சாதிக்க வேண்டுமென்று..சாதிக்கொரு கட்சியென்று..
ஆட்களை நிறுத்தி வச்சாங்க
ஐயாமார், அண்ணன்மார்
அதுக்கும் ஓட்டுப் போட்டாங்க
ஆளுக்கொண்ணா ஆகிப் போனாங்க !
அவிங்க ஆகிப் போனாங்க !!
பிராமணர், அவர் நம்மாளுதான்
வன்னியர், இவர் எங்காளுதான்
தேவர் இனம் நம்ம சனம்தான் என்று
ஆளுக்கொரு தேர்வா ஆகிப் போனாங்க
சாதி மக்க ஓட்டு போட்டாங்க !
அவிங்க சாதி சனம்
ஓட்டு போட்டாங்க !!
சிறுபான்மை இனமென்று
சொல்லிக் கொண்டாங்க
முஸ்லிம்கள் சொல்லிக் கொண்டாங்க
தேர்தல் தேதி வந்தவுடன்
ஆளாளுக்கு அடித்துக் கொண்டாங்க !
ஐயா! அடித்துக் கொண்டாங்க...
நம்ம கட்சியென்றும் இயக்கமென்றும்
பிரிந்து விட்டாங்க - நல்லா
முடிஞ்சு விட்டாங்க !
ஐய்யாவுக்கு நானென்றும்
அம்மாவுக்கு நீயென்றும்
கோஷம் போட்டாங்க !
எங்களை பிரிச்சே போட்டாங்க !
மோடி என்ற விஷப் பாம்பு
கொத்த பாக்குது - மீண்டும்
கொத்த பாக்குது
காவிக் கூட்டம் நம்மை
விரட்டப் பாக்குது,
துறத்த பாக்குது
பாபர் பள்ளி
இழந்தாச்சு - இன்னும்..
புத்தி படிக்கல !
குஜராத் கலவரம்
கண்டாச்சு - இன்னும்
விழித்துப் பாக்கல !
ஐய்யாவோ ! அம்மாவோ..
முட்டுக் கொடுப்பார்(ள்)
மோடிக்கு முட்டுக் கொடுப்பார்(ள்)
அவன் எங்க தோள் ஏறி
எட்டி உதைப்பான் - எங்களை
எட்டி உதைப்பான் !
ஐயா தலைவர்களே !
எங்களுக்கு
கட்சியும் வேனாம்
இயக்கமும் வேனாம் !
எங்களை விட்டுவிடுங்க !
நாங்கள் முஸ்லிம்களென்றே
சாட்சி சொல்வோம் !
நல்லா சாட்சி சொல்லுவோம்
அல்லாஹ்வை மட்டுமே
நம்பி இருப்போம்... இன்னும்
நல்லா இருப்போம்,
இறைவனின் நாட்டப்படியே !
இன்ஷா அல்லாஹ்
இது கவிதையல்ல... ஒரு சாமானியனின் வேதனை!

