அதிரை வலைப்பூக்களில் பதிவான ஒரு பதிவில் தமுமுக ஆம்புலன்ஸ் சேவை பற்றிய விமர்சனத்திற்கு - விளக்கம்:-
அஸ்ஸலாமு அலைக்கும்,
அதிரை வலைப்பூக்களில் த.மு.மு.க மற்றும் பைத்துல்மால் அவசர ஊர்தி சேவையில் உள்ள குறைகளை பற்றி கூறியதற்கு த.மு.மு.க வின் பதிலாக இங்கே சிலதை குறிப்பிட விரும்புகிறோம் .
த.மு.மு.க.வின் அவசர ஊர்திகென்று தனி கைபேசி எண்ணாக 97 50 50 50 94 இது த.மு.மு.க.வின் பொறுப்பாளர் நசுருதீன் என்பவரிடம் உள்ளது.

சம்பவம் நடந்த நள்ளிரவு 2:10 க்கு பின் 2:15 முதல் 2:25 வரை நசுருதீனின் சொந்த கைபேசி எண்ணான வேற எண்ணுக்கு 19 வது வார்டு கவுன்சிலரின் கணவர் சகோ அகமது ஹாஜா தொடர்பு கொண்டுள்ளார் ஆனால் அந்த 15 நிமிடம் வரை அந்த அழைப்பை நசுருதீன் அவர்கள் எடுக்கவில்லை காரணம் அவர் முதல் நாள் இஷா தொழுகைக்கு போகும்போது அமைதி நிலையில் அவரின் கைபேசியை வைத்தவர் மீண்டும் அதை செயல் நிலைக்கு கொண்டு வர மறந்து விட்டார்.
மேலும் சகோ அஹ்மத் ஹாஜா அவர்களும் அவசர ஊர்தி தொடர்பு எண் தன் கைப்பேசியில் பதிவில் இல்லை எனவே தனக்கு அந்த எண் நினைவில் இல்லை என்கிறார் அந்நிலையில் லெ.மு.செ.அபூபக்கரின் சகோதரர் சிராஜுதீன் அவரின் கைபேசியில் இருந்து 2:29 க்கு அவசர ஊர்தி எண்ணான 97 50 50 50 94 எண்ணுக்கு அழைப்பை விடுக்கிறார்.
இருமுறை அழைப்பு விடுக்கப்பட்டு அது பதில் அளிக்கப்படவில்லை உடனே அவர் த.மு.மு.க.வின் நகர செயலாளர் தையுப் அவர்களை தொடர்பு கொள்கிறார். அவர் சிராஜுதீனிடம் உடனே ஓட்டுனர் வீடு சுரைக்கா கொல்லையில் உள்ளது போய் உடனே எழுப்புங்கள் என்று சொல்லியுள்ளார்.
சிராஜுதீன் அங்கு சென்று ஓட்டுனர் வீடு சரியாக தெரியாத காரணத்தால் மீண்டும் அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது நசுருதீன் இப்பொழுது அழைப்பிற்கு பதில் அளித்துள்ளார் அப்பொழுது நேரம் 2:33. ஓட்டுனரின் வீட்டு முகவரியை தெளிவாக சொல்லியுள்ளார் அத்துடன் மூன்று நிமிடம் கழித்து ஓட்டுனருக்கும் பேசியுள்ளார்.
அப்பொழுது ஓட்டுனர் தானும் சிராஜுதீனும் அவசர ஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஷிபா மருத்துவமனை நோக்கி செல்வதாக கூறியுள்ளார் அப்பொழுது நேரம் 2:36 இவை எல்லாம் கைபேசியில் பதிவாகிஉள்ள நேரம் பதிவில் குறிப்பிட்டது போல் ஓட்டுனரின் கைப்பேசி அணைத்து வைக்கப்படவில்லை அந்த அவசர எண் ஓட்டுனரிடம் இல்லை.
அது பொறுப்பாளர் சகோ நசுருதீன் வசம் உள்ளது நாம் அதை ஓட்டுனர்கள் வசம் கொடுத்து வைத்தால் ஒருவேளை அவர்கள் எடுக்க வில்லை என்றால் என்ன நடக்கிறது என்பது நிர்வாகிகளான எங்களின் கவனத்திற்கு வராமலே போகலாம் எனவேதான் பொறுப்பாளர் ஒருவரை நியமித்து தகவல் வந்த உடன் அதை அவர் மறுபுறம் உறுதி செய்து ஓட்டுனருக்கு தகவல் தருவார்.
ஓட்டுனரிடம் அவசர எண்ணான 97 50 50 50 94 இந்த எண்ணிலிருந்து வருவதற்காகவே தனி இலக்கம் வைத்துள்ளார். இந்த இலக்கத்தை வேறு எந்த சுய உபயோகத்திற்கு அவர் பயன் படுத்துவதில்லை.
அந்த பதிவில் பரிந்துரைப்பது போல் இரவு பகல் என இரு ஓட்டுனர்களை வைத்து கொள்வதற்கு த.மு.மு.க விடம பொருளாதார வசதியும் இல்லை குறைந்த சம்பளத்திற்கு சேவை மனப்பான்மை உள்ள ஓட்டுனர் கிடைப்பதில்லை அதுபோல அவசர ஊர்தி தினமும் ஓடுவதர்க்கான வாடகை வாகனமும் அல்ல நாங்கள் வசூலிக்கும் வாடகையில் இரு ஓட்டுவர்களை பணி அமர்த்துவது சாத்தியமும் இல்லை.
தற்போதைய எங்களின் ஓட்டுனரை போல் நல்லுள்ளம் கொண்டவரை பார்ப்பது கடினம்.
அரசாங்கம் செய்துவரும் 108 போல் இரவு முழுவதும் விழித்திருந்து சேவை செய்து பலபேர் வைத்து நிர்வாகம் நடத்துமளவுக்கு த.மு.மு.கவிடம் பொருளாதார சக்தி இல்லை அன்று நடந்ததில் ஒரு தவறு நடந்துள்ளது நள்ளிரவு 2:29 க்கு சகோ சிராஜுதீன் தொடர்பு கொள்ளும் பொழுது அந்த பொறுப்பாளரான நசுருதீன் இரண்டு முறை பதில் அளிக்காமல் உறக்கத்தில் இருந்திருக்கிறார் அவரும் மனிதன் தான் (இறைவன் தனது வசனத்தில்) இரவை உங்களுக்கு இளைப்பாருவதருக்கும் உறங்குவதற்கும் படைத்திருக்கிறேன் என்று கூறுகிறான்.
நள்ளிரவு 2:30 மணிக்கெல்லாம் அழைப்பிற்கு சிலர் உடனே எழலாம் சிலர் சிறிது நேரம் கழித்து எழலாம் இது இறைவன் அவர்களுக்கு கொடுத்த சக்தியை பொறுத்து.
பதிவின் சுட்டிக்கட்டலான // இவ்வாக்கம் யாரையும் தூக்கி பிடிப்பதற்கோ அல்லது தரம் தாழ்த்துவதற்கோ எழுதப்பட்டதல்ல. ஊர் நடப்புகளை உங்களுக்கு தெரியப்படுத்தி சில அசொளகரியங்களை கலைவதற்காகத்தான் அன்றி வேறொன்றும் இல்லை.// என்பது.
5 நிமிட காலதாமதத்தை இவ்வளவு பெரிது படுத்தி எங்கள் தரப்பு விளக்கத்தை பெறாமல் அவர் ஊடகத்தின் வாயிலாக அதிவிரைவாக விமர்சித்திருப்பதை படைத்தவனே அறிவான்.
நல்ல விமர்சனம் எங்களை மேலும் நெறிபடுத்தட்டும் உள்நோக்கம் இருந்தால் எல்லாம் வல்ல அல்லாஹ் போதுமானவன்.
இப்படிக்கு,
செயலாளர் த.மு.மு.க ,
பொருளாளர் த.மு.மு.க ,
துணைத் தலைவர் த.மு.மு.க ,
துணை செயலாளர் த.மு.மு.க
அதிரை நகரம்
குரிப்பு : நெறிப்படுத்தலுடன் பதியப்பட்டிருக்கிறது.
- நெறியாளார்