Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சீரழிக்கும் செல்போன்-இன்டர்நெட்! 4

அதிரைநிருபர் | December 08, 2010 | ,

இரண்டாம் உலகப்போருக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். இங்கிலாந்துப் பிரதமராக ஆவதற்கு முன்பாக, வின்ஸ்டன் சர்ச்சில் சாதாரண பிரிட்டிஷ் டூரிஸ்ட்டாகச் சென்னை வந்து, அண்ணா சாலையில் முன்பு இருந்த அரசு வளாக (கவர்மெண்ட் எட்டேட்ஸ்) அட்மிராலிட்டிக் கட்டிடத்தில் ஓர் அறையில் தங்கியிருந்தாராம். அவருக்கு அடுத்த அறையில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிலிட்ரி கர்னல் ஒருவர் தங்கி இருந்தாராம். அப்போது கர்னல் போனில் லண்டனுக்குச் சப்தம் போட்டுப் பேசினாராம். அவர் பேசிய சப்தம் கேட்டு, சர்ச்சில் அவருடைய அறையை விட்டு வெளியே வந்து, அங்கிருந்த காவலாளியைக் கூப்பிட்டு, அந்த அறையில் தங்கிருந்தவர் யார் எனத் தெரிந்து கொண்டு காவலாளியிடம், ‘நீங்கள் போய் உங்கள் கர்னலிடம் சொல்லுங்கள்;: அவருடன் பேசுகிறவர் லண்டனில் இருக்கிறார். அது தெரியாமல் கர்னல் நேரில் இருப்பது போன்று சப்தம் போடுகிறார்" என்று சொன்னாராம்.

இதனை ஏன் குறிப்பிடுகிறேனென்றால், முன்பு இருந்த தொலைபேசி அடுத்தவருக்குத் தொல்லை பேசியாக இருந்ததாம். ஆனால் இன்றைய நவீன விஞ்ஞான உலகத்தில் தொலைபேசிக்கே வேலையில்லாது கைபேசி வந்துவிட்டது. ஆனால் அதே தொலைபேசி இளசுகளைச் சீரழிக்கும் கைபேசியாக மாறிவிட்டதுதான், இன்றைய சமுதாயத்திற்குப் பெரிய தலைவலியாக மாறி உள்ளது.

செல்போன் வந்த பிறகு, வயர் இணைப்பிற்கு முக்கியத்துவம் இல்லாத நிலைமை வந்துவிட்டது. சுhதாரணக் கூலி முதல் கோமான் வரை, சட்டைப் பையில் கொண்டு செல்லும் அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டது ஆச்சரிமில்லைதான். செல்போனின் முக்கியச் செயல்பாடுகளைத் தெரியாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். இருந்தாலும், சில முக்கியச் செயல்பாடுகளை இங்கே சொல்லலாம் என நினைக்கின்றேன்: 1) அட்ரஸ் கையேடு 2) அழைப்பவர் பட்டியல் 3) வீடியோ பங்கிடுதல் 4) படம் எடுத்தல் 5) கான்ஃபரன்ஸ் நடத்துதல் 6) மெஸேஜ் அனுப்புதல் 7) எல்லோ பேஜ் என்ற வர்த்தக விளம்பரம் 8) டி.வி 9) இசை 10) செய்தி ஒளிபரப்பு 11) மொபைல் பேங்கிங்க் 12) தட்ப வெப்ப நிலையறிதல் 13) இன்டர்நெட் 14) நோட் புத்தகம் 15) உலக மணி 16) உலக நாணயம் 17) உலகத் தேதி 19) எழுப்பும் மணி 20) கால்க்குலேட்டர் 21) புளு டூத் 22) இடங்களை எளிதாகக் கண்டு பிடிக்கும் ஜி.பி.எஸ், ஜி.பி.ஆர்.எஸ் - போன்றவை.

மேற்கூறிய உபயோகங்கள் சில வகைதாம். இன்னும் அதன் பயன்பாடுகள் உலகம் விசாலமானது என்பதை மாற்றி, உலகம் கைக்குள் அடங்கியிருக்கிறது என்று சொல்லுமளவிற்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

1964 ஆம் ஆண்டு மன்னார் வளைகுடாவில் புயல் ஏற்பட்டுப் பாம்பன் பாலத்தில் சென்ற ராமேஸ்வரம் ரயில் அடித்துச் செல்லப்பட்டு, நூற்றுக் கணக்கானோர் இறந்தனர். தனுஷ்கோடித் தீவுக்கு முற்றிலும் ராமேஸ்வரத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அப்போது அந்தத் தீவில் இருந்த பெரும்பாலோர் இறந்துவிட்டனர். அந்தச் சம்பவத்தினை அந்தத் தீவிலிருந்த டெலக்கிராப் ஆப்பரேட்டர் மோர்ஸ் தொடர்பு மூலம் சென்னைக்குத் தகவல் அனுப்பினார். அதனை வைத்துத்தான் உடனே மீட்பு நடவடிக்கை எடுக்கவும் முடிந்தது. அந்தச் சம்பவம், நான் பி.யு.சி மாணவனாக இருந்தபோது நடந்தது.

தொலைத் தொடர்பில் ஏற்பட்ட 'சேட்லைட்" வளர்ச்சி அபாரமானது என்பதை இரண்டு சம்பவங்கள் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன். ஒன்று: சிலி நாட்டில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் 2000 அடிக்குக் கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் விபத்து ஏற்பட்டுச் சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை, ஒரு துளை போட்டு அதில் ஒரு செல்போனைச் செலுத்தித் தெரிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், அவர்கள் உயிருடன் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீட்கும் வரை வீடியோ கான்ஃபரன்ஸிலும் தங்கள் குடும்பத்தாருடன் பேசி மகிழ்ந்ததை அனைவரும் பார்த்திருப்பார்கள்.

அதே போன்று, விண்வெளியில் பயணம் செய்த கல்பணா சவ்லா போன்ற வீரர்கள் தங்கள் சாதனை முடிந்து, வாயு மண்டலத்தினைத் தொடும்வரை தரைக் கட்டுப்பாட்டுடன் பேசிக் கொண்டு வந்ததை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதன் பின்புதான் அவர்கள் விபத்தில் மரித்தார்கள். ஆகவே, தொலைத் தொடர்பு வளர்ச்சி பரிணாமமானது என்பதை எல்லோரும் அறிவர்.

இந்தியா பொருளாதாரத்தில் 8.9 சதவீத வளர்ச்சியடைந்து, வளரும் நாடு என்ற நிலையிலிருந்து - அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சமீபத்தில் இந்திய நாட்டுக்கு வருகை தந்தபோது சொல்லியது போல - வளர்ந்த நாடாகத் திகழ்கிறது. முன்பெல்லாம் கம்பஞ்சோறும், கேப்பைக்களியும், குருனைக் கஞ்சியுடன் பச்சை மிளகாய், வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு சாப்பிட்ட காலம் போய், இன்று வயிறாறச் சத்துள்ள உணவு சாப்பிடும் தரத்திற்கு உயர்ந்துள்ளோம். காடுகளிலும் முள் செடிகளிலும் வெறுங்காலுடன் பள்ளிக்குச் சென்ற நாம், இன்று விதவிதமாக செருப்புகள், ஷ_க்கள் அனிந்து, அரசே இலவசமாகக் கொடுத்த சைக்கிளில் பள்ளிக்குச் சென்று இலவசமாகப் பள்ளிப் படிப்பினை முடிக்க உதவும் காலமாக இருக்கிறது. உலகில் செல்வத்தில் மிளிரும் நாடாக இந்தியா மாறி வருகிறது என்றால் மறுக்க முடியாது.

பணம் எங்கே இருக்கின்றதோ, அங்கே மகழ்ச்சி தாண்டவமாடும். ஆனால் அந்த மகிழ்ச்சியே, குடும்பத்தின் எதிரியாகிவிடும் என்பது கிராமத்துப் பழமொழி. தங்கள் ஆண், பெண் குழந்தைகள் சிரமம் பாராது வளரப் பெற்றோர் வெயில், மழையென்று யோசிக்காது உழைக்கின்றனர். பிள்ளைகள் படிப்பிற்காகக் கம்ப்யூட்டர், செல்போன், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் என்று வாங்கிக் கொடுக்கின்றனர். சிலர் தம் செல்லச் சிறு பிள்ளைகளுக்கும் செல்போனை விளையாட்டு பொம்மை போல வாங்கிக் கொடுக்கின்றனர். வீட்டிலே 'இன்டர்நெட்" வசதியும் செய்து கொடுக்கின்றனர். அதன் விளைவுதான், வில்லங்கம் வீட்டிற்கே வந்த கதையாகிறது.

எட்டு வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர் கம்ப்யூட்டரில் ஆர்குட், டிவிட்டர், ஃபேஸ்புக் என்ற வலைத் தளங்களுக்குத் தங்கு தடையின்றிச் சென்று, பல்வேறு பால் வித்தியாசமுள்ள புது நண்பர்களை உருவாக்கிக் கொள்கின்றனர். அந்த இன்டர்நெட்டில் ஆபாச இணைய தளம், ‘பாப் அப்’ தெரியும் படிச் செய்து, இள மனதினைக் கெடுக்கிறார்கள். அது போன்று செல்போனில் காதல் பேச்சுகள், தனிமையில் முத்தமிடுதல், ஏன் பாலியல் தொடர்புகளைக் கூடக் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். பெற்றோரும் அரசும் தரமான பள்ளி, கல்லூரிப் படிப்பினை மாணவர்களுக்குக் கொடுக்க ஆசைப்படுகின்றது. ஆனால் மாணவர்கள் சிலர் படுகுழி என்று தெரிந்தும், அதில் விழும் செய்திகளை நாம் படிக்கின்றோம்;;;. அன்றாட வாழ்க்கையிலும் கேள்விப்படுகிறோம்.

பல்வேறு செய்திகள் இருந்தாலும், இரண்டு உதாரணங்களை மட்டும் சொல்லலாம் என நினைக்கின்றேன்: கோவை மாவட்டத்தில் ஒன்பதாவது படித்த மூன்று மாணவிகளைப் பள்ளியிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு காணவில்லை. அவர்கள் காணாதது சம்பந்தமாக காவல் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சமீபத்தில் அந்த மூன்று மாணவிகளும் பெங்க@ரில் இருப்பதாக அறிந்து, அவர்களைச் சென்று பார்த்தபோது, அவர்கள் மூவரில் ஒருவர் திருமணமாகி ஆறு மாதக் குழந்தையுடன் இருப்பதும், மற்றும் இருவர் இரண்டு இடங்களில் வீட்டு வேலை செய்வதாகவும் தெரிந்தது. தன் தோழியின் காதலுக்காக மற்ற இரண்டு மாணவிகளும் தங்கள் படிப்பினைப் பாழடித்து, பாலுட்டித் தாலாட்டிய பெற்றோரை மறந்து, வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால், எந்த அளவிற்குக் காதல் கண்ணை மறைத்துவிட்டது என்பதைப் பாருங்களேன்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த இரண்டு மாணவர்களில் ஒரு மாணவர் கஸ்தூரி என்ற பள்ளி மாணவியை ஒரு தலைப் பட்சமாகக் காதலித்தாராம். அவருக்கு, அவருடைய நண்பர் உதவி செய்தாராம். ஆனால் அந்தப் பள்ளி மாணவி அதனை வெறுத்தாராம். அவர்களின் முறையில்லாச் செயலினை ஊர்ப் பெரியவர் சுவாமிநாதன் தட்டிக் கேட்டாராம். ஆதனால், அந்தப் பள்ளி மாணவியையும் அந்தப் பெரியவரையும் பலி வாங்க இரண்டு மாணவர்களும் இரண்டு செல்போன் சார்ஜர்கள் வாங்கி, அதில் டெட்டனேட்டர்களைப் பொருத்தி, மாணவி மற்றும் ஊர்ப் பெரியவர் வீடுகளின் முன்பாக இரவு வீசி விட்டார்களாம். காலையில் அதனை அறியாத அந்த மாணவியும் பெரியவரும் அவர்கள் வீட்டு முன்பு கிடந்த சார்ஜரை எடுத்து, செல்போனில் கனெக்ஷன் கொடுத்து பிளக்கில் மாட்டும்போது, அவைகள் வெடித்து, அவர்கள் இருவருக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தது, சமீபத்தியப் பத்திரிகைச் செய்தியாகும்.

இளசுகளைக் கெடுப்பதில் மூல காரணமாக உள்ளது, டி.வி. அடுத்தது, சினிமா. டி.வி.யில் ஜாக்பாட்; ஜட்ஜாக வரும் நடிகை முதுகு தெரியும் அளவிற்கு உடை அணிந்து வருவதும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜாக வரும் நடிகைகள் பாத்ரூம் உடையோ என்று எண்ணும் அளவிற்கு அரைகுறை ஆடை உடுத்தி வருவதும், பள்ளிப் பருவத்திலேயே காதல் செய்வது போன்ற சினிமா பார்ப்பதும், ‘கல்யாணமே கட்டிக்கில்லாமல் ஓடிப்போகலாமா’ என்பது போன்ற சினிமாப் பாட்டுக்களைக் கேட்பதும் இளசுகளின் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் நிகழ்ச்சியாக உள்ளது என்றால், யாரும் மறுக்க முடியாது. அதுவும், வசதியுள்ள பிள்ளைகள் உண்ணும் சத்துள்ள உணவு, அவர்களின் உடலில் ஒரு விதமான ரசாயணக் கலவையை ஏற்படுத்திக் கிளர்ச்சிpயனத் தூண்ட மூல காரணமாகவும் உள்ளது. அதனாலே, அவர்கள் பெற்றோர்கள் இல்லாமல் தங்களுடைய வாழ்க்கையினைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் தலைகளில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கின்றனர்.

கிராமத்தில் ஒரு பழமொழி, ‘முல்லைச் செடிக்குக் கள்ளிச் செடி என்று தெரிவதில்லை" என்று. முல்லைச் செடி போன்ற இளம் வயதினர் அறியாத பருவத்திலே, கள்ளிச் செடி என்ற காதல் மேல் நாட்டம் கொள்கின்றனர். அதற்கு உதவியாக, செல்போனும் இன்டர்நெட்டும் இருக்கின்றன.

ஆனால் அவைகளின் வாசனையே இல்லாத மாணவர்கள், தங்கள் வாழ்க்கையில் சாதனை படைக்கிறார்கள் என்பதற்குச் சில உதாரணங்களைக் கூற ஆசைப்படுகிறேன்:

1) சென்ற பிளஸ் 2 பரீட்சையில் முதல் ரேங்க் மற்றும் இரண்டாம் ரேங்க் வாங்கிய தூத்துக்குடியைச் சார்ந்த பாண்டியன், நாமக்கல்லைச் சார்ந்த சந்தியா, ராஜபாளையத்தைச் சார்ந்த பிரக்ஷனா ஆகியோர் டி.வியே பார்ப்பதில்லையாம்.

2) பேசுபவர்களின் உதடு அசைவை வைத்துப் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட திருவல்லிக்கேனியினைச் சார்ந்த கார் டிரைவர் மகள் பாத்திமா, பிளஸ் 2 தேர்வில் காது கேளாதவர் பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் டி.வியே பார்ப்பதில்லை.

3) கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்க்கடையைச் சார்ந்த சென்னை எஸ்.எஸ்.என். இன்ஜினீரியங் கல்லூரி மாணவி மாஷா, மலைக்க வைக்குமளவிற்குச் சாதனை படைத்து, எட்டு புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலகர்த்தாவாகி, ஜனாதிபதியிடம் சான்றிதழ் வாங்கியுள்ளார். அவர் டி.வி. பார்ப்பதில்லையாம்.

செல்போன்,; திருமணமாகாத சிறுவர் சிறுமிகளின் மனங்களைக் கெடுக்கும் சாதனமாக இருக்கிறது என்று அறிந்து, உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 'லாங்" என்ற கிராமத்தில், ஊர்ப் பஞ்சாயத்; கூடி, திருமணமாகாத இளம் பெண்கள் செல்போன் உபயோகிக்கத் தடை விதித்திருக்கிறது என்றால், பாருங்களேன். எந்த அளவிற்கு அந்த கிராமத்தில், செல்போன்கள் வளரும் பெண்களின் வாழ்க்கைகளைச் சீரழித்திருக்குமென்று!

செல்போன், இன்டர்நெட் துஷ்பிரயோகங்களைத் தடுக்கச் சில யோசனைகள்:

1) பள்ளி மாணவ, மாணவியருக்குக் கண்டிப்பாக செல்போன் வழங்கக் கூடாது. அப்படி வழங்குவதாக இருந்தால், அவசர அழைப்புகளுக்கு மட்டுமே அதனை உபயோகிக்கும் அளவிற்கு முன்னேற்பாடுகள் செய்து வாங்க வேண்டும்.

2) கல்லூரி மாணவியர் மாணவர்களுக்குப் போஸ்ட் பெய்டு செல்போன் சேவை வழங்கலாம். அவைகளின் கால் சார்ஜ், எஸ்.எம்.எஸ் சார்ஜ் அட்டவணை பில்லுடன் சேர்ந்து வருமாறு செய்து, பெற்றோர் அதனைக் கண்காணிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அண்ணா யுனிவர்சிட்டித் துணை வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் யுனிவர்சிட்டி வளாகத்தில் செல்போன் பயன்படுத்தத் தடை விதித்திருந்தார். முதலில் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள்கூட, பின்பு அதன் முக்கியத்துவம் அறிந்து, அவருடைய உத்திரவினைப் பின்பற்றிப் பல கல்லூரிகளில் தடையும் விதித்தனர். ஆகவே, பெற்றோர்கள் பிள்ளைகளின் செல்போன் பேச்சுக்களைக் கண்காணிப்பதை அவர்கள் முதலில் எதிர்க்கத்தான் செய்வார்கள். அதற்காகப் பிள்ளைகளைப் படுகுழுpயில் விழ அனுமதிக்கலாமா? பெற்றோர்கள் மனந்தளராமல், எது தன் பிள்ளைக்கு உகந்தது என்பதைத்; தீர்மானிக்க வேண்டும்.

3) இன்டர்நெட்டில் என்ன செய்திகளைப் பிள்ளைகள் பரிமாறிக் கொள்கிறார்கள் என்பதை, படித்த பெற்றோர் கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்தால் கண்டு பிடிக்கலாம். இன்னும் பெற்றோருக்குத் தெரியாமல் வரும் மெயில்களைப் பிள்ளைகள் நீக்கினால், அப்படி நீக்கப்பட்ட பகுதி, டிரேஸ் பகுதியில் இருக்கும். அதனை இயக்கித் தெரிந்து கொள்ளலாம்.

4) தங்கள் மகன், மகள்களைப் படிப்பதற்காக விடுதியில் விடும்போது, அவர்களைத் தண்ணீர் தெளித்து விடாமல், அவர்கள் இருக்கும் விடுதிகளுக்குச் சென்று, அவர்களின் மேற்பார்வையாளர்களிடம் பிள்ளைகள் நடத்தையினைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

5) செல்போனில் வரும் தெரியாத மிஸ்டு கால்களுக்கு நிச்சயமாக பதில் சொல்லக் கூடாது. அதுவும், பெண்கள் கண்டிப்பாக பதில் சொல்லக் கூடாது.

6) ஆண் துணை இல்லாத பெண்களுக்கு எமன்போல சிலர் வந்து, அவர்களிடம் பழக்கத்தினை ஏற்படுத்தி, அவர்கள் உயிருக்கும் கற்புக்கும் உலை வைப்பார்கள். உதாரணத்திற்கு: ஆள் துணையில்லாத இராமநாதபுரம் கேணிக்ரையைச் சார்ந்த மலேசியாவிலிருந்து வந்த ஆதிலா பேகம் என்ற பெண் ஒருத்தி சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குவதிற்காக ஒரு ஆணுடைய துணையினை நாடி, அதுவே எமனாக முடிந்து, அந்த நபர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து அவளையும், அவளுடைய அழகான ஆண் பெண் குழந்தைகளைக் கடத்தி, வாடிப்பட்டி அருகே கொலையும் செய்துவிட்ட நவம்பர் மாதச் செய்தி, நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

7) திருமணத்திற்கு நிச்சயம் வைத்து, திருமணம் நடக்கச் சில நாட்கள் இருக்கும் போது, ஆணும் பெண்ணும் தங்களுடைய செல்போனிலோ இண்டர்நெட்டிலோ தனிமையினை படமாகவோ வீடியோவாகவோ எடுக்க அனுமதிக்கக் கூடாது. அது போன்று ஒரு நிகழ்ச்சியில் மணப்பெண் தன்னுடைய நிர்வாணமான படத்தினை, நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைதானே என்று அனுப்ப, அது பிற்காலத்தில் திருமணம் பாதியில் முறிந்து, அந்த போட்டோவை வைத்தே மாப்பிள்ளை வீட்டார் அந்தப் பெண்ணைக் கேவலமாகப் பேசியதும் சமீபத்திய செய்தியாக வந்தது. ஆகவே ஆணும் பெண்ணும் காதல் கத்தரிக்காய் என்று வேற்று ஆணுடன் சுற்றலும், சேர்ந்து நெருக்கமாக இருந்து போட்டோ வீடியோ எடுத்தலும்; கூடாது.

ஆகவே, விஞ்ஞான வளர்ச்சிச் சாதனங்களான செல்போன், இன்டர்நெட் போன்றவைகளால் நம் செல்வங்கள் சீரழிவதை, பெற்றோரும் உற்றாரும் உடன் பிறந்தோரும் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

-டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்டி, ஐ.பீ.எஸ்(ஓ)

தகவல்: அதிரை அஹ்மது

4 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இணையம் போடும் சூடு ரனமாகும் முன்னர் சுதாகரித்துக் கொள்ள வேண்டும் ! செல்போன் ஒரு போதை மருந்துக்குச் சமமே !

நம் கண்களை நாம்தான் பாதுகாக்கனும் !

எச்சரிக்கை தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும், நாமும் விழிப்புடன் இருக்க வேண்டும் !

பதிவுக்கும், பரிந்துரைக்கும் நன்றிகள் !

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
செல்ப் போன் பற்றி விலாவரிய விளக்கிய விதம் அருமை.

நல்லதோ கெட்டதோ கையாள்வதில் தான் உள்ளது.

அபு ஆதில் said...

இது போன்ற கருத்தாக்கங்களை பெண்கள் மத்தியில் அதிகமாக எடுத்து சொல்லப்பட வேண்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நல்லா புரியும்படி சொல்லப்பட்ட அறிவுரைகள்.

சகோதரர் Asraf சொல்வது போல் இது போன்ற கருத்துக்களை பெண்கள் மத்தியில் அதிகம் எடுத்துச்செல்லப்பட வேண்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு