![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrRZRK1Rb21a1K9eK64rg-tbSOT4Gp8uXErnEe_MLuv5eCaNCEhCjZ8pU5cnIw7i_WOlNBYgT3Ks1yBr_b84wsTBk2ihtZRv9MrJEDQMSdSVYDpd4_gugtuTEFcQoSiPfB3I874ohnkYQ/s1600/bookreading.gif)
புலப்படும் அதில்
புதியதோர் உலகம்
எத்திவைக்கும் புத்தகச் செய்தி
எதுவாயினும் - அது
எத்தனையோ
புதுமையைச் சொல்லும்
இன்றைய கண்டுபிடிப்புக்கள்
நேற்றைய வாசிப்புக்களே
நாளைய உலகை
நகர்த்திச் செல்வதும்
நாம் படிக்கும் பக்கங்களே
வாழ்க்கையெனும் புத்தகத்தில்
வறுமையெனும் பாடமும்
உண்டு
வனப்பான வாழ்வுக்கு
பொறுப்பாய்ப் படித்த
பக்கங்களும் உண்டு
அரசியல் ஆன்மீகம்
மருத்துவம் விஞ்ஞானம்
இப்படி வாழ்வியலில்
வகைபடுத்த முடியாதவை
ஆயிரமாயிரம்
இத்தனைக்கும் மூலதனமாம்
எத்திவைப்பது புத்தகமாம்
அத்தனையிலும்
ஆதிக்கம் செலுத்தும்
புத்தகத்தால் மட்டுமே
நாளைய உலகை
நலமாக்க முடியும்
புத்தியில் மிகைத்தவர்
புத்தகம் படைத்தனர்
புத்தகம் படித்தவர்
புத்தியில் மிகைத்திடுவர்
புத்தகத்தைப் புரட்டிப்பார்
புதையலாய்க் கிட்டும்
புத்திமதி
புத்தகம் படி
புதுமையை படை
நாளை
புதியதோர் உலகை
நீ செய்வாய்
அதிரை மெய்சா
2 Responses So Far:
//இன்றைய கண்டுபிடிப்புக்கள்
நேற்றைய வாசிப்புக்களே// 100/100.
//புத்தியில் மிகைத்தவர்
புத்தகம் படைத்தனர்
புத்தகம் படித்தவர்
புத்தியில் மிகைத்திடுவர்//
அருமை, மெய்சா.
Post a Comment