எனக்குக்
கவிதை யென்று
எதுவும் எழுதத் தெரியாது
ஏதோ வொன்று
என்னை வைத்துத்
தன்னை எழுதிக் கொள்கின்றது
மனம்
ஏனோ யின்று
மண்ணை விடுத்து
விண்ணை ஏவிச் செல்கின்றது
பறக்கும்போது
படபடப்பவைகளைப்
பதிவு செய்யச் சொல்கின்றது
அவற்றை
கவிதை என்னும்
தலைப்பின்கீழ்
குறித்து வைக்க மறுக்கின்றது
பிறகொரு சமயம்
பதிவு செய்தவைகளைப்
படிக்கும்போதேப் பிடிக்கின்றது
கனக்கும் உணர்வை
எனக்குள் விதைத்து
கவிதையொன்று வசப்படுகின்றது
எழுதும்போதல்ல
வாசிக்கும்போதே
யாரும்
கவிஞராகிறார்
புன்னகை
பூக்கும்போதைவிட
புரிந்து கொள்ளப்படும்போதே
பிரயோஜனப்படுகிறது
பார்க்க
பல வர்ணங்களிலும்
படிக்க
பளபளக்கும் காகிதத்திலும்
அலங்கரிக்கப்பட்ட எழுத்துகளாலும்
படங்களின் ஒப்பேற்றலுடனும்
உணரப்படுவதல்ல கவிதை
கவிதை
எண்ணங்களா எழுத்துகளா
வார்த்தைகளால் நிரப்ப
கவிதை
படிவம் அல்ல
எண்ணங்களின் ஒரு வடிவம்
காகிதங்களில் மட்டும்
கண்டெடுக்கப்படுவதல்ல கவிதை
கற்கண்டு மழலையிலும்
கண்களால் சிரிப்பதிலும்
புற்பூண்டின் பச்சையிலும்
புலர்கின்ற விடியலிலும்
புன்னகைக்கும் முகத்தினிலும்
புரிகின்ற மொழியினிலும்
சொற்காத்த வாக்கினிலும்
சோலையின் பூக்களிலும்
கார்மேகம் கரைந்து
கொட்டுகின்ற மழையினிலும்
சொற்கொண்டு பேசுகையில்
சுரீரென்ற தீண்டலிலும்
ஏழையின் சிரிப்பினிலும்
ஏழுவர்ண பிம்பத்திலும்
எழுதப்படா இன்பத்திலும்
எஞ்சியிருக்கிறது கவிதை
கள்ளமில்லா உள்ளத்தில்
கருவாகும் எண்ணத்திலும்
ஆரவாரம் வேரறுக்கும்
அமைதியின் ஆளுமையிலும்
தெள்ளத் தெளிந்த
ஓடையிலே
நீர்கிழித்து நீந்துகின்ற
மீன்களின் கூட்டத்திலும்
உதிரி மல்லிகையைச்
சரம்சரமாய்த்
தொடுக்கின்ற விரல்களிலும்
துடிப்புடனிருக்கிறது கவிதை
கட்டுரைகளிலும் கதைகளிலும்கூட
கண்டெடுத்ததுண்டு
கனிச்சுவைதரும்
கவிதைகளை
கட்டுபவனல்ல
காசு கொடுப்பவனே
கட்டடத்திற்குச் சொந்தக்காரன்
எழுதுபவனல்ல
புரிந்து
எற்றுக்கொள்பவனே கவிஞன்?!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
கவிதை யென்றுஎதுவும் எழுதத் தெரியாது
ஏதோ வொன்று
என்னை வைத்துத்
தன்னை எழுதிக் கொள்கின்றது
மனம்
ஏனோ யின்று
மண்ணை விடுத்து
விண்ணை ஏவிச் செல்கின்றது
பறக்கும்போது
படபடப்பவைகளைப்
பதிவு செய்யச் சொல்கின்றது
அவற்றை
கவிதை என்னும்
தலைப்பின்கீழ்
குறித்து வைக்க மறுக்கின்றது
பிறகொரு சமயம்
பதிவு செய்தவைகளைப்
படிக்கும்போதேப் பிடிக்கின்றது
கனக்கும் உணர்வை
எனக்குள் விதைத்து
கவிதையொன்று வசப்படுகின்றது
எழுதும்போதல்ல
வாசிக்கும்போதே
யாரும்
கவிஞராகிறார்
புன்னகை
பூக்கும்போதைவிட
புரிந்து கொள்ளப்படும்போதே
பிரயோஜனப்படுகிறது
பார்க்க
பல வர்ணங்களிலும்
படிக்க
பளபளக்கும் காகிதத்திலும்
அலங்கரிக்கப்பட்ட எழுத்துகளாலும்
படங்களின் ஒப்பேற்றலுடனும்
உணரப்படுவதல்ல கவிதை
கவிதை
எண்ணங்களா எழுத்துகளா
வார்த்தைகளால் நிரப்ப
கவிதை
படிவம் அல்ல
எண்ணங்களின் ஒரு வடிவம்
காகிதங்களில் மட்டும்
கண்டெடுக்கப்படுவதல்ல கவிதை
கற்கண்டு மழலையிலும்
கண்களால் சிரிப்பதிலும்
புற்பூண்டின் பச்சையிலும்
புலர்கின்ற விடியலிலும்
புன்னகைக்கும் முகத்தினிலும்
புரிகின்ற மொழியினிலும்
சொற்காத்த வாக்கினிலும்
சோலையின் பூக்களிலும்
கார்மேகம் கரைந்து
கொட்டுகின்ற மழையினிலும்
சொற்கொண்டு பேசுகையில்
சுரீரென்ற தீண்டலிலும்
ஏழையின் சிரிப்பினிலும்
ஏழுவர்ண பிம்பத்திலும்
எழுதப்படா இன்பத்திலும்
எஞ்சியிருக்கிறது கவிதை
கள்ளமில்லா உள்ளத்தில்
கருவாகும் எண்ணத்திலும்
ஆரவாரம் வேரறுக்கும்
அமைதியின் ஆளுமையிலும்
தெள்ளத் தெளிந்த
ஓடையிலே
நீர்கிழித்து நீந்துகின்ற
மீன்களின் கூட்டத்திலும்
உதிரி மல்லிகையைச்
சரம்சரமாய்த்
தொடுக்கின்ற விரல்களிலும்
துடிப்புடனிருக்கிறது கவிதை
கட்டுரைகளிலும் கதைகளிலும்கூட
கண்டெடுத்ததுண்டு
கனிச்சுவைதரும்
கவிதைகளை
கட்டுபவனல்ல
காசு கொடுப்பவனே
கட்டடத்திற்குச் சொந்தக்காரன்
எழுதுபவனல்ல
புரிந்து
எற்றுக்கொள்பவனே கவிஞன்?!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

