Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label சாஹுல் ஹமீது. Show all posts
Showing posts with label சாஹுல் ஹமீது. Show all posts

மூன்றாம் கண் சுற்றிய இடங்கள் - பேசும்படம் ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2016 | , ,

அதிரைநிருபரின் மூன்றாம் கண் சுற்றிய இடங்களின் காட்சித் தொகுப்புகள்.


திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருந்தேன் உனக்காக.


நீரை பார்த்தாலே ஆனந்தம் அதுவும்  மழை பெய்தாலே பேரானந்தம்


என்னதான் கம்ப்யூட்டரில் கலர் மிக்ஸ் பண்ணினாலும் இயற்கையின் கலருக்கு ஒரு  தனி அழகுதான்


அருவிகளை கிட்டே இருந்து பார்த்தாலும் அழகுதான் எட்டி இருந்து பார்த்தாலும் அழகுதான்.

ஷாஹமீத்

ஃபோட்டோ ஃபெஸ்டிவல் ! - பேசும் படம் தொடர்கிறது... 27

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2016 | , , , , ,


நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அப்படியே ஊர்பக்கம் நெனப்பை சுற்ற விட்டேன். அட ! நம்ம தலைப்பு ! 'ஃபோட்டோ ஃபெஸ்டிவல்' ன்னு வச்சுடலாமேன்னு முடிவு செய்துட்டேங்க. இங்கே ஆட்டம் பாட்டம் என்று எதுவும் இருக்காது உத்திரவாதம் தருகிறேன். ஆனால் பின்னூட்டம் இருக்கும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.


எப்போது ஊருக்கு போனாலும் ஒரு பசுமை காட்சியை சுட்டு அதிரை நிருபருக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நோக்கில் சுட்டதுதான் இந்த பசுமைக் காட்சியமைப்பு. 


மனிதனின் சாதனைகளில் இதுவும் ஒன்று. பிரமாண்ட மிருகத்தை பிடித்து வந்து பிச்சை எடுக்க பழக்கிக் கொடுத்து மட்டுமல்லாமல் அதற்கு சமய சாயமும் பூசி விட்டார்கள்.
 

MSM 'மின்' ஆதங்கத்தை போக்கவே இந்த சிட்டுக்குருவி போஸ்.


அந்தக்காலத்து டெக்னாலஜி இந்தக்காலம் வரை தாக்கு 'பிடி'க்கின்றது  இன்னும் ஆச்சர்யமே !


இந்த பாம்பன் பாலத்தில் ரயில் செல்வதை பார்த்தால் அண்ணன் NAS அவர்களின் நினைவு வரும் காரணம் இந்த பாலத்தில் ஓடும் இரயிலில் நான்  முதன்  முதலாக அண்ணன் NAS கூட பயணம் செய்தது (ஆனால் இந்த ரயில் அல்ல).


நாங்கள் மீனுக்கு வலை வீசுகின்றோம் எங்களுக்கு சிங்கள கடற்படை வலை வீசுகின்றது (உலகில் இந்திய ராணுவம் நான்காவது இடத்தில் இருக்காமே உண்மையா ?).


மாதத்தில் ஒரு நாள் இது போன்ற இடத்தில் ஒரு பொழுதை தனிமையில் கழிக்க வேண்டும் (மொபைல் போன் இல்லாமல் )


பூனே முன்பெல்லாம் "பசுமை" பள்ளத்தாக்காக இருக்கும். ஆனால், இப்போது வெறும் பள்ளத்தாக்காய் இருக்கிறது.


நான் எந்த கட்சியிலேயும் இல்லீங்க, இது எதார்த்தமா எடுத்த படமுங்கோ !


பலா பழத்தில் "ஈ மொய்ப்பது போல் என்ற பழமொழியை மாற்றி பலா பழத்தில் எறும்பு மொய்ப்பது போல் என்று மாற்றிவிட வேண்டியதுதான் இதுக்கப்புறம். 

Sஹமீது

உலகம் எப்படி உருவானது ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2016 | , , ,


உலகம் எப்படி உருவானது  என்ற சோதனை நடக்கின்றது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்  இந்த சோதனையை நடத்துகிறது.  உலகம் எப்படி உருவானது(ரூம் போட்டு யோசிப்பான்களோ ) என்பதை கொஞ்சம் பிராக்டிலாக சோதனை செய்து பார்க்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.

அதாவது புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் அதி பயங்கர வேகத்தில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறார்கள்.(இது என்ன லண்டன் கந்துரி கடையா வேடிக்கை பார்க்க ) இதற்காக கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் சப் அடாமிக் பார்ட்டிகிள்ஸ் (புரோட்டான், நியூட்ரான்) மோதிக் கொள்ளும் வட்ட வடிவ பைப்பை அதற்குள் அமைத்திருக்கிறார்கள். இதற்காக பல  பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளனர் ஐரோப்பிய நாடுகள். கிட்டத்தட்ட 5,000 விஞ்ஞானிகள் கூட்டு சேர்ந்து இந்த  டீம் வொர்க் நடக்கின்றது.(இதில்  நீங்கள் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும்  ஒரே பைப்பில் ஓட உட போறிங்க நாங்க பல வருசத்துக்கு முன்பே ஒரே பைப்பில் நல்ல தண்ணியையும் சாக்கட தண்ணியும் மோத விட்டு என்னென்ன நோய்கள் பொது மக்களுக்கு வருதுன்னு கண்டு பிடிச்சிட்டோம்)


தடிமனான இரும்பால் செய்யப்பட்டு ரீ-இன்போர்ஸ்ட் சிமெண்ட் மற்றும் பலவித  ரசாயனங் களை கலந்து பூசி மொழுவி , அணு கதிர்வீச்சை தாக்குப்பிடிக்கும் பாதுகாப்பு  கொண்ட இந்த கொல்லாய்டர்.எனும் ஆய்வு கலன் தயார் செய்யப்பட்டு உள்ளது (நீங்களெல்லாம் இரும்புக்கு ரசாயனம் தடவுரிய நாங்க கோழிக்கு மசாலா தடவுறோம் )

இது அணுக்களைp பிளக்க உதவும் வழக்கமான சைக்ளோட்ரான் மாதிரி தான். இதன் செயல்பாடும்  ஆனால், இதில் விஷேசம் என்னவென்றால் இதன் வேகம். (என்ன இவன் எப்போ பார்த்தாலும் வேகத்தை பத்தியே போட்டு அருக்கின்றானே என்று வேகமா புலம்புவது காதில் விழுது ) 1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்கள் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் இந்த 27 கி.மீ. வளையத்தில் சுற்றவிடவுள்ளன சர்கஸில் கூண்டுக்குள் பைக்கில் சுத்துவார்களே அதுபோல் . LHC தன் முழு வேகத்தை அடைந்தவுடன் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வினாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள்.(இதை எல்லாம் எப்படித்தான் எண்ணுகிறார்களோ)

அப்போது புரோட்டான்களி்ல் 7 டிரில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் அளவுக்கு 'சக்தி' உருவாகும். (அந்த கரண்டை கொஞ்சம் தமிழ் நாட்டு பக்கம் திருப்பி விட்டா நாங்க கொசு கடி இல்லாம நிமதியா தூங்குவோம்) அப்போது ஏற்படும் 'சப் அடாமிக் லெவல்' மாற்றங்களை இந்த 27 கி.மீ. வட்டத்தில் பொறுத்தப்பட்டு்ள்ள ஆயிரக்கணக்கான சென்சார்கள் அப்சர்வ் செய்து  அந்த விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர்களில் பீட் செய்ய திட்டமிட்டு உள்ளனர் கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது. அப்போது இருந்த சூழலை இந்த 27 கி.மீ. வட்டத்தில் உருவாக்கிப் பார்க்கப் போகிறார்கள்.அதாவது உலகம் எப்படி உறவானது என்று ஒரு ரிகர்சல் பார்க்க போகின்றார்கள். இதை சிம்பிளா சொன்னா வட்டில் அப்பம் வைக்க தெரியாதவக சும்மா நாலு முட்டைக்கு வட்டில் அப்பம் வைத்து பார்ப்பதுபோல்.

இந்த வளையத்தில் புரோட்டான்கள் என்ன வேகத்தி்ல் சுற்றி வரப் போகின்றன என்பதை இப்படி ஈசியாக சொல்லாம் ஒரு வினாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோட்டான் 11,245 முறை சுற்றி வரும்.அதாவது கருவாட்டு ஆன வாசத்துக்கு நம்ம  ஊர் பூனை அடுபங்கரையை  சுற்றி சுற்றி வருவதுபோல்  இந்த வளையத்தில் புரோட்டான்கள் சுற்றி சுற்றி வரும்.

இந்த அளவுக்கு வேகம் பிடித்த புரோட்டான்களை அப்படியே நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள். (காட்டு மாடுகள் அனிமல் சேனலில் முட்டிக் கொள்வதுபோல்) இப்போது புரிகிறதா. உள்ளே என்ன நடக்கப் போகிறது என்று. 

ஆக, LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை வட்டில் அப்பம் வைக்க முட்டை அடிப்பதுபோல் அடித்தால்  குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என புரோட்டான்கள் பலவாறாக அடித்து   சிதறடிக்கப்படும்   மேலும் Higgs Boson என்று ஒரு சமாச்சாரம்.உண்டு   ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதாக தியரியில் சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் இது வரை நிரூபித்ததில்லை.அறிவியலில்  எந்த  விசயமாக  இருந்தாலும்  நிருபிக்கப்படவேண்டும் (சும்மா வாயால் விடும் புருடாவிற்க்கெல்லாம் வேலை இல்லை) இதனால் இதை விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். அப்படி ஒன்று இருந்தால் இந்தச் சோதனை மூலம்  வெளியில் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் 5000 விஞ்ஞானிகள்  செயலில் இறங்கி உள்ளனர்   ஆனால், இது மிக ஆபாயகரமான ஆராய்ச்சி என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. (கூடங்குள  கதைதான் அங்கும் )உலகத்தின் கதையே முடியப் போகிறது என்று கூட சிலர் கெளப்பியும்  அவுத்தும்  விடுகின்றார்கள் 

இவ்வளவு வேகத்தில் சப் அடாமிக் அணுத் துகள்களை மோதச் செய்யும்போது பிளாக் ஹோல் (Black Hole) கூட உருவாகிவிடலாம் என்கிறார்கள். Black Hole என்பது நம் ஊரில் ஒரு  சஹன் சோத்தை ஒரே ஆள் உள்ளே தள்ளுவிட்டு மறு சோறும் கேட்ப்பாரே அதுபோல்  . உள்ளே போனால் போனது தான் எதுவுமே வெளியே வராது.. ஒளி-ஒலி உள்பட. (பிளாக் ஹோல் நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னி்க்கல் சமாச்சாரம். மண்டையை போட்டு ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். இப்ப மட்டும் என்னவாம் தெளிவாவா இருக்கு என்று பலரும் புலம்புவது காதில் விழத்தான் செய்கின்றது 

நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள்,கிழக்கு மண்டலம் மேற்கு மண்டலங்கள் அல்ல  அதாவது கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பம் (D.M.K.குடும்பம் அல்ல ) இருக்கும் மண்டலத்தின் பெயர் பால்வெளி மண்டலம்

பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான விஷயம்.  

ஒரு சிறிய பட்டாணிக்கடலை   சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், (அது என்ன நிலாக்கள் நிலா தானே என்று  கேள்வி வரும் அதாவது நமது பூமிக்கு ஒரு நிலாதான் மற்ற கோள்களுக்கு  நான்கு  ஐந்து நிலாக்கள்  எல்லாம் உண்டு நாம் ஒருநிலாவை வைத்துக்கொண்டு பாட்டும் கவிதையும் போட்டு தாக்குகின்றோம்  ). எரிகற்கள், சூரியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவைதான்  கேலக்சிகள்.

இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே பிளாக் ஹோல்களும்.

இதனால் தான் இந்த அதிவேக சப் அடாமிக் பிளப்பு சோதனை ஆபத்தானது... இதனால் பிளாக் ஹோல் உருவாகப் போகிறது.. அப்படி உருவானால் அது பூமியையே விழுங்கலாம் என்ற அச்சத்தை கிளப்பி விட்டுவிட்டார்கள் .

ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நடந்துவிடாது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தும் CERN மையத்தின் விஞ்ஞானிகள்.இதைத்தானே கூடங்குளத்திலும் நம் விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள் எந்த ஒரு நாட்டில்   விஞ்ஞானிகளும் பொது மக்களும் ஒத்து போகின்றார்களோ அந்த நாடுதான் முன்னேற்றத்தில் முன்னணியில் இருக்கும்.

இத்தனை பணம் செலவு செய்து உலகையே பணயம் வைத்து இந்த ஆராய்ச்சியை செய்யும் இவர்கள் இந்த அல் குரானின் சூராவை பார்க்காதது ஏனோ !!!!! 

7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

50:38   وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍ

50:38. நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை

57:4   هُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ ۚ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا  ۖ وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

57:4. அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்

Sஹமீது

சரி வாங்க நாம பேசுவோம் படங்களோடு ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | March 22, 2016 | , , ,

அதிரைநிருபரில் பேசும் படங்களோடு உறவாடிய தருணங்களை மீட்டெடுக்க அவ்வப்போது நினைவலைகளோடு அசைபோடவும் வேண்டியிருக்கிறது, வலைப்பூக்களின் வாசம் முகநூல் ஒப்பனைத் தோற்றத்திலும் அதன் வாசத்திலும் மயங்கிக் கிடக்கும் இளைய பழைய பழகிய சகோதரர்களை தூண்டில் போட்டு இழுக்க இன்னும் உழைக்கத்தான் வேண்டும்.

இருப்பினும், வேலைப் பளு கால ஓட்டங்களில் அன்றாட நிகழ்வுகளின் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும் சிக்கல்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் பொழுதுகளோடு நாட்களும் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது....

அதனால் என்ன !? எடுத்த பணியும் இணைந்த கூட்டணியும் சந்தர்ப்பவாதம் பேசாத சமயச் சூழலுக்கு ஏற்றவாறு ஒருங்கிணைத்து களமாடும் கம்பீரமான கூட்டணி இருப்பதால்... (தேர்தல் நேரமாதலால் பொருத்தருள்க).

சரி வாங்க நாம பேசுவோம் படங்களோடு!


பூங்காவில் பூத்திருப்பது பூக்கள் மட்டும் அல்ல மனிதர்களும்தான்


கலர் பார்க்க கண்ணாடி போடுவோம் இங்கே கண்ணாடியோ கலர்கலராக


கையில் சிக்காத இந்த கானகத்து மேகம் கேமராவில் சிக்கியது


பார்வையில் ரசனை இருந்தால்  பார்ப்பது எல்லாம் அழகாய் தெரியும் (படம் கடற்க்கரை மணல் சிப்பிக்கள் சிதறிக்கிடப்பது)


முல்லைப்பெரியார் பார்ப்பதற்கு கொள்ளைப்பிரியமாய் இருக்கும்


இப்படி எல்லாம் இயற்கையை ரசிப்பதற்கு "குடுப்பினை" வேண்டும்

Sஹமீது

பேசும்படம் - தொடர்கிறது.... 7

அதிரைநிருபர் பதிப்பகம் | January 11, 2016 | , , ,

நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு இனி தொடர்ந்து பேசும்படம் இடம் பெற இருக்கிறது இன்ஷா அல்லாஹ் !


இது  காயா பூவா?


உயரினங்கள் அனைத்திற்கும் இரை தேடும் அறிவை வழங்கிய அந்த இறைவனை என்றென்றும் மறக்க முடியாது


அருவியின் மறு பெயர் அழகோ


மலையும் மழைச்சாரலும் பார்த்தால் மனதுக்குள் சந்தோசமே


அச்சு அசல் இந்த போட்டோவை போல் அபூ இப்ராகிம் ஒரு போட்டோ எடுத்து இருந்தார். இந்த ஒற்றுமையை என்ன வென்று சொல்வது


பல்லை புடிங்கிருவேன் என்று யாரவது நாக்குலே பல்லைப் போட்டு சொல்ல முடியும்மா

Sஹமீது

பேறு பெற்ற பெண்மணிகள் - அரஃபா நாள் ஸ்பெஷல் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | September 23, 2015 | , , , , ,

மக்களுக்கேற்ற மார்க்கம்

"அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! கபீரா! லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்! வ லில்லாஹில் ஹம்து!"

இப்படி, மக்காவின் 'அரஃபாத்' பெருவெளியில் அனைத்துலகக் காப்பாளன் அல்லாஹ்வைப் பெருமைப் படுத்திப் புகழ்ந்தும் அவனது அருள்வேண்டி அபயக்குரல் எழுப்பியும் ஹஜ்ஜுப் பயணிகள் ஒரே குரலில், ஒரே மொழியில் எழுப்பிய ஓசை, மேலை நாட்டுச் சகோதரி ஒருவரின் இதயத்தை உருகச் செய்தது என்றால், அதன் காரணம் யாது?

"இறைவனின் இறுதித்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தை இது நினைவூட்டுகின்றது, ஹஜ் எனும் புனிதப் பயணத்தின் இறுதியும் உச்ச கட்டமுமாகிய 'அரஃபாத்'தில் அனைவரும் ஒன்று கூடும் இத்தருணத்தை விடப் பொருத்தமான வேறு அனைத்துலகச் சமாதான ஒன்றுகூடல் எங்கேனும் உண்டா ?"

"கருப்பர், வெள்ளையர், மஞ்சள் நிறத்தவர், மாநிறங் கொண்டோர், அரசர்கள், ஏழைகள், பணக்காரர்கள் - அனைவருமே ஒரே உடையில், ஒரே குரலில், ஒரே இறைவனைப் புகழ்ந்து இறைஞ்சும் புனிதக் கூட்டமைப்பன்றோ இது?!?

"மனிதர் அனைவரும் அமைதியை, சமாதானத்தை விரும்புகின்றனர். அது உண்மையில் இங்கல்லவா கிடைக்கின்றது?! இதைவிடப் பொருத்தமான தருணம் வேறு என்ன இருக்கிறது?"

இவைதாம், அப்போது பேறு பெற்ற பெண்மணியின் இதயக் குரல்கள்.




அது 1931ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் அரச பதவி வகிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த செல்வி ஐரீன் ஜேன் வென்டவொர்த் ஃபிட்ஸ்வில்லியம், மதங்களின் ஒப்பீட்டுக் கல்வி (Study of Comparative Religions) பயில்வதற்காக எகிப்துக்குப் பயணமானார்.

அங்கே சென்று படிப்பைத் தொடங்கிய சில நாட்களிலேயே, இஸ்லாம் எனும் உண்மை மார்க்கம் இவரது இதயத்தை ஈர்த்தது. அதே ஆண்டிலேயே முஸ்லிமாக மாறி 'ஆயிஷா' என்ற பெயரைச் சூட்டிக் கொண்டார்!

1935ஆம் ஆண்டு ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றினார் ஆயிஷா, ஹஜ்ஜில் காணப்படும் அனைத்துலக ஒற்றுமை உணர்ச்சியைக் கண்டு வியந்து அடிக்கடி கூறுவார் ஆயிஷா. தன் தங்கை எவலினுக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்து, அவரை இஸ்லாத்தை தழுவச் செய்தார்.

அண்ணல் பெருமானார்(ஸல்) அவர்களின் அழகான அறிவுப் பூர்வமான - துணிவான உண்மை மார்க்கப் பிரச்சாரத்தைப் பற்றி அடிக்கடி வியந்துரைப்பார் ஆயிஷா.

"எனது தாய்நாட்டு மக்களுக்குத் தேவையான அவர்கள் பின்பற்றத் தகுந்த துணிவு, நேர்மை, கழிவிரக்கம், அநீதியிழைத்தோரை அற்புதமாக மன்னிக்கும் தன்மை ஆகிய அனைத்தும் அப்பெருமகனாரிடம் குடிகொண்டிருந்தன. அவர்களிடம் இயல்பாக அமைந்திருந்த துணிவும், வல்ல இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுமே, அவர்களை வெற்றிக் கொடி நாட்டச் செய்தன எனக் கூறினால், அது மிகையாது.

அந்த இறுதித் திருநபி அவர்கள்தாம் முதன்முதலாக எம் பெண்களின் சமூகத் தகுதியையும் மதிப்பையும் உயர்த்தியவர். இன்று கூடச் சில ஐரோப்பிய நாடுகளில் காணக் கிடைக்காத பெண்ணுரிமையினை 1400 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் இந்த நபியவர்கள்தாம்!

அயர்லாந்தின் அரச குடும்பக் கோட்டையைத் துணிவுடன் திறந்து வந்து, இஸ்லாமிய இன்பச் சோலையில் புகுந்த ஆயிஷா வென்டவொர்த் ஃபிட்ஸ்வில்லியம் பேறு பெற்ற பெண்மணிகளுள் ஒருவர்தானே!
இது ஒரு மீள்பதிவு
அதிரை அஹ்மது
புகைப்படங்கள் : Sஹமீது
ஹஜ் - பேசும் படங்கள்









Sஹமீது

பேசும் படம்.. தொடர்கிறது ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | September 09, 2015 | , , ,

இன்றைய காலகட்டத்தில் ஆளாளுக்கு செல்ஃபி எடுத்து  பேசாத படங்களை எல்லாம்  பேசும் படங்களாக போட்டதும் அதிரைநிருபரின் ஆஸ்தான புகைப்பட கலைகர் அமைதியாய் இருந்து விட்டாரே அவருக்கு சரக்கு தீர்ந்து போய் விட்டதோ என்று  யாரும் எண்ணி விடவேண்டாம் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தியதால் அதிரைநிருபரில் கொஞ்சம் கவனம் செலுத்த முடியாமல் போய் விட்டது இன்ஷா அல்லாஹ்  இனி  இரண்டிலும் கவனமாக கவனம் செலுத்த முயற்சி செய்கின்றேன்.


நாங்களெல்லாம் சின்ன பசங்களா இருந்தப்ப தும்பி பிடிக்க அலையாத இடம் கிடையாது இந்த  காலத்து `தம்பி`களுக்கு அதுகெல்லாம் குடுப்பினை இல்லை 


இது  கிட்டாப் பார்வையா?  அல்லது எட்டப் பார்வையான்னு ? கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்க 


கூட்டு குர்பானிக்கு வசமான மாடு 


ஒரு  பூச்சி பல்லு கூட  இல்லை என்ன பேஸ்ட் போட்டு பல் விலக்குதோ ?


ஆங்கிலலேயர்கள்  ஆட்சி காலத்தில் கட்டிய கட்டிடம் சுதந்திர இந்தியாவில் எலும்பு கூடாய் தற்போது நிற்கின்றது (இடம் தனுஷ்கோடி) 


இது என்ன கரசேவகர்களின் கயவாளித்தனமா? இல்லை இல்லை கடல் காற்றின் சீற்றம் (இடம் தனுஷ்கோடி) 


போட்டோ எல்லோரும் எடுத்துவிடலாம் ஆனால் ஆங்கில் பார்த்து போட்டோ எடுப்பது தான் ரொம்ப முக்கியம் 


அறிவியையும் அதன்  நீர் சாரலையும்  ஒருசேர போட்டோ எடுக்கணும் என்ற ஒரு முயற்சியின் விளைவே இந்த போட்டோ 


மூனாரின் முதுகெலும்பே இந்த  ரோடுதாங்க! 

Sஹமீது

ஃபோட்டோ ஃபெஸ்டிவல் ! - பேசும் படம் தொடர்கிறது... 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 24, 2015 | , , , , ,


நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அப்படியே ஊர்பக்கம் நெனப்பை சுற்ற விட்டேன். அட ! நம்ம தலைப்பு ! 'ஃபோட்டோ ஃபெஸ்டிவல்' ன்னு வச்சுடலாமேன்னு முடிவு செய்துட்டேங்க. இங்கே ஆட்டம் பாட்டம் என்று எதுவும் இருக்காது உத்திரவாதம் தருகிறேன். ஆனால் பின்னூட்டம் இருக்கும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.


எப்போது ஊருக்கு போனாலும் ஒரு பசுமை காட்சியை சுட்டு அதிரை நிருபருக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நோக்கில் சுட்டதுதான் இந்த பசுமைக் காட்சியமைப்பு. 


மனிதனின் சாதனைகளில் இதுவும் ஒன்று. பிரமாண்ட மிருகத்தை பிடித்து வந்து பிச்சை எடுக்க பழக்கிக் கொடுத்து மட்டுமல்லாமல் அதற்கு சமய சாயமும் பூசி விட்டார்கள்.
 

MSM 'மின்' ஆதங்கத்தை போக்கவே இந்த சிட்டுக்குருவி போஸ்.


அந்தக்காலத்து டெக்னாலஜி இந்தக்காலம் வரை தாக்கு 'பிடி'க்கின்றது  இன்னும் ஆச்சர்யமே !


இந்த பாம்பன் பாலத்தில் ரயில் செல்வதை பார்த்தால் அண்ணன் NAS அவர்களின் நினைவு வரும் காரணம் இந்த பாலத்தில் ஓடும் இரயிலில் நான்  முதன்  முதலாக அண்ணன் NAS கூட பயணம் செய்தது (ஆனால் இந்த ரயில் அல்ல).


நாங்கள் மீனுக்கு வலை வீசுகின்றோம் எங்களுக்கு சிங்கள கடற்படை வலை வீசுகின்றது (உலகில் இந்திய ராணுவம் நான்காவது இடத்தில் இருக்காமே உண்மையா ?).


மாதத்தில் ஒரு நாள் இது போன்ற இடத்தில் ஒரு பொழுதை தனிமையில் கழிக்க வேண்டும் (மொபைல் போன் இல்லாமல் )


பூனே முன்பெல்லாம் "பசுமை" பள்ளத்தாக்காக இருக்கும். ஆனால், இப்போது வெறும் பள்ளத்தாக்காய் இருக்கிறது.


நான் எந்த கட்சியிலேயும் இல்லீங்க, இது எதார்த்தமா எடுத்த படமுங்கோ !


பலா பழத்தில் "ஈ மொய்ப்பது போல் என்ற பழமொழியை மாற்றி பலா பழத்தில் எறும்பு மொய்ப்பது போல் என்று மாற்றிவிட வேண்டியதுதான் இதுக்கப்புறம். 

Sஹமீது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு