உலகிற் சிறியது
அணு,
உலையில் கொடியது
அணு,
உடைக்கும் பொழுதினில்
பிழை நடப்பின்
உலகில் ஏது மனு?
அறிவியல் வளர்ச்சியில்
அணுவினைக் கண்டது
'ஆக்குதல்' வழியில்
நலம்.
'அழித்தலின்' வழியில்
இரத்தக் களம்.
பின்னதை எண்ணி
பீதியில் வாழுது
கூட்டமாய் ஒரு குலம்.
அது எம்
கூடங்குளம்.
அஞ்சுவது அஞ்சாமை
பேதமை.
நெஞ்சம் இதில்
அஞ்சுவது மேதமை.
கொஞ்சமது என்றாலும்
தீங்கு
கொடிதென்னும் நிலை,காரணம்
அது அணு உலை.
அணுவைத் துளைத்து
ஏழ்கடலைப் புகுத்தி
குறுகத் தரித்தது
வள்ளுவம்.
அணுவைப் பிளந்து
மனுவை இழந்து
மின்வளத்தை பெருக்குதலில் என்ன
புண்ணியம்?
அறிவியல் வளர்ச்சியில்
அணுவில் மின்
ஆக்குதல் ஒரு கலை.
அச்சம் போக்கிடும்
அறண்வழி சொல்லாமல்
ஆலையைத் துவக்குதல் பிழை!
அரசியல் பானையில்
அணுவினைச் சமைத்து
ஆதாயச் சட்டியில்
வடித்திடும் உலை,
வாக்குகளிட்ட மக்களின்
வாழ்க்கைக்கு ஆபத்து நிலை.
பட்டபின் உணரும்
பாங்கு இதிலே
பலிக்காது, காரணம்
பட்டபின் பாடம் கற்க
பசும்புல் கூட உயிருடன்
இருக்காது.
வீட்டினை எரித்து
விளக்குகள் செய்யும்
விசித்திர நிலை
நீக்க வேண்டும்.
சட்டென இதற்கு
தீர்வு காணும்
சாத்தியக் கூறுகள்
ஆக்க வேண்டும்.
எதிர்ப்புடன் இருக்கும்
மக்களின் பயம்
எம்மை ஆளுவோர்
போக்க வேண்டும்.
கதிர் வீச்சில் காயப்படா
தலைமுறை இனி
பூக்க வேண்டும்.
- அதிரை என்.ஷஃபாத்
அணு,
உலையில் கொடியது
அணு,
உடைக்கும் பொழுதினில்
பிழை நடப்பின்
உலகில் ஏது மனு?
அறிவியல் வளர்ச்சியில்
அணுவினைக் கண்டது
'ஆக்குதல்' வழியில்
நலம்.
'அழித்தலின்' வழியில்
இரத்தக் களம்.
பின்னதை எண்ணி
பீதியில் வாழுது
கூட்டமாய் ஒரு குலம்.
அது எம்
கூடங்குளம்.
அஞ்சுவது அஞ்சாமை
பேதமை.
நெஞ்சம் இதில்
அஞ்சுவது மேதமை.
கொஞ்சமது என்றாலும்
தீங்கு
கொடிதென்னும் நிலை,காரணம்
அது அணு உலை.
அணுவைத் துளைத்து
ஏழ்கடலைப் புகுத்தி
குறுகத் தரித்தது
வள்ளுவம்.
அணுவைப் பிளந்து
மனுவை இழந்து
மின்வளத்தை பெருக்குதலில் என்ன
புண்ணியம்?
அறிவியல் வளர்ச்சியில்
அணுவில் மின்
ஆக்குதல் ஒரு கலை.
அச்சம் போக்கிடும்
அறண்வழி சொல்லாமல்
ஆலையைத் துவக்குதல் பிழை!

அணுவினைச் சமைத்து
ஆதாயச் சட்டியில்
வடித்திடும் உலை,
வாக்குகளிட்ட மக்களின்
வாழ்க்கைக்கு ஆபத்து நிலை.
பட்டபின் உணரும்
பாங்கு இதிலே
பலிக்காது, காரணம்
பட்டபின் பாடம் கற்க
பசும்புல் கூட உயிருடன்
இருக்காது.
வீட்டினை எரித்து
விளக்குகள் செய்யும்
விசித்திர நிலை
நீக்க வேண்டும்.
சட்டென இதற்கு
தீர்வு காணும்
சாத்தியக் கூறுகள்
ஆக்க வேண்டும்.
எதிர்ப்புடன் இருக்கும்
மக்களின் பயம்
எம்மை ஆளுவோர்
போக்க வேண்டும்.
கதிர் வீச்சில் காயப்படா
தலைமுறை இனி
பூக்க வேண்டும்.
- அதிரை என்.ஷஃபாத்