உலக புகைப்பட நாள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 19ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடி மகிழ்கின்றனர் !
அதிரைநிருபரிலோ மாதமிருமுறை அல்லது அதற்கு மேலாக ஒரு பதிவு பேசும்படமாக புகைப்பட ரசனைக்கு மகுடம் சூட்டி வருவதை நன்கு அறிவீர்கள்.
புகைப்படம் எடுப்பது கலையாக இருந்த காலம் மலையேறியதோ என்று நினைக்கும் அளவுக்கு, இன்றைய புகைப்பட கருவிகளின் ஆதிக்கம். அலைபேசி, அணியும் ஆடையின் பொத்தான், இடுப்பில் கட்டும் பெல்ட், காதில் தொங்கும் தோடு, ஹெட்ஃபோன், கடிகாரம், இப்படியாக ஏராளமான பயன்பாட்டில் இருக்கும் சாதனங்களில் இணைக்கப்பட்டு சரளமாக எல்லோர் கைகளில் கிடைப்பதை கிளிக் செய்ய விஞ்ஞானம் உதவியிருக்கிறது.
பட்டென்று ரசித்ததை படமாக்க எல்லோரிடமும் புகைப்பட மெடுக்க கேமரா கைகளில் இருப்பதில்லை அல்லது நாம் எதிர்பார்க்கும் படியான காட்சிகள் அமையாமல் காத்திருக்கும் கேமரா கண்களுக்கும் அமைவதில்லை.
பொழுதை கழிக்க ஊர் சுற்றியதல்ல, செல்லும் இடமெல்லாம் சிந்தையில் சிக்கியதை சித்திரமாக்க கிடைத்த மூன்றாம் கண்ணின் பளிச் தான் இது.
மாங்காய்க்கு மட்டும்தான் வாய் ஊருமா ?
கடின உழைப்பளிகள்தான் இவர்கள், இருந்தாலும் குறித்த நேரத்தில் கொடுக்க மாட்டார்கள் (??) என்பது மட்டும் நிச்சயம்.
நல்லாத்தான் இருக்கு ஆனா யாரும் வருவதில்லையோ !!? - இந்த இடம் நிறைய பேருக்கு மறந்திருக்கலாம், இது அதிரையில் புகழ் பெற்ற ஷிஃபா மருத்துவமணை உள்வளாகத்தில் அமைத்திருக்கும் இளைப்பாரும் குடில்.
இந்த அழகிய சாலையையும் இடப்பக்கமிருக்கும் வீடுகளின் அழகையும் புகைப்படத்தில் பார்த்ததும் பலருக்கு நினைவுகள் மலருமே!!! குறிப்பாக கவிதைக்கு மட்டும் தலைகாட்டும் கிரீடக்காரருக்கு.
புல்லு கட்டு மல்லு கட்டாம தலைலே உட்கார்ந்து போகுது, பின்னாலே அட !வடபோச்சேன்னும் மாடு ஏங்குது !?
தென்னை மரத்தில் இப்படி காய்க்கும்ன்னு எதிர் பார்க்க கூடாது. தென்னப்புள்ளைய இன்று போட்டுட்டு நாளைக்கு இப்படி வந்தா எப்படினு ஏங்கவும் கூடாது !
காக்கை உட்க்கார்ந்தும் பனம்பழம் விழ வில்லைன்னு கம்ளைண்ட் பன்னக் கூடாது
சுனாமி வந்தாலும் இது சுற்றுமான்னு விளையாட்டா கூட கேட்டுராதிய.
சரிங்க, இனி கவிஞர்கள் அதிகம் இருக்கும் இந்த அதிரைநிருபர் வாசகர்கள் வட்டத்தின் நடுவில் ஒரு மல்லிகைப் பூவினை வேறுபட்ட கோணங்களில் (ஃ)போட்டா(ல்) என்னவெல்லம் செய்வார்கள் எப்படியெல்லாம் கற்பனைக் குதிரையை ஓட்டுவார்கள் என்று சும்மாதாங்க யோசிச்சு பார்த்தேன்.
சரிங்க, இனி கவிஞர்கள் அதிகம் இருக்கும் இந்த அதிரைநிருபர் வாசகர்கள் வட்டத்தின் நடுவில் ஒரு மல்லிகைப் பூவினை வேறுபட்ட கோணங்களில் (ஃ)போட்டா(ல்) என்னவெல்லம் செய்வார்கள் எப்படியெல்லாம் கற்பனைக் குதிரையை ஓட்டுவார்கள் என்று சும்மாதாங்க யோசிச்சு பார்த்தேன்.