Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குடும்ப உறவுகளை உடைத்தெறியும் அரக்கர்கள்.. 20

அதிரைநிருபர் பதிப்பகம் | December 19, 2011 | , , , ,


அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! 

நம் குடும்ப உறவுகளை உடைத்து நொறுக்க அமெரிக்காவோ, இஸ்ரேலோ தான் படையெடுத்து வந்து அங்கே அணு ஆயுதங்களை வைத்தெல்லாம் நொறுக்கும் அரக்கர்கள் என்று நினைத்து விட வேண்டாம்.

அப்படி என்றால் வேறு யாருதான் என்று குழம்புகிறீர்களா?

ஆணவம், மமதை மற்றும் தான்தோன்றித் தனமான போக்கினால் நம்மிலிருந்தே அணு உலையை விட கொடியதுமான நம் உயிர் உள்ள வரை அழியா நாவு என்னும் ஆயுதத்தைக் கொண்டு படை எடுக்கிறார்கள். 

அப்படியென்றால் அந்த அரக்கர்கள் எங்கெல்லாம் வந்து வேட்டு வைக்கிறார்கள் என்று தெரியுமா ?


1. புது மாப்பிள்ளை பெண் பேசும் நிகழ்வுகளின் போது அங்கே நினைத்த காரியம் கை கூடவில்லை என்ற நிலை வரும்போது.

2. நிர்ணயித்த அல்லது பேரம் பேசிக் கொண்ட வரதட்சணைத் தொகை,  சீர் செட்டுகள் (சீராட்டுகள்) சரியாக வந்து அடையாத போது.

3. 'மின்னல் ஹபீபி'  எனும் பண கொடுக்கல் வாங்கலின் போது.

4. ஒப்படைக்கப்பட்ட அமானிதத்தில் தில்லு முல்லு அல்லது மோசடி செய்யும்போது.

5. பாகப்பிரிவினை நேரத்தில் பங்குதாரர்களின் விஷயத்தில் அநீதியாக, அத்துமீறி அங்கே அநியாமாக நடந்து கொள்ளும் போது.

6. கூட்டுக் குடும்பமாக இருக்கும் அழகான சூழலில் அற்ப விசயத்திற்காகவும் சுயலாபத்திற்காகவும் அல்லது உற்றார் மீது எழுதும் பொறாமையினால் பிரச்சினை உண்டாகும் போது .

7. கணவன் மனைவிக்கிடையே சரியான புரிந்துணர்வுகள் இல்லாத போது.

8. வசதி வாய்ப்பு எனும் தர்பாரில் உள்ளவர்கள் அவைகள் அமையப் பெறாதவர்களை மதிக்காத போது.

9. பெற்றோரை இரக்கமின்றி மிதித்து மனைவியை கிறக்கத்தில் துதிக்கும் போது.

10. இல்லாத ஒன்றை அவதூறாக இட்டுக்கட்டி பழி சுமத்தும் போது.

இப்ப குழப்பங்கள் தீர்ந்து இருக்குமே!

இப்படிப்பட்ட அரக்கர்களிடம் எலும்பற்ற நாவு என்னும் ஆயுதத்தை சுழல விடாமல் அடக்கம் என்னும் கயிற்றால் வரிந்து கட்டுங்கள். 

குடும்ப உறவுகளை பாதுகாத்துக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்.

- லெ.மு.செ.அபுபக்கர்

20 Responses So Far:

Shameed said...

L.M.S.நீங்கள் சொன்ன பத்தும் சிலரிடம் அசையா குடும்ப சொத்தா இருக்கும்

KALAM SHAICK ABDUL KADER said...

உறவுகள்"

ஆதாம் ஏவாள்
ஆரம்பித்த உறவுகள்
சாத்தான் புகுந்து
சாய்த்தான்;
அதனால் - பிரிவுகள்

அண்டை வீட்டோடும்
அண்டை நாட்டோடும்
சண்டை போட்டே
மண்டை ஓட்டை
மலிவாக்கினோம்....

உறவு ஓர் அதிசய மரம்:
உள்ளன்பே அதன் உரம்;
உதவும் கரம் தான் உண்டு
அதனைத் தாங்கும் தண்டு;
அன்பு ஊற்று தான்
இன்பக் காற்று தரும் இலைகள்;
உறவுக்கு மறுபெயர் "கிளைகள்"
உட்காரட்டும் பாசப்பறவைகள்....
உணர்வு தான் ஆணி வேர்;
உணவு அதற்கு
உளமார மன்னிக்கும் நற்குணமே

சட்டை பையில் பணமிருந்தால்
சட்டென ஒட்டும் உறவுகள்;
சற்றே நிலை மாறினால்
சட்டை செய்யாது
திசை மாறும் பறவைகள்

விலா எலும்பின்
விலாசம் காண
விவாக உறவுகள்

உயிர் காக்கும்
உண்மைத் தோழமை

உயிருள்ள வரை
மறவா உறவு
தொப்புள் கொடியாய்த்
தொடரும் இரத்த உறவு

ஆயிரம் உறவுகளிருந்தாலும்
தாயும்-தந்தையும்
தன்னேரில்லா உறவு

கற்ற கல்வி
உற்ற நண்பனாய்
உதவும் உறவு

நற்செயல்கள் என்னும்
உறவே நம்மோடு
நடந்து வரும் இடுகாடு
இவ்வுறவைப் பேண
இறுதிவரைப் போராடு

எல்லா உறவுகளும்
நில்லா உலகோடு
நின்றுவிடும்;

எல்லாம் வல்ல
இறைவனிடம்
எல்லா நேரமும்
அடியான் கொண்ட "உறவு"
எல்லா துன்பங்களையும்
வென்றுவிடும்!!!!

எல்லா உறவுகளயும் பேணுவோம்
எல்லார்க்கும்- இறையோனுக்கும்
பகைவனான சாத்தானைப்
பகைத்திடுவோம்; அதனால்
கலகமே இல்லாத
உலகமேக் காணுவோம்........................!!!!!!!!!!!!!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பாவம்! நாக்கு மீது இவ்வளவு பழி சுமத்தலா? 'டேஸ்ட்' பார்க்கணுமே!

குடும்ப உறவுகளை உடைக்க அணுஆயுதங்கள் இல்லாமல் துப்பாக்கியாலே முடியுமா?
நாவினால் சுட்ட புண் என்பார்களே அதனால் இந்தக் கேள்வி எழுகிறது.

ZAKIR HUSSAIN said...

இதில் என்ன அதிசயம் என்றால் எல்லாத்தையும் செஞ்சிட்டு ஒரு மதகுரு மாதிரி லெக்சர் குடுப்பானுங்க பார்க்கனுமே

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

"மத குருக்கள் மாதிரி நடிப்பவர்கள்தான் இவ்வளவுக்கும் காரணம் " என்று ஒற்றை வரியில் எழுதி விட்டுப் போயிருக்களாம், இல்லையா ஜாகிர்?

-முஸ்லிம்

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

"மத குருக்கள் மாதிரி நடிப்பவர்கள்தான் இவ்வளவுக்கும் காரணம் " என்று ஒற்றை வரியில் எழுதி விட்டுப் போயிருக்களாம், இல்லையா ஜாகிர்?

-முஸ்லிம்

ZAKIR HUSSAIN said...

To Vaavanna Sir,

//"மத குருக்கள் மாதிரி நடிப்பவர்கள்தான் இவ்வளவுக்கும் காரணம் " என்று ஒற்றை வரியில் எழுதி விட்டுப் போயிருக்களாம், இல்லையா ஜாகிர்?//

உண்மையில் இந்த மனிதர்களிடம் ஒரு குருவுக்கு உள்ள அறிவு இருந்தால் பிரச்சினை இல்லை. இருக்கிறமாதிரி ஆக்டிங் கொடுக்கும்போதுதான் வெறுப்பு வரும்.

சமீபத்தில் ஊர் வந்தபோது பார்த்த "அறிஞர்களின் அட்டூழியம்'....


அட்டூழியம்- 1

விவாகரத்து செய்யும்போது மட்டும் இவர்களுக்கு எப்படி ஹதீஸ் எல்லாம் மனப்பாடமாக ஒப்பிக்க முடிகிறது. அதே சமயம் கட்டிய மனைவியையும் , பிள்ளைகளையும் கவனிக்காமல் மாமனாரிடமும் , மச்சினனிடமும், பெண் வீட்டாரிடமும் தனது பொறுப்பை பல வருடம் சாற்றிவிடும்போது மட்டும் "மண்டையிலெ அடிபட்டமாதிரி" ஹதீஸ் எல்லாம் ஞாபக மறதியாகவே இவனுகளுக்கு இருக்கிறது.

அட்டூழியம்- 2

இயக்கம் , பிரிவு இப்படி தன்னை சொல்லிக்கொண்டவர்கள் கல்யாண சமயத்தில் வரதட்சினையில் கொஞ்சம் கூட டிஸ்கவுன்ட் இல்லாமல் வாங்கினார்கள்.

அட்டூழியம்- 3

சில பெரியவர்கள் ஒரு தம்பதியினரை விவாகரத்து செய்ய வைக்க பல பேரை பகைத்துக்கொண்டதை பார்த்திருக்கிறேன். இத்தனைக்கும் அந்த தம்பதியினரிடையே நேரடியான சண்டை எதுவும் இருக்காது. கடைசியில் பாதிக்கப்படுவது ஒரு குழந்தை.அல்லது குழந்தைகள்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

பக்கரு, தூள் கெளப்பிட்டாம்மா நீ......

"நாக்கு பண்ணும் அநியாய அட்டூழியங்களுக்கும், அராஜக அத்துமீறல்களுக்கும் பாவம் அப்பாவி பல்லைப்போய் உடைத்து விடுவேன் என்கிறார்கள்"

விளக்கம் ஊரில், நாட்டில், உலகில் அநியா அட்டூழியம் பண்ணிக்கொண்டிருப்பது யாரோ? ஆனால் தண்டணைகளையும், வேதனைகளையும், சோதனைகளையும் அனுபவித்துக்கொண்டிருப்பது எவரோ?

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

அபூபக்கர்-அமேஜான் said...

குடும்ப உறவுகளை பற்றி அழகாகவும்,அருமையாகவும் எழுதியுள்ளார் எல்.எம்.எஸ் அபூபக்கர். நாம் முக்கியமாக நாவை பாதுகாக்க வேண்டும் நாவு கொஞ்சம் பேச்சில் உலரிவிட்டால் மிக பெரிய சண்டை சச்சரவுகளும்,குடும்ப ஒற்றுமையையும் உடைத்தெறியும் அளவுக்கு நாக்குக்கு மதிப்பு இருக்கிறது. அப்படி இருக்கும் பட்ச்சத்தில் நாம் நாவை பேணி காக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பங்களிலும் ஒற்றுமையாக நாம் நடந்துக் கொள்ள வேண்டும். ஆயுதம்,அணுகுண்டு எல்லாம் எடுக்க தேவை இல்லை நம் உடம்பிலேயே நம்மளிடம் ஆயுதம் உள்ளது அது தான் நாக்கு. நாக்கை பேணி நடந்தால் எல்லாமே சரியாக ஆகிவிடும் யாருக்காவது நாக்கை கட்டுபடுத்த போராடுவோம் என்ற எண்ணம் வந்துயிருக்கிறதா? என்றைக்காவது நாம் சற்று சிந்தித்து பார்த்து இருப்போமா.பெற்றோரை மதித்து நடங்கள் அவர்களுக்கு பணிவிடை செய்யுங்கள் இதுதான் நம் குர் ஆன்னிலும், ஹதீஸ்களிலும் மிக தெளிவாக வந்துள்ளது.

தலைத்தனையன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்ஹம்துலில்லாஹ். நல்ல பதிவு தம்பி அபூபக்கர்.

இரண்டு தொடைகளுக்கு இடையே இருப்பதையும், இரண்டு தாடைகளுக்கு இடையே இருப்பதையும் தடுத்துக்கொள்ள பொருப்பெடுத்துக்கொண்டவருக்கு, சொர்கத்திற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த நபி மொழியை மீண்டும் ஞாபகப்படுத்திக்கொள்வோம்.

'இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு 'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார் ஷஹீஹ் புகாரி, Volume :1 Book :2.

Anonymous said...

நல்ல பதிவு,

ஒருவரை நல்லவர் கேட்டவர் என்ற பொறுப்புக்கு உரிமையளர் நாக்குத்தான்.

உள்ளம் சரியாகும் வரை அவனுடைய ஈமான் சரியாகாது. அவனுடைய நாவு சீராகும் வரை அவனுடைய உள்ளம் சரியாகாது.

(மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல் கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும்.(புஹாரி)

அதிரை குரல் said...

அருமையான பதிப்பு...

Yasir said...

நல்ல சிந்தனை சகோ.லெ.மு.செ.அபுபக்கர் ...எங்கெங்கே நாக்கை நுழைக்க கூடாது அங்கேயெல்லாம் இந்த பேமானிகள் நுழைப்பார்கள்...நாளு பேருக்கு நல்ல விசயத்தை கற்று கொடுப்பதற்க்கு பயன்படுத்துவதை விட்டுவிட்டு

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

மகனே,

தலைப்பே தலையில் அடிக்கிற மாதிரி இருக்கிறது!

சம்பந்தப்பட்டவர்கள் நாக்கைப்பிடுங்கிக் கொள்ளவேண்டும்!
உறவத்துண்டிப்பவன் ஒரு போதும் சுவர்க்கம் புகமுடியாது!

- அபூ யூசுப்

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

தாய் வழி மாமன்கள், தந்தை வழி மாமிகள் ஆகியோரின் உறவுகளைத் துண்டித்துக் கொள்ளும் இந்த அரக்கர்கள், ஹதீஸ்களை மறந்து விடு கிறார்கள் !
மச்சிகளோடு சகஜமாகப் பேசுவதும், பெரியப்பா, சிற்றப்பா, ராத்தம்மா, சாச்சி இவர்களின் மகள்கள், உறவினர்களாக இருந்தாலும், அவர்களோடு உறவாடுவதும் மார்க்கம் மறுத்தவை என்பவற்றை இந்த ஜென்மங்களுக்கு அல்லாஹ்தான் உணர்த்த வேண்டும்.

-அதிரையன்

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

அல்லாஹ் மனிதனுக்கு எத்தனையோ அருட்கொடைகளை அளித்திருக்கின்றான். அவைகளில் மிக முக்கியமானது பேசும் நாவாகும். நாவை ஒரு கூரான கத்திக்கு ஒப்பாகக் கூறலாம். கத்தியைக் கொண்டு ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து, அவரின் உயிரைப் பாதுகாக்கவும் செய்யலாம். அதே கத்தியைக் கொண்டு ஒருவரின் உயிரை எடுத்தும் விடலாம். இதே போன்றது தான் நாவும். நாவைக் கொண்டு சொர்க்கம் செல்லவும் முடியும். அதே நாவு நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகவும் அமையலாம். ஆகவே நாவை பேணிப் பாதுகாப்போம்.

நாவைப் பற்றி திருக்குர்ஆனும் நபி மொழியும் என்ன கூறுகின்றன.

‘எதைப் பற்றி உமக்கு ஞானமில்லையோ அதைப் பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலன், பார்வை இதயம் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல்பற்றி) கேள்வி கேட்கப்படும்’. (அல்குர்ஆன் 17:36)

‘ஒருவனிடம் கண்காணித்து எழுதக்கூடியவர் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை’. (அல்குர்ஆன் 50:18)

நாம் எந்த வகையில் நாவை பயன் படுதுகிரோமோ அதை பொருந்துதான் சொர்க்கம் அல்லது நரகம் என்பது.

ஓர் அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா? கெட்டதா? என்று) சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் மத்தியிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் நரகில் விழுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)

முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே! என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதையே பேசட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

நான் நபி ஸல் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளத் தக்க ஒரு விஷயத்தை அறிவியுங்கள்! என்று கேட்டேன். ‘எனது இறைவன் அல்லாஹ் என்று கூறி, பிறகு அதிலேயே உறுதியாக இருப்பீராக’ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். என்னுடைய விஷயத்தில் தாங்கள் அதிகம் அஞ்சுவது என்ன? என்று கேட்டேன். அப்போது தனது நாவை பிடித்துக் காட்டி இது தான் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: சுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்: திர்மிதி)

‘(நாளை மறுமையில்) மனிதர்களை முகம் குப்புற நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவு செய்த தவறே தவிர வேறெதுவும் இல்லை என ஒரு நீண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)

எங்களுடைய நாவுகலை நல்ல விசியங்களுக்கு மட்டும் பாவித்து கெட்ட விசியங்களிருந்து அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக..ஆமீன்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

என்னுடைய ஆக்கத்திற்கு முன் ஆறு ஆக்கங்கள் கடந்த நிலையில்.கருத்து சொல்லுவதற்கு போதிய நேரம் இல்லாதது ஒரு பக்கம். ஊரில் கடுமையான குளிர்னால் என்னுடைய இணைய இணைப்புக்கு நிமிடத்துக்கு நிமிடம் ஜுரம் வந்து போவும் வேலையில் சிறிய இடைவெளியில்.என் ஆக்கத்திற்கு கருத்து சொன்னவர்களுக்காக என் கருத்தினை பதிகிறேன்.

சபீர் காக்கா சொன்னது;
// very well said, L M S. //

VERY தேங்க்ஸ் BROTHER
----------------------------------------------------------------

ஹமீது காக்கா சொன்னது;

// L.M.S.நீங்கள் சொன்ன பத்தும் சிலரிடம் அசையா குடும்ப சொத்தா இருக்கும் //

அப்படிப்பட்ட சகோதரர்களை அல்லாஹ் பாத்து காக்க வேண்டும்.

-------------------------------------------------------------------

பத்து வார்த்தைகளுக்கு அபுல் கலாம் காக்காவின் பலமான விவுரைகள் ஜஜாக்கல்லாஹ் ஹைரா.

-----------------------------------------------------------------------

எம்.ஹெச். ஜஹபர் சாதிக் சொன்னது:

// குடும்ப உறவுகளை உடைக்க அணுஆயுதங்கள் இல்லாமல் துப்பாக்கியாலே முடியுமா? //

துப்பாக்கி என்ன வில் அம்புகளாளையும் முடியும்.ஆனால் அவைகளினால் ஏற்ப்பட்ட புண்கள் ஆரிவிடுமே!

------------------------------------------------------------------------------

ஜாகிர் காக்கா சொன்னது:

// இதில் என்ன அதிசயம் என்றால் எல்லாத்தையும் செஞ்சிட்டு ஒரு மதகுரு மாதிரி லெக்சர் குடுப்பானுங்க பார்க்கனுமே //

ஊருக்கு தான் உபதேசம் வீட்டுக்கு அல்ல அப்படிப்பட்ட ஆசாமிகளின் லெக்சர்.

--------------------------------------------------------------------------------

வாவன்னா சார் (பெரியப்பா) அவர்கள் சொன்னது:

// "மத குருக்கள் மாதிரி நடிப்பவர்கள்தான் இவ்வளவுக்கும் காரணம் " என்று ஒற்றை வரியில் எழுதி விட்டுப் போயிருக்களாம், இல்லையா ஜாகிர்?//

மத குருமார்களை ஒற்றை வரியில் எழுதி விடலாம் .அது போல் நடிப்பவர்களை நூறு வரிகளில் எழுதனும்.

----------------------------------------------------------------------------------

நெய்னா எம்.எஸ்.எம் சொன்னது:

// "நாக்கு பண்ணும் அநியாய அட்டூழியங்களுக்கும், அராஜக அத்துமீறல்களுக்கும் பாவம் அப்பாவி பல்லைப்போய் உடைத்து விடுவேன் என்கிறார்கள்" //

நாக்குக்கு முன்னாடியும் அதன் இரு பக்க வாட்டிலும் இருப்பதனால் சொல்லுகிறார்கள் போலும்.

--------------------------------------------------------------------------------------

அபூபக்கர் அமேஜான் சொன்னது:

// பெற்றோரை மதித்து நடங்கள் அவர்களுக்கு பணிவிடை செய்யுங்கள் இதுதான் நம் குர் ஆன்னிலும், ஹதீஸ்களிலும் மிக தெளிவாக வந்துள்ளது. //


நல்ல அழகான வார்த்தை நபி (ஸல்) அவர்கள் முதலில் தன்ன்டமிருந்து தான் துவங்குவார்கள்.நாமளோ அடுத்தவர்களை பார்த்து தான் துவங்குகிறோம்.குறிப்பாக மார்க்க விசயத்தில்.

-------------------------------------------------------------------------------------------

சகோதரர்கள்.தலைத்தனையன் ,தாஜுதீன் சொன்னது:

// இரண்டு தொடைகளுக்கு இடையே இருப்பதையும், இரண்டு தாடைகளுக்கு இடையே இருப்பதையும் தடுத்துக்கொள்ள பொருப்பெடுத்துக்கொண்டவருக்கு, சொர்கத்திற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். //

நபி (ஸல்) அவர்கள் எந்த விசயத்தை சொல்லி சொர்க்கத்திற்கு பொருப்பேற்று கொண்டார்களோ.அச்செய்தியை வெற்றி கொடியாக ஏந்தி உலகை வலம்வர நமக்கு அல்லாஹ் கிருபை செய்வானாக.

---------------------------------------------------------------------------------------------

சகோ யாசிர் சொன்னது:

// எங்கெங்கே நாக்கை நுழைக்க கூடாது அங்கேயெல்லாம் இந்த பேமானிகள் நுழைப்பார்கள்...நாளு பேருக்கு நல்ல விசயத்தை கற்று கொடுப்பதற்க்கு பயன்படுத்துவதை விட்டுவிட்டு //

அந்த பேமானிகளுக்கு நல்ல விசயங்கள் தெரியாதது ஒருபக்கம் இருக்க. உலக விசயங்களை வாய்கிழிய பேசுவார்கள். பாவம் இங்கே கூட வாய்கிழிய என்கிற வார்த்தையை தான் சொல்லுகிறோமே தவிர நாவு கிழிய என்ற வார்த்தையை சொல்ல நாவு இடம் தர மறுக்கிறது இங்கே மட்டும் நாவு தன்னை தற்காத்துக் கொள்கிறது.

Saleem said...

நாம் ஏதாவது நாவினால் பேசினாலும்/திட்டினாலும்.யாரும் நாவை திட்டுவதில்லை மாறாக ஏதும் செய்யாத பல்லை உடைப்பேன் என்று தான் திட்டுகின்றனர்.அதற்காகத்தான் அல்லாஹ் நாக்கை பாதுகாக்க இரண்டு திரை வைத்துள்ளான்.ஒன்று பல்,அடுத்து உதடுகள். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் நாக்கை எவ்வளவு பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று!!!!!

M.F.முஹம்மது சலீம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு