தூசு கூடி காற்று யெல்லாம்
மாசு பட்டுப் போகும்
காசு டைத்த ஆளின் சொற்கள்
பேசு பொருள் ஆகும்

ஏசு புத்தன் காந்தியெல்லாம்
பூசு மூடு என்றாகும்
பாசு கெட்டு பாசம் நேசம்
லேசு பட்டுப் போகும்
ஓஸோன் ஓட்டை விசாலமாகி
உஷ்ணம் ஏறிப் போகும்
பூமிப் பந்து பொரித்துவைத்த
'பூரி' போல வேகும்
துருவப் பகுதி உருகிஉருகி
பருவம் மாறிப் போகும்
கடலின் மட்டம் பெருகிபெருகி
கரையை அலைகள் தாவும்
போக்குவரத்து நெரிசல் கூடி
பயண நேரம் நீளும்
பாதி மனிதப் பழக்கவழக்கம்
வாகனத் துள் வாழும்
இயற்கை உணவு பஞ்சமாகி
இதயம் கெட்டுப் போகும்
செயற்கை தீனி தின்றுதின்று
சீக்குப் பிணி கூடும்
தேவைகளும் கூடிப் போக
சேவை நோக்கம் குறையும்
மனசாட்சி மடிந்து போய்
பணத் தாட்சி நிறையும்
உழைப்பின்மேல் நாட்ட மின்றி
ஊரும் கொள்ளைப் போகும்
கொடுத்துதவும் குணம் குன்றி
குற்றத் தொல்லைக் கூடும்
ஏற்றத் தாழ்வு மலிந்து மனிதம்
நாற்ற மாக நாறும்
போற்றத் தக்க தலைவன் இல்லா
தோற்ற கூட்டம் மாளும்
கற்ற கல்வி மறந்துபோக
பெற்ற அறிவு விரயம்
மற்ற எந்த விலங்கைப் போலும்
சுற்ற மின்றிப் போகும்
சோர்ந்து தோற்கும் முன்பதாக
கூர்ந்து எண்ணிப் பார்த்தால்
தேர்ந்த நெறி ஒன்றைத் தேடி
தாகம் கொள்ளும் மனிதம்
ஒற்றை இறைக் கொள்கை தனில்
ஒருங்கி ணைந்தால் மட்டும்
ஈருலக வாழ்க்கை யிலும்
மனிதம் மிக்க நிலைக்கும்
-சபீர்
மாசு பட்டுப் போகும்
காசு டைத்த ஆளின் சொற்கள்
பேசு பொருள் ஆகும்

ஏசு புத்தன் காந்தியெல்லாம்
பூசு மூடு என்றாகும்
பாசு கெட்டு பாசம் நேசம்
லேசு பட்டுப் போகும்
ஓஸோன் ஓட்டை விசாலமாகி
உஷ்ணம் ஏறிப் போகும்
பூமிப் பந்து பொரித்துவைத்த
'பூரி' போல வேகும்
துருவப் பகுதி உருகிஉருகி
பருவம் மாறிப் போகும்
கடலின் மட்டம் பெருகிபெருகி
கரையை அலைகள் தாவும்
போக்குவரத்து நெரிசல் கூடி
பயண நேரம் நீளும்
பாதி மனிதப் பழக்கவழக்கம்
வாகனத் துள் வாழும்
இயற்கை உணவு பஞ்சமாகி
இதயம் கெட்டுப் போகும்
செயற்கை தீனி தின்றுதின்று
சீக்குப் பிணி கூடும்
தேவைகளும் கூடிப் போக
சேவை நோக்கம் குறையும்
மனசாட்சி மடிந்து போய்
பணத் தாட்சி நிறையும்
உழைப்பின்மேல் நாட்ட மின்றி
ஊரும் கொள்ளைப் போகும்
கொடுத்துதவும் குணம் குன்றி
குற்றத் தொல்லைக் கூடும்
ஏற்றத் தாழ்வு மலிந்து மனிதம்
நாற்ற மாக நாறும்
போற்றத் தக்க தலைவன் இல்லா
தோற்ற கூட்டம் மாளும்
கற்ற கல்வி மறந்துபோக
பெற்ற அறிவு விரயம்
மற்ற எந்த விலங்கைப் போலும்
சுற்ற மின்றிப் போகும்
சோர்ந்து தோற்கும் முன்பதாக
கூர்ந்து எண்ணிப் பார்த்தால்
தேர்ந்த நெறி ஒன்றைத் தேடி
தாகம் கொள்ளும் மனிதம்
ஒற்றை இறைக் கொள்கை தனில்
ஒருங்கி ணைந்தால் மட்டும்
ஈருலக வாழ்க்கை யிலும்
மனிதம் மிக்க நிலைக்கும்
-சபீர்