நபிமணியும் நகைச்சுவையும் - முக்கிய அறிவிப்பு ! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | March 25, 2013 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அளவிலா அருளும் நிகரிலா அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் இறுதித் தூதர் ஈருலக வெற்றிக்கு இனிப்பான மார்க்கம் காட்டிய நம் உரியிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த, நெகிழ்ந்த, மகிழ்ந்த, உணர்த்திய அற்புதமான நிகழ்வுகளை இலகு தமிழில் இறையச்சம் நிரம்பிய சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்களால் எழுதப்படும் தொடர் பற்றிய ஒரு முக்கிய அறிவிப்பு !

சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அர்களின் வழக்கமான தொடர் பயணத்தினூடே ஒரு முறை துபாய் வழிச் செல்லுகையில் நட்புகளை சந்திக்க வாய்த்தது. 

அவ்வாறான சந்தர்ப்பத்தில் கண்மணி நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை அமெரிக்க மூடன் ஒருவனால் திரைப்படமாக எடுத்து வெளியாகி உலகமே கொந்தளித்துக் கொண்டிருந்த தருணத்தில் அதற்கான எதிர்ப்பலைகளை எவ்வாறு நம்மக்கள் காட்டிவருகிறார்கள், ரஸுல் (ஸல்) அவர்களின் நற்பண்புகளோடு அவர்களின் நகச்சுவையுணர்வை (sense of humor) தனியாக யாரும் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை அதைப் பற்றி ஏன் யாரும் எழுத மாட்டேன் என்கிறார்கள் என்று சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்கள் கேட்டதுதான் தாமதம். அதனை நீங்களே ஏன் செய்யக் கூடாது என்று அவர்களின் பால்யகால நண்பரான அதிரைநிருபரின் ஆஸ்தான கவிஞர் சகோதரர் சபீர் அஹ்மத் அபூஷாரூக் அவர்கள் கேட்க அவர்களோடு அந்த சந்திப்பில் உடனிருந்த அதிரைநிருபரின் நெறியாளர் சகோதரர் அபூஇப்ராஹீம் அவர்களும் அதனையே வழிமொழிய, அங்கே ஆரம்பித்தது அழகு தமிழில் அற்புதங்கள் நிறைந்த அல்லாஹ்வின் தூதர் அவர்களின் நகைச்சுவையுணர்வு தொடருக்கான ஆரம்பம்.

அதனைத் தொடர்ந்து மூன்று வாரங்கள் மின்னஞ்சல் கலந்துரையாடலுக்குப் பின்னர் 2012 செப்டம்பர் மாதம் 13ம் தேதி முதல் அத்தியாயம் தழிழால் தரம் உயர்த்தி தரணியிலிருக்கும் தமிழ்கூறும் மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் அதிரைநிருபரில் வெளியானது. அதுதான் "யா அத்தஹாக்!(சிரிப்பழகரே!)" http://adirainirubar.blogspot.ae/2012/09/blog-post_13.html என்ற முதல் பதிவு !

மாஷா அல்லாஹ் ! பால் பேதமின்றி அனைத்து தரப்பு மக்களின் மனதை கொள்ளை கொண்ட எளிய தமிழ் நடையில் எட்டுதிசைக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது. சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்களின் தமிழ் மொழியாடல் மிகச்சிறப்பாக இருக்க அவர்கள் எடுத்துக் கொண்ட கருவின் கருணை அவர்களை மிகச் சிறந்த இலக்கியத் தரம் வாய்ந்த எழுத்தாளராக அடையாளம் காட்ட வைத்திருக்கிறது இந்த தொடர் அல்ஹம்துலில்லாஹ் !

கடந்த வியாழன் வெளியான தொடரின் முதல் பத்தியே பறைசாற்றும் ! நேர்வழி பெற்ற மக்களின் மார்க்கம் நீதியுடன் ஆட்சி செய்யும் என்பதை.

துவக்கம் என்று எதுவானாலும் அதற்கு நிறைவு என்று இருக்கத்தான் செய்யும் அதுதான் மரபு, அவ்வகையில் இந்த தொடருக்கும் நிறைவு ஒன்று இருக்கிறது. அடுத்த பதிவுடன் நிறைவுக்கு வருகிறது இன்ஷா அல்லாஹ் !

அதிரையைச் சார்ந்த சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக மிளிரும் சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்கள் தொடர்ந்து மற்றுமொரு தலைப்பின் கீழ் அதிரைநிருபரில் அடுத்த பதிவுக்கு தயாராகுவார்கள் இன்ஷா அல்லாஹ்!

மக்கள் மனதை வெற்றி கண்ட இந்த தொடரின் நிறைவுக்கு பின்னர் விரைவில் புத்தகமாக வெளிவரும் இன்ஷா அல்லாஹ் !

ஏற்கனவே அதிரைநிருபர் பதிப்பகம் வெளியிட்ட முதல் நூல் என்ற பெருமையை சகோதரர் இபுராஹீம் அன்சாரி அவர்களால் எழுதிய "மனுநீதி மனிதகுலத்துக்கு நீதியா?" என்ற வெற்றித் தொடர் பெற்றிருக்கிறது (சுட்டியை தட்டிப் பார்க்க : இங்கே தட்டவும்). நூல் வெறிகரமாக கடந்த டிசம்பர் 9ம் தேதி 2012 அன்று வெளியிட்டு விற்பனையில் இருக்கிறது.

அதிரைநிருபரில் வெற்றிகரமாக வெளிவந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்ற தொடர்களான...

சகோதரர் அதிரை அஹமது அவர்கள் எழுதிய- "கவிதை ஓர் இஸ்லாமியப் பாரவை"

சகோதரர் S.அலாவுதீன் அவர்கள் எழுதிய - "கடன் வாங்கலாம் வாங்க"

சகோதரர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள் எழுதிய - "படிக்கட்டுகள்"

வெற்றிகரமாக நிறைவுக்கு வர இருக்கும் சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் எழுதிய "நபிமணியும் நகைச்சுவையும்"

விரைவில் புத்தக வடிவம் பெற இருக்கிறது இன்ஷா அல்லாஹ்...

இன்னும் சொல்லத்தான் விருப்பம் இருந்தாலும் அடுத்தடுத்த புதுமையான மாற்றங்களால் இன்னும் உங்கள் மனதை வெல்வோம் என்று மட்டும் சொல்வோம் இப்போதைக்கு !

அதிரைநிருபர் பதிப்பகம்

நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (புகைப்படமல்ல) ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | March 25, 2013 | , ,


கிண‌றுக‌ளில் இருக்கும் த‌ண்ணீர் இன்ப‌மாக‌ இருக்கும்; வீட்டு தேவைக‌ளுக்கும், குளிய‌லுக்கு உத‌வ‌க்கூடிய‌ வ‌கையில் இருந்த‌வை இன்றைக்கு இப்ப‌டித்தான் இருந்த‌து கிண‌று என்று வ‌ரைந்து காட்ட‌ வேண்டிய‌ சூழ‌ல்; சாதார‌ண‌மாக‌ ப‌த்து அடி ஆழ‌த்திற்கு மேல்தான் இருக்கும்; முன்பெல்லாம் ம‌ழைக் கால‌த்தில் குள‌ம், கிண‌று எல்லாம் நிறைந்து போதும் போதும் என்ற‌ள‌வுக்கு ம‌ழை கொட்டித் தீர்த்த‌து; ம‌ழை பெய்த‌ அந்த‌ காலை ம‌ண்ணெல்லாம் ஒருவித‌ ஈர‌ப்ப‌த‌த்தோடு ம‌ண்வாச‌மும் ம‌ண‌க்க‌ ம‌ன‌தினுள் ஒரு குளுமை ஆட்டோமேட்டிக்காக‌ குடி கொள்ளும்.

பால் என்ற‌ப‌டி சைக்கிளில் பால்கேனை க‌ம்பியால் த‌ட்டி ஒலியெழுப்பும் பால்கார‌ர்; ரெண்டு உள்ள‌ங்கைக‌ளையும் தேய்த்த‌ப‌டி வ‌ரும் அடுத்த‌ வீட்டுக்கார‌ர்; ச‌ட்டையை அக்குளில் வைத்து க‌ன‌மான‌ ப‌னிய‌னை போட்டு த‌லையில் துண்டை க‌ட்டிய‌ப‌டி வ‌ரும் கொத்த‌னார் என‌ அன்றைய‌ பொழுதுக‌ளில் ப‌ல‌வ‌ற்றை காண‌லாம் சொல்ல‌லாம்; ப‌ல‌த்த‌ ம‌ழை பெய்த‌ காலையில் கிண‌று நிர‌ம்பியிருக்கிற‌தா என்ற‌ ஆவ‌ல் ஏற்ப‌டும்; போய் பார்த்தால் கிண‌ற்றின் க‌ழுத்து வ‌ரை த‌ண்ணீர் ஏறி கிண‌ற்றின் த‌ண்ணீரில் முருங்கைக்காய் இலை மித‌ப்ப‌தையும், நீண்ட‌ கால்க‌ளையுடைய‌ த‌ண்ணீரில் ஓடும் பூச்சி ஓடுவ‌தையும் பார்க்க‌லாம் [அந்த‌ பூச்சி பேர் தெரிய‌வில்லை]; த‌ண்ணீர் கை எட்டும் தூர‌த்தில் இருப்ப‌தால் க‌யிற்றின் துணையின்றி நேர‌டியாக‌வே த‌ண்ணீர் அள்ளும் செள‌க‌ரிய‌ம் இருந்த‌து;

ஜில் ஜில்லென்று அதிக‌ குளிரில் இருக்கும் அந்த‌ த‌ண்ணீர்; ப‌ட‌க்கென்று குவ‌ளையில் த‌ண்ணீரை எடுத்து உட‌ம்பில் ஊற்ற‌ முடியாத‌ அள‌வுக்கு த‌ண்ணீர் குளிர்ந்து இருக்கும்; அத‌னால் ஒரு குவ‌ளை த‌ண்ணீர் முத‌லில் ஒரு கைக்கு ஊற்றிவிட்டு அப்புற‌ம் ம‌றுகைக்கு ஊற்றி மெதுவாக‌ த‌லைக்கு கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா ஊற்றி ஊற்றி குளிச்சு முடிய‌ற‌துக்குள் ஸ்கூலில் இன்ட‌ர்வெல் பில் அடித்துவிடுவார்க‌ள்; அதே போல் இர‌வினில் வான் நிலாவை கிண‌ற்று த‌ண்ணீரில் பார்த்தால் அற்புத‌ த‌ருணமாக‌ இருக்கும் என‌ கேள்விப்ப‌ட்டிருக்கேன் ஆனால் பார்த்த‌தில்லை; இனிமே அடாப் ஃபோட்டோஷாப்பில் பிர‌மாத‌மாக‌ பார்க்க‌லாம்; 

--------------------------------------------------------------------

ரப்பர் மிட்டாய் என்பது என் சிறுவயதில் படுபிரபலம்; ஒரு நீண்ட தடித்த கம்பு அதில் பாதி கம்புலேர்ந்து மலைப்பாம்பு உடலைபோல் வளைந்து ஒட்டப்பட்டு வைத்திருக்கும் இனிப்பு சொர்க்கம்; ரோஸ்,பச்சை,வெள்ளை என கலர்கள் பின்னி பிசைந்திருக்கும் அந்த ரப்பர் மிட்டாயில் வாட்ச் செய்து தருவார்; அதை என் கைகளில் ஒட்டிவிடுவார்; அதை கையில் ஒட்டியதும் வரும் பாருங்க ஒரு சந்தோஷம்; டுர் டுர் டூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ரெண்டு கையையும் பைக் ஓட்டுவது மாதிரி முறுக்கிக்கிட்டு அரைக்கால் டவுசரோடு ஓடியது இன்னிக்கு நினைச்சாலும் சிரிப்பா வருது; கையில் ஒட்டிய வாட்சை சாப்பிடாமல் வைத்திருந்து சாயங்காலம் சாப்பிட்டு இருக்கிறேன்; ரப்பர் மிட்டாய்க்காரர் தெருவிற்குள் வந்தால் ஒரே குதூகலம்தான்.

அதேபோல் காசு மிட்டாயும் பிரபலம்; அதாவது ரோஸ் கலர் மிட்டாயை சிறிய அதற்கேற்ப பிளாஸ்டிக்கில் சுருட்டி வைத்திருப்பார்கள்; அஞ்சு பைசா அல்லது பத்து பைசா விலை; அந்த மிட்டாயை சப்பி சப்பி காசு இருக்கிறதா இல்லையான்னு பார்த்தே ஓய்ந்துடுவோம்; ரொம்ப எக்ஸைட்டிங்கான மூவ்மெண்ட் அது; காசு தட்டுப்பட்டால் ரவுசு தாங்காது; ‘ஹேய் எனக்கு வந்துருச்சுல்ல வந்துருச்சுல்ல’ என யாருக்கு காசு வருதோ அவன் கொண்டாடுவான்;அழகான அருமையான நினைவுகள் அவை; மாங்காய் கீத்து கீத்தா சீவி அரிசி பொடியோடு தொட்டு சாப்பிடுறது 'வெளி தீனிகளில் ஃபர்ஸ்ட் ஆக இருந்தது சின்ன வயசில்; அதற்கு அடுத்த வெளி தீனிகளில் கல்கோனாதான் அதிகம்; மறக்க முடியாதது; கூகிளான் உதவியோடு இந்த படத்தை பார்க்கும் போது  சுஜாதா சொன்னதுதான் நினைவுக்கு வருது;

'விசிஆர்ல இருக்கிறமாதிரி ஒரு ரீவைன்ட் பட்டன் வாழ்க்கையிலும் இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்'


--------------------------------------------------------------------
அகலப் பாதையாக மாற்றும் பணி தொடங்கியதால் நம்ம ஊர் ரயில்வே ஸ்டேஷன் தற்போது செயல் இழந்து விட்டது; உட்காருவதற்க்காக போடப்பட்டிருந்த க்ரானைட் கற்கள் பெஞ்சுகளையும் பெயர்த்து எடுத்துட்டு போய்விட்டார்கள்; அலுவலகமும் பூட்டு; கிட்டத்தட்ட பொலிவை இழந்து விட்டதென்றாலும் அடிக்கிற கடல்காற்றும் இயற்கை ரம்மியமான சூழலும் காப்பாற்றிவிடுகிறது; 2015ல் திரும்ப ஆக்ட்டிவ் ஆகும் என்கிறார்கள் சந்தோஷம்; அகலப்பாதையில் ஓடும் ரயில்களில் ஜன்னலோர கம்பிகளில் எட்டிப்பார்க்கும் சிறுவர்களை காண ஆவலோடு வெயிட்டிங்;
--------------------------------------------------------------------

ப‌க‌ல் நேர‌ம் இர‌ண்ட‌ரை ம‌ணி இருக்கும்..ஒரு தேவைக்காக‌ ப‌ட்டுக்கோடை போக‌ வேண்டியிருந்த‌து. பைக் ப‌ஞ்ச‌ரான‌தால் பேருந்தில் போக‌லாம்னு பாயிண்ட் டூ பாயிண்ட் என‌ப்ப‌டும் பேருந்தில் உட்கார்ந்தேன். டிரைவ‌ருக்கு பின் த‌ள்ளி நாலு சீட்டுக்கு ஒரு வ‌ல‌துபுற‌த்தில் இட‌ம் கிடைத்த‌து. டிரைவ‌ருக்கு மேலே " அப்பா ப்ளிஸ் வேக‌மாக‌ போகாதீங்க‌ " என்ற‌ ஸ்டிக்க‌ர் வாச‌க‌ம் ஒட்டியிருந்த‌து ஸ்பெஷ‌ல். அதை அவ‌ர் க‌வ‌னிக்கிறாரோ தெரியாது ம‌ற்ற‌ எல்லோரும் க‌வ‌னிக்கிறார்க‌ள். ப‌க‌ல் சாப்பாட்டுக்கு பிற‌கான‌ நேர‌ம் என்ப‌தால் எல்லோரும் தூங்க‌ப் போகும் ஸ்டெஜிலேயே இருந்த‌ ச‌ம‌ய‌த்தில் க‌ல்யாண‌ வீட்டு ஸ்பீக்க‌ரில் அள‌விற்கு ஒரு ச‌த்த‌ம் எல்லோரையும் 'த‌ட்டி' எழுப்பிய‌து. 

க‌டைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த‌வ‌ரின் சைனா மாட‌ல் ஃபோனாம். ஒட்டுமொத்த‌ பேருந்திலிருந்த‌ எல்லோரும் திரும்பி பார்க்க‌ அப்ப‌வும் கொஞ்ச‌ம் அல‌ற‌ விட்டுட்டுத்தான் எடுக்கிறார். இந்த‌ மாதிரி ஹை டெஸிப‌ல் ச‌த்த‌ம் அவ‌ர் ப‌ர‌ம்ப‌ரைக்கே காது கேட்காம‌ல் போய்விடும் என்ப‌து உண்மை. அவ‌ர்கிட்ட‌ போய் 'ஏங்க‌ இவ்ளோ ச‌த்த‌மா ரிங்டோனை வைக்கிறீங்க‌ன்னு சொல்ல‌ யாருக்கும் தேவையும் இல்லை என்ப‌து மாதிரியான‌ ஒரு தோற்ற‌ம் நில‌விய‌து பேருந்தில். நானும் அமைதியாகி விட்டேன், சில‌ நேர‌ங்க‌ளில் சில‌ வேளைக‌ளில் அமைதியாக‌வே இருந்துவிடுவ‌து உட‌ம்புக்கு சேஃப்ட்டி. ஒன்ப‌தாவ‌து அல்ல‌து ப‌த்தாவ‌து கி.மீ.ட்ட‌ரில் வ‌ண்டி நின்ற‌து, இதுதான் எங்கேயும் நிற்காத‌ பேருந்தாச்சேன்னு ப‌க்க‌த்திலிருப்ப‌வ‌ரிட‌ம்…

“ஏங்க‌ இங்க‌ நிக்குது?'”

“இந்த‌....' ஸ்கூல்ல‌ ம‌ட்டும் நிக்குது என்னான்னு தெரிலீங்க‌ன்னார்..”

த‌வ‌று ந‌ட‌க்கிற‌து அதை த‌ட்டிக்கேட்க‌ யாருக்கும் நேர‌மில்லை. ந‌ம‌க்கேன்? என்ற‌ டோண்ட் கேர் ம‌ன‌ப்பான்மை த‌லைவிரித்தாடுகிற‌து. க‌ண்ட‌க்ட‌ரிட‌ம் பாக்கி ப‌ண‌ம் வ‌ர‌வேண்டியிருப்ப‌தால் நான் அந்த‌ மாதிரி கேள்வி ப‌தில் பிசின‌ஸ்க்கெல்லாம் த‌யாரில்லை.

--------------------------------------------------------------------

ஏழு ம‌ணிவாக்கில் மெயின்ரோடு சாரா க‌ல்யாண‌ ம‌ண்ட‌ப‌த்திற்கு ப‌க்க‌த்தில் ஒருத்த‌ர் த‌ள்ளு வ‌ண்டியில் வைத்து ஆவி ப‌ற‌க்க‌ சுண்ட‌ல், வெள்ளை கொண்ட‌க்க‌ட‌லை, சோழ‌/ல‌/க்க‌திர், அவிக்காத‌ நில‌க்க‌ட‌வை விற்பார்...ப‌ழைய‌ டால்டா நெய் ட‌ப்பாவில் செங்குத்தான‌ சிறிய‌ குழாயில் திரிவைத்து இருப்பார்..அந்த‌ ட‌ப்பாவில் ம‌ண்ணென்னையை ஊற்றி திரியை கொஞ்ச‌ம் ஈர‌மாக்கி கொளுத்துவார்..ஓர‌ள‌வு வெளிச்ச‌த்தில் எரியும் அவ்விள‌க்கே அந்த‌ த‌ள்ளுவ‌ண்டியின் பிர‌தான‌ அடையாள‌ம்..தெருவிள‌க்கு,ரோட்டில் போகும் வாக‌ன‌ங்க‌ளின் வெளிச்ச‌ம் இருந்தாலும் இந்த‌ விள‌க்கின் மேல் அவ‌ருக்கு ந‌ம்பிக்கை..எரியும் நெருப்பின் புகையும், சுண்ட‌லிலிருந்து வ‌ரும் ஆவியும் ஒன்றாக‌ க‌ல‌க்கும் அத் த‌ருண‌த்தை ஏதோச்ச‌யாக‌ பார்த்திருக்கிறேன்..முன்பு எல்லாம் தெரு வ‌ழியாக‌ வ‌ண்டியை த‌ள்ளிக் கொண்டே விற்ப‌னை செய்வார்..

'முன்ன‌ மாதிரி முடிய‌லீங்க‌'ன்னார்.. ஒருவித‌மான‌ ச‌லிப்பு பேச்சில்..ஆர்வ‌ங்கொண்டு தொழில் செய்ய‌ இய‌லாத அள‌வுக்கு உட‌ல்நிலை இருந்தாலும் தொழில் செஞ்சே ஆக‌வேண்டுமென‌ அவ‌ரை கொண்டு போய் த‌ள்ளியிருந்த‌து வ‌றுமை..சின்ன‌ சின்ன‌ மாங்காய் கீத்துக‌ள்,ப‌ச்சை மிள‌காய் ஆங்காங்கே தூவ‌ப்ப‌ட்டு,வெங்காய‌ம்,கேர‌ட் போன்ற‌வ‌ற்றோடு கூட்ட‌ணி அமைத்து மெஜாரிட்டியோடு ந‌ம் ம‌ன‌ங்க‌ளை வென்று ந‌ம்மை சாப்பிட‌வைக்கிற‌து அவ‌ரிட‌ம் இருக்கும் சுண்ட‌ல். வெள்ளை கொண்ட‌க்க‌ட‌லையும் சாப்பிட‌ ந‌ன்றாக‌ இருந்த‌து..

'ம‌ழை வ‌ந்தா என்ன‌ செய்வீங்க‌?'

'இந்தெ [சிக‌ப்பு க‌ல‌ர் தார்ப்பாயை எடுத்து காட்டுகிறார்] வ‌ண்டிய‌ சுத்தி மூடிட்டு நான் ஓர‌மா ஒதுங்கி நின்றுவேன்' 

'ம‌ழ‌ வ‌ந்தாத்தான் ந‌ல்ல‌து..ஆனா அதிக‌மா வ‌ர‌ப்பிடாது' க‌ண்டிஷ‌ன் போடுகிறார் என்னை பார்த்த‌ப‌டி.

'ஏங்க‌ அப்ப‌டி?'

'அப்ப‌த்தான் சீக்கிர‌ம் வித்துப்போவும் நானும் வூட்டுக்கு போயிடுவேன்ல‌'

ஒவ்வொருத்த‌ருக்கும் ஒவ்வொரு ப்ரார்த்த‌னைக‌ள்..வித‌வித‌மான‌ அப்ளிகேஷ‌ன் ஃபார்ம்க‌ள் பார‌மாக‌ கிடைக்கிற‌து எல்லோர் ம‌ன‌திலும்...

--------------------------------------------------------------------

ம‌ணி எக்சேஞ்சிலிலுள்ள‌ க‌வுண்ட்ட‌ரில் இருந்த‌ நேபாளிகூட‌ த‌மிழில்? பேசிக்கொண்டிருந்தார். அவ‌ர் வ‌ளைகுடா சின்ன‌ அடிமை (பெரிய‌ அடிமை ர‌க‌ம் வேற‌) லேப‌ர் உடையில் இருந்தார். அவ‌ன் திருப்பி இந்தியில் சொல்ல‌ இவ‌ர் மீண்டும் மீண்டும் த‌மிழிலியே பேச‌ அந்த‌ நேர‌ம் நான் அங்கு என்ட்ராவுறேன். இவ்வ‌ள‌வுக்கும் ப‌க்க‌த்தில் ஒரு ம‌லையாளி உட்கார்ந்திருக்கிறார் அவ‌ருக்குத்தான் மெட்ராஸி, த‌மிழ்நாட்டுக்கார‌ன் என்றாலே ஒருவித‌ எள‌க்கார‌ம் அவ‌ர் எப்ப‌டி உத‌வி செய்வார்.

நான் போய் அவ‌ரிட‌ம்,

'என்ன‌ங்க‌ பிர‌ச்ச‌னை'?

'இல்ல அண்ணே ப‌ண‌ம் அனுப்ப‌னும் ர‌ண்டு மாச‌மா இங்க‌தான் வ‌ர்றேன்' என்ற‌தும்,

என‌க்கு பேய‌றைந்த‌து போலிருந்த‌து, ஏனென்றால் அது வெஸ்ட்ர்ன் யூனிய‌னில் ம‌ட்டுமே அனுப்ப‌ வேண்டிய‌ எக்சேஞ் அது.. ச‌ராச‌ரியாக‌ ஒரு ட்ரான்செக்ச‌னுக்கு இருப‌த்து அஞ்சு ரியால் மொய் எழுதிவிடுவார்க‌ள். நான் அர்ஜென்ட்டா அனுப்ப‌ மட்டும் அங்கு வ‌ருவேன். ரூமிற்க்கு ப‌க்க‌மாக‌வும் உள்ள‌தாலும்,

'ஏங்க‌ உங்க‌ளுக்கென்ன‌ பைத்திய‌மா ஏன் இங்க‌ வ‌ந்து ப‌ண‌ம் அனுப்புறீங்க‌?'

'இல்லேண்ணே எங்க‌ ரூம்க்கார‌ய்ங்க‌ சொல்லித்தான் என‌க்கு வேற‌ ஏதும் தெரியாதுங்க‌'

'ப்ச்... எத்த‌ன‌ மாச‌மா இதுல‌ அனுப்புறீங்க‌?'

'நாலு மாச‌மா அனுப்புறேன்னே'

அட‌ப்பாவிக‌ளா... அவ‌ரின் ச‌ம்ப‌ள‌ம் வெளியில் சொல்ல‌முடியாத‌ அள‌விற்கு மிக‌ச் சொற்ப‌ம். அதிலும் வெஸ்ட்ர்னில் அனுப்பும்போது முழுமையாக‌ இருப‌த்து அஞ்சு ரியாலை ச‌ர்வீஸ் சார்ஜாக‌ எடுத்துவிடுவார்க‌ள் என்ப‌து அந்தோ ப‌ரிதாப‌மாக‌ ப‌ட்ட‌து என‌க்கு அன்னிக்கு அவ‌ரைப் பார்க்கும்போது..

'நேபாளிட்ட‌ போய் த‌மிழ்ல‌ பேசுறீங்க‌ அவ‌னுக்கு எப்ப‌டி புரியும்ங்க‌' என்று கோப‌மாக‌வே கேட்டேன்,

'இல்லீங்க‌ இல்லீங்க‌'

'ச‌ரி எந்த‌ ஊரு?'

' க‌முதிக்கு ப‌க்க‌ம்ணே'

ச‌ரி விடுங்க‌.. இனிமே இங்க‌ வ‌ராதீங்க‌.. என்னே.. உங்க‌ வீட்'ல‌ யாருக்காவ‌து பேங்க் அக்க‌வுண்ட் இருக்கா?'

'இல்ல‌ண்ணே'

'ச‌ரி யார் இருக்கா வீட்ல‌'?

'என் பொண்டாட்டி இருப்பா'

'ச‌ரி அவ‌ங்க‌கிட்ட‌ சொல்லி உட‌னே ஒரு பேங்க‌ அக்க‌வுண்ட் ஆர‌ம்பிக்க‌ சொல்லுங்க‌.. ஆர‌ம்பிச்ச‌தும் ஒரு ந‌ம்ப‌ர் பேங்க்லேர்ந்து கொடுப்பாங்க‌ அதை வாங்கி வெச்சுக்கோங்க‌'

அடுத்த‌ மாச‌ம் ப‌ண‌ம் அனுப்ப‌ வேறொரு எக்சேன்ஞ'ஐ நான் காமிக்கிறேன் அங்கே போங்க‌, அங்க‌ போய் ந‌ம்ப‌ரை காமிச்சு ப‌ண‌ம் அனுப்புங்க‌ 12 ரியால் இல்லாட்டி 15 ரியால்தான் வ‌ரும் என்ற‌தும் ரொம்ப‌ ந‌ன்றிண்ணே என்ற‌ப‌டி சொன்ன‌ அந்த‌ ம‌னித‌ரைப் பார்த்த‌போது என்னை அறியாம‌லேயே நான் க‌ல‌ங்கிவிட்டேன்..

உட‌ல் உழைப்பை ம‌ட்டுமே ந‌ம்பி இந்த‌ கொடூர‌ வெயிலில் வேலை செய்ய‌வ‌ரும் இவ‌ரைப் போன்ற‌வ‌ர்க‌ள் பாவ‌ம்.. இதுக்கு இங்க‌ வ‌ர‌வே தேவையில்லை..

அஹ்மது இர்ஷாத்

உண்ணாவிரதம்? - தலையங்கம் ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | March 24, 2013 | , , , , ,


இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக கடந்த சில வாரங்களாக தமிழக கல்லூரி மாணவர்கள் அறவழியில் உண்ணாவிரதம், பேரணி, ஆங்காங்கே முற்றுகை என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்பதை அன்றாட செய்திகளாக ஊடகங்களில் நாம் கண்டு வருகிறோம். கல்லூரிக்கு படிக்கச் சென்ற மாணவர்கள் இப்படி பொது பிரச்சினைகளுக்காக போராடுவது ஒன்றும் புதிது அல்ல. மாறாக! சேனல் 4 என்ற தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு ஆவணப்படத்தை கண்ட பின்புதான் இந்த e-தமிழினத்துக்கு சொரனை பீரிட்டு வந்துள்ளது. இது எவ்வளவு நாளைக்கு தாக்குப்பிடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த 30 வருடங்களாக தமிழக அரசியல் பந்திக்கான ஊறுகாயாகவே இலங்கை தமிழர் பிரச்சினையை தொட்டுக் கொண்டு விரிந்த வெள்ளித் திரையில் போடப்பட்ட கருப்பு வெள்ளை கலைப்படப் படைப்பாகத்தான் தமிழக மக்கள் கண்டு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையில்லை. அதெல்லாம் சரி, அரசியலில் எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதமென்று காந்திய வழியில் போராடுகிறோம் என்று வடக்கே துவங்கி தெற்கு வரைக்கும் அன்றாட பொழுது போக்குதான். இந்த கலாச்சாரம் நம் அரசியல் கட்சிகளிடம் மட்டுமே அடைக்கலமாகி இருந்ததைக் கடந்து, இன்று அந்த நோய் மாணவ சமூகத்திடமும் அசுரப் பலம் கொண்ட ‘புலி’வேஷம் போட ஆரம்பித்திருப்பது வருந்ததக்கது.

ஒரு சமூகத்தின் மீது இழைக்கப்படும் இனப்படுகொலைகள் நேற்று துவங்கிய சுவடுகள் அல்ல. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் நடைபெற்ற இனப்படுகொலைகள், இந்திய சுதந்திர போராட்டத்தில் வெள்ளையர்கள் நடத்திய இனப்படுகொலைகள், அவர்களுடன் சேர்ந்து எட்டப்பர்களாக வேலை செய்தவர்களில் ஒருவன் மகத்மா காந்தியை கொன்றது. ஆப்ரிக்கா நாடுகளில் குறிப்பாக காங்கோவில் அப்பாவி மக்கள் மீது நடைபெற்ற இனப் படுகொலைகள். அமெரிக்கா ஈராக், ஆப்கானிஸ்தானில் நடத்திய இனப் படுகொலைகள். சிரியாவில் பஸ்ஸார் அல் அசத் நடத்திவரும் இனப் படுகொலைகள். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் இனப் படுகொலைகள். விடுதலைப்புலிகள் தமிழ்(மட்டுமே)பேசும் முஸ்லிம்கள் மீது நடத்திய குரூர இனப்படுகொலைகள். அதே விடுதலைப்புலிகள் தன்னை ஆதரிக்காத தன் இனத்தைச் சார்ந்த தமிழ் மக்கள் மீது நடத்திய இனப் படுகொலைகள்.

குஜராத்தில் நரேந்திர மோடி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட இனப் படுகொலைகள். கோவையில் இந்து தீவிரவாதிகள் நடத்திய இனப் படுகொலைகள். இன்று வரை காஷ்மீரில் இந்திய இராணுவம் நடத்தி வரும் இனப் படுகொலைகள். கம்யூனிஸ்ட்களின் கைக்கடிகாரமாக இருக்கும் நக்ஸலைட்டுகள் நடத்தி வரும் இனப் படுகொலைகள். இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் இருவரும் சேர்ந்து அப்பாவி தமிழர்களை கொன்றது கொடூரமான இனப்படுகொலைகள். 

இவ்வாறான இனப் படுகொலைகளுக்காக உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடத்த வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு 24 மணிநேரமோ, வருடத்தில் 365 நாட்களோ போதாது. இவ்வுலக வாழ்வை சுகமானதாக நம்புகிறவன் இது போன்ற இனப்படுகொலையை செய்வான். மறுவுலக வாழ்வை மட்டுமே நம்புகிறவன் இது போன்ற இனப்படுகொலைகளை எதிர்த்து நிற்பான். இனத்திற்கான விடுதலை, ஈழம் என்று சொல்லிக் கொண்டு கோழை (விடுதலைப்)புலிகள் போல் சைனைடு குப்பியை தின்று சாகவும் மாட்டான், மனித வெடிகுண்டாக அப்பாவிகளை கொள்ளவும் மாட்டான்.

உண்ணாவிரதமென்பது ஒரு போராட்டமா? இஸ்லாமிய பார்வையில் உண்ணாவிரதம் சரியா?

உண்ணாவிரதம் என்பதெல்லாம் வெறும் நாடகமே! என்பது கடந்த கால வரலாறு. உண்ணாவிரதம் எல்லாம் கபடநாடக செய்தி ஊடகங்களின் கேமராக் கண்களின் வெளிச்சம் விழும் வரை மட்டுமே என்பது மாதக் கணக்கில் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு தெரியும். இது தொடர்பாக நகைச்சுவைக்கென்றே ஒரு தனிபதிவே எழுதலாம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில்நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 2:183)

நோன்பு சென்று போன சமூகத்தாருக்கும் கடமையாகி ஆரம்ப காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பை கடமையாக்கி இருக்கிறேன் என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான்.

நோன்பு பசியை உணரச் செய்கிறது. நல்ல பழக்கங்களை கற்றுத் தருகிறது. பிறருக்கு உதவும் எண்ணத்தை தாராளமாக வழங்குகிறது. மற்ற நேரங்களில் உதவும் எண்ணம் இல்லாதவர்கள் கூட நோன்பு காலங்களில் பிறருக்கு உதவி செய்யும் நிலைகளை காணமுடிகிறது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  "உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்." என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.  புகாரி 1905. Volume :2 Book :30

ஒழுக்கநெறிகளை கடைப்பிடிக்கவே நோன்பு ரமழான் அல்லாத நாட்களில் நபி(ஸல்) உபரியான நோன்பு நோற்க வழியுறுத்தியுள்ளர்களே தவிர போராட்டம் நடத்த அல்ல. 

நாங்கள் உண்ணாவிரதமெல்லாம் இல்லை, சுன்னத்தான நோன்பு வைத்துதான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்று  வெட்டி விளக்கம் சொல்லும் பெயர் தாங்கி முஸ்லிம்களும் நம்மில் பலர் உள்ளார்கள் என்பதற்காகவே மேற்சொன்ன ஹதீஸ்.

எப்படி தொழுகை அல்லாஹ்வுக்காக தொழுகிறோமோ, அது போலவே நோன்பும் (உண்ணாமல் பருகாமல் இருப்பது) அல்லாஹ்வுக்காகவே நோற்கிறோம். இதை தவிர்த்து வேறு எவனுக்காகவும் எதுக்காகவும் நோன்பு (உண்ணாமல் பருகாமல்) இருப்பது படைத்தவனுக்கு படைத்தவனின் கட்டளைக்கு மாறு செய்வதாகும்.

இலங்கை பிரச்சினைக்காக மட்டுமன்று எந்த ஒரு பிரச்சினைக்கும் உண்ணாவிரதம் என்பது இஸ்லாமிய கொள்கைக்கு முரணானது. இது போன்ற உண்ணாவிரத போராட்டங்கள் நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தராதது. ஆகவே முஸ்லிம்கள் உண்ணாவிரதம் இருப்பதும், அதற்கு ஆதரவு அளிப்பதும், வாழ்துவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

இலங்கை பிரச்சினையில் மாணவர்களின் உண்ணாவிரத போராட்டங்களின் முஸ்லிம் கட்சிகளும், இயக்கங்களும் அற்ப அரசியல் இலாபத்திற்காக கலந்து கொண்டு தங்களின் அனுதாபங்களை பெற்று வருகிறார்கள். முஸ்லிம் மாணவர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வது மிகவும் வருத்தமளிக்கிறது. அதுவும் அதிரை மாணவர்கள் கலந்து கொண்டிருப்பது அதற்கு அரசியல்வாதிகளும் அதனை ஊக்கப்படுத்துவதும் மிகவும் வருத்தமளிக்கிறது. படிக்கும் மாணவர்கள் தங்களுடைய எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் இதுபோன்ற விரும்பத்தகாத போராட்டக் களங்களில் கலந்து கொள்ளுவதும், அதை ஊடகங்கள் ஊக்கப்படுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிராக நின்று, அவர்களை கொன்று குவித்த கோழைகளான இந்த விடுதலைபுலிகளின் தலைவன் பிரபாகரனை முன்னிருத்தி நடத்தப்படும் எந்த போராட்டத்தையும் பாதிப்புக்குள்ளான முஸ்லிம் சகோதரனின் நிலையில் நின்று எந்த முஸ்லீமும் அதனை ஆதரிக்கக்கூடாது. பின் வரும் நபிமொழி எடுத்துக்காட்டும் நன்னெறியை அறிந்து கொள்ளுங்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனல்லன்’.  என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ மூஸா(ரலி) அவர்களும் இதை அறிவித்தார்கள்.  புகாரி: 6874, Volume :7 Book :87

முஸ்லிம்களுக்கெதிராக ஆயும் ஏந்தியவர்கள் இந்த விடுதலைப்புலிகள், அவர்கள் நம்மை சார்ந்தவர்கள் அல்ல, விடுதலைப்புலிகளை முன்னிருத்தி நடைபெரும் எந்த போராட்டத்தை எந்த ஒரு முஸ்லிமும் ஆதரிக்க கூடாது.

இலங்கை தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு ராஜபக்சே எந்த அளவுக்கு காரணமோ, அதுபோல் விடுதலைப்புலிகளும் தான் காரணம் என்பதை புரிந்து கொண்டு போராட்டம் நடைபெற்றால் இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வு விரைவில் கிடைக்கும். 

கொள்கையற்றவர்கள் ஒன்று கூடி ஆளுக்கொரு போராட்டங்கள் நடத்துவது வெறும் அரசியல் நாடகமே தவிர வேறொன்றுமில்லை.

பாதிக்கப்பட்டவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட இனம் மேலும் பதிப்புக்குள்ளாகாமல் இருக்கும் வகையில் நம்முடைய போராட்டங்கள் இருக்க வேண்டும் என்பதே மனிதநேயமுள்ள அனைவரின் விருப்பம்.

டாஸ்மார்க் போதையை, ஈழத்து போதை கேடுகெட்ட  ஊடக போதையின் பேருதவியால் வென்று விட்டது. படைத்தவனை மறந்து, படைப்பினங்களை நம்பிய இனம், அழிந்து போவது என்பது மட்டும் நிஜம். இதை யாராலும் மாற்ற முடியாது. 

தமிழினமே விழித்துக்கொள். இனத்தால், ழொழியால் பிரித்தாளப்படாத ஒரே மார்க்கம் அதுதான் உனக்கான ஒரே விடிவு, இஸ்லாம் என்ற நேர்வழி மட்டுமே..!

இனப் படுகொலைகளால் கொல்லப்பட்ட அனைத்து முஸ்லிம்களும் சொர்க்கத்தின் இனிமையான சுவாசத்தை அனுபவிப்பவர்களாக இருப்பார்கள் இன்ஷா அல்லாஹ்! இதனை தமிழ் ஈழத்து சொந்தங்களுக்கும் நினைவூட்டுகிறோம்.

விழித்திருக்கும்போதே மொழி வெறியூட்டி இனவெறிக்கு பாதைபோடும் கேடுகெட்ட கலாச்சாரத்தை வெறுத்து ஒதுக்குவோம், மனிதநேயம் போற்றுவோம் !

அதிரைநிருபர் பதிப்பகம்

நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம்...! தொடர்கிறது... 20

அதிரைநிருபர் பதிப்பகம் | March 23, 2013 | , , ,

என்னாச்சு?

அதிரை என் ஷஃபாத்:

முக்குளித் தாராவும்
முல்லை மலர்களும் என
செக்கடிக் குளம்பற்றி
சிலிர்க்க வைத்தவர்

ஆயத்த ஆடையைப்போல்
பிசகாது இவர் எழுத்து
அளவெடுத்து தைப்பதற்கு
அழகான சொல்லெடுப்பார்

இவரின்
கவிமேகம் சூழ்ந்துவிட்டால்
அடைமழைதான்
ஏனோ
நீலவான ஏகாந்தமாய்
நீண்டுவிட்ட விடுப்பில்

அணு உலைக்கெதிராய்
மனு பதிந்துச் சென்றவர்
அதிரை நிருபரை
அனுகாத தேனோ?

****

என்னாச்சு?

அஹமது இர்ஷாத்:

இங்கேயும் காணோம்
அங்கேயும் காணோம்

அலைவரிசையிலும்
அதிர்வுகள் இல்லை
தொலைபேசியிலும் தொடர்புகளில்லை

நாலைந்து வார்த்தைகளில்
நச்சென்று சொல்பவர்
போகிற போக்கிலே
புதுமையாய் எழுதுவார்

சிறுகதையாயினும்
கருவெனக் கொள்வது -நற்
கருத்தேயாகும்

இவர் நக்கலில்
விக்கல் வரும்
நையாண்டி தர்பாரில்
யூகி சேது

அதிரை நிருபரின்
பங்களிப்பாளர்களின் பட்டியலில்
பதுங்கியிருக்கும்
இந்தப் புலி
பாய்வதென்று?

****

என்னாச்சு?

எல் எம் எஸ் அபூபக்கர்:

இவர்
பதிவுகளைவிட
கருத்துகளாகப்
பகிர்ந்தவை மூலமே
பரிச்சயம் மிகுதி

நேரில் நிறைவான
இஸ்லாமிய வெண்பா
இவர்முகம், நண்பா

இவர் எழுத்து
ஒரு மார்க்கமாக இருக்காது
ஓரிறை மார்க்கமாகவே இருக்கும்

அதிரை நிருபரின்
சங்கிலி
நடுவில் நலிந்ததுபோல்
இவர் மெளனம்

என்னாச்சு?

Sabeer AbuShahruk

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 31 8

அதிரைநிருபர் பதிப்பகம் | March 22, 2013 | , ,


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

உலக பற்றின்மையின் சிறப்பு உலக சுகங்களை குறைத்துக் கொள்ள ஆர்வமூட்டல், ஏழ்மையின் சிறப்பு

மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்), அல்லாஹ் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம். (அல்குர்ஆன்: 35:5)

மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது. அவ்வாறில்லை! அறிவீர்கள். பின்னரும் அவ்வாறில்லை! மீண்டும் அறிவீர்கள். அவ்வாறில்லை நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள். பின்னர் மிக உறுதியாக அறிவீர்கள். பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 102:1-7)

இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை மறுமை வாழ்வு தான் வாழ்வாகும், அவர்கள் அறியக் கூடாதா? (அல்குர்ஆன் : 29:64)

''பணக்காரர்களை விட  ஐநூறு வருடங்களுக்கு முன் ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 487)

''சொர்க்கத்தில் உற்றுப் பார்த்தேன். அங்கு வசிப்பவர்களில் அதிகமானவர்களாக ஏழைகள் இருப்பதைக் கண்டேன். மேலும் நரகத்திற்குச் (சென்று) உற்றுப்பார்த்தேன். அங்கு வசிப்பவர்களில் மிக அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 488)

''சொர்க்கத்தின் வாசலிலே நான் நின்றிருந்தேன். அதனுள் நுழைபவர்களில் பெரும்பாலோர் ஏழைகளாக இருந்தார்கள். வசதியானவர்கள் (வாசலிலேயே) தடுக்கப்பட்டிருந்தனர். எனினும் நரகவாசிகள், நரகத்திற்கு கொண்டு செல்லப்பட கட்டளையிடப்பட்டனர்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைத் (ரலி) அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 489)

''நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அவர்களின் குடும்பத்தினர் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் தொலிக் கோதுமையின் ரொட்டியைக் கூட வயிறு நிரம்ப சாப்பிட்டதில்லை '' (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 491)

''நபி(ஸல்) அவர்கள், மரணிக்கும் வரை உயர்ந்த தட்டுகளில் சாப்பிட்டதே இல்லை. மேலும் அவர்கள் இறக்கும் வரை, மிருதுவான ரொட்டியைக் கூட சாப்பிட்டதில்லை.'' (புகாரி)              (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 494)

''முப்பது 'ஸாஉ' தொலிக் கோதுமைக்காக தன் உருக்குச் சட்டையை அடமானம் வைக்கப்பட்ட நிலையில் நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள்  (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)   அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 504)

''ஆதமின் மகனே! உன் தேவை போக நீ செலவு செய்வது உனக்கு சிறந்ததாகும். அதை நீ செலவு செய்யாமல் இருப்பது உனக்கு தீங்காகும். தேவையானவற்றை வைத்துக் கொள்வதற்காக நீ பழித்துரைக்கப்பட மாட்டாய். உன் நிர்வாகத்தின் கீழ் இருப்போருக்கு  (நீ உதவி செய்து) செலவைத் துவக்குவாயாக! என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 510)

''உங்களில் ஒருவர் தன் (எதிரிகளால்) உயிருக்கு அச்சமற்று இருப்பவராகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும், அன்றைய தேவைக்கு உணவு உள்ளவராகவும் இருந்தால், அவர் உலகத்தின் இன்பங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டவர் போலாவார்;'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உபைதுல்லா இப்னு மிஹ்ஸன் அன்சாரீ அல்குதமீ (ரலி) அவர்கள் (திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 511)

''ஒருவர் முஸ்லிமாகி, அவரின் உணவுத்தேவை போதுமான அளவு இருந்து, அவருக்கு அல்லாஹ் வழங்கியதை போதுமாக்கிக் கொண்டால், அவர் வெற்றி பெற்றுவிட்டார் '' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு இப்னுப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 512)

''இஸ்லாத்தின் பக்கம் நேர்வழி காட்டப்பட்டு, அவரின் வாழ்க்கைக்கு  போதுமான அளவிற்கு உணவு, இருப்பதை அவர் போதுமாக்கிக் கொள்பவராக இருந்தால், அவருக்கு நல்வாழ்த்துக்கள்;'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமுஹம்மத் என்ற ஃபழலாத் இப்னு உபைதுல் அன்சாரி (ரலி) அவர்கள் (திர்மிதீ)                          (ரியாளுஸ்ஸாலிஹீன்: 513)

''நபி(ஸல்) அவர்கள் தொடர்ச்சியாக பல இரவுகள் பசியுடனே கழித்துள்ளார்கள். அவரின் குடும்பத்தார் மாலை நேர உணவைப் பெற்றுக் கொண்டதில்லை. அவர்களிடம் இருந்த ரொட்டிகளில் தொலிக்கோதுமை ரொட்டி தான் அதிக அளவில் இருந்தது. என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அபூஹுரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ)             (ரியாளுஸ்ஸாலிஹீன்: 514)

''மனிதன், வயிற்றை விட வேறொரு கெட்டப் பையை நிரப்பிக் கொள்வதில்லை. முதுகு எலும்பு நேராக இருந்திட ஆதமின் மகனுக்கு சில கவள உணவு போதும். அவனுக்கு அவசியம் ஏற்படுமானால், (வயிற்றில்) மூன்றில் ஒரு பங்கு  அவனது உணவுக்காகவும், மூன்றில் ஒரு பங்கு அவன் தண்ணீர் குடிக்கவும், மூன்றில் ஒரு பங்கு   அவன் மூச்சு விடவும் போதும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகரீமா என்ற மிக்தாத் இப்னு மஹ்தீ கரிப் (ரலி) அவர்கள் (திர்மிதீ)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 516)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
  
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

நபிமணியும் நகைச்சுவையும்...! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | March 21, 2013 | ,

தொடர் : 26
போர்முனையின் பேரணியில் புன்னகை மன்னர்!

அமைதிக்கான அறைகூவலே யுத்தத்திற்கான ஓர் ஆயத்தப் பணிதான்! போரை வெறுப்பதன் மூலம் சமாதானத்தை எவராலும் ஏற்படுத்திவிட முடியாது. மாறாக, யுத்தத்திற்கு ஆயத்தமாக உள்ள நிலையில் சமாதானத்தை உறுதிப் படுத்த இயலும். 'தீய சக்திகளை நிர்மூலமாக்கி இவ்வுலகில் அல்லாஹ் (ஜல்) நமக்கு அருளியிருக்கும் சத்திய மார்க்கத்தின் அடிப்படையிலான வாழ்வுரிமையை நம்மிடமிருந்து எவனும் பறித்துவிடாத வகையில் தடுத்து நிறுத்திவைக்க ஆயுதம் ஏந்துவதில் தவறில்லை' என்பதே ஏந்தல் நபி (ஸல்) யின் தெளிவுமிக்கதொரு கோட்பாடு ஆகும்.

இந்த மானுட வர்க்கம் முழுமைக்குமான  இறுதி நாள்வரை நிர்வகிக்கப்படும் ஒவ்வொரு துறைக்கும் சரியான வழிகாட்டும் ஓர் இலட்சிய நாயகராய் அல்லாஹ் (ஜல்) வால் அனுப்பப்பட்ட அருட்கொடையான அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்று மாண்புகள் போர்முனையின் ராஜாரீக நிர்வாகத்தில்  கூட எத்தகைய ஒப்பற்ற ஒரு தன்மையையும் உயர்தரமான  மனித நேயத்தையும் கொண்டிருந்தன  என்பதைச்  சற்றுக் காண்போம்.  

'அல்லாஹ் ஒருவன்தான்'  என்று சொன்னதற்காக சத்தியத் தோழர்கள் அன்று சந்தித்த சோதனைகளும் கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல! மக்காவின் குறைஷிகளால் கொதிக்கும் பாலை மணலில், தலைகீழாகக் கட்டிப்  பலிகொடுக்கப்பட்ட விலங்கைப்போல் தொங்கவிடப்பட்டார்கள். சுடுமணலில் கிடத்தப்பட்டு கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி  அவர்கள் நெஞ்சின்மீது பாறாங்கற்களை  ஏற்றிவைக்கப்பட்டு வதை செய்யப்பட்டார்கள்.

கயிறுகளாலும் சங்கிலிகளாலும் கட்டப்பட்டு சித்தப் பிரமை பிடித்த பைத்தியங்களை இழுத்துச் செல்வதுபோல் தெருத்தெருவாக இழுத்துச் செல்லப் பட்டார்கள். இன்னும் சிலர், கனலாய்க் கொதிக்கும் நெருப்புக் கங்குகளின்  மீது நெடுஞ்சாண்கிடையாக கிடத்தப் பட்டார்கள். அந்தக் கொடும் நெருப்பில் வயிற்றுத் தோல் கருகி, வயிற்றின் கொழுப்பு உருகி அதன் காரணமாகவே அந்த நெருப்புக் கங்குகள் அணையும்வரை தொங்க விடப்பட்டார் தோழர் கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்கள்.  எழுதவே கூசிடும் இழிவான முறையில் அன்னை சுமைய்யா (ரலி) அவர்களைக் கொன்று விட்டுக் கொக்கரித்தான் கொடியவன் அபூஜஹில் என்பவன்!

இந்த அடாவடித்தனங்கள் எல்லாம் அத்துமீறிப் போனதால்தான் அண்ணலாருடன் தோழர்களும் அந்நிய தேசத்தில் அகதிகளாய்க் குடிபெயர்ந்தார்கள். அங்கும் சென்று நிம்மதியாய் இருக்கவிடாமல் விரட்டி விரட்டிச் சென்ற குறைஷிகள் அகதிகளான முஸ்லீம்களை அழித்தொழித்து விடும் நோக்கத்தில் ஒவ்வொரு முறையும் மதீனாவுக்கே சென்று போர் தொடுத்ததால் தான், தங்களின் பாதுகாப்புக்காக முஸ்லீம்கள் ஆயுதம் ஏந்த வேண்டியது  காலத்தின் கட்டாயமானது!

பத்ரு யுத்தம்:

'வெற்றி அல்லது வீரமரணத்தின் வெகுமதியான சுவர்க்கம்' இரண்டுமே முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஒன்றுதான்! எனவேதான் அறப்போருக்குத் தயாராகுமாறு  அண்ணலார் அழைத்தவுடன் "சிங்க நிகர் அன்சார்கள் சீறிக் கிளம்பினார்கள். புலி நிகர் முஹாஜிர்கள் புயலெனப் புறபட்டார்கள்".

படையினரை ஒழுங்குபடுத்தத் தொடங்கிய  தூய நபியவர்கள், கையில் ஓர் அம்புடன் ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்தவும் படையணியை நேர்படுத்தவும் வேண்டி வந்துகொண்டிருந்தார்கள். ஸவாத் இப்னு காஜியா (ரலி) என்ற நபித் தோழர் அணிவகுப்புக் கோடு தாண்டி சற்று வெளியே நின்றதால், "வரிசையில் நேராக நில்லும் ஓ ஸவாத்!" எனக் கூறியவாறு தன்  அம்பால் அவர் மார்பில் தட்டி நபிகளார் சரியாக அவரை நிற்க வைத்தார்கள்.

" ஓ  அல்லாஹ்வின் தூதரே!  எனக்கு வலியை நீங்கள் உண்டாக்கி விட்டீர்கள். நான் பதிலுக்கு, தங்களையும் அவ்வாறே செய்ய வேண்டும்" என்றார் ஸவாத்! சற்றே வியப்படைந்த நீதி  நபியவர்கள், சற்றும் தாமதிக்காமல், அம்பை ஸவாதின்  கையில் கொடுத்து, தன்  சட்டையைத் திறந்து காட்டி 'நெருங்கி வந்து பழிவாங்கிக் கொள், யா ஸவாத்" என்றழைத்தார்கள். ஸவாதின் செய்கை தோழர்களால் ஜீரணிக்க இயலாத ஒன்றாகி நின்றது! மொத்தப் படையணியின் கண்களும் ஸவாதை இப்போது மொய்த்து நின்றன!

உடனே, அண்ணலாரின் பொன்னிற மார்பில் சாய்ந்த ஸவாத் (ரலி) தன் மென்மையான முத்தங்களால் திருத்தூதரின் திருமேனியைக் குளிரச் செய்தார்! ஆச்சர்யத்துடன், "உம்மை இவ்வாறு செய்யத் தூண்டியதென்ன ஓ ஸவாத்?" என்ற வேந்தர் நபி (ஸல்) யின் வினவலுக்கு; 

யா ரசூலல்லாஹ்! "என்னை மன்னியுங்கள். இந்தப் போரில் நான் உயிர் பிழைப்பேனா என்று எனக்குத் தெரியாது! எனவே, வீரமரணத்தைத் தழுவுமுன், தங்களை முத்தமிட விரும்பினேன்! அதனால்தான் அவ்வாறு நடந்துகொண்டேன், அல்லாஹ்வின் தூதரே!" என்றார் ஸவாத் (ரலி).

தன் மீது அளப்பரிய பரிவையும்  விசுவாசத்தையும் இவ்வாறு வெளிப்படுத்தி நின்ற தன் அன்புத் தோழரின் பதிலால் மகிழ்ந்து மனம் நெகிழ்ந்து போன பெருமானார் (ஸல்) அவர்கள், சிரித்துக் கொண்டே அவரை ஆரத்தழுவி அன்புடன் ஆசீர்வதித்தார்கள்!

"அணி அணியாக வரக் கூடிய ஆயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு நான் உதவி செய்வேன்" (1)  என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி அட்சரம் பிசகாமல் நிறைவேறியது. ஆம்! போரில் பங்கேற்ற தோழர்கள் சொன்னார்கள். "பத்ருப் போரில்  சண்டையிட வேண்டும் என்றில்லை. நாங்கள் வாளை உருவிய மறுகணம் எதிரியின் தலை தெறித்து நிலத்தில் விழுந்தது!" அநியாயத்தையும் அக்கிரமத்தையும் ஆணவத்தையும் கொடுமைக்  குணமாய்க் கொண்ட வஞ்சகன் அபூஜஹில், மிருகவெறியன் உமைய்யா போன்ற குரூரத்தின் மொத்த உருவங்கள் எல்லாம் அல்லாஹ்வின் உதவியால் கொன்று வீசப்பட்டார்கள்!

உஹத் யுத்தம்:

தலைக்கவசத்தின் மீது தீக்கோழிச் சிறகை சொருகி இருந்த மாவீரன் ஹம்ஸா (ரலி) வும் சிகப்புத் தலைப்பாகை மல்யுத்த மாமன்னன்  அபூதுஜானாவும் பேரீத்தங்குலைகளை வெட்டி அறுவடை செய்வதுபோல் எதிரிகளின் தலைகளை சீவி எறிந்து கொண்டிருந்தார்கள்.மறைந்திருந்து விஷம் தோய்த்து  ஈட்டி எறிந்த வஹ்ஷியால் அங்கமெல்லாம் சிங்கத்தின் கம்பீரச் சாயல் கொண்ட மாவீரர் ஹம்ஸா (ரலி) வீர மரணம் அடைந்தார். மாமல்லன் அபூதுஜானா (ரலி)வும் சூறாவளியாகச் சுழன்றடித்து  எதிரிகளை நிர்மூலம் செய்த பின் தன் அத்தனை வீர தீர சாகசங்களையும் வெளிக்காட்டிவிட்டு ஷஹீதானார்.  அத்துடன், மிக அண்மையிலேயே திருமணம் செய்துகொண்ட புதிய மணமகன் ஹன்ஸலா (ரலி), புலியெனக் களத்தில் புகுந்து எதிரிகளைப் பந்தாடி இறுதியில் வீர சுவர்க்கம் அடையப்பெற்றார்.

அந்நிகழ்வில், சுவனத்தின் தென்றலான அண்ணலாரின் கவனம் வானை நோக்கித் திரும்பியது. பறவைகள் பறந்துசெல்வதைக் கூர்ந்து கவனிப்பதுபோல் பார்த்து  நின்ற பெருமானார் (ஸல்) அவர்கள், "உங்களது தோழர்! ஹன்ஸலா!  மேகத்து நீரை வெள்ளிப் பாத்திரங்களை வைத்து வானவர்கள் அவரைக் கழுவுகின்றனர்!"  'என்ன ஒரு புதுமை' என  யோசித்து நின்ற நபிகளாரிடம், பின்னர் அவர் மனைவி ஜமீலா சொன்னார்; ' அறப்போரில் மரணமென்பது சுவர்க்கத்தின் நுழைவாசல்' என்ற அறிவிப்பைக் கேட்டதுமே, 'ஹன்ஸலா போருக்குத் தாமதமாகிவிடும் என்று சாதாரணமாக தம்பதியர் மேற்கொள்ளும் குளிப்பைக் கூட நிறைவேற்ற நேரமெடுத்துக் கொள்ளாமல் போர்க் களத்தை நோக்கிப் பாய்ந்து சென்றார்' என்று!

வீரத்தின் விளைநிலம் வேந்தர் நபி (ஸல்) அவர்கள்: "வாட்களின் நிழலின் கீழ் சுவர்க்கமிருக்கிறதுஎன்பதைச் சும்மாவா சொன்னார்கள்!

இப்னு காமியா என்ற இழிவடைந்தவன், நம் தானைத்தலைவர் (ஸல்) அவர்களின் தலைக் கவசத்தை நோக்கி குறிவைத்துத் தாக்கியதில், அவர்களின் கவசத்தின் வளையங்கள் கன்னத்தில் புகுந்தன. காயம் உண்டானது! ஆனால், "முஹம்மது கொல்லப்பட்டார்" என்ற பொல்லாத வதந்தியை தப்பிச் செல்கையில் பரப்பிச் சென்றான் பொல்லாங்கு சூழ்ந்த அந்தப் பொறுக்கிப் பயல்! போர்க்களம் நிமிடத்திற்கு நிமிடம் அதன் உக்கிரத்தை உயர்த்திக் கொண்டே சென்றது.

பத்ருப் போரில் சிறைப் பிடிக்கப்பட்டு இரக்கமிகு நபியால் உயிர்ப் பிச்சை அளிக்கப் பட்ட உபை என்ற அயோக்கியப் பதர் போகிற போக்கில் , தனது  'அவ்த் என்ற குதிரை மீதேறி வந்து உன்னைக் கொள்வேன்' என்று நம் சத்தியத் தூதரிடம்  சவால் விட்டான். அந்தக் குடிகாரப் பயலை நோக்கி! 'அல்லாஹ் நாடினால், என் கையாலேயே நீ கொல்லப் படுவாய்!' என்றனர் உறுதியுடன் உண்மை நபியவர்கள். அதே அயோக்கியன் உபை இப்போது வந்து உஹத் மலைப் பள்ளத்தாக்கில் நின்று கொண்டு 'ஓ முஹம்மதே! நீர் உயிரோடு இருப்பின் நான் பிழைக்காது இருக்க வேண்டும்' என்று சப்தமிட்டான்.

அவனை நோக்கி வாட்களைத் திருப்பிய  தோழர்களைக் கை சைகையால்  தடுத்துவிட்ட அண்ணலார் அவர்களுக்கு, கன்னத்தின் காயத்திலிருந்து இன்னும் குருதி கசிந்து கொண்டிருந்தது. எனினும் "ஒட்டகத்தின் முதுகில் இருக்கும் ஈக்களை உதறிவிட்டதைப் போல" தன்னைச் சுற்றி நின்ற  தோழர்களை உதறி விட்டுச்  சடாரென எழுந்து நின்ற நபியவர்கள், 

 நபித்தோழர் ஹாரித் இப்னு ஸிம்மா (ரலி) விடமிருந்து ஓர் ஈட்டியை உருவிப் புயலெனப் பாய்ந்து சென்றார்கள்.  நாயகத்தின் தீர்க்கமான துணிச்சலைக்  கண்டு அசையக்கூட துணிவில்லாதவர்களாய் அசந்துபோய் நின்றனர் நபித் தோழர்கள்! (2) உருவிய வாளுடன் ஓங்காரமாகப் பாய்ந்து வந்தவன் மீது சற்றும் தாமதிக்காமல் நேருக்கு நேராக அவன் கழுத்தை நோக்கி  ஈட்டியைப் பாய்ச்சினார்கள் சரித்திரம் போற்றும் சர்தார் நபியவர்கள். எதிர்பாராத ஈட்டித்தாக்குதலால் நிலைகுலைந்துபோன அந்த அடிமுட்டாள் பதறிப்போய், சின்னாபின்னமாகச் சிதறிப்போய்  கீழே விழுந்து உருண்டு புறண்டு புறமுதுகு காட்டி ஓடித் தொலைந்தான் அந்த இழிவடைந்த உமைய்யாவின் சகோதரன் உபை.

மக்கத்து மடையர்களின் பாசறையை அடைந்த அவன் 'முஹம்மது என்னைக் கொன்று போட்டார்' என்று கதறினான்! அல்லாஹ்வின் எதிரிகள் அவன் கழுத்துக் காயத்தை ஒன்றும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை! எனினும் உபை என்ற அந்த உன்மத்தன் இறக்குமுன்பு இறுதியாகச் சொன்னான். 'என்னை அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் கொல்வதாகக்  கூறினார். நிச்சயமாக, என் மீது அவர் காறித் துப்பி இருந்தால்கூட நான் செத்தே போவேன்!' என்று விரக்தியில் வெறுப்பாய்ச் சொன்ன அவன் போகும் வழியில் சரஃப் என்ற இடத்தில் வைத்து செத்துத் தொலைந்தான்!

போரின் முடிவில் ஒரு சஹாபி சொன்னார்: 'நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஏதும் ஒரு முடிவினை நோக்கித் தீர்மானமாக இறங்கி விடக் கூடுமாயின், அவர்களுடைய துணிவுடமையோடு ஒப்பிடக் கூடிய துணிச்சல் வேறு எவருக்கும் கிடையாது!'-உண்மை! இது வெறும் புகழ்ச்சி இல்லை!

அலீய் இப்னு அபீதாலிப் (ரலி) சொல்கின்றார், "அன்றைய தினம் பொறுமையின் சிகரம் நபிகளார் பொங்கிவரும் சீற்றத்தோடு போராட்டத்தில் குதித்து நின்றார்கள். போர் மூர்க்கம் பெறும்போது நாங்கள் பெருமானாரின் முதுகுக்குப் பின்னே அபயம் தேடிக்கொண்டே  போரில் மும்முரம் காட்டினோம்."

அன்று "இறைவழியில் போரிட்டு வெட்டப்பட்டவர்களை அல்லாஹ் (ஜல்) நன்கு அறிவான். தங்களின் காயங்களிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருப்பவர்களாக மறுமை நாளில் அவர்கள் எழுப்பப் படுவார்கள். அது ரத்தம் போன்றிருக்கும். ஆனால், அதில் கஸ்தூரி வாசம் கமழ்ந்து கொண்டிருக்கும்" என அமரர்கள் வாழ்த்திடும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அன்போடு உரைத்தார்கள்.

அகழ் யுத்தம்:

அரபுலக வரலாற்றிலேயே புதுமையான ஒரு போர்! நபித் தோழர் ஸல்மான் ஃபார்ஸி (ரலி)யின் அரிய யோசனையின்படி, புதுமையான நடைமுறையாக  அகழ் வெட்டி தற்காப்பு ஏற்படுத்திக் கொண்ட ஒரு  போர். பெருமதிப்புடைய பெருமானார்  (ஸல்) அவர்கள் இப்போரில் மிகக் கடுமையாக உழைத்தார்கள். நபிகளாரைச் சிலபோது முஹாஜிர்களுடனும் சிலவேளைகளில் அன்சார்களுடனும் சில நேரம் மண்வெட்டியுடனும் சில நேரம் கூடைகளில் மண் சுமப்பவர்களாகவும் அவர்கள் எங்கும் எல்லோருடனும் கலந்து இருந்தமையைக் காண முடிந்தது!

அப்போது ஜூஅய்ல் (சின்ன வெட்டுக்கிளி) என்ற பெயருடையவர்  பனீ  தம்ரா கிளையிலிருந்து வந்து  இஸ்லாத்தைத் தழுவினார்.  தோற்றத்தில் மிக மிகச் சாமான்யனாக இருந்த அவரை அழைத்து அண்ணலார் "அம்ர்" (நீண்ட வாழ்வு) என்ற கருத்தாழமிக்க ஓர்  அழகிய பெயரைச் சூட்டினார்கள். அவரும் சஹாபாக்களோடு இணைந்து அகழில் மண் தோண்டும் காட்சியைக் கண்ட ஒரு முஹாஜிர் நபித்தோழர்;

"அப்பாவி மனிதனுக்குப்  பேருதவி செய்தனரே அண்ணலார் 
 'ஜூஅய்ல்' என்ற நாமத்தை 'அம்ர்' என்று மாற்றினரே!"

என அம்ருக்குப் பாடிக்காட்டினார்.  இதனைச் செவியுற்ற மற்ற சஹாபாக்களும் அதனை மீட்டு ஒரு பாடலாகவே அமைத்துப் பாடி மகிழ்ந்தனர். சிரமப் பட்டு நாளெல்லாம் மண் சுமந்த அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி  ஒரு புத்துணர்ச்சி தரும் சிரிப்பூட்டுவதாக அமைந்தது. பெருமானாரும் அந்தப் பாடலில் 'அம்ர்' என்றும் 'உதவி' என்றும் இரு சொற்கள் வரும்போது அழுத்தம் கொடுத்து உச்சரித்தார்கள்.

பின்னர், நாவலர் நபிகளார் வேறொரு பாடலை அங்கே அறிமுகம் செய்து வைத்தார்கள்:

"நீயல்லால் எமக்கெங்கே நன்னெறிகள் யா அல்லாஹ்!
தர்மங்கள் செய்தோமா! உன்னைத்தான் தொழுதோமா!

அடக்கினரே எதிரிகள் எம்மை! முனைந்தனரே கெடுக்கத்தான் எம்மை!

நாங்களோ மறுத்து நின்றோம்! எங்களுக்கு அருள்பொழிவாய் நீயே!

போர்க்களத்தில் உன் பெயர்சொல்லிப் பொருதக் கிளம்பிவிட்டோம்
உறுதிசெய் எம் பாதங்களை! இறுதிசெய் வெற்றியை எங்களுக்கே யா அல்லாஹ்!"

தூக்கத்தின் தந்தை

அந்த அன்சார் சிறுவனுக்கு வெறும் பதினாறு வயது! பெயர் ஸைத் இப்னு  ஸாபித். ஆர்வத்தில் அவரும் அறப்போரில் கலந்து கொண்டார். கடின வேலைகளுக்கு மத்தியில் போர்க் களத்திலேயே சிறிது கண்ணயர்ந்து போனார். அவர் நண்பரான உமரா என்பவர் விளையாட்டாக ஸைத் உடைய மண்வெட்டியையும் கடப்பாரையையும் எடுத்து ஒரு மறைவான இடத்தில் ஒளித்து வைத்துவிட்டார். தூக்கம் கலைந்து எழுந்தபோது தன்  உபகரணங்கள் காணாதது அறிந்து சங்கடத்தில் நின்றார் ஸைத்!

சஹாபாக்களில் சிலர் சற்று நேரம் அவரைத் தேடிஅலையவைத்து சிறிது பின்னர், ஸைத் உடைய சாமான்களை எடுத்துக் கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி, அவருடன் விளையாட்டாகச் சிரித்து மகிழ்ந்தனர்!

அப்போது அங்கு வந்து அதை அறிந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்புடன் ஸைதை நோக்கி  "யா அபூருகத்" (தூக்கத்தின் தந்தையே!) என்று அழகாக அழைத்தார்கள்! இதே ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள்தாம், அருள்மறை ஏந்திவந்த அண்ணல் நபிக்கு அருளப்படும் 'வஹீ''யை உடனுக்குடன் பதிவு செய்துகொள்ளும் பெரும் பேற்றைப் பிற்காலத்தில் பெற்றவர்! அருள்மறை பற்றிய ஆழ்ந்த ஞானமும் அது அருளப்பட்ட காலமும் அறிந்திருப்பதில் முதலிடம் வகித்த முக்கியமானவர் என்பதால், அருள்மறையை ஒன்று திரட்டித்  தொகுத்து அளிக்கும் அரிய பொறுப்பை அமீருல் முஃமினீன் உதுமான் (ரலி) அவர்கள், இவர் வசமே ஒப்படைத்தார்கள்!

தாயிஃப் முற்றுகை:

மக்கள் மனமறிந்து அவர்களைத் தன் இதயத்தால் ஆளும் மகோன்னதமான மக்கள் தலைவர் மாண்பு நபி (ஸல்) அவர்கள். சமூகத்தில் பெரும்பான்மைக் கருத்துக்கு மதிப்பளிக்கும் ஓர் உண்மையான ஜனநாயகவாதியாகத் திகழ்ந்தார்கள். திறமை மிக்க தலைமைத்துவம் என்பது மக்களுக்குத் தலைமை ஏற்றுச் செல்வது மட்டுமல்ல! சில சமயங்களில் மக்களைப் பின் தொடர்வதும் ஆகும் என்பதை நன்குணர்ந்த ஓர் யதார்த்தவாதியாகத் திகழ்ந்தார்கள் என்பதைக் கீழ்வரும் நிகழ்ச்சியில் காண்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தை முற்றுகையிட்டபோது அவர்களால் அம்மக்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, இறைவன் நாடினால்  நாம் நாளை மதீனாவுக்குத் திரும்பிச் செல்வோம் என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது நபித் தோழர்களுக்கு வருத்தமளித்தது!  அவர்கள்,  'இந்நகரை வெற்றி கொள்ளாமல் நாம் திரும்பிச் செல்வதா' என்று பேசிக் கொண்டார்கள். அனுபவம் வாய்ந்த ராஜதந்திரியான நபி (ஸல்) அவர்கள் மீண்டும் ஒருமுறை நாம் திரும்பிச் செல்வோம் என்று சொன்னார்கள். பிறகு தோழர்களின் தயக்கத்தைக் கண்டு, சரி. உங்கள் விருப்பம்போல் நாளை முற்பகலிலேயே போர் புரியுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் முற்பகலில் போர் புரிய, அதனால் பலத்த காயங்களுக்கு ஆளானார்கள். அப்போது மீண்டும் மாண்பு நபி (ஸல்) அவர்கள் இறைவன் நாடினால், நாளை நாம் மதீனாவுக்குத் திரும்பிச் செல்வோம் என்றார்கள்.

தத்துவத்தின் முத்துச்சுடர் முஹம்மது  (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னது நபித் தோழர்களுக்கு இப்போது மகிழ்ச்சியை அளித்தது. அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு வையகம் போற்றும் வள்ளல் நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.(3) 

தாத்துஸ் ஸுலாஸில்:

அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அறிவிக்கின்றார். இந்தப் போர் ஒரு கடுமையான குளிர் காலத்தில் நிகழ்ந்தது. தாத்துஸ் ஸுலாஸில் எனும் இப்போரின்போது, குளிர் மிக்க ஓர் இரவில் எனக்குக் குளிப்புக் கடமையாகி விட்டது. அவ்விரவில் அக்கடுங்குளிரில் நான் குளித்தால், நான் செத்தொழிந்து போய் விடுவேன் என்று நான் அஞ்சினேன். ஆகவே, நான் குளிக்காமல் 'தயம்மும்' செய்து, எனது மற்ற தோழர்களுடன் சேர்ந்து நான் சுப்ஹுத் தொழுகையைத் தொழுதேன்.

இவ்வாறு நான் 'தயம்மும்' செய்து தொழுததை, பிற்பாடு என் தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று கூறலானார்கள். ஈமான் எத்திவைத்த கோமான் நபியவர்கள் என்னை அழைத்து, 'அம்ரே! குளிப்பு உனக்குக் கடமையாக இருக்க, உன் தோழர்களுடன் சேர்ந்து நீ தொழுதாயா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'யா ரசூலல்லாஹ்! அந்தக் கடுங்குளிர்தான் என்னைக் குளிக்க விடாமல் தடுத்துவிட்டது! அருளாளன் அல்லாஹ் (ஜல்) 'உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளவேண்டாம். திட்டவட்டமாக அல்லாஹ் உங்கள் மீது அன்புடையவனாக இருக்கின்றான்' என்று தன் அருள்மறையில் கூறுவதை நான் நினைத்துப் பார்த்தேன்.(4) ஆகவேதான், இவ்வாறு நான் செய்தேன்' என்று கூறினேன்.

இதைக் கேட்டதும் செம்மல் நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டார்கள். வேறு எதுவும் என்னைக் கண்டித்துச் சொல்லவில்லை! (5)

மக்கா வெற்றி:

வெண்ணிறக்கொடி பட்டொளி வீசிப் பறக்க, பத்தாயிரம் வீரர்களுடன் பக்தி பூர்வத்தினராய் மக்காவில் இறங்கிய வெற்றிகளின் வேந்தர் நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு சொல்லொணாக் கொடுமைகளை இழைத்த அனைவருக்கும் சேர்த்து அவர்களுள் யாரும் எதிர்பாராத ஒரு பொது மன்னிப்பைப் பிரகடனப் படுத்தினார்கள். மக்களே, அறிந்து கொள்ளுங்கள். "மக்காவின் வெற்றி என்பது அதை வென்றவர்களுக்கு மட்டுமல்ல. அதில், தோற்றவர்களுக்கும் சேர்த்துத்தான்" என்பதைச் சொல்லாமல் சொல்லி அந்த அனைவரையும் அரவணைத்துக் கொண்டது  அந்தப் பொதுமன்னிப்பு!

இஸ்லாமிய வரலாற்றில் இறைத்தூதர் (ஸல்) அவர்களோ, இறை நம்பிக்கையாளர்களோ நடத்திக்காட்டிய எந்தப் போரை எடுத்துக் கொண்டாலும் சரி. எதிரிகள் ஆயுதங்களை எறிந்து விட்டு இணங்கிவிட்டால், அவர்களுக்கு எவ்வித இன்னலும் கொடுக்கப் பட்டதாகச் சரித்திரமே கிடையாது! என்ன கொடுமைகளை முஸ்லீம்களுக்கு இதற்குமுன்னர் அவர்கள் இழைத்திருந்தாலும் அவை மன்னிக்கப்பட்டன. மறக்கப்பட்டன! 

அத்தகைய மக்கத்துவாசி ஒருவர் அப்போது அண்ணலைக் கண்டு, பயத்தால் நடு நடுங்கி நின்றபோது, அவரை அருகே அழைத்த கருணை நபி (ஸல்) அவர்கள், மிகுந்த அடக்கத்துடன், "பயப்படாதே! ஏன் நடுங்குகிறாய்? நானொன்றும் அரசனல்ல! காய்ந்த இறைச்சியை உண்டு வாழ்ந்த ஒரு சாதாரணக் குறைஷிப் பெண்மணியின் மகன்தான் நான்! என்னிடம் பயம் வேண்டாம். அல்லாஹ்வைப் பயந்துகொள்!' என்றார்கள் வெற்றித் திருமகனார் வேந்தர் நபியவர்கள். இத்தகைய இனிய பண்புகளின் வழிகாட்டுதலிலும் மன்னிக்கும் மாண்பினாலும் தான் இஸ்லாம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போனது! 

தபூக் யுத்தம்:

கி.பி. 630 ஆம் ஆண்டு பைசாந்திரியர்களை நோக்கிய இப்பெரும் படையெடுப்பில் சிரியாவை ரோமர்களின் பிடியிலிருந்து விடுவிக்க படைகொண்டு பகைவென்ற பார் போற்றும்  நபிகளார் பெரிதும் முயற்சி எடுத்தார்கள். "எவனொருவன் இறைவழியில் அறப்போராட்டத்தை மேற்கொள்ளாமல், அதைத் தன் மனதளவில் கூட நினைக்காமல் இறந்து விடுகிறானோ, அவன் நயவஞ்சகத் தன்மையின் ஒரு பகுதியைத் தன்னுள் கொண்டவனாகவே இறந்தான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  நவின்றார்கள்.

அவ்ஃப் இப்னு மாலிக் அஷ்ஜா (ரலி) கூறினார்:

தபூக் போர் நேரத்தில் அவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களைக்  காணச்  சென்றார். அந்த நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  தோலினால் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட  ஒரு குறுகலான  சுற்று வடிவக்கூடாரம் அமைத்து அதன் உள்ளே  உட்கார்ந்து இருந்தார்கள். அண்ணல் நபிக்கு ஸலாம் சொல்லி நின்ற அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி), அண்ணலின் அனுமதியை வேண்டி நின்றார். உடனே, அண்ணலார்  அவரை  வரவேற்கத்  திரும்பி உள்ளே அழைத்தார்கள். கூடாரமோ மிகக் குறுகலானது! அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்களோ, சற்று நகைச்சுவை உணர்வு கொண்டவர். ஆதலால், அவர் கூடாரத்தில் தலையை மட்டும் நுழைத்து நின்றவாறு நபிகளாரைப் பார்த்துக் கேட்டார். 'யா ரசூலல்லாஹ்! நான் முழுமையாக உள்ளே நுழைந்து விடவா?'  என்றார்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு, அந்தப் போர்க்களத்தின் சூடான சூழ்நிலையிலும் அவர் கேட்டு நின்ற விதம் சிரிப்பை வரவழைத்து விட்டது. அண்ணலார் சிரித்துக் கொண்டே ஆமாம், நீ முழுமையாகவே உள்ளே வந்து விடு', என்றார்கள். பின்னர் அவர் அந்தக் கூடாரத்திற்குள் நெளிந்து வளைந்து உள்ளே  நுழைந்து விட்டார். (6)

அண்ணலார் அவர்கள் தங்களின் தூதுத்துவப் பொறுப்பில், ஆயுதங்கள் ஏந்திப் போராடும் போர்க்களத்தில், பகைவர்களை எல்லாம் அடக்கி வெற்றி காணும் மிகச்சிறந்த படைத் தளபதியாக இருந்தபோதிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்றும் அமைதியை நேசித்தவர்களாகவும் யதார்த்தமான இதுபோன்ற நகைச்சுவையை போர்க்களத்தின் பேரலையில் கூட ரசிப்பவர்களாவுமே இருந்தார்கள்.

"என் சமுதாயத்தின் ஒரு கூட்டம் எப்போதும் உண்மைக்காகப் போராடிக் கொண்டும் அநியாயக்கார எதிரிகளை வெற்றியடைந்து கொண்டும் இருக்கும். இது எதுவரையில் என்றால், அவர்களின் இறுதிக் கூட்டம் தஜ்ஜாலுடன் போரிடும்வரைத் தொடரும்" என்றருளினார்கள் இனிய நபியவர்கள். அத்தகைய மேன்மைமிகு கூட்டத்தினரில்  அல்லாஹ் ரப்புல் ஆலமீன்  நம்மையும் ஆக்கி அருள்வானாக.

o o o 0 o o o
(1) அல்குர்ஆன்: 8:9
(2) வாகிதீ:14
(3) புஹாரி 4325 :அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(4) அல்குர்ஆன்:4:29
(5) அபூதாவூத் 283: அம்ர் இப்னு ஆஸ் (ரலி)
(6) அபூ தாவூத்4982: அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி)

இக்பால் M.ஸாலிஹ்

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு மீண்டும் சாத்தியமா? 52

அதிரைநிருபர் பதிப்பகம் | March 19, 2013 | , , ,


அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டுமென்று பலதரப்பிலிருந்தும்  குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. சில அரசியல் கட்சிகள் குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை நடத்தியது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.வைகோ தமிழகத்தின் பல பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு மதுக்கடைகள் ஒழிப்புக்கு ஆதரவாக மக்கள் ஆதரவைத் திரட்ட முற்பட்டார். பல இஸ்லாமிய இயக்கங்கள் தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் மறியல் போராட்டம் என்றெல்லாம் நடத்திக் காட்டின. பல மகளிர் அமைப்புகள் அடையாள உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தின. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கூட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. திரு. சக்தி பெருமாள் என்ற ஒரு பெரியவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து சாகும் நிலையில் கைது செய்யப்பட்டுக் காப்பாற்றப்பட்டார். இவைகளைத் தொடர்ந்தும் கண்ணால் காணும் காட்சிகளின் அவலங்களையும் முன்னிட்டு முழுமதுவிலக்கை தமிழ் நாட்டில் மீண்டும் அமுல் படுத்த வேண்டுமென்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.  இந்த பிரச்னை பற்றி நாமும் சற்று விவாதிக்கலாம்.



ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு நீதிக் கட்சியும் பிறகு காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருந்த காலங்களில் தமிழ் நாட்டில் மதுவிலக்கு அமுலில் இருந்தது. அப்போது கூட திருட்டுத்தனமாக சிலர் மறைவான இடங்களில் சாராயம் போன்றவற்றைக் காய்ச்சி அச்சத்துடன் குடித்து வந்தார்கள். அந்தப் பழக்கம் உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு பேரூராட்சி என்று எடுத்துக் கொண்டால் அங்கு அதிகபட்சமாக  ஐந்து பேர்கள் மட்டுமே அப்படி இருப்பார்கள். சில நேரங்களில் காவல்துறையிடம் மாட்டிக் கொள்வார்கள். எனக்கு சிறுவயதாக இருந்த போது இப்படி சாராயம் காய்ச்சிய ஒருவரை கைது செய்து  சேது ரோடு வழியே கையைக் கட்டி காவல்துறை இழுத்துச் சென்றதை ஊரே கூடி  வேடிக்கை பார்த்தது நினைவில் நிற்கிறது.  

காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா அவர்களை முதலமைச்சராகக் கொண்டு ஆட்சிக்கு வந்தது. அந்நேரம் மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுந்தபோது “ அரசின் வருமானத்துக்காக மதுவிலக்கை ரத்து செய்வது  மூட்டைப் பூச்சிக்காக வீட்டைக் கொளுத்துவதற்கு ஒப்பானது “ என்று கூறினார். இந்த நேரத்தில் அண்ணா மறைந்தார்.

அண்ணா அவர்கள் மறைந்த பிறகு அண்ணாவின் இதயத்தைக்  கடனாகக் கேட்டு இரங்கற்பா எழுதிய கலைஞர் கருணாநிதி அவர்கள் அண்ணாவை புகழ்ந்து பாடியபோது  

“ஆந்திரத்து பிரம்மானந்த ரெட்டிகாரும் 
ஆஹா நீதானே அசல் காந்தியவாதி என்று 
ஆராதனை செய்திட்டார் 
மதுவிலக்கை தீவிரமாய் ஆக்குகின்றீர்! 
பல மாநிலத்தில் கை கழுவி கலயம் கட்டிவிட்டார் மரங்களிலே என்று 
கிரி என்றால் மலையன்றோ! 
அந்த மலை தழுவும் முகிலானார் நம் அண்ணா”

என்று  குறிப்பிட்டு  கவி பாடிவிட்டு அண்ணாவுக்குப் பிறகு தானே  முதலமைச்சராக வந்த பிறகு ஒரு சுப முகூர்த்தநாளில் மதுவிலக்கை தமிழ் நாட்டில் ரத்து செய்து மதுக்கடைகளை திறந்துவிட்டார். மதுக்கடைகளைத் திறக்க வேண்டாம் என்று தி மு க ஆட்சிக்கு வருவதற்கு துணையாக நின்ற முஸ்லிம் லீக் மற்றும் இராஜாஜி ஆகியோர் விடுத்த கோரிக்கைகள் கலைஞரின் காதுகளில் விழவில்லை.

கலைஞர் கருணாநிதியின் மீது ஏற்பட்ட கருத்துமாறுபாடுகளால் தி மு க வை விட்டு விலகி தனிக் கட்சி கண்டு வென்று ஆட்சியைப் பிடித்த எம் ஜி ஆர் காலத்தில் மீண்டும் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வரப்படுமென்று நன் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ “ தைரியமாகச்சொல் நீ மனிதன் தானா? இல்லை!  நீதான் ஒரு மிருகம்! இந்த மதுவில் விழும் நேரம்! “என்ற திரைப் பாட்டுக்கு வாயசைத்துவிட்டதோடு தன் கடமை முடிந்தது என்று எண்ணி மதுக்கடைகளை தனது ஆட்சிக் காலம் முழுதும் தொடர்ந்தார். அத்துடன் வெறும் சாராயக் கடைகளாக இருந்தவை ஒயின் ஷாப் என்று அழைக்கப்படும்  சீமைச்சாராயம் விற்கும் கடைகளாகவும் அப்பனே! ராமச்சந்திரா ! என்று கோஷம் போட்டுத் துவக்கப்பட்டன.

அதன்பின் கருணாநிதி முதல்வராகி பின் ஜெயலலிதா அம்மையார்  முதல்வரானாலும் எத்தனையோ மாற்றங்கள் கண்டாலும் மதுவிலக்கு மட்டும் மீண்டும் அமுல் படுத்தப் படவில்லை. மாறாக, ஜெயலலிதா ஆட்சியில்  மது விற்பனைக்காக   டாஸ்மார்க் என்ற அரசின் நிறுவனத்தை ஏற்படுத்தி , படித்த இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி அரசே சொந்தமாக மதுக்கடைகளை நடத்த ஆரம்பித்தது மட்டுமல்லாமல் அந்த மதுக்கடைகளை ஒட்டி அரசே “ பார்” என்று அழைக்கப்படும் மதுபானம் அருந்தும் வசதிகளைக் கொண்ட விடுதிகளையும் நடத்த ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது. 

1983 ஆம் ஆண்டில் வெறும்  139 கோடி ரூபாய்களாக இருந்த மதுக்கடைகளின் ஏலத்தின் மூலம் இருந்த அரசின் வருமானம்  2002 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட இந்த அரசு மதுக்கடைகள் மூலம்    2,800  கோடி ரூபாய்களாக வானுக்குயர்ந்தது.  இந்த வருமானம்   2013ஆம் ஆண்டில்  25,000 கோடி ரூபாய்களாக இன்னும் உயர உயர்ந்து இருக்கிறது.  

இப்படிப்  பல ஆயிரம் கோடிகளாக மதுவிற்பனை மூலம் தமிழக அரசு கொட்டிக் குவித்திருக்கும் வருமானத்துக்குக் காரணமாக இருப்பது செல்வந்தர்கள் தரும் வரிகளல்ல. இந்த வருமானத்தின் பின்னணியில் இருப்பது ஒரு சமூக அவமானம். அரசு தனது வருமானத்தைப் பெருக்க எவ்வளவோ வழிகள் இருந்தும் இப்படி சாராயக்கடைகள் மூலம் பெறுவது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பிக்கொள்வதற்கு ஈடானது. 

கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேலான ஏழைத் தமிழர்கள் , கூலித் தொழிலாளிகள், நடுத்தர வர்க்கத்தினர் , பள்ளி கல்லூரி மாணவர்கள், சொல்வதற்கு வெட்கக்கேடாக இருந்தாலும் உண்மையில் பல பெண்கள் ஆகியோர் மதுவின் போதைக்கு அடிமையாகி தங்களின் வாழ்வையும் தாங்கள் குடும்பத்தினரின்  வாழ்வையும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் கவுரவத்தையும் துயருக்குள்ளாக்குகின்றனர்.  

முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள்  போன்ற அனைத்துப் பாதகங்களுக்கும் குடியே அடிப்படைக் காரணமாக அமைந்து இருக்கிறது.  

அறுபது சதவீதத்துக்கும் அதிகமான சாலை விபத்துக்கள் குடிப்பழக்கத்தின் காரணமாகவே நிகழ்வுறுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 

குடும்ப வன்முறையை கோலோச்சி  நிற்கச்செய்வதும் குடிப்பழக்கமே. குடிகாரக் கணவன்மார்களால் கொடுமைப் படுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பெற்ற குழந்தைகளை பேணாமல் அவர்களுக்கு கல்வி யறிவு தருவதில் சிந்தை செலுத்தாமல் இள வயதிலேயே அவர்களை வேலைக்கு அனுப்பி அவர்களின் கூலியைக் கூட தனது குடிப்பழக்கத்துக்கு பறித்துக் கொள்ளும் பாவிகளாக பெற்றோர் மாறும் சமூக அவலம் சந்தி சிரிக்கிறது. 

குடிக்கும் நிகழ்ச்சி இல்லாத சமுதாய நிகழ்ச்சிகளை சந்திக்க முடியவில்லை. பிறந்தநாள், கருமாதி செய்யும் நாள் முதல் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கூட குடிப்பதற்கும் குடிப்பவர்களுக்கும்  சிறப்பு ஏற்பாடுகள் செய்து வைப்பது சமூகப் பழக்கத்தில் தொத்து வியாதி போல்  குடியேறிய குஷ்டரோகமாகிவிட்டது. 

மனிதனுடைய ஒரு சில மணித்துளிகளின் சிறிய மகிழ்ச்சிக்கான விலை பண்பாட்டுச் சீரழிவு என்று ஆகிவிட்டது. 

படிக்கும் மாணவர்கள் பள்ளி கல்லூரிக்கு வரும்போதே குடித்துவிட்டு வரும் பழக்கத்துக்கும், தொழிலாளர்  கொஞ்சம் ஊத்தாமல் வந்தால் வேலை  செய்ய முடியவில்லை என்கிற நிலைமைக்கும் ஆளாகிவிட்டார்கள்.   

அரசியல் காரணங்களுக்காகவும் பொருளாதாரக் காரணங்களுக்காகவும் வாடகைக் கொலையாளிகளுக்கு வழங்கப்படும் இன்றியமையாதவைகளில் மது பாட்டில்கள் நீங்கா இடத்தைப் பெற்றுவிட்டன. மது குடித்த மயக்கத்தில் அடையாளம் காட்டப் படுபவர்களை வெட்டவும் குத்தவும் பின் விளைவுகளை சிந்திக்காமல் தலைப்பட்டுவிடுகிறார்கள். மது உள்ளே போனதும் மதி வெளியே வந்துவிடுகிறது.  மதுக்கடைக்குப் போக பணம் தராத தாயைக் கொன்ற மகனையும், மதுப்  பழக்கத்துக்காக பணம் இல்லாமல் பெற்ற மகளை விபச்சாரச் சந்தையில் விற்ற தகப்பனையும், மது போதையில் மருமகளை பெண்டாள நினைத்த மாமனாரையும், மதுக்கடைகளில் குடிபோதையில் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்ட நண்பர்களையும் சமீப கால  சரித்திரம் சந்தித்துவருகிறது.  

மாலை நேரங்களில் குடும்பங்களுடன் பொதுப் பேருந்துகளில் பயணிக்க முடியவில்லை. அருகில் வந்து அமர்பவர்கள் அடித்துவிட்டு வருவதால் ஒரு ‘சக்தி பிறக்குது நம் மூச்சினிலே. ‘

கோயில்கள், பள்ளிவாசல்கள் , தேவாலயங்கள்  பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவை அமைந்திருக்கும் இடங்களுக்கு நெருக்கமான இடங்களில் மதுபானக் கடைகள் வைக்கக்கூடாது என்பது விதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் உண்மையில்  இந்த விதிகள் நடைமுறையில் விடைகொடுத்து அனுப்பப்பட்டு விட்டன.  

நெறிமுறைகளைக் கூட பின்பற்றாமல்  இப்படி இந்த மதுக்கூடங்களை அரசே முன்னின்று நடத்துவது ஏன்?   மதுவிலக்கை ஏன் மீண்டும் நடைமுறைப் படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்பினால் இதற்காக சொல்லப்படும் தலையாய  காரணங்கள் (1) கள்ளச்சாராயமும் கள்ளச்சாராய சாவுகளும் அதிகரிக்கும் என்பதும் (2) குடித்துப் பழகியவர்கள் அண்டையில் உள்ள மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று குடிப்பதால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய வருமானம் அயல் மாநிலங்களுக்குச்  சென்றுவிடுகிறது என்பதுமேயாகும். 

கள்ளச்சாரயத்தைக் கட்டுப்படுத்த அல்லது ஒழிக்க அதிகாரம் பெற்ற அரசு இயந்திரம் தனக்குத்தானே நாங்கள் ஒரு வேஸ்ட் என்று ஒப்புக்கொள்ளத்தான் இந்த விவாதம் உதவும். ஆட்சி அதிகாரங்களைக் கையில் வைத்திருக்கும் அரசு இப்படிச்  சொல்வது கையாலாகத்  தனம்  என்றுதான் வருத்தத்துடன் குறிப்பிடவேண்டி இருக்கிறது. கள்ளச்சாராயத்தை முழுதுமாக ஒழித்துவிட  முடியாது என்று அரசே நினைத்து  சாராயக் கடைகளை திறந்து வைத்திருப்பது போல் கொலை, கொள்ளை குற்றங்களை முழுதுமாக ஒழிக்க முடியவில்லை என்று இந்திய தண்டனை சட்டத்தை இரத்து செய்துவிடலாமா? 

தமிழகத்துக்கு வரவேண்டிய வருமானம்  அண்டை மாநிலங்களுக்கு சென்று விடுகிறது என்கிற வாதமும் பொருளற்றது. குடிக்கும் எல்லோரும் ஒரு டூரிஸ்ட் பஸ்ஸை எடுத்துக் கொண்டு அடிமடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு அண்டை மாநிலங்களுக்கு  தினசரி போய் குடிப்பதில்லை.  அந்தந்த மாநிலங்களின் எல்லை ஓரங்களில் இருக்கும் ஒரு சிலர் மட்டுமே போய் வர முடியும். மொத்த மக்கள்தொகையில்,  இப்படிப் போவோரின் அளவு, கடலில் கரைக்கப்பட்ட  பெருங்காய அளவே. மேலும் வருமானம் என்பதைப் பார்க்கும் அரசு தனது மாநில மக்களின் மானம் போவதை ஏன் பொருட்படுத்த மறுக்கிறது?  வருமானத்துக்காக மானத்தை இழக்க அரசுகள் தயாராக இருக்குமானால் மானம் தொடர்பான வேறு தொழில்களையும் அரசே விடுதிகள் தொடங்கி வியாபாரமாகச் செய்யலாமே.  அத்துடன் கஞ்சா முதலிய போதைப் பொருள்களையும் அனுமதித்து கல்லூரி வாசல்களில் அரசின் சார்பில் கடை திறந்து நடத்தலாமே!  இவையெல்லாம் கண்துடைப்புக் காரணங்கள். 

உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் இரு அரசியல் கட்சிகளே முதன்மைக் கட்சிகள். இந்த இரு முதன்மைக் கட்சிகளில் மாறி மாறி ஒன்று ஆளும் மற்றது எதிர்க் கட்சியாக மக்கள் மன்றத்தில் இருக்கும்.  இந்த இரு கட்சிகளிலும் ஒரு குறிப்பிட்ட சமூக அல்லது சாதியைச் சேர்ந்த சக்தி படைத்த மோகனர்களும் பாலர்களும் ரட்சகர்களும் உடனுறைத் தோழிகளும் தோழர்களும் இளவரசிகளும் மொடாக்குடியாக்கும் மிடாசுகளும்  மிகப் பெரிய அளவில் மதுபான ஆலைகளை ஏழைத்  தமிழ் மக்களை நம்பியே நடத்தி வருகிறார்கள். இவர்களில் விஜயம் செய்யும் யாரையாவது அழைத்து ஐயா! சொல்லய்யா! என்று கேட்டால் இல்லைய்யா! என்று சொல்லிவிடுவார்கள்.   இந்த அரசு நடத்தும் மதுபான விடுதிகளின் ‘சாக்கனாங்கடை’ என்று அழைக்கப்படுகிற உள்ளுறை உணவுக்கூடங்களை நடத்துபவர்களும் இந்தக் குறிப்பிட்ட  சமூகத்தினர்  அல்லது இவர்களின் பங்காளிகளே.  தவிரவும் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் வார்டு கவுன்சிலர் வரையும்  மாவட்டச் செயலாளர்கள், வட்டங்கள்  ஒன்றியங்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர்களே  டெண்டர் என்ற பெயரில் கூத்தடித்து கொள்ளையடிக்கிறார்கள்.  இந்த உள்ளுறை உணவு விடுதிகளுக்காகவே ஆட்சி மாறும்    போதெல்லாம் கட்சி மாறுபவர்களும்  இருக்கிறார்கள். மதுக்கடைகளை அரசு மூட முடியாமல்  இருப்பதற்கு இதுவே முக்கியக் காரணம் . யாராலும் தொட முடியாத சக்திகள் படைத்த சாம்ராஜ்ஜியம் இந்த சாராய சாம்ராஜ்ஜியம். இது நமக்கு சொல்ல முடிந்த கதை நெருக்கத்தில் இருக்கும்  அரசுக்கோ சொல்ல முடியாத கதை.   

மதுபான ஆலைகளாலும் மதுபானக் கடைகளாலும்  அரசுக்கு கணக்கில்  வருவது ஒரு வகை வருமானமாகக் காட்டப்பட்டாலும் அரசுக்  கணக்குக்கு வராமல் அரசாளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் நிதிகளுக்காக ஆலை அதிபர்களால்   வழங்கப் படும் பெரும் தொகையான  கட்சி நிதிகள் கட்சிகள் தேர்தல்களில் அதிகாரம் பெற்று மீண்டும் ஆட்சிக்கு  வர   வாக்காளர்களுக்கு வழங்கவே பயன்படும் என்பதும் பூசனிக்காயைப் போட்டு உடைப்பதுபோல் உடைக்கவேண்டிய  ஊரறிந்த சிதம்பர ரகசியம். 

அரசின் தரப்பில் வைக்கப்படும் மற்றொரு குறிப்பிடத்தக்க வாதம் அரசு ஏழைகளுக்கு வழங்கும் இலவசம் அல்லது விலை இல்லாப் பொருள்கள் மற்றும் இலவச சலுகைகளால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மதுக் கடைகளால் வரும்  வருமானம் பொருளாதார ரீதியில் அரசின் கஜனாவுக்குத் தேவை என்று கூறப்படுகிறது.  “ கண்ணிரண்டும்  விற்று சித்திரம் வாங்கினால் உலகம் கை கொட்டி சிரியாதோ ? ” என்று பாரதியார் பாடிய வரிகளைத்தான் இந்த வாதம் நினைவூட்டுகிறது.  குடிக்கு அடிமையாகிவிட்ட ஒரு ஏழைத் தொழிலாளி ஒவ்வொருநாளும் ஒரு மது பாட்டில் வாங்கிக் குடித்தால் ,  ஐந்து ஆண்டுகளில் அரசு நடத்தும் டாஸ்மார்க் கடைகளில் செலவு செய்து இழக்கும் தொகை ஒரு இலட்சத்து இருபத்து ஆறு ரூபாய் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசிடம் அவருடைய குடும்பம் இலவசமாகப் பெறும் பொருட்களின் மொத்த மதிப்பு  பதினாறு ஆயிரம்  ரூபாய் மட்டுமே. குரங்கு ஆப்பம் பங்குவைத்த கதை போலத்தான் இருக்கிறது இந்தக் கதை.  ஏர் ஓட்டுபவன் இளிச்ச வாயனாக இருந்தால் மாடு மச்சான் என்று கூப்பிடுமாம். அப்டித்தான் இந்த அரசுகள் இலவசம் என்று சின்ன மீனைப் போட்டு ஏழைகளின் உழைப்பின் வருமானம் என்கிற  பெரிய மீனை  ஒரேயடியாக தட்டிப் பறிக்கின்றன.  

குடிப்பவர்கள் தரப்பில் வைக்கப்படும் விவாதம் குடிப்பது அவரவர் தனி மனித உரிமை . இதில் அரசு தலையிடக் கூடாது என்பதாகும். மக்களுக்கு நல்லதை கற்பித்து தீயவற்றில் இருந்து விலகி இருக்கும்படி போதிப்பதும் அரசின் கடமை. குடிப்பது தனிமனித சுதந்திரம் என்றால் விபச்சாரம் செய்வது மட்டும் தனி மனித சுதந்திரம் இல்லை என்று ஆகிவிடுமா? காசுவைத்து சூதாடும் உரிமையையும் இந்தப் பட்டியலில் செர்த்துவிடலாமா? சுதந்திரம் கருதி அனுமதித்துவிடலாமா? பொது இடங்களில் புகைப் பிடிக்கக் கூடாது என்று அரசு போட்ட சட்டம் தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்காதா? பூக்களைப் பறிக்காதீர்கள் என்று ஏன் பூங்காக்களில் எழுதிவைக்கவேண்டும்? இந்த இடத்தில் சிறு நீர் கழிப்பவர்கள் தண்டனைகுள்ளாவார்கள் என்று ஏன் அறிவிப்புகள் தொங்குகின்றன?  மக்களின் வாழ்வை ஒழுங்கு படுத்துவது அரசின் கடமை. பொது அமைதிக்காக தனிமனித சுதந்திரத்தை கிள்ளிப் பார்ப்பது  தவறில்லை.  

அடுத்து அரசே நடத்தும் கடைகளாக இருப்பதால் நல்ல சரக்கு கலப்படமில்லாமல் கிடைக்கிறது என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. மது குடிப்பது உடலுக்கும் உடமைக்கும் கேடு விளைப்பது என்பது மருத்துவம் நிருபித்த உண்மைகள்.  இதில் அரசு தரும் மது மட்டும் நன்மை பயக்கும் என்று எண்ணுவது அறியாமையின் அரிச்சுவடி.   அரசே தன் பொறுப்பில் நடத்துவதால் குடிக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு அரசாங்கமே குடிக்கச் சொல்லி கடை நடத்துகிறது  என்கிற ஒரு மன தைரியம் வருகிறது. இதனால் குடிப்பது சமுதாயத்தின் முன்னால்  நல்ல மரியாதையைத் தராது என்று தெரிந்தும் புதிய புதிய குடிகாரர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். 

ஒரு தேசிய அளவிலான புள்ளி விபரம்  நூற்றுக்கு தொண்ணூறு ஓட்டுனர்கள் குடிப்பழக்கம் உடையவர்கள்  என்று கூறுகிறது. ஆனால் மதுபானக்கடைகள் யாவும்  தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலேயே அமைந்திருப்பது ஒரு ஆபத்தை கைகாட்டி அழைக்கும் செயலாகும். அத்துடன் ஒரு ஊரின் எல்லையில் நான்கு திசைகளிலும் மதுபானக் கடைகள் திறக்கப் பட்டு ஜெகஜோதியாக ஒளிவீசிக் கொண்டு இருக்கின்றன. எல்லா நேரமும் அங்கு கூட்டம் அலை மோதிக்கொண்டு இருக்கிறது. 

இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த அல்லது துவக்கி வைத்த பல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தி விட்டார்கள். அண்ணா பெயரில் ஆசியாவிலேயே பெரிய நூலகம் திறக்கப் பட்டதை மூடிப் போட்டு அதை திருமண மண்டபமாக முயற்சிக்கிறார்கள். பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை அங்கு செயல் பட விடாமல் சிறப்பு மருத்துவ மனையாக மாற்றி விட்டார்கள். கலைஞர் பெயரில் காப்பீட்டுத்திட்டம் உட்பட பல திட்டங்களை அனாதையாக விட்டுவிட்டார்கள்.  அதே முறையைப் பின்பற்றி  கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின்  காலத்தில் அறிமுகப் படுத்தப் பட்ட மதுக்கடைகளையும் மூடினால் இந்நாள் முதல்வரை மக்கள் அம்மா என்று அழைப்பதற்கு ஒரு உண்மையான அர்த்தம் இருக்கும். பெண்கள் எல்லாம் இந்த அம்மையார்  இருக்கும் திசை நோக்கி திருப்புகழ் பாடுவார்கள். 

அரசு நினைத்தால் இந்த தற்கொலைப் பாதையை நோக்கி தமிழக மக்கள் மெல்ல மெல்ல சென்று கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த முடியும். அரசு நினைத்துத்தான் ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்த ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது; இராஜ மானியம் ஒழிக்கப் பட்டது; வங்கிகள் தேசியமயமாகப்பட்டன. இன்றைய முதல்வர் ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை நிறுத்தப் பட்டது. இன்றைய முதல்வர்தான் கந்துவட்டியில் இருந்து மக்களை காப்பாற்ற சட்டம் இயற்றினார்; கட்டைப் பஞ்சாயத்துக்கள் காவல் நிலையத்தில் கூட நடைபெறக்கூடாது என்று சட்டம் இயற்றினார்.  இதனால்தான் இவரை தைரிய லட்சுமி என்றும்  புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். 

தமிழக சரித்திரத்தில் இலவசக் கல்வி தந்ததற்காக  காமராசரின் பெயர் நிலைத்து நிற்கிறது. தமிழக சரித்திரத்தில் சத்துணவு தந்தற்காக எம் ஜி ஆர்  புகழ் நிலைத்து நிற்கிறது. அதே போல் மதுவிலக்கை மீண்டும் துணிச்சலுடன் அறிமுகப் படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் என்றென்றும் நிலைக்கும் பெருமையும் புகழும் பெறவேண்டும்.  பெண்களின் பிரதிநிதியாக இவர் இதைச் செய்ய வேண்டும்.  எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தில் தமிழகம் முழுமைக்கும் மீண்டும் மதுவிலக்கை தமிழக அரசு மீண்டும் கொண்டு வருமா? 

இபுராஹீம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)