எப்படிப் பிறந்த நீ…
இப்படி ஆயிட்டே!
உச்சந்தலையில்
பொத்தல் விழுந்த
ஓட்டோடுதான் பிறந்தாய்
இருக்கிப் பொத்திய
கைகளுக்குள்
ரேகைகளைத் தவிர
ஒன்றுமில்லாமல்தான் வந்தாய்
கண் திறந்து பார்க்கவே
கால அவகாசம்
தேவைப்பட்டது உனக்கு
இருந்த நிலையிலும்
படுத்தும் நின்றும்
தவழ்ந்தும் புரண்டும்
என
இப்படித்தான் என்றில்லாது
மலஜலம் கழித்தாய்
எல்லாவற்றிற்கும் அழுதாய்
இல்லாவற்றிற்கும் அழுதாய்
அழுவதைத் தவிரவும்
சிரிப்பதைத் தவிர்த்தும்
வேரொன்றும்
அறிந்திருக்கவில்லை நீ
உறக்கம் வேண்டியோ
உணவுக்காகவோ
அழுவதைத் தவிர
நீ அறிந்த மொழிதான் யாது
குரல் கொடுத்தால் அம்மாவும்
விரல் பிடித்து நடக்க அப்பனும்
அவசியப்பட்டது உனக்கு
உணவோ உடையோ
உதவி வேண்டியவனாகவே வளர்ந்தாய்
கூனிக் குறுகி
கால்கள் மடித்து
முடங்கிக் கிடந்த கருவறை வாசம்
மறந்து போனாய்..
காலப்போக்கில் உன்
கோலம் மாறினாய்
விழி விரித்தாய்
மொழி அறிந்தாய்
உணவுக்காக பிறர்
உணர்வுகளைக் கொன்றாய்
வேட்க்கைகளை அடைவதை
வாழ்க்கையெனக் கொண்டாய்
யாக்கையின் தேடலின்
போக்கை மற்றவில்லை நீ
புலன்களின் சுகங்களே வாழ்வின்
பலன் எனக் கொண்டாய்
பிறந்தவர் யாவரும்
இறப்பவர் தானே
இமைகள் விலக்கவே
இயலாது உன்னால்
பார்வை இருக்கும்
பரிச்சயம் தெரியாது
சுவாசம்
சுமையாகிப் போகும்
உற்றார் உறவினர்
உடனிருப்பர் உதவமாட்டார்
முதுகு அரிக்கும்
புரண்டு படுக்க முடியாது
உனக்குப் பிடித்த
எல்லாம் உன்
கூட இருக்கும்
கூட வராது
கும்மிருட்டும்
குறுகிய இடமும்
குலை நடுங்கச்செய்யும் அமைதியும்
குடும்பத்தினர் அற்றத் தனிமையுமாய்
குழிக்குள் இடுமுன் உணர்
குறுகியது
குவலயத்து வாழ்வு!
சபீர் அபுசாரூக்
இப்படி ஆயிட்டே!
உச்சந்தலையில்
பொத்தல் விழுந்த
ஓட்டோடுதான் பிறந்தாய்
இருக்கிப் பொத்திய
கைகளுக்குள்
ரேகைகளைத் தவிர
ஒன்றுமில்லாமல்தான் வந்தாய்
கண் திறந்து பார்க்கவே
கால அவகாசம்
தேவைப்பட்டது உனக்கு
இருந்த நிலையிலும்
படுத்தும் நின்றும்
தவழ்ந்தும் புரண்டும்
என
இப்படித்தான் என்றில்லாது
மலஜலம் கழித்தாய்
எல்லாவற்றிற்கும் அழுதாய்
இல்லாவற்றிற்கும் அழுதாய்
அழுவதைத் தவிரவும்
சிரிப்பதைத் தவிர்த்தும்
வேரொன்றும்
அறிந்திருக்கவில்லை நீ
உறக்கம் வேண்டியோ
உணவுக்காகவோ
அழுவதைத் தவிர
நீ அறிந்த மொழிதான் யாது
குரல் கொடுத்தால் அம்மாவும்
விரல் பிடித்து நடக்க அப்பனும்
அவசியப்பட்டது உனக்கு
உணவோ உடையோ
உதவி வேண்டியவனாகவே வளர்ந்தாய்
கூனிக் குறுகி
கால்கள் மடித்து
முடங்கிக் கிடந்த கருவறை வாசம்
மறந்து போனாய்..
காலப்போக்கில் உன்
கோலம் மாறினாய்
விழி விரித்தாய்
மொழி அறிந்தாய்
உணவுக்காக பிறர்
உணர்வுகளைக் கொன்றாய்
வேட்க்கைகளை அடைவதை
வாழ்க்கையெனக் கொண்டாய்
யாக்கையின் தேடலின்
போக்கை மற்றவில்லை நீ
புலன்களின் சுகங்களே வாழ்வின்
பலன் எனக் கொண்டாய்
பிறந்தவர் யாவரும்
இறப்பவர் தானே
இமைகள் விலக்கவே
இயலாது உன்னால்
பார்வை இருக்கும்
பரிச்சயம் தெரியாது
சுவாசம்
சுமையாகிப் போகும்
உற்றார் உறவினர்
உடனிருப்பர் உதவமாட்டார்
முதுகு அரிக்கும்
புரண்டு படுக்க முடியாது
உனக்குப் பிடித்த
எல்லாம் உன்
கூட இருக்கும்
கூட வராது
கும்மிருட்டும்
குறுகிய இடமும்
குலை நடுங்கச்செய்யும் அமைதியும்
குடும்பத்தினர் அற்றத் தனிமையுமாய்
குழிக்குள் இடுமுன் உணர்
குறுகியது
குவலயத்து வாழ்வு!
சபீர் அபுசாரூக்


