கண்கள் இரண்டும் - தொடர் - 30 7

அதிரைநிருபர் பதிப்பகம் | March 31, 2014 | , ,


கண்களை அலங்காரம் செய்தல் (பெண்களுக்கு மட்டும்):

கீழே அலஅங்காரம் பற்றி எழுதியுள்ளேன் கணவனுக்கு மட்டும் காட்ட அலங்கரம் செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது ஆனால் அந்த அலங்காரத்தை அன்னியனுக்கு காட்டுவதாக இருந்தால் மட்டுமே அலங்காரம் செய்வது இஸ்லாத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது

வெளியில் செல்லும் கணவன், மாலையில் வீடு திரும்பும் போது களைப்புடன் வருவான். களைப்பாக வரும் கணவனை உற்சாகமூட்டி கவரும் வகையில் தன் அழகை மெருகூட்டிக் கொண்டால் நல்லதுதானே. அதைச் செய்யத் தயங்கும் தன் மனைவி மீது எரிந்துவிழத் துவங்கும் கணவன். காலப் போக்கில் வேறு பாதையில் திசைமாறிச் செல்கிறான். சில நல்ல கணவர்கள் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினாலும் கூட தங்களை அலங்கோலமாகக் காட்டிடும் மனைவியால் அங்கு சண்டைச் சச்சரவு தொடர்ந்து ஏற்படத்தானே செய்யும்.

பொதுவாக, நீ உன் குழந்தைப் பருவத்திலேயே ஆடை அலங்காரத்தில் அதிகம் கவனம் செலுத்துவாய். அதை இப்போது கைவிட்டு விடாதே! உன் கலருக்கு ஏற்ற கலர் ஆடைகளைத் தேர்வு செய்து நல்லவிதமாக அலங்காரம் செய்து கொள்! கண்களுக்கு சுருமா இட்டு, நறுமணம் பூசி, பூச்சூடி, சிரித்த முகத்துடன் கணவரை வரவேற்றுப் பார்! அளவிலா மகிழ்ச்சி கிடைக்கும். சோர்ந்து வரும் உன் கணவர், சுறுசுறுப்பாகி விடுவார். உன்னைச் சுற்றி சுற்றி வருவார். இது ஒன்றும் மார்க்கத்தில் தடை செய்யப் பட்டதல்லவே! ஆனபடியால் மேற்கொண்டு  வரும் தகவல்களுக்கு தயவு செய்து யாரும் தவறாக கருத்திட வேண்டாம் கண்ணை பற்றி எழுதும்போது எதையும் மறைக்க கூடாது என்பதால் எல்லாவற்றயும் எழுதிடலாம் என்பதால் அலங்காரம் பற்றியும் எழுதுகின்றேன்

மேலே நான் மேற்கோள் காட்டிய  விளக்கத்தில் அலங்காரம் எதற்கு செய்ய வேண்டும் என்பதை புரியலாம். ஆனால், தற்போது அதற்கு நேர் எதிரான
நிலைகளை மேற்கொண்டு கணவனின் அன்பையும், இறையன்பையும்
இழந்து நிற்கும் முஸ்லிம் பெண்களை என்னவென்பது! மகளே! வீட்டில் கணவர் அருக்கும் போது தலைவிரிக் கோலமாக காட்சியளித்துவிட்டு அன்னிய ஆடவர்களுக்கு உன் அழகை காட்டாதே

பொதுவாகப் பெண்கள் தங்களது அலங்காரங்களை வெளிப்படுத்தக்கூடாதுஎன்று திருகுர்ஆன் கூறும் அதே வேளையில் வெளிப்படையானஅலங்காரங்களை மட்டும் பெண்கள் வெளிப்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கின்றது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள்தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிரமற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின்மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர்,தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள்,பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.” (அல்குர் ஆன் 24: 31)

மேற்கண்ட வசனத்தில் வெளிப்படையான அலங்காரங்களைத் தவிர மற்றஅலங்காரங்களை அன்னிய ஆண்களிடமிருந்து பெண்கள் மறைக்கவேண்டும் என்று உத்தரவிடப்படுகின்றது.

கண் புருவம், இமை இவைகள் அழகாக இருந்தால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும்.  கூடிய மட்டும் புருவத்திற்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள் அது முகத்திற்கு ஒரு செயற்கையான தோற்றத்தை உருவாக்கும்.

கண் இமைகளை பொறுத்த வரை அதிக முடி மற்றும் மேல் நோக்கிய இமை முடிகள் அழகான தோற்றத்தை அளிக்கும். கண் இமைகள் குறைவாக இருப்பின் அதன் அடர்த்தியை அதிகப்படுத்திக் காட்டும் மஸ்காராக்களை உபயோகிக்கலாம். 

இப்போதைய பேஷன் கண் இமைகளின் மேல் கறுப்பு ஐலைனர் கொண்டு வரைந்து முனைகளை பழங்கால ஸ்டைலில் சிறிது மேல் நோக்கி வளைத்து விடுவதுதான். ஐலைனர் போட்டு கீழேயும் மை போடுவது எல்லோருக்கும் எடுப்பாக இருக்காது. கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாது. 

ஐஷேடோ முக நிறத்திலேயோ, பிரவுன் நிறத்திலேயோ போடுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஐ ஷேடோவில் மூஸ், க்ரீம், ஜெல், பவுடர் என்று பல ரேஞ்சுகளில் உள்ளது. மஸ்காராவிலும் பல நிறங்கள் கிடைக்கின்றன. அவரவர் சருமத்திற்கு தகுந்த நிறத்தை காஸ்மெட்டிக் கடை கன்சல்டண்டின் உதவியுடன் தேர்ந்தெடுங்கள். சிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும்.

அடுத்து தொடரிலும் கண்களை அலங்கரித்தல் வளரும்
(வளரும்
அதிரை மன்சூர்

என் இதயத்தில் இறைத்தூதர் - 5 - [இறைத் தூதருக்காக செய்ய மாட்டீர்களா ?] 18

அதிரைநிருபர் பதிப்பகம் | March 30, 2014 | ,


இஸ்லாம் எந்தளவுக்கு நடைமுறைக் கேற்ற மார்க்கம் என்பதை நம் அன்றாட வாழ்விலும், செய்திகள் மூலமும்  அறிந்து கொள்கிறோம். முன்பு பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு, மாப்பிள்ளை அல்லது பெண் பார்த்து திருமணம் செய்வித்தார்கள். பிள்ளைகளும் ஏற்றுக் கொண்டனர். அந்தப் பிள்ளைகளும் தன் கணவனை / மனைவியைக் காதலித்தார்கள். பிரச்சினைகள் எழவில்லை, அப்படி எழுந்தாலும் அதன் அளவு மிக மிகக் குறைவே,அதையும் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொண்டார்கள்.

ஆனால், இன்றைய நவீன??? கால உலகில் திருமணத்திற்கு முன்பே திருட்டுக் காதல், கள்ளக் காதல் என்று எல்லா சமூகங்களிலும் பெருகி வருவது மிக மிக கவலைக்குரியதாகும். பிற மதங்களில் இவ்வாறு நடப்பது என்பது ஒரு பெரிய விஷயமல்ல. காரணம், ஆண்/பெண் எவ்வாறு நடக்க வேண்டும் என்ற வாழ்வியல் சட்டங்கள்-திட்டங்கள் அவர்களின் மத நூற்களில்  கிடையாது. பெண்களை எப்படி வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என்று அவாள்களின் புராணக் கதைகளும், சிலைகளின் சிற்ப வேலைப்பாடுகளும் காட்டுகின்றதே தவிர, நல்ல விஷயங்களை போதிக்கவில்லை. அதனால் அவர்கள் பாழுங்கினற்றில் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

நம் மார்க்கத்தைப் பொருத்தவரை, நமக்கென்று தெளிவான சட்ட திட்டங்கள் இருக்கின்றன. யார் யார் எப்படி நடக்க வேண்டும், சிறுநீர், மலம் கழிக்கும் முறையைக் கூட ஆரோக்கியம் பேணும் வழிமுறையாக கற்றுத் தரும் நம் மார்க்கத்தில் சிலர் புதிய சிந்தனைகளால், அதனால் ஏற்பட்ட கோளாறினால், "நான் ஷைத்தானுக்கு மச்சான்" என்ற ரீதியில் செயல்படுவதனால் அவரும் தறிகெட்டு, அவரைத் தொடர்ந்தவர்களும் நிலை தடுமாறி, நரக நெருப்பை சந்திக்கும் அவல நிலை ஏற்படுகிறது.

"ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் ஷைத்தான் இருப்பான்" (ஆதாரம் : அஹ்மது) என்ற நபிகள் நாயகத்தின் அருள் மொழியை எண்ணிப் பார்த்தால் எவ்வளவு நிதர்சனமென்பது புரியும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மேல் உள்ள நம்பிக்கையினால், கூடவே இருக்கும் ஷைத்தானை மறந்து விடுகிறார்கள். அந்த ஷைத்தான் - அந்த பிள்ளைகளை நரக படுகுழியில் தள்ளும் முயற்சியை தூண்டி விடுகின்றான்.

இன்று தொலைக்காட்சிகள், இணையதளங்கள், செய்தித்தாள்கள் என எதிலும் நிறைந்திருக்கும் கள்ளக் காதல், காதலன் ஏமாற்றியதால்,கணவனின் அல்லது மனைவியின் கள்ள தொடர்பால் தற்கொலை அல்லது கொலை இப்படியான செய்திகள் வியாபித்திருப்பவைகள் தான் அதிகம், அதிகம். இவைகளை களைய பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு - அடிப்படை மார்க்க அறிவினை போதிப்பது இன்றியமையாக் கடமையாகும்.

தன் பிள்ளைகள் டாக்டர், எஞ்சினியராக வேண்டும் அதன் மூலம் பெண் வீட்டைக் கொள்ளை அடிக்க வேண்டும் என்று ஆண் மகனைப் பெற்ற பெற்றோரும் என் மகள் மெத்தப் படித்தவள் என்று தன் மகளைப் பெற்றோரும் பீற்றிக் கொள்கிறார்களே தவிர, என் மகன் அல்லது மகள் தொழக் கூடிய, குர்ஆன் ஓதக்கூடிய, அல்லாஹ்வையும், அவன் தூதரையுமே பின்பற்றக் கூடிய ஒரு முஸ்லிம் என்று சந்தோஷப்படுகிறோமா? அவர்களை அப்படி வளக்கிறோமா ? அவ்வாறு செய்ய ஏவுகிறோமா ? இப்படி எண்ணுபவர்களின் சதவிதம் மிகக் குறைவு. அதனால்தான் முஸ்லிம் குடும்பத்தில் கூட இவ்வாறெல்லம் நடக்க அரம்பித்து விட்டது.அப்படி மார்க்கத்தை - அடிப்படை இஸ்லாமிய அறிவை ஊட்டவில்லை என்றால் இது தொடர் கதை ஆகிவிடும்.

இவைகளைக் களைய, நம் தனிப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை இருக்கிறது.முஸ்லிம் இயக்கங்கள் எல்லாவற்றுக்கும் கடமை இருக்கிறது.அரசியல் பேச மட்டுமா இயக்கங்கள் !? அசிங்கங்களைக் களையவும் தான். நம்மிடையே இருக்கும் இயக்கங்கள் எல்லாம், ஒன்று கூடி ஒருவருக்கொருவர் அனுசரித்து மார்க்கத்தின் போதனைகளை ஒரே குழுவாக இருந்து எடுத்துரைத்தால் இன்னும் வலுவாக இருக்கும்.இது நடக்கக் கூடிய காரியமா? என தயவு செய்து அங்கலாய்க்கவோ, கமெண்ட் கொடுக்கவோ எண்ணாதீர்கள், மாறாக, சீரியசாக விவாதியுங்கள். அவரவர் இயக்க உறுப்பினர், அந்த அந்த இயக்க தலைவர்களிடம் கேள்வி கேளுங்கள், முடிவு செய்யுங்கள், காரியத்தில் இறங்குங்கள்,மாற்றத்தை இறைவன் பார்த்துக் கொள்வான்.

முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய இயக்கங்கள் எல்லாம் இணைந்தால், அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை பெருகும். ஒரே குரலாக எதிரொலிக்கலாம். சட்டமன்றம், பாராளுமன்றத்தில் நம் குரல் ஒலிக்க வலுவான ஒரு கூட்டணியாக ஏற்படுத்தி, தேர்தலில் நின்று சாதிக்கலாம். இவைகளுக்கு எல்லா கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் ஒத்துழைப்பார்கள். ஆனால்,இதற்கு  அந்தக் கட்சிகளின் / இயங்கங்களின் தலைவர்கள்தான் தங்களின் ஈகோவை கைவிட வேண்டும்.

"உங்களுக்கும், நீங்கள் யாரைப் பகைத்தீர்களோ அவர்களுக்குமிடையே, அல்லாஹ் அன்பை ஏற்படுத்தி விடக் கூடும், அல்லாஹ் ஆற்றலுடையவன்" - (அல்குர்ஆன் 60:7)

"உன் பகைவனை அளவோடு வெறு ! ஒருநாள் அவன் உன் நண்பனாக ஆகலாம்" (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்).

"எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புத் தேடுபவர்களே!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆக, இறைவன் நாடினால், எதுவும் சாத்தியமே ! இதை அரசியல் கட்சிகள் / இயக்கங்களின் தலைவர்கள் அனைவரும் ஓன்று கூடி, சிந்தித்து ஒரே தலைமையின் கீழ் செயல்பட முயற்சிக்க வேண்டும்.

இன்றொன்றையும் சொல்லியாக வேண்டும், மார்க்க விஷயங்களில், பிரச்சாரத்தில் கொள்கைகளை விளக்கி ஏக இறைவனையே வணங்க வேண்டும் என்ற உயரிய கொள்கையைக் கொண்ட எல்லா முஸ்லீம் இயக்கங்களும் ஒன்றிணைந்து ஒரே குரலாக பிரச்சாரத்தை பலப்படுத்தி, நம் களப் பணிகளை வீரியமாக ஆக்கினால் இன்ஷா அல்லாஹ் கை மேல் பலன் கிட்ட வாய்ப்பாக அமையும்.

கட்டுக் கோப்பான உறுப்பினர்களை கொண்ட இயக்கங்கள் அதன் தலைவர்களின் ஈகோவை மறந்து அல்லாஹ்விற்காக அவைகளை துறந்து செயல்பட்டால், ஒரே குரலாக மார்க்கப் பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்ல முடியும்.

அரசியலுக்கு ஒரு கட்சி என்றும் மார்க்கம் போதிக்க மற்றொரு இயக்கமென்றும் இரட்டைக் குழாய் துப்பாக்கியாக, செயல்பட முடியும். ஒரே குரலில், ஒரே முகம் கொண்டு, ஒரே லட்சியம் என வரும்போது இன்ஷா அல்லாஹ் நிறைய சாதிக்க இயலும்.

இந்த வேண்டுகோளை அனைத்து இயக்கங்களின் தலைவர்கள், அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த பதிவின் வாயிலாக தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

ஏக இறைவன் அல்லாஹ்வுக்காக, நம் இதயத்தில் என்றும் நிலைத்து இருந்து கொண்டிருக்கும், இறைத் தூதருக்காக செய்ய மாட்டீர்களா ?

இறைவன் நாடினால் தொடரும்

இப்னு அப்துல் ரஜாக்

எண்ணிலடங்கா இஸ்லாமிய தியாகிகள்... 13

அதிரைநிருபர் பதிப்பகம் | March 29, 2014 | , ,

தொடர் -20

கடற்கரைப்பக்கம் காலார நடந்தவன், முத்துக்கள் அடங்கிய சிப்பிகள் கிடைத்தால் எவ்வளவு மகிழ்வானோ அத்தனை மகிழ்வெனக்கு. இந்திய சுதந்திரப் போராட்டத்தில், ஈடுபட்ட தியாகிகளின் வரலாறுகளை தேடத் தொடங்கிய அனுபவத்தையே நான் அவ்வாறு உணர்கிறேன். இந்திய தேசிய உணர்வு அற்றவர்கள் என்று மூடர்களால் முத்திரை குத்தப் பட்டு பரப்புரை செய்யபப்டும் ஒரு சமுதாயம் , வரலாற்றால் விளம்பரப் படுத்தப்படும் மற்ற எல்லோரையும் விட வீரத்திலும் தியாகத்திலும் விலை மதிக்க முடியாத தொண்டுகளை ஆற்றி இருக்கிறது என்று அறிய, அறிய அதைப் பகிரப் பகிர நெஞ்சமெல்லாம் இனிக்கிறது. எண்ணிலடங்கா இஸ்லாமியத் தியாகிகள் என்கிற தலைப்பிட்ட பட்டியல் இதோ இன்னும் தொடர்கிறது. இதற்கு மேலும் தொடரும் இன்ஷா அல்லாஹ். 

ஹாஜி கருத்த ராவுத்தர் :-

தமிழகத்தின் தென் புறத்தில் , உத்தம பாளையத்தில் கல்விச் சோலை அமைத்து கல்விப்பணிக்காக கல்லூரியை அமைத்துத் தந்த ஹாஜி கருத்த ராவுத்தர் என்பதுதான் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்கு தெரியும். ஆனால் அவர் ஒரு மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரராகவும் பரிணமித்தார் என்பதை இங்கு பகிர்வதில் பெருமைப்படுகிறேன். 

முதலாவதாக, எந்த ஒரு அரசியல் போராட்டம் என்றாலும் அதற்கு உரிய செலவுகளை செய்வதற்கு நிதி வேண்டும். 

“பொருள் கொண்ட பேர்கள் மனம் கொள்வதில்லை 
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை”

என்று ஒரு பாடல் உண்டு. பணமும் மனமும் படைத்திருந்த மாமனிதர்கள் மிகச் சிலரே. அவர்களின் மதிக்கத்தக்க மாண்பு பெற்றிருந்த செல்வந்தர் ஹாஜி கருத்த ராவுத்தர் அவர்கள். காந்தியார் அறிவித்த கள்ளுக்கடை மறியல் போராட்டம், பொதுக் கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் உட்பட்ட அனைத்துப் போராட்டங்களுக்கும் நடைமுறை செலவுகளுக்கு தனது இரும்புப் பெட்டியைத்திறந்து பணத்தை அள்ளி இறைத்தவர் ஹாஜி கருத்த ராவுத்தர் ஆவார். நாட்டின் சுதந்திரத்துக்கு முன் தான் தேடிவைத்திருந்த செல்வம் பெரிதல்ல என்பதை பலமுறை தேவைக்குக் கொடுத்து நிரூபித்தவர். 

இவரது அஞ்சாத நெஞ்சுக்கு ஒரு உதாரணம் என்னவென்றால் ஹாஜி கருத்த ராவுத்தர் பிறந்து வாழ்ந்த கம்பம் பள்ளத்தாக்கில் சுதந்திர இயக்கத்தை ஒடுக்குவதற்காக, கதர்த் துணியை விற்கக் கூடாது என்று ஆங்கில அரசு தடை வித்தித்து இருந்தது. ஆனால் இந்த செப்படி வித்தை ஹாஜி கருத்த ராவுத்தரின் நெஞ்சில் கனல் வீசிக் கொண்டிருந்த சுதந்திர உணர்வின் முன் செல்லுபடியாகவில்லை. உத்தம பாளையத்தில் தானே ஒரு கதர் விற்பனை நிலையத்தை அரசின் அடக்குமுறை உத்தரவுக்கு அஞ்சாமல் துவக்கினார். மராட்டிய மாநிலத்தில் இருந்து கதர் துணிகளை தடைகளை மீறி வரவழைத்து அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் தட்டுப்பாடின்றி கதராடை கிடைக்க வழிவகுத்தார். 

வானளாவிய அதிகாரம் படைத்ததாக மார் தட்டிக் கொண்ட ஆங்கில அரசின் அடக்குமுறைகள் கூட ஹாஜி கருத்த ராவுத்தரின் செல்வாக்குக்கு முன் செல்லாக்காசாகின என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வைச் சொல்கிறார்கள். 1922- ல் , பெரியகுளம் தாலுகாவின் காங்கிரஸ் மாநாட்டை நடத்தும் பொறுப்பு ஹாஜி கருத்த ராவுத்தர் அவர்களுக்கு காந்திஜியால் வழங்கப் பட்டது. மாநாடு நடத்தப் பட்டதன் முக்கிய நோக்கம் கிலாபத் இயக்கத்தை ஒடுக்குவதற்காக ஆங்கில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அறிவித்தும் - எதிர்த்தும் மக்களுக்கு அந்த நடவடிக்கைகளை விமர்சனம் செய்து அவர்களது கவனத்துக்குக் கொண்டு வருவதே ஆகும். 

அன்னாளில் சுதந்திரப் போராட்ட வீரர்களை தனது உணர்வுகரமான உரையாற்றலால் வீரம் கொப்பளிக்க வைத்தவர்களில் சேலம் வரதராஜுலு நாயுடு அவர்கள் முக்கியமானவர். ஹாஜி கருத்த ராவுத்தர் நடத்திய மாநாட்டிற்கு தலைமை தாங்க வரதராஜுலு நாயுடு அவர்கள் அழைக்கப் பட்டு இருந்தார். தலைவர் வந்து மாநாட்டுப் பந்தலில் அமர்வதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு ஒரு கனத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கஷ்டப்பட்டு மேடையேறி தலைவரின் கையில் ஓர் கட்டளை இடப்பட்ட காகிதத்தைத் திணிக்கிறார். அதில் குறிப்பிட்டிருந்தது என்ன வென்றால் இந்த மாநாட்டில் வரதராஜுலு நாயுடு உரையாற்றக் கூடாது அப்படி உரையாற்றினால் உடனே கைது செய்யப்படுவார் என்ற எச்சரிக்கைதான் அந்தக் காகிதத்தின் உள்ளடக்கம். 

காகிதத்தை வாங்கிப் படித்த வரதராஜுலு நாயுடு எழுந்தார்; மைக்கைப் பிடித்தார். கண்ணியம் மிக்க ஹாஜி கருத்த ராவுத்தர் அவர்களே! என்று அழைத்து தனது உரையைத் தொடங்கி, கிலாபத் இயக்கம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலை முதலிய விஷயங்களை அலசி ஆழமான உரையை சற்றும் அஞ்சாமல் அயராமல் ஆற்றி அமர்ந்தார். கைது செய்ய வந்த காவல்துறை , ஹாஜி கருத்த ராவுத்தர் என்ற அரண் அங்கே அமர்ந்து இருந்ததால் அவரை மீறி தனது விலங்குகளை வைத்து வித்தை காட்ட இயலவில்லை. அந்த அளவுக்கு ஆங்கில அரசின் கட்டளையையும் காவல்துறையையும் கட்டிப் போட்டது ஹாஜி கருத்த ராவுத்தரின் கடைக்கண் பார்வையாகும். மாநாடு முடிந்து, உத்தம பாளையத்தின் எல்லை தாண்டிய பிறகே வழிமறிக்கப் பட்டு கைது செய்யப்பட்டார் வரதராஜுலு நாயுடு என்பது வேறு விஷயம். இப்படி தனது செல்வத்தாலும் செல்வாக்காலும் சுதந்திரப் போராட்டத்துக்கு துணை நின்றவர் ஹாஜி கருத்த ராவுத்தர் ஆவார். பின்னாளில் ஹாஜி கருத்த ராவுத்தர் அவர்களுடைய கல்விப்பணிக்காகவும் சமுதாயம் அவருக்காக துஆச் செய்யக் கடமைப் பட்டு இருக்கிறது. 

ஹாஜி முகமது மெளலானா:-

“மதுரைவாசி ஹாஜி முகமது
மவுலானா பெயர் மங்குமோ 
அவர் மனதிலே துயர் தங்குமோ!
மகிழ்வினோடு சிறையில் வாழும் 
மாட்சி தன்னை எண்ணுவீர் ! -"

என்று பாடினார் கம்பம் பீர் முகமது பாவலர். இந்தப் பாடல் மதுரையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஹாஜி முகமது மெளலானா அவர்களின் தியாகத்தின் பானை சோற்றுக்குப் பதமாகும்.

1886-இல் பிறந்த முகமது மெளலானா தனது தொடக்கக் கல்வியை ஆங்கில வழிக்கல்வி மூலம் பெற்று பின்னர், பார்ஸி மொழியும், உருது மொழியும் கற்றார். மதுரை முனிச்சாலைப் பகுதியில் சௌராட்டிர சமூகத்தவர் மிகுதியாக இருந்த காரணத்தால் அவர்களுடன் பழகிய ஹாஜிமுகம்மது, மேடையேறி சௌராட்டிர மொழியில் பேசும் திறமையும் பெற்றார். ஹாஜியின் தந்தை இறைப்பற்றுடன் நாட்டுப்பற்றும் மிகுந்தவராக இருந்ததால் அந்நாளில் சுதந்திர தாகம் நிறைந்தவர்கள் வாங்கிப் படிக்கும் சுதேசமித்திரன் நாளிதழை வாங்கி வந்தார். அதனை, ஹாஜிமுகமது அவர்களும் படித்து அன்றாடம் நாட்டின் நடப்புகளை கவனித்து அறிந்து வந்தார். 1910 இல் முதன்முதலில் அன்னிபெசண்ட் துவக்கிய ஹோம்ரூல் இயக்கத்தில் சேர்ந்து போராட்டத்தில் பங்கு கொண்டார்.

ஆங்கிலேயக் கப்பல் கம்பெனிக்கு எதிராக வ. உ. சி, கப்பல் கம்பெனி தொடங்கியதும் அதனால் கைது செய்யப்பட்டதும், நெல்லையில் இதனால் மக்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பும் இவற்றை உற்று நோக்கிக் கொண்டிருந்த மௌலானாவின் நாட்டுப்பற்றின் ஆர்வத்தை அதிகமாக்கின.

1908- மார்ச் 13-ஆம் நாள் விபின் சந்திரபாலரின் பிறந்தநாள் விழா நெல்லையில் கொண்டாடப்பட்ட போது ஆங்கிலேயரின் அடக்குமுறையும், அதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் முகம்மது யாசீன் என்ற இளைஞர் இறந்ததும் மௌலானாவை இன்னும் பெரும் கவலைக்குள் ஆழ்த்தியது. அந்நியரின் அடக்குமுறைக்கு எதிராக ஆத்திரம் கொண்டார். துப்பாக்கி ஏந்தி வெள்ளையனை விரட்டும் வீரனாகத் தன்னைத்தானே கற்பனை செய்து கொண்டார். இவ்வாறு இளமையிலேயே தனது உணர்வுபூர்வமான ஆர்வத்தை நாட்டு நலனுக்காக அமைத்துக் கொண்டார். 

“சொல்வல்லான் சோர்விலான் இவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது “ எனும் இலக்கணத்துக்கேற்ப சிறந்த நாவன்மை படைத்த முகமது மெளலானா அவர்கள் பேசத்தொடங்கினால் கூட்டம் வாய் பிளந்து கேட்கும் நாவன்மை படைத்தவராகத் திகழ்ந்தார். இவரது பேச்சு பொருள் பொதிந்ததாகவும், இலக்கிய ரசனையுடனும் உலக நடப்புகள், நாட்டு நடப்புகள் இவற்றைத் துல்லியமாக விளக்கும் வகையில் இருக்குமென்பதால், இவரது பேச்சை மக்கள் விரும்பி இவருக்கென்று ஒரு கூட்டம் கூடும். பல அறிஞர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள் இவைகளிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டி பேசும் பாங்கு அந்த நாளில் மிக அரிதானது. அரசை எதிர்த்து அழுத்தமான குற்றச் சாட்டுக்களை முன்வைத்துப் பேசிய முறைகள்- அந்த சண்டமாருத எழுச்சி மிக்க சொற்பொழிவுகள் ஆங்கில அரசுத் தரப்பினரை அச்சம் கொள்ள வைத்தன. அரசு இவரை தனது இரகசிய கவனத்தின் பட்டியலில் வைத்துக் கொள்ளத் தொடங்கியது. 

1921இல் நிலக்கோட்டையில் கள்ளுக்கடை மறியல் நடந்தது. கள்ளுக்கடை வைத்து காசு பார்த்துக் கொண்டிருந்த கள்ளுக்கடை அதிபர்கள் இந்த மறியலை எதிர்த்து உள்ளூர் குண்டர்கள் சிலரை ஏவிவிட்டு சத்தியாக்கிரகிகள் மீது தாக்குதல் நடத்தியதால், அங்கு ஓர் கலவரம் உருவாகி, சமூக விரோதிகளால் பல கடைகள் சூறையாடப்பட்டன. காவல்துறையோ சுதந்திரப் போராட்ட தொண்டர்கள் மீது கொள்ளை வழக்கைப் பதிவு செய்து வழக்கு நடத்தினார்கள். அந்த வழக்கில் ஹாஜி முகமது மெளலானா அவர்களும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். வழக்கு செஷன்ஸ் கோர்ட்டுக்குப் போனபோது இவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். ஆகவே அரசு அடுத்த சந்தர்ப்பத்தை நோக்கி இருந்தது. 

தஞ்சாவூரில் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அதில் இவர் பேசிய உணர்வூட்டும் பேச்சுக்காக, மக்களைத் தூண்டிவிட்டார் என்ற கோழைத்தனமான குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தரப்பட்டது. சிரித்த முகத்துடன் சிறை சென்றார். 

மீண்டும் 1932-ல் மதுரையில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் ஹாஜி முகமது மெளலானா கைது செய்யப்பட்டு, இன்னொரு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். 

தீவிரமான மதப் பற்றும் பேணுதலும் ஒழுக்கமும் உள்ளவராக ஹாஜி முகமது மெளலானா அவர்கள் திகழ்ந்தார். அதில் சிறிதும் குறையாத அளவுக்கு நாட்டுப்பற்றும் மிகுந்தவர். இவர் மதுரை நகராட்சியின் தலைவராகவும் , துணைத் தலைவராகவும் பதவி வகித்தும் தொண்டாற்றினார். எந்த நேரத்திலும் மத ஒற்றுமைக்காகப் பாடுபட்டு வந்தவர்.

இவரது இடைவிடாத பணிகளுக்கிடையிலும் ஒவ்வொரு வேளையிலும் தொழுகை நடத்தத் தவற மாட்டார். சிறையிலும்கூட சிறை அதிகாரிகளிடம் போராடி சிறையில் இருந்த முஸ்லிம்களுக்காகத் தொழுகைக்கென்று தனியிடம் கேட்டு வாங்கி, பாய், விளக்கு, தண்ணீர் ஆகியவை கிடைத்திட வழிவகுத்தவர் என்று சிறைச்சாலைக் குறிப்புகள் இவரது செயல்களுக்கு சான்று பகர்கின்றன. முகமது மெளலானா சாஹிப் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! 

மாஷா அல்லாஹ் இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது சகோதரர்களே! இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம். 

இபுராஹீம் அன்சாரி
================================================================
எழுத உதவியவை:
எஸ் கே. அமீர் பாட்சா – இந்திய விடுதலையில் இஸ்லாமியரின் பங்களிப்பு 
எம். கவுது முகையதீன்- ஹாஜி கருத்த ராவுத்தர் – ஒரு பார்வை. 
நன்றி: பேராசிரியர் .மு. அப்துல் சமது.

நேற்று! இன்று ! நாளை! – தொடர் 33 ( நமது கல்வி- 5 ). 14

அதிரைநிருபர் பதிப்பகம் | March 27, 2014 | , , , , ,

நமது கல்வியின் நிலை பற்றிய ஒரு அலசலை, கல்வி வளர்ப்போம்! ஒற்றுமையாய் கரங்கள் இணைப்போம் ! என்ற தலைப்பில் இதே அதிரைநிருபர் வலை தளத்தில் 2012 பிப்ரவரி 04-ஆம் நாள் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அந்தப் பதிவில் கல்வி பற்றிய பகுதியை இங்கு நினைவு கூறி, மேலும் சில கருத்துக்களுடன் இந்தத்தொடரை நிறைவு செய்ய விரும்புகிறோம். இதோ அந்தப் பதிவின் பகுதி.

ஒரு காட்டில் ஒரு சிங்கம் ராஜாவாக இருந்தது. அந்த ராஜா சிங்கத்தை ஒரு முயல் ஏமாற்றி கிணற்றில் தள்ளிவிட்டது என்ற கதையையும், ஒரு நதியில் ஒரு முதலை இருந்தது அந்த முதலை ஒரு நாவல் மரத்தில் இருந்த குரங்கு ஏமாற்றியது என்ற கதையையும் பள்ளிகளில் இளம் வகுப்புகளில் படித்து இருக்கிறோம். எவ்வளவு வலிமை பொருந்தியவர்களாக இருந்தாலும் தனது அந்த வலிமையை உணராவிட்டால் உண்மையிலேயே அவர்களுக்கு வலிமை இல்லை என்பது வெள்ளிடை. அதேபோல உலகில் மாபெரும் சமுதாயமாக இருக்கும் இஸ்லாமிய சமுதாயம் தனது பலத்தை தான் உணரவில்லை. அதனால் யானை படுத்துவிட்டால் ஈக்களும் எறும்புகளும் கூட மேலே ஏறி மொய்க்கத்தான் செய்யும்.

அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளி விபரப்படி உல்கில் இன்று முதன்மை சமுதாயமாக உருவெடுக்கும் வகையில் - கிருத்துவ மதத்தை பின் தள்ளி வளர்ந்துவிட்ட மார்க்கம் நாம் சார்ந்து இருக்கும் நம்முடைய இஸ்லாம் மார்க்கம் என்று – நெஞ்சு நிமிர்த்தி – மகிழலாம்.

உலக அளவில் அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் ந்ம்மை நோக்கி படையெடுத்து வந்து தங்களை இந்த இந்த அமைதி மார்க்கத்தின்பால் இணைத்து வருகிறார்கள். சொந்த அனுபவத்தை கூறி சுட்டிக்காட்ட வேண்டுமானால் நான் துபையில் வேலை செய்யும் குழுமத்தில் 2006 முதல் இன்றுவரை 24 பேர் இஸ்லாத்தை தழுவி இருக்கிறார்கள். மாஷா அல்லாஹ்! அனைவரும் ஆப்ரிக, எகிப்திய, ஜோர்டானிய, பிலிப்பினிய நாட்டை சேர்ந்த பெண் கிருத்துவர்கள். ஒரு கர்னாடக மாநில இந்து சகோதரர்.

புள்ளி விபரங்கள் இப்படி பேசுகின்றன.

உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் மட்டுமே உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் சிதறிப்போய் உள்ளனர்.

உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகாவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.

உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.

ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.

ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.

ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.

ஆனாலும் உலக அரசியல் அரங்கில் நடப்பது என்ன? சிங்கத்தை முயல் வெல்வதுபோல், முதலையை நரி ஏமாற்றியது போல் , யானையை எறும்பு மொய்ப்பதுபோல் யூதர்களையும் ஏனையோரையும் எதிலும் வெல்ல முடியாமல் இஸ்லாமிய உலகம் ஏமாந்து நிற்பதுதான் கசப்பான உண்மை; தற்கால சரித்திரம்.

மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் இஸ்லாமிய உலகம் முன்னேறவில்லை? ஏன் பின் தங்கி இருக்கிறது? ஏன் சக்தியற்று இருக்கிறது?

மக்கள் தொகையில் குறைவாக இருந்தும் ஏன் மற்றவர்கள் முன்னேறி இருககிரார்கள்? தொழில் வளர்ச்சியிலும், இராணுவம் உட்பட்ட சக்தி களையும் பெற்று பெருபான்மையை நடுங்கவைக்கவும், விரும்புகிறபடி அரசியல் சதுரங்கம் விளையாடவும் , ஆட்சி அமைப்புகளை மாற்றவும், அநியாயமாக படை எடுக்கவும், அதிகாரங்களை கைப்பற்றவும் ,ஆட்சி செய்தவர்களை தூக்கிலடவும், துரத்தி அடிக்கவும் எப்படி முடிகிறது?

நம்மிடையே கல்வியறிவு இல்லாமை, நமக்குள் ஒற்றுமை இல்லாமை.

நம்மை விட ஏன் யூதர்களும், கிருத்துவர்களும் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே என்ற கோசத்தை மட்டும் முன்வைக்கிற நாம், இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்து விடுகின்றோம் மறுத்து விடுகிறோம். யூதர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன?. முஸ்லிம்களை விட அறிவுஜீவிகளாக தங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள காரணம் என்ன?.

காரணம் ஒன்றே ஒன்றுதான் அதுதான், அவர்களின் கல்வி வளர்ச்சி.

இதோ இந்த புள்ளி விபரத்தையும் பாருங்கள். 

அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.

இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.

ஆனால் பரிதாபமாக உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன. உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை. 

உலக கிருத்துவர்களில் கல்வியறிவு பெற்றோர் 90%:; ஆனால் இஸ்லாமியர்கள் 40% மட்டுமே.

முழுக்க முழுக்க கிருத்துவர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளில் அவர்கள் 100% கல்வியறிவு பெற்ற நாடுகள் 15. ஆனால் முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை.

அடிப்படைக்கல்வியை பூர்த்தி செய்துள்ள கிருத்துவ நாடுகள் 98%. ஆனால் இஸ்லாமிய நாடுகள் 50% கூட தேறவில்லை. 

உயர் படிப்புக்கு செல்கின்ற கிருத்துவர்கள் 40% ஆனால் நாமோ 2% கூட உயர்படிப்புக்கு செல்வதில்லை.

ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.

ஆனால ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.

ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர். ஆனால் , ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்.

கிறிஸ்தவ நாடுகள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.ஆனால் இஸ்லாமிய நாடுகள் இதற்க்கு வெறும் 0.2% சதவிகிதத்தையே ஒதுக்குகின்றனர்.

கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.

ஆனால் 1.5 பில்லியன் மக்கள் தொகையினை கொண்ட முஸ்லிம்களில், இதுவரை வெறும் 3 மூன்று முஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்.

இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். கல்வியை பொருத்தவரை மிகவும் பின்தங்கி அதில் முனைப்புக்காட்டாமல் வெற்றுகூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இறைவனின் நிந்தனைக்கு ஆளானோர், அவன் தந்த நன்நெறிவிட்டு அகன்றோர் கல்வியில் மேம்பட்டு நம்மை உலகெங்கும் ஆட்டிப்படைக்கின்றனர். கல்வி நிலையங்களை தங்களின் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள். ஏன் நாம் கூட நமது பிள்ளைகளை பாஸ்டன் பள்ளியிலும் , புனித சேவியர், பீட்டர், அந்தோனியார் பள்ளிகளில் தானே சேர்க்கிறோம். அல்லது சேர்க்கத்தானே பிரியப்படுகிறோம். 

தமிழகத்தை பொருத்தவரை கூட கடவுள் மறுப்பு கொள்கை வைத்திருக்கும் தி.க கட்சி கூட தனக்காக ஒரு பல்கலைக்கழகம் வைத்து இருக்கிறது. அதேபோல் இந்து மத கோட்பாடுகளை பின்பற்றும் மடாலயங்கள் சாஸ்தா போன்ற பல்கலைக்கழகங்களை வைத்திருக்கின்றன. அலிகர் முஸ்லிம் பல்கலை கழகத்தையும், ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைக்கழகத்தையும் தவிர இந்தியாவில் நமக்கு பெயர் சொல்ல ஏது வேறு பல்கலைக்கழகம்? இந்தியாவை பல ஆண்டுகள் கட்டித்தான் ஆண்டோம்- கல்வியை ஆளவில்லையே.! ஆனால் ஆண்ட ஆண்டுகளில் எத்தனை கல்வி நிலையங்களை ஆங்கில கிருத்துவ ஆட்சி இந்தியாவில் உருவாக்கி இருக்கிறது? தமிழ்நாட்டில் எத்தனையோ பெரிய இயக்கங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், ஏதாவது ஒரு இயக்கம் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல் மற்றும் உயரிய படிப்பைக் கொண்ட பல்கலைகழகத்தை தொடங்கி சேவை மனப்பான்மையில் நடத்த துணிந்ததுண்டா? .

என்பதே அக்கட்டுரையின் பகுதி 

ஆயினும் பலமுறை பலருடைய இடிப்புரைகளுக்குப் பிறகு கல்வியின் முக்கியத்துவத்தைப் படிப்படியாக உணரத்தொடங்கிய சமுதாயம், பல ஊர்களிலும் கல்வி நிலையங்களையும் களை மற்றும் பொறியியல் கல்லூரிகளையும் நிறுவத் தொடங்கியது. இதிலும் சில வேதனையான விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறோம். 

அரசியல் அமைப்புச் சட்டப்படி மைனாரிட்டி சமூகம் என்ற பெயரில் பள்ளிகளும் கல்லூரிகளும் தொடங்கப் பட்டாலும் மைனாரிட்டி என்கிற வார்த்தையை வைத்து அங்கீகாரமும் அரசின் சலுகைகளும் பெற்றுக் கொள்வது ஒரு வணிக நோக்கில் அமைந்ததே தவிர உண்மையான சமுதாய முன்னேற்ற சிந்தனை இப்படித் தொடங்கப் பட்ட பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இல்லை. நம்மைப் போலவே மைனாரிட்டி சமூகமாக இருக்கிற கிருஸ்தவ சகோதரர்கள் தங்களின் மதத்தின் மேல் வைத்து இருக்கும் பற்று மட்டும் நடை முறையில் பாதி கூட நமது கல்வி நிலையங்களில் இல்லை. தொழுகைக்காக மட்டுமல்ல ஜூம்ஆ தொழக்கூட வசதிகள் செய்து தராத கல்வி நிலையங்கள் முஸ்லிம் மைனாரிட்டி கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கி வருவதுடன், பெரும் பணத்தை வசூல் செய்து தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்கின்றனவே தவிர, பின் தங்கி இருக்கும் சமுதாயத்தின் கல்வி நிலையை உயர்த்த உணமையாகப் பாடுபடுகிறோம் என்று எல்லா நிறுவனங்களும் சொல்ல இயலாது. இது ஒரு வேதனையான உண்மை. 

மற்றொரு வேதனையான உண்மை என்ன வென்றால் தப்பித்தவறி, பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் கூட தான் படித்த படிப்புக்குத்தகுந்த அரசு மற்றும் தனியார் வேலைகளைத் தேடிக் கொள்வது இல்லை. அண்மையில் தமிழ்நாடு மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணையங்கள் நிறைய வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரங்களை வெளியிட்டன. எத்தனை முஸ்லிம்கள் இத்தகையப் போட்டித்தேர்வுகளில் பங்கெடுக்க விண்ணப்பிக்கிறார்கள் என்று கணக்கை எடுத்துப் பார்த்தால் – இப்படி நாட்டில் ஒரு நிகழ்வு நடக்கிறதா என்று கூட நமக்கெல்லாம் தகவலோ அல்லது அவற்றில் கலந்துகொள்ளும் ஆர்வமோ அறிவோ இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். பாரத ஸ்டேட் வங்கி, நிறைய வேலைவாய்ப்புகளை விளம்பரப் படுத்தியது. அதே போல் பொதுத்துறை நிறுவனங்களும் வேலைக்கு ஆட்கள் வேண்டுமென்று அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் நம்மில் படித்துத் தகுதிகள் இருந்தும் இப்படிப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பிப்பது இல்லை. அண்மையில் வெளியான ஐ. ஏ. எஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இதற்குக் காரணம் , நமது சமூக வாழ்வில் ஊடுருவி ஆணிவேர்விட்டு வளர்ந்து நிற்கும் நமது வெளிநாட்டு மோகமே என்பதை ஐநா சபையில் கூட அறிவிக்கலாம். 

இந்தப் பதிவை எழுதும் நாங்கள் இருவருமே இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாகிறோம் . குற்றவாளிக் கூண்டில் நாங்களும் நிற்கிறோம். தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் பங்கு பெற்று, பத்துக் காசு செலவில்லாமல் சிபாரிசுக் கடிதம் இல்லாமல் கூட்டுறவுத்துறையில் பயிற்சி தணிக்கையாளராக பணியாற்றிய இப்ராஹீம் அன்சாரியும் , அதே கூட்டுறவுத்துறையில் உதவி அலுவலளாராகப் பணியாற்றிக் கொண்டிருந்த பகுருதீனும் அரசு தந்த வேலைகளை தூக்கி எறிந்துவிட்டு வெளிநாடு தேடி ஓடிய குற்றத்தை இங்கு ஒப்புக் கொள்கிறோம். இதே போல் எத்தனை பேர்?

கல்வியறிவு பெற ஆர்வமின்மை, கல்வி நிலையங்களின் சமுதாய நலனைப் பின்தள்ளி பணம் பார்க்கும் பழக்கம், படித்த படிப்பை அதே துறையில் பயன்படுத்தி முன்னேறும் ஆர்வமின்மை ஆகியவை நமது சமுதாயத்தின் சாபக்கேடு. 

கல்வியில் ஆர்வம உள்ள முஸ்லிம்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிகள் தேவைப்பட்டால் அந்த நோக்கத்துக்காக உதவும் பல பொதுநல அமைப்புகளை அதிரையின் சகோதரர் மீராசா ராபியா அவர்கள் ஒரு முறை பதிந்து இருந்தார். அவருக்கு நன்றி கூறி அந்தப் பட்டியலை இங்கு தருவதில் மகிழ்கிறோம். பிளஸ் டூ தேர்வுகள் முடிந்து, பத்தாம் வகுப்புத்தேர்வுகள் ஆரம்பமான நிலையில் பலருக்கு இந்தப் பட்டியல் உதவலாம். இன்ஷா அல்லாஹ்.

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை, அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445.

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க், ராயபேட்டைநெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, கிரீம்ஸ் ரோடு, சென்னை - 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் , 4, மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்) Phone:+91-44-42261100 Fax: +91-44-28231950 Download Aplication

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், 82,Dr. Radha Krishnan Road,Mylapore, Chennai, 600004, Phone : +91-44-28115935 Mob : 93805 31447

7. முஹம்மது சதக் அறக்கட்டளை , 144/1 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34. Tel: 044-2833 4989, 2833 4990 http://www.sathaktrust.com

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன், 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03

11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை, மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207

14. டாம்கோ, 807, - அண்ணா சாலை, 5 வது மாடி, சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான், (Managing Director Professional Courier’s), 22, மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18

16. மியாசி, புதுக் கல்லூரி வளாகம்,பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14

17. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை .

மேலும் முஸ்லிம்களால் நடத்தப் படும் கல்லூரிகள் மற்றும் பொறியால் கல்லூரிகளின் பட்டியலும் நமக்கு இந்த நேரம் பயன்படலாம். 

இஸ்லாமியா கல்லூரி வாணியம்பாடி

புதுக்கல்லூரி சென்னை

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி

ஜஸ்டிஸ் பஷீர் அஹமது சயீத் பெண்கள் கல்லூரி (SIET) சென்னை

காதிர் முகைதீன் கல்லூரி அதிராம்பட்டினம்

ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி உத்தமபாளையம்

சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி மேல்விஷாரம்

முஹையத் ஷா சர்குரு வக்ஃப் வாரியக் கல்லூரி மதுரை

மஸ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்

டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளையான்குடி

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை திருநெல்வேலி

காயிதேமில்லத் கல்லூரி மேடவாக்கம், சென்னை

முஸ்லிம் கலைக்கல்லூரி திருவிதாங்கோடு

தாஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, கீழக்கரை

அய்மன் மகளிர் கலை & அறிவியல் கல்லூரி , சாத்தனூர், திருச்சி, 

முஹம்மது சதக் கலை அறிவியல் கல்லூரி, சோழிங்கநல்லூர்- சென்னை

ராஜகிரி, தாவூத் பாட்சா கலை, அறிவியல் கல்லூரி பாபநாசம், கும்பகோணம் அருகில் 

ராபியாம்மாள் மகளிர் அறிவியல் கலைக்கல்லூரி, திருவாரூர்

செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரி , இராமநாதபுரம் 

அன்னை கதீஜா மகளிர் அறிவியல் கலைக் கல்லூரி, அம்மாபட்டினம்.

முஸ்லிம்களால் நடத்தப் படும் பொறியியல் கல்லூரிகள் 

1. Crescent Engineering College, Chennai
2. Mohammed Sathak Engineering College, Kilakarai, Ramnad Dist
3. C. Abdul Hakeem College Of Engg. & Technology, Melvisharam, Vellore Dist
4. Noorul Islam College Of Engineering, Thiruvithancode, Kanyakumari Dist
5. M.I.E.T. Engineering College, Gundur, Trichy
6. M.A.M. Engineering College, Trichy
7. Sethu Institute Of Technology, Kariapatti, Virudhunagar Dist
8. Popular Engineering College, Tirunelveli
9. National Engineering College, Tirunelveli
10. A.M.S. College Of Engineering, Chennai
11. MEASI Academy Of Architecture, Chennai
12. Al Islam College of Engineering – Thirumangalakkudi- Aduthurai. 

அன்பானவர்களே! நேற்று! இன்று! நாளை ! என்கிற தலைப்பில் வந்த இந்த தொடர் தற்காலிகமாக விடை பெறுகிறது. 

இன்ஷா அல்லாஹ் சூடான நடப்பு அரசியல் கட்டுரைகள் அந்த இடத்தை அலங்கரிக்கும்.

ஆக்கம் : P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இப்ராஹீம் அன்சாரி

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 33 14

அதிரைநிருபர் பதிப்பகம் | March 26, 2014 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முந்தைய பதிவில் நபி(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் மன்னிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்துள்ளார்கள், மேலும் அவர்கள் யாவரும் பகைமை பாராட்டாதவர்களாக வாழ்ந்து மரணித்துள்ளார்கள் என்பதை அறிந்து நாம் படிப்பினைப் பெற்றோம். இந்த வாரம் சத்திய சஹாப்பாக்கள் என்போர் யார்? அவர்களின் சிறப்புகள் பற்றி திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் என்ன சொல்கிறது? என்பது பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.

நாம் வாழும் இன்றைய நவீண யுகத்தில், மக்களின் கவனம் திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும், நபி மொழிகளின்மீது இருப்பதைவிட உலக விசயங்களின் அதிக கவனம் செலுத்துவதையே விரும்புகிறார்கள். ஒரு அரசியல் தலைவன், சினிமா முன்னணி நடிகன், ஒரு இயக்கத் தலைவன், இவர்களின் செயல்பாடுகள், பேச்சுகள், நடிப்புகள், விவாதங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் நம் நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்து உயிர்த்தியாகம் செய்த சத்தியத் தோழர்களான அந்த ஸஹாபாக்களின் வாழ்க்கை வரலாற்றுக்கு இருப்பது மிக மிக அரிதாகவே காணப்படுகிறது. காரணம் இன்றைய சூழலில் ஒரு தனி மனிதனுக்கு கொடுக்கப்படும் மரியாதை ஒட்டுமொத்த தியாகக் கூட்டத்தின் கண்ணியமிக்க, வீரமிக்க, எழுச்சிமிக்க வரலாற்றை மறக்கடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

நபியவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை பிரச்சாரம் செய்யும் பொறுப்பை என்று ஏற்றார்களோ, அன்று முதல் அவர்களது மரணம் வரை அவர்களுடன் துணை நின்று அவர்களது மரணத்திற்குப் பின்னால் இந்த இஸ்லாத்தை உரிய முறையில் வருங்காலத் தலைமுறைக்கு எத்திவைத்து அல்லாஹ்வின் திருப்தியை பெற்ற ஒரு சமுதாயமே நபித்தோழர்கள். அவர்கள் பற்றி அறிந்து கொள்வது, அவர்களை நபிவழி சொல்லும் வடிவில் நம்புவது நம்முடைய இஸ்லாமிய நெறியில் ஒரு பகுதியாகும். 

‘நபியவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்று அதே நிலையில் மரணித்தவரே ஸஹாபி என அழைக்கப்படுவார்.’ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இத்தகுதியை பெற்றுள்ளனர். ஆனாலும் ஹதீஸ்களை நபியவர்களிடமிருந்து  அறிவித்தவர்கள் 1600ற்கும் குறைந்தவர்களே. ஸஹாபாக்களை அல்-குர்ஆன் 3 தரங்களாக வகுக்கிறது. 1-முஹாஜிரூன் 2-அன்ஸார் 3 -மக்கா வெற்றியின் பின்னர் இஸ்லாத்தை ஏற்றவர்கள்.

ஒரு காலகட்டத்தில் நபித்தோழர்களைப் பற்றி படுமோசமாக விமர்சனம் செய்து, அவர்களின் கண்ணியத்தை கேளிக்கூத்தாக்கிக் கொண்டு ஒரு கூட்டம் சியா என்ற பிரிவாக பிரிந்தது. அதே நிலையை இன்று குர்ஆன் சுன்னாவை பற்றி பேசும் ஒரு கூட்டத்தார் ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம் நம் அனைவரிடம் எழுகிறது.  நபித் தோழர்களை நாம் விமர்சிக்கவோ ஏசவோ கூடாது என்பது பற்றிப் பின்வரும் ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது. 

நபித் தோழர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் அவர்களுக்கு ஒரு சச்சரவின் போது நபித் தோழர் காலித் பின் வலீத் ஏசிவிட்டார் அந்த சமயத்தில் நபியவர்கள் பின்வருமாறு  கூறுகிறார்கள்.

என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது. அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) ஆதாரம் : புஹாரி 3673

நபித்தோழர்களிடம் பிழையிருந்தாலும் சரியிருந்தாலும் அவர்களை ஏசுவதற்கும் விமர்சனம் செய்யவும் யாருக்குமே உரிமை கிடையது. உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது. என்று நபியவர்கள் கூறியிருப்பது நபித்தோழர்களின் உளத்தூய்மையையும், இஸ்லாத்துக்காக எவ்வளவும் செலவு செய்வோம் என்ற அவர்களின் தாராளத் தன்மையையும், தியாகத்தையும் கோடிட்டுக் காட்டுகின்றது.

உண்மையில் நபித் தோழர்கள் செய்த வணக்க வழிபாடுகளையும், நாம் செய்கின்ற வணக்க வழிபாடுகளையும் ஒப்பிடும் போது கால அடிப்படையில் நாம் அதிகமாக வணக்கம் செய்வதாகத் தெரிந்தாலும் உளத்தூய்மையில் நபித்தோழர்களுக்கும் நமக்கும் அதிக வித்தியாசங்களுள்ளன. எனவே அதிகமாக வணக்கம் செய்வது பெருமையான அம்சமல்ல. ஒரேயொரு வணக்கம் செய்தாலும் முழுமையான உளத்தூய்மையோடு அதைச் செய்வதுதான் அவசியமானதாகின்றது. ஹுதைபியா உடண்படிக்கையின் போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபித்தோழர்  காலித் பின் வலீதுக்கே அபர்துர்ரஹ்மான் போன்ற ஒரு நபித்தோழரை ஏசுவதற்கு அனுமதியில்லையென்றால் நம்மைப் போன்றவர்களுக்கு எவ்வகையிலுமே நபித்தோழர்களை ஏசுவதற்கும் விமர்சனம் என்ற பெயரில் கிண்டலான வார்த்தைகள் சொல்லி அழைப்பதற்கோ எந்த அனுமதியும் இல்லை.

நபித்தோழர்கள் பற்றி ஆய்வு செய்யும் போது, அல்குர்ஆன் அவர்களைப் பற்றி என்ன சொல்கின்றது? ஹதீஸ் அவர்கள் தொடர்பில் என்ன கூறுகின்றது? என்ற இரு பெரும் மூலாதாரங்களின் அடிப்படையில்தான் நபித்தோழர்கள் தொடர்பான ஆய்வு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அல்லாஹ் ஒரு சமுதாயத்தினரை ‘மோசமானவர்கள்’ என்று  சொல்லிவிட்டால்.  அவர்கள் எவ்வளவு நன்மைகள் செய்திருந்தாலும் நாம் அவர்களை ‘மோசமானவர்கள்’ என்றே கூறுவோம்.

அதே வேளை அல்லாஹ் ஒரு சமூகத்தை ‘நல்லவர்கள்’ என்று கூறிவிட்டால் அவர்கள் என்ன தீமைகள் செய்திருந்தாலும் அவர்களை நாமும் ‘நல்லவர்கள்’ என்றே சொல்வோம். ஏனெனில் நடைபெற்றவைகளை வைத்தே ஒருவரை நல்லவர், கெட்டவர் என்று நாம் தீர்மானிப்போம். நடக்கப் போகின்ற விடயங்களை வைத்து யாரையும் நல்லவர், கெட்டவர் என முடிவு செய்ய நம்மால் முடியாது. ஏனென்றால் நடக்கப் போவனவைப் பற்றிய அறிவு நமக்குக் கிடையாது. நடந்தவை, நடைபெற விருப்பவை அனைத்துமே தெரிந்தவன் அல்லாஹ் ஒருவனே. ஆகவே அல்லாஹ் ஒரு சாராரை நல்லவர்கள் என்று சொன்னால் அவர்கள் செய்கின்ற நன்மைகள் அல்லாஹ்வுக்குத் தெரிந்திருப்பதைப் போல அவர்களுடைய தீமைகளும் அல்லாஹ்வுக்குத் தெரியும் எனவே நன்மை, தீமை இரண்டும் தெரிந்துதான் அல்லாஹ் அவர்களை நல்லவர்கள் என்று சான்று பகர்கின்றான்.

இதைப் போன்றுதான் நபி(ஸல்) அவர்களின் மரணத்துக்குப் பின்னால் நபித்தோழர்களுக்குள் என்னென்ன ஏற்படும் என்பது பற்றியும், அபூபக்கர் (ரழி) உமர் (ரழி), உஸ்மான் (ரழி), அலீய் (ரழி) போன்றோரினால்  நடைபெறும் தவறுகள், பிழைகள் பற்றியும் அல்லாஹ் மிக அறிந்தவனாகும். எனவே அவர்களிடமுள்ள தவறுகள், பிழைகள் பற்றிய அறிவோடுதான் அல்லாஹ் அவர்களை ‘சிறந்தவர்கள்’ எனக் கூறியுள்ளான் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். ‘ஆயிஷா (ரழி) அவர்கள் தூய்மையானவர்’; என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான் என்றால் அது நேற்றைய தூய்மை மட்டும் குறிக்காது நாளைய தூய்மையையும் குறிக்கும். ‘நம்பிக்கையாளர்’ என அல்லாஹ் ஒருவரைக் கூறினால் நம்பிக்கை விடயத்தில் அந்நபர் நம்பகமானவர் என்பது உறுதியாகிவிடுகின்றது. அவ்வாறுதான் அல்லாஹ் ஒருவரை ‘தூய்மையானவர்’ என்று சாட்சி சொல்லி விட்டால் மனிதனென்ற அடிப்படையில் சில தவறுகள் அவரிடம் காணப்பட்டாலும் அவர் கெட்டுப் போகமாட்டார்.

நபித்தோழர்களின் சிறப்புகள் பற்றி ஏராளமான திருக்குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் உள்ளன, அவைகளில் சிலவற்றை நாம் காண்போம்.

இஸ்லாமிய வரலாற்றில் சிறப்புமிக்க ஹுதைப்பிய்யா உடன்படிக்கையில், ஒரு மரத்தடியில் 1400 ஸஹாப்பாக்கள் பங்குபெற்றார்கள், அவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொண்டான் என்ற பின் வரும் வசனத்தை வாசித்துப் பாருங்கள்.

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அவன் அருளினான். அவர்களுக்கு சமீபத்திலிருக்கும் வெற்றியையும் வழங்கினான். (அல்பத்ஹ் : 18) 

மேலும் நபித்தோழர்கள் பற்றி அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகிறான்.

முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இறக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூஉ, ஸஜ்தா செய்வோராக நீர் அவர்களைக் காண்பீர். அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் விளைவாக அவர்களின் முகத்தில் இருக்கும். ( சூரத்துல் பத்ஹ் : 29)

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விசயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள்……‘ (சூரத்துத் தவ்பா : 100)

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன்னர் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாகமாட்டார்கள். (வெற்றிக்குப்)  பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான  பதவியுடையவர்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகியதையே  வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.  (சூரத்துல் ஹதீத் :  10) 

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும்  அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம்  புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில்  அவரைப் பின் பற்றியவர்களையும் மன்னித்தான். (சூரத்துத் தவ்பா : 117)

நபித்தோழர்களின் சிறப்பு பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது.

உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். இதன் அறிவிப்பாளரான இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள் ‘இதற்குப் பிறகு இரண்டாவது அல்லது மூன்றாவது தலை முறையினரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்களா என்று எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஸஹ்தம் பின் முழர்ரிப் ஆதாரம் : புஹாரி 6428

நட்சத்திரங்கள் வானத்துக்குப் பாதுகாப்பாகும். அவை அழிந்து விட்டால்வானத்துக்கு வாக்களிக்கப் பட்டது வந்து விடும். நான் எனது தோழர்களுக்குப் பாதுகாப்பாகும். நான் சென்று விட்டால் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும். என் தோழர்கள் என் சமூகத்துக்குப் பாதுகாப்பாகும்.  அவர்கள் சென்று விட்டால் எனது சமூகத்துக்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும். அறிவிப்பவர் : அபூ புர்தா ஆதாரம் : முஸ்லிம் 6629

எனது தோழர்களை கண்ணியப்படுத்துங்கள்.  

அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு ஸுபைர் (ரழி). ஆதாரம்: முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக் 20710

வழிகெட்ட ஷியாக்கள், நபித்தோழர்களை பற்றி கேவலமாக பேசியும் திட்டியும், விமர்சனம் செய்தும் தங்களுடைய கொள்கை வளர்த்துக் கொண்டார்கள். இன்று அதே ஷியாக் கூட்டம் ஈராக்கிலும், ஈரானிலும், சிரியாவிலும், லெபனானிலும் குர்ஆன் சுன்னா வழியில் வாழும் அஹ்லுஸ்ஸுன்னா மக்களை கொன்று குவித்து தங்களுடைய வெறித்தனத்தின் உச்ச நிலையில் உள்ளார்கள். நபித்தோழர்களை நேசிக்கும் முஸ்லீம்களை கொல்லும் ஒவ்வொரு ஷியாவும் ஷஹீதுடைய அந்தஸ்து பெற்றவர்கள் என்ற கொள்கையை வைத்து படுமோசாமான மனித இனமில்லா ஜன்மங்களாக உள்ளார்கள் அந்த ஷியாக்கள். அந்த அயோக்கிய ஷியாக் கொள்கையிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

இன்று தமிழ் பேசும் ஒரு சில மக்கள், நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்து, அவர்கள் கொண்டு வந்த தீனுக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்த சத்திய ஸஹாப்பாக்களை ஒரு சாதாரண மனிதர்களைப் போன்று தங்களுடைய பேச்சால் விமர்சனம் செய்து கேவலப்படுத்துகிறார்கள். போனாப்போகுது என்று சோறு கொடுத்தோம் என்று அன்சாரிகள் முஹாஜிர்களை பார்த்து சொன்னதாகவும், அன்சாரி நபித்தோழர்களையே பதவி வெறி பிடித்தவர்கள் என்றும், அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ காலியாகும் என்றும், அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்களை கிரிமினலான வேலை செய்பவர் என்றும் நபித்தோழர்களுக்கு சொல்லக்கூடாத வார்த்தை பிரயோகம் செய்வதோடு அல்லாமல், இது போன்ற விமர்சனங்கள் நபித்தோழர்களுக்கு செய்வதில் என்ன தவறு என்றும் வாதிட்டு தங்களின் தவறுகளை மறைக்க நடைமுறை வழக்கு மொழி என்று வெட்டி நியாயம்வேறு பேசி வருகிறார்கள். இது போன்ற கேடுகெட்ட கூட்டத்திலிருந்து நம் எல்லோரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக.

நபித்தோழர்களை நேசிப்போம், அவர்களை கண்ணியப்படுத்துவோம், அவர்களை கேவலப்படுத்தும் கயவர்களை களையெடுப்போம் என்ற சபதம் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். காரணம், இந்த தூய மார்க்கம் இன்று நம்மிடம் கிடைப்பதற்கு அல்லாஹ்வால் நபி(ஸல்) அவர்களுக்கு அளிக்கப்பட்ட மாபெரும் பொக்கிஷங்கள் நபித்தோழர்கள். அல்லாஹ் இந்த நபித்தோழர்களை வைத்தே திருக்குர்ஆனை பாதுகாத்தான், நபித்தோழர்களை வைத்தே ஷஹீஹான ஹதீஸ்களை நமக்கு தொகுத்துதர உதவி செய்தான். 

ஏதாவது ஒரு நபித்தோழர் பற்றி ஒரு துளி அளவு தீய எண்ணம் நம்மிடம் இருந்தால், நம்முடைய நேர்மையில் கோளாறு உள்ளது என்பதாக நாம் கருத வேண்டும். காரணம் அல்லாஹ்வும், அவன் தூதரும் கண்ணியப்படுத்தி சிலாகித்து பாராட்டிய நபித்தோழர்களை நாமும் கண்ணியப்படுத்த வேண்டும். மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் தவறு செய்திருந்தால் அவற்றை பெரிதுபடுத்தாமல், அவர்கள் மேல் நல்லெண்ணம்கொள்ள வேண்டும்.

நபித்தோழர்கள் மேல் கண்ணியம் நமக்கு குறையுமானால், ஹதீஸ்களின் மேல் இருக்கும் நம்பிக்கை குறையும் வாய்ப்பு உருவாகலாம், பின்னார் குர்ஆனின் மேல் உள்ள நம்பிக்கையும் குறையும் வாய்ப்பு ஏற்படலாம்(நவுதுபில்லாஹ்). அல்லாஹ் நம் எல்லோரையும் ஈமானில் உறுதியுள்ள மக்களாக ஆக்கி அருள் புரிவானாக.

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

வெட்கமில்லை! வெட்கமில்லை ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | March 25, 2014 | , , , ,

இற்றைக்கு இருபதாண்டுகளுக்கு முன், ‘பாரதமணி’ (நவம்பர் 1994) இதழில், கவிஞர் முத்துமணி என்பார் எழுதிய மரபுச் சந்தக்  கவிதை இதோ: தமிழகத்தின் அன்றைய சாக்கடை அரசியல் நிலையைத் தமது கருத்தின் கவிதைப் பதிவாக, இன்றைக்கும் பொருத்தமானதாக,

வெட்கமில்லை!  வெட்கமில்லை!  வெட்கமென்ப  தில்லையே!
மக்கள்முன்பு  மதிப்பிழந்து  நிற்கநேர்ந்த  போதினும் - (வெட்கமில்லை)

நிற்கவைத்து  மக்கள்கேட்கும்  நிலைமைவந்த  போதினும்               
சொக்கத்தங்கம்  போலியாகிப்  பல்லிளித்த   போதினும் - (வெட்கமில்லை)

சர்க்கரைக   லக்கப்பேசிச்   சாதிக்காத   போதினும்                           
கொக்கரித்து   விட்டுப்பின்பு   கொள்கைமாறும்   போதினும் - (வெட்கமில்லை)

சுக்கல்சுக்க   லாகிக்கட்சி   சுருங்கிவிட்ட   போதினும்  
ரொக்கம்ரொக்க   மாகவாங்கி   ரொம்பிவிட்ட   போதினும் - (வெட்கமில்லை)

மக்கிவிட்ட   கொள்கையோடு   மாரடிக்கும்   போதினும்                    
மெய்க்கலப்பில்   லாதுபேச   மேடையேறும்   போதினும் - (வெட்கமில்லை)

கைகலப்பி   லேயிறங்கிக்   களங்கப்பட்ட   போதினும் 
வெட்கமில்லை!   வெட்கமில்லை!   வெட்கமென்ப   தில்லையே!

பரிந்துரை : அதிரை அஹ்மது

கண்கள் இரண்டும் - தொடர் - 29 15

அதிரைநிருபர் பதிப்பகம் | March 24, 2014 | ,


கண்பார்வைக் கோளாறுகள் நீங்க

அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.

இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

உணவு வகைகளில் கண்களைப் பாதுகாக்க...

வைட்டமின் ஏ பிரிவு சத்து உடலில் குறைவாக இருந்தாலும், இரத்த சோகை, நரம்பு பலவீனம் இவற்றால் வரும் கண் கோளாறுகளுக்கு கேரட், பீட்ரூட், வெண் பூசணி, முள்ளங்கி, வெண்டைக்காய், நாட்டுத் தக்காளி, பசும்பால், பசு மோர், சுத்தமான தேன், கொத்தமல்லி, முளை கட்டிய தானிய வகைகள் இவற்றை தினசரி உணவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கீரை வகைகளில் கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, இவைகளில் ஏதாவது ஒரு கீரை வகையை தினமும் சாப்பிடலாம்.பழ வகைகளில் பப்பாளி, மாம்பழம், அன்னாசி, மாதுளை, ஆப்பிள், பேரீச்சம் பழம், நெல்லிக்காய் சாப்பிடலாம்.அசைவ உணவில் மீன் எண்ணெய் மட்டும் சாப்பிடலாம். 

சத்துக் குறைவால் கண் நோய்கள் நீங்க...
சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்து சாறு பிழியவும், கொத்தமல்லி இலைச்சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட் சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண்டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில்லி) தண்ணீர் கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை / மாலை இருவேளை காபி, டீக்கு பதிலாக தினமும் குடித்து வரலாம். (இதை தினமும் புதிதாக செய்ய வேண்டும்) பப்பாளிப் பழம் 4 துண்டு, தேங்காய்ப் பால் அல்லது பசும்பால் 1 டம்ளர் (200 மில்லி) தேவையான அளவு பனங்கற்கண்டு, ஏலக்காய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம்.

புதிய பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 1 ஸ்பூன் தேன் இவற்றை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு இருவேளை சாப்பிடலாம். 

கண்பார்வை தெளிவடைய...

பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது. 

அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும். 

பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டுவரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவுகள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது. 

கண்களை பாதுகாக்க டிப்ஸ்:

சுத்தமான தண்ணீரால் அடிக்கடி கண்களைக் கழுவவும். •சாதாரண மையில் ஆரம்பித்து, ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்காரா என எல்லாமே தரமான தயாரிப்புகளாக இருக்க வேண்டியது முக்கியம். •

கம்பியூட்டர் முன் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி கண்களை சில நொடிகளாவது மூடி ஓய்வெடுக்க வேண்டும். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடிய பச்சை, நீல நிறங்களை அடிக்கடி சிறிது நேரம் பார்க்கலாம்.• கண்களைச் சுற்றி எப்போதும் மோதிர விரலால்தான். அதுவும் மிக மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.. 

ஆரோக்கியமான கண்களே அழகான கண்கள். எனவே கண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். கண்கள் சிவந்துபோதல், மேக் அப் அலர்ஜியால் கண்கள் பாதிக்கப்படுதல், கொண்டாக்ட் லென்ஸ், சன்ஸ்கிரீன் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

அடுத்து தொடரிலும் கண்களை அலங்கரித்தல் வரும்
(தொடரும்)
அதிரை மன்சூர்

என் இதயத்தில் இறைத்தூதர் - 4 [பெண்ணே, இனிய மார்க்கம் தேடி வாராயோ] 2

அதிரைநிருபர் பதிப்பகம் | March 23, 2014 | , , , ,

பெண்களுக்கெதிரான வன்முறைகள் இந்தியாவிலும், ஏனைய நாடுகளிலும் தலை விரித்தாடி வருவதை நாம் அறிவோம். 'வன் செயலர்களின் தலைநகர் டெல்லி' என அழைக்கப்படும் அளவுக்கு நம் இந்தியாவின் பெயர் உலகளவில் அறியப்பட்டு வருகிறது.

இதனைக் களைய 'இஸ்லாத்தின் தீர்வை' அமல்படுத்துங்கள் என்றால் கேட்பவர் இல்லை, இஸ்லாம் சொல்லும் தீர்வை அமுல் படுத்தினால், இஸ்லாம் வளர்ந்து விடும், பிற மதங்கள் காணாமல் போய்விடும் என்ற பயம்தான் இதற்கெல்லாம் காரணம். "நான் நாசமாகத்தான் போவேன், என்ன பந்தயம் " என்று சொல்லாமல், சொல்கிறார்கள். ஆனால், இவைகளால், நாள்தோறும் பெண்கள்தான் அவல நிலைகளுக்கு ஆட்பட்டு அழிக்கப்படுகிறார்கள். இதைக் கண்டுகொள்வோர் யாருமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதி உரை உலகப் பிரசித்துப் பெற்றது என்பதை நாம் அறிவோம். அந்த உரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை. ஒவ்வொரு நட்டினதும் constitution ஆக வைக்கப்பட மிக மிக தகுதியுள்ளவை எனில் அது மிகையில்லை !

பெருமகனார் கூறுகிறார்கள் "மக்களே! பெண்கள் குறித்து, அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளது. உங்கள் மீதும் உங்கள் மனைவியருக்கு உரிமை உள்ளது. அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப் பட்ட அமானிதம் ஆவர்...!"

“பெண்கள், ஆண்களுக்கு வழங்கப்பட்ட அமானிதம், அதைப் பேனுதலாக பாதுகாப்பது ஆண்களின் கடமை என்றும், பரஸ்பரம் இருவருக்கும் உரிமைகள் உள்ளன” என்றும் அண்ணலார் அவர்கள்  பறை சாற்றுகிறார்கள்.

இதே போன்ற அறிவிப்பை, நடைமுறையை எங்காவது, எந்த மதத்திலாவது காண இயலுமா ? இன்னும் பிற மதங்களில் பெண்களை தாசியாக நடைமுறைப் படுத்தியுள்ளன, அவர்களுக்கு சொத்துரிமையும் கிடையாது என்று சொல்லும் மனுதர்ம சூத்திரங்களை வைத்துக் கொண்டு - பெண்களை சுரண்டிக் கொண்டிருக்கும் சாமியார்கள், பாதிரியார்கள், முனிவர்கள் பதில் சொல்ல முடியுமா?

மதத்தின் விஷக் கருத்துகளை, மனுதர்ம சூத்திரங்களை வைத்து, மனிதரிடையே பாகுபாடு காட்டும் உயர்ந்த- தாழ்ந்த சாதிக் கருத்துகளை வைத்து, பிராமணன் என்றும் சூத்திரன் என்றும் கூறுபோட்டு, இன்னும் அவர்களை அடிமைகளாய் நடத்தும் சாதி இந்துக்கள் திருந்தவில்லையே ! இப்படி இந்தியா முழுக்க பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் படும் அல்லல்களை சொல்லில் வடிக்க இயலாது.

"இறைவன் உங்கள் உருவங்களையோ, செல்வங்களையோ பார்ப்பதில்லை, மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களைத்தான் பார்க்கின்றான்" என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அருளியுள்ளார்கள். - அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி), நூல் : முஸ்லிம்.

மனிதனுக்கு பல நிறத்தோல்கள் இருக்கலாம். பல நிலைகள் இருக்கலாம். ஏழையாக, பணக்காரனாக, படித்தவனாக, படிக்காதவனாக இப்படி இருக்கலாம். ஆனால், இவைகளால் அவன் சிறந்தவன், மற்றவன் தாழ்ந்தவன் அல்ல ! சிலர் உசத்தி சிலர் தாழ்த்தி அல்ல. அவரவரின் இறை அச்சமும், செயல்களும்தான் மனிதனை நல்லவனாகவும் உயர் பண்புள்ளவனாகவும் தீர்மானிக்கின்றன.

இப்படி ஒருவன் வாழத் தேவையான, நடைமுறைப்படுத்த இலகுவான, சரியான ஒரு திட்டத்தைதான் நபிகள் நாயகம் அவர்கள் சொல்லியும், செயல் படுத்தியும் காட்டிச் சென்றுள்ளார்கள்.

நமக்கு வழைப்பழமும் கொடுத்து, உரித்தும் தந்து அதனைச் சாப்பிடு என்று கையிலும் தந்தாகி விட்டது, இஸ்லாம் என்ற பெயரில். அதை அப்படியே  மென்று விழுங்க வேண்டியதுதான் மீதிவேலை. சாப்பிட்டால் உனக்கு, எனக்கு,எல்லாருக்கும் நல்லது, உடனடி சக்தியுடன் போஷாக்கு கிடைக்கும்.

இல்லை, இல்லை எனக்கு வாழைப் பழமெல்லம் வேண்டாம், அரளி விதையே போதும் என்று சொன்னால் சாவு, இப்படி தேர்ந்தெடுத்தவர்களைப் பார்த்து அதனால் வந்து விடப் போகின்றது? அப்படிதான் என்ன வேண்டியுள்ளது.

பிறமத புராணங்களும், வேதநூல்களிலும் ஏனைய மத புழுகுகளும் பெண்களை அடிமையாக்குகின்றன, மனிதர்களிடம் பாகுபாட்டை போதிக்கின்றது. கெட்ட வழிமுறைகளை புராணங்கள். இதிகாசங்கள் என்ற பெயரால் போதிக்கின்றனர். இதனால், இந்த உலகத்திலும் இழிவு.  அம் மறுமையிலும் இழிவு என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒன்றுக்கும் உதவாத, நடைமுறை சாத்தியமற்ற போலிச் சடங்குகள். சம்பிரதாயங்கள். சட்டங்கள் வேண்டுமா ? அல்லது சாத்தியமானதும். நடைமுறைக்கும் ஏற்ற சத்திய இஸ்லாம் வேண்டுமா ? என்பதை மாற்றுமத நண்பர்களே,சகோதரிகளே, சிந்தித்துப் பாருங்கள்.

இஸ்லாத்தின் வேதம் திருக்குர்ஆன் சொல்கிறது, "உன்னையும் என்னையும் முதல் மனிதர் ஆதம் (அலை) மற்றும் அவர் மனைவி ஹவ்வா (அலை) இவர்கள் மூலமாக, இறைவன் படைத்தான்" என்கிறது.

ஆனால், பிறமத வேத புத்தகங்களிலோ, வர்ணங்கள் மூலமாக, தலை வயிறு கால் என்று சொல்லி தலித் மக்களை தள்ளி வைக்கிறது. இதுவா வேதம் ?

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறுகிறார்கள் "மனைவியிடம் நல்லவரே, உங்களில் நல்லவர் (முஹம்மதாகிய) நான் என் மனைவிமார்களுக்கு நல்லவனாக இருக்கிறேன் - ஆதாரம் : திர்மிதி

பெண்கள் மேல் தனிக் கவனம் செலுத்தி அவர்களை பல வகைகளிலும். கண்ணியப்படுத்தி உயர்ந்த நிலையில் அவர்களை வைத்து அழகு பார்க்கும் இஸ்லாத்தைப் பற்றி பிற மத சகோதர / சகோதரிகள் ஏனோ அதைப் படித்து, உணர்ந்து ருசித்து பருக வருவதில்லை. தூரத்தில் நின்று கொண்டு, காவிக் கூட்டங்களின் பொய்ப் பிரச்சாரத்தால் கல்லெறிகிறார்கள். ஆனால், அந்தோ பரிதாபம்! அந்தக் கல்லடியில் முஸ்லீம்கள் காயப் படலாம் கண் மூடலாம். ஆனால், இஸ்லாம் காயப்படாது, கண் துஞ்சாது ! நாளை மறுமையில் இன்று இழந்தவைகளை இன்ஷா அல்லாஹ் சேர்த்தே பெற்றுக் கொள்வோம்.

ஆனால் உங்களின் நிலையோ "(ஏக இறைவனை) மறுப்போர் அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுப்பதற்காக தமது செல்வங்களை செலவிடுகின்றனர். இனியும் செலவிடுவர். அதுவே, அவர்களுக்கு கைசேதமாக அமையும். பின்னர், தோல்வியடைவார்கள் (ஏக இறைவனை) மறுத்தோர், நரகத்தை நோக்கி ஒன்று திரட்டப்படுவார்கள்" - திருக்குர்ஆன் என்ற திருக் குரானின் போதனையை எண்ணிப் பாருங்கள்.

ஆக! எனதருமை பிற சமுதாய மக்களே சீர்தூக்கிப் பாருங்கள் ! இன்றே விழித்துக் கொள்ளுங்கள்! எப்போதும் விடிந்து கொண்டிருக்காது. "அந்த நாள்" வருவதற்குள் அரளி விதைகளை ஒதுக்கி வைத்து விட்டு வாழைப்பழம் உண்ண வாருங்கள்! புது சக்தி பெற்றுக் கொள்ளுங்கள் உங்களுக்கே புண்ணியமாகப் போகும்.
தொடரும் (இன்ஷா அல்லாஹ்)...!
இப்னு அப்துல் ரஜாக்

கூட்டணிக் கொட்டகைகள்! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | March 22, 2014 | , , , ,

மர்ம முடிச்சுகளைக் கொண்டு
கட்டுப்போட்டு
மந்திர வார்த்தைகளால்
உடன்பாடு எட்டப்பட்டுள்ளது

சவாரி செய்ய வாய்ப்பில்லாமல்
திராவிடக் கட்சிகள்
சண்டிக்குதிரைகளாகிவிட...
ஆளும் பாரம்பர்யக் கட்சி
உட்கட்சி கோஷ்டிகளுடன்கூட
கூட்டணி அமைக்க இயலவில்லை

மசூதி இடிப்பிற்கும்
மாற்று மத அழிப்பிற்கும்
பேர்போனக் கட்சியுடன்
போதைக் கதாநாயகன் சேர
சரக்கிற்கு ஊறுகாயாய்
சாட்டையில்லா பம்பரமும்
மரத்தை வெட்டிப் பறித்த மாம்பழமும்

தேசிய நெடுஞ்சாலையின்
மரங்களைப் பார்த்து
மருத்துவருக்குக் கை பரபரக்க;
இனி 'இவரின்' நடைப்பயணம்
டெல்லி நோக்கி நீளும்

ஓரிடத்தில் ஒடுங்கிக்கொண்ட
உடன்பிறப்பும்
ஒதுக்கிய இடத்தில் ஒட்டிக் கொண்ட
அண்ணன்மாரும் - இனி
தொழக்கூட
தோளோடு தோள் நிற்பதரிது

கூட்டணி கூத்தில்
குருடாய்ப் போனது
குருஜியின் நேர்-பார்வை !

எம்மக்களோ
அரசியலே வேண்டாமென்று
அரசியலோடு அரசியலும்
செய்கின்றனர்

பொதுவுடைமை பேசியோரும்
பெட்டிக்கடை கட்சிகளும்
சொற்ப வருமாணத்திற்கே
கடையைச் சாத்துவர்

தொகுதிப் பங்கீட்டுப்
பேச்சுவார்த்தைகளில்தான்
எத்தனைச் சுற்றுகள்!
பங்குச் சந்தையின்
இலாபக் கணக்கைப்போல

கூட்டணி தர்மப்படி
பெற்றோரைத் தவிற
யாவற்றிலும் சமரசம் என்றாகி
கொள்கைக்காரர்கள்
கொள்ளைக்காரர்களாகின்றனர்

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
எழுத்துகளைக் கொண்டல்ல
எண்களைக் கொண்டே
நிரப்பப் படுகின்றன

ஆட்சியில் பங்கு -நுட்ப
அரசியல் பாங்கு;
வெளியிலிருந்து ஆதரவு - சுயம்
செழிப்பதற்கானக் காப்பீடு

குதிரைப் பேரங்களில்
லகான்களாகப் பணப்பெட்டிகளும்
ஆதரவுக் கடிதம் என்னும்
கள்ளச் சாவியும் கலைகட்டும்

கூட்டு யாரோடு யார் வைத்தாலும்
வேட்டு அவருக்கு அவரே வைப்பார்
ஓட்டு எண்ணிக்கை போட்டுடைக்கும்
நாட்டு மக்கள் குட்டு வைத்ததை

ஊர்க்கோடி சாமான்யனும்
நூருகோடியில் உரையாட - இந்தத்
திருவிழாக்காலம் விட்டுச்செல்வதோ
தீர்விலா கோலம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

அதிரையில் அகல ரயில்பாதை - ஐந்தே வினாடிகளில் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | March 22, 2014 | , , ,

அப்ப...ப்பா எத்தனை போராட்டங்கள், எத்தனை இழப்புகள், மன உளைச்சல்கள் இதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வருகிறது....

இந்த அரசியல் மற்றும் அதிகார வர்க்கமும் ஏதோ ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு கபட நாடகமாடி நீண்ட நாட்களாக கிடைக்க வேண்டியதை கிடைக்க விடாமல் செய்து வருகின்றனர் சுயநல அரசியல் அதிகார வர்க்க கிருமிகள்.

இந்த தூரோகத்திற்கு சட்டரீதியான பாதிப்புகள் கண்டிப்பாக அவர்களுக்கு கிடைக்கும் அதனை அனுபவித்தே தீருவார்கள்.

சின்னஞ்சிறுசுகள் பேச்சுவாக்கில் சொன்னது "இருக்கிற இருப்பு பாதையை அங்கிட்டாலேயும் இங்கிட்டாலேயும் இழுத்துப் போட்டுட்டு ரயில ஓட்டுங்கப்பான்னு".

அட! அப்படியே செய்தால் என்ன !?

கண்ணை மூடாம ஐந்தே வினாடிகள் பாருங்க...! இவ்வளவு ஈசியான வேலையை எவ்வளவு கஷ்டமா காட்டுறாய்ங்க !


ஓட்டுக் கேட்டு வரும் வேட்பாளர்களும் அவர்களின் செயல்பாடுகளும் இந்த தருணத்தில் நினைக்கு வந்தால் தவிர்க்கவா முடியும்?

புகைப்பட பொக்கிஷம் : Sஹமீத்
அதிரைநிருபர் பதிப்பகம்
இது ஒரு மீள்பதிவு !

...ங்க ! டா ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | March 21, 2014 | , , , , ,

சாதிக்க வேண்டுமென்று..
சாதிக்கொரு கட்சியென்று..
ஆட்களை நிறுத்தி வச்சாங்க
ஐயாமார், அண்ணன்மார்
அதுக்கும் ஓட்டுப் போட்டாங்க
ஆளுக்கொண்ணா ஆகிப் போனாங்க !
அவிங்க ஆகிப் போனாங்க !!

பிராமணர், அவர் நம்மாளுதான்
வன்னியர், இவர் எங்காளுதான்
தேவர் இனம் நம்ம சனம்தான் என்று
ஆளுக்கொரு தேர்வா ஆகிப் போனாங்க
சாதி மக்க ஓட்டு போட்டாங்க !
அவிங்க சாதி சனம்
ஓட்டு போட்டாங்க !!

சிறுபான்மை இனமென்று
சொல்லிக் கொண்டாங்க
முஸ்லிம்கள் சொல்லிக் கொண்டாங்க
தேர்தல் தேதி வந்தவுடன்
ஆளாளுக்கு அடித்துக் கொண்டாங்க !
ஐயா! அடித்துக் கொண்டாங்க...

நம்ம கட்சியென்றும் இயக்கமென்றும்
பிரிந்து விட்டாங்க - நல்லா
முடிஞ்சு விட்டாங்க !
ஐய்யாவுக்கு நானென்றும்
அம்மாவுக்கு நீயென்றும்
கோஷம் போட்டாங்க !
எங்களை பிரிச்சே போட்டாங்க !

மோடி என்ற விஷப் பாம்பு
கொத்த பாக்குது  - மீண்டும்
கொத்த பாக்குது
காவிக் கூட்டம் நம்மை
விரட்டப் பாக்குது,
துறத்த பாக்குது

பாபர் பள்ளி
இழந்தாச்சு - இன்னும்..
புத்தி படிக்கல !
குஜராத் கலவரம்
கண்டாச்சு - இன்னும்
விழித்துப் பாக்கல !

ஐய்யாவோ ! அம்மாவோ..
முட்டுக் கொடுப்பார்(ள்)
மோடிக்கு முட்டுக் கொடுப்பார்(ள்)
அவன் எங்க தோள் ஏறி
எட்டி உதைப்பான் - எங்களை
எட்டி உதைப்பான் !

ஐயா தலைவர்களே !
எங்களுக்கு
கட்சியும் வேனாம்
இயக்கமும் வேனாம் !

எங்களை விட்டுவிடுங்க !
நாங்கள் முஸ்லிம்களென்றே
சாட்சி சொல்வோம் !
நல்லா சாட்சி சொல்லுவோம்
அல்லாஹ்வை மட்டுமே
நம்பி இருப்போம்... இன்னும்
நல்லா இருப்போம்,

இறைவனின் நாட்டப்படியே !
இன்ஷா அல்லாஹ்

இப்னு அப்துல் ரஜாக்

இது கவிதையல்ல... ஒரு சாமானியனின் வேதனை!

நேற்று! இன்று ! நாளை! – தொடர் - 32 ( நமது கல்வி- 4 ) 17

அதிரைநிருபர் பதிப்பகம் | March 20, 2014 | , , , , ,

முஸ்லிம்களின் கல்வி மீதான ஆர்வம் குறைந்து போனதற்கு உரிய காரணங்களை விவாதிக்கும் போது ஒரு கருத்தை வலியுறுத்திச் சொல்லியே ஆக வேண்டும். எண்ணூறு ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட மொகலாய மன்னர்கள் முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்காக பெரிதாக ஒன்றும் கிழித்துவிடவில்லை என்பதே அது. பிறகு அந்த ஆட்சியையும் ஆங்கிலேயர்களால் பறித்தெடுக்கப்பட்டு விட்டதால் வெள்ளையருக்கு எதிரான ஒரு உணர்வும் வேட்கையும்தான் முஸ்லிம்களின் நெஞ்சங்களில் முதலிடம் பெற்றது. படிக்க வேண்டும் -முன்னேற வேண்டும் - பதவி பெற வேண்டும் ஆளும் வர்க்கமாக ஆகவேண்டுமென்று எண்ணங்கள் அவர்களின் இதயங்களில் அரும்பவில்லை. அதன் விளைவுதான் முஸ்லிம்களே முன்னின்று நடத்திய சிப்பாய்க் கலகமும், மாப்பிள்ளைமார் புரட்சியும், இன்னும் பிற சிறு சிறு போராட்டங்களும் ஆகும். இதனால் முஸ்லிம்களுக்கு பிரிட்டிஷார் மீது ஒருவித வெறுப்பும், பிரிட்டிஷாருக்கு முஸ்லிம்கள் மீது ஒரு வெறுப்பும் அவர்களின் கல்வியை மற்றும் மொழியையும் படிக்கும் வெறுப்பில் போய் முடிந்தது. 

உத்தரப் பிரதேசத்தில் இன்றும் இருக்கும் புகழ்பெற்ற தேவ்பந்த் அரபுக் கல்லூரியின் மார்க்க அறிஞர்கள் “ ஆங்கிலம் படிப்பது ஹராம் “ என்று மார்க்கத் தீர்ப்பான பத்வா வழங்குமளவுக்கு அந்த வெறுப்பு விதைகளைத் தூவி நட்டு வளர்ந்த்தது. (காலத்தின் ஒரு கோலம இன்று அதே தேவ்பந்த் கல்லூரியில் பயின்ற சென்னை மக்கா மசூதியின் இமாம் மவுலானா சம்சுதீன் காசிமி , முஸ்லிம்களின் பின் தங்கிய கல்வியின் நிலையைப் போக்க இல்மி (ILMI ) என்று ஒரு இயக்கத்தை இன்று தொடங்கி இருக்கிறார். )

தோப்பில் மீரான் என்றொரு தென் தமிழகத்தின் தேங்காய்ப்பட்டினத்து நாவலாசிரியர் மண்ணின் கதைகளை மணத்துடன் பரிமாறுபவர் என்று இலக்கிய உலகில் தொடர்புடைய நண்பர்கள் அறிவார்கள். ‘இலக்கியம் என்பது ஒரு காலத்தின் கண்ணாடி’ என்று கூறுவார்கள். அந்த வகையில் இலக்கியங்கள் வெளிப்படுத்தும் மக்களின் வார்த்தைகள் வரலாற்றையும் வெளிப்படுத்தும். தோப்பில் மீரான் எழுதிய நாவல்களில் மக்கள் உரையாடிக் கொள்வதாக வரும் சில வார்த்தைகள் மக்களின் மனநிலையைக் காட்டும். அவற்றில் சில 

"அரபி அல்லாஹ்க்கா பாசே – இங்கிலீஷ் நஸ்ராநிக்கா பாசே" ( அரபி அல்லாஹ்வுடைய மொழி – ஆங்கிலம் கிறிஸ்தவர்களின் மொழி )

"ஆங்கிலப் பள்ளிக் கூடத்தில் படிச்சா நரகம்தான் கிடைக்கும்"

"உலகம் அழியப் போகும் நாளின் அறிகுறிதான் ஆங்கிலக் கல்வி"

என்றும் கூற வைத்து இப்படிப்பட்ட நம்பிக்கைகள் முஸ்லிம்களின் இதயங்களில் நங்கூரம் பாய்ச்சி நின்று கொண்டு இருந்த நிலைமைகளை தோப்பில் மீரான் கோடிட்டுக் காட்டுகிறார். இப்படிப் பட்ட மனோநிலை அரபி மற்றும் பார்சி கூடவே உருது போன்ற மொழிகளைப் படிக்க முஸ்லிம்களைத் தூண்டியதே அல்லாமல் “ சீனா சென்றேனும் சீர்கல்வி பெருக” என்ற அரேபிய பழமொழியை மறக்கடித்தன. எந்த மொழியையும் கற்காதே என்று இஸ்லாம் தடைப் பட்டியல் இட்டு இருக்கிறதா? அன்னத்தில் வின்னத்தைக் கலக்கும் சமுதாய விரோதிகள் அப்போதே இருந்து இருக்கிறார்கள். 

இவ்வாறு பிரிட்டிஷார் மீதான் வெறுப்பின் காரணமாக, ஆங்கில மொழியும் அந்த மொழி மூலமான உலகக் கல்வியும் நமது சமுதாயத்தால் புறக்கணிக்கப் பட்டன. இதன் விளைவாக பல்வேறு கல்வியின் பரிணாமங்களின் துறைகளைக் கற்கும் வாய்ப்பை முஸ்லிம்கள் இழந்தனர். 

அலிகரில் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை தோற்றுவித்த சர். செய்யத் அகமது கான் போன்றோர் முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால் நவீன ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக் கொள்ள முனைப்புக் காட்ட வேண்டுமென்று பரப்புரை செய்தனர்; வலியுறுத்தினர். பலருடைய எதிர்ப்பையும் மீறி சர். செய்யத் அகமது கான் அவர்களால் தொடங்கப் பட்ட அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் தொடங்கப் பட்ட பின்னரும் கூட அதில் சேர்ந்து படிக்க பல முஸ்லிம்கள் தயங்கினார்கள். காரணம் அலிகரில் படிப்பது நரகத்துக்குப் பாதை வகுத்துவிடுமென்ற பலரின் தவறான பரப்புரையே காரணம். அலிகர் பல்கலைக் கழகத்தின் நோக்கம் நிறைவேறி அது தன் வெற்றியைக் கண்ட பின்னரும் கூட பல பகுதிகளிலும் தயக்கமே காணப்பட்டது. இந்த நிலையில் முஸ்லிம்களின் கல்வி நிலை மீது இன்னொரு இடி இறங்கியது. 

1920 ஆம் ஆண்டு நாகபுரியில் நடைபெற்றது காங்கிரஸ் மாநாடு. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய மைல் கல்லாக இந்த மாநாடு இருந்தது. காரணம் இந்த மாநாட்டில்தான் ஆங்கிலேயருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்குவது என்று தீர்மானிக்கப் பட்டது. ஒத்துழையாமை இயக்கத்தின் நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய வைகளாக பதினோரு வழிமுறைகள் காந்தியால் அறிவிக்கப் பட்டன. அவற்றின் ஒன்று ஆங்கிலக் கல்வியைப் புறக்கணிக்க வேண்டும் என்பதுமாகும். காந்தி முதல் நேரு வரை பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர் இந்த அறிவிப்பு ஒரு வேடிக்கையான அம்சம். 

இதற்குத் தலையாட்டி பலியானோரில் அதிகம் பேர் முஸ்லிம்களே என்பதே வேதனையான உண்மை. காரணம் இந்த ஒத்துழையாமை இயக்கத்தின் அம்சங்களை நடைமுறைப் படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது கிலாபத் இயக்கம் . முஸ்லிம்கள் மட்டுமே பெருமளவில் பங்கு வகித்து, தன் வாயில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட நிலையை ஏற்படுத்தியது கிலாபத் இயக்கம் ஏற்படுத்திய உணர்வுப் பெரு ஆழி அலைகள். 

1920 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் நாள் ஒன்றுபட்டிருந்த சென்னை ராஜதானியின் பல பகுதிகளிலும் கிலாபத் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டன. பள்ளிகள் , கல்லூரிகள், நீதிமன்றங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அந்த தீர்மானத்தை உணர்வுடன் நடை முறையும் படுத்தினர். இதே போல் தீவிரமாக சுதந்திர வேட்கையுடன் கல்வியையும் சேர்த்துப் புறக்கணித்த வேறு ஒரு சமுதாயம் இருந்து இருக்குமா என்பது சரித்திர சந்தேகம். 

கிலாபத் இயக்கத்தின் தலைவராக இருந்த மெள லானா முகமது அலி அவர்கள் 1921 – ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற கிலாபத் இயக்கத்தின் தலைமை உரையில் முஸ்லிம்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றுவது ஹராம் என்று முழங்கினார். ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமானால் அதற்கு ஏற்ற படிப்புகளைப் படித்து இருக்க வேண்டும். முஸ்லிம்கள் படிப்பை புறக்கணித்ததால் ராணுவம் என்கிற ஒரு பெரும் வேலைவாய்ப்புத் துறையிலே அவர்களது வாடை கூட வீசாமல் போனது. 

 26/01/1921 அன்று சென்னையில் இருந்து வெளியான உருது நாளேடான ‘கெளமி ரிப்போர்ட்’ என்கிற பத்திரிகை , ‘ஒவ்வொரு முஸ்லிம் இளைஞன் மற்றும் மாணவனின் கடமை’ என்கிற தலைப்பிட்டு, ‘ “தங்களைப் படைத்த இறைவன் மற்றும் இறை தூதருக்காக, முஸ்லிம் இளைஞர்கள் எவ்வித இலாப நஷ்டமும் பாராமல் கிலாபத் இயக்கத்தில் ஈடுபட்டு பிரிட்டிஷ்காரர்களின் கல்வியைப் புறக்கணிக்க வேண்டும் “ என்று படித்துக் கொண்டிருந்த முஸ்லிம் மாணவர்களை இன்று சில இயக்கங்கள் மூளைச் சலவை செய்வது போல் செய்தன. 

இதற்கு மாறாக, முஸ்லிம் மாணவர்கள் கிலாபத் இயக்கத்தில் ஈடுபடுவதும் அவர்களை ஈடுபடுத்துவதும் அவர்களது கல்வியைப் பாதிக்கும் எனவே அவ்வித பங்கேற்பையும் அதற்கான அழைப்பையும் முஸ்லிம் மாணவர்கள் புறக்கணித்துவிட்டு படிக்கச் செல்ல வேண்டுமென்று உருது நாளேடான ஜார்தா – இ- ரோஜ்கார் தலையங்கம் ( 12/02/1921) தீட்டி எச்சரித்தது. இதையேதான் அண்மையில் ஒரு இயக்கம் இட ஒதுக்கீடு கேட்டு நடத்திய போராட்டத்தில் மாணவர்களை விலகி இருக்கும்படி நாமும் சொன்னோம். அதற்காக நியாயமற்ற முறையில் தரம் குறைந்து விமர்சிக்கப்பட்டோம்.

இவை போன்ற அரசியல் மற்றும் இயக்க உணர்வுகளால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. பலர் படிப்பை பாதியில் விட்டனர். 1920-21 ஆம் கல்வியாண்டில முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியினை சென்னை மாகாண நிர்வாக அறிக்கை குறிப்பிடும்போது “1920-21–ல் சென்னை மாகாணத்தில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட 4,420 குறைந்தது. இதற்கு, கிலாபத் இயக்கத்தின் தாக்கமே காரணம் “ என்று குறிப்பிடுகிறது. 

ஒரு வேதனையான உதாரணத்தைச் சொல்லலாம். 1921-ல் கிலாபத் இயக்கத்தின் தீவிரம் காரணமாக வாணியம்பாடியைச் சேர்ந்த முஸ்லிம்கள் , பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை ஊரை விட்டு விலக்கி சமுதாயப் புறக்கணிப்பு செய்வது என்று கூட தீர்மானித்தனர் என்று ஒரு குறிப்பு இந்த துரதிஷ்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதன் காரணமாக வாணியம்பாடி இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 75 % குறைந்தது. 

1920 – ஆம் ஆண்டு, வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கம் , இஸ்லாமியா கல்லூரியை நிறுவியது. சென்னை முகம்மதன் கல்லூரிக்குப் பிறகு இது இரண்டாவது கல்லூரி. 1920 ஆம் ஆண்டில் சென்னை மாகாண கல்வித்துறையின் இயக்குனரின் அறிக்கையில் வாணியம்பாடிக் கல்லூரியைப் பற்றி குறிப்பிட்டு கடைசியில் ஒரு செய்தியைச் சொ௦ல்கிறார். அந்தச் செய்தி, "கிலாபத் நாட்களில் வாணியம்பாடிக் கல்லூரி நின்று தழைக்குமென்று கல்வித்துறை நம்பவில்லை" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டு இருந்தது. இந்தக் குறிப்பு அன்றைய நிலையை சொல்லாமல் சொன்னது. 

வாணியம்பாடி இஸ்லாமியாக் கல்லூரி தொடங்கப் பட்ட நேரத்தில் முஸ்லிம் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை கல்லூரியின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குதான் இருக்க வேண்டுமென்று அரசு விதி வகுத்து இருந்தது. ஆனால் சோகத்திலும் சோகம் கிலாபத் இயக்கத்தில் முஸ்லிம் மாணவர்கள் ஆங்கில முறைக் கல்வியை புறக்கணித்த காரணத்தால் விதிகளை மீறி பிற மத மாணவர்கள் அதிகம் சேர்க்கப் பட்டனர். 

காந்திஜி முன் மொழிந்த ஒத்துழையாமை இயக்கத்தை உயிரோட்டமுடையதாக ஆக்குவதற்கு தோளோடு தோளாக நின்ற கிலாபத் இயக்கத்தின் தாக்கம் , முஸ்லிம்களின் சுதந்திர தாகம் அவர்களின் கல்வியை பலி கொண்டது. முஸ்லிம்களின் கல்வி பின்னடைவை சந்தித்தது. காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் வரை தங்களின் படிப்பைப் பாதியில் விட்டனர். சுதந்திர போராட்டத்துக்கும் முஸ்லிம்களின் கல்வி உணர்வு காவு கொடுக்கப்பட்டது. அதே நேரம் மற்றவர்கள் கல்வியில் முஸ்லிம்களைவிட முன்னேறினார்கள். 

இன்னும் அதிகமான கல்வி நிறுவனங்கள் நிறுவ வேண்டுமென்ற ஆவலும் செயல்பாடும் மிக தாமதமாகவே முஸ்லிம்களுக்கு மூளையில் உரைத்தன. அதன் பின்புதான் திருச்சியில் ஜமால் முகமது, அதிராம் பட்டினத்தில் காதிர் முகைதீன், உத்தம பாளையத்தில் ஹாஜி கருத்த ராவுத்தர், சென்னை புதுக் கல்லூரி, மதுரையில் வக்பு போர்டு, பாளையங்கோட்டையில் சதக்கத்துல்லா அப்பா ஆகிய கல்லூரிகள் துவங்கின. பெண்களுக்காக, ஜஸ்டிஸ் பஷீர் அஹமது சயீத் அவர்களால் சென்னையில் S I E T கல்லூரியும் தொடக்கமாக துவங்கி வைக்கபப்ட்டன. இந்தக் கல்லூரிகளைத் துவக்கிய பெருமக்களுக்காக நாம் அனைவரும் துஆச் செய்வது நமது சமுதாயக் கடமை. அண்மையில்தான் வணிக நோக்கோடு கீழக்கரை, இராஜகிரி முதலிய பல ஊர்களிலும் முஸ்லிம்களால் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. ஆனாலும் அவற்றில் எவ்வளவு முஸ்லிம்கள் பயில்கின்றார்கள் அவை எவ்வாறு நமது கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன என்பது விவாதத்துக்கு உரியது. 

ஆயினும் இன்னும் கல்வியில் தொடர்ந்து பின் தங்கியே இருக்கிறோம் என்பதை நாம் இன்னும் உணரவேண்டும். இதைப் பற்றி இன்னும் விவாதிக்கலாம். இன்ஷா அல்லாஹ். 

ஆக்கம் : P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இப்ராஹீம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)