அது ஒரு ரம்மியமான சூழல்…
அடர்ந்த காடு
அங்கே விலங்குகளின்
வாழ்வுதனை
படம் பிடித்து காட்டும்
டிஸ்கவரி சேனலில் பார்த்தேன்…
அழகிய காட்டில்…
துள்ளித் திரியும்
மான்கள் கூட்டம்…
அதன் கண்களில்
என்றென்றும் மிரட்சி…
புல் மேய்ந்தது பாதி
மேயாமல் நின்றதி மீதி…
கொடிய விலங்குகள்
ஏதும் வந்து விடுமோ…
புல் மேயவதற்குள்
நம்மை மேய்ந்து விடுமோ
என்ற பீதி….
பாவம்…
சிங்கமோ, சிறுத்தையோ
துரத்தி வேட்டையாடும்
சுற்றியிருக்கும் மான்கள்
செய்வது அறியாது நிற்கும்…
தாகம் மிகுதியால்
நீர் அருந்த
ஆற்றுக்கு செல்லும்
அங்கு
முதலையோ மானை
இழுத்து செல்லும்…
பார்க்க
பரிதாபமாக இருக்கும்…
சில சமயம்..
இரண்டு மூன்று வாரமே
வயதுடைய இளம் குட்டிகளை
ஓநாய்கள் குறிவைத்து
வேட்டையாடும்
தாய் மான்
காப்பாற்ற வக்கற்று
கண்ணீர் விட்டு நிற்கும்…
இது
காடுகளில் அன்றாடம்
நடக்கும் காட்சி...
மானுட இனத்தில் அதுவும் இஸ்லாமிய ஐக்கியத்தில் ஒவ்வொரு முஸ்லிம் இதயத்திற்குள் இருக்கும் ஈமானும் வேட்டையாட படுவதை கண்ணால் காண முடிகிறது.. பணத்தாசையால்... பணதேவையால்... வட்டி எனும் கொடூரமான மிருகம் .வேட்டையாடுகிறது. இன கவர்ச்சியால் பெண்ணினம் அந்நிய ஆணுக்கு இரையாகி, ஒட்டுமொத்த இனத்தின் மானத்தையே வேட்டையாடி ‘ஈமானை’ நிலை குலைய செய்கிறது.
காட்டில் எப்படியெல்லாம் இளம் மான் குட்டிகளை குள்ள நரிகளும், ஓநாய்களும் வேட்டையாடுமோ அது போன்று நம் இளம் சிறார்களின் 'ஈமானை', கல்வி என்ற பெயரால் கட்டாய கடமையான தொழுகை ஜும்ஆ நாளில் பள்ளிக் கூடங்களுக்கு செல்ல வைத்து .தொழுகையை மறக்கடித்து ஈமானை வேட்டையாடப்படுகிறது...
ஏன் இப்படி என்று கேட்டால் “என்ன செய்வது மனதுக்கு சங்கடமாகத்தான் இருக்கிறது” அவர்களின் பதிலும் என்ன செய்வது தான் முடியலையே… !
நமதூரில் நம் சமூகத்திற்கென்றே அமையப்பெற்றிருக்கும் பள்ளிக்கூடங்களில் நல்ல படிப்பு மற்றும் தொழுகைக்கான வசதி(கள்)யாவும் உண்டு..
கல்வி மாயை சைத்தானோடு கைகோர்த்து அருகிலிருக்கும் ஊர்களுக்கும், பணம் அதிகமதிகம் பெற்றேனும் இன்ன பிற ஊர்களுக்கும் அனுப்பி இளம் “மாணவர்களின் 'ஈமானை' வேட்டையாடுகின்றனர்…."
காடுகளில் ‘மானு’க்குண்டான ஆபத்து இயற்கை, எனவேதான் அவைகள் அழியாமல் இனம் பெருகிய வண்ணம் உள்ளது. நாட்டில் வாழும் முஸ்லிம் இஸ்லாமிய வாழ்வியலுக்கும், அதன் இயற்கையான சூழலுக்கும் மாறாக சிந்தித்து தனது ஈமானை பறிகொடுக்கின்றானர்.
ஈமானின் அளவு குறைந்து கொண்டே போகிறது.. வீடும் நாடும்.. காடாகிறது.. கவனம் தேவை !
-அதிரை சித்தீக்