If there is will, there is a way !
பெரும்பாலோர் ‘மிகக் கடினமாக உழைக்கிறேன் பேர்வழி’ என்று உடல் ஆரோக்கியத்தையும், மனதையும் கெடுத்துக் கொண்டு அவர்களே அதனைத் திரும்பிப் பார்த்தார்களேயானால் சாதித்தது சல்லிக்காசு பொருமானமுள்ளதாக இருக்காது. வேறு சிலரோ, அவர்கள் கச்சிதமாக குறைவாகவும், நேர்த்தியாக திட்டமிட்டு உழைப்பார்கள் (Work Smarter than Hard). அதுதான் அவர்களுக்கும் வெற்றியைக் கொடுக்கிறது, தான் அடைய வேண்டிய இலக்கை எளிதாக நெருங்கி விடுவார்கள். அதற்காக படித்தவன் / படிக்காதவன் என்ற வேறுபாடுகள் வைத்து பிரித்தாளத் தேவையில்லை.
ஜாஹிர் காக்கா ஒரு பதிவில் இட்ட கருத்தில் அவர்களின் பாட்டி சொன்னதாக சொல்லியிருந்ததை இங்கே நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கின்றேன் “நீ வேலை தேடுபவனாக இருப்பதை விட, 10 பேருக்கு வேலை கொடுப்பவனாக மாறு" இவ்வகையான நிலை சர்வ சாதரணமாக கிடைத்துவிடாது, சிறிய அதோடு உளப்பூர்வமான உழைப்பும் சரியான திட்டமிடுதலின் துணை கொண்டுதான் சாதிக்க முடியும்.
ஒரு ஆங்கிலப் பழமொழி சொல்வதைப்போல் - “If you fail to plan,you plan to fail “
அல்லாஹ் அளித்திருக்கும் அருட்கொடைகளில் ஒன்றான மூளையைச் சிலர் அதன் திறனை சரியாகப் பயன்படுத்தியதே கிடையாது. அதற்கு மாறாக உருளைக் கிழங்குகளை அவர்களின் தலையில் வைத்து இருந்தால் தயிர் சோற்றுக்குத் துணைக்கறியாக பொரிக்கவாவது பயன்பட்டிருக்கலாம்.
அந்த தள்ளாத வயதான காலத்தில் துணைக்கு என்று இருந்த ஒரே மகனும் இல்லாமல் நிலத்தை உழுது விவசாயம் பயிர்செய்ய முடியவில்லை அவரால், மனம் கேட்காமல் சிறையிலிருக்கும் தனது மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார்
“மகனே நீ மட்டும் இந்நேரம் என்னுடன் இருந்திருந்தால், நம்முடைய நிலத்தில் உழுது ஏகபோகமாக பயிர் செய்ய பெரிதும் உதவியிருப்பாய், ஆனால் சிறையிலிருக்கும் உன்னால் என்னதான் செய்யமுடியும்" என்று உருக்கமாக எழுதியிருந்தார்.
மகனும் தந்தைக்கு உடனே பதில் அனுப்பினான் “தந்தையே அந்த விளை நிலத்தை உழவுக்கு பயன்படுத்தாதீர்கள், அதில்தான் நான் கள்ளத்தனமாக வாங்கிய விரும்பத்தகாத பொருட்களும் மற்றும் ஆயுதங்களையும் புதைத்து வைத்து இருக்கின்றேன்" என்று.
அந்த வயதானவர் குழம்பியவராக, நடப்பது என்னவென்று தெரியாமல் மகனுக்கு மீண்டும் கடிதம் அனுப்பினார் ”இப்ப நான் என்ன செய்ய ?” என்று !
மீண்டும் மகன் பதில் அனுப்பினான் “புரட்டிப் போடப்பட்ட அந்த நிலத்தில் தண்ணி பாய்ச்சி நாற்று நடவுங்கள், ஒரு மகனாக சிறையிலிருந்து கொண்டு என்னால் செய்ய முடிந்த உதவி இதுதான் இப்போதைக்கு” என்றதும் அவருக்கு புரிந்தும் புரியாததுமாக தனது வேலையைத் துவங்கினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராசல்கைமாவில் உள்ள மலைகளில் ஒருவித அசரீரிச் சத்தம் மாலை மற்றும் இரவு நேரங்களில் வருவதாகக் கூறி மக்கள் பயந்து அரசிடம் எடுத்துச் சொல்ல அரசும் பூகம்ப பயத்தில் மேலை நாடுகளில் இருந்து விஞ்ஞானிகளை (!!) இறக்குமதி (அமீரகத்தில் 99% இறக்குமதிதான்) செய்து, ஆராயச் சொன்னார்கள்.
புரியாத ஒலிச் சத்தம் வரும் தகவல் (செய்திச் சேனல்களில்) ஒலியின் வேகத்தைவிட அதிகமாக ஆங்காங்கே பரவ பலபகுதிகளிலிருந்தும் மக்கள் அச்சத்துடன் வரத்துவங்கி சுற்றுலாத் தளமாக அதனை பரபரப்பாக கண்டு வந்திட சென்று கொண்டிருக்க, அங்கே ஒரு 'சேட்டன்' மட்டும் அவருக்கே உரிய கைத்தொழிலான ஒரு மினி 'சாயாக் கடை' க்கு சாந்தமாக அடிக்கல் நாட்டினார், ஆஹா! அருமையாக சுறுசுறுப்பான வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். நிறைவில் அந்தப் பகுதியில் வெளியாகும் ஒலிச் சத்தம் ஒரு வித ஆந்தைகளின் அலறல்தான் என்று விஞ்ஞானிகள்(!!) உறுதி செய்ய, அரசும் அந்த விஞ்ஞானிகளுக்கு செலவழித்த பணத்திற்கு நிகராக, கல்லா கட்டிக்கொண்டு 'நம்ம சேட்டனும்' அவ்விடத்தை அதே சாந்தத்துடன் காலி செய்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையுடன் அகன்றார்.
நாம் யாவருக்கும் அல்லாஹ்வின் அருட்கொடையான உடலழகும் உண்டு அதனுள்ளே மனமும் உண்டு, மூளையும் உண்டு, இவைகளையும் மீறி அவைகளை உரிய முறையில் பயன்படுத்துவதை தவிர்த்து அதையும் இதையும் நினைத்து, அதன் அற்புதச் செயல்பாடுகளின் பலன்களை அடையாமல் கெடுத்துக் கொள்பவர்கள்தான் நம்மில் அதிகமதிகம். நமக்கு அந்தந்த தேவைகளுக்காக அவசியமான உறுப்புகளுடன் வல்ல நாயன் அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டதோ அதனை அந்தந்த நன்நோக்கத்துடன் உபயோகித்தால் பலனும் பயனும் உண்டு.
பெரும்பாலோர் ‘மிகக் கடினமாக உழைக்கிறேன் பேர்வழி’ என்று உடல் ஆரோக்கியத்தையும், மனதையும் கெடுத்துக் கொண்டு அவர்களே அதனைத் திரும்பிப் பார்த்தார்களேயானால் சாதித்தது சல்லிக்காசு பொருமானமுள்ளதாக இருக்காது. வேறு சிலரோ, அவர்கள் கச்சிதமாக குறைவாகவும், நேர்த்தியாக திட்டமிட்டு உழைப்பார்கள் (Work Smarter than Hard). அதுதான் அவர்களுக்கும் வெற்றியைக் கொடுக்கிறது, தான் அடைய வேண்டிய இலக்கை எளிதாக நெருங்கி விடுவார்கள். அதற்காக படித்தவன் / படிக்காதவன் என்ற வேறுபாடுகள் வைத்து பிரித்தாளத் தேவையில்லை.
ஜாஹிர் காக்கா ஒரு பதிவில் இட்ட கருத்தில் அவர்களின் பாட்டி சொன்னதாக சொல்லியிருந்ததை இங்கே நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கின்றேன் “நீ வேலை தேடுபவனாக இருப்பதை விட, 10 பேருக்கு வேலை கொடுப்பவனாக மாறு" இவ்வகையான நிலை சர்வ சாதரணமாக கிடைத்துவிடாது, சிறிய அதோடு உளப்பூர்வமான உழைப்பும் சரியான திட்டமிடுதலின் துணை கொண்டுதான் சாதிக்க முடியும்.
ஒரு ஆங்கிலப் பழமொழி சொல்வதைப்போல் - “If you fail to plan,you plan to fail “
அல்லாஹ் அளித்திருக்கும் அருட்கொடைகளில் ஒன்றான மூளையைச் சிலர் அதன் திறனை சரியாகப் பயன்படுத்தியதே கிடையாது. அதற்கு மாறாக உருளைக் கிழங்குகளை அவர்களின் தலையில் வைத்து இருந்தால் தயிர் சோற்றுக்குத் துணைக்கறியாக பொரிக்கவாவது பயன்பட்டிருக்கலாம்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை தரணியில் நெல் விளைவிக்கும் விவசாயமே பரம்பரையாக செய்து வந்த ஒரு வயதான விவசாயிக்கு அவரின் ஒரே மகன் அவரோடு இணைந்து அவரது விவசாயத்திற்கு உதவி செய்து வந்தான். அப்பன் சொல்லை அதிகம் கேளாத அவன் ஊரில் அடிதடியிலும்,பல விரும்பத்தகாதச் செயல்களிலும் ஈடுபட்டு முடிவில் போலிசில் சிக்கி சிறைவாசமே சிம்மாசனமாக கிடைத்தது அவனுக்கு.
அந்த தள்ளாத வயதான காலத்தில் துணைக்கு என்று இருந்த ஒரே மகனும் இல்லாமல் நிலத்தை உழுது விவசாயம் பயிர்செய்ய முடியவில்லை அவரால், மனம் கேட்காமல் சிறையிலிருக்கும் தனது மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார்
“மகனே நீ மட்டும் இந்நேரம் என்னுடன் இருந்திருந்தால், நம்முடைய நிலத்தில் உழுது ஏகபோகமாக பயிர் செய்ய பெரிதும் உதவியிருப்பாய், ஆனால் சிறையிலிருக்கும் உன்னால் என்னதான் செய்யமுடியும்" என்று உருக்கமாக எழுதியிருந்தார்.
மகனும் தந்தைக்கு உடனே பதில் அனுப்பினான் “தந்தையே அந்த விளை நிலத்தை உழவுக்கு பயன்படுத்தாதீர்கள், அதில்தான் நான் கள்ளத்தனமாக வாங்கிய விரும்பத்தகாத பொருட்களும் மற்றும் ஆயுதங்களையும் புதைத்து வைத்து இருக்கின்றேன்" என்று.
கடிதம் கிடத்த மறுநாள் விடியற்காலையில் 10 புலன் விசாரனை அதிகாரிகளும் 30 போலீசாரும் அந்த முதியவரின் விவசாய நிலத்தில் பொக்லைன் இயந்திரத்தோடு ஆஜராகி நிலத்தை கூறு போட்டு தோண்டினர் சல்லடையாக நிலத்தினை கிளறியெடுத்து புரட்டிப் போட்டனர் ,அவர்கள் தேடி வந்த ஆயுதங்களோ அல்லது விரும்பத்தகாத பொருட்களோ இல்லை அவர்களும் வந்த வழியே திரும்பியும் விட்டனர்.
அந்த வயதானவர் குழம்பியவராக, நடப்பது என்னவென்று தெரியாமல் மகனுக்கு மீண்டும் கடிதம் அனுப்பினார் ”இப்ப நான் என்ன செய்ய ?” என்று !
மீண்டும் மகன் பதில் அனுப்பினான் “புரட்டிப் போடப்பட்ட அந்த நிலத்தில் தண்ணி பாய்ச்சி நாற்று நடவுங்கள், ஒரு மகனாக சிறையிலிருந்து கொண்டு என்னால் செய்ய முடிந்த உதவி இதுதான் இப்போதைக்கு” என்றதும் அவருக்கு புரிந்தும் புரியாததுமாக தனது வேலையைத் துவங்கினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராசல்கைமாவில் உள்ள மலைகளில் ஒருவித அசரீரிச் சத்தம் மாலை மற்றும் இரவு நேரங்களில் வருவதாகக் கூறி மக்கள் பயந்து அரசிடம் எடுத்துச் சொல்ல அரசும் பூகம்ப பயத்தில் மேலை நாடுகளில் இருந்து விஞ்ஞானிகளை (!!) இறக்குமதி (அமீரகத்தில் 99% இறக்குமதிதான்) செய்து, ஆராயச் சொன்னார்கள்.
புரியாத ஒலிச் சத்தம் வரும் தகவல் (செய்திச் சேனல்களில்) ஒலியின் வேகத்தைவிட அதிகமாக ஆங்காங்கே பரவ பலபகுதிகளிலிருந்தும் மக்கள் அச்சத்துடன் வரத்துவங்கி சுற்றுலாத் தளமாக அதனை பரபரப்பாக கண்டு வந்திட சென்று கொண்டிருக்க, அங்கே ஒரு 'சேட்டன்' மட்டும் அவருக்கே உரிய கைத்தொழிலான ஒரு மினி 'சாயாக் கடை' க்கு சாந்தமாக அடிக்கல் நாட்டினார், ஆஹா! அருமையாக சுறுசுறுப்பான வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். நிறைவில் அந்தப் பகுதியில் வெளியாகும் ஒலிச் சத்தம் ஒரு வித ஆந்தைகளின் அலறல்தான் என்று விஞ்ஞானிகள்(!!) உறுதி செய்ய, அரசும் அந்த விஞ்ஞானிகளுக்கு செலவழித்த பணத்திற்கு நிகராக, கல்லா கட்டிக்கொண்டு 'நம்ம சேட்டனும்' அவ்விடத்தை அதே சாந்தத்துடன் காலி செய்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையுடன் அகன்றார்.
நீதி: இம்மாதிரியான நிஜமான சம்பவங்களில் இருந்து என்ன அறிந்து கொள்ள முடிகிறது என்றால் “எங்கே இருக்கின்றோம் என்பது முக்கியமில்லை என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம்”
- முகமதுயாசிர்
- ,துபாய்





