Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label மாண்புமிகு மந்திருக்கு. Show all posts
Showing posts with label மாண்புமிகு மந்திருக்கு. Show all posts

மாண்புமிகு மந்திரிக்கு..! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | February 14, 2012 | , , ,

உயர் திரு.C .C . பாட்டில் அவர்கள். 
மாண்புமிகு மந்திரி
பெண்கள் மற்றும் குழந்தை நலவாழ்வுத்துறை
கர்நாடக அரசு

இன்று நம்நாட்டில் நடக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிலும் குறிப்பாக கற்பழிப்பு போன்ற குற்றங்களின் அதிகரிப்பிற்கும், காலத்தின் கட்டாயம் என்ற பெயரில் பெண்கள் அணியும் கவர்ச்சியான, உடலை உரித்துக்காட்டும் மெல்லிய ஆடைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாய், ஆந்திர மாநில காவல்துறை இயக்குனர் கூறியிருப்பதற்கு, நீங்கள் தெரிவித்து இருக்கும் பதிலை (02 - 01 - 2012 ) டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழல் வாயிலாக படிக்க நேர்ந்தது.

ஆம்! நீங்கள் சொல்வது உண்மைதான். இன்று, மருத்துவமனைகள் மாட மாளிகைகளாகி விட்டதாலும், கல்வி கடை வியாபாரம் ஆகிவிட்டதாலும், காலச்சக்கரத்தின் அச்சில் அமர்ந்து அதன் வேகத்தோடு சேர்ந்து சுழலவும், கணவன் மனைவி இருவரும் பணியிலமர்ந்து பொருளீட்டவேண்டும் என்பது அவசியமாகிவிட்டது.

இன்றைய சூழலில், மருத்துவம், கல்வியியல் போன்ற மதிப்பிற்குரிய சேவைத்துறைகளுக்குக் கிடைக்கும் இடங்களைக்கூட விட்டுவிட்டு, கணினி மற்றும் தொழில்நுட்பத் துறையினைத் தேர்ந்தெடுக்கும் மாணவியர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதன் விளைவாக, "ஏராளமான பெண்கள் தகவல் தொழில்நுட்பத்துறையிலும், கால் சென்டர் என்றழைக்கப்படும் அழைப்பு மைய்ய பணிகளிலும் பணிபுரிகின்றனர். அதிலும் இரவுநேர பணிக்கு வரும் பெண்கள் தங்கள் உடை விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் எனவும், இது போன்ற பணிகளுக்கு அதாவது பெண்களும் ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் இடங்களில், பெண்கள் தங்கள் உடலினை எந்த அளவுக்கு மறைக்க வேண்டும் என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்" என்று  நீங்கள் அறிவுறுத்தியிருக்கிறீர்கள். 

"இன்று,  ஒழுக்கம், கலாச்சாரம் போன்ற விழுமம் சார்ந்தவைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருக்கிறது. விழுமம் பற்றி அக்கறையே இல்லாத சில ஆண்கள் மத்தியில் நாகரீகம் என்ற போர்வையில் ஆடைக்குறைப்பு, கவர்ச்சியான கவர்ந்திழுக்கும் ஆடைகளை அனிதலால் அனைத்து விழுமங்களையும் ஆழக்குழி தோண்டி புதைத்துவிட்டு அவர்கள் பெருங்குற்றம் புரிய காரணியாய் அமைந்துவிடுகிறது" என்றும் எச்சரித்துள்ளீர்கள்.

"பல நூற்றாண்டுகளாக நாம் பெண்களுக்கு மரியாதைக்கும் பெருமைக்குமுரிய உயர் பதவிகளை தந்திருக்கிறோம். அவர்களுக்கு கௌரவமான நிலைகளுக்கு உயர்த்தியிருக்கிறோம். போற்றுதலுக்குரியவர்கள் என்று பேணியும் வருகிறோம். ஏன், 'நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவ வாக்குக்கேற்றார்போல நாட்டின் உயிர்ப்பிடிப்பான ஆறுகளுக்கும்,நதிகளுக்கும் பெண்களின் பெயரையல்லவா சூட்டி மகிழ்கிறோம்" என்று சூளுரைத்திருக்கிறீர்கள்.

ஆனால், திட்டவட்டமாய் சட்டங்கள் போடும் நிலையில் இருந்தும், " உடை விஷயத்தில் நான் யாரையும் வற்புறுத்தவில்லை; ஏனென்றால் பல்வேறு கலாச்சாராம், பண்பாடு,பாரம்பரியத்தின் அடிப்படையில் அடையாளங்களாய் பெண்களின் உடை இருந்து வருகிறது; வெகுவான பெண்கள் சேலைகளையும், வேறு சிலர் சல்வார் போன்ற உடைகளையும்,  இன்னும் சிலரோ மேற்கத்திய தொற்றினால் இடுப்பில் கூட நிற்காத 'ஜீன்ஸ்' அணிகிறார்கள். எந்த உடை பாதுகாப்பானது என்று உணர்கிறார்களோ / நினைக்கிறார்களோ அவைகளையே அணிந்துகொள்ள அவர்கள் முடிவு செய்யட்டும்" என்று ஏனோ நழுவுகிறீர்கள்?

இந்த நல்ல தருணத்தில் இஸ்லாத்தில் பெண்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் பற்றியும், நீங்கள் பெரிதும் கவலைப்படும், பெண்களின் கற்பொழுக்கத்திற்கும், அவளின் பாதுகாப்பிற்கு அரணாய் இருக்கும் ஆடை இலக்கணம் (ஹிஜாப்) பற்றியும் அகிலமனைத்திற்கும் அதிபதியாகிய எல்லாம் வல்ல இறைவன் இட்ட கட்டளைகள் என்ன?

அகிலத்திற்கு அருட்கொடையாய் வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இது சம்பந்தமாய் போதித்தவை என்ன? 

அவற்றில் சிலவற்றை உங்களுக்கு அறிமுகம் செய்வது கடமை என்று உணர்கிறேன்.

நம்நாடு பல மதங்களும், கலாச்சாரமும், பண்பாடும் கொண்டதுதான். நபி(ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

"எந்தவொரு மதத்திற்கும் ஒரு விஷேச ஒழுக்கப்பண்பு உண்டு. இஸ்லாத்திற்குரிய ஒழுக்கப்பண்பு வெட்கமாகும்" என்று கூறியிருக்கிறார்கள்.

இறைவசனமோ, " மேலும் (நபியே) முஃமினான (நம்பிக்கைகொண்ட) பெண்களிடம் கூறும்; அவர்கள் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக்கொள்ளட்டும்; தங்களது அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்;..... (சூரா அந்நூர்:31) 

"நபியே! உங்களது மனைவிகள், உங்களது புதல்விகள் மற்றும் முஃமின்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறுவீராக! அவர்கள் தங்கள் முந்தானைகளை தம்மீது போட்டுக் கொள்ளட்டும். இது அவர்களை அறியப்படுத்துவதற்கும் அவர்கள் தொல்லைகளுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்ற முறையாகும்." (அஹ்ஸாப் :59) 

இன்று நாம் கவலைகொள்ளும் விஷயத்திற்கு  மேற்சொன்ன இறைவசனமும் நபிமொழியும், பட்டுத்தெறித்தாற்போல விடையளிக்கிறது, எந்தவொரு பெண் தன் அழகை மறைத்து (கண்ணியமாக உடையணிந்து),  தீய எண்ணங்களோடு தன்னை நோக்கி வரும் பார்வைகளை விட்டு  தன் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளும் பொருட்டு, அவளின் கற்பு பாதுகாக்கப்படுகிறது.

இன்னும் மேற்சொன்ன இறைவசனத்தில் , "பெண்கள் தங்களின் மார்புகள் மீது முந்தானைகளைப் போட்டுக்கொள்ளட்டும்" என்று கட்டளையிடப்படுகிறது. எந்த ஒரு தொல்லைக்கும் ஆளாகாமல் இருக்கும் பொருட்டு ஒரு தீர்க்கமான உறுதியான தீர்வினையும் அந்த இறைவசனம் தெரிவிக்கிறது. பெண் என்பவள் மதிப்பிற்குரியவள். ஆகவே அவள் மறைப்பிற்குரியவள் என்ற உங்கள் வாதம், இங்கு அட்சரம் பிசகாமல் இறைவசனத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

"பெண்கள் தங்களின் மார்புகள் மீது முந்தானைகளைப் போட்டுக்கொள்ளட்டும்"  என்ற இறைக்கட்டளை அருளப்பட்டபோது, பெண்கள் தங்களின் மெல்லிய ஆடைகளை கைவிட்டுவிட்டு, கம்பளி போன்ற கனமான ஆடைகளைக் கொண்டு போர்த்திக்கொண்டனர் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் உறுதிசெய்கிறார்கள். (ஆதாரம் - அபூதாவுத்) 

மெல்லிய ஆடைகள் பெருங்குற்றத்திற்கு பேருதவி செய்கிறது என்கிறீர்கள், இஸ்லாமோ இதில் ஆச்சர்யப்படுவற்கு ஏதுமில்லை என்கிறது. உடலின் அமைப்பினை வெளிக்காட்டும் மெல்லிய துணியை ஆடை என்று சொல்லவே இல்லை; மாறாக இது நிர்வாணத்திற்கு சமம் என்று சாடுகின்றது.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள், " பிந்திய காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்கள் ஆடை அணிந்த நிர்வாணிகளாக இருப்பார்கள். அவர்களின் தலைகளின் மேல் ஒட்டகங்களின் திமில் போன்றவை இருக்கும். அவர்களைச் சபியுங்கள். நிச்சயமாக அவர்கள் சபிக்கப்பட்டவர்களே." (ஆதாரம் - அத்தபரானி)

பல நூறாண்டுகளாக பெண்களைப் பேணி பாதுகாக்கும் நாம், அவர்களை சாபத்திற்குள்ளனவர்களாக ஆக்குவது முறையாகுமா? பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நலவாழ்வினை ஏற்படுத்திதரும் உன்னதமான பொறுப்பில் இருக்கும் நீங்கள், அவர்களின் உடை விஷயத்தில் இறைவனின் சட்டத்தையே அழகான தீர்வாக தருவது கடமையல்லவா? அதுவே அவர்களுக்குத்தரும் உண்மையான கௌரவம் அல்லவா?

அன்புடன்

புதுசுரபி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு