Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label மும்பை. Show all posts
Showing posts with label மும்பை. Show all posts

ஸ்டெடி ரெடி அப்புறம் புடி ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 22, 2016 | , , ,

நம்மைச் சுற்றி நிகழ்பவைகளில் உலகில் நிறைய விசயங்கள் மாறினாலும் ஒரு சில விசயங்கள் இன்னும் மாறாமல் அப்படியே இருந்து வருகின்றன அல்லது இயங்குகின்றன ! முன்பெல்லாம் நாங்கள் மல்லிபட்டினம் மனோராவுக்குச் சென்றாலும் அங்கே நின்று அல்லது அந்த கட்டிடக் கலையை போட்டோ எடுப்பவர்கள் மனோராவின் உச்சியை தொடுவது போல் அங்கே நின்று போஸ் கொடுப்பவரின் கையை தூக்கிக் கொண்டு நிற்பதும் அதனைப் படம் எடுப்பவரோ தரையில் உட்கார்ந்தும் உருண்டும் புரண்டும் ஃபோட்டோ  எடுப்பதை காணாமல் வந்ததில்லை.

கடந்த ஆண்டு வேலையாக (பணி நிமித்தம்) மும்பை சென்றபோது கேட்வே ஆஃப் இந்திய சென்று வந்தேன் அங்கே ஒருவர் கையை தூக்கிக் கொண்டு ஓபராய் ஹோட்டலின் உச்சியை தொடுவது போல்  போஸ் கொடுக்க அதை அங்கு இருந்த ஃபோட்டோ கிராபர் ஃபோட்டோ எடுத்ததை பார்த்ததும் நம்மூர் மல்லிபட்டினம் மனோரா மலரும் நினைவுகள் நினைவுக்கு வந்தது. பலரையும் படம் எடுக்கும் இந்த புகைப் படக்காரரை அதாங்க ஃபோட்டோ கிராபரை நான் ஒரு கிளிக் கிளிக்கு கொண்டு வந்தேன்.

புகைப்படம் எடுப்பதும் அதனை ரசனைக் கண் கொண்டு ரசிப்பதும் அவரவர் விருப்பம் அதிலும், சில புகைப் படங்கள் திகைக்க வைக்கும் அழகையும், ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் ஊட்டும். இன்னும் சிலவகையோ எப்படியெல்லாம் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று படம் பிடித்து காட்டிவிடும். ஆளுக்கு ஒரு டிஜிட்டல், அல்லது மொபைல் ஃபோன் கிளிக் அங்கே அவரவருக்கு தகுந்த (ரசனைக்கேற்ற) விளக்கமும் விமர்சனமும் பதிக்கப்படுவதை நினைத்து எப்படியெல்லாம் எடுக்க கூடாது என்ற பாடமும் நமக்கு அவ்வப்போது கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

இப்போ ஏனுங்க அதுக்கு இப்படியொரு பீடிகையுடன் ஒரு சிறு கட்டுரை அதுக்கு ஒரு ஃபோட்டோ என்று கோபப்படமா ஒரு விஷயத்தை கவனிங்க தமிழனாக இருந்தாலும் கன்னடனாக இருந்தாலும் மலையாளியாக இருந்தாலும் பம்பாய் காரனாக இருந்தாலும் நாம எல்லாம் இந்தியன் நம்மிடமோ பல வேற்றுமை இருந்தாலும் ஒரு சில விசயங்களில் ஒற்றுமை இருப்பதைத்தான் அந்தப் படம் (!!!) நமக்கு காட்டுகின்றது.

முக்கிய குறிப்பு : தேசிய நீரோட்டத்தில் இணைந்து விடும் ஐடியாவெல்லாம் இல்லை, ஏதோ தேர்தல் நேரமாக இருப்பதால் எல்லோரும் தேசம், என் தேசம், என்று சொல்லிகிட்டு இருக்காங்க... நாமளும் ஊரைத் தாண்டி இந்தியாவையும் நேசிப்போம்னும் எப்போதான் எழுதுறதாம் !


Sஹமீது

கேட்வே ஆஃப் இந்தியா - பேசும் படம் ! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | May 14, 2013 | , , , , ,





ஊரில் இருக்கும்போது மும்பை பக்கம் செல்ல நேர்ந்தது, அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான பாலத்தை  பல கோணங்களில் போட்டோ எடுத்தேன் அதில் சில நேரான கோணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


என்னங்க இம்புட்டு தூரம் போயிட்டு பாலம் போட்டோ மட்டும்தானானு கேட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த போனஸ் கேட்வே ஆஃப் இந்தியா இந்த வழியாகத்தான் இந்தியாவுக்குள் வரனுமாம் ! ஏற்கனவே எப்படி வந்தார்கள்னு டீவிலையெல்லாம் போட்டுக் காட்டினாங்களே ஞாபகம் இருக்கா ?


என்னங்க  கேட்வே ஆஃப் இந்தியாவை பார்த்த நீங்கள் அக்கம் பக்கம் பார்க்கலையா என்று கேட்பவர்களுக்காக  இது மற்றொருமொரு போனஸ் !




'தமிழன் என்று சொல்லாட தலை நிமிர்ந்து நில்லடா' என்று சொல்லக் கூடிய தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வட நாட்டுப் படங்களை போடுவது நியாயமா என்று கேட்கும் (தமிழ்) மொழிப் பிரியர்களுக்காக - மும்பையில் இருந்து இண்டிகோ விமானத்தில் சென்னை  வரும் போது விமானத்தில் காசு கொடுத்து காய்கறி சாண்ட்விச் வாங்கி சாப்பிட்டுவிட்டு தெம்பாக நாம்  நம்ம சென்னையை சுற்றி வளைத்து பிடித்த (!!!???) ஃபோட்டோக்கள் (மெய்யாலும் ராட்டினம் ஜம்போவில் ஏறியெல்லாம் எடுக்கலைங்க). 



விமான டிக்கட்டுக்கு குடுத்த காசுக்கு சென்னையை நல்லவே சுத்தி காட்டிட்டுதான் விமானத்தை தரை இறக்குனாய்ங்க  !


இரயில் பயணத்தில் இவ்வாறான அனுபவங்களை காணாத பயணமும் ஒரு பயணமா ? என்று ஏங்க வைக்கும் "டீ காப்பீ" சத்தங்களுக்கு பதில் "சாய், காப்பீ" என்று என்றோ 'தார்' பூசிய எழுத்தின் உச்சரிப்பு சத்தம் கேட்டது !


பாதி வழியில் மலை இடுக்கில் இப்படி சிக்கிய அனுபவம் உண்டா ?

Sஹமீது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு