Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label எம்.ஃபில்.. Show all posts
Showing posts with label எம்.ஃபில்.. Show all posts

உலகின் முதல் மனிதர் பேசிய மொழி தமிழா? - 3 42

அதிரைநிருபர் பதிப்பகம் | June 13, 2012 | , , , ,


உலகின் முதல் மனிதர் ஆதம் நபி (அலை) அவர்கள் பேசிய மொழி தமிழா? - (3)

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் இறக்கப்பட்ட இடம் இந்தியா என்பதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் கூறும் சான்றுகள்.

حَدَّثَنَا الحسن بن يحيى ، قال : أخبرنا عبد الرزاق ، قال : أخبرنا معمر ، عن قتادة ، قال : " أهبط الله عز وجل آدم إلى الأرض ، وكان مهبطه بأرض الهند " 

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் பூமிக்கு இறக்கினான். அவர்கள் இறங்கிய இடம் இந்தியாவாக இருந்தது என்று கதாதா அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: மஃமர்

(حديث موقوف) حَدَّثَنِي ابْنُ سِنَانٍ ، قَالَ : حَدَّثَنِي ابْنُ سِنَانٍ ، قَالَ : حَدَّثَنَا الْحَجَّاجُ ، قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنْ يُوسُفَ بْنِ مِهْرَانَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ عَلَيْهِ السَّلامُ : " أَطْيَبُ أَرْضٍ فِي الأَرْضِ رِيحًا أَرْضُ الْهِنْدِ ، أُهْبِطَ بِهَا آدَمُ فَعَلِقَ شَجَرُهَا مِنْ رِيحِ الْجَنَّةِ " .

பூமியில் நறுமணம் மிகுந்த இடம் இந்தியா, அங்குதான் ஆதம் (அலை) அவர்கள் இறக்கப்பெற்றார்கள். அங்கிருக்கும் மரங்கள் சுவனத்தின் நறுமணத்தைப் பெற்றுள்ளன என்று அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் – யூஸுஃப் இப்னு மிஹ்ரான்


 (حديث موقوف) حَدَّثَنَا أَبُو هَمَّامٍ ، قَالَ : حَدَّثَنِي أَبِي ، قَالَ : حَدَّثَنِي زِيَادُ بْنُ خَيْثَمَةَ ، عَنْ أَبِي يَحْيَى . بَائِعِ الْقَتِّ قَالَ : قَالَ لِي مُجَاهِدٌ : لَقَدْ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ، " أَنَّ آدَمَ عَلَيْهِ السَّلامُ نَزَلَ حِينَ نَزَلَ بِالْهِنْدِ ، وَلَقَدْ حَجَّ مِنْهَا أَرْبَعِينَ حِجَّةً عَلَى رِجْلَيْهِ

ஆதம் (அலை) அவர்கள் இறங்கிய பொழுது இந்தியாவில் இறங்கினார்கள். இன்னும் அவர்கள்  அங்கிருந்து கால்நடையாக 40 ஹஜ்ஜுகள் செய்துள்ளார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஜாஹிது

حَدَّثَنَا ابن حميد ، قال : حَدَّثَنَا سلمة ، عن ابن إسحاق ، قال : وأما أهل التوراة فإنهم ، قالوا : " أهبط آدم بالهند على جبل ، يقال له : واسم عند واد يقال له : بهيل بين الدهنج والمندل ، بلدين بأرض الهند ، قالوا : وأهبطت حواء بجدة من أرض مكة ، وقال آخرون : بل أهبط آدم بسرنديب على جبل يدعى بوذ 

தவ்ராத் வேதத்தை உடையவர்கள் ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் தஞ்ச், மன்தல் எனப்படும் இடங்களுக்கிடையே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மலையின் மீது இறக்கப் பெற்றார்கள்.  இன்னும் ஹவ்வா (அலை) அவர்கள் மக்காவின் நிலப்பரப்பைச் சேர்ந்த ஜித்தாவில் இறக்கப் பெற்றார்கள், என்று கூறுகின்றார்கள். இன்னும் சிலர், ஆதம் (அலை) அவர்கள் ஸரந்தீப் (இலங்கையின் பழைய அரபிப் பெயர்) என்ற இடத்தில் உள்ள பூத் எனும் மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்றும் கூறுகின்றனர்.  அறிவிப்பவர் – அபூ இஸ்ஹாக்

وأخرج ابن جرير وابن أبي حاتم والحاكم وصححه عن ابن عباس قال أول ما أهبط الله آدم إلى أرض الهند وفي لفظ بدجنى أرض الهند

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் முதலில் இந்தியப் பூமியில்தான் இறக்கினான் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்னொரு அறிவிப்பில் இந்தியப் பூமியில் தஜ்னா என்ற இடத்தில் இறக்கினான் என்று கூறியதாகவும் வருகின்றது. அறிவிப்போர்: இப்னு ஜரீர், இப்னு அபீ ஹாத்திம், ஹாகிம்

(حديث موقوف) حَدَّثَنِي الْحَارِثُ ، قَالَ : حَدَّثَنَا ابْنُ سَعْدٍ ، قَالَ : حَدَّثَنَا هِشَامُ بْنُ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : " أُهْبِطَ آدَمُ بِالْهِنْدِ وَحَوَّاءُ بِجِدَّةَ , فَجَاءَ فِي طَلَبِهَا حَتَّى اجْتَمَعَا , فَازْدَلَفَتْ إِلَيْهِ حَوَّاءُ فَلِذَلِكَ سُمِّيَتِ الْمُزْدَلِفَةَ ، وَتَعَارَفَا بِعَرَفَاتٍ فَلِذَلِكَ سُمِّيَتْ عَرَفَاتٍ ، وَاجْتَمَعَا بِجَمْعٍ فَلِذَلِكَ سُمِّيَتْ جَمْعًا ، قَالَ : وَأُهْبِطَ آدَمُ عَلَى جَبَلٍ بِالْهِنْدِ ، يُقَالُ لَهُ : بُوذُ " .

ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் இறக்கப் பெற்றார்கள். ஹவ்வா (அலை) அவர்கள் ஜித்தாவில் இறக்கப் பெற்றார்கள். ஆதம் (அலை) அவர்கள் ஹவ்வா (அலை) அவர்களைத் தேடி வந்துகொண்டிருந்தபொழுது ஹவ்வா (அலை) அவர்களும் அவர்களை நெருங்கினார்கள். அவர்கள் இருவரும் நெருங்கி வந்த இடம் முஸ்தலிஃபா என்று அழைக்கப் பெற்றது. பின்னர், அவர்கள் இருவரும் அரஃபாத் என்ற இடத்தில் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டனர். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டதால், அந்த இடம் அரஃபா என்று பெயர் பெற்றது. இன்னும் அவர்கள் இருவரும் ஜம்உ எனும் இடத்தில் ஒன்றிணைந்தனர். அதனால், அவ்விடம் ஜம்உ என்று பெயர் பெற்றது. இன்னும், ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் பூத் என்று அழைக்கப் பெறும் மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.  அறிவிப்பாளர்: அபூஸாலிஹ்

இந்த அறிவிப்புகள் அனைத்தும் இமாம் தபரீ அவர்கள் தொகுத்த தாரீஃகுத் தபரீ என்ற உலக வரலாற்று நூலில் வருகின்றன.

மேற்கண்ட அறிவிப்புகளில், இந்தியாவில் தஞ்ச், மன்தல் எனப்படும் இடங்களுக்கிடையே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று வரும் அறிவிப்பில் வரும் தஞ்ச் என்ற வார்த்தை தெங்கணம், (தென்+கணம்) என்ற வார்த்தையை ஒத்திருக்கின்றது. இன்னும், அவ்வறிவிப்பில் வரும் மன்தல் எனும் வார்த்தை (மண்டல், கோரமண்டல்) போன்ற இந்தியாவின் தென் பகுதிகளின் பெயர்களுடன் ஒத்துப் போகின்றது. 

தஞ்ச்  எனப் பெயர் கொண்ட அல்லது அப்பெயருடன் தொடர்புள்ள நிலப்பகுதி ஏதும் தமிழ்நாட்டின் பகுதியாக இருந்ததா என்ற கேள்வியுடன், இணையத்தில் தேடும் பொழுது கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்தன.

கடல் கொள்வதற்கு முன் இருந்த குமரிக் கண்டத்தில் தெங்க நாடு இருந்தது என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் கூறியுள்ளார். தெங்கணம் என்ற பழைய குமரிக் கண்ட நகரத்தின் பெயராக இருக்க வேண்டும்.


பண்டைய தமிழகத்தின் பாண்டிய நாட்டின் பகுதிகளாக 49 நாடுகள் இருந்தன வென்றும் அவற்றில் தெங்க நாடு என ஒன்று இருந்தது என்ற தகவல் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் தொடர்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


குணகரை குன்றங் குறும்பனை யோடு
மணமிகு தெங்க மதுரைமுன் பாலை 
இணருபின் பாலையோ டேழ்தலை மேய 
உணவமல் நாற்பதோ டொன்பது நாடே. 

(ஏழ்தலைமேய - ஏழ்என்னும் எண்ணை முதலிலுடைய ஏழ்குணகரைநாடு, ஏழ்குன்றநாடு,
ஏழ்குறும்பனை நாடு, ஏழ்தெங்கநாடு, ஏழ்மதுரைநாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை
நாடு எனக் கொள்க.)

மாறிமாறி வந்த கடற்கோள்களினால் பாண்டி நாட்டைச் சேர்ந்த 49 நாடுகளாகிய ஏழ் தெங்க நாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் குணக்கரை நாடு, ஏழ் குறும்பனை நாடு ஆகியன மறைந்தன என ஆய்வாளர் கூறுவர். பார்க்க: http://www.tamilvu.org/courses/degree/a031/a0311/html/a0311332.htm

 “ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் இந்தியப் பூமியில்தான் இறக்கினான் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள், இன்னொரு அறிவிப்பில் இந்தியப் பூமியில் தஜ்னா என்ற இடத்தில் இறக்கினான் என்று கூறியதாகவும் வருகின்றது” – இப்னு ஜரீர், இப்னு அபீ ஹாத்திம், ஹாகிம் ஆகியோர் அறிவிக்கும் இந்த அறிவிப்பில் வரும் ‘தஜ்னா’ என்ற வார்த்தையில் வரும் ஜீம் என்ற அரபி எழுத்தினை geem என்றும் கூறுவர். அதன்படிப் படித்தால் ‘தக்னா’ என்றும் அவ்வார்த்தையைப் படிக்கலாம். அந்த உச்சரிப்பு ‘தக்கன்’, ‘தக்காணம்’ போன்ற வார்த்தைகளின் உச்சரிப்புடன் ஒத்திருக்கின்றது.

“ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் ‘பூத்’ என்று அழைக்கப் பெறும் மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்”- என்ற அறிவிப்பில் வரும் ‘பூத்’ வார்த்தையினை ‘புத்’ என்றும் வாசிக்க இயலும். அது ஏனெனில், அரபி அல்லாத வார்த்தைகளை அரபியில் எழுதும் பொழுது உகரத்தைக் குறிக்க அரபி மொழியின் எழுத்தான் ‘வாவ்’ என்ற எழுத்தைப் பயன்படுத்துவது அரபிகளின் வழக்கம். அவ்வகையில், புத் என்று அழைக்கப் பெறுவதாக இவ்வறிவிப்பில் குறிப்பிடப் பெறும் அம்மலை, இலங்கையில் உள்ள ‘புத்தர் பாதம்’ என்று அழைக்கப் பெறும் மலையாக இருக்கலாம்.

இவற்றின் அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆதம் (அலை) அவர்கள் நூஹ் (அலை) அவர்களது காலத்தில் ஏற்பட்ட பிரளயத்திற்கு முன் இலங்கையுடன் ஒன்றாக இருந்த இந்தியாவின் தென் பகுதியில் உள்ள மலை ஒன்றின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று கருத அதிகம் வாய்ப்பிருக்கின்றது.


- இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்..
- அஃப்ளலுல் உலமா
- அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்.
- இயக்குநர், அரபிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸ், சென்னை-600092.

உலகின் முதல் மனிதர் பேசிய மொழி தமிழா? - 2 32

அதிரைநிருபர் பதிப்பகம் | April 16, 2012 | , , , ,

உலகின் முதல் மனிதர் ஆதம் நபி (அலை) அவர்கள் பேசிய மொழி தமிழா? - (2)

உலகின் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் பேசிய முதல் வார்த்தை என்ன? சுவனத்தில் ஆதம் (அலை) பேசிய மொழி எது? அவர்கள் பூமியில் இறக்கப் பெற்ற பின்னர் எந்த மொழி பேசியிருப்பார்கள்? அவர்கள் பூமியில் எந்த இடத்தில் இறக்கப் பெற்றார்கள்?

இன்னும், இதுபோன்ற பல கேள்விகளை, மனிதனின் தோற்றத்தையும், அவனது சிறப்பையும் அறியும் நோக்கின் அடிப்படையில் இஸ்லாமிய அறிஞர்கள் பலர் ஆராய்ந்து உள்ளனர்.

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் பேசிய முதல் வார்த்தை என்ன?

ஆதம் (அலை) அவர்களின் உடலில் அல்லாஹ் ரூஹை ஊதும்பொழுது,

فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِين  (15:25)

“நான் அவரை முழுமைப் படுத்தி, அவரில் என் உயிரிலிருந்து ஊதியதும், ‘நீங்கள் அவருக்கு ஸஜ்தா செய்யுங்கள்” என்று வானவர்களிடம் கூறினான். (அல்குர்ஆன் 15:29)

“அல்லாஹ் ரூஹை ஊதியபொழுது, ஆதம் (அலை) அவர்களின் மூக்கில் ரூஹ் வந்தவுடன் அவர்கள் தும்மினார்கள். வானவர்கள் ஆதம் (அலை) அவர்களைப் பார்த்து, ‘அல்ஹம்து லில்லாஹ்’ அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறும், என்றனர். அவரும் கூறினார். அதற்கு அல்லாஹ், ‘யர்ஹமுகல்லாஹ்’ அல்லாஹ் உமக்கு அருள்புரிவானாக, என்று பதிலளித்தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தஃப்ஸீர் இப்னு கஃதீர்)

எனவே, முதல் மனிதர் ஆதம் (அலை) பேசிய முதல் வார்த்தை ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்பதுதான் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். இதன் அடிப்படையில், மனிதன் குரங்கைப் போன்றோ, எலியைப் போன்றோ கத்திக் கொண்டிருந்திருக்க மாட்டான் என்று நாம் அறிந்து கொள்ளலாம்.

நம் ஆதி பிதா ஆதம் (அலை) அவர்கள் பேசிய முதல் வார்த்தையான அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் என்ற வார்த்தையைக் கொண்டே, அல்லாஹ் நமக்கருளிய இறுதி வேதமான அல்குர்ஆனின் முதல் அத்தியாயம் ஆகிய சூரத்துல் ஃபாத்திஹாவும் தொடங்குகின்றது. தந்தை சொன்ன புகழ்ச் சொல்லையே தனயர்களாகிய நமக்கும் அளித்து, அனுதினமும் தொழுகையில் அப்புகழ் மொழியைக் கொண்டு அவனைப் புகழ நமக்கருள் புரிந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ(2:35)

பின்னர், ஆதமே, நீரும் உம் மனைவியும் இச்சுவனத்தில் தங்கியிருங்கள். அதில் நீங்கள் இருவரும் விரும்பிய இடத்திலிருந்து புசியுங்கள். ஆனால், இந்த மரத்தை நெருங்கிவிட வேண்டாம். அப்படி (நெருங்கினீர்கள்) எனில், நீங்கள் இருவரும் அநியாயக்காரர்களுள் ஆகிவிடுவீர்கள்” என்று கூறினோம். - அல்பகரா (2:35)

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்த பின், அவர்களைச் சுவனத்தில் தங்க வைத்தான். அவர்கள் சுவனத்தில் தங்கியிருந்த நேரம் ஒரு மணி நேரம்தான். அந்த ஒரு மணி நேரம் இந்தப் பூமியின் 360 ஆண்டுகளுக்குச் சமம் என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (தஃப்ஸீர் இப்னு கஃதீர்)

ஆதம் (அலை) அவர்கள் சுவனத்தில் இருந்தபொழுது பேசிய மொழி எது?

حدثنا محمد بن عبد الله الحضرمي؛ قال: حدثنا العلاء بن عمرو الحنفي؛ قال: حدثنا يحيى بن بريد الأشعري، عن ابن جريج، عن عطاء، عن ابن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: "أحبوا العرب لثلاث: لأني عربي، والقرآن عربي، ولسان أهل الجنة عربي". (طبراني، مستدرك)

மூன்று விஷயங்களுக்காக அரபிகளை நேசியுங்கள். ஏனெனில், நானும் அரபியாக இருக்கிறேன், அல்குர்ஆனும் அரபியாகும். சுவனவாசிகளின் மொழியும் அரபியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (தபரானி - முஸ்தத்ரக்)

மேற்கண்ட ஹதீதின் அடிப்படையில், அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுடன் அரபி மொழியில் உரையாடி இருப்பான் என்று  அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். அதுபோன்றே, சுவனத்தில் இருந்த பொழுது, ஆதம் (அலை) அவர்கள் வானவர்களுடனும், தமது துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களுடனும் அரபி மொழியில் பேசியிருக்கக் கூடும் என்றும் கருதுகின்றனர்.

ஆதம் (அலை) அவர்கள் பூமியில் இறக்கப் பெற்ற பின்னர் பேசிய மொழி எது?

ஆதம் (அலை) அவர்கள் சுவனத்தில் இருந்தவரை அரபி மொழியில் பேசினார்கள். தடுக்கப் பெற்ற மரத்தின் கனியை உண்ட பின்னர் அவர்களுக்கு அரபி மொழி மறக்கடிக்கப் பட்டு, சுர்யானி மொழியில் பேசினார்கள். பின்னர், அவர்கள் தவ்பா செய்த பின்னர், மீண்டும் அல்லாஹ் அவர்களுக்கு அரபி மொழியை ஞாபகப் படுத்தினான் என்று அறிஞர்கள் சிலர்  கூறுகின்றனர்.

ஆதம் (அலை) அவர்கள் அரபியில் பேசினார்கள் என்ற ஒரு கருத்தும், அரபி அல்லாத வேறு ஏதேனும் ஒரு மொழியிலும் அவர்கள் பேசியிருக்கக்கூடும் என்ற கருத்தும் அறிஞர்களிடத்தில் இருக்கின்றது.

ஆதம் (அலை) அவர்கள் இப்பூமிக்கு வந்த பின்னர் எந்த மொழியில் பேசியிருப்பார்கள் என்ற ஒரு முடிவுக்கு வரும் முன்னர், அவர்கள் பூமியில் எந்த இடத்தில் இறக்கப் பெற்றார்கள் என்று தெரிந்துகொண்டால், அதன் அடிப்படையில் இக்கேள்விக்கு ஒரு விடை காண இயலும்.

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் எங்கு இறக்கப் பெற்றார்கள்?

சுவனத்தில் தங்கியிருந்த ஆதம், ஹவ்வா (அலை) இருவரையும் ஷைத்தான் தடுக்கப்பட்ட மரத்தின் கனியினை ஏமாற்றிப் புசிக்க வைத்த பின்னர், அவர்களையும் ஷைத்தானையும், ஷைத்தான் சுவனத்திற்குள் நுழையத் துணை புரிந்த பாம்பையும் அல்லாஹ் சுவனத்தில் இருந்து வெளியேறி பூமிக்குச் சென்றுவிடுமாறு கட்டளையிட்டான்.

فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ  وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ  ‏ ( 2:36 )

பின்னர், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து பிறழ வைத்து, அவர்கள் இருவரும் எதிலிருந்தார்களோ அதிலிருந்து அவர்களை வெளியேற்றினான். மேலும், “நீங்கள் அனைவரும் இறங்கிச் செல்லுங்கள். உங்களில் சிலர் சிலருக்குப் பகைவராகவே இருப்பீர்கள். இன்னும், அப்பூமியில் உங்களுக்குச் சிறிது காலம் தங்குமிடமும் இன்பமும் உண்டு” என்று கூறினோம்.                                             (2:36).

وقال السدي : قال الله تعالى : اهبطوا منها جميعا  فهبطوا فنزل آدم بالهند ، ونزل معه الحجر الأسود ، وقبضة من ورق الجنة فبثه بالهند ، فنبتت شجرة الطيب ، فإنما أصل ما يجاء به من الهند من الطيب من قبضة الورق التي هبط بها آدم ، وإنما قبضها آدم أسفا على الجنة حين أخرج منها .

மேற்கண்ட வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது இமாம் ஸுத்தீ (ரஹ்) அவர்கள், நீங்கள் அனைவரும் அதிலிருந்து இறங்கிச் சென்றுவிடுங்கள் என்று இறைவன் கூறினான். அப்போது, ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் இறங்கினார்கள். அவர்களுடன் ஹஜ்ருல் அஸ்வத் கல்லும் சுவனத்து இலைகளில் ஒரு பிடியும் இறங்கின. அந்த இலைகளை அவர்கள் பூமியில் எறிந்தார்கள். அதில் இருந்து வாசனைப் பொருட்களைத் தரும் மரங்கள் முளைத்தன. இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் வாசனைப் பொருட்களின் மூலமானது, ஆதம் (அலை) அவர்கள் பூமியில் இறங்கிய போது கொண்டுவந்த சுவனத்தின் இலைகள்தாம்.  சுவனத்தில் இருந்து அவர்கள் வெளியேறிய பொழுது, சுவனத்திலிருந்து வெளியே செல்கின்றோமே என்று வருத்தமுற்று, அவர்கள் அவற்றை (நினைவுக்காக)க் கொண்டு வந்தார்கள் என்று கூறுகிறார்கள்.

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ ، قَالَ : حَدَّثَنَا عِمْرَانُ بْنُ عُيَيْنَةَ ، قَالَ : أَخْبَرَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : إِنَّ أَوَّلَ مَا أَهْبَطَ اللَّهُ تَعَالَى آدَمَ أَهْبَطَهُ بِدهنَاءِ أَرْضِ الْهِنْدِ

ஆதம் (அலை) அவர்கள் இந்தியப் பூமியில் ‘தஹ்னா’ எனும் இடத்தில் இறக்கப் பெற்றார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று ஸஈது இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

وعن الحسن البصري قال : أهبط آدم بالهند ، وحواء بجدة ، وإبليس بدستميسان من البصرة على أميال ، وأهبطت الحية بأصبهان . رواه ابن أبي حاتم .

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவிலும், ஹவ்வா (அலை) அவர்கள் ஜித்தாவிலும், இப்லீஸ் பஸராவிற்குச் சில மைல்கள் அருகில் உள்ள ‘தஸ்தமீஸான்’ என்ற இடத்திலும் இறக்கப்பட்டார்கள். பாம்பு இஸ்பஹான் என்ற ஊரில் இறக்கப்பட்டது என்று கூறுகிறார்கள் (அறிவிப்பவர் இப்னு அபீ ஹாத்திம்)

إن الله عز وجل أهبط آدم قبل غروب الشمس من اليوم الذي خلقه فيه , وذلك يوم الجمعة ، من السماء مع زوجته ، وأنزل آدم فيما قال علماء سلف أمة نبينا صلى الله عليه وسلم بالهند .

ஆதம் (அலை) அவர்கள் எந்த நாளில் படைக்கப்பெற்றார்களோ, அதே நாளில் சூரியன் மறையும் முன்னர் அவர்களை அல்லாஹ் அவர்களின் மனைவியுடன் வானில் இருந்து இறக்கினான். அந்நாள் வெள்ளிக் கிழமையாகும். இன்னும், நம்முடைய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய உம்மத்தினருள் ‘உலமாஉஸ் ஸலஃப்’  என்றழைக்கப்படும் முந்தைய அறிஞர்களின் கூற்றுப்படி, ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் இறக்கப் பெற்றார்கள். -(நூல்: தபரீ)
- இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்..
- அஃப்ளலுல் உலமா
- அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்.
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸ், சென்னை-600092.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு