
பொறையப்பாத்தாச்சாம்முள்ள.... ஆம்மா பள்ளியாசல்லேர்ந்து நகரா அடிக்கிற சத்தமும் கேக்குது.... அப்பொ இன்னக்கி த்ராவியா தொழுஹப் போகனும்....
ஊட்ல ஒட்ரெ அடிக்கனும் ஆள அனுப்பி உடு நாளக்கி...
இன்னக்கி ஊட்ல வாடா சுடனும் கடெத்தெருவுக்கு போயி கொஞ்சம் ராலு வாங்கிக்கிட்டு வர்ரிரியா?
நோன்புக் கஞ்சி காய்ச்சிறத்துக்கு எறெச்சிக்கடையில ஆட்டுத்தலையும், கொஞ்சம் நெஞ்செலும்பும் வாங்கிக்கிட்டு வர்ரியா?
அதுக்குள்ள சவுரு பக்கிர்சா வந்துட்டாரு சீக்கனம் எழும்புங்கல்வ்வோ...சஹருக்கு சோறு ஆக்கனும்.
இந்தம்மா அசரு தொழுவிட்டு பள்ளியாசல்லுக்கு டிப்பன் பாசு எடுத்துக்குட்டு போயி கொஞ்சம் கஞ்சி வாங்கிக்கிட்டு வந்துர்ரியாம்மா?
சஹருக்கு தயிரு ஒரக்கனும் அவ்வூட்ல கொஞ்சம் ஒர மோரு வாங்கிக்கிட்டு வந்திர்ரியா?
பேரிச்சம் பழம் முடிஞ்சி போயிரிச்சி....கிரானிக்கடையில வாங்கிக்கிட்டு வந்திர்ரிய்யா?
மாப்ளே, அசரு தொழுவிட்டு (செக்கடி, செடியன், வெட்டி) கொளத்துல குளிக்கப்போவோம் என்னா?
செத்த வாடாக்கார ஊட்டுக்கு போயி சம்சாவும், வாடாவும் வாங்கிக்கிட்டு வந்திர்ரிய்யாம்மா?
சர்வத்து கலக்கனும் இவ்வூட்லேர்ந்து கொஞ்சம் ஐஸ் கட்டி வாங்கிக்கிட்டு வாம்மா....
பரு மாவு முடிஞ்சி போச்சி நாளெக்கி அந்த மாவு இடிக்கிற பொம்புளைய ஊட்டுக்கு அனுப்புரியளா?
தையக்கடையில துணி தக்க குடுத்து எவ்ளோவ் நாளாச்சி? இப்புடி இன்னக்கி, நாளக்கிண்டு இழுத்தடிக்கிறாம்மா?
இன்னக்கி புள்ள தல நோன்பு புடிச்சிக்கிது....கலச்சி போயி என்னன்டோ போயிட்டாம்மா? கழுத்துல நெக்லஸெ போட்டு உடுவுளே....சாங்காலம் வாப்ச்சா ஊட்டுக்கு பத்தரமா கூட்டிக்கிட்டு போயிட்டு வாங்க...
கடப்பாசிய தட்டையில ஊத்தி ஆற வைய்யி நோன்புத்தொறக்க நேரமாச்சி.....
நாளக்கி சஹருக்கு உண்டக்கலியா செஞ்சிற வேண்டியது தான்....
பதுரு படைக்கி அரிசி மாவு ரொட்டியும், தேங்காயும் எடுத்து வைய்யிவுளே.....
த்ராவியா தொழிவிட்டு ஊட்டுக்கு வந்து பசியாறிட்டு வெளையாட போவலாம்.....
ஒரு நாளக்கி ரெண்டு ஜுசு ஓதுனாலே நோன்புக்குள்ள ரெண்டு குர்வான் முடிக்கலாம்..
சக்காத்து குடுக்க பேங்ல கொஞ்சம் சில்ரெ மாத்திக்கிட்டு வாம்மா..
நூர் லாட்ஜ்ல வாட் சம்சா (கறி சம்சா) இருவது ரூவாக்கி வாங்கிக்கிட்டு வாங்கங்க....
அப்புடியே மறந்துராமெ ரோஸ் மில்க் சர்வத்துக்கு ஜம்ஜா வெதெ கொஞ்சம் வாங்கிக்கிட்டு வாங்க...
நோன்பு நேரத்துல இப்புடி நொன்கு கடுக்காயா வாங்கிக்கிட்டு வந்திருக்கிர்ரியளே??? வயித்தெ கடுக்காது???
அவ்வொளுக்கு நோன்பு தொறந்ததும் தேத்தண்ணி குடிக்கனும்....நல்லா சுக்கு தட்டி போட்டு தேத்தண்ணி போட்டு சூட்டுக்கிளாஸ்ல ஊத்தி வைய்யி...
நோன்பு கடைசியில ஒரு மூணு நாளக்காச்சும் நம்ம முஹல்லா பள்ளியாசல்ல இஹ்திகாஃப்பு இரிக்கனும்ண்டு ஹாஜத்தா இரிக்கிது.
இன்னக்கி நம்ம பள்ளியில தம்மாம் உட்ராங்க....யார் ஊட்டு நார்சா? என்னா நார்சா?
மாப்ளே வர்ரியா அங்க போயி போர்வீட்டா, ஹார்லிக்ஸ், கல்கண்டு பாலு எதாச்சும் குடிச்சிட்டு வந்துர்லாம்மா???
நோன்பு நேரத்துல ராத்திரியில வெளியில சும்மா சுத்தாதிய ஆஹாது....
அந்த அஞ்சறெ பெட்டியெ எடு கஞ்சிக்கு கொஞ்சம் நச்சிரமிஞ்சிரம் அரச்சி போடனும்.
சின்னப்புள்ளயல்வொல்லாம் அங்கிட்டு போயி ஓரமா நிண்டு தொழுவுங்க.... பள்ளியாசல்ல ஓ ஓண்டு சத்தம் போடக்கூடாது.
மொம்க்ரபாஜியாரு (பரக்கத் ஸ்டோர்ஸ்) கடையில ரெண்டு குத்ரெ மார்க்கு வெள்ளெ வேட்டி எடுத்திக்கிட்டு வாங்க....
இன்னக்கி கவாபு சரியா வேவலெ....
வாசல்ல சாபரு நிக்கிறாஹ சில்லரெ காசு எடுத்துப்போடுவுளே....
நோன்புல காலையில ஒரு ஒஹமான வெயிலு அடிக்கிதும்மா...
அடுப்பு சரியா எரியல...பொகையா வருது...அப்புறம் கஞ்சியில பொகச்சுத்தி வாடெ வரப்போவுது....நல்லா அடுப்பெ எரிச்சி உடுங்க.....
அந்த அஞ்சறெ பெட்டியெ எடு கஞ்சிக்கு கொஞ்சம் நச்சிரமிஞ்சிரம் அரச்சி போடனும்.
சின்னப்புள்ளயல்வொல்லாம் அங்கிட்டு போயி ஓரமா நிண்டு தொழுவுங்க.... பள்ளியாசல்ல ஓ ஓண்டு சத்தம் போடக்கூடாது.
மொம்க்ரபாஜியாரு (பரக்கத் ஸ்டோர்ஸ்) கடையில ரெண்டு குத்ரெ மார்க்கு வெள்ளெ வேட்டி எடுத்திக்கிட்டு வாங்க....
இன்னக்கி கவாபு சரியா வேவலெ....
வாசல்ல சாபரு நிக்கிறாஹ சில்லரெ காசு எடுத்துப்போடுவுளே....
நோன்புல காலையில ஒரு ஒஹமான வெயிலு அடிக்கிதும்மா...
அடுப்பு சரியா எரியல...பொகையா வருது...அப்புறம் கஞ்சியில பொகச்சுத்தி வாடெ வரப்போவுது....நல்லா அடுப்பெ எரிச்சி உடுங்க.....
எல்லாரும் சஹருக்கு எழும்பாமெ தூங்கிட்டாஹ..அதுனாலெ இன்னக்கி எங்கூட்ல எல்லாரும் பட்னெ நோம்பு.
இன்னக்கி தண்ணி கொஞ்சம் தான் உட்டானுவோ...
நகரா அடிக்கிற கம்பெ சாபு ஒளிச்சி வச்சிட்டாரு..எங்கெங்க ஒளிச்சி வச்சியெ??
கரெக்டா பாங்கு சொல்ற நேரத்துல கெரண்டே வேணும்டே அமத்திப்புட்டானுவோ.....இருட்டுக்கசமா இரிக்கிதும்மா....அந்த முட்டவெளக்கெ ஏத்துவுளே....நெருப்பட்டியெ காணோம்.....
பாங்கு சொல்லப்போறாஹ சீக்கினம் தண்ணிய குடிச்சிட்டு நிய்யத்து வச்சிக்கிடுங்க....
இப்படி ஏராளம் சொல்லிக்கொண்டே போகலாம்.
சென்ற நோன்பில் நம்முடன் இருந்தவர்கள் இந்த நோன்பில் இல்லை. இந்த நோன்பில் இருக்கப்போகுபவர்கள் அடுத்த நோன்பில் இருப்பார்களா? நிச்சயமில்லை. எப்படியும் ஒரு நாள் அவனிடமே மீள வேண்டியுள்ளது.
யா அல்லாஹ்! காலஞ்சென்ற நம்மவர்களையும், மிச்சம் மீதியாய் எஞ்சியிருக்கும் எல்லோரையும் வர இருக்கின்ற புனித ரமழானின் பொருட்டு காத்தருள்வாயாக! பாவங்கள் யாவற்றையும் மன்னித்தருள்வாயாக! எஞ்சியிருக்கும் எங்கள் வாழ்க்கையை சிறப்பாக்கி, எல்லாம் சலாமத்தாக்கி வைப்பாயாக!
கப்ராளிகளின் எல்லாப்பாவங்களையும் இந்த சங்கை மிகுந்த ரமழானின் பொருட்டால் மன்னித்து பிழைபொறுத்தருள்வாயாக...சுவனபதியில் அவர்கள் அனைவரையும் சந்தோசமாய் சேர்த்தருள்வாயாக....ஆமீன். யாரப்பல் ஆலமீன்.
நல் நினைவுகளுடன்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது