அதிரையை ஆராதித்த மழை, அட! மழையே என்று அமீரக சூட்டில் இருந்து கொண்டு அன்னாந்து பார்க்கும் அதிரையர்கள், வாராதோ இம்மழை என்று ஏங்க வைத்திருக்கிறது நேற்று (29-08-2012) மாலை 07:40க்கு ஆரம்பித்தை அழகு மழை அதிரையை குளிர வைக்க பெய்த மழை தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்கு மேலாக பெய்திருக்கிறது.
இறைவனின் அருட்கொடை, இல்லங்கள் இருக்கும் தெருக்களில் இதமான குளிரூட்டியிருக்கிறது.
மழையே மழையே
அசையாமல் நில்லு
மதி மயக்கும்
மாலைநேர மழையே
உன்னை படமெடுத்து
ஊராருக்கு காட்டத்தான்
அமீரகம் வருவாயா ?
அடிக்கடி மின்சாரம்
அனையாமல் அரவணைப்போம் ! :)
அதிரை மழையை படமெடுக்க மின்னல் உதவியது பளிச்சென்று, கிளிக்கென்று சொடுக்கியது விரல்கள்.
இரவு எட்டு மணிவாக்கில் மின்னல் கொடுத்த வெளிச்சம் அதிகாலை எட்டு மணிபோன்ற தோற்றம்.
அமைதியோடு அழகையும் ஆளுமை செய்வதிலும் அலாதி இன்பமே !
அதிரைநிருபர் குழு




