே கண் விழிக்கின்றனர்.

அன்று முழுவதும் அவர்களிடம் ப்ரஷ்னெஸ் இருக்காது. எதையோ இழந்த மாதிரியும், நோயாளிகள் போன்றும் சுறு சுறுப்பின்றி அந்த முழு நாள் முழுதும் இருப்பார்கள். இதெல்லாம் இரவுகளில் சரியாக தூங்காததினால் ஏற்படக்கூடியவை. இவற்றை வார விடுமுறை நாட்களில் இரவு முழுதும் கண்விழித்து ஆட்டம்போடும் எல்லோராலும் உணரமுடியும். இதற்கு தோதாக இப்பொழுது அரபு நாடுகளில் பெரும்பாலும் வெள்ளி, சனி என்று வாரத்திற்கு இரண்டு  நாட்கள்  விடுமுறை நடைமுறைப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த இரண்டு நாட்கள் போடும் ஆட்டத்தின் கலைப்பு நீங்குவதற்குள் அடுத்த வீக் எண்டை எட்டிவிடுகின்றோம். வாரத்தில் இரண்டு நாட்கள் லீவு விட ஆரம்பத்த்திலிருந்து நாட்கள் வெகு சீக்கிரமாக நகர்கின்றன. இப்படி ஆட்டம் பாட்டத்துடன். நாட்கள் நகர்வதினால் மவுத் நம்மை நெருங்குவதை நாம் உணரவில்லை.

அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இலேசான உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பதாகவும் இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட டாக்டர் ஜார்ஜ் ஹப்பர் டெலிகிராப் ஆங்கில நாளிதழில் தெரிவித்துள்ளார். அதிகாலையில் கண் விழிப்பது சுறுசுறுப்பானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட என்று தெரிவிக்கின்றது இந்த ஆய்வு முடிவு.   

1438 வருடங்களுக்கு முன்னாடியே நமக்கு அருளப்பட்ட இறைவேத்தில் எல்லாத் தொழுகையையும் (சுபுஹுத்தொழுகை உள்பட  சேர்த்து) சொல்லும் வசனம்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயம் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்த்கையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேனுவார்கள் .  அல்குர்ஆன் 23:,2,9

சுபுஹுத்தொழுகை பற்றி அண்ணலாரின் பொன்மொழிகள்

“எவர் சுபுஹுத் தொழுகையை நிறைவேற்றுகின்றாரோ அவர் அல்லாஹ்வினது பாதுகாப்பிற்குள் வந்து விடுகிறார்” என் நபிகள் (ஸல்) அவ்ர்கள் கூறினார்கள் 
ஆதாரம்: புஹாரி

பல ஊர்களில் “தூக்கத்தைவிட தொழுகை மேலானது தொழ வாருங்கள்” என்று ஃபஜர் பாங்கு சொல்லும்போது அரபியல் அஸ்ஸலாத்து கைரும்மின நவ்ம் என்று இரண்டு முறை குரல் கொடுக்கின்றனர். தொழ ஆரம்பிக்கும் சுமார் 10 நிமிடத்திற்கு முன் “தூக்கதை விட தொழுகை மேலானது தொழ வாருங்கள்” என்று தமிழில் சொல்லி அழைக்கவும் செய்கின்றனர் அப்படி இருந்தும் பெரும்பாலான மக்கள் தூக்கத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சுபுஹு தொழுகைக்கு கொடுப்பதில்லை. 

25 வருடங்களுக்கு முன்பு சுபுஹுத் தொழுகைக்கு இளைஞர்களை பெரும்பாலும் காணமுடியாது இளைஞர்களிடம் தவ்ஹீதின் எழுச்சி வந்த பின்பு சுபுஹுத் தொழுகைக்கும் மற்ற தொழுகைக்கும் இளம் வயதினரை பள்ளிவாசல்களில் கனிசமாக காண முடிகின்றது. சுபுஹுத் தொழுகை சம்பந்தமாக மக்களிடையே குறிப்பாக இளஞர்களிடையே இன்னும் விழிப்புணர்வு ஏற்பட்டு இருந்தாலும் சில சமயங்களில் அவர்களிடம் இருக்கும் பொடுபோக்கைப் பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எடுத்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். 

12 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த ஒளவையார் “வைகல் தோறும் தெய்வனம் தொழு” என்பதும் “ஆலயம் தொழுவது சாலமும் நன்று” என்பதும் இஸ்லாமிய சமுதாயத்தில் பள்ளிவாசலில் சென்று தொழுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கும் மற்றும் காலைத் தொழுகையான பஜர் தொழுகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கும் பொருந்துவதைக் காண மகிழ்வாக இருக்கும். 

காலையில் எப்படியாவது வைகறை (பஜர்) தொழுகைக்கு எழுந்தாக வேண்டும். தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். தூய்மையான் அதிகாலை காற்று உடல் நலத்திற்கு மிகவும் நல்லது விடியல் காலையில் பஜர் தொழுகைக்கு போகும்போது சுத்தமான ஆக்ஸிஜன் காற்றை சுவாசிப்போமே அப்போது வரும் உற்சாகம் அது மிகவும் உயர்வானது. 

பால் காரர்களும் பேப்பர் காரர்களும் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிப்பதால்தான் அவர்களால் வேகமாக செயல்பட முடிகின்றது.  சுபுஹு தொழுத நாட்களையும் சுபுஹு தொழாத நாட்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மைகள் உங்களுக்கு விளங்கும். அதிரைநிருபரில்  வளம் வரும் நண்பர்கள் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிப்பாகள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது

இன்ஷா அல்லாஹ் அடுத்த 6 வது தொடரில் கண்களின் முக்கிய பாகங்கள்  அதன் அமைப்பு பற்றியும் பார்வை பாதிப்பை பற்றியும்  பார்போம்
தொடரும்...
அதிரை மன்சூர்

ஒரு புத்தகம் பிறக்கிறது - தொடர் - 8 15

அதிரைநிருபர் பதிப்பகம் | September 29, 2013 | , ,

D.H.Lawrence: டி.ஹெச்.லாரன்ஸ் இங்லாந்தில் நோட்டிங் ஹாம் ஷயர் என்ற ஊருக்கு அருகேயுள்ள ஒரு சிறு கிராமத்தில் 1885-ஆம் ஆண்டு பிறந்தார். ஆங்கில இலக்கிய உலகில் பரபரப்பாகப் பேசப்பட்ட பெயர்களில் இவர் பெயரும்அடங்கும்.

ஏழ்மையின் கோரப்பிடியில் சிக்கிய குடும்பத்தில் பிறந்தவர். வறுமைதான் பாட்டன் பூட்டான் தேடிவச்ச பரம்பரைச் சொத்து. பள்ளி ஆசிரியை பணி செய்த அவருடைய தயார், குடும்பத்தை பீடித்த வறுமைப் பிசாசை விரட்ட அல்லும் பகலும் அயராது உழைத்தார். லாரன்சின் தாய் தந்தையரின் தாம்பத்திய வாழ்க்கையில் அன்பும் மகிழ்ச்சியும் சொல்லாமல் கொள்ளாமல் மாயமாய் மறைந்தது. கையில் காசு இல்லாதவன் வீட்டில் சுற்றமும் நட்பும் சூழவருமோ? குடும்பத்தில் சண்டையும் வம்பும் புகுந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தது. வறுமைபுகுந்த இடத்தில் இவையெல்லாம்ஒன்று கூடி மாநாடு நடத்தி தீர்மானம் நிறைவேற்றும்.

தாய்-தந்தையரின் சண்டை சச்சரவுகளை கருத்தூன்றி கவனித்த  லாரன்சின் இளமனதில் சோகம் பசுமரத்து ஆணிபோல் ஆழாமாக பதிந்தது. அதன் தாக்கம் பிற்காலத்தில் அவரை ஒரு சிறந்த எழுத்தாளராக மாற்றியது. 

Sons and Lovers என்ற ஒரு நாவல் எழுதினார். இந்த  நாவலின் பின்புலமே அவர் தாய்-தந்தையர்களின் தாம்பத்திய உறவின் பிரதிபலிப்பே. இது அவர் 1913-ஆண்டு எழுதிய முதல் நாவல்.

அடுத்து  1920-இல் The Rainbow என்ற நாவல். 

ஆண்-பெண் பாலுறவு விஷயங்களை Women in Love என்ற நாவலில் வெளிப்படையாகவே எழுதினார். அதை அடுத்து Aarons Road, Kangaroo, The Plumed Serpent, நாவல்களையும் எழுதி எழுத்துலகில் பெயர் பதித்தார்.

1928-ம் ஆண்டில் அவர் ஒரு கதை எழுதினார். அதை வெளியிட முயற்சி தொடங்கும் போதே ஆரம்பித்தது தலைவலி. ஆரம்பத்திலேயே தலைவலி தந்த புத்தகம் எந்த புத்தகம்? அது தான் "லேடி சாட்டர்லியின் காதலன்". Lady Chatterley’s lover. கதையின் கையெழுத்து பிரதியை தன் உதவியாளரிடம் டைப் செய்யகொடுத்தார்.

டைப் செய்வதை பாதியில் நிறுத்திவிட்டு “இது ரெம்ப ஆபாசம். நான் இதை டைப் செய்ய மாட்டேன்னு” என்று  உதவியாளர் திருப்பி கொடுத்து விட்டாளாம்.

எப்படியோ சமாளித்து பல அச்சு கூடங்களில் முட்டி மோதிய பின் ஒரு பதிப்பகம் மட்டும் அதை வெளிட முன் வந்தது. முதலில் ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு வெளி வந்தது. அவை எல்லாம் சீக்கிரமே விற்று முடிந்து இரண்டாம் பதிப்பும் வெளியானது. 

ஆசிரியரின் அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக அச்சிட்டு வெளியாகும் புத்தகங்கள் [pirate] மார்க்கெட்டில் பெருக்கெடுத்து ஓடியதுடன் கதை விவகாரம் [பாலுறவு] வெளியில் கசிந்து போலீசின் எலி காதுகளுக்கு எட்டியது. கடை கடையாக புகுந்து ஒரு புத்தகக் கடை கூட பாக்கி விடாமல் "சாட்டர்லீயின் காதலனை" போலீஸ் வேட்டையாடியது. லாரன்சு மனம் ஒடிந்து போனார். pirate கொள்ளையர்கள் ஒருபுறம், போலீஸ் அட்டகாசம் மறுபுறம். ‘உரலுக்கு ஒருபக்கம் இடி மத்தளதிற்கு இருபக்கம் இடி’ என்பதுபோல லாரென்ஸு இருபுறமும் மாறி மாறி அடி வாங்கினார். இதை ஒரு ஏழை எழுத்தாளனால் தாங்க முடியுமா?

இதற்கிடையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவகாரம் அம்பலத்துக்கு வந்தது. ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் ஒன்றோடு ஒன்று ‘’மோதிக்” கொண்டன [ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன’ என்ற இந்த வரி ’ஜஸ்ட் உங்கள் வாசிப்புக்காக சும்மா போட்டது தானே தவிர நீங்கள் ஒன்றும் நம்நாட்டு சட்டமன்ற, நாடாளுமன்ற ‘குழாயடி’ சண்டை என்று எண்ணிக் கொள்ள வேண்டாம்].

கடைசியாக 1958-ம்-ஆண்டு பிரிட்டிஷ் அரசு lady Chatterley’s lover-ருக்கு விதித்த தடையே நீக்கியது, அதோடு மட்டுமல்ல, அது பெற்ற தண்டனைக்கு ‘கழுவாய்’ யாக  இலக்கிய அந்தஸ்தையும் கொடுத்தது. பாவம் இந்த நல்ல செய்தியை கேட்டு மகிழ அதை எழுதிய லாரென்சுதான் இல்லையே!. ஏவனோ ஒருவன் நெத்தி வியர்வை நிலத்தில் சிந்தி இரவும் பகலும் பாடுபட்டு உழைத்து உருவாக்குகிறான். வேறு எவனோ ஒருவன் உண்டுகளிக்கிறான். இதுகாலம் போடும் ‘ராங்கால்’ [wrongcall] இதை மாற்ற எவன் வருவான்?

ladyChatterley”s Lover தடை மேலை நாடுகளில் அகற்றப்பட்டாலும் கீழை நாடுகள் பலவற்றில் இன்னும் தடை நீக்கப்பட வில்லை. 

Lady Chatterley’s Lover தமிழ்நாட்டு திராவிட கட்சிகளின் அரசியலிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது. 1961 ஆண்டில் வேலூரில் நடந்த தி.மு.க பொதுக் குழுகூட்டத்தில் E.V.K.சம்பத் மாற்றங்களை கொண்டுவர முயற்சித்த போது ராசா-பாச நிகழ்வுகள் நடந்தேறியது. சம்பத் கொண்டு மாற்றங்களில் ஒன்று தி.மு.க. தலைவர்கள் மேடைகளில் ஆபாச வார்த்தைகளை பேசக்கூடாது என்பதும் ஒன்று. இதை ஏற்று கொள்வது போல் ஏற்றுக் கொண்ட அண்ணா சிலநாட்கள் கழித்து மாயவரம் பொது கூட்டதில் Lady Chatterle’s Lover கதையை விவரித்து பேசினார். இதனால் சம்பத் தி.மு.க.வை விட்டு விலக இதுவும் ஒரு காரணமானது.

Sir.Arthur Conan Doyle எழுதிய கதைகளில் வரும் துப்பறியும் சிங்கம் ‘ஷெர்லோக் ஹோல்ம்ஸ்’க்கு ஐரோப்பா, அமெரிக்கா முழுதும் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். ஷெர்லோக் ஹோல்ம்ஸ் வில்லனுடன் சண்டைசெய்த போது ஆற்றில் விழுந்து இறந்து விடுவதாக 1893ல் கோனாண்டோயல் ஒரு கதைஎழுதினார். அந்த கதையோடு புகழ்பெற்ற ஹோல்ம்ஸு கதாபாத்திரத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி போட்டதோடு துப்பறியும் கதை எழுதுவதையும் நிறுத்திவிட்டார். தங்கள் "இதய தெய்வம்" துப்பறியும் சிங்கம் ‘ஹோல்ம்ஸ்’ கதைகள் ‘இந்தா‘ வரும்’ அந்தா வரும்’ என்று ஐந்து ஆண்டுகள் காத்திருந்து எதிர்பார்த்த ரசிக பக்தர்களுக்கு ஏமாற்றமே பதிலாக கிடைத்தது. காத்திருந்த ரசிகர்கள் பொறுமையிழந்து கொதித்துப் போனார்கள். "பொறுத்தது போதும் தோழா! பொங்கி எழு" என்று போர் முரசு கொட்டி முழக்கமிட்டு போராட்டத்தில் குதித்தார்கள். மறியல் செய்தார்கள்! பத்திரிகைகளில் அறிக்கை விட்டார்கள். ஒன்றும் ஒப்பேறவில்லை. இவர்களின் போராட்டம் போர்முரசு ஒன்றும் எழுத்தாளர் கேநோண்டோயில் காதில் ஏறவில்லை. காவிரியில் தண்ணீர் விடக்கோரி தமிழ்நாட்டில் கூட இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் நடந்ததில்லை.

கடைசியாக எழுத்தாளர் ஆர்தர் கோனண்டோயல் வீட்டுமுன் மறியல் செய்தார்கள். உண்ணாவிரதம் இருந்தார்கள். ‘ஹோல்ம்சை’ மீண்டும் உயிருடன்” கொண்டு வரவேண்டும். துப்பறியும் கதை எழுத வேண்டும்’’ என்று ஆர்தர் கோனண்டோய்ல் இடம்’ கருணை மனு’’ சமர்பித்தார்கள். ’இது என்னடா பெரிய பேஜ்ஜாரா போச்சுன்னு’ புலம்பியபடியே ஆர்தர் கொனண்டோயல் மனுவை வாங்கி ஆர்பாட்டகாரர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்தார்., ஆர்பாட்டகாரர்களும் ‘கொனோண்டோயல் வாழ்க! ஆர்தர் கொனண்டோயல் வாழ்க!! எழுத்துலகச் சிற்பி வாழ்க’ என்ற கோஷத்துடன்  அமைதியாக களைந்து போனார்கள். இந்த அமளி துமளி எல்லாமே தன் இமேஜை வளர்த்து கொள்ள கேநோண்டோயலே முன்கூட்டியே போட்ட திட்டம் என்று நினைக்காதீர்கள். அந்த அரசியல் தந்திரம்யெல்லாம் அங்கே கிடையாது. வேறே எங்கேன்டு கேக்குரியாள? உ...ஸ்....ஸ்....ஸ் ரகசியம்.

ஆர்தர்கோனண்டோயல் “வெள்ளை”க் காரர் அல்லவா! கொடுத்த வாக்கு மாறாமல் செத்துப்போன ஹோல்ம்சை எமனிடம் மன்றாடிக் கேட்டு வாங்கி மீண்டும் கதாநாயகனாக போட்டு துப்பறியும் கதைகள் எழுதினார். இதுவே நம்ம  நாட்டு எம்.பி, எம்.எல்.ஏ.வாக இருந்தா கொடுத்த வாக்கை காப்பாத்துவானுங்களா?" ‘ஆகட்டும் பார்க்கலாம்’னு சொன்னதோடு சரி. சொன்னதையல்லாம் காத்துலே உட்டுட்டு அவங்க ஜோலியே பார்த்துகினு போயே போயீடு வானுங்க. இனிமே அவங்க மூஞ்சியெ அடுத்த எலக்சன் டயத்துலேதான் பாக்க முடியும், ஆனா வெள்ளக்காரன் வெள்ளக்கரந்தான் சொன்னத செய்வானுங்க செய்வதை சொல்வானுங்க. அதனாலேதான் அவன் நாடு முன்னுக்கு வந்துச்சு. இல்லேன்னா நம்ம மாதிரி குந்திகின்னு ஈக்க வேண்டியதுதான்
தொடரும்...
S.முஹம்மது ஃபாரூக்

மீண்டெழுவாய் எங்கள் சகோதரா (MSM-n)! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | September 28, 2013 | , , ,

அதிரைநிருபர் பங்களிப்பாளர்களில் முதன்மையில் இருப்பவர்களில் ஒருவரான எங்கள் அன்புச் சகோதரர் MSM நெய்னா முஹம்மது அவர்களின் அருமைத் தாயார் அவர்கள் இன்று அதிகாலை 1:30 மணிக்கு வஃபாத்தான செய்தி அறிந்து வருந்துகிறோம். சகோதரர் MSM-நெய்னா முஹம்மது அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த இழப்பினை பொறுத்துக் கொள்ளும் சக்தியையும் சாந்தியையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்க வேண்டி நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

சகோதரா,

என்ன செய்துவிடமுடியும் ?
உன்னால்
என்னதான் செய்துவிடமுடியும்?

உறுப்புக் கெட்டுபோனால்
உன்னுறுப்பை
அறுத்துக் கொடுப்பாய்,
இரத்தம் திரிந்துவிட்டால்
நித்தம் கொடுப்பாய்,
உயிரைப் பகிர
உம்மாவுக்குப் புகட்ட
உன்னால் முடியுமா?

கண்ணுக்கு இமையென
உம்மாவைக் காத்தாய்
கண்மூடிய பின்பும்
கண்ணான உன்னைக்
காக்கும் உன்தாயின் துஆ

அகவை முதிர்ந்த உம்மாவைப்
பறவை தன் குஞ்சைச்
சிறகைக் கொண்டு காப்பதுபோல்
உறவைக் கொண்டு பார்த்தாய்

சொற்களாகவும் செயல்களாகவும்
உன்னுள் வாழும் உம்மா
இறப்பதில்லை சகோதரா

உள்ளத்தை உருக்கி
கண்ணீராய் உதிர்க்கும் நீ
உம்மாவின் நினைவை
உதறிவிட முடியாது என
பதறிவிடாதே
பறிகொடுத்ததை எண்ணி
தன்னிலைச்
சிதறிவிடாதே

நீ
அடக்கம் செய்து வைத்த
உம்மா
உன்னைத்
தொடக்கம் செய்துவைத்தது
முடக்கம் கொள்ளவல்ல

தந்தவன் எடுத்துக்கொள்வதும்
வந்தவர் செல்வதுவும்
கணக்குச் சரிதான் என்று
தனக்குத் தானேசொல் ஆறுதல்

உன்னை மொய்த்துக்கொண்டிருக்கும்
உம்மா நினைவிலிருந்து
மீண்டுவா சகோதரா

எல்லா துஆக்களும்
ஒலித்து ஓயும்
உம்மாவின் துஆ மட்டுமே
நிலைத்து நீளும்

வாழ்க்கை
இன்னும் மிச்சமிருக்கிறது!
(அவனிடமிருந்தே வந்தோம்; அவனிடமே மீளுவோம்)

அதிரைநிருபர் பதிப்பகம்.

‘அதிரையன்’ என்ற அபுல் ஹசன்! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 28, 2013 | , , , , , ,


நான் முன்பு ஓர் இழையில் மேற்கண்ட தலைப்பில் தகவல்களைத் திரட்டித் தருவதாக வாசகர்களுக்கு வாக்களித்திருந்தேன்.  நீண்ட இடைவெளியாகிப் போனதாலும், குறிப்புகள் தரவிருந்த மூத்தவர்களின் நினைவாற்றல் குறைவினாலும், சிலவற்றை மட்டுமே திரட்ட முடிந்தது.

வாவன்னா சார், ஹாஜா முஹைதீன் சார் ஆகிய இருவரிடமிருந்து திரட்டிய தகவல்களுடன், எனது நினைவில் உள்ளவற்றையும் சேர்த்து உருவானதே இந்தப் பதிவு.

நமதூரில், பழைய அஞ்சல் அலுவலகத்தின் எதிரில் இயங்கிவந்த ‘ABC பிரிண்டர்ஸ்’ உரிமையாளர் அபூபக்ர் அவர்களின் இளைய மகனாகப் பிறந்தவர்தான், நமது ‘அதிரை எழுத்துலக முன்னோடி’ அபுல்ஹசன் அவர்கள். 

அவரின் உலகம் மிகக் குறுகியது.  அதாவது, அவருடைய வீட்டின் கிழக்குப் பக்க அறை.  ஏறக்குறைய ஒரு House arrest மாதிரியான ஒரு குறுகிய வாழ்க்கை!  காரணம், ஏதேனும் ஒரு நோயா?  தெரியவில்லை.  அல்லது சாபமா?  தெரியாது.  மன நிலை சரியில்லையா?  தெரியாது.  கல்விக் குறைவா?  அதுவும் தெரியாது.  ஆனால், ஒன்று மட்டும் என் நினைவில் இருக்கின்றது.  அந்த வீட்டில் மிக நீண்ட காலமாக, ‘பக்கீர்மத்தா’ என்ற வெளியூர் மூதாட்டி இருந்துவந்தார்.  அவருக்குச் செல்லப் பிள்ளை நமது கதாநாயகன்.  

அபுல் ஹசனின் நடமாட்டம் வீட்டில் இல்லையென்றால், ‘எங்கே எம்புள்ளே’? என்று தேடத் தொடங்கிவிடுவார் அந்த மூதாட்டி.  அவர் வெளியில் போய்த் திரும்பிவரத் தாமதமானால், அந்தக் கிழவி வாசலிலேயே காத்துக் கிடப்பார்.  படிப்பது பள்ளிக்கூடத்தில்தான் என்ற நியதி, அந்தக் கிழவிக்குப் புரியாது.  இதையும் உடைத்து, ராஜாமடத்தின் பள்ளிக்கூடத்தில் சேர்த்து, ஒரு சைக்கிளையும் வாங்கிக் கொடுத்திருந்தார் அபுல் ஹசனின் தந்தையார்.  தன் மகனின் திறமையை வெளிக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார். வாப்பாவின் ஆசை, தன் பிள்ளை கல்வியில் சிறந்தவனாக உருவாக வேண்டும் என்பதே.  ஆனால் கிழவியின் நோக்கமோ, பிள்ளை பத்திரமாக இருக்க வேண்டும் என்பது.  கல்வியும் பாதுகாப்பும் இன்றியமையாமல் இருக்கும் இந்தக் காலம் வேறு;  அந்தக் காலத்தில் யார் இதைப் பற்றிச் சிந்தித்தார்?  ‘பாதுகாப்பு இல்லை’ என்ற காரணத்தால், அபுல்ஹசனின் கல்வி இடையில் நின்றது.  1950 களில் பள்ளிப் படிப்பை சீரியஸ் ஆகப் பலரும் எடுத்துக்கொண்டதில்லை.  முடிவில், வாப்பாவின் முயற்சியால் தொடர்ந்த பள்ளிப் படிப்பு, இடைநிறுத்தத்திற்கு ஆளானது.  ‘East or west, home is best’ என்றாயிற்று அபுல்ஹசனுக்கு.  

அந்தக் காலத்தில் வெளியாகிக் கொண்டிருந்த ‘சுதேசமித்திரன்’ என்ற நாளேடு, கதிர், குமுதம், கல்கண்டு, ஆனந்த விகடன், கலைமகள், மஞ்சரி, கல்கி, முஸ்லிம் முரசு என்று எல்லாப் பத்திரிகைகளையும் வாசிக்கும் பழக்கத்தைத்  தமது அன்றையப் பொழுது போக்காக ஆக்கிக்கொண்டார் அபுல் ஹசன்.  தன் மகனின் வாசிப்பு ஆர்வத்தைக்  கண்டு, தவறாமல் அந்தந்தப் பத்திரிகைகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்குக் கொணர்வார் தந்தையார்.  சில மாதங்களில் தந்தையார் அபூபக்ர் அவர்கள் சென்னையில் வர்த்தகம் ஒன்றைத் தொடங்கினார்.

இதுதான் தக்க தருணம் என்று, அபுல்ஹசனை மதராசுக்குக் கூட்டிச் சென்றார் தந்தை.  சில மாதங்களே கழிந்த சென்னை வாழ்க்கையில் அபுல் ஹசன் வெறுப்படைந்தார்.  ஒரு நாள் தந்தைக்குத் தெரியாமல், புகை வண்டி ஏறி ஊருக்குப் பயணமானார் அபுல் ஹசன். நடு ராத்திரி நேரத்தில் வண்டி கடலூர் நிலையத்தில் நின்றபோது, வண்டியை விட்டு இறங்கி, தன் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினார்!  ஊருக்குப் புறப்பட்டுவிட்டான் பிள்ளை என்றறிந்த தந்தையார், வீட்டுக்குத் தெரிவித்தார்.  அதிராம்பட்டினத்துப் புகைவண்டி நிலையத்தில் பிள்ளை வந்திறங்குவான் என்ற எதிர்பார்ப்புடன் நின்றவர்களுக்கோ ஏமாற்றம்!  அந்தக் காலை வண்டியில் வரவில்லை; இரவு வண்டியிலாவது வருவார் என்ற எதிர்பார்ப்பில் உறவினர்கள் நின்றனர்.  அப்போதும் வரவில்லை!

‘என்ன ஆனார் அபுல் ஹசன்?’ என்ற கேள்வி, எல்லார் மனத்தையும் அச்சமூட்டிற்று.  கடலூர் நிலையத்திலிருந்து, மாயூரம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி என்று எல்லா ஊர்களிலும் ஆட்களை அனுப்பித் தேடுதல் வேட்டை தொடங்கிற்று.  ஐந்தாறு நாட்கள் சென்ற பின், உடைகளில் அழுக்குப் படிந்தவராக ஊருக்கு வந்து சேர்ந்தார் அபுல் ஹசன்!  பக்கீர்மத்தாவின் மகிழ்ச்சிக்கோ அளவில்லை!  ‘எம்புள்ளை எங்கும் போகவேண்டாம்; வீட்டிலேயே இரு வாப்பா’ என்று கூறினார் பக்கீர்மத்தா.  அபுல் ஹசன் மீண்டும் தனது ‘கல்வத்’ (தனித்திருப்பு) வாழ்க்கையைத் தொடர்ந்தார்.  அடுத்து வந்த சில ஆண்டுகள், அவரின் இறப்பு வரை, அந்த மூதாட்டியின் விருப்பப்படியே அமைந்துவிட்டது!

அந்த நாட்களில்தான், அவர்களின் வீட்டுக்கருகில் நாங்கள் ‘இக்பால் நூலகம்’ என்ற நூலகத்தைத் தொடங்கினோம்.  அங்கிருந்த நூல் பட்டியலை அவரிடம் காட்டினோம்.  என்னென்ன புத்தகங்கள் எங்கள் நூலகத்தில் இருக்கின்றன என்பதை அபுல் ஹசன் மச்சான் தெரிந்துகொண்டார். எங்கள் நூலகத்தின் நிரந்தர வாசகரானார்.  அந்தக் காலகட்டத்தில்தான், சிறுவர்களான நாங்கள், ‘அல்லாமா இக்பாலின் நூற்றாண்டு விழா’வைப் பொது நிகழ்ச்சியாக மரைக்கா பள்ளிக்கு வெளியில் பந்தல் போட்டு நடத்தி முடித்தோம்.  அதில் பங்கெடுத்தவர்கள்: அ. இ. செ. முஹைதீன் பி.ஏ. அவர்களின்  தலைமையில், பேராசிரியர் அப்துல் கபூர், டாக்டர் இக்ராம் (உருதுப் பேச்சு), உள்ளூர் பேச்சாளர் ஒருவர் ஆகியோர் சொற்பொழிவு ஆற்ற, வெற்றிகரமாக நடத்தி முடித்தோம் நூற்றாண்டு விழாவை!

அபுல் ஹசன் மச்சானின் வீட்டு மேற்குப் பக்க அறைதான் எங்கள் ‘இக்பால் நூலகம்’ ஆகும்.  அந்த நேரத்தில்தான், அவரது முதல் கதை, ‘செல்லாத காசு’ என்ற பெயரில் ‘தினமணி கதிர்’ பத்திரிகையில் பிரசுரமாயிற்று!  கதாசிரியரின் பெயர், ‘அதிரையன்’ ஆகும். எங்களுக்கெல்லாம் ஏகப்பட்ட மகிழ்ச்சி.

எங்கள் நூலகத்திற்கு அடுத்த வீட்டில்தான், காதர் முகைதீன் கல்லூரியின் அன்றைய முதல்வர், பேராசிரியர் அப்துல் கபூர் அவர்கள் தங்கியிருந்தார்கள்.  தமக்கு அடுத்த வீட்டில் அபுல்ஹசன் என்ற கதாசிரியர் இருக்கிறார் என்று அறிந்தவுடன், ஒரு நாளைக்கு அவரைச் சந்திக்கவேண்டும் என்ற ஆசை பேராசிரியருக்கு.  நாங்கள் வீட்டாரின் அனுமதியைப் பெற்று, பேராசிரியரை அழைத்துக்கொண்டு அவரைச் சந்திக்கச் சென்றோம்.  பேராசிரியர் நலம் விசாரித்து முடித்தவுடன், “இன்னும் எழுதுங்கள்.  நிறைய எழுதுங்கள்” என்று அவருக்கு ஆர்வமூட்டினார்.

பத்திரிகைகள், மற்ற நூல்கள் வாசிப்பு அல்லாமல், இன்னும் சிலவற்றில் அபுல் ஹசனுக்கு நல்ல ஈடுபாடு.  ‘டெலிவிஷன்’ வந்தில்லாத அந்தக் காலத்தில், கால்பந்தாட்டம், கிரிக்கெட் முதலியவற்றின் ‘கம்மென்டரி’ ரேடியோவில்தான் ஒலிபரப்பு செய்யப்படும்.  அதை விரும்பிக் கேட்பார் அபுல் ஹசன்.  கமெண்டரியை வர்த்தக விளம்பரத்துக்காக இடைநிறுத்தம் செய்திருக்கும்போது, அபுல் ஹசனின் கமெண்டரி ஆரம்பமாகிவிடும்.  அதாவது, இன்ன டீம் ஜெயிக்கும்; இன்ன டீம் தோற்கும் என்று ஆரூடம் சொல்வார்.  முடிவும் அது போலவே நடக்கும்!  ஆட்டக்காரர் ஒவ்வொருவர் பற்றியும் அவருக்கு விவரம் தெரியும்.

புத்தக வாசிப்பு அல்லாமல், அவருக்கு இன்னொரு பணியும் இருந்தது.  அதாவது, குடும்பத்துப் பிள்ளைகளுக்குப் படித்துக் கொடுப்பது.  ‘மகனின் வாழ்க்கை இப்படிச் சுருங்கிவிட்டதே’ என்ற கவலை வாப்பாவுக்கு அதிகம்.  அதனால், ஏதேனும் ஒரு வாய்ப்பை எதிர்பார்த்து, அதைக் காரணமாக்கி, மகனை வெளியில் அழைத்துச் செல்லக் காத்திருப்பார் வாப்பா.  வாப்பாவின் நண்பர் குழாம் விரல் விட்டு எண்ணுமளவுக்கே இருக்கும்.   அன்றைய தி. மு. க. நட்சத்திரப் பேச்சாளர் N.S. இளங்கோ, அவர்களுள் ஒருவர்.  இளங்கோவின் ‘சித்ரா ஸ்டோர்’க்குப் போய் இருக்கும்படி அறிவுறுத்துவார் தந்தை, இப்படியாவது தன் மகனின் வெளியுலகத் தொடர்பு வரட்டுமே என்ற எதிர்பார்ப்பில்.  ‘ராணி அச்சகம்’ என்ற பெயரில், இளங்கோவுக்கு ஓர் அச்சகமும் இருந்தது.  அதிலாவது தன் மகன் சம்பளமில்லாத ஊழியராக இருக்கட்டும் என்பது தந்தையின் எண்ணம்.

பத்திரிகைகளில் ‘ஆசிரியருக்குக் கடிதம்’ பகுதியில் தனது கருத்தைப் பதிவு செய்வதன் மூலமே பத்திரிகை மற்றும் எழுத்துத் தொடர்பு தொடங்கிற்று எனலாம்.  எந்தப் பத்திரிகையிலும் தன் பெயர் ‘அபுல் ஹசன்’ என்று வந்துவிடக் கூடாதே என்பதில் கவனமாயிருக்கும் ஒரு notorious character.  அதனால்தான், ‘அதிரையன்’, ‘வாவன்னா’ போன்ற புனைபெயர்களில் பதிவு செய்வார் அபுல் ஹசன்!

முறையாகக் கல்வியைக் கற்று, வெளியுலகத் தொடர்பை ஏற்படுத்திகொண்டு, எழுத்துத் துறையில் ஈடுபாட்டையும் உண்டாக்கியிருந்தால், அதிரையின் முன்னோடி எழுத்தாளராகவும், அறிஞராகவும் ஆகியிருப்பார் ‘அதிரையன்’ என்ற அபுல் ஹசன்.  இறைவன் விதித்த விதி!  அதுதானே நடக்கும்!

அதிரை அஹ்மது 

பிளாக் ஹோல் !? 22

அதிரைநிருபர் பதிப்பகம் | September 27, 2013 | , , ,

அதிரைநிருபர் தனது இணையப் பயணம் துவங்கிய நாள் தொட்டு தோளோடு தோளாக, உறவோடு உறவாக, உணர்வுகளோடு உண்மையாக எல்லாச் சூழலையும் எதிர்கொள்ளப் பக்கபலமாக இருந்த எங்கள் அன்பிற்குரிய நண்பர், சகோதரர், எந்த அடைமொழியிட்டாலும் அனைத்திற்கும் பொருத்தமானவர், அதிரைநிருபரில் புகைப் படங்களைப் பேச வைத்தவர், இச் என்றாலும் நச் என்றாலும் சுருக்கமான கருத்துக்குச் சொந்தக்காரர் Sஹமீது என்ற எங்கள் எம்.எஃப்.சாஹுல் ஹமீது அவர்கள் [அதிரைநிருபரின் மூத்த பதிவர்களில் மரியதைக்குரிய மூத்த காக்கா S.முஹம்மது ஃபாருக் அவர்களின் மகனார்] இதுவரை அதிரைநிருபரில் எழுதிய, பேசிய பதிவுகளில் இந்தப் பதிவு 100 வது பதிவாகப் பதிக்கப்படுவதில் மகிழ்கிறோம்.

  அதிரைநிருபர் பதிப்பகம்  

உலகம் உருவானது எப்படி என்ற கட்டுரையில் பிளாக் ஹோல் (black hole) பற்றி நேரம் கிடைக்கும் போது  பார்ப்போம் என்று சொன்னது நினைவுக்கு வந்தது இப்போது அந்த பிளாக் ஹோல்  பற்றி இந்த பதிவில் விவரமாகப் பார்ப்போம் 

பிளாக் ஹோல்  என்றால் என்ன  ?

பிளாக் ஹோல் என்றதும் அது ஏதோ ஒரு இருட்டு ஓட்டை என்று நினைத்து விட வேண்டாம் அது ஓட்டையோ  அல்லது   வெற்றிடமோ அல்ல அது  ஒரு முன்னாள்  நட்சத்திரம்  பிளாக் ஹோல் என்பது மிகச்சிறிய இடத்தில் அதிகமாக அடக்கி வைக்கப்பட்ட பலபொருட்களின் கூட்டு தொகுப்பாகும். மிகக் குறைந்த இடத்தில் நிறைய பொருட்களை அதிகமான அழுத்தத்தில் அமுக்கி அமுக்கி வைக்கும்போது  அவற்றின் ஈர்ப்புவிசை அதிகமாகும். ஆகவே  பிளாக் ஹோல் என்பது  தம்மைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களையும் அதிக விசையுடன் இழுக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்  பிளாக் ஹோல்கள் விண்வெளியில் எவ்வித ஒளியையும் வெளியிடாததாலும் கருநிறத்திலுள்ள ஒரு துளையைப் போன்று கருதுவதாலும் இதற்கு (கிடா வெட்டி)  பிளாக் ஹோல்கள் என பெயர் வைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.


பிளாக் ஹோல் விண்வெளியில் உள்ள  ஆற்றலும்    அதிக ஈர்ப்பு விசையும்  கொண்டதுமான ஒரு பொருளாகும். நமக்கு தெரிந்த வரை மிக வேகமாக பயணிக்க கூடியது ஒளியாகும் அதன் வேகம் ஒரு நொடிக்கு 300,000 கி.மீ. இந்த ஒளியானது கூட இந்த பிளாக் ஹோலில் இருந்து தப்ப முடியாது  ஒரு நொடிக்கு 300,000 கி.மீ வேகத்தில்  பயணிக்க கூடிய ஒளிக்கே இந்த கதி என்றால் நாம் நம்ம  நிரந்தர பானையைத் தூக்கிக் கொண்டு என்ன வேகத்தில் தான்  ஓட முடியும்  இந்த பிளாக் ஹோலின் முன்னாள்.

ஒரு பெரிய நட்சத்திரத்தின்  எரிபொருள் முடிந்து விட்டால் (அங்கேயும் எரிபொருள் இருக்கு) அந்த நட்சத்திரம் அதன் எடையைத் தாங்க  முடியாது . நட்சத்திரத்தில் உள்ள ஹைட்ரஜன்  அடுக்குகள் அந்த நட்சத்திரம் மீது அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். இந்த அழுத்தத்தினால்  நட்சத்திரம் சுருங்கி அளவில் சிறியதாகும். கடைசியில்  நட்சத்திரம் அணுவைவிட மிகச் சிறியதாக  உருமாறிவிடும் எப்புடி இருந்த நான்  இப்படி ஆயிட்டேன் என்பது  போல ஒரு பெரிய நட்சத்திரம் சுருங்கி அணுவைவிடச் சிறியதாகும் போது அதன் அடர்த்தியும் அதன்  ஈர்ப்புவிசையும் மிகமிக அதிகமாகி  பிளாக்ஹோல் உருவாகின்றது. இந்த மிக பெரும்  ஈர்ப்பு விசையால் அது தன்னைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களையும் தனக்குள் இழுத்துக் கொள்ளும். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது ஆனால் இந்த நட்சத்திரம் சிறுத்தும் அதன் காரம் கூடுதலாகிவிடும் நட்சத்திரம் சுருங்கி  பிளாக் ஹோலானால் அதன் எடை கொஞ்சம் கூட குறையாது என்பதுதான் இங்கே மிக பெரிய ஆச்சர்யம் 

பிளாக் ஹோல்களின் அளவு அவற்றில் எந்த அளவுக்குப் பொருட்கள் உள்ளனவோ அதைப் பொறுத்து வேறுபடும். மிகப்பெரிய நட்சத்திரங்கள்  அழிந்து அவற்றின் எச்சங்கள்  பிளாக் ஹோல்களாகியுள்ளன. நமது சூரியனைவிடச் சிலமடங்கு பெரிய  பிளாக் ஹோல்கள் உள்ளன. இவை மற்ற  பிளாக் ஹோல்களோடு ஒப்பிடும்போது அளவில் மிகச் சிறியதாகும். சில நட்சத்திர மண்டலங்களின் மையத்தில் ஒரு  சில பிளாக் ஹோல்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை சூரியனில் உள்ள பொருட்களைக் காட்டிலும் 100 மில்லியன் மடங்குப் அதிகமான  பொருட்களையே கொண்டிருக்கும்.

பிளாக் ஹோல்களை நம்மால் பார்க்க முடியாது. ஆனால் விண்வெளியாளர்கள்  பிளாக் ஹோல்கள் உள்ள இடத்தினைக் இலகுவாக கண்டறிய முடியும். பிளாக் ஹோல்கள் தம்மைச் சுற்றியுள்ள பொருட்களை அதிவேகத்தில் இழுப்பதினால் அப்பொருட்கள் அதிக வெப்பமடைந்து X கதிர்களை வெளியிடும்.  இந்த X கதிர்களைப் புவியிலிருந்து மிக சுலபமாக  கண்டறியலாம். எப்படி என்றால் இவற்றை புவியில் உள்ள அல்லது விண்வெளித் தொலை நோக்கிகள் மூலம் உணர முடியும்.  X கதிர்கள் அதிகம் காணப்படும் இடங்களில் இந்த பிளாக் ஹோல்கள் இருப்பதாக  விஞ்ஞானிகள் கணித்து விடுகின்றார்கள் 

நமது பால் வீதியின் மையத்தில் மிகப்பெரிய  பிளாக் ஹோல் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருக்கின்றது  அது சூரியனைவிட 3 மில்லியன் மடங்கு எடை கொண்டது. புவியிலிருந்து 24,000 ஒளிஆண்டுகள் (Light Years) தொலைவில் உள்ளது. இந்த  பிளாக்ஹோல் பூமியில் இருந்து மிகத்தொலைவில் உள்ளதால்  இந்த பிளாக் ஹோலால்  தற்போதைக்கு  நமக்கு (பூமிக்கு) பாதிப்பும்  கிடையாது.

மற்றொமொரு பதிவில் சந்திக்கலாம் இன்ஷா அல்லாஹ் !

Sஹமீது

“ஹஜ்” என்னும் ஓர் அற்புதம் ! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | September 27, 2013 | , , , ,


சாந்திச்  சரணா  லயமாம் – ஹஜ்ஜில்
............சாரும் புவியின்  முதலா லயமாம்
ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே—அருள்
…….......இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே

தந்தைஇப் றாஹிம்பாங் கோசை- இந்தத்
..........…தரணியில் மக்காவின் ஈர்ப்பு விசையாம்
சிந்தையிட் சேருமிறை போதம்- ஆங்குச்
............…சேர்ந்தே ஒலிக்கும் திருமறை நாதம்

அரபு நாட்    டுக்குள்ளோர்    நாடு - அங்கே
.......….அகிலமுஸ்     லிம்களின்  கூட்டுமா   நாடு
 மரபு  வழிகளில்  தேடல்  -புவி
........….மனித  நதிகளின்  சங்கமக் கூடல்

வெள்ளை யுடையில் மகிழ்ச்சி - மக்கள்
......வெள்ளத்தால் மக்கா நகரம் நெகிழ்ச்சி
உள்ளம் அழுக்கினைப் போக்கும் —அங்கே
......…உள்ஹிய்யா என்பதும் இந்தநல் நோக்கம்

நிலவதும்   நாணியே  கேட்கும் -  ஹாஜி
 … நிலவிடும்  பேரொளி  உன்னிப்பாய்ப்  பார்க்கும்
 உலவும்   சமத்துவம்  மெய்க்கும் — உண்மை
 …….உலகம்  தெளிந்திட  நாட்டியே வைக்கும்

“கவியன்பன்” கலாம்

நேற்று ! இன்று ! நாளை ! - தொடர் -12 19

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2013 | , , ,

“திருவளர்ச் செல்வியோ நான் தேடிய தலைவியோ”  என்று எம்ஜியாரால் பாடப் பட்ட செல்வி  ஜெயலலிதா ஜெயராம் தமிழ்நாட்டின் முதல்வரானார். முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் எல்லோரையும் போல இவரும் வழக்கம் போல பல வாக்குறுதிகளை வாரி வழங்கினார்.  அதிலே ஒன்று நல்லாட்சி நடத்துவேன் என்பதாகும். அதன் அடையாளமாக ஒரே ஒரு ரூபாய் மட்டுமே தான் மாதச் சம்பளமாகப் பெறுவேன் என்று அவர்  அறிவித்தபோது “அம்மா நீர் வாழ்க!" என்று அடுத்தது வரப்போவது தெரியாமல் முழக்கமிட்டனர் அறியாத மக்கள்.  அந்த எண்ணத்தில்தான் அரியணை ஏறினார் என்று நம்பலாம். ஆனால்  ஆட்சி பீடம் அவ்வளவு எளிதானதல்ல.

நல்லவர்கள் ஆட்சியில் அமர்ந்தாலும் அவர்களை அதிர்காரவர்க்கங்கள் எப்படியாவது கைப்பாவையாக்கி அடிமைப்படுத்திவிடும் என்பதற்கு ஜெயலலிதாவும்  விதிவிலக்காகவில்லை. அதிகாரத் தேனை உறிஞ்சும் எறும்புக் கூட்டங்கள் அவரை மொய்க்க ஆரம்பித்தன. வீடியோ கேசட்டுகளின் வடிவில் வீட்டுக்குள் படையெடுத்த நவீன – நம்ப முடியாத உறவுகள் விலாவாரியாக வலம் வர ஆரம்பித்தன. தனது இரத்த சொந்தங்களை பல சொந்தக் காரணங்களுக்காக் பிரிந்து தனிமையில் வாழ்ந்துவந்த ஜெயலலிதாவை அரவணைக்கிறோம் - ஆதரவு காட்டுகிறோம் - அன்பு செலுத்துகிறோம் -பணிவிடை செய்கிறோம் என்கிற போர்வையில் நடராஜாக்களின் நடமாட்டம் அதிகரித்து உட்புகுந்தனர். 

ஒரு நிழல் முதலமைச்சர் சசிகலா என்கிற உயிர்த்தோழி மூலம் உருவானார். அமைச்சரவை அமைத்தல்- அமைச்சர்களின் துறைகளை ஒதுக்கல் - அரசின் ஐ எ எஸ் செயலார்கள் மற்றும் ஐ பி எஸ் உயர் காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வது பதவி  உயர்வு கொடுப்பது போன்ற முதலமைச்சருக்கே உரித்தான தனி அதிகாரங்கள் நிழல் அதிகாரத்தின் கைகளின் அங்கீகாரத்துக்கே முதலில் வந்தன.என்ன காரணமோ ஜெயலலிதா இவற்றுக்கெல்லாம் தலையாட்டினார். நீட்டிய இடத்தில் கையெழுத்தும் இட்டார். மைசூரில் பிறந்த ஜெயலலிதா முதலமைச்சார் ஆனால் ஆட்சி செய்தது என்னவோ மன்னார்குடி என்று அரசியல் நிலை ஆட்டம் போட்டது. 

பாசி பிடிக்கும் அளவுக்குப் பணம் சேர்ந்தது. சூட்கேசுகளின் விலை தாறுமாறாக ஏறின. மனதில் மாசில்லை என்று கூறியே எம் எல் ஏக்களை தூசியாகப் பார்த்தனர். ஆட்சிக்கு ஆபத்து உண்டாகுமோ என்று கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் கவலைப் பட்டார்கள். கட்சிக்காக ஆரம்ப காலம் தொட்டு உழைத்து அடி உதை வாங்கி சிறை வாசம் சென்றவர்கள்  அலட்சியப் படுத்தப் பட்டார்கள். ஆடம்பரம் கொடிகட்டிப் பறந்தது. தொண்டர்களின் தொண்டையில் முள் தைத்தது. எட்டில் அடங்காத எண்ணற்ற அவலங்கள் அங்கே ஆட்சி புரிந்தன. ஒரு குறிப்பிட்டவர்களுக்கு பலனளிக்கும் விதத்தில் அரசின் திட்டங்கள் அறிவிக்கப் பட்டன. 

சசிகலாவும் ஜெயலலிதாவும் கடவுள் பக்தி நிறைந்தும் காணப்  பட்டனர். பலமுறை யாகங்கள் நடத்தினார்கள்.  அதில் ஒரு விளைவு இவர்களின் ஆட்சிக் காலத்தில் கும்பகோணத்தில் நடந்த மகாமகம் நிகழ்ச்சியில் இருவரும் குளிப்பதைக் ஆனவந்த பல மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து பலியாயினர். மேலும் பிரம்மானந்தா என்கிற போலிச் சாமியாருடன் சசிகலா தொடர்பு வைத்து சில பூஜைகள் நடத்தினார் என்றும் பேசப்பட்டது. 

இந்த அவலங்களுக்குள் குறிப்பிடப் பட வேண்டிய அம்சம் “ வளர்ப்பு மகன் திருமணம். “ சசிகலாவின் உறவினரான சுதாகரன் என்பவரை ஜெயலலிதா தனது வளர்ப்பு மகனாக அறிவித்து அவருக்கு நூற்று கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தார். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் முதலமைச்சருக்கு இப்படி ஆடம்பரத் திருமணம் நடத்த எங்கிருந்து வந்தது பணம் என்று மக்கள் யோசிக்க ஆரம்பித்தனர். 

இப்படியே அடுத்த தேர்தல் வந்தது. இம்முறை தனது ஆடம்பரங்களால் மக்களின் நம்பிக்கையை இழந்த ஜெயலலிதா தோற்கடிக்கப் பட்டு காத்திருந்த கருணாநிதி முதல்வரானார். முதல்வரானதும், ஜெயலலிதா மேல் பல வழக்குகளைப் பாய்ச்சினார். போயஸ் கார்டன் தோட்டம் ஒரு சுப தினத்தில் சோதனையிடப் பட்டது. அங்கே கிடைத்தவைகளில் பல சொத்து, நகை பட்டுப் புடவைகள் இதர ஆவணங்களைஎல்லாம் விட முக்கியமானது குவியல் குவியலான ஒரு முறை மட்டுமே உபயோகப் படுத்தப் பட்ட செருப்புக்களாகும். 

ஜெயலலிதா கைது செய்யப் பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். நாடே அல்லோகலப் பட்டது. புகழ்பெற்ற நடிகையாக பழமொழிப் படங்களில் நடித்த ஜெயலலிதாவுக்கு இவை ஒன்றும் பெரிய சொத்தல்ல. ஆனால் எல்லா சொத்தும் முதலமைச்சர் ஆகுமுன்பே கைவிட்டுப் போன நிலையிலும் அரசியல் அம்பலத்தில் ஆடப் போகும் போது அதிகாரமும் கைவிட்டுப் போனபின் பிரச்னைகளை சமாளிப்பது சாமான்யமா?இந்த வழக்கின் சோதனையில் சிக்கிய ஜொலிக்கும் நகைகளையும் செல்வங்களையும் செருப்புக்களையும்  தொலைக் காட்சிகள் இரவு பகல் தொடர் நிகழ்ச்சியாக ஒளிபரப்பின. இந்த வழக்குகளின் தொடர்ச்சிதான் இன்று வரை பெங்களூர் தனி நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதாவுக்கு  எதிரான வருமானத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்காகும். திருவளர்ச் செல்வி சேராத இடந்தனிலே சேராமல் இருந்திருக்கலாமோ  என்று சிந்திக்க ஆரம்பித்தார்.  

மீண்டும் அரியணை ஏறிய கலைஞர் காய்ந்த மாடு களங்களில் மேயப் புறப்படுவது போல் கட்சிக் காரர்களுக்கு ஆட்சியின் அனைத்துக் கதவுகளையும் திறந்துவிட்டார். தனது முந்தைய  தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்  கொள்ளத் தவறினார் முத்தமிழ் அறிஞர். மீண்டும் பழைய குருடி கதவைத்திறந்தாள். மக்களின் ஏகோபித்த வெறுப்பு அடுத்த தேர்தலில் தோல்வியைக் கொடுத்து வழக்குகளில் சிக்கி சின்னாபின்னப் பட்ட ஜெயலலிதாவை மீண்டும் அரியணை ஏற்றியது.   

அப்போது ஒரு சட்டச் சிக்கல் ஏற்பட்டது. பல கிரிமினல் வழக்குகளில் சிக்கி வழக்குகளை எதிர்கொண்டுள்ள ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்க முடியுமாஎன்ர சட்டச் சிக்கல் ஏற்பட்டது. நாடெங்கும் விவாதம். அப்போது தமிழ் நாட்டின் கவர்னராக இருந்தவர் கேரளா நாட்டின் முஸ்லிம் பெண்மணியான பாத்திமா பீவியாவார். சுப்ரீம் கோர்டில் நீதிதேவதையாக இருந்து கரை படாத கரங்களுக்கு சொந்தமான சட்டம் படித்த சம்பிரதாயங்களைத் தாண்டாதவர் என்று பெயர் பெற்றவர். வழக்குகளில் சிக்கி தண்டனைக்குக் காத்து இருக்கும் ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணத்தை பாத்திமாபீவி செய்து வைக்க மாட்டார் என்று  நாடு எதிர்பார்த்தது, கலைஞரும் கொக்கரித்தார். ஆனால் அனைவரின் கண்ணிலும் மண்ணைத்தூவி விட்டார் பாத்திமாபீவி.  பாக்தாத் திருடன் என்கிற  திரைப் படத்தில் எம்ஜியாருக்கு ஒரு பெயர் சூட்டப் பட்டு இருக்கும். அந்தப் பெயர் தாங்கிய இடத்தில் தூவப் பட்ட விபூதியால் செய்வது அறியாது தவித்த பாத்திமா பீவி வாடிய முகத்தோடு காரில் வந்து இறங்கிய ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அலறினார் முத்தமிழ் வித்தகர். ஆனால் அந்த அலறல் யார் காதிலும் விழவில்லை. 

ஆட்சியில் அமர்ந்த  ஜெயலலிதா ஆர்வம் காட்டி கவனித்து அரங்கேற்றிய அரசியல் நாடகத்தின் பெயர்தான் “பழி வாங்கும் படலம்". நள்ளிரவில் காவல்துறையை ஏவிவிட்டு கலைஞரைக் கைது செய்ய வைத்தார். அதற்காக மேம்பாலம் கட்டுவதில் ஊழல்  என்ற ஓரங்க நாடகத்தை சித்தரித்தார். கைது செய்யப் படும்போது கருணாநிதி கதறிய கதறல் இன்னும் பலர் காதுகளில் ஒலிக்கின்றது. அதே தினம் மத்திய அமைச்சர்களான முரசொலி மாறன், டி.ஆர்.பாலு மற்றும் ஸ்டாலின் வரை கைது எனத் தொடர்ந்தது இந்த படலம். மத்திய அரசு தலையிட வேண்டியதாயிற்று. இந்த ஐந்தாண்டுகளின் ஆட்சியில் நாட்டு நலனை கவனிக்காமல் திமுகவினரை பழிவாங்கும் போக்குடன் பல முறை ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் வண்ணம் நடந்துகொண்ட ஜெயலலிதா, சர்ச்சைக்குரிய மதமாற்ற தடை சட்டம் போன்றவற்றையும் நிறைவேற்றினார். அத்துடன் எம்ஜியாருடைய பெயரையும் சிறுகச் சிறுக இருட்டடிப்புச் செய்தார். இதனால் மீண்டும் மக்களின் சாபத்துக்கு ஆளான ஜெயலலிதா அடுத்த தேர்தலில் மீண்டும் தோற்கடிக்கப் பட்டார். விளைவு.... / மீண்டும் கருணாநிதி ஐந்தாவது முறையாக முதல்வரானார். 

ஆட்சி பீடம் ஏறியதும் கருணாநிதி திரும்பவும் தனது கதை வசனத்தில் பழிவாங்கும் படலத்தை அரங்கேற்றுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இம்முறை கருணாநிதி வேறு வழியாக சிந்தித்தார். ஒரு வேளை இதுவே தனது இறுதிப் பதவிக்காலமாக இருக்கக் கூடும் என எண்ணினாரோ என்னவோ ஊழல் வெள்ளத்துக்குக் கதவுகளைத் திறந்துவிட்டார். ஆத்திலே போகிற தண்ணீரை அம்மா குடி அப்பா குடி என்று கட்சிக்காரர்கள் அள்ளி அள்ளிக் குடித்தார்கள். அரண்மனை போல வீடுகள், ஆடம்பரக் கார்கள், கல்வி நிலையங்கள், நில பேரங்கள், நில அபகரிப்புகள்  என கண்டபடி செல்வம் குவிய ஆரம்பித்தது. குறிப்பாக தனது குடும்பத்தைச் சார்ந்தோர் பலதுறைகளிலும் அரசியல் பதவி பெறவும், ரியல் எஸ்டேட் மற்றும் திரைப்படம் போன்ற பணம் கொழிக்கும் வணிகங்களில் ஈடுபடவும் வழி செய்து கொடுத்தார். கட்சிக்காக தியாகம் செய்தவர்கள் கண்டு கொள்ளப்படவில்லை. குடும்பத்தினர் தவறு செய்தால் அதை நியாயப் படுத்திப் பேச ஒரு கூட்டத்தையே வைத்து இருந்தார். இவை மக்களை சலிப்படையச் செய்தன.

இலவச அரிசி முதலிய பல நல்ல திட்டங்களால் மக்களைக் கவர முடியாமல் கருணாநிதி நடத்திய குடும்ப அரசியல் மத்திய மாநில அரசுத்துறைகளில் வரலாறு காணாத ஊழல் என்கிற குற்றச்சாட்டுகளை கருணாநிதியின் அரசியல் வாழ்வுக்குப் பின் அடுக்கிக் கொண்டே போனது. இந்த நிலையில் மீண்டும்  தேர்தல் வந்தது. கருணாநிதியின் சாதனைகளுக்கு மீறிய குடும்ப அரசியல் மீண்டும்  ஜெயலலிதாவை மூன்றாவது முறையாக இன்றைய முதல்வராக்கியது. காயிதே மில்லத், கருத்திருமன் போன்றவர்கள் இருந்த எதிர்க் கட்சித் தலைவர் பதவியை எம்ஜியார் மற்றும் ஜெயலலிதாவின் பிறப்பிடமான அதே கோடம்பாக்கத்தில் இருந்து வந்த விஜயகாந்த் ஏற்றுக் கொண்டார்.  

தமிழகத்தின் தலைவிதி  கருணாநிதியை விட்டால் ஜெயலலிதா, ஜெயலலிதாவை விட்டால்  கருணாநிதி என்று பதவி நாற்காலி சுழன்று கொண்டே வந்தது. ஆனால் தனது ஆட்சியின் தவறுகளில் இருந்து -மக்கள் பாடம் போதித்தாலும்- இவர்கள் பாடம் படி த்துக் கொள்ளவில்லை என்பதே வேதனையான உண்மை. 

இன்று சட்டமன்றம் நடைபெறுகிறது. உணமையான எதிர்க் கட்சியான திமுக ஒன்று வெளியேறுகிறது அல்லது வெளியேற்றப் படுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட மன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் நாற்காலிகளின் எதிரில் உள்ள மேசைகள்தான் ஒலி எழுப்புகின்றனவே தவிர உறுப்பினர்கள் பேச்சு மூச்சு இன்றி இருக்கிறார்கள் . அப்படியே பேசினாலும் அம்பிகையே ! ஈஸ்வரியே! எமை ஆளவந்த தேவதையே ! என்று புகழ் பாடுவதிலேயே பொழுது போய் விடுகிறது. இதைப் புன்னகையுடன் ஜெயலலிதாவும் ரசிப்பதால் தனிநபர் புகழ்ச்சி சட்டமன்றத்தில் பட்டொளி வீசிப் பறக்கிறது. 

இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். எம்ஜியாரோடு கதாநாயகியாக நடித்த அஞ்சலிதேவி, பானுமதி, பத்மினி, சரோஜாதேவி, லதா ஆகிய அனைவரும் ஒரு அளவுக்குப் பின்னர் திருமணம் முடித்துக் கொண்டு குடும்ப வாழ்வில் ஈடுபட்டு குடும்பத்தலைவிகளாக ஆகிவிட்டனர் .  ஆனால் வெண்ணிற ஆடை என்கிற திரைப் படத்தில் அறிமுகமான ஜெயலலிதாவுக்கு குடும்ப வாழ்வு கொடுத்து வைக்காத ஒன்றாகிவிட்டது. மனம் போன போக்கில் அவர் வாழ்ந்ததால் ஒரு நல்ல மனைவியாக, தாயாக, தரணியில் ஒரு குடும்பத் தலைவியாக மன அமைதியுடன் வாழவேண்டிய வாழ்க்கை அவரது கையை விட்டுப் போய்விட்டது. இதனால் விவேகானந்தர் போன்ற துறவிகளுடன் தன்னை தானே ஒப்பிட்டுப் பேசவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டு விட்டது. 

ஆனாலும்  அரசியலில் அவர் நுழைந்த காரணத்தால் அதற்குரிய நெளிவு சுளிவுகள் இன்று அவருக்கு அத்துப் படியாகிவிட்டன. அதற்காக  சில அரசியல் ஆலோசகர்களை தன்னுடன் வைத்திருக்கிறார். அவர்கள் இவருக்கு நல்லதைத் தவிர கெட்டதையே போதிக்கின்றனர்.   திரைப்படத்தில் வென்னிற ஆடையுடன் தொடங்கிய ஜெயலலிதா, அரசியலில் நுழையும் போதும்  அவர் எம்ஜியாரின் சவப் பெட்டியின் தலைமாட்டில் அவர் வெண்ணிற ஆடையே அணிந்து சோகமாக அமர்ந்து இருந்தே தொடங்கினார்.

தனி மனிதப் புகழ்ச்சிக்கு மயங்காமல், தன்னைச்சுற்றி இருக்கும் கூட்டத்தை கட்டுப் படுத்தி, பழிவாங்கும் படல நிகழ்வுகளை நிறுத்தி ஆள முற்படுவரானால் உண்மையிலேயே ஒரு சரித்திர நாயகியாக வரக்கூடிய வாய்ப்பு குடும்பம் குழந்தைகளற்ற  ஜெயலலிதாவுக்கு உண்டு. இன்னும் சொல்லப் போனால்   இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆக வரக்கூடியவராக இருக்கலாம் என்கிற பட்டியலில் இடம் பெறும் அளவுக்கு   தன்னை அரசியலில் நிலை நிறுத்தி வைத்திருக்கிற  ஜெயலலிதாவைப் பாராட்டவே வேண்டும். அதேநேரம் பழி வாங்கும் ஆயுதத்தை கைகளில் எடுத்து முந்தைய அரசின் நல்ல திட்டங்களை எல்லாம் முடக்கிப் போடுவது இவரது வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தவே செய்யும். 

உதாரணமாக ஆசியாவிலேயே பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை மூடிப் போட்டு வைத்து இருப்பது, பலகோடி ரூபாய் செலவழித்துக் கட்டப் பட்ட நவீன தலைமைச் செயலகத்தை வாழா வெட்டியாக்கி வைத்திருப்பது, எதிர்க் கட்சித் தலைவர்கள் மேலெல்லாம் அவதூறு வழக்குகளை ஏவிவிட்டு ஊருக்கு ஊர்  அலைக்கழிப்பது, வயது முதிர்ந்த முதியவர்கள் என்றும் பாராமல் குற்றம் சாட்டப் பட்டவர்களை நள்ளிரவில் சிறைவிட்டு சிறைக்கு மாற்றுவது போன்ற செயல்களை நிறுத்திக் கொண்டால் அது ஜெயலலிதாவின் பதவிக்கு கண்ணியம் சேர்க்கும். எதிர்க் கட்சித்தலைவர் விஜயகாந்த் மீது 34 ஊர்களின் நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு. அதே நேரம் எதிர்க் கட்சியில் இருந்து தனது கட்சிக்கு கட்சி மாறி வந்த நாஞ்சில் சம்பத் , பரிதி இளம் வழுதி ஆகியோர்  மீது போடப்பட்டு இருந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்ளும் போக்கு உண்மையான ஜனநாயகத்தை விரும்புவோர்க்கு இவர் மீது வெறுப்பை ஏற்படுத்தும் செயலாகும். 

இன்னும் பெங்களூர் நீதிமன்றத்தின் வழக்கின் தீர்ப்பை நாடே எதிர் நோக்கி இருக்கிறது. இது என்னவாகுமென்பது சசிக்கே வெளிச்சம். இந்தத் தீர்ப்பு தமிழக அரசியலை இன்னும் ஒரு புரட்டுப் புரட்டலாம்.  பார்க்கலாம்!  தருமபுரி போல் பேருந்துகள் எரிக்கப் படப்  போகின்றனவா  அல்லது அகர்வால் பவன் மற்றும் ஆனந்த பவனின் ஸ்வீட் பாக்கெட்டுகள் காலியாகப் போகின்றனவா என்பதை. 

இன்னும் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ். 

ஆக்கம்: P. முத்துப் பேட்டை  பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.

அதிரைச் சகோதரர் ஐ.ஏ.எஸ். ஆகிறார் (இன்ஷா அல்லாஹ்) 17

அதிரைநிருபர் பதிப்பகம் | September 25, 2013 | , , , , ,

அதிரை மக்களின் உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு என்ற நீண்டதொரு திட்டத்தை மையமாக கொண்டு அதிரைநிருபர் வலைத்தளம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தியது அடுத்தடுத்த வருடங்களில் சகோதர அமைப்புகள் அதனை முன்னெடுத்துச் சென்றனர்.

நமது கனவு நனவாகும் தருணம் கைகூடி இருக்கிறது இந்தச் சிறப்பினை தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (அல்ஹம்துலில்லாஹ்) !

சென்னை மவுன்ட்ரோட்டில் அமைந்திருக்கும் மக்கா மஸ்ஜித் நிர்வாகத்தால் நடத்தப்படும் அழகிய கடன் அறக்கட்டளை எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நமது சமுதாய மக்களுக்கென்று அரசு உயர் பதவிகளுக்கான பயிற்சியை 2012ம் வருடம் முதலே அளித்து வருவதை நாம் நன்கறிவோம்.

சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கும் பொறியியல் பட்டதாரியான அதிரை சகோதரர் J.முஹம்மது மீராஷாஹிப் (தகப்பனார் பெயர் : M.ஜமால் முஹம்மது) அழகிய கடன் ஐ.ஏ.எஸ் அகடமியில் பயிற்சி பெற்ற இவர் UPSC மற்றும் TNPSC Group-1 தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இருக்கிறார். அடுத்த வருடம் 2014 நமதூர் சகோதரர் I.A.S.ஆக இருக்கிறார் இன்ஷா அல்லாஹ் !

The Hindu ஆங்கில நாளிதழ் செய்தி : http://www.thehindu.com/todays-paper/mosque-helps-students-crack-ias-exam/article5143672.ece

NDTV ஆங்கில செய்தி தொலைகாட்சி காணொளி : http://www.ndtv.com/video/player/news/a-mosque-in-chennai-which-helps-muslim-men-fulfill-the-ias-dream/291261

வாழ்த்தி வரவேற்போம் ! மேலும் வெற்றிகள் தொடரவும், நம் சமுதாய நலனுக்கு எல்லா வகையிலும் பயனளிக்கும் சேவைகள் செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக !

அதிரைநிருபர் பதிப்பகம்
பரிந்துரை : குதுபுதீன் அஹ்மது ஜலீல் (குதுப்)

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் – தொடர் – 12 9

அதிரைநிருபர் பதிப்பகம் | September 25, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

நபி(ஸல்) அவர்கள், அன்று மக்கா குரைஷிகளால் வெறுக்கப்பட்டவராக இருந்த பிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பிறகு அவர்களோடு எவ்வாறு நடந்து கொண்டார்கள், அவர்களுக்கு எவ்வகையான கண்ணியம் கொடுத்தார்கள் என்பதைப் பார்த்தோம் படிப்பினையையும் அறிந்து கொண்டோம்.

பிலால்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எந்த அளவுக்கு மதிப்பு கொடுத்தார்களோ அதே அளவு கண்ணியத்தை கலீஃபாக்களான அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), இருவரும் கொடுத்தார்கள் என்பதை ஹதீஸ் ஏடுகளில் பார்க்கும் போது உண்மையில் நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்ற சத்திய சஹாபாக்கள் நபி வழியை கூட்டவும் குறைக்கவும் இல்லை என்பது மிகத் தெளிவாக அறிய முடிகிறது.

பிலால்(ரலி) அவர்கள் உபைத் இப்னு கலப் என்பவரிடம் அடிமையாக இருந்து எண்ணிலடங்காத் துயரங்களுடன், கஷ்டப்படுவதை கண்ட நபி(ஸல்) அவர்கள் மனம் பொறுக்காமல், பிலால்(ரலி) அவர்களை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று, அன்று செல்வந்தராக இருந்த அபூபக்கர்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். இதற்கு தான் பொறுப்பேற்று, பிலால்(ரலி) அவர்களை விடுவிக்க உபைத் இப்னு கலபிடம் சென்றார்கள்.

உபைத் இப்னு கலப் அபூபக்கர்(ரலி) அவர்களிடம் கேட்கிறான், “பிலால்(ரலி) உங்கள் சகோதரர் தானே அவரை பணம் கொடுத்து வாங்குங்களேன்” என்று கூறினான். 

“எங்களுடைய பிலாலுக்கு (ரலி) எவ்வளவு பணம் வேண்டும்?” என்று கேட்டார்கள் அபூபக்கர்(ரலி). 

உபைத் இப்னு கலப் சொன்னான் “நான்கு ஊக்கியா” (உதாரணமாக 40,000 ரூபாய்). 

அவன் கேட்ட பணத்தை கொடுத்து பிலால்(ரலி) அவர்களை வாங்கி அடிமைத் தனத்திலிருந்து மீட்டெடுத்தார்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள். அப்போது உபைத் இப்னு கலப் சொன்னான் “இவரை ஒரு ஊக்கியாவுக்கு கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன்.” என்று கிண்டலாக அபூபக்கர்(ரலி) அவர்களைப் பார்த்து சொன்னான். 

பின்னர் அபூபக்கர்(ரலி) அவர்கள் சொன்னார்கள் “எங்கள் பிலால்(ரலி) அவர்களுக்கு நீ நூறு ஊக்கிய கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன் என்று சொன்னவுடன் உபைப் இப்னு கலப் வாயடைத்துப் போனான். உபைப் இப்னு கலபினால் ஒன்றுக்கு பெருமதியில்லாதவர் என்று சொல்லப்பட்ட பிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக 100 மடங்கு பெருமதியானவர் என்று சொல்லி அவரை விலைக்கு வாங்கி அடிமைத் தனத்திலிருந்து விடுவித்தார்களே அந்த சித்தீக் நம்முடைய முதல் கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்கள் உண்மையில் சரித்திரத்தில் நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு இடம் பெறும் மாபெரும் ஆட்சியாளார் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

இது போல் நபி(ஸல்) அவர்கள் மரணித்த பின்பு, கவலையின் சோகத்தால் “முஹம்மதுர் ரஸூல்லுல்லாஹ்” என்ற வார்த்தையை சொல்லும் தைரியத்தையே இழந்த பிலால்(ரலி) அவர்களை ஆறுதல்படுத்தி அபூபக்கர்(ரலி) அவர்கள் மீண்டும் மதீனாவில் நீங்கள் தான் பாங்கு சொல்ல வேண்டும் என்று வேண்டினார்கள். 

பிலால்(ரலி) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களைப் பார்த்து “நீங்கள் என்னை அடிமைத் தனத்திலிருந்து விடுவித்தது உங்களுக்காகவா? அல்லாஹ்வுக்காகவா?” 

அபூபக்கர்(ரலி) அவர்கள் சொன்னார்கள் “நிச்சயம் அல்லாஹ்வுக்காக”. 

“அப்படியானால் என்னை விட்டுவிடுங்கள்” என்று பிலால்(ரலி) கூறினார்கள்..

‘நாம் நபி(ஸல்) அவர்களின் தோழர்கள், உங்கள் மேல் உள்ள நட்பின் அடிப்படையிலும், நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும்போது நீங்களல்லவா ஃபஜரிலும், லுஹரிலும், அஸரிலும், மஃக்ரிபிலும், இஷாவிலும் பாங்கு சொன்னீர்கள். அல்லாஹ்வுக்காக நீங்கள் மீண்டும் பாங்கு சொல்ல வேண்டும் என்று அன்போடும் மரியாதையோடும் கோரிக்கையை வைத்து’ பிலால்(ரலி) அவர்களை மீண்டும் பாங்கு சொல்ல வைத்தார்கள் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு அடுத்ததொரு அற்புதமான, கம்பீரமான ஆட்சியை செய்த உமர்(ரலி) அவர்கள். நீதி செலுத்துவதில் அற்புதமான மாமனிதராக வாழ்ந்துள்ளார்கள் உமர் (ரலி) அவர்கள். இஸ்லாமிய ஆட்சியின் ஆளுமை வளர்ந்து ஒரு மிகப்பெரும் வல்லரசாக மாறியிருந்த சமையத்திலும், அமீருள் முஃமினீன் உமர்(ரலி) அவர்கள் தனது இருக்கைக்கு அருகில் இரு இடங்கள் வைத்திருப்பார்களாம், அவைகளில் பிலால்(ரலி) அவர்கள் அமருவதற்கும், உஸாமா(ரலி) அவர்கள் அமர்வதற்கும் வைத்திருப்பார்களாம். 

ஒரு முறை பிலால்(ரலி) அவர்களுக்கு பிறகு இஸ்லாத்தை தழுவிய செல்வந்தர் அபூ-சுஃப்யான்(ரலி) போன்ற சஹாபிகள் உமர்(ரலி) அவர்களை சந்திக்க அனுமதி கோரி காத்திருந்தார்கள். அப்போது யாருடைய அனுமதியுமில்லாமல் இரு தோழர்கள் கப்பாப்(ரலி) அவர்களும் பிலால்(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களின் மாளிகைக்கு சென்று உமர்(ரலி) அவர்கள் அருகில் அமர்ந்தார்கள். பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஒரு சில சஹாப்பாக்களுக்கு இதனை கண்டதும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இதனை அறிந்து கொண்ட உமர் (ரலி) அவர்கள்ட அந்த சஹாபிகளைப் பார்த்து கூறினார்கள். “தோழர்களே! நபி(ஸல்) அவர்கள் நம் எல்லோருக்கும் தான் இஸ்லாத்தை சொன்னார்கள். ஆனால் இந்த பிலால்(ரலி) அவர்களும், கப்பாப்(ரலி) அவர்களும் நம்மைவிட முதலில் இஸ்லாத்தை தழுவியவர்கள். இந்த பிலால் யார் தெரியுமா? என்னுடைய தலைவர் அபூபக்கர்(ரலி) அவர்கள் உரிமை விட்ட இன்னொரு தலைவர் பிலால்(ரலி) அவர்கள் தலைவரால் உரிமைவிட்ட தலைவர்” என்று சொல்லி கண்ணியப்படுத்தினார்கள்.

உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்திலும் நபி(ஸல்)  அவர்களின் பிரிவின் தாக்கத்தால், மதீனாவில் இருக்க முடியவில்லை என்று சொல்லி பிலால்(ரலி) அவர்கள் சிரியா நாட்டிற்கு குடிபெயர்ந்தார்கள். உமர்(ரலி) அவர்கள் ஆட்சியில் இஸ்லாம் வளர்ந்து பல நாடுகளை வெற்றி கொண்டதோடு பைத்துல் முகத்திஸும் வெற்றி கொள்ளப்பட்டது. இந்த சந்தர்பத்தில், இஸ்லாத்திற்காக அடிவாங்கி, மிதி வாங்கி, ஓடி ஓடி உழைத்த அந்த பிலால்(ரலி) தான் அமீருள் முஃமினீன் உமர்(ரலி) அவர்களுக்கு நினைவில் இருந்தது, பிலால்(ரலி) அவர்கள் சிரியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு “நீங்கள் தான் இங்கு பைத்துல் முகத்திஸில் பாங்கு சொல்ல வேண்டும்” என்று கூறினார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு பிலால்(ரலி) அவர்களின் பாங்கோசையை கேட்க ஆவளோடு தோழர்கள் அங்கு கூடியிருக்க. பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். ‘அஸ்ஹது அன்ன முஹம்மதர் ரசூல்லுல்லாஹ்’ என்ற வார்த்தை சொன்னவுடன் பிலால்(ரலி) அவர்களும் அழ ஆரம்பித்து விட்டார்கள், அதனைக் கண்ட உமர்(ரலி) அவர்களும், அங்கு கூடியிருந்த ஸஹாபாக்களும் அழுது விட்டார்கள் என்ற இந்த உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்களை ஹதீஸ் தொகுப்புகளிலிருந்து வாசிக்கும் போது நிச்சயம் நம் கண்களிலும் கண்ணீர் வந்தே தீரும். சுப்ஹானல்லாஹ்.

ஹிஜ்ரி 20வது வருடத்தில் தன்னுடைய 70வது வயதில் இந்த உலகை விட்டு பிரிந்தார்கள் பிலால்(ரலி) அவர்கள்.

அன்பானவர்களே, பிலால்(ரலி) அவர்களோடு நம் கலீஃபாக்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

அபூபக்கர்(ரலி) அவர்கள் செல்வந்தராக இருந்தும், தன்னால் உரிமையிடப்பட்ட பிலால்(ரலி) அவர்கள், இஸ்லாத்தை ஏற்றார் என்ற காரணத்திற்காகவும் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருந்தார்கள்  என்ற சிறப்பிற்காகவும் கண்ணியப் படுத்தினார்களே, இது போன்ற அபூக்கராக(ரலி) எத்தனை பேர் நம்மிடையே உள்ளோம்?

உமர்(ரலி) அவர்கள் வீரமிக்கவர்களாக அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாமல் இருந்தை அனைத்துலகும் நன்கறியும். பிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார் என்ற காரணத்திற்காகவும் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருந்தார்கள் என்ற சிறப்பிற்காகவும் கண்ணியப்படுத்தினார்களே, இது போன்ற உமராக (ரலி) எத்தனை பேர் நம்மிடையே உள்ளோம்?

எத்தனை பேர் பிலால்(ரலி) என்ற தியாகியின் தியாகங்களில் எத்தனை துளிகளை நமது பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறியிருக்கிறோம், அதேபோல் நம் உள்ளம் பன்பட எண்ணியிருப்போம் சிந்திக்க வேண்டும்.

பிலால்(ரலி) அவர்களின் வாழ்விலிருந்து நாம் நிறைய படிப்பினை பெற வேண்டும். 

எந்த நிலையிலும் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத பிலால்(ரலி) போல் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.
தொடரும்...
M தாஜுதீன்

இன்று இரு தகவல்கள் - தொகுத்தளிப்பது யாசிர் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | September 24, 2013 | , , , ,

நீ...ண்ட நாட்களுக்குப் பிறகு கீபோ(ர்)டை ஆக்கத்திற்காகத் தட்டுவது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த இடைவெளிக்குள் எத்தனையெத்தனைச் சிறந்த எழுத்தாளர்கள் அதிரைநிருபரை அலங்கரித்துத் தங்கள் திறமைகளையும் நம் சமுதாயப் பெருமைகளையும் பரப்பிக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இப்ப விசயத்திற்கு வருவோம்..

பம்முக்காலே (Pamukkale )

என்னடா இப்ப வந்ததும் வராததுமா வித்தியாசமா ஆரம்பிக்கின்றானே, ‘மூக்காலே சிந்துரதுதானே நமக்கு தெரியும். இப்படி பம்முக்காலே என்றால் பல மூக்காலே ஒன்றாக ஒரே சமயத்தில் சிந்துவதா என்று ஒரு கணம் சிந்திப்பவர்களுக்கு..

அல்லாஹ்வின் படைப்பையும் அதன் பயன்களையும் அறிந்து கொள்ள முற்பட்டால் நம் ஆயுள் முழுவதும் செலவழித்தாலும் போதாது.

அப்படித்தாங்க “பம்முக்காலே” அல்லது “பருத்திக்கோட்டை” எனப்படும் ஓர் இடம் துருக்கியில உண்டுங்க, சிறப்பு என்னவென்று கேட்கின்றீர்களா, சொல்றேன் இருங்க… ’சாவன்னா காக்கா கேமராவை நல்ல கழுவி எடுத்து வைத்து கொண்டு கிளம்பிடாதீங்க (இடம் அப்படி) நம்மூர்ல தண்ணி ஓடிக்கிட்டே இருந்தா அந்த இடம் வெத்திலைப் பாக்கு கறைபோல ஒட்டுமாவு சாப்பிட்ட பற்களைப் போல பளிச்சென்று இருப்பதுபோல (பாவம் எவ்வளவு நாளைக்குதான் சிகரெட் குடிச்ச கறைண்டு சொல்றது), இங்கே ஒடுற தண்ணி அதில உள்ள கார்பனேட் தாதுக்களை ஒதுக்கிவிட்டு ஒடுதுங்க. அதனாலே அது ஒதுங்கி ஒதுங்கி சேகரமாகி மலைபோல் குவிந்து பருத்திப் பஞ்சுகளை பரத்தியது போல் அழகா காட்சி தருது இந்த இடம். யாரு இந்த கார்பனேட்-ப்பா (CO2/3) என்று அதட்டி கேட்பவர்களுக்கு மகபூப் அலி சார் அவர்களின் முகவரியை தந்து விடுகின்றேன், அவுக தான் எங்களுக்கு இதையெல்லாம் கிளாஸுல சொல்லி தந்தாங்க) படத்தைப்பார்த்து விட்டு ஐஸ்கட்டியை காட்டிட்டு கதையை என்னமா மாத்தி சொல்ராருப்பா என்று சிலர் நினைக்கலாம். கூகுள் மாமா ஆயுசு இருக்கும் வரைக்கும் நாம எதையும் தப்பா சொல்ல முடியாது.

துருக்கி -மண்டுராஸ் ஆற்றின் பள்ளத்தாக்கில் தன் அழகாலும் மருத்துவ குணம் கொண்ட தண்ணீராலும் போட்டுத் தாக்கிக் கொண்டு இருக்கின்றது இந்த பம்முக்காலே


பஞ்சுபோதிபோல் இருக்கா இல்லை பஞ்சரான டையர்போல இருக்கா ?

என்ன மருத்துவ குணம்பா ?  இரண்டு மொடக்கு எடுத்து குடித்தா இருமல் போயிடுமா என்று அப்பாவியாக கேட்பவர்களுக்கு… ஸ்பா(SPA) தெரியுமா கொழுப்பு உள்ள கோழியை சுடுதண்ணில போட்டு எடுத்தா கொழுப்பு குறைந்து சமைப்பதற்கு ஏதுவாக இருக்குமுல அந்த மாதிரிதான் இந்த ஸ்பா ஆவி பறக்கும் அதே சமயம் உடல் தாங்க கூடிய அளவிற்கு சூடு இருக்கும் இந்த தண்ணில நாம் குளித்தால் உடம்பில் உள்ள கொழுப்பு கரைந்து (நம்மூருக்கு நிறைய தேவைப்படும், ஆனால் மனக்கொழுப்பை கரைக்க முடியாது) உடல் ஆரோக்கியம் அடையும் அந்த ஸ்பா-வை இயற்கையாக மிதமான சூட்டுடனும் அதில் குளிப்பவர்களுக்கு சுகத்தையும் அள்ளி வழங்குகின்றது இந்த பம்முக்காலே.

பனிக்கட்டியல்ல ..சத்தியமா சொல்றேன் உப்புதானுங்க

நிலப்பரப்பிற்கு கீழே ஓடிக் கொண்டிருக்கும்  எரிமலை செயல்கள் தான் இப்ப நிலவும் அதீத வெப்பநிலைக்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்..என்னங்க கிளம்பலாமா ? ஆமா நம்மூர் பக்கதுல இருக்கின்ற சுண்ணாம்புகாளேக்கே நாம மெல்ல போக நேரம் இல்ல உம்மாட்ட சொன்னா தண்ணிய அடுப்புல வச்சு சூடு பண்ணி தர்ராங்க இது என்னங்க பிஸ்கோத்து என்று சிலர் முணுமுணுப்பதும் சரிதானுங்க


ஐ!!! நிறைய சால்ட் வீட்டுக்கு அள்ளிகிட்டு போவோமா ?

கூடுதல் தகவல் கிளியோப்பட்ரா குளிப்பதற்க்கு தன் வீரர்களை இங்கு அனுப்பி தண்ணி எடுத்துவரச்செய்து குளிப்பாளாம்,யாரு பார்த்ததுண்டு கேட்காதீங்க அந்த பீப்பீங் சாம் வேலையெல்லாம் நம்மளுக்கு தெரியாதுங்க

பிலோப் மீன் (Blobfish)

என்ன இது கொடுவா / காளை / பண்ணா என்று பறந்து பறந்து அவியலும் ஆனமும் உண்ட நமக்கு இது கிடைக்காம  தப்பிடுச்சே என்று நினைப்பவர்களுக்கு இது சாப்பிடக்கூடிய மீன் கிடையாது. ஒரு கிலோமீட்டருக்கு மேற்பட்ட ஆழ்க்கடலில் 30செ.மி சைஸூக்கு வளரும்/வாழும் ஒரு ஆபூர்வ மீன் இனம்,ஆஸ்திரேலியா கடற்பகுதிகளதான் இதன் வாழ்விடம்


உண்மையை சொல்லுங்க நம் சின்ன வயசில பார்த்த யாரோ ஒரு தெரு அப்பாவின் ஞாபகம் வரலயாண்டு

கொழுகொழுவென்று சதைப்பிடிப்புடன் காணப்படும் இந்த மீன் ரப்பர்போல கடலின் மேற்மட்டதிற்கு வந்து பலூன் மிதப்பதுபோல் மிதக்கும்..சரியான சோம்பேறி நீச்சல் அடிச்சா உடம்பு குறைந்து விடும் என்று மிதந்து மிதந்தே வரதட்சணை வாங்கிய அதிராம்பட்டினம் மாப்பிள்ளை போல் தன் வாழ்வை ஒரே இடத்தில் இருந்து கழித்து கொண்டு இருக்கின்றது இந்த மீன்.

நன்றி : வைக்கீப்பிடியா
என் கம்பெனி (இதுக்கெல்லாம் சம்பளம் கொடுக்குறாங்களே)
Mohamed Yasir

பாலியலுக்கு பலியாகாதே - 5 தொடர்கிறது.... 11

அதிரைநிருபர் பதிப்பகம் | September 23, 2013 | , ,

உறுதியோடு போராடுங்கள்...!

நாட்டில் பாலியல் வன்முறைக் கெதிராக எத்தனை வீரியமிக்க போராட்டங்களை கையிலெடுத்தாலும் அந்த போரட்டத்திற்கு மத்தியிலேயே பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளவதை யாராலும் தடுத்துவிட முடிவில்லை. காரணம் நாடக மேடைகளில் சுழற்றப் படுகிறது நீண்ட பெரிய வாள்களைப் போலவே போலியாக இருக்கின்ற நம் நாட்டின் சட்டங்கள். மேடையில் அந்த வாள் எவ்வளவு வேகமாகச் சுழற்றப்பட்டாலும் எதிராளியை எத்தனை முறை தாக்கினாலும் பார்க்கும் நமக்கு மட்டுமே தாக்கப்படுவதாக தோன்றும். ஆனால் உண்மையில் அவர்கள் தாக்கப்படுவதில்லை என்ற நிலையில் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது என்பது அத்துனை இலகுவான காரியமில்லை.

மது மயக்கத்தில், காம வெறியில் வீதிகளில் திரியும் வெறி நாய்களுக்கு குழந்தைகள், சிறுமியர், பெண்கள், வயோதிகர்கள் என்ற வேற்றுமைகளும் புரிவதில்லை.

இன்னிலையில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருப்பதால் அதற்கான சில வழிமுறைகளை இதற்கு முந்திய பதிவுகளில் பார்த்தோம். மேலும் அவ்வழிமுறைகளைப் பேணி என்னதான் தீய பார்வைகளிலிருந்தும் அதனால் ஏற்படுகிற பாலியல் தாக்குதல்களிலிருந்தும் நம்மை நாம் பெரும் பகுதி பாதுகாத்துக் கொன்டாலும், விஷமிகளால் வேண்டு மென்றே திட்டமிட்டு நடத்தப்படுகிற பாலியல் வன்முறைகளிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள சில-தற்காப்பு நடவடிக்கைகளையும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.

வீட்டிற்குள் புகுந்து அன்டை வீட்டினரால் ஒரு இளம் பெண் வன்புணரப்பட்ட செய்தியை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. தங்களுடைய வீடுகளில் இருந்தாலும் நம் நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு கேள்விக் குறிதான் என்ற மோசமான முன்னுதாரனமாக இச்சம்பவம் இருப்பதோடு பெண்கள் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்கிற எச்சரிக்கையும் இதில் மறைந்திருக்கிறது.

பாலியல் வன்முறைகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள பெண்கள் சிறிய கத்தியை தன்னுடன் வைத்திருப்பது சந்தர்ப்பத்தில் கை கொடுக்கும் என்ற ஆலோசனை பலராலும் சொல்லப்படும் நிலையில் சமீபத்தில் ஒரு ஹிந்தி திரைப்பட நடிகையும் பெண்கள் தங்களின் பாதுகாப்பிற்காக கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அழுத்தமகச் சொன்னதாக செய்தியிலே பார்க்க முடிந்தது.

பெண்களுக்கு தற்காப்பு ஏற்பாடுகள் அவசியம். அதே சமயம் கத்தி போன்ற ஆயுதங்கள் அப்பெண்களுக்கே ஆபத்தாக அமைந்து விடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. மேலும் கத்தி போன்ற ஆயுதங்களைக் கையாள்வதற்கு போதிய பயிற்சிகள் அவசியம். எனவே பெண்கள் ஆண்களின் பலகீனங்ளை அறிந்து கொன்டால் அதன் காரனமாக பாலியல் தொல்லைகள் ஏற்படும்போது இலகுவாக அவர்களைத் தாக்கி அந்தச் சூழலிருந்து இறவன் உதவியால் தங்களை பாதுகாத்து கொள்ள இயலும். மேலும் சில சமயோசித நடவடிக்கைகளும் சந்தர்ப்பத்தில் கை கொடுக்கும்.

பல சந்தர்ப்பங்களில் ஆண்களின் சூழ்சிகளில் தங்களையறியாது பெண்கள் சிக்கிக் கொள்கிறார்கள். சமீபத்திலே தன் மனிவியின் சகோதரியை வாகனத்தில் ஏற்றிச் சென்றவன் ஆள் அரவமற்ற காட்டுப் பகுதிக்குக் கொன் டுபோய் வன்புணர்ந்த செய்தியைப் படிக்க நேர்ந்தது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் பெண்கள் சற்று நிதானமக செயல்பட்டு அவர்களோடு ஒத்துழைப்பது போன்ற பாசாங்கு செய்து சூழ்நிலையை சாதகமாக சுட்டிக்காட்டி வேறொரு ஒரு சந்தர்ப்பம் உருவாகலாம் என்று என்று நம்பவைத்து அந்த சூழலிலிருந்து தப்பிக் கொண்டால் பின் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும் அவைகள் கைகூடாமல் அந்த அயோக்கிய ஆண் பலப்பிரயோகம் செய்தால் அப்போது அவர்களுக்கு காயங்கள் ஏற்படுவிதமாக முடிந்த வரை கையில் சிக்கும் பொருட்களைக் கொண்டு தாக்கி தடுமாற்றத்தை ஏற்படுத்தி விட்டு சில நிமிடங்களைப் பயன்படுத்தி அச்சூழலிலிருந்து தப்பி பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட முயற்சிக்கனும்.

மேலும் ஆண்களின் இச்சையைத் தூண்டு பகுதிகளை தாக்கியும் தப்பித்துக் கொள்ளலாம். ஆண்களுக்கென்று பலகீனமான உறுப்புகள் என்று உடலில் உள்ளது. அதன் மேல் ஒரு சிறு அடிபட்டாலும் சில நிமிடங்கள் அவர்களை நிலை குலையச் செய்துவிடும்.

யாரும் பெண்களை நெருங்காமல் அவர்களை பாலியல் வல்லுறவிற்கு ஆட்படுத்திவிட முடியாது. அவ்வாறு அவர்கள் நெருங்கும்போது சரியான நேரத்தில் தாக்குதல் நடத்தி அப்போது கிடைக்கும் சில வினாடிகளைப் பயன்படுத்தி அதிலிருத்து தப்பிவிட்டால் கூட பிறகு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொள்ள முடியும்.

தங்களின் மானத்தையும் உயிரையும் பாதுகாத்துக்கொள்ள கொலை செய்தாலும் அது கொலையல்ல என்று சட்டம் சாதகமான நிலையில் இருக்கும் போது எதற்கும் அஞ்சாமல் போராடும் குணம் பெண்களுக்கு வேண்டும். ஒரு பெண்ணின் கற்பு சூரையாடப்படுகிறது என்றால் அது அவள் அறியாத நிலையில் நடந்திருக்க வேண்டும். மரணத்திற்கு அஞ்சாமல் பெண்கள் உயிருல்ல வரை, உணர்வுள்ள வரை தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போரட வேண்டும். அதற்காக கோழைத்தனமாக தங்களை தாங்களே மாய்துக் கொள்ளுதல் கூடாது. அக்கிரமக்காரர்களைக் கொன்றேனும் வெற்றி! இல்லையேல் போராடி வீர மரணம்!

இன்ஷா அல்லாஹ் தொடரும் 
அபு நூரா

கண்கள் இரண்டும் - தொடர் - 4 21

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2013 | , , ,


பார்க்கக்கூடாது என்று  தடை விதிக்கப்பட்டவற்றை மீறி காணும் போது பெரும்பாலோரில் சிலர் மாட்டிக் கொள்வதுண்டு. அதுபோன்ற நிகவுழ்வுகளை நீங்களும் பார்த்து இருப்பீர்கள் அப்படிபட்ட சம்பவங்கள் சவூதியில் நடந்தால் தலை போய்விடும். உண்மையிலேயே பிடிபட்டால் தலை வெட்டுதான். 

மேலும், சவூதி அரேபியாவில் தடைவிதிக்கப்பட்ட வீடியோக்கள் பார்ப்பது குற்றம். மற்ற நாடுகளிலும் குற்றமாக இருந்தாலும் சவூதியில் இதற்கு கடும் தண்டனை கொடுப்பார்கள்.    அப்படி தகாத வீடியோக்கள் பார்த்து யாரும் பிடிபட்டால் மயக்க மருந்துகள் ஒன்றும் கொடுக்கப்படாமல் (இங்குள்ள குற்றவியல் சட்டப்படி) அவர்களின் விரல் நகம் கழற்றப்பட்டது, அதே போன்று சவூதியில் பெண்களை உன்னிப்பாக (கூர்ந்து) பார்க்கக் கூடாது பார்த்து பிடிபட்டால் கசையடிகள் கொடுக்கப்பட்டது. 100 கசையடி 200 கசையடி இப்படியாக குற்றத்திற்கேற்ப கசையடிகள் மாறுபடும். 100 கசையடிகள் என்றால் தொடர்ந்து தரமாட்டார்கள்.

அப்படி தொடர்ந்து கசையடி கொடுக்கப்பட்டால் கசையடி வாங்கியவரின் மையத்தைத்தான் பார்க்க முடியும், ஆதலால் கசையடி வாரத்திற்கு 20 வீதம் தவணை முறையில் கொடுக்கப்படும். ஒவ்வொரு கசையடியும் உம்மாவிடம் குடித்த பால்யாவும் வெளியேறி விடும் என்று சொல்லப்படுகின்றது. இந்த தண்டனைகள் யாவும் ஒவ்வொரு ஜும்மா தொழுகைக்கு பின் ஜும்மா பள்ளியின் வளாகத்திலேயே கொடுக்கப்படும். இவைகள் யாவும் பார்வையைப் பாதுகாக்காததால் தானாக வாங்கிக் கொள்ளும் தண்டனைகள்.

பாதுக்க வேண்டிய  பார்வையை   பாதுகாக்கப்படாமல் விதிகள் மீறும்போது அரங்கேறும் நிகழ்வுகள். இப்பொழுது அந்த தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளதா? அல்லது  எடுக்கப்பட்டு விட்டதா? தெரியவில்லை. மேற்சொன்ன காட்சிகள்  15 வருடங்களுக்கு முன்பு அடிக்கடி அரங்கேறும் என்பது பல வருடங்கள் சவூதியிலே வாழ்ந்தவர்கள் மற்றும் ஆரம்ப காலத்தில் சவூதியில் வாழ்ந்த சகோதரர்கள் அத்தனை பேரும் கண்ட அல்லது கேள்விபட்ட காட்சிகள் தான் அவைகள். இப்பொழுது அந்த தண்டனைகள் ஒருவேளை இருந்தாலும் அதிகமாக அவ்வாறு தண்டனைகள் வழங்கும் வழிமுறை காணப்படுவதில்லை.

இந்த உலகத்தில் நம்மை போன்ற மனிதர்களால் கொடுக்கப்படும் தண்டனைகள் இப்படி என்றால் மறுமையில் இறைவனால் கொடுக்கப்படும் தண்டனைகள் எவ்வளவு கடுமையாக இருக்கும். அல்லாஹ்தான் எல்லோருடைய பாவங்களையும் மன்னித்து நம் அனைவரையும் ஈமானுள்ள மக்களாக மாற்றி நல்ல ஈனமானுடன் மரணிக்கச் செய்து அவனுடைய தண்டனைகளிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

பிறவியிலே கண் பார்வை இழந்தவர்கள், கண் பார்வை உடையவர்களை விட சொர்க்கம் செல்லும் வாய்ப்புகள் அதிகம். அவர்களின் சுய தேவைகளை பூர்த்தி செய்ய புறக்கண் இல்லாவிட்டலும் அகக்கண் திறந்து அதன் மூலமாக சிறப்பாக செயல் படுகின்றனர். பாவம் இழைக்க துணையாக இருப்பது புறக் கண்ணே. புறக் கண்கள் இல்லாவிட்டால் அந்த கண்களினால் பாவமிழைப்பது மிக மிக  குறைவாகத்தான். இருக்கும் அல்லது இருக்காது. ஆனாலும் கண்கள் இரண்டும் இல்லாமல் சில பேரின் அற்புதமான நிகழ்வுகளும் உண்டு.

உதாரணத்திற்கு நமதூர் காதிர் முஹைதீன் கல்லூரியிலே லெக்சரராக ஒரு இஸ்லாமிய சகோதரர் பணியாற்றினார். இன்னும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார் என்று நினக்கின்றேன். பிரவியிலேயே பார்வை இல்லாமல் பிறந்தவர் என்பது குறிப்பிட தக்கது. பார்வை இல்லாமல் அவரும் கல்வி கற்று, பார்வை உடையோருக்கு கற்றும் கொடுக்கின்றார் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை சிந்திக்க கடைமை பட்டுள்ளோம்.

அதுவல்லாமல் சமீபத்தில்   யு-டியூபில் ஒரு வீடியோ வெளியாகி இருந்தது அதில் பிரவியிலேயே பார்வயைப் பெறாத  சிறுவன் ஒருவன் அல்குர்ஆன் 30 ஜுஸையும் மனப்பாடம் செய்து பிறருக்கு எத்தி வைக்கும் எண்ணம் இருப்பதையும் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தது மனதை தொட்ட வீடியோவில் அதுவும் ஒன்று. அல்லாஹ் நாடினால் எல்லாமே சாத்தியமாகும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டே, இப்படி அகக்கண்ணை திறக்க வைத்து இறைவன் எத்தனை பெரிய வேலைகளை  பார்வை இல்லாதவர்களிமே வாங்குகின்றான் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரை மிக அன்புடன் அழைக்கும்போது கண்களின் முக்கியத்துவத்தை பிரதிபளிக்கும் விதமாக கண்ணா என்றும் கண்ணே என்றும் அழைப்பது உண்டு. உறுப்புகளில் முதலிடம் பெறுகின்ற கண்ணை, ஒருவர் தாம் மிக அதிகமாக நேசிப்பவர்களுக்கும், ஈன்றெடுக்கும் குழந்தைகட்கும் நிகராகக் கருதத் தொடங்கினர். எனவே தான் விருப்பமானவர்களை அன்பொழுக அழைக்கின்ற போதும், குழந்தையை அன்போடு விளிக்கும் போதும், “கண்ணே”  என்று அழைக்கின்றனர். 

இதன் முதல் பதிவின் பின்னூட்டத்தில் மு.செ.மு. நெய்னா முஹம்மது கூறியபடி பாசத்தின் வெளிப்பாடாய், அன்பின் உச்சமாய் நம் ஊர் பெரியவர்கள் பெண் பிள்ளைகளை "கண்ணான உம்மாவே" என்றும் ஆண் பிள்ளைகளை "கண்ணான வாப்பாவே" என்றும் அழைப்பார்கள். அப்படி கண்ணை போன்று நம்மை பாதுகாத்த அவர்களை, நாம் வளர்ந்ததும் அவர்கள் நமக்கு உடலாலும் உள்ளத்தாலும் பொருளாலும் பணத்தாலும் நமக்கு செய்த பெரும் தியாகத்தை எண்ணிப் பாராமல் அவர்களை கவனிப்பார் யாருமின்றி விட்டு விடுவது எவ்வளவு பரிதாபத்துக்குரியது என்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.  

இல்லையேல் பின்னால் தான் பெற்ற பிள்ளைகளால் இதேபோல் நிந்திக்கப்படுவாய் என்பதையாவது மனதில் வைத்து தாய் தந்தை செய்த தியாகத்திற்கு இல்லாவிட்டாலும் தனது சொந்த நலனுக்காவது தாய் தந்தையை நன்கு கவனிக்க தவறக்கூடாது. என்பது நியதி. இதை நன்கு ஒவ்வொருவரும் மனதில் பதியவைக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு நாம் கண்களாக இருந்தோம். நம் தாய் தந்தையரை நமது இரு கண்கள் போன்று நன்கு கவனித்துக்கொள்வோம்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த 5 வது தொடரில் பஜ்ரு தொழுகையை நிறைவேற்ற அதிகாலையில் கண் விழிப்போரை பற்றியும் பார்போம்.
(தொடரும்)
அதிரைமன்சூர்

ஒரு புத்தகம் பிறக்கிறது - தொடர் - 7 26

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2013 | , , ,


H.G.wells ஆங்கில எழுத்துலகில் விஞ்ஞானக் கற்பனைக் கதைககள் எழுதியவர்களில் இவரும் ஒருவர். இவரின் Time Machine, wars of the World, Food of the Gods, Invisible Man ஆகியவை ஆங்கில இலக்கிய பீடத்தை அலங்கரித்த ஆபரணங்களில் அடங்கும். Outline of History என்னும் வரலாற்று நூல் ஒன்றும் இவருடைய கை வண்ணம் பட்டு பிறந்தது. இவர்எழுதிய பலபுத்தகங்கள் பள்ளி பாடநூல் வரிசையில் இடம் பிடித்தன.H.G.wellsஎழுதிய Outline of History யில் பலநூறு ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்து இஸ்லாமீயர்கள் பாய்மரக் கப்பலில் எகிப்து நாட்டுக்கு சென்று அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்த வந்ததாகவும் பின் அந்நாட்டை ஆண்ட மன்னனின் கொடிய ஆட்சிக்கு பயந்து மீண்டும் பாய்மரக் கப்பலிலேயே அதிராம்பட்டினம் திரும்பிய வரலாறு குறிப்பு இருப்பதாக http://adiraihistory.blogspot.ae/2010/09/blog-post_29.html என்ற வலைப்பூவில் சகோதரர் ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து பதிந்திருந்தார்கள்.

Allex Halley என்பவர் எழுதிய The Roots என்ற ஆங்கில மொழி புத்தகத்தை "வேர்கள்" என்ற பெயரில் இவர் மொழியாக்கம் செய்து வெளியிட்டு இருப்பதாகவும் படித்த நினைவு. அந்த வலைத்தளமும் அதிராம்பட்டினம் சார்ந்ததாகவே இருந்தது. 

Carl Jung [1875-1911] சுவீடன் நாட்டுக்காரர். இவர் ஒரு மனோவியல் ஆய்வாளர் Sigmand Freud “குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்” என்று சொன்ன ஆசாமி இவர்தான். இவரோடு கூட்டாக கொஞ்ச நாள் ஆய்வு நடத்திய பின் Freud-டின் கருத்துக்களில் உடண்பாடு கொள்ளாமல் விலகி தனியாக மனோவியல் ஆய்வை தொடங்கினார். அதன் விளைவு Psychology of Unconscious‘’ சுய உணர்வு இழந்த மனோநிலை’’ என்ற ஒரு புத்தகம் எழுதினார். அதில் தன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். இது மனோவியல் துறையில் ஒரு வேத நூலாக கருதப்படுகிறது.

George Bernard Shaw [1856-1950] இவர் ஒரு பழுத்த சோஷலிச வாதி. Fabian Party ஆதரவாளர். 'அறிஞர் பெர்னாட்ஷா’ என்றே எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் பிரிட்டனில் பிறந்த இவர் ஒரு சித்தாந்தவாதி, எழுத்தாளர். 'Arms and the Man', 'The Devil’s Disciple', 'Candida, Caesar and Cleopatra', 'The Apple cart' நாடகங்களை எழுதி புகழ் பெற்றவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1925லும் ஆஸ்கார் விருது 1938லும் பெற்றார். இந்த இரண்டு விருதுகளையும் பெற்ற ஒரே ஒரு நபர் அறிஞர் பெர்னாட்ஷா மட்டுமே! இவருடைய நாடகங்கள் கதைகள், கட்டுரைகளில் சமுதாய சீர்திருத்த கருத்துகள் மேலோங்கி நிற்கும், இவர் சமூக சீர்திருத்த  சிந்தனை கொண்டவர்.

1950-ஆம் ஆண்டு இவர் உலக வாழ்விலிருந்து விடை பெற்றுச் சென்றார். "அவர் கைபட்டு மை தொட்டு எழுதிய "பேனா" என்னை கைவிட்டு  போனானே என் காதலன்!’’ என்று கண்ணீர் விட்டு கதறி அழுதது. உலகில்  மனிதன் பிறந்த நாள் முதல் மறைந்த நாள் வரையிலான நாட்களை விரல் விட்டு எண்ணி சரித்திரம் அவனுக்கு இடம் கொடுப்பதில்லை. உலகில்அவன் ’செய்த சாதனை என்ன?’’ என்ற கேள்விக்கு கிடைக்கும் விடையை ஆரஅமர எடை போட்டு பார்த்த பின்தான், சரித்திரக் கோட்டை கதவுகள் திறக்கும். சாதனையாளர்களை தவிர வேறு யாரையும் அது அனுமதிப்பதில்லை. அந்தக் கோட்டையின் கதவுகள் பெர்னாட்ஷாவுக்கு திறந்தே இருந்தது.

பிரபல திரைப்பட நடிகை எலிசபெத் டைலர் பெர்னாட்ஷாவை ஒரு பார்ட்டியில் சந்தித்தபோது. 

"மிஸ்டர் பெர்னாட்ஷா! நீங்கள் ஒரு அறிவாளி! நான் ஒரு பேரழகி. நீங்களும் நானும் கல்யாணம் செய்து கொண்டால் நமக்கு பிறக்கும் பிள்ளை உங்களைப் போல் அறிவும் என்னைப் போல் அழகும் உடையதாய்இருக்கும்அல்லவா? ஆதலால் நாம் ஏன் திருமணம்செய்து கொள்ளகூடாது ?"  என்றாள்.

"ஆமாம்! நீ சொல்வதும் சரிதான். ஆனால், என்னைப் போல அழகும் உன்னை போல அறிவும் கொண்ட பிள்ளை பிறந்து விட்டால் என்ன செய்வது?" என்றார்.

அங்கிருந்த எல்லோரும் "கொள்" என்று சிரித்தார்கள். இப்படி  நகைச்சுவைபட பேசுவதில் பெர்னாட்ஷா வல்லவர்.

Dr. Zhivago இது ஒரு எழுத்தாளர் பெயர் என்று நினைத்து விடாதீர்கள். 1957களில் உலகம் முழுதும் பரபரப்பு காட்டிய நோபல் பரிசு பெற்ற புத்தகம். போரிஸ் பாஸ்டர்னாக் Boris Pasternak ரஷ்ய எழுத்தாளர். இவர் எழுதிய ‘டாக்டர் சிவாகோ’ என்ற புத்தகத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் 'பரிசை' வாங்க கூடாது’ என்று ரஷ்யா கம்யூனிச அரசு ஆசிரியருக்கு தடைபோட்டது.

1905-லிருந்து இரண்டாம் உலகப் போர் வரையிலான ரஷ்யாவின் பின்புலத்தை கதை மையமாக கொண்டு உருவான  ‘டாக்டர் சிவாக்கோவை’ வெளியிட ரஷ்யஅரசு தடை போட்டது. 

பின்னர் கதையின் கையெழுத்துப் பிரதிஒன்று இத்தாலி மிலான் நகருக்கு கடத்தப்பட்டு 1957ஆண்டு "டாக்டர் சிவாகோ" வெளி  உலகம் வந்தார்.இந்த புத்தகம் வாசகர் வட்டத்தில்பெரும் வரவேற்ப்பை பெற்று விற்பனையில் சக்கை போடு போட்டது.

ரஷ்ய அரசு புத்தக ஆசிரியருக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. ‘இம்சை’ தாங்க முடியாத ஆசிரியர் போரிஸ் பாஸ்ட்டர் நாக்கை 1960–ம் ஆண்டில் சுவாசப்பை புற்று நோய் மண்ணகம் விட்டு வின்னகம் கொண்டு  சென்றது.

19-ம் நூற்றாண்டின் ரஷ்யாவின் சிறந்த இலக்கிய படைப்பாளர்களில்  Foydor Dostoevisky என்பவரும் ஒருவர். Crime and Punishment  -‘குற்றமும்-தண்டனயும்’ என்ற நாவல் அவர் படைப்புகளில் மிகச் சிறந்த ஒன்றாகும்.

19-ம் நூற்றாண்டின் ரஷ்ய இலக்கியங்களில் "குற்றமும் தண்டனையும்" தவிர வேறு சிறந்த படைப்புகள் ஏதும் இல்லை. 1846-ல் டெஸ்ட்டோ விஸ்கியின் முதல் படைப்பான Poor Folk, வெளியானது. அவர் அரசுக்கு எதிராக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் 1848-ஆண்டு கைதாகி, கடும் தண்டனை பெற்று சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டார். 1858ஆம் ஆண்டு விடுதலை பெற்று ரஷ்யா திரும்பினார். Crime and Punishment, குற்றமும் தண்டனையும் சைபீரியா சிறை விடுதலைக்குப் பின் அவர் எழுதிய முதல் நாவல். இதைத் தொடர்ந்து The Gambler, The Idiot, The Brothers of Karamazov ஆகிய நாவல்களையும் எழுதினார். 

19ம் நூற்றாண்டில் அவர் படைப்புகளுக்கு தகுந்த பரிசு கிடைக்கவில்லை. ஆனால், இருபதாம் நூற்றாண்டு அவரை கை விடவில்லை. புகழும் பாராட்டும் அவரை தேடித் தேடி அலைந்தது. எங்கெங்கு தேடினும் புகழின் கையிலும் பாராட்டின் கையிலும் அவர் அகப்படவே இல்லை! ‘இன்று வரும் நாளை வரும்’என்று வருகின்ற வழி மீது கண்வைத்து கதவோரம் காத்திருந்தபோது வராத புகழும் பாராட்டும், அவரை தேடித் தேடி அலைந்த போது அவர் எங்கே போனார்!? தேடிய போதும் வயிற்றுப் பசியால் வாடிய போதும் வராத செல்வமும் புகழும் தேடாத போது வருவதெல்லாம் கலைஞனிடமும் தேசத் தொண்டனிடமும் காலம் விளையாடும் வாடிக்கையான கண்ணா மூச்சி விளையாட்டுகளே!

புகழும் பாராட்டும் தேடி  வரும் வரை காலம் காத்திருப்பதில்லை. காலம் தன் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருக்கும். டேஸ்டோ விஸ்கி தன் மண்ணுலக பயணத்தை முடித்து வின்னுலகம் போய் ரெம்ப நாளாச்சுங்க! பரிசு பிந்தியதா? அல்லது டெஸ்ட்டோ விஸ்கி முந்தினாரா? விடை கிடைக்காத கேள்வி. Inbox சில் இதை போட்டு வைப்போம். ஒரு நாள் பதில் கிடைக்கலாம்!

டெஸ்ட்டோ விஸ்கியின் படைப்புகளில்  பல உலக மொழிகளில் வெளிவந்த போது இலக்கியக் காதலர்கள் ஆச்சரியத்துடன் கேட்ட கேள்வி "யார் இவர்?". இலை மறை காயாக இருந்த ஒரு இலக்கியச் சிற்பி குன்றின் மேல் தீபமாக உலகெங்கும் ஒளிவீசி புகழ் பெற்றார். அதுமட்டுமே அவர் ஆன்மாவின் சாந்திக்கு உலகம் கொடுத்த சன்மானம்.
தொடரும்...
S.முஹம்மது ஃபரூக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)