தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?
Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயனம் இந்த ரசாயனம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவுக்கு காரணியாய் அமைகிறது .
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டா கடை ,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் வகை வகையாகவும், அளவிலும், சுவையிலும். எத்தனை வேறுபாடுகள் கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, என்று பட்டியலிடும்போதே நாக்கில் எச்சில் ஊருமே!.
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா ?
பரோட்டா என்பது மைதாவிலிருந்து செய்யப்படும் ஒரு திட உணவாகும். இது தமிழகமெங்கும் எளிதில் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதாமாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின, அதில் உருவான பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதாமாவில் உப்பு போட்டு, தண்ணிர் கலந்து அதனை கைகளால் பிசைந்து, அதன் பின்னர் எண்ணெயிட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டியெடுத்து, வீசி அடித்து, கைக்குட்டைபோல் பறக்க விட்டு, அதனை கழுவிய கைக்குட்டையை நீட்டி சுருட்டி மடிப்பதுபோல் அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தட்டையாக இருக்கும் சூடான / தோசைக் கல்லில் போட்டு அதன் நிறம் சிவப்புக்கும் கறுப்புக்கும் இடையில் வரும் வரை புரட்டி எடுத்துப் போடுவார்கள்.
இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில்தான் பிரச்சனை துவங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .
மைதா என்றொரு மாவு எப்படி தயாரிக்கிறார்கள் ?
நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்ழோய்ல் பெராக்ஸைட் (benzoyl peroxide) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மை யாக்குகிறார்கள்,அதுவே மைதா .
Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயனம் இந்த ரசாயனம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவுக்கு காரணியாய் அமைகிறது .
இது தவிர Alloxan என்னும் ரா ரசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உபபொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .
இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைpபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் .
இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.
Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .
மைதாவை நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல் ,இருதய கோளாறு ,நீரிழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.
இப்போதே நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறையைக் காப்போம்.
- முஹம்மது யாசிர்


