Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label விருந்தோம்பல். Show all posts
Showing posts with label விருந்தோம்பல். Show all posts

அதிரைக்குத் 'தேத்தண்ணி' வந்த கதை (ஒரு செவிவழிச் செய்தி) 13

அதிரைநிருபர் பதிப்பகம் | May 12, 2016 | , ,


'வாவன்னா' குடும்பத்தைச் சேர்ந்த 'ஆவ்மி ஹாஜியார்' என்ற அஹ்மது முஹிதீன் ஹாஜியார் பாய்மரக் கப்பலுக்குச் சொந்தக்காரராகிப் பன்னாட்டு வணிகம் செய்த தனவந்தர். பெரும்பாலும் அவரது கப்பல் உள்நாட்டுத் துறைமுகங்களிலும், இலங்கையிலும், சிலபோது அரபு நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்யும் வழக்கம். இவ்வாறான பயணங்களுள் ஒன்றில், அப்போது அவர் தனது வணிகக் குழுவுடன் மக்காவிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தார்.

"முதலாளி! காற்று திசை மாறி அடிக்குது!" என்று குரல் கொடுத்த கப்பலோட்டியை நெருங்கிச் சென்ற ஹாஜியார், "கொஞ்ச நேரம் கப்பலை அதன் போக்கில் ஓடவிடு" என்று ஆணை பிறப்பித்தார். கப்பலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தேயிலைப் பொட்டலங்கள் அடங்கிய கள்ளிப் பெட்டிகள் மாலுமிக்குப் பாரமாகத் தெரிந்தது. வெள்ளையர்கள் அமெரிக்கத துறைமுகம் ஒன்றில் செய்தது போன்று, ('Boston Tea Party' ) அவற்றைக் கடலில் தள்ளிவிடலாமா என்றுகூட எண்ணினார் மாலுமி. முதலாளிக்கு பயந்து, அவ்வாறு செய்யவில்லை. சற்று நேரத்தில் அவர், "அந்தோ.... கோட்டைப்பட்டினத்து தர்ஹா தெரியுது" என்று உணர்ச்சிப் பெருக்கில் கூவினார்.

"ஓட்டு அந்தப் பக்கம்!" என்ற முதலாளியின் ஆணைக்கொப்ப, மாலுமி தன தலைப்பாகையை இறுகக் கட்டிக்கொண்டு கண்ணில் தென்பட்ட கரையை நோக்கிக் கப்பலைச் செலுத்தினார். ஒருவாறாக, பத்திரமாகப் பயணக் குழுவினர் கரையை அடைந்து, தரையில் கால் வைத்தபோது, "வாங்க, வாங்க" என்ற வரவேற்புக் குரல்களைக் கேட்டு வியந்து நின்றனர்! அவர்கள் அந்த ஊர்த் தலைவர்கள் என்பது பிறகுதான் தெரிந்தது. 'எல்லாம் இறைவன் செயல்' என்பதை உணர்ந்துகொண்ட ஹாஜியார், அவ்வூர்க்காரர்களின் வீடுகளில் நடந்த விருந்தோம்பலில் திக்குமுக்காடிப் போனார்.

ஹாஜியாரின் பார்வை எதையோ தேடிக்கொண்டிருந்ததை உணர்ந்த தலைவர் ஒருவர், "என்ன ஹாஜியார்!?" என்றார். "தேத்தண்ணியைத் தேடுறேன்" என்ற ஹாஜியாரிடம், "அது என்னது தேத்தண்ணி?!" என்றார் முன்னவர். "அது, நான் அரபு நாட்டில் இருந்தபோது அரபிகளோடு சாப்பிடும்போது மறவாமல் குடிக்கும் 'சுலைமானி' என்ற பானம்" என்று விளக்கிய ஹாஜியாரிடம், "அப்படி ஒரு சாமான் எங்களுக்குத் தெரியாது" என்று கைவிரித்தனர் அங்கிருந்தோர்.

"கப்பலில் இருக்கும் கள்ளிப் பெட்டி ஒன்றைத் திறந்து எடுத்து வா" என்ற ஹாஜியாரின் கட்டளையைச் செவியேற்று, அவரின் பணியாட்கள் சற்று நேரத்தில் தேயிலைப் பாக்கெட்டுகளை எடுத்துவந்தனர். சிறிது நேரத்தில் 'சுலைமானி' தயாராயிற்று. அனைவரும் அந்த அரிய பானத்தை அருந்தி மகிழ்ந்தனர்.

ஓரிரு நாட்கள் அங்கே தங்கி ஓய்வெடுத்த பின்னர், அந்த ஊர்க்காரர்களிடம் பயண வழிகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, ஹாஜியாரும் அவருடைய பயணக் குழுவும் சொந்த ஊரான அதிரைக்கு விரைந்தனர். "அல்லாடே காவலா போய்ட்டு வாங்க ஹாஜியாரே!" என்று கோட்டைப்பட்டினத்தார் வழியனுப்பிவைத்தனர்.

'கோட்டைப்பட்டினத்துக்குத் தெரியாதது நம்மூருக்கும் புதிதுதான்' என்று சிந்தித்த அஹ்மது முஹிதீன் ஹாஜியார், இன்று நாம் கணினி மென்பொருள்களை ஊரில் அறிமுகம் செய்வது போன்று, அன்று அதிரையில் அறிமுகம் செய்து வைத்ததுதான் 'தேயிலை' என்ற அற்புதப் பொருள்.

- அதிரை அஹ்மது

விருந்தோம்பலும் மின்னஞ்சலில் வந்த துஆவும் ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 03, 2014 | , , ,

விருந்தோம்பல் நம்முடைய கலாச்சாரத்தினூடே ஊன்றிய பண்புகளில் ஒன்று. இதனை யாரும் மறுக்க முடியாது, ஒதுக்கவும் இயலாது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு நெருங்கிய சொந்தமும் சொந்தங்களால் உண்டான பந்தமும் எங்களின் இருப்பிடம் தேடி காண வந்தார்கள்.

அந்த நெருங்கிய சொந்தமான எங்களைத் தேடி வந்த இளைஞரை சந்தித்து 17 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்றே நினைக்கிறேன் அவரை சிறுவனாகக் கண்டது அதுவும் ஒரே தெரு ஒரே சந்து, இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நேரில் சந்திக்கும் வாய்ப்பு மட்டுமல்ல மனம் திறந்த அந்த இளம் ஆலிம், அவர்களோடு உரையாடும் சந்தர்ப்பமும் தெளிவாக மார்க்கம் பேசும் தன்மையும் என்னை ரசிக்க மட்டும் வைக்கவில்லை சிந்திக்கவும் வைத்தன நிறையவே…

அவரோடு நீண்ட நேரம் அளவலாவியதும் அதன் பின்னர் இரவுச் சாப்பாட்டினை எங்களோடு ஒன்றாக இருந்து முடித்துக் கொண்டு கிளம்பினர்.

அவர் எங்களிடமிருந்து விடைபெற்று சென்றதும் அதே பிரம்மை அவர் பேசிக் கொண்டிருப்பது போன்றே! ஆனால் அவராக அல்ல, அவரின் தந்தையின் சாயலாக அவரின் அசைவுகளை அப்படியே அசைபோட்டேன். அவரின் தந்தையின் உடல்மொழியைப் போன்றே இருந்தது.

சரி இதை ஏன் இங்கே இதைச் சொல்றான்னு எந்திரிக்காதிய கொஞ்சம் இருங்க இருங்க…. அவர் இருப்பிடம் திரும்பிச் சென்றதும் எனக்கு ஒரு மின்ன்ஞ்சல் அனுப்பினார் அதுதாங்க மேட்டரே, ஆனால் இது வழமையாக நண்பர்கள் அல்லது விருந்தினர் வந்து விட்டுச் சென்றதும் அனுப்பும் நன்றி மடலாகவோ அல்லது சம்பிரதாய மின்னஞ்சலாகவோ அல்லாமல் வேறு விதமாக இருந்தது !

எல்லோரும் அனுப்புவது போன்ற மின்னஞ்சலின் துவக்கம் இருந்தாலும் அதன் உள்ளடக்கம் (உள்ளக் கிடைக்கைக்குள் அடைந்தது)

"And I really appreciated for the hospitality you have shown to me during my visit to Dubai, and may Allah shower his rahmath and blessings upon you in abundance (lot) .

கீழ் கண்ட துஆக்களை பொதுவாக நபி அவர்கள் விருந்து உபசரிப்பவர்களுக்காக வேண்டி அல்லாஹ்விடம் கேட்பார்கள்  

اللهُمَّ اَطْعِمْ مَنْ اَطْعَمَنَا وَاسْقِ مَنْ سَقَنَا

யா அல்லாஹ் யார் எங்களுக்கு உணவு கொடுத்தார்களோ அவர்களுக்கு நீ உணவு கொடுப்பாயாக இன்னும் எங்களுக்கு யார் பானம் புகட்டினார்களோ அவர்களுக்கு நீ பானம் புகட்டுவாயாக.

اللهُمَّ بَارِكْ لَهُمْ فِيْمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ  

யா அல்லாஹ் நீ அவர்களுக்கு வாழ்க்கையின் தேவையாக எதை கொடுத்து இருகின்றாயோ அதில் பரகத் செய்வாயாக, இன்னும் அவர்களை நீ மன்னிப்பாயாக மேலும் அவர்கள் மீது நீ கருணை காட்டுவாயாக.

اَفْطَر عِنْدَكُمُ الصَّائِمُوْنَ وَاَكَلَ طَعَامَكُمُ الْاَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلائِكَةُ

உங்களிடத்தில் நோன்பாளிகளை அல்லாஹ் நோன்பு திறக்க செய்வானாக மேலும் உங்களது உணவை நல்லவர்கள் சாப்பிடட்டுமாக, மேலும் உங்கள் மீது மலக்குகள் ரஹ்மத்தை பொழியும் படி அல்லாஹ்விடம் துஆ செய்யட்டுமாக .

Kind Regards"

இப்போ சொல்லுங்க எங்களைத் தேடி வந்த விருந்தாளியை அடிக்கடி வரவேண்டும் என்று அழைக்கத் தானே சொல்லும் நம் உள்ளம் !

இன்ஷா அல்லாஹ், இவர்கள் மட்டுமல்ல அனைத்து உறவுகளையும் நட்புகளையும் என்றுமே… !

அபூஇப்ராஹீம்

விருந்தோம்பலும் மின்னஞ்சல் வழி துஆவும்… 10

அதிரைநிருபர் பதிப்பகம் | December 18, 2011 | , , ,


விருந்தோம்பல் நம்முடைய கலாச்சாரத்தினூடே ஊன்றிய பண்புகளில் ஒன்று. இதனை யாரும் மறுக்க முடியாது.

அதிரைப்பட்டினத்தில் இருக்கும்போது என்று சொல்வதாதனால் சிறுவயதிலும் வெளிநாட்டுப் பயணம் நிகழ்வதற்கு முன்னரும் எதிர்பட்டவைகளைத்தான் மனதில் ஓடவிட்டு அசைபோடுகிறோம் அதற்கிடையில் விளம்பர இடைவேளை போல் அவ்வப்போது விடுமுறையில் சென்று வந்தால் அதனையும் உணர முடிகிறது.

இங்கே (துபாயில்) மூன்று வாரங்களுக்கு முன்னர் நெருங்கிய சொந்தமும் சொந்தங்களால் உண்டான பந்தமும் எங்களின் இருப்பிடம் தேடி எங்களைக் காண வந்தார்கள், அதில் இருவரை இடையிடையே இங்கேயும் ஊரிலும் சந்தித்து குசலம் விசாரித்து இருக்கிறேன், அடிக்கடி இல்லாவிடினும் அவ்வப்போது.

ஆனால், அந்த நெருங்கிய சொந்தம் என்று எங்களைத் தேடி வந்த இளைஞரை சந்தித்து 17 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்றே நினைக்கிறேன் அவரை சிறுவனாகக் கண்டது அதுவும் ஒரே தெரு ஒரே சந்து, இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நேரில் சந்திக்கும் வாய்ப்பு மட்டுமல்ல மனம் திறந்த அந்த இளம் ஆலிம், அவர்களோடு உரையாடும் சந்தர்ப்பமும் தெளிவாக மார்க்கம் பேசும் வாகும் என்னை ரசிக்க மட்டும் வைக்கவில்லை சிந்திக்கவும் வைத்தன நிறையவே…

அவரோடு நீண்ட நேரம் அளவலாவியதும் அதன் பின்னர் இரவுச் சாப்பாட்டினை முடித்துக் கொண்டு கிளம்பினர் அவரும் அவரோடு ஒன்றாக வந்திருந்த சொந்தங்களான நண்பர்களும்.

அவர் எங்களிடமிருந்து விடைபெற்று சென்றதும் அதே பிரம்மை அவர் பேசிக் கொண்டிருப்பது போன்றே ஆனால் அவராக அல்ல, அவரின் தந்தையின் சாயலாக அப்படியே அசைபோட்டேன் அவரின் தந்தை அபூபக்கர் ஹாஜியார் அவர்களின் உடல்மொழியைப் போன்றே, அவர்களின் வழக்காடும் மொழியாடலைப் போன்றே அவர்களின் மூத்த மகனின் சாயலும் குரலும் அப்படியே.

சரி இதை என்னடா இவன் ஏன் இங்கே இதைச் சொல்றான்னு எந்திரிக்காதிய கொஞ்சம் இருங்க இருங்க…. அவர் இருப்பிடம் திரும்பிச் சென்றதும் எனக்கு ஒரு மின்ன்ஞ்சல் அனுப்பினார் அதுதாங்க மேட்டரே, ஆனால் இது வழமையாக நண்பர்கள் அல்லது விருந்தினர் வந்து விட்டுச் சென்றதும் அனுப்பும் நன்றி மடலாகவோ அல்லது சம்பிரதாய மின்னஞ்சலாகவோ அல்லாமல் வேறு விதமாக இருந்த்து !

எல்லோரும் அனுப்புவது போன்ற மின்னஞ்சலின் துவக்கம் இருந்தாலும் அதன் உள்ளடக்கம் (உள்ளக் கிடைக்கைக்குள் அடைந்தது)

"And I really appreciated for the hospitality you have shown to me during my visit to Dubai, and may Allah shower his rahmath and blessings upon you in abundance (lot) .

கீழ் கண்ட துஆக்களை பொதுவாக நபி அவர்கள் விருந்து உபசரிப்பவர்களுக்காக வேண்டி அல்லாஹ்விடம் கேட்பார்கள்  

اللهُمَّ اَطْعِمْ مَنْ اَطْعَمَنَا وَاسْقِ مَنْ سَقَنَا

யா அல்லாஹ் யார் எங்களுக்கு உணவு கொடுத்தார்களோ அவர்களுக்கு நீ உணவு கொடுப்பாயாக இன்னும் எங்களுக்கு யார் பானம் புகட்டினார்களோ அவர்களுக்கு நீ பானம் புகட்டுவாயாக.

اللهُمَّ بَارِكْ لَهُمْ فِيْمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ  

யா அல்லாஹ் நீ அவர்களுக்கு வாழ்க்கையின் தேவையாக எதை கொடுத்து இருகின்றாயோ அதில் பரகத் செய்வாயாக, இன்னும் அவர்களை நீ மன்னிப்பாயாக மேலும் அவர்கள் மீது நீ கருணை காட்டுவாயாக.

اَفْطَر عِنْدَكُمُ الصَّائِمُوْنَ وَاَكَلَ طَعَامَكُمُ الْاَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلائِكَةُ

உங்களிடத்தில் நோன்பாளிகளை அல்லாஹ் நோன்பு திறக்க செய்வானாக மேலும் உங்களது உணவை நல்லவர்கள் சாப்பிடட்டுமாக, மேலும் உங்கள் மீது மலக்குகள் ரஹ்மத்தை பொழியும் படி அல்லாஹ்விடம் துஆ செய்யட்டுமாக .

Kind Regards
Mohamed Ibrahim "

இப்போது சொல்லுங்க எங்களைத் தேடி வந்த விருந்தாளியை அடிக்கடி வரவேண்டும் என்று அழைக்கத் தானே சொல்லும் நம உள்ளம் !

இன்ஷா அல்லாஹ், இவர்கள் மட்டுமல்ல அனைத்து உறவுகளையும் நட்புகளையும் என்றுமே… !

- m.nainathambi.அபுஇபுறாஹிம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு