Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அணு. Show all posts
Showing posts with label அணு. Show all posts

அணு அணுவாய் அச்சம்!! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2011 | , , , ,

உலகிற் சிறியது
அணு,
உலையில் கொடியது
அணு,
உடைக்கும் பொழுதினில்
பிழை நடப்பின்
உலகில் ஏது மனு?

அறிவியல் வளர்ச்சியில்
அணுவினைக் கண்டது
'ஆக்குதல்' வழியில்
நலம்.
'அழித்தலின்' வழியில்
இரத்தக் களம்.
பின்னதை எண்ணி
பீதியில் வாழுது
கூட்டமாய் ஒரு குலம்.
அது எம்
கூடங்குளம்.

அஞ்சுவது அஞ்சாமை
பேதமை.
நெஞ்சம் இதில்
அஞ்சுவது மேதமை.
கொஞ்சமது என்றாலும்
தீங்கு
கொடிதென்னும் நிலை,காரணம்
அது அணு உலை.

அணுவைத் துளைத்து
ஏழ்கடலைப் புகுத்தி
குறுகத் தரித்தது
வள்ளுவம்.

அணுவைப் பிளந்து
மனுவை இழந்து
மின்வளத்தை பெருக்குதலில் என்ன
புண்ணியம்?

அறிவியல் வளர்ச்சியில்
அணுவில் மின்
ஆக்குதல் ஒரு கலை.
அச்சம் போக்கிடும்
அறண்வழி சொல்லாமல்
ஆலையைத் துவக்குதல் பிழை!

அரசியல் பானையில்
அணுவினைச் சமைத்து
ஆதாயச் சட்டியில்
வடித்திடும் உலை,
வாக்குகளிட்ட மக்களின்
வாழ்க்கைக்கு ஆபத்து நிலை.

பட்டபின் உணரும்
பாங்கு இதிலே
பலிக்காது, காரணம்
பட்டபின் பாடம் கற்க
பசும்புல் கூட உயிருடன்
இருக்காது.

வீட்டினை எரித்து
விளக்குகள் செய்யும்
விசித்திர நிலை
நீக்க வேண்டும்.
சட்டென இதற்கு
தீர்வு காணும்
சாத்தியக் கூறுகள்
ஆக்க வேண்டும்.

எதிர்ப்புடன் இருக்கும்
மக்களின் பயம்
எம்மை ஆளுவோர்
போக்க வேண்டும்.
கதிர் வீச்சில் காயப்படா
தலைமுறை இனி
பூக்க வேண்டும்.

- அதிரை என்.ஷஃபாத்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு