Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை கல்வி மாநாடு கானொளி - CMN சலீம் அவர்களின் எழுச்சி உரை 13

அதிரைநிருபர் | January 19, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பான அதிரைநிருபர் வாசகர்களே, கடந்த ஜனவரி 14ம் மற்றும் 15ம் தேதிகளில் அதிரையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு மாநாடு நடைப்பெற்றது என்பது நாம் எல்லோரும் அறிந்தது.

நாம் எல்லோரும் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்த சிறப்புப் பேச்சாளர் சகோதரர் CMN சலீம் அவர்களின் எழுச்சியுரை கானொளி முதன் முதலில் நம் அதிரைநிருபரில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறோம்.


இந்த கானொளியை பார்த்து பயனைடையுங்கள், இதை உங்களுக்கு தெரிந்த அதிரை சகோதரர்கள் மற்ற வெளியூர் சகோதர்ர்களுக்கும் பகிர்ந்து பயனடைய செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாநாடு முடிந்த பிறகும் இந்த கானொளியை இணையத்தில் நம் அதிரைநிருபருக்காக தன் நேரத்தை முழுமையாக பயன்படுத்தி upload செய்து தந்த சகோதரர் மொய்னுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.

அல்லாஹ் போதுமானவன்.

-- அதிரைநிருபர் குழு

13 Responses So Far:

அதிரை முஜீப் said...

அஸ்ஸலாமு அலைக்கும்!.

மாஷாஅல்லாஹ் ,மேகம் இல்லாமலே,மின்னல் இல்லாமலே அதிரையில் ஓர் இடிமுழக்கம்!. இந்த ஓரு இடிமுழக்கமே அதிரை கல்வி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதிற்கு ஓர் அத்தாட்சி.

அதிரையின் இன்றைய அவலநிலையை அதிரடியாக பேசி நம்மை சிந்திக்க வைத்த சமூக சீர்திருத்தவாதி சலீம் அவைகளை எத்துனை பாராட்டுனாலும் தகும்.

அல்லாஹ் சகோதரர் சலீமிற்கு நீண்ட ஆயுளையும், மேலும் மேலும் தன்னலம் பாராமல் இந்த சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட அதிரை முஜீப்.காம் சார்பில் நித்தமும் துவா செய்கின்றேன்.

sabeer.abushahruk said...

தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கப்படும் தனி நேர்காணல்போல் மிக நேர்த்தியாக திருத்தி வசதியாக காண, பயனுற தந்தமைக்கு நன்றி.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மாஷா அல்லாஹ், மிக அருமை.

மாநாடு அன்று நேரலை சரியாக செயல்படுகிறதா என்ற கவனத்தில் இருந்ததால் முழுமையாக சகோதரர் CMN சலீம் அவர்களின் எழுச்சிப்பேருரையை கேட்க முடியாமல் போனது. ஆனால் நம் அதிரை கணினி சகோதரர்களின் உதவியால் இணையத்தில் முழு விடியோவையும் காணமுடிந்தது. அல்ஹம்துல்லில்லாஹ்.

சகோதரர் சலீம் அவர்கள் ஆரோக்கியம், கல்வி, ஆளுமை, வியாபாரம் போன்றவைகளில் சொல்லும் கருத்துக்களுகளை அனைவரும் கவனத்தில் கொண்டு கல்வி களத்தில் இறங்கி இன்றே வேலை செய்ய அனைத்து அதிரை சகோதரர்களும் முன் வரவேண்டும். இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் சகோதரர் சலீமிற்கு நீண்ட ஆயுளையும், மேலும் மேலும் தன்னலம் பாராமல் இந்த சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட நாம் எல்லோரும் துஆ செய்வோம்.

அல்லாஹ் போதுமானவன்..

Abu Khadijah said...

மாஷா அல்லாஹ், என்ன ஒரு அருமையான உரை, இது போன்ற மாநாடு இன்னும் நிறைய நடக்க வேண்டும், அனைத்து மக்களும் எழுச்சி பெற வேண்டும், அதற்குண்டான வழிக்காட்டுதலை இது போன்ற சமுதாய சிந்தனையாளர்கள் மற்றும் மார்க்க அறிஞர்களின் மூலம் பெற்று ஊரை முன்னேற்ற பாதையில் செல்ல நாம் அனைவரும் பாடுபட உறுதி மொழி எடுக்க வேண்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எடுத்த காரியத்தை எளிமையாகச் செய்தோம், இனியும் செய்வோம் இன்ஷா அல்லாஹ்...

உடைத்தெறியக் கூடிய தடைகள்தான் முன்னால் இருந்தது அவைகள் யாவும் பெரும் பொருட்டல்ல என்று கைகோர்த்த எங்கள் அருமை சரோதரர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் என்றொன்றும் தொடரட்டும்... இப்படி எங்கள் துஆவில் என்றும் இருந்திடும்

ZAKIR HUSSAIN said...

சகோதரர் CMN சலீம் அவர்களின் பேச்சை நமதூர் எல்லா பள்ளிவாசல்களிலும் ரெக்கார்ட் செய்து ஒலிபரப்பவேண்டும்.

நடைமுறையில் இது சாத்தியமா என தெரியவில்லை. ஏனெனில் யாராவது ஒருவர் இது தேவையா...இது இந்த இயக்கமா? அந்த ஆட்களா? என "அறிவுபூர்வமான!" கேள்விகள் கேட்களாம்.

என்னுடைய கேள்வி என்னவென்றால்...அப்படியெல்லாம் சட்டம்,விதி முறை பேசி நீங்கள் ஒன்றும் கிழிக்காததால்...விடுங்களேன் நாங்களாவது கிழிக்கிறோம்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது:
http://www.satyamargam.com/1612#comment-8000

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) அருமையான கல்வி விழிப்புணர்வு பேச்சு, விளக்கங்கள், வந்திருந்த அனைவரும் மற்றும் இதை கேட்பவர்களும் உள்வாங்கி செயலில் கொண்டு வர வல்ல அல்லாஹ் அருள் புரியட்டும்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) : அதிரை நிருபர் குழு கவனத்திற்கு : இந்த மாநாட்டு காணொளியை டவுன்லோட் செய்து பார்ப்பது போல் வைத்தால் நிறைய பேர் பயனடைவார்கள். காரணம் இணையத்தை திறந்து வைத்து கேட்டுக்கொண்டிருக்க எல்லோருக்கும் சாத்தியப்படாது.

அதனால் டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டால் நேரம் கிடைக்கும்பொழுது பார்ப்பார்கள். சிடியாக போட்டு மற்றவர்களும் பார்ப்பதற்கு கொடுப்பார்கள். மாநாட்டிற்கு வந்திருந்தவர்கள் கூட சரியாக பேச்சை கவனித்திருக்க மாட்டார்கள். சிடி வடிவில் சென்றால் மிக பயனளிக்கும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு, தங்களின் பரிந்துரை வெகு சீக்கிரமே நிறைவேற்றப்படும் இன்ஷா அல்லாஹ்...

Mohamed Rafeeq said...

காணொளிக்கு நன்றி! மறுபடியும் இந்த அருமையன காணொளியை காண்பதற்கு உதவிய சகோதரர் மொய்னுதீன் அவர்களுக்கும் நன்றி

mkr said...

அஸ்லாமு அலைக்கும்...அதிரை மக்களின் அவலை நிலை மட்டுமில்லை.ஒட்டு மொத்த சமுதாயத்தின் நிலையை தான் தனது எழுச்சி உரையில் சகோ. சலிம் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்.இதை எற்பாடு செய்த உங்களுக்கு பாரட்டுகள்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். என் வாழ்வில் கேட்ட சிறந்த பேச்சுகளில் ஒன்று. இதை நாம் ஒழுங்காக கடைப்பிடித்தால் நன்று.பின் வென்று விடலாம்.அதிரைபட்டினம் எங்கோ உச்சத்துக்கு சென்றுவிடலாம். இன்ஷாஅல்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு