Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை உலா – 2012 37

அதிரைநிருபர் பதிப்பகம் | December 31, 2012 | , ,


இரண்டாயிரத்து பன்னிரண்டாம் வருடம் விடைபெறும் விளிம்பில் இருக்கிறது, அதனை விடை கொடுத்து அனுப்பும் முன்னர் சென்ற வருட உலகம், சென்ற வருட இந்தியா என்றெல்லாம் பல்வேறு ஊடகங்களிலும் கண்டு வருகிறோம். அவைகளயெல்லாம் விடுத்து நாமும் 2012ம் வருடத்தில் அதிரையின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காண்போம்.

1. 2012ம் வருட துவக்கத்தில் இமாம் ஷாஃபி பள்ளியில் அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து மாணவ மாணவிகள் சார்பாக அறிவியல் சார்ந்த படைப்புகளை உருவாக்கி காட்சிப் படுத்த கோரப்பட்டு சிறப்பாக செய்து பரிசும் வழங்கப்பட்டது. ஆனால் இவ்வாக்கத்தில்  பெரும்பாலும் பிள்ளைகளை விட பெற்றோர்கள் தங்களது பள்ளிக்காலங்களில் தவறவிட்ட அல்லது ஏங்கிய கிரியேட்டிவிட்டியின் பங்கே அதிகம் காணப்பட்டது என்பது ஒரு பேசு பொருளாக இருந்தது.


2. அதிரையின் மதுக்கூர் ரோட்டில் கயிறு தொழிற்சாலை தீக்கிரை, ஏரிப்புரக்கரை சாலையில் வீடு எரிந்தது, CMP லைன் அருகே மாடியின் கூரை எரிந்தது போன்ற தீ வீபத்து போன்ற  சம்பவங்கள் நடந்தவாறே இருக்கின்றன. இவைகளை பார்க்கும்போது ஊருக்கு தீயணைப்பு நிலையம் தனியாக தேவை என்பதன் அவசியம் புலப்படுகிறது.


3. மார்ச் 5 முதல் அதிரையில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை அமுலுக்கு வந்தது. ஆனால்  பிளாஸ்டிக் உபயோகிக்க  இலகுவாக இருப்பதாலும் சிலர் பேரூராட்சி ஆளுமையுடன் ஒத்துப் போகாததாலும் முழுமையான தடைக்கு தடைக்கல்லாக இருந்து வருகிறது.


4. அதிரைக்கென்று அத்தியாவசிய போக்குவரத்துகளில் ஒன்றாகிய அகல ரயில் பாதையின் அவசியத்தை கருதி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆரம்ப காலத்திலிருந்தே போராடிவரும் 'அதிரை ஜாஃபர் காக்கா அவர்கள் வழக்கு தொடுத்தார்கள். 

5.மேலும் ரயிலின் அத்தியாவசியத்தை  காரைக்குடியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் இல்லத்தில் இமாம் ஷாஃபி பள்ளியின் தாளாளர் M.S.T.தாஜுதீன் , M.K.N.டிரஸ்ட் அன்றைய தாளாளர் அஸ்லம், அதிரை பேரூராட்சி மன்ற தலைவர் அஸ்லம் , CHASECOM அப்துல் ரஜாக், இன்னும் முக்கிய பிரமுகர்கள் ஒன்றாக சென்று வலியுறுத்திக் கூறி,  அதிரை ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேஷன் ARDA சார்பாகவும், அதிரை பேரூராட்சி தலைவர்  சார்பாகவும்,கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது மத்திய ரயில்வே அமைச்சரிடம் இது தொடர்பாக தாம் எடுத்து சொல்வதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.


6. சித்தீக் பள்ளிக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய வழிப்பாதையை அடைத்து சுவரெழுப்பி தென்னை நட்டு அது பள்ளிக்கே சொந்தமென அங்கே தென்னை ஒருபுறம் வளர, மறுபுறம் வழக்கும் நடந்து வருகிறது.


7. கடந்த ஜூனில் மாட்டுக்கறி சமாச்சாரம் விசுவரூபம் எடுத்தது. இதில் அரசியலே பின்னணியாக இருந்து நானா நீனா இழுபறி நீடித்து ஒரு மாதிரியாக மெளனமாகிப் போனது மேட்டர்.


8. புரிந்துணர்தலில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் / தவறால் பல வருடங்களாக ஆய்சா மகளிர் அரங்கில் நடைபெற்ற ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயான் ஆகஸ்ட் முதல் அங்கு நிறுத்தப்பட்டு வேறிடத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. 

9. அக்டோபர் முதல் MKN டிரஸ்ட் மற்றும் காதிர் முகைதீன் கல்வி ஸ்தாபன மேலாண்மை K.S  சரபுதீன் அவர்கள் தலைமைக்கு வந்தது.

10. நவம்பர் முதல் காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வராக வணிகவியல் துறை பேராசிரியர் ஜலால் அவர்கள் பதவியேற்றார்.

11. மேலும் காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் திருமதி ரோசம்மாள் அவர்கள் ஓய்வு பெற்றதையடுத்து நமதூரைச் சார்ந்த மஹபூப் அலி அவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரக பதவி ஏற்றார்கள்.

12. அமெரிக்க காரன் ஒருவன், கடந்த செப்டம்பரில்  நமது உயிரினும் மேலான நபி(ஸல்)அவர்களை பற்றி தவறாக படம் எடுத்து வெளியிட்டதை எதிர்த்து உலகமே எதிர்ப்பில் அங்கமாக அதிரையிலும் போராட்டம் பிரமாண்டமாய் நடந்தது.


13.கடந்த ரமலான் பெருநாளிரவில்  பொறுப்பற்ற ஊடகங்கள் சில பெண்கள் பயன்படுத்தும் மருதாணியால் பலர் மயக்கம் மரணம் என ..... நியூஸ் போட்டு பீதியை கிளப்பி இஸ்லாமிய புனிதநாளில் பரபரப்பை ஏற்படுத்த முயன்று தன் வக்கிர புத்தியை காட்டின. இதனால் அன்று அதிரையிலும் இது பற்றி பரபரப்பாக பேசப்பட்டது.


14.இன்னமும் அதிரையின் பல சாலைகள் பிரதான சாலை உட்பட மண்சாலைகளாகவே உள்ளன. கருஞ்சாலைகளாக கண்ணில் படும் காலம் என்று வருமோ!


15. கடந்த மே மாதம் நடந்த கந்தூரி போதையர்களின் ஊர்வலத்தில் தக்வா பள்ளி வழியாக  தொழுகை நேரத்தில் வழக்கமான முழக்கங்களுடன்  ஊர்வலம் கடப்பதைக் கண்ட சகோதரர் அஹ்மது ஹாஜா, ஊர்வலத்துக்கு பாதுகாப்புக்காக வந்திருந்த நமதூர் இன்ஸ்பெக்டர் செங்கமலக் கண்ணனிடம் தக்வாப் பள்ளிக்குப் பின்புறம் நின்றிருந்த நமதூர் இன்ஸ்பெக்டர் செங்கமலக் கண்ணனிடம் சென்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அங்கிருந்து அகன்று மேள-தாளக்காரர்களிடம் சென்று பாட்டு-தாளங்களை நிறுத்துமாறு சொல்வதற்காகச் சென்றுவிட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட கந்தூரி போதையினரால் சகோதரர் அஹ்மது ஹாஜா கடுமையாக தக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


16.கடந்த பிப்ரவரியில் முத்துப்பேட்டையில் ரயில்வே சம்பந்தமாக போராட்டம் நடப்பதாக கூறி பிரபல ஒரு அமைப்பினர் அதிரை ஆள்களை திரட்டி அங்கு கலந்து கொள்வதற்காக முயற்சித்தபோது ஏற்பட்ட கட்சி வேறுபாடுகளை கண்ட மர்ம நபர்களால்  சகோதரர் முகம்மது தைய்யுப்  தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

17. 80 வருசத்துக்கு மேலாக அதிரையில் ஓடிய ரயில் கடந்த அக்டோபரில் நிறுத்தப்பட்டு இன்று அகலபாதையுடன் ரயிலே வருக என காத்துக் கிடக்கிறது. இன்ஷா அல்லாஹ் அதுவும் வரும் என் நம்புவோம்.

18.ஜனாஸாவிற்காக குழிவெட்ட நம் பகுதியில் ஏற்பட்ட ஆள் தட்டுப்பாட்டால் பீகாரில் இருந்து 3 பேரை தருவித்து அதிரை ஆல் முஹல்லா அமைப்பு நிர்வகித்து வருகிறது.

இன்னும்  வாகன விபத்து, மின்சார விபத்து, கத்தி குத்தால் கொலை என்பதல்லாமல் பெண் உட்பட தற்கொலை செய்து கொண்டதை பார்க்கும் போது அதிரையின் நிலையில் வேதனையே மிஞ்சுகிறது.


19."அதிரை எக்ஸ்ப்ரஸ்" சார்பில் கல்வியை ஊக்கப் படுத்துவதற்காக விருது அறிவிக்கப்பட்டு சிறப்பு பரிசுகள் அறிவித்து அதன்படி  வழங்கி அதிக மதிப்பெண் பெற்றவர்களை கெளரவித்தது.


20.அதிரையில் வீடும், கட்டிடங்களும் வளர்ந்த வண்ணமாகவே உள்ளன. அதில் ஒன்றாக காவல்நிலையத்துக்கே அரணாக நிற்கும் ஒரு கட்டிடத்தின்  காட்சி இது.


21. "அதிரை நிருபர்" சார்பாக அதிரை பதிப்பகம் என்ற பெயரில் பதிப்பகம் அமைத்து மேதகு இப்ராஹிம் அன்சாரி காக்கா எழுதி தொடராக வந்த "மனு நீதி மனித குலத்துக்கு நீதியா?" எனும் தொகுப்பு முதன் முதலாக  புத்தகமாக வெளியிட்டு சாதனை படைத்தது. இன்னும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் என நம்பலாம்.


22. அதிரையில் தனியார் மருந்தகம் ஒன்று புதுப்பொலிவுடன் தலைநகர் ரேஞ்சுக்கு காட்சி அளிப்பது அதிரையின் வளர்ச்சியை காட்டுகிறது.


23. சுமார் 573 ஆண்டுகளுக்கு முன் காலஞ்சென்ற மனிதர் ஒருவரின் இஸ்லாம் அனுமதிக்கப்படாத கல்லரையின் அறைப்பகுதியில் பூட்டப்பட்ட புகை மண்டலத்தில் அறியாமையால் சிக்கி அநியாயமாக குடும்பஸ்தர் ஒருவர் மரணம் சம்பவித்த  கல்லரை பகுதி இது.


24. ஒருபுறம் பல குளங்கள் வெற்று கிடக்க மறு புறம் பிலால் நகர்புறங்களில் வெள்ளம் புகுந்து அங்கு வாழ் மக்களை அல்லலுக்கு உட்படுத்தியது.


25. அதிரை தாருத் தவ்ஹீத் புதிய தர்பியா மையம் ஒன்றினை பிலால் நகரில் நவம்பர் மாதம் துவங்கியது, அதில் தொடர்ந்து காலை மாலை இரண்டு நேரங்களும் வகுப்புகள் சிறப்புடன் நடந்து வருகிறது. வாரம் ஒருமுறை பெண்கள் தொடர் பயானும் நடைபெற்று வருகிறது.


26. அதிரைநிருபர் வலைத்தளம் பள்ளிகளுக்கு இடையே நடத்திய மாணவ மாணவிகளுக்கான வினாடி வினா போட்டி பெரும் வரவேற்பை பெற்றது. சிறம்ப்பசமாக இனிவரும் காலங்களில் இது தொடர்ந்து நடத்தப்படும் என்று அவர்கள் அறிவித்தது.

மேலும் சுகாதாரக்குறைவால் டெங்கு காய்ச்சல் போன்ற கிருமிக் காய்ச்சல்கள் அதிரை மக்களை ஒரு வழியாக படுத்தி எடுத்து விட்டது. 

தமிழகமே இருளில் மூழ்கிக் கிடக்க, நான் மட்டும் என்ன விதி-விலக்கா என அதிரையும் மற்ற பிற ஊர்களை விட அதிகமான இருளை அதிக நேரம் தழுவிய வண்ணமாகவே இருந்ததும் அதுவே இன்றளவுக்கும் தொடர்கிறது.

இனிவரும் அதிரை காலங்கள் இனிமையாகவே இருக்க நம்புவோம். இன்ஷா அல்லாஹ்! 

M.H. ஜஹபர் சாதிக்


டெல்லி மாணவி கற்பழிப்பு - யாருக்கு தண்டனை !? 35

அதிரைநிருபர் | December 30, 2012 | , , , , ,

டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தால் சிகிச்சை பலனின்றி உயிர் பலியான பெண் அமானத் பற்றிய செய்தியே தேசிய மற்றும் உலகம் தழுவிய செய்தி ஊடகங்களில் இதுவே கடந்த இரண்டு நாட்களாக தலைப்பு செய்தி!

அந்த கற்பழிப்பு கொடூரத்தை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கோஷங்கள் கடந்த இரண்டு வாரமாக இந்திய ஊடங்களின் ஒளி, ஒலிகளில் மின்னிக் கொண்டிருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே!.

TRIBUTES TO INDIA’S DAUGHTER, INDIA DAUGHTER REST IN PEACE, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பலி. ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர், தி.மு.க. தலைவர் என்று வரிசைப் பிரகாரம் இரங்கல். டெல்லி மாணவி கற்பழிப்பு தொடர்பான செய்திகளை இணையத்தில் வாசிக்க நேரிட்டதில் பெரும்பான்மையான ஊடக தளங்களின் பேனர்களாக மேல், கீழ், இடது, வலது, புறங்கள் பெண்களின் ஆபாச படங்கள் நிறைந்ததாகவே உள்ளது. தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையை கிள்ளி விளையாடும் இது போன்ற ஊடகங்களுக்கு என்ன தண்டனை?

பொதுமக்கள் பார்ப்பதற்கென(?) எடுக்கப்படும் சினிமாக்களில் கற்பழிப்பு, விபச்சாரம், ஆபாச காட்சிகளுடன் வயது வித்தியாசமின்றி காம இச்சையை தூண்டும் காட்சிகளை எடுக்கும் சினிமாகாரர்களுக்கு என்ன தண்டனை?

பெரும்பாலான கற்பழிப்பு குற்றங்களுக்கு காரணமாக இருப்பது மது என்பது ஒட்டுமொத்த மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் வருடத்திற்கு தமிழகத்தில் மட்டும் 27,000 கோடி ரூபாய் டாஸ்மார்க்கிலிருந்து வருமானம் வருகிறதாம்(!!!). தமிழ்நாட்டில் குடிகாரனின் சராசரி வயது 13. ஏராளமான பாலியல் வன்முறைக்கு காரணம் இந்த மதுவே. கேடுகெட்ட இந்த மதுவை வைத்து கடைவிரித்து வருமானம் பார்க்கும் ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?

பொது இடங்களிலும் அரைகுறை ஆடைகளை அணிந்து ஆண்களின் காமப் பார்வையில் சிக்கி கற்பழிக்கப்பட்டட பின்னர், நான் எந்த ஆண் நண்பனோடும் சுற்றுவேன், நான் எவ்வகை ஆடை (ஆபாச அரைகுறை உடையானாலும்) அணிய வேண்டும் என்பதை தீர்மானிப்பது என்னுடைய உரிமை என்று போலி பேராட்டங்கள் நடத்தி பெண் சமூகத்தை கேவலப்படுத்தி வழிகெடுத்துவரும் போலிப் பெண்ணுரிமை காவலாளிகளுக்கு என்ன தண்டனை?

இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனால், இந்தியாவில் பெண் சுதந்திரம், பெண்ணுரிமை பற்றி பேசும் போலிகளான எவனுக்கும் / எவளுக்கு அறுகதையில்லை. இஸ்லாத்தை முறையாக கடைப்பிடித்துவரும் முஸ்லீம்களை தவிர.

டெல்லி பாலியல் வன்முறை தொடர்பாக “பெண்களுக்கு இரவு நேரத்தில் ஊர் சுற்றுவதால் இது போன்ற அசம்பாவிதம் நடைபெறுகிறது” என்று 3 பெண் பிள்ளைகளை பெற்றவர் என்ற முறையில் நியாயமான கருத்தை தெரிவித்த ஆந்திராவை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு எதிராகவும், கற்பழிப்புக்கு எதிராக போலிப் பேராட்டம் நடத்தி வருபவர்களைக் கடுமையாக சாடிய இந்திய குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜியையும் காமவெறியைத் தூண்டும் ஊடகங்கள் பொங்கி எழுந்து கண்டனங்களால் தங்களின் போலிப் பெண்ணுரிமை ஆதரவை காட்டினார்கள்.

இஸ்லாத்தை அறியாத அல்லது விமர்சிக்கும் பிறமத சகோதர சகோதரிகளே..! இது போன்ற கற்பழிப்பு வன்முறைகளும், சீர்கேடுகளும் தொடராமல் இருக்க, பெண்களுக்கு மரியாதையை, கண்ணியத்தை கொடுங்கள். அவர்களை அரை நிர்வாணத்துடன் மேடையிலும், திரையிலும், தொலைகாட்சிகளிலும் ஆட விட்டு உங்களின் காம பசியை தீர்த்துக்கொள்ள உதவும் காட்சிப் பொருளாக அவர்களை பயன்படுத்தாதீர்கள். செய்த குற்றத்திற்கு ஏற்ற உடனடி தண்டனையும், அது நிகழ்வதற்கு காரணமாக அமைந்த காரணிகளை கண்டறிந்து கலைந்து எறிவதுதான் மக்களுக்கும் பொறுப்பில் இருக்கும் அரசுக்கும் உள்ள தலையாய கடமை. கடும் சட்டங்களால் மட்டுமே பாலியல் குற்றங்களை குறைக்க முடியாது, இஸ்லாம் நிலைநாட்டிய இஸ்லாமிய திட்டங்களால் பாலியல் குற்றங்களை அடியோடு குறைக்கலாம் இன்ஷா அல்லாஹ்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் டைக் கட்டுப்பாடு - (திருக்குர்ஆன் 24:31, 33 :59).

பாலியல் வக்கிரத்தைத் தூண்டக்கூடிய செயல்களின் பக்கம் நெருங்கத் தடை - (ஹதீஸ் மற்றும் திருக்குர்ஆன் 17:32).
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பொழுக்கம், சுய பார்வைக் கட்டுப்பாடு  - (திருக்குர்ஆன் 24:30,31).
பத்து வயதுக்கு மேல் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் பிரித்துப் படுக்க வைத்தல் - (ஹதீஸ்).
இரு பாலர்க்கும் கட்டாயக் கல்வி - (ஹதீஸ்).
பெண்கள் உரிய ஆண் துணையின்றி நீண்ட பயணங்கள் மேற்கொள்ளத் தடை - (ஹதீஸ்).
அந்நிய ஆண்களும் பெண்களும் இருபாலரும் இணைந்து சரளமாகப் பழகுவதற்குத் தடை -  (திருக்குர்ஆன் 24:27, 33: 55).
அந்நிய ஆண்களோடு பெண்கள் குழைந்து பேசத் தடை- (திருக்குர்ஆன் 33:32).
வயது வந்த அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருக்கத் தடை - (ஹதீஸ்)
வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய காலத்தில் விரைவாகத் திருமணம் -(திருக்குர்ஆன் 24:32 மற்றும் ஹதீஸ்)
மணப்பெண்ணின் சம்மதமின்றி மணமுடிக்கத் தடை (திருக்குர்ஆன் 17:31)
வரதட்சணைக்குத் தடை, பெண்ணுக்கு மணக்கொடை (மஹர்) கொடுக்க கட்டளை (திருக்குர்ஆன் 4:4, 17:31)
குடும்பத் தலைமையும் பொருளாதார சுமையும் ஆண் மீது கடமை,.  குடும்ப நிர்வாகம் பெண் மீது கடமை, பொருளாதாரச் சுமை மீது அல்ல. (திருக்குர்ஆன் 4:34 மற்றும் ஹதீஸ்)
கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறினால் கசையடி (திருக்குர்ஆன் 24:4  )
இந்த வரம்புகள் அனைத்து மனிதனால் உருவாக்கபட்டதல்ல, இது  அகிலத்தின் அதிபதி இறைவனால் வகுக்கப்பட்டது.

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை அமுல்படுத்தியிருக்கும் நாடுகளில் கற்பழிப்பு பேன்ற குற்றங்கள் மிகக் குறைவு என்பது உலகம் அறிந்ததே.
பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்த்தால்தான் தெரியும் அந்த குற்றத்திற்கு எவ்வகை தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று. இஸ்லாமிய குற்றவியல் தண்டனைச் சட்டம் மட்டுமே இதுபோன்ற பாலியல் குற்றங்கள் குறைய மிகச் சரியான தீர்வு.

சிந்தீப்பார்களா வீதியிறங்கியிருக்கும் பெண்ணுரிமை பேரியக்கவாதிகளும், அறிவுஜீவிகள் என்று சொல்லித் திரியும் கேடுகெட்ட பிற்போக்கு சிந்தனையுடைய பெண்ணுரிமைக் காவலாளிகள் (?) அவர்களுக்கு துணைபோகும் அரசியல் வாதிகளும்!?

அதிரைநிருபர் பதிப்பகம்

நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது.... 20

அதிரைநிருபர் பதிப்பகம் | December 30, 2012 | ,

குறுந்தொடர் : 2

அவர் போட்ட “குண்டு” வேற ஒன்னுமில்லை “நீங்க அப்ளிகேஷனை கையில் எழுதி இருந்தா மட்டும் பத்தாது, ஆன் லைனில் டைப்செய்துவிட்டு அந்த பிரிண்ட் அவுட்டை எடுத்து கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்” என்பதே…, ‘இவ்வளவு நேரம் காத்திருக்கும்போதே இந்த விபரத்தைச் சொல்லியிருந்தா நல்லாயிருந்திருக்குமே என்ன செய்வது’. வேறு வழியே இல்லை அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தால் அந்த ஏரியாவில் இன்டர்நெட் சென்டர் ஏதுமில்லை, டைப்பிங் செண்டர்கூட அருகில் இல்லை. 

அலுவலகத்திற்கு போன் செய்து உதவியாளரிடம் படிவத்தைப் பூர்த்திச் செய்யச் சொல்லி, இமெயில் அனுப்பச் சொன்னோம் அதற்குள் மணி 11.30 ஆகிவிட்டது. ஆனால் அப்பிளிகேஷனில் பல ஐந்து மார்க், பத்துமார்க் கேள்விகள் இருந்ததால் உதவியாளர் கிட்டதட்ட ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டு இமெயில் செய்து விட்டதாக சொன்னார், 

மணி மதியம் 12.30, ‘ஆஹா! இன்னும் அரைமணி நேரத்தில கடையை ஸாரி எம்பஸியை பூட்டிடுவாங்களே திரும்ப அபுதாபிக்கு வருவது சிரமம் என்று முணுமுணுத்த என்னோட பாஸ்’, “நான் போய் பிரிண்ட் அவுட்டை எடுத்து வருகின்றேன், நீ இங்கேயே இரு அப்பதான் எம்பஸியை பூட்ட மாட்டானுங்க” என்று சொன்னவரைப் பார்த்து நானும் தலையசைத்து அங்கேயே காவல் காத்தேன். கிட்டத்தட்ட 45 நிமிடம் கழித்து வெளியில் ‘ஒரே சப்தம்’ அந்த திசையை நோக்கிப் பார்த்தால் ‘அட நம்ம தல!’ “நேரம் முடிந்துவிட்டது” என்று துண்டை உதறிய கான்செலரிடம் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார். அவரை செக்கியூரிட்டி என்று நினைத்ததுதான் அந்தச் சத்தத்திற்கான காரணம்.

ஒரு வழியாக சமாளித்து அங்குள்ள உதவியாளருக்கு 15$ அன்பளிப்பாக கொடுத்து விசாவும் வாங்கியாச்சு, அப்போது என்னோட ‘தல’ என்னடான்னா ஏதோ ஒருசில வார்த்தைகளைச் சொல்லி “இனிமே இங்கே வரவேமாட்டேன்” என்றார். அதற்கு அங்கிருந்த வரும் “சும்மாவா நைஜீரியா போறீங்க பணம் உண்டாக்கதானே” என்று நக்கலாக வாரினார். ஆனாலும், சும்மா சொல்லக்கூடாது இந்திய பிரஜைக்குத்தான் காஸ்ட்லி (ஸ்டாம்பிங்க்). எனக்குரிய விஷா கட்டணம் 253$ , என்னோட ‘தல’ சிரியாக் காரர் அவருக்குரிய கட்டணம் 38$ மட்டுமே.


எல்லாம் முடிந்து பயணம் ஏற்பாடானது, நைஜீரியா விமான பாதுகாப்பு அறிக்கை ரொம்ப வீக் ஆனதால் எமிரேட்ஸ் ஏர்லனை தேர்ந்தெடுத்து, பயண நாளும் நெருங்கியது. ஆஃப்பிரிக்கா நாடுகளில் முக்கியமாக நைஜீரியாவில் ஆட்கடத்தல், துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தல் போன்றவை கடலைமிட்டாய் சாப்பிடற மாதிரி நடப்பதால் (இங்கே மட்டும் என்ன வாழுதாம் என்று சில மேலைநாடுகளில் வசிப்பவர்கள் முணு முணுப்பது கேட்கின்றது) கொஞ்சம் வயிற்றைக் கலக்கியது.

வீட்டிலயும் கொஞ்சம் எதிர்ப்புதான் இருந்தாலும் ‘தவக்கல்த்து அலல்லாஹ்’ (அல்லாஹ்வின் பாதுகாவல்) என்று இறைவனின் பெயரைச் சொல்லி விமானத்தில் அமர்ந்த்தாச்சு. ‘தல’ விமானப் பயணம் செய்யும்போது எப்பவுமே (Exit) எக்ஸிட்டுக்கு பக்கத்தில் உள்ள சீட்டில் தான் உட்காருவார் உயிர் பயத்தால் அல்ல, பயணத்தின் போது சில்வஸ்டார் ரேஞ்சுக்கு கை/கால்களை ஆட்டியசைத்து உடற்பயிற்சி செய்துகொண்டே வருவார். ஒவ்வொரு மனிதனுக்கும் வருகிற வரத்து அப்படி ( நடுக்குறிப்பு : பயணத்தின் போது கை/கால்களை அடிக்கடி ஆடிக் கொண்டே இருக்கனும் என்பது விமானம் கிளம்பும்போது சொல்லப்படும் அறிவுரை. ஆனால், நம்ம ஆட்கள் அதனை தப்பா புரிஞ்சிக்கிட்டு தண்ணியப் போட்டுவிட்டு தலை, கால் எதுவென்று புரியாமல் ஆடுவாங்க).

என் பக்கத்தில் ஒரு நைஜீரியப் பெண் அதனைப் பார்த்துவிட்டு என்னோட ‘தல’ சொன்னார் நிச்சயம் “இந்தப் பயணத்தை நீ என்ஜாய் பண்ணப்போறே” என்று போகப் போகத்தான் தெரிந்தது எந்த மாதிரி என்ஜாய். அந்த பெரிய உருவம் கொண்ட பெண்ணின் கால்கள் சில சமயம் என் இருக்கையின் கைப்பிடிமேலும், பல சமயங்களில் என் இருக்கையின் மேலும் மாறி மாறி இருந்தது. எழரைமணி நேரப்பயணம் இடையில் இரண்டு தடவை உணவு, நான் சாப்பிடும்போதெல்லாம் அந்த பெண் அவர் சாப்பாட்டை சீக்கிரம் முடித்து விட்டு என்னைப் பார்ப்பார் நான் சிறிது சாப்பிட்டு விட்டு மீதம் உள்ள தொடாத உணவுகளை அப்படியே கொடுத்தால் மகிழ்ச்சியுடன் வாங்கி கொள்வார். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பது போல் இவரின் நடவடிக்கை அந்நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பார்க்காமல் புரிய வைத்தது. உணவு வேஸ்ட் ஆகாமல் அது பிறர் வயிற்றை நிரப்பியது சந்தோஷமே.



ஒரு வழியாக ‘முர்தலா முகமது ஏர்போர்ட் வந்தடைந்தோம் (எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பைலட்களை பாராட்டியே ஆகவேண்டும் விமானம் மேலே ஏறுவதும் அது அப்படியே தரையிறங்குவதும் பஞ்சு மெத்தையில் நடப்பது போன்ற உணர்வு)      பயணம் சொகுசா இருந்தாலும் ஏர்போர்ட் ரொம்ப கரடு முரடாக தெரிந்தது. இமிக்கிரேஷன் ஆபீஸ்ல ஒருவருக்குகூட கம்யூட்டர், ஸ்கேனர் என்று ஏதும் கிடையாது (பொலப்பு அந்த நெனப்புலே இருந்த்தால் கவனிக்க நேர்ந்தது). ஆகா நல்ல இடத்தை தேர்ந்தெடுத்துதான் வந்திருக்கோம். இங்க ஒன்னு இல்லாட்டிதானே நாமே நிறைய வியாபரம் செய்ய முடியும் என்று மகிழ்ச்சியில் மூழ்கியவனாக வரிசையில் காத்திருந்தோம்.

ஒவ்வொருவாக கூப்பிட்டு எண்ட்ரி ஸ்டாம்ப் அடித்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். வெளியில் வருவதற்கு முன் நமக்கு தெரிந்த நைஜீரியன் அருகில் வந்து நீங்க இப்ப வெளியே வரவேண்டாம் உங்கள் எல்லோ ஃபிவர் கார்டே மட்டும் கொடுங்க இல்லையென்றால் லொட்டு லொசுக்கு என்று சொல்லி 100$ பிடிங்கிடுவானுங்க என்று கூறி எங்களை பாதுகாப்பாக வெளியே கொண்டுவந்தார். அந்த நேரத்தில் இரண்டு பேர் ஏகே-47 துப்பாக்கிகளுடன் எங்களை நெருங்கினார்கள்.

அதிர்ச்சியின் விளிம்பிலிருந்து நான் விடுபடுவதற்கு முன்… அது என்னவென்று தெரிய காத்திருப்பீர்களா ??

சற்றே டைட்டான வேலை ஷெட்யூல் அதனால்தான் இழுத்து இழுத்து குறைவாகவே பதிவைத் தருகிறேன்... மேலும் உங்களின் மனம் திறந்த கருத்துகள் நிச்சயம் இத்தொடரின் நீளத்தை நிர்ணயிக்கும் என்று உள்மனசு சொல்லிடுச்சு !
பயணங்கள் விரிவடையும்…
முகமது யாசிர்

American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | December 29, 2012 | ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அல்லாஹ்வின் பேருதவியால் AAF இரண்டாவது அமர்வுக்கான ஒன்று கூடல் நேற்று மாலை வல்லேஹோ மஸ்ஜிதில் மிகச் சிறப்புடன் நடந்தது.

அமர்வின் அவைக் குறிப்புகள்:-

நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் குழந்தைகள் சகிதம் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

அமர்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்கள் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

லுஹர் தொழுகைக்கு பின்னர் அமர்வு ஆரம்பமானது.

நிகழ்வின் முதலாவதாக கிராஃஅத் சகோ.மாஹிர் [த/பெ அப்துல் மாலிக்] ஓதினார்.

வரவேற்புரையை சகோ.நஜீர் (செயலாளர்) அவர்கள் நிகழ்த்தினார்.

நடப்பு நிகழ்வுகளின் இதுவரை AAF செயல்பாடுகள் பற்றிய விபரங்களை சகோ.தமீம் (இணைச் செயலாளர்) அவர்கள் எடுத்துரைத்தார்.

சுருக்கமான உரையை சகோ. சிப்ளி முஹம்மது (துணைத் தலைவர்) அவர்கள் நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட சகோதரர்களின் ஐயங்களுக்கும் அவர்களின் கேள்விகளுக்கும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. குறிப்பாக முதன் முறையாக வந்து கலந்து கொண்ட சகோதரர்களின் விளக்க வினாக்களுக்கும் பதிலளிக்கப்பட்டது. அதனை சகோ.ஹக்கீம் (தலைவர்) மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் இணைந்து மிகச் சிறப்பாகவும் பொறுமையாகவும் வழங்கினார்கள்.

அஸர் தொழுகைக்குப் பின்னர் தேநீர் இடைவேளையும் அளிக்கப்பட்டது.

புதிய வரவாக முதன் முறையாக வந்த சகோதரர்களை உறுப்பினர்களாக்கும் பணியும் துவங்கியது அவர்களின் உறுப்பினர்களுக்கான சந்தாத் தொகையும் பெறப்பட்டது.

வந்திருந்த அனைத்து சகோதரர்களின் சுய அறிமுகமும் செய்து கொள்ளப்பட்டது.

அடுத்ததாக உறுப்பினர்களுக்கு திறந்த மனதுடன் விவாதிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதில் அனைவரும் மிகவும் பயனுள்ள தகவல்களை பறிமாறியது மட்டுமின்றி நல்ல ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. அனைத்து நல்ல ஆலோசனைகளையும் விவாதங்களையும் குறிப்பெடுத்துக் கொள்ளப்பட்டது அதோடு அதற்கான இயன்ற முயற்சிகளும் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

AAFன் நடப்பு  நிதி நிலவரத்தை சகோ.இக்பால் M.ஸாலிஹ் (பொருளாளர்) விரிவாக எடுத்துரைத்தார்கள்.

அடுத்து கலந்து கொண்ட சகோதரர்களின் புகைப்பட ஆவணப்படுத்துதல் தொடங்கியது.

அமர்வின் நிறைவு மஃக்ரிப் தொழுகைப் பின்னர் இனிதே நிறைவுற்றது.



AAFன் இரண்டாவது கூட்டு அமர்வின் தீர்மானங்கள்:-

1. இறைவனின் நாட்டப்படி ஒவ்வொரு உறுப்பினரும் குறைந்தது 100$ ஜக்காத்தாக (அதற்குரிய தகுதியிருப்பின்) AAFக்கு வழங்குவது என்று முடிவானது.

2.AAF போதுமான நிதியாதாரம் பெற்றதும், உறுப்பினர்களுக்கென்று வட்டியில்லாக் கடன் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. (இதன் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்)

3. அமெரிக்க வாழ் அதிரையர்களின் கூட்டமைப்பு - American Adirai Forum, AAF என்று அங்கீகரிக்கப்பட்ட பெயரையே பயன்படுத்துவது என்று பெரும்பாலான சகோதரர்களின் ஆலோசனைப்படியே ஒருமனதாக முடிவானது இன்ஷா அல்லாஹ். இதற்கென்று அதிரையல்லாத நமது சகோதரர்களும் மின்னஞ்சல் வாயிலாக ஆதரவு தெரிவுத்திருந்தனர். அதுமட்டுமல்ல, அமெரிக்க வாழ் அதிரைச் சகோதரர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கவும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரவும் இதுவே சரியான வழி என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

AAF நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கென்று புதிதாக அலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது. சகோதரர்கள் அவசர உதவிகளுக்கும், தகவல்களுக்கு இந்த எண்ணை பயன்படுத்தும்படி வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள், அழைப்பு வரும் இந்த எண்ணிலிருந்து நிர்வாகிகளின் தொலைபேசிகளுக்கு தொடர்புகள் தானாக ஏற்படுத்திக் கொள்ளும். இதனை பாதுகாத்து வைத்திருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும், இதுவரை உறுப்பினர்களாக பதிவு செய்யாத சகோதரர்கள் அல்லது நவம்பர் / டிசம்பர் மாத உறுப்பினர் சந்தா வழங்காதவர்கள் உடனடியாக பதிவு செய்யவும், சந்தா வழங்கவும் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.

வரும் ஜனவரி முதல் வங்கி கணக்கு மற்றும் இணையதளம் செயல்படத்  துவங்கும், அதுவரைக்கும் கீழ்கண்ட வங்கி கணக்கில் உரிய தொகையை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

HARISH AMEEN
BANK OF AMERICA
CHECKING ACCT.
04324 77802
Please send an email to Bro.Iqbal (iqbalmsalih@gmail.com) after you deposit the cash (To keep an account).

இனிவரும் நாட்களில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை AAF அமர்வுகள் நடத்த முடிவானது, அடுத்த அமர்வு வரும் மார்ச் மாதம் 2013ல் நடைபெறும்.

இப்படிக்கு
AAF - American Adirai Forum

தேனீ உமர்தம்பி - இணையத்தில் இணைப்பிலே ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | December 29, 2012 | , , , , ,


கணினித் தமிழ் வரலாற்றில் முத்திரை பதிக்க அடிக்கல் நாட்டிய மிக முக்கியமானவர்களில் ஒருவர்தான், அதிரையின் மைந்தன் தேனீ உமர்தம்பி அவர்கள்!

வாழும் நாட்களில் வீசிய வசந்தம் அவரின் இறப்புக்குப் பின்னர்தான் பாரில் பரவி வியாபித்தது.

சிறு வயதிலிருந்தே அதிகமதிகம் அவர்களோடு நெருக்கமாகவும் பிரியமாகவும் பழகியவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் அதற்கான சிரத்தையும் சிலிர்க்க வைக்கும் என்பதே. அதோடு, அதன் பின்னர் கிடைக்கும் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதோடு இருக்காமல் எப்படி அதனை எட்டிப் பிடித்தார்கள் என்று விளக்கவும் செய்வார்கள்.

1994ம் வருடம் அமீரகத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் இணையம் பரவ ஆரம்பித்த காலங்களில் தனது வீட்டில் இணணயத் தொடர்பைப் பெற்று அங்கிருந்து கொண்டு அவரது சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் அவரவர்களின் அலுவலக கணினிக்கு ஏற்படும் பிணிகளுக்கு மருத்துவம் செய்வார்கள்.

இன்றைய கால கட்டத்தின் அசுர வளர்ச்சியின் பலனாய் கணினிக்குள் ஊடுருவ எத்தனையோ மென்பொருள்கள் வந்து விட்டன, ஆனால் அப்போது இருந்தச் சூழல் முற்றிலும் வேறுமட்டுல்ல தொழில்நுட்பத்தில் எல்லாமே புதிது.

2002 வருடம் துபாயிலிருந்து விடைபெற்று ஊருக்குச் சென்ற இரண்டொரு மாதங்களிலேயே அதிரையில் இணையத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இங்கிருக்கும் (துபாய், மஸ்கட்) கணினிகளுக்கு அவ்வப்போது ஏற்படும் காய்ச்சலை சரிபார்க்கவும் செய்தார்கள் அதோடு அதன் மேம்பாட்டையும் சீரமைத்து தந்தார்கள்.

அதிரைச் சகோதரர்களின் கணினி (தமிழ்) தொழில் நுட்ப வளர்ச்சியில் மட்டுமல்ல இணைய கணினித் தமிழ் வளர்ச்சியில் அவர்களின் பங்கும் போற்றத்தக்கதாக அமைந்திருப்பது சந்தோஷப்படக் கூடிய விஷயம்.

இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நேற்று முன் தினம் பெங்களூருவில் நடந்தது, அப்போது சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது தேனீ உமர்தம்பி அவர்கள் 17 வருடங்களுக்கு முன்னால் இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் இங்கு சார்ஜாவில் நடந்து கொண்டிருக்கும்போது அவர்களின் (துபாய்) வீட்டுக் கணினியில் போட்டுக் காட்டிய புள்ளி விபரங்களும் கிராஃபிக்ஸும் இன்றும் அப்படியே பசுமையாக நினைவுக்கு வந்ததை மறைக்க முடியவில்லை.

இப்போதைய வளர்ச்சியில் இருக்கும் மென்பொருள்களின் உதவியால் அப்படியே மைதானத்தில் பார்க்கும் வீரர்களின் செயல்களை செயற்கையாக காணொளி போன்று செய்ய முடியும் ஆனால் அன்றே அவர்கள் ஒற்றை வரிக் கோட்டில் (single line draw) வண்ணங்களில் செய்து காட்டினார்கள்.

அதன் தொடர்ச்சியாக அவர்களை நினைவுகூறலாமே என்று மனதுக்குள் எண்ணம் தோன்றியது அதன் விளைவே இந்த ஒலிப்பேழை காணொளிப் பதிவு உங்களனைவரின் பார்வைக்காகவும் நினைவில் நிழலாடவும்.


அதிரைநிருபர் பதிப்பகம்

மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | December 28, 2012 | , ,


அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்...

மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்!

அல்லாஹ்வின் அடியார்களே!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அதிரையின் கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள தர்ஹாவின் கபுருக்குச் சந்தனம் பூசுவதற்காகக் கடந்த 23.12.2012 பகல் 2.45 மணியளவில் மூலஸ்தானத்துக்கு உள்ளே சென்ற பட்டத்து லெப்பை அலாவுத்தீன் இறந்து விட்டார்!  (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).  இந்த இறப்பில் நாம் பெறவேண்டிய படிப்பினைகள் அநேகம் உள்ளன.

ஒரு வீட்டிலுள்ள குளியலறைக்குள் குளிப்பதற்காகச் சென்ற ஒருவர் குறிப்பிட்ட நேரம் தாண்டியும் வெளிவராவிட்டால், அந்த வீட்டார் என்ன செய்வார்கள்அதுவும், குளிக்கச் சென்றவர் இரத்த அழுத்த நோயாளியாகவும் சர்க்கரை நோயாளியாகவும் இருப்பாராயின், எவ்வளவு கூடுதல் கவனத்துடன் செயல்படுவார்கள்? வழக்கமாகப் பதினைந்து நிமிடத்தில் தம் குளியலை முடித்துக்கொண்டு வெளிவரவேண்டியவர், அரைமணி நேரமாகியும் வெளிவராவிட்டால்?

ஒரு மணி நேரம் தாண்டிய பின்னரும் உள்ளே சென்றவர் என்னவானார் எனும் கவலையற்று இருந்துவிட்டு, கடைசியில் அவரை உயிரிழந்தவராகத் தூக்கிவந்து போட்டு, அவருக்கு அநியாயம் இழைத்துவிட்டு, எவ்விதக் குற்ற உணர்வும் இல்லாமல், தம் குற்றங்களை அல்லாஹ்வின்மீது திசை திருப்புவது அறிவற்றவர்களின் செயலாகும்.  அப்படிப்பட்ட ஓர் அறிவீனம்தான் மர்ஹூம் அலாவுத்தீன் விஷயத்தில் அரங்கேறியது.  வழக்கமாக, ஆகக் கூடுதலாக 45 நிமிடத்தில் வெளியே வரவேண்டிய சர்க்கரை நோயாளியான அவர், ஏறத்தாழ மூன்று மணி நேரம் (மாலை ஐந்தரை) வரை என்னவானார்? என்று கபுருக் கதவைத் திறந்து அல்லது உடைத்துப் பார்ப்பதற்கு தர்ஹாவில் குழுமியிருந்தவர்களைத் தடுத்து நிறுத்திய அறிவீனம் எதுஅல்லாஹ்வுக்கு இணை வைக்கும் மௌட்டீகக் கொள்கையான தர்ஹா வழிபாட்டு நம்பிக்கை நிகழ்த்திய அநியாம்தான் அது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. 

அல்லாஹ் கூறுகிறான்:
"மனிதர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் எவ்வித அநியாயமும் செய்வதில்லை. எனினும், மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்." (அல் குர்ஆன் 10:44).

அல்லாஹ் மனிதனுக்குப் பகுத்தறிவை வழங்கி, படைப்பினங்கள் அனைத்திலும் உயர்ந்த படைப்பாக நம்மை ஆக்கியருளியிருக்க, அவனளித்த அருட்கொடையான அறிவை, என்றோ இறந்துவிட்ட அவ்லியாவிடம் அடகு வைத்துவிட்டு, அல்லாஹ்வுடைய மௌத்து’ என்று கூர் மழுங்கிப்போய் கூறுதல் முறையல்ல.

"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!" என்று அல்லாஹ் தன் அருள் மறையில் (4:78) எச்சரிப்பது, மௌத்துக்கு அஞ்சி ஓடி எவரும் தப்பித்துக்கொள்ள முடியாது என்ற பொருளிள்தானே அன்றி, நம்முடைய மடமையினால் ஓர் உயிரை அநியாயமாகப் பறிகொடுத்துவிட்டு, அந்தக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவல்ல.

என்றோ மரணித்து, பதினொரு இடங்களில் அடங்கப்பட்டதாகக் கூறப்படும் ஹாஜா அலாவுத்தீன் ஜிஷ்தீ எனும் பெரியாரின் உடல் அதிரையில்தான் உண்மையில் அடக்கப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், அந்தக் கபுருக்கு மேல் கட்டடம் கட்டப்பட்டிருப்பதும், அந்தக் கபுருக்குச் சந்தனம் பூசுவதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் வன்மையாகத் தடுக்கப்பட்டவை என்பதை இன்னும் ஏற்க மறுப்பது மடமையின் உச்ச கட்டமாகும்.

نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ الْقُبُورُ وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا وَأَنْ يُبْنَى عَلَيْهَا وَأَنْ تُوطَأَ

"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்" ஜாபிர் (ரலி) - திர்மிதீ 972, அஹ்மது 14748.

அவ்லியாக்களின் பெயரால் ஆண்டு தோறும் கந்தூரி எடுப்பதும், அதில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதும் பெரிய வழிகேடு என்பதைப் பல நபிமொழிகள் எச்சரிக்கின்றனஅல்லாஹ்வின் கோபமும் அல்லாஹ்வின் தூதரின் சாபமும் கந்தூரிக்கு நிச்சயமாக உண்டு என்பதை விளக்கும் இதோ சில நபிமொழிகள்:

 وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا 

"... எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கிவிடாதீர்கள்... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எச்சரித்தார்கள்." அபூஹுரைரா (ரலி) : அஹ்மது 8449, அபூதாவூது 1746 .

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ لَا تَجْعَلْ قَبْرِي وَثَنًا يُعْبَدُ

"... இறைவா, எனது சமாதியை வழிபடும் இடமாக ஆக்கிவிடாதே... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்." அதா இப்னு யஸார் (ரலி) : அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ 

"சமாதிகளை தரிசிக்கச் செல்லும் பெண்களையும், அவற்றில் வழிபாடு செய்யும் பெண்களையும், (சமாதிகளில்) விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சபித்தார்கள்." இபுனு அப்பாஸ் (ரலி) : நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.

 لَعْنَ اللَّه الْيَهُودِ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ يُحَذِّرُ مَا صَنَعُوا

"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்துவிட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உறுதிபடக் கூறினார்கள். தம்முடைய சமாதியை அவ்வாறு ஆக்கிவிடுவதைப் பற்றியும் எச்சரித்தார்கள்" - அன்னை ஆயிஷா (ரலி) : புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.

கந்தூரியும் கப்ரு வழிபாடும் அல்லாஹ்வால் மன்னிக்க முடியாத பெரும் பாவங்கள் என்பதை நம் ஊர் மக்களுக்குத் தெளிவாக - உறுதியாக எடுத்துச் சொல்லித் தடுக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகும். குறிப்பாக, மார்க்கம் அறிந்த ஆலிம்கள் என்போர் மீது கட்டாயக் கடமையாகும்ஏனெனில், மறுமையில் அவர்களுக்கு இது பற்றிக் கூடுதல் கேள்வியுண்டு!  ஜமாஅத்தின் பொறுப்பாளர்களுக்கும் அவ்வாறே கூடுதல் கேள்விகள் மறுமையில் காத்திருக்கின்றன!

தம் மூதாதையரின் மட நம்பிக்கையை ‘இபாதத்’ என்று நம்பிப் பின்பற்றி, உயிர் நீத்த அலாவுதீனின் மண்ணறையின் ஈரம் காயும் முன்னர், அவ்லியாவின் சமாதிக்கு எதிரில் ஆடல் பாடல் கச்சேரிகளை அரங்கேற்றிய மனசாட்சியற்ற கந்தூரிக் கமிட்டியினரும், அதைத் தடுத்து நிறுத்தாமல் மௌனம் சாதித்து ஆதரவளித்த ஜமாஅத் பொறுப்பாளர்களும், கந்தூரி ஆதரவாளர்கள் அனைவரும் அவ்லியாவின்  பெயரால் கந்தூரி எனும் மடமையிலிருந்து இனியாவது விடுதலை பெற்றே ஆகவேண்டும்!

வெளியீடு 3/2012 - நாள்: 28.12.2012
அறிவுறுத்தும், 
அதிரை தாருத் தவ்ஹீத்
பதிவு எண் 4/130/2012
28G, Market (East) Street, P.O.Box 5 Adirampattinam – 614701
Tanjore Dist; Tamilnadu, India – Tel : +91-4373-240930; Email : salaam.adt@gmail.com

மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? - மக்கள் ரிப்போர்ட் ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | December 28, 2012 | , , ,


அதிரைநிருபர் பதிப்பகத்தின் முதல் வெளியீடான "மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?"  நூல் மதிப்புரையை 'மக்கள் ரிப்போர்ட்' பத்திரிகை வழங்கியிருக்கிறது.

சமுதாய மக்கள் ரிப்போர்ட் பத்திரிகைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.


அதிரைநிருபர் பதிப்பகம்

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 23 31

அதிரைநிருபர் பதிப்பகம் | December 28, 2012 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

பக்கத்து வீட்டாரின் உரிமைகளும், அவர்களின் நலன் நாடுதலும்

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைளுக்கும், ஏழைகளுக்கும்,நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: அன்னிஸா 4:36)

'(பக்கத்து வீட்டார்) எனக்கு வாரிசாக ஆக்கப்பட்டு விடுவாரோ என, நான் எண்ணும் அளவுக்கு பக்கத்து வீட்டார் பற்றி (அவர்களுக்கு நல்லது செய்ய) எனக்கு ஜிப்ரீல்(அலை) உபதேசம் செய்து கொண்டே இருந்தார் என்று நபி(ஸல்) கூறினார்கள். (இப்னு உமர் (ரலி), அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் இருவரும்  அறிவிக்கின்றார்கள் (புகாரி, முஸ்லிம்)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 303)

''அபூதர் அவர்களே! நீர் குழம்பை (சால்னாவை) தயார் செய்தால், அதில் தண்ணீரை அதிகப்படுத்துவீராக! அதனைக் கொண்டு உன் பக்கத்து வீட்டாரை கவனித்துக் கொள்வீராக என்று நபி (ஸல்) கூறினார்கள்.

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் (கீழ்க்கண்டவாறு) உள்ளது:

நீ குழம்பை தயார் செய்தால், அதில் தண்ணீரை அதிகமாக்கி, பின்பு உன் பக்கத்து வீட்டாரை கவனித்து, அதில் நல்லதை அவர்களுக்கு ஊற்றிக் கொடுப்பீராக என்று என் நேசர் நபி(ஸல்) எனக்கு உபதேசம் செய்தார்கள் என அபூதர்(ரலி) அறிவிக்கின்றார்கள். (அறிவிப்பவர்: அபூதர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 304)

''அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவர் மூஃமின் அல்ல. அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவர் மூஃமின் அல்ல. அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர் மூஃமின் அல்ல என்று நபி(ஸல்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! எவர்? என்று கேட்கப்பட்டது. எவனது தீங்கைக் கண்டு பக்கத்து வீட்டார் பயப்படுகிறார்களோ அவன்தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 305)

'முஸ்லிம் பெண்களே! ஒரு பக்கத்து வீட்டுப் பெண், மற்றொரு பக்கத்து வீட்டுப் பெண்ணை இழிவாக எண்ணிட வேண்டாம். ஒரு ஆட்டின் கால்குளம்பாயினும் சரியே! (அதையேனும் வழங்கலாம்)'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 306)

''ஒரு பக்கத்து வீட்டார், தன் வீட்டுச் சுவரில் குச்சியை நட்டு வைக்க மற்றொரு பக்கத்து வீட்டார் தடுத்திட வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆனால்) இந்த நபிமொழியைப் புறக்கணித்தவர்களாகவே உங்களை நான் பார்க்கிறேனே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உங்களுக்கிடையே இதை நான் கூறிக் கொண்டேதான் இருப்பேன். (என்று அபூஹுரைரா(ரலி) கூறுகிறார்) (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 307)

''அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் பக்கத்து வீட்டாரை நோவினை செய்ய வேண்டாம். மேலும் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிய ஒருவர் நல்லதைச் சொல்லட்டும். அல்லது மவுனமாக இருக்கட்டும்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்)                  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 308)

'அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் பக்கத்து வீட்டாரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளட்டும், அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர் தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், நல்லதைப் பேசட்டும் அல்லது மவுனமாக இருக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஷுரைஹ் குஸாஈ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)        (ரியாளுஸ்ஸாலிஹீன்: 309)

''நபி (ஸல்) அவர்களிடம், ''இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு பக்கத்து வீட்டார் உண்டு. அவ்விருவரில் எவருக்கு நான் அன்பளிப்பு வழங்குவது?'' என்று கேட்டேன். ''அவ்விருவரில் எவரின் வாசல் உமக்கு நெருக்கமாக உள்ளதோ அவருக்கு'' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி)  அவர்கள் (புகாரி)                  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 310)

''தன் தோழரிடம் சிறந்தவரே, அல்லாஹ்விடம் தோழமைக்குரியவர்களில் சிறந்தவர் ஆவார். தன் பக்கத்து வீட்டாரிடம் சிறந்தவரே, அல்லாஹ்விடம் சிறந்தவராவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு(ரலி) அவர்கள் (திர்மிதீ)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 311)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
 அலாவுதீன் S.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு