அதிரைநிருபர் பேசும் படம் சொன்னவைகள் ஏராளம், இதில் இன்னும் இருக்கும் தாராளமாக ! அவ்வகையில் சின்ன சின்ன இடைவெளி விட்டு மீண்டும் தொடர்கிறது மூன்றாம் கண்ணுடைய இளமைப் பார்வையும், துள்ளலும் ஆங்காங்கே எழுத்துக்களின் கிள்ளலும் !
புகைப்படக் கலை என்ற ஒன்றை அறிந்தவர்கள் சிலர் என்றாலும், பலருக்கும் பிடித்த ஒன்றுதான் அந்தக் கலையைக் கொண்டு 'பிடித்த'வைகள்.
"வேகமா போறியளே ஊரில கல்யாண சீஸனாச்சே பார்த்து போங்க !... உடம்புல இருக்கிற பார்ட்ஸ் பத்திரமா பார்துக்குங்க!!"
மீனுக்கு மசாலா போட்டது சரியில்லைன்னு கொற வந்துடுச்சு, அதுனாலே அந்த கொறைய போக்க இந்த பொறிச்ச கோழி போட்டோ (இதுக்கும் ஏதாவது இக்கு வச்சிராதிய)!
ஆத்துலே தண்ணி தொறந்து விட்டுட்டாங்க கச்சல் கட்டிகிட்டு யாரையும் காணோமே!? தஞ்சாவூர் போறவங்க ஆத்தைப் பார்த்து ஆனந்தபடுங்க ஆனா எறன்கிறாதிய !!
பாவம் இந்த பூ'வை பூவையர் யாரும் தலையில் சூடுவதும் கிடையாது எந்த கவிஞரும் இந்த 'பூ'வை நினைத்து கவி பாடுவதும் கிடையாது !
வெட்டி வச்ச பழமெல்லாம் நல்லாத்தான் இருக்குது வெலய கேட்டா காலு வெடவெடன்னு ஆடுது !
இத உட்கார வச்சிகிதா நிக்கவுட்டு வச்சிகிதா !
ஓல்ட் ஈஸ் கோல்ட்ன்னு சொல்வாங்க ஆனா இது போல்டா இருக்கா இல்லையான்னு பாத்து சொல்லுங்க.
சுண்டால் விக்கிற பையனை காணமேன்னு கம்ளைண்டு பண்ணிறாதிய !
நல்ல வேலை யானைக்கு மணிகட்டி யானை மேல ஆள் உட்க்கார்ந்து இருக்கு இல்லைன்னா ஊருக்குளே யானை யானையாக புகுந்துடுச்சின்னு நியூஸ் போட்டுருவாங்க !!
அல்லாஹுவின் இந்த பள்ளி வாசல் கட்ட நன்கொடைகள் கொடுத்தவர்கள் ஏராளம், இந்த புளியமரமும் தன் பங்கிற்கு உடலின் ஒரு பாகத்தை பள்ளிவாசலுக்கு நன்கொடை கொடுத்து விட்டு மீண்டும் துளிர் விட்டு வருகின்றது !!
Sஹமீது











