Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உங்கள் கோபம் என்ன விலை? 55

அதிரைநிருபர் | March 31, 2011 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

அன்பான அதிரை நிருபர் வாசகர்களே…கொஞ்சம் இதைப்படிங்க...

என்னடா தன்னம்பிக்கை பற்றிய எழுதி வந்த நான் கோபத்தை பற்றி எழுதுறேன் நினைக்காதீங்க, கோபத்தை அடக்கி வாழ்ந்தால் அதுவே எல்லாருடைய தன்நம்பிக்கைக்கும் அடிப்படையாக அமையும்.

கோபம் கொண்டிருப்பது கொதிக்கும் இரும்பு உருளையை கையில் பிடித்து இருப்பதற்கு சமம்.. அது நம்மை அழித்துவிடும்.

கோபம் கொள்ளாமல் இருப்பவன் முட்டாள். ஆனால் அறிவுடையவன் அதை செய்யமாட்டான் என்ற பழமொழிகள் சொல்வதுபோல கோபம் கொடுமையானது.

ANGER IS ONLY ONE LETTER SHORT OF DANGER

கோபம் வருவது இயற்க்கைதான், பித்தப்பை இருக்கும்வரை கோபமும் குடி கொண்டு இருக்குமாம், (ஜாஹிர் காக்கா கன்ஃபாம் பிலீஸ்), ஆனால் அதை கண்ட்ரோல் பண்ணவும் முயற்சிக்கலாம்.

கோபம் வருவதுபோல் தெரிந்தால் “ அவுது பில்லாஹி மினஷ்சைத்தானிர் "ரஜீம்“ ஒதி கொள்ளும்போது பெரும்பாலும் கோபம் போய்விடும், ஆனால் சில பேருக்கு காது புடைத்து கொண்டு கோபம் குறையாமல் Maintain பண்ணும் அவங்களுக்காக இந்த ஆக்கம் (நான் கோபப்படுவது ரொம்ப குறைவு).

கோபம் என்னவெல்லாம் செய்யும் பாருங்கள்

கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரையும் உண்டு பண்ணும் மற்றும் மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.

கோபம் நாம் விரும்பதாக சம்பவத்தை நம்மை அறியாமல் செய்ய தூண்டிவிடும். பின்னர் அதற்காக வாழ்நாள் முழுவது வருந்தக்கூடிய நிலைக்கு தள்ளி விடும். கோபம் எத்தனை பேர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி விட்டது என்பதை நாம் வாழ்வில் கண்டு இருப்போம் தொட்டா சிணுங்கி கோபம் எல்லாருக்கும் ரொம்ப தொந்தரவை தரும்.

கோபம் எதுக்கெல்லாம் கொள்ளலாம்

கோபத்தினால் பல கேடுதல்கள் இருப்பினும், இந்த கோபங்கள் நம்மை பாழ்படுத்தாமல் பண்படுத்தும் சமுதாய திருத்துவதற்கு கொள்ளும்- சமயோஜத கோபம்.

பிள்ளை திருத்துவதற்க்கு உதவும் செல்ல கோபம்---ஜஸ் போல கரைந்துவிடும் இக்கோபத்தால் ஹெல்த் ரிஸ்க் எதுவும் இல்லை.

மனமில்லாலமல் மனைவி/கணவன் மேல் கொள்ளும் அனபு கோபம்- இதற்கு ஈசல் போல ஆயுள் கம்மி.

சரி எதை செய்தாலும் கோபம் குறையவில்லையா, இதை டிரை பண்ணுங்களேன்.

தொழுகையை சரிவர தொழுது வருவது கோபப்படுவதை மிகவும் குறைக்கும்.

ஒரு டம்ளர் தண்ணீர் குடிங்க,,,,சூடான தண்ணியை குடித்துவிடாதீங்க…. நிலமை தலைகிழா ஆகிடும் (தண்ணிய குடி,தண்ணிய குடி என்பது இதற்க்குதானோ)

ஒன்று முதல் பத்து வரை எண்ணுங்க ( கரெக்கட்டா).

கோபப்பட்டும் ஆள் இருக்கும் இடத்தில் இருந்து வெளியேறிவிட வேண்டும் (உதாரணத்துக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு காற்று வாங்க போய்விடலாம்).

கோபத்திற்கு காரணமாக இருந்த சம்பவம் எண்ணத்தில் இருந்து விடுபடாலாம் (எங்க தெருவில் ஒருவர் கோபம் வந்தால் 10 நாள் ஜமாத் சென்றுவிடுவார்,அதனாலயே அவர்கள் வீட்டில் அவரை உசுப்பேத்துவாங்க)..

கோபத்தின் போது முகம் விகாரமாகி, டார்வின் மனிதகுல தோற்றத்தை பற்றி (தவறாக) சொன்ன பொருள்போல் கலக்கலாக இருப்போம் இதை கண்ணாடியில் பார்த்து மகிழலாம் (கண்ணாடி பக்கத்தில் கருங்கல் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்)

தனியாக அமைதியாக இருக்கும் போது…நாம் கோபப்பட்ட சம்பவத்தை நினைத்து அதை எப்படி தவிர்த்து இருக்கலாம் என்று சிந்திக்கலாம்.

நீச்சல்,குளியல் செய்ய கோபம் குறையும் (தோப்பில் பம்பு செட்டு தண்ணியில் குளித்தால் கோபம் என்ன கோவலமே மறந்து போற அளவுக்கு மனம் மகிழ்ச்சியால் துள்ளும்).

கொஞ்சம் காய்கறி சேர்த்து கொள்ளவேண்டும். ( நாம் ஆட்களுக்கு கோபம் வருவதற்க்கு முதல் காரணமே இஞ்சி பூண்டு ஆனம் அதிகமாக சாப்பிடுவதுதான்).


நீங்க இதைப்படித்துவிட்டு கருத்து எழுதாமே போனாலும் நான் கோபப்படமாட்டேன் ;)

அலாவுதீன் காக்கா…..கோபத்தை பற்றி நம் மார்க்கம் என்ன சொல்கிறது? என்பதை இங்கு நீங்கள் பின்னூட்டமாகவோ அல்லது நேரம் கிடைத்தால் தனி ஆக்கமாகவோ இட்டால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். (நீங்கள் கோப்படமாட்டீங் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்).

அபுஇபுறாஹிம் காக்கா.. தேர்தல் நேரம் என்பதால் கோபப்படாத வாலிபர் இயக்கம் என்று புதிய ஒரு இயக்கத்தை எல்லாம் உருவாக்கி தேர்தல்ல போட்டியிட வச்சு ஒட்டுகேட்க வைச்சுடாதிங்க. அப்புறம் கோபப்படாத நமக்கு கோபம்வந்துடும்.

WHATEVER IS BEGUN IN ANGER ENDS IN SHAME

கோவப்படாத உங்கள்

--முகமது யாசிர்

முஸ்லீம் MP உவைஸியின் எழுச்சியுரை 11

அதிரைநிருபர் | March 30, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பானவர்களேவிக்கிலீக்ஸ் என்று கடந்த சில வாரங்கலாக  இந்திய பாராளுமன்றத்தின்  நேரத்தை வீண்டித்தார்கள். கிடைத்த சொற்பான நேரத்தில் சிறுபான்மையினர் கல்வி தொடர்பான விவாத்ததில் பங்கெடுத்துப் பேசினார் அன்பு சகோதரர் அஸாதுதீன் உவைஸி.MP இவரைப் போல் வரவேண்டும் ஒவ்வொரு முஸ்லீம் மேலவை உறுப்பினர்களும். இந்த காணொளியில் ஹைதிராபாத் MP அன்பு சகோதரர் அஸாதுதீன் உவைஸி அவர்கள் சிறுபான்மையினரின் அபிமானிகள் என்று வேசமிடும் அரசியல்வாதிகளை இங்கு எப்படி சாடுகிறார் என்பதை பாருங்கள்.

முஸ்லீம் அபிமானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகள் வெறும் அறிக்கைகள் மட்டுமே விடுகிறார்கள், இந்த மத்திய அரசால் சிறுபான்மையினருக்கான திட்டங்களை முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சட்டை பகிரங்கமாக வைக்கிறார். இவர் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பதால் மிகத்துணிச்சலாக பேசுகிறார். சிறுபான்மையினர் துறை அமைச்சருக்கு அவர் புள்ளி விபரங்களுடன் வைக்கும் கேள்விகளை கேளுங்கள் இதோ.



இவரைப்போல் சட்டமன்றத்திற்கு நாடாளுமன்றத்திற்கு நம் தமிழ் நாட்டிலிருந்து தைரியமாக ஆளுபவர்களை கேள்வி கேட்கும் திறன் படைத்தவர்களை முஸ்லீம்கள் ஒன்றிணைந்து தேர்தெடுக்க ஏன் மறுக்கிறோம் என்பது தான் வேதனை.
ஹைதிராபாத் MP அன்பு சகோதரர் அஸாதுதீன் உவைஸி இந்திய முஸ்லீம்களின் சார்பாக பேசுகிறேன் என்று சொல்லும்போது இவரை நிச்சயம் பாராட்டாமல் நம்மால் இருக்க முடியாது. இச்சகோதரர் மேலும் நம் சமுதாய மக்களுக்காக இன்னும் நிறைய பேசவேண்டும். இவரின் பேச்சை பார்த்தாவது மற்ற முஸ்லீம் உறுப்பினர்களும் சுறனையுடன் மக்கள் நலனின் அக்கரைகொண்டு தங்களின் குரலை அனைத்து சட்ட மேலவைகளிலும் உயர்த்தவேண்டும் மக்கள் நலனுக்காக மட்டும்.
அதிரைநிருபர் குழு

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லகாலம் பொறந்திருக்கு 15

அதிரைநிருபர் | March 29, 2011 | , , ,

நீண்ட நாட்களுக்கு முன் நக்கீரனில் படித்த ஞாபகம். சர்க்கரை நோய்க்கு மருந்து கிடைப்பதாகவும் தற்பொழுது நமதூரில் பலபேர் சென்று மருத்து வாங்கி சாப்பிட்டு நலமாக இருப்பதாகவும் கேள்விபட்டேன். நமதூர் பைத்துல்மால் சார்பாகவும் சர்க்கரர மருத்து  கொடுக்கும்  அம்மருத்துவரை  அழைத்து வந்து ஐம்பது நபருக்கு மருந்து கொடுத்திருகிறார்கள்.

சர்க்கரை நோய்க்கு எளிய இந்த இயற்கை மூலிகை மருந்து  சதீஸ்கர் மாநிலம் - துர்க் என்ற ஊரில் கிடைக்கிறது.

சர்க்கரை நோயினால் அவஸ்தைப்படும் அதிரை சகோதர, சகோதரிகளுக்கு ஒரு நல்ல செய்தி இங்கே போய் வைத்தியம் பார்த்தவர்கள் நலமாக இருப்பதாக சொன்னார்கள்.

சதீஸ்கர் மாநிலம் - துர்க் சென்று அடைத்தவுடன் மருந்து கொடுக்கும் ஜும்மா மசூதி சென்று முன் பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ளவேண்டும்.

காலை எழுந்த உடன் பல் துலக்கி, (பேஸ்ட் போட்டு பல் துலக்கக்கூடாது ) குளித்து முடித்து, வெறும் வயற்றில் தண்ணீர் கூட குடிக்காமல் காலை7 மணியளவில் மசூதிக்கு சென்று அமர்துவிட வேண்டும்.

முன்பதிவு நம்பர் படி அழைத்து உள்ளங்கை அளவிற்கு மருந்து தருவார்கள். அதனை ஒரு பெரிய டம்ளரில் கொட்டியபின் அதில் பாலை ஊற்றி மருந்து தீரும் வரை குடிக்கச் செய்கிறார்கள் குடித்த பின் ஒரு வாய் தண்ணீர் கொடுத்து உட்கார வைக்கிறார்கள்.

கூறும் அறிவுரைகள் : மருந்து சாப்பிட்டபின் தொடர்ந்து 4.00 மணி நேரத்திற்கு தண்ணீர் உணவு, புகைபிடித்தல் போன்றவை கண்டிப்பாக எடுத்துகொள்ளக்கூடாது. 4.00 மணி நேரம் கழித்த பின் நீங்கள் ஒதுக்கி வைத்த சாப்பாடு அனைத்தும் வயறு நிறைய சாப்பிடவேண்டும் .

பத்தியம்:

உணவில் புளி, கத்தரிக்காய், மாங்காய் கண்டிப்பாக இரண்டு மாதங்களுக்கு சேர்த்துக் கொள்ள கூடாது.

மருந்து குடித்த பின் ஏற்படும் உமிழ்நீர் ஓமட்டலுடன் கூடிய உமிழ்நீர் ஆகியவற்றை கண்டிப்பாக துப்பக் கூடாது. இருமல் ஏற்பட்டு அதனால் வரும் சளியை துப்பலாம்.

வீட்டிற்கு சென்ற பின் சர்க்கரை அளவு உயர்வு தெரிந்தால் இரண்டு நாட்களுக்கு மட்டும் நீங்கள் பயன்படுத்தி வந்த சர்க்கரை மாத்திரையை உட்கொண்டு அதன் பின் சுத்தமாக சர்க்கரை மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.

30 நாட்களுக்கு பிறகு சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்ளவும் அதில் சர்க்கரை அளவு நார்மலுக்கு வந்திருப்பதை காண்பீர்கள்.

இன்சுலின் பயன்படுத்துபவர்கள் சூரண மருந்தை இரண்டு நாட்களுக்கு சாப்பிடவேண்டும்

மருத்துவத்துக்காக சதீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் செல்பவர்கள் ஹிந்தி தெரிந்தவர்களுடன் சென்றால் மிகவும் நலம்.

இச்செய்தியின் நம்கத்தன்மையை உறுதி செய்யவேண்டியது அவசியம். இந்த மருத்துவம் பற்றி யாராவது கேள்வி பட்டால் இங்கு உங்கள் கருத்துக்களை அறியத்தாருங்கள்.

ஆங்கில மருத்துவத்தின் ராசாயன கலவை மருந்துக்களால் குணப்படுத்த முடியாத நோய்களை மூலிகை மருந்துக்கள் குணப்படுத்தியுள்ளதை செய்தி ஊடகங்களில் நாம் காணமுடிகிறது. சிலர் வியாபார நோக்கத்தின் பெயரில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி வந்து முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதால், இயற்கை மூலிகை மருத்துவத்தை மக்கள் "போலி" என்ற மனநிலையிலேயே இன்னும் உள்ளார்கள்.

தீராத நோய்களுக்கு இவ்வுலகில் மருத்துக்கள் உள்ளது. மக்கள் மனது மாறவேண்டும். இயற்கை மருத்துவத்தில் இது அதிகம் சாத்தியம். சகோதரர் ஜாஹிர் அவர்கள் எழுதியது போல் மருத்துவ சேமிப்பு திட்டம் தீட்டி செயல்படுத்தி நோய்களுக்கு செலவழிக்க நினைத்தாலும் நம் வருமானம் போதாது இந்த நவீண மருத்துவ வியாபாரயுகத்தில்.

சர்க்கரை நோய் தொடர்பான மேலும் நல்ல பதிவுகளை அதிரைநிருபரில் பதியுமாறு அன்புடம் கேட்டுக்கொள்கிறேன்.

--அபு இஸ்மாயில்

தேர்தல் விவாதக் களம் - 3 35

அதிரைநிருபர் பதிப்பகம் | March 28, 2011 | ,


அன்பிற்கினிய வாசக நேசங்களே :

இந்தத் தேர்தலில் குறிப்பிட்டுச் சொல்ல அரசியல் கட்சிகளுக்கே இல்லாத சுறுசுறுப்பு பறக்கும் படை படபடப்பு நமது தேர்தல் ஆணையத்திடம் காண முடிகிறது அவர்கள் முடுக்கிவிட்டிருக்கும் செயல்கள் இன்றையச் சூழலில் பெரும் விவாதமாக உருவெடுத்து கலக்குகிறது. இதோ உங்களின் பங்கிற்கு வாருங்கள் விவாதிக்கலாம்.

மிக முக்கியமாக விவாதிப்பவர்களோடு தனிமனித தாக்குதல் இன்றி நளினமாக கருத்துக்களை எடுத்து வையுங்கள் மறுப்புகளிருப்பினும் வாதிடுங்கள். வாசகர்கள் மத்தியில் தனிமனித அல்லது தரக்குறைவான வாதங்களோ அல்லது சாடலோ இருந்தால் அந்தக் கருத்துக்களை நெறியாளர் உடணடியாக நீக்கம் செய்திடுவாருங்க !

- அதிரைநிருபர்-குழு

தேர்தல் விவாதக் களம் - 3

இந்திய தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தல் கெடுபிடிகள் - அவசியமானதா / அடாவடித்தனமா ?

தேர்தல் ஆணையத்தின் தேடுதல் வேட்டை (சோதனைகள்) பாதிப்புக்கு உள்ளாவது அரசியல்வாதிகளா / வணிகர்களா / மக்களா ?

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 2 11

அதிரைநிருபர் | March 28, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.

அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ‘’நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! கூலியை அதிகம் பெற்றுத்தரும் தர்மம் எது?' என்று கேட்டார். 'நீ ஆரோக்கியமாகவும், ஏழ்மையை பயந்து, செல்வத்தை எதிர்பார்த்திருக்கும் ஏழையாகவும் இருக்கும் நிலையில் நீ தர்மம் செய்வதுதான். உயிர் தொண்டைக்குழியை அடைந்து, இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு என நீ கூறும் நேரம் வரை, (தர்மம் செய்ய) தாமதிக்காதே' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘’  (புகாரி, முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 90)


அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ‘’'நரகம், மனோ இச்சைகளால் திரையிடப்பட்டுள்ளது. சொர்க்கம், கஷ்டங்களால் திரையிடப்பட்டுள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘’ (புகாரி, முஸ்லிம்).  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 101)

ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்: '(உணவை உண்டு முடித்ததும்) விரல்களையும், தட்டையும் நன்கு சுத்தம் செய்து (சாப்பிட) கட்டளையிட்ட நபி(ஸல்) அவர்கள், ''நீங்கள் அந்த உணவில் எதில் பரக்கத் உள்ளது என்பதை அறிய மாட்டீர்கள்' என்று கூறினார்கள். (முஸ்லிம்).

முஸ்லிமின் மற்றொரு அறவிப்பில் கீழ்கண்டவாறு ஹதீஸ்கள் உள்ளது:

1) 'உங்களில் ஒருவரின் ஒரு பருக்கை உணவு கீழே விழுந்து விட்டால், அதை அவன் எடுக்கட்டும்! அதில் உள்ள அசுத்தத்தை நீக்கட்டும். பின்பு அதை சாப்பிடட்டும்! ஷைத்தானுக்காக அதை விட்டு விட வேண்டாம். தன் விரலை சூப்பி சுத்தம் செய்யும் முன் தன் கையை துண்டில் துடைக்க வேண்டாம். நிச்சயமாக தன் உணவில் எதில் பரக்கத் (அபிவிருத்தி) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

2) நிச்சயமாக ஷைத்தான், உங்கள் ஒவ்வொரு செயலின் போதும் ஆஜராகிறான். இதுபோல் ஒருவர் சாப்பிடும் போதும் ஆஜராகிறான். உங்கள் ஒருவரிடமிருந்து ஒரு பருக்கை விழுந்துவிட்டால், அதில் உள்ள அசுத்தத்தை(தூசியை) நீக்கி விட்டு, சாப்பிடட்டும்! ஷைத்தானுக்கு அதை விட்டு விட வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (ரியாளுஸ்ஸாலிஹீன்: 164)

அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: 'என்னை மறுத்தவர் தவிர என் சமுதாயத்தினர் அனைவரும், சொர்க்கத்தில் நுழைவார்கள்!' இறைத்தூதர் அவர்களே! மறுப்போர் யார்? என்று கேட்கப்பட்டது. 'எனக்குக் கட்டுப்பட்டவர், சொர்க்கத்தில் நுழைவார். எனக்கு மாறு செய்தவர், என்னை மறுத்தவராவார்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ' (புகாரி).
( ரியாளுஸ்ஸாலிஹீன்: 158)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''.
(நூல்: புகாரி,முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

-- அலாவுதீன். S.


போடுங்கம்மா ஓட்டு ! 42

அதிரைநிருபர் | March 27, 2011 | , ,

ஊர்களுக்குள் ளெல்லாம்
கார்களின் ஊர்வலம்
வேட்பாளர் வாக்காளர்
திருவிழா ஆரம்பம்!

ஓட்டுக் கேட்கும்
கூட்டமொன்று
வீட்டு வாசல் வரும்
மாட்டு வாயில் தீணியாக
கேட்டதெல்லாம் தரும்!

கொசுத் தொல்லையையும்
மீறும்
வேட்பாளர்களின்
சொகுசுத் தொல்லைகள்!

முத்திரை குத்துமுன்
புத்தியை செலுத்தனும்
அத்தனை பேரையும்
ஆராய்ந்து பார்க்கனும்!

உடன்பிறப்பைத் தூக்கி
கடல்பரப்பில் போட்டாலும்
கட்டையிலே போகாமல்
கட்டுமரமா மிதப்பாராம்!

ரத்தத்தின் ரத்தமோ
பித்தத்தின் உச்சத்தில்
கொடநாடு போகுமுன் - இவர்பாதம்
தொடநாட வேண்டுமாம்!

தங்கபாலு ஒரு
தண்ட ஆளு!
எத்தனைக் காத்திருப்பாரோ
மத்தியிலிருந்து முடிவு வரவும்
மண்டையின்
மத்தியிலிருந்து முடி வளரவும்!

கேப்டனுக்கு எதிரா
யாரு நின்னா என்ன?
பாகிஸ்தான் தீவிரவாதின்னு
சொன்னா போதும் ஜெயிக்க!

மருத்துவர் காட்டில்
மாறி மாறி மாரி
தாவி தாவி ஐயா
தலை சுத்து தைய்யா!

வைகோவுடன் கைகோர்க்க
ஆருமில்லே அய்யகோ,
காவிக்குள்ளே ஐக்கியமானா
கருப்புக்குள்ளும் களங்கம்!

எத்தி வைக்க வேண்டிய
இயக்கங்க ளெல்லாம்
இளைஞர்களுக் கிடையே
வத்தி வைக்கின்றன!

புத்தி சொன்ன தேதி போய்
குத்திக் கொன்ன சேதிகள்
பத்தி பத்தியாய்
பத்திரிக்கையில்!

மத்தியிலும் மாநிலத்திலும்
அத்தி பூத்ததுபோல்
குத்தியிருக்கும் நம்மவர்
கத்திப் பேசினாலோ
லத்தி யடிதான்!

அதுவின் ஓட்டு அதுக்கு
இதுவின் ஓட்டு இதுக்கு
நம்ம ஓட்டு நமக்கா -இல்லை
நமக்கு நாமே ஆப்பா?

-- சபீர்
--Sabeer.abuShahruk

அகல இரயில் பாதையும் மீட்டர் கேஜ் மனதும் - MSM R 7

அதிரைநிருபர் | March 26, 2011 | ,

அகல ரயில் பாதைக் கேட்டு சகோதரர் அ.இ.அப்துல் ரஜாக் (சேஸ். காம் ) தகவல் அறியும்  சட்டம் மூலம் விண்ணப்பம் செய்துள்ளார். புது தில்லிக்கும் ,ரயில்வே அமைச்சுக்கும் , முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கும் அணுகப் போவதாக கூறி ,'வெளி நாட்டில் வாழும்  அதிரை அன்பர்கள் அனைவர்களும் இந்தியத்தூதர் அலுவலகங்கள் மூலமும் விண்ணப்பித்தால் மிக நல்லதாகும்' என்ற கருத்தினை முன் வைத்தார்.

இந்த சிறப்பு விண்ணப்பத்திற்காக ஜித்தாவில் Ayda ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்து கலந்து ஆலோசித்தது .எமது கோரிக்கையை தூதரகம் Attestation செய்து தரவேண்டும் என தொலைபேசியில் அனைவர் முன்னிலையில் Welfare கான்சல் அவர்களை கேட்டுக் கொண்டேன்.

ஊர் நலனுக்காக அனைவரும் ஒன்று பட்டு முன்வருவதை வெகுவாக அவர் பாராட்டுவதை ஸ்பீக்கரில் எல்லோரும் கேட்டு இன்புற்றனர். மேலும் சட்டரீதியாக இதை நாங்கள் அட்டெஸ்ட் செய்யமுடியாவிட்டாலும், நட்பின் அடிப்படையில் நம் இனிய தமிழ் மக்களுக்காக ' மனு ஏற்றுக்கொண்டதாக ஒரு Approval செய்து தருவதாகவும் மற்றும் தில்லிக்கு இதை Forward செய்து தருவதாகவும் ஒப்புக் கொண்டார்.

அஃதன்றி, Saudi Fisheries company க்கு மீனவ விசாவில் வந்து மாட்டிக் கொண்ட ஒரு தமிழரின் அவலநிலையை விளக்கினார். சம்பளமின்றி துன்புறும் அறுவரின் பரிதாப நிலையையும் , அதில் ஒருவரின் சுகவீனம் - இரண்டு மாதத்திற்கும் மேலாக "கோமா" வில் மருத்துவ மனையில் கிடந்து மறுபிறவி எடுத்து வந்துள்ளபோது பாஸ்போர்ட்டும் இக்காமா(Resident Permit) ம் காலாவதி ஆகிவிட்டதாம்.


அந்த தமிழரை ஊருக்கு அனுப்ப எம்பாசியே கையை முறிக்கித்தினறிக் கொண்டிருக்கையில், "நீர்  எவரும் பெரிதாக பொருளோ -பணமோ-மருந்தோ கொடுத்து உதவ முடியாவிட்டாலும் ஆறுதலாக ஹாஸ்பிடல் சென்று பாருங்க சார்" என்று அழாத குறையாக கேட்டுக் கொண்டார்.

இதுவரை அவருக்கு உதவி ஒத்தாசையாய் பார்த்து வந்துள்ளது ஒரு மலையாளியும் ,ஒரு ஸ்ரீலங்காத் தமிழருந்தானாம். இங்கு சவூதியில் கிட்டத்தட்ட ஆறு அமைப்புகளில் சிற்சில பொறுப்புகளில் இருந்து வரும் யான் எந்த அமைப்பின் லேபிளில்(லும்) இந்த சேவை செய்யலாம்..?!. முன்னுரிமை கொடுத்து அதிரை அன்பர்களுக்கு அழைப்பு விடுத்து அயர்ந்து போனதே மிச்சம்! அதிரைக் காரர்களுக்கு விளம்பரம் பெறுவது தங்களுக்கு வெருப்பைத்தரலாம். ஆனால்,இச்சேவை மூலம் கான்சல் அவர்களின் விருப்பத்தை பெறலாம் அல்லவா..?!

அகல ரயில் பாதை சீக்கிரம் வருகிறதோ...இல்லையோ ... மீட்டர்கேஜ்லிருந்து நம் இதயங்கள் ஒரு சில செண்டி மீட்டராவது அகலமாகவேண்டும்!!!

-- MSM ராஃபியா

தேர்தல் விவாதக் களம் - 2 54

அதிரைநிருபர் பதிப்பகம் | March 26, 2011 | ,


அன்பிற்கினிய வாசக நேசங்களே :

மிக முக்கியமாக விவாதிப்பவர்களோடு தனிமனித தாக்குதல் இன்றி நளினமாக கருத்துக்களை எடுத்து வையுங்கள் மறுப்புகளிருப்பினும் வாதிடுங்கள். - வாசகர்கள் மத்தியில் தனிமனித அல்லது தரக்குறைவான வாதங்களோ அல்லது சாடலோ இருந்தால் அந்தக் கருத்துக்களை நெறியாளர் உடனடியாக நீக்கம் செய்திடுவாருங்க !

_________________________________________________________

தேர்தல் விவாதக் களம் - 2

கை கொடுப்பாளா - தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 'கதாநாயகி' தேர்தல் அறிக்கை ?

சிறுபான்மையினர்களுக்கு...

* தலித் கிறித்தவர்களும் ஆதிதிராவிடர் பட்டியலில் இடம்பெறுவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். சிறுபான்மை சமுதாயத்தினருக்கான ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துவோம். சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்த பரிசீலிப்போம்.

* சிறுபான்மையினருக்கு சிறப்புக் கல்வித் திட்டம்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஈடுகொடுப்பாளா - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் (முன்னால்) கதாநாயகியின் (தேர்தல்) அறிக்கை ?

சிறுபான்மையினர்களுக்கு...

* தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகி உள்ள துறைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக உருவாக்கப்படுவர்.

* தொழில் தொடங்க முனைவோருக்கு 25 சதவீத மானியத்தில் கடன் உதவித் தொகை வழங்கப்படும். அரசுப் பணியில் காலி இடங்கள் நிரப்பப்படும். புதிய வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




- அதிரைநிருபர்-குழு


"தேர்தல் களம்-வாக்குறுதிகள்"

வரும் தேர்தலுக்கு வாக்குறுதிகளை இரு பிரதான கட்சிகள் அள்ளி வீசி இருக்கின்றது.பலவிதிமுறைகளை அவ்வப்போது கொண்டு வரும் தேர்தல் கமிசன் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளையும் ஒப்புதலுக்கு பின் தான் வெளியிட முடியும் என்ற நிலையைக் கொண்டு வர வேண்டும்.

செயல் படுத்த முடியாத அல்லது எதிர்கால முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள திட்டங்கள் ஏதுமிருப்பின் அதை தேர்தல் கமிசன் தடுத்து நிறுத்த வேண்டும்.இப்போதைய வாக்குறுதிகளை பார்த்தால் கவர்ச்சியை தவிர வேறு அதிக நலத்திட்ட வாக்குறுதிகள் இல்லை.

ஏற்கனவே மின் தடைக்கு புகழ் பெற்ற நம் தமிழ் நாட்டில் மிக்சி கிரைண்டர் என அனைவருக்கும் கிடைத்து விட்டால் சொல்லவே தேவையில்லை மின்சாரத் தட்டுப்பாடு எப்படி இருக்குமென்று! ஏற்கனவெ இயற்கை காற்றிலேயே படுத்துப் பழகிப்போன குடிசைவாசிகளுக்கு மின்விசிறியும் வழங்கிவிட்டால் அதையும் அனைவரும் பயன் படுத்தி மின் கட்டணம் ஒருபுறமிருக்க மேலும் மின் பற்றாக்குறை தான் வரும்.இதற்கெல்லாம் முழுமையான தீர்வான புதுப்புது மின் உற்பத்தி திட்டங்கள் ஏதும் முழுமையாக இல்லை.

ஏழை இருக்கும் வரை இலவசம் தொடருமாம் ஆனால் ஏழ்மை ஒழிப்பு திட்டம் ஏதுமில்லை. ஆடுகள் அவற்றின் பெருக்கத்திற்காக ஒழிய மாமிசத்திற்கென்று ஆகி விடக்கூடாது. தேர்தலுக்கு முன் பெற்றால் லஞ்சம், பின் பெற்றால் அதற்கு பெயரென்ன? இந்த வாக்குறுதிகள் தேர்தலுக்கு பின்னாடி பெறும் லஞ்சம் தானே!

குற்றங்கள் ஒழிப்பு,திருட்டு தவிர்ப்பு,கலவரத்தடுப்பு,சாலை மேம்பாடுகள்,போக்குவரத்தை எளிதாக்க மேம்பாலங்கள், சுகாதாரம்,புதுப்புது தொழிற்ச்சாலைகள் உருவாக்குதல், ஏற்றுமதி,விவசாய நவீன யுத்திகள்,வேலை வாய்ப்பை பெருக்குதல்,படிப்பின் தரத்தை உயர்த்துதல்,விலைவாசி குறைப்பு,மது ஒழிப்பு இதற்கான திட்டம் ஏதும் முழுமையாக இல்லை.சுருக்கமாகச் சொன்னால் நாளைய ஆட்சியை பிடிப்பதற்கு மட்டுமே இந்த கவர்ச்சி வாக்குறுதிகள்.
 
இப்போ சொல்லுங்க உங்கள் கருத்துக்களை எந்த கட்சி தேர்தல் அறிக்கை வெல்லும் இந்த தேர்தலில்?
 
-- M. H. ஜஹபர் சாதிக்

இவர்களும் அதிரைநிருபர்களே - கிரவ்னுரை 28

அதிரைநிருபர் | March 25, 2011 | , ,

"நம் யாவராலும் நன்கு அறியப்பட்ட கவிக்கு விளக்கவுரை கொடுத்திடும் "வார்த்தை விளையாட்டின் எழில்" பதிந்திருக்கும் கிரவ்னுரை சிறப்புப் பதிவு :"

அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாபுகழும் அல்லாஹுக்கு மட்டுமே!அல்லாஹ் நம் பாவங்களை மன்னிப்பானாக..இவர்களும் அதிரை நிருபர்களே! ஒவ்வொருவரின் குணாதிசயங்களை அவர்களின் பங்களிப்பை மட்டுமே வைத்துக்கொண்டு கிட்டதட்ட நெருங்கி பழகியதைப் போல் மிக சரியான அளவுகோலில் அளந்த சகோ.சபீர் அவர்களை கண்டு வியக்கிறேன். ஏதோ நம் நிழல் போல் வந்து நம்மை அறிந்து , நம் குணங்கள் தெரிந்து பின் கருத்திட்டது போல் ஒவ்வொருவரைப்பற்றியும் உள்ளங்கையில் நெல்லி கனி போல் சொன்னவிதம் அல்ஹம்துலில்லாஹ் அருமையிலும் அருமை. சிலரிடம் அவர்கள் பல காலம் கூடஇருந்து பழகி எழுதி இருக்கிறார்கள். ஆனால் இங்கு குறிப்பிட்ட நபர்களை பற்றி செவிவழி கேட்டதும், தீர ஆராய்ந்தும், அவர்களின் படைப்பான எழுத்தின் தன்மையை வைத்து கனித்ததும் வியத்தகு சாதனை.அல்ஹம்துலில்லாஹ்.


இவர்கள்

அதிரை அஹ்மது காக்கா:

தமிழுக்கு தாதா...
இங்கிலீஸுக்கு துரை!
தமிழில்...
தன்னிகரற்ற
தனிக்காட்டு ராஜா!
இலக்கணம் உடுத்திய
இதயத்தில் இளைஞர்!
மரபுடைத்தோ
மரபை உடைத்தோ
இவர்கள்மேல் என்றும்
எமக்குப் பிரியம்!

மிக நேர்த்தியான சரியான கணிப்பும்,விளக்கமும்.இந்த அதிரை ஈன்ற "கோ"மகனை பற்றி இன்னும் சொல்லலாம். ஆனாலும் சபைக்கு போதுமான அளவில் பறிமாற பட்ட செவிக்குணவு இது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதம்.பலவிதம்.
-------------------------------------------------------------------------------------

ஆசான் ஜமீல் காக்கா:

புதையல் தேடி
ஜமீனைத் தோண்டு - அறிவு
பொக்கிஷம் வேண்டி
ஜமீல் காக்காவைத் தூண்டு!
கற்பித்தலும் கற்றலும்
காக்காவின் கண்கள்!
தமிழ்...
தன்னை
அலங்கரித்துக் கொள்கிறது-
அதி-அழகு ஆசானின்
ஆணைக்குட்படும்போதெல்லாம்!

இவர்களைப்பற்றி பார்த்து பழகியதை சொன்னதால் அப்படியே சொல்லிவிட்டார்கள். மேலும் நான் பார்த்தவரை இவரின் வார்தையை நான் வழி மொழிவதுதான் சாலச்சிறந்தது.
-------------------------------------------------------------------------------------

சகோ. ஷாஃபி:

வலைப்பூவின்
தலைப்புக்கு
முழக்கம் தந்தவர்.
தர்க்கங்களின்போது
தகிக்கும் தமிழ்...
வாழ்வியல் வசனங்களில்
வருடும்...
இவர்கள்
வார்த்தெடுக்கும் மொழி!

இவர் வார்தெடுக்கும் மொழியும், ஆதாரங்களை தோன்டி எடுக்கும் லாவகமும். தொல் பொருள் ஆராட்சியாளார் தோற்பார் இவரிடம். உண்மை வரும் வரை எந்த ராசா ஆனாலும் விடாப்பிடியாய் வழிக்கு கொண்டுவரும் விடாகண்டன் அன்பு சகோதரன். சி.பி.ஐ அலுவலர்கள் இவரிடம் பணி நிமித்தம் பயிற்சி எடுத்தால் ஸ்பெக்ட்ரம் எல்லாம் வெளியில் வந்துவிடும். இவரிடம் அந்த கேசு போய் இருந்தால் ராசாவுக்கும்,அவன் ராசா(கருணாநிதி)க்கும் களிதான் போங்க.
-------------------------------------------------------------------------------------

என் ஜாகிர்:

இவன்
படைப்பை
படிக்கையில்
புகைப்பட வாயிலும்
புன்னகை பூக்கும்....
கசப்போ கரிப்போ
இவன்
கையெழுத்தில் இனிக்கும்!
தீய சக்திகள்
தீண்டாமல் வாழ
இவன் சிந்தனயை
தினமும்
மூன்று வேளை
உணவுக்குப் பின்
உட்கொள்ளவும்!

கவியோடு சேர்ந்த நால்வர் படையில் ஒரு சேனை.கவி நண்பனுக்கும் சிலனேரம் இடுவார் ஆனை! நம் கவியால் படிக்கப்பட்ட ,கவியையும் நன்கு படித்த நகமும் சதையும்.இவரின் குணம் கான இவரின் எழுத்தே கண்ணாடி. இவரின் முன்னாடி நிற்றாலே நோய் ஓடிப்போய்விடும் என்பது திண்ணம் சரிதானே கவிஞரே உங்கள் நண்பரைப்பற்றிய என் எண்ணம்!!!!
-------------------------------------------------------------------------------------

சகோ. ஹாலித்:

பதிவர்களை
முன்னேற்றப் பாதையில்
உந்தும் சக்தியில்
என்னைப்போல் ஒருவரான
இவரைப்போல் ஒருவராக
எல்லோரும் மாறனும்!
கச்சித மொழியாடலின்
குத்தகைக்காரர்!

மிகச்சரியான கணிப்பு. முகஸ்துதியை விரும்பாதவர். விருந்து வைத்து கவனித்தாலும் செய்த தவரை சுட்டிகாட்டும் நேர்மையிம் முகம் கொண்டவர்.சிக்கனமானவர் நேரத்தை கடை பிடிப்பதில். கெட்டிக்காரர். அநீதிக்கு அக்னி முகம் காட்டுபவர். நல்ல எழுத்தாளர்.

-------------------------------------------------------------------------------------

அலாவுதீன்:

அல்லாஹ்வின் மார்க்கத்தை
அழகாய் எத்தி வைப்பான்,
கடனின்றி வாழ
கச்சித புத்தி சொல்வான்!
நல்லொழுக்க வாழ்க்கையை
தமக்குள் சாதித்து
தரனிக்கும் போதிப்பவன்!

நல்ல வாத்தியார். நல்லொழுக்கம் போதிக்கும் மார்க்க சிந்தனையாளர். வாழ்வில் சந்திக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுபவர்.
-------------------------------------------------------------------------------------

ஹமீது!

வழக்கு மொழிமூலம் அதிக
வாக்குகள் பெற்றவர்,
விஞ்ஞான கட்டுரைகூட
விளையாட்டாய் விளக்குவார்!
நாக்கிலே நக்கல் - நல்
வாக்கிலே நையாண்டி
குட்டிப் பின்னூட்டங்களில்
சுட்டி வள்ளுவன்!

சமூக அக்கறையாளார்.. நற்சிந்தைக்கு சொந்தகாரர்.விகடகவி.சொல்லில் நகைச்சுவை குழைத்துத்தருபவர். விஞ்ஞானத்தில் மேல் காதல் கொண்டவர்.மெஞ்ஞானம் இஸ்லாமே எல்லாத்திற்கும் என்பதை அழுத்த பதிபவர். நல்ல நண்பராய் இருப்பவர்.
-------------------------------------------------------------------------------------

அபு இபுறாஹீம்:

கணினிக் காட்டுக்குள்
கம்பீர சிங்கம் நீர்....
கூட்டுக் குழுமத்தின்
கொத்தான ஆணி வேர்...
வலைப்பூ உலகத்தில்
வனப்பான பூங்கா நீர்!
சொல்லாடல் சாம்ராஜ்யத்தின்
சக்கரவர்த்தி!

சரியா நாடி பிடித்திருக்கிறீர்கள். இவரை நாடி வருபவருக்கு நல்லதேயே செய்யக்கூடியவர்.. குணம் நாடி, எல்லாரும் வருவர் இவரிடம் ஓடி! என் காக்காவின் நண்பன்,எனக்கும் நண்பன், என் தம்பிகளுக்கும் நண்பன்(fun,fun,fun).எப்படி இவரால் மட்டுமே அப்படி எல்லாருக்கும் நண்பனாய், சகோதரனாய் இருக்க முடிகிறது?. யாரிடமும் சிண்டு முடியாத சிந்தனை வாதி.இவரை பாரட்டுவது என்னை நானே முதுகில் தட்டி கொடுப்பது போல்.உதவிக்கு நாம் இவரிடம் சென்று கேட்க வேண்டாம் . நமக்கு உதவி தேவை என்பதை இவரே அறிந்து கொள்வார் அந்த உதவியை நம் தேவை கருதி முழுதும் அற்பனிப்போடு செய்வார். வால் முளைக்காத வால் இவர். என்றும் திரிந்து விடாத பால் இவர். இவரின் மேல் கொண்ட அன்பால் சொல்கிறேன் என்று மட்டும் நினைக்க வேண்டாம். இவரின் பண்பால் அப்படி சொன்னேன். இவரின் உள்ளம் பாலை போல் வெண்மை அதில் நிறைந்திருப்பதெல்லாம் நன்மை.
------------------------------------------------------------------------------------

கிரவுன் தஸ்தகீர்:

தமிழொரு மொழியெனில்
தாமதில் எழில்!
சொல் விளையாட்டில்
சங்ககாலச் சித்தர்!
கவிதைப் பிரியர் - உமை
கவி யாரும் பிரியார்!
இவர்
அழைத்தால் மட்டும்
கைகட்டி வாய் பொத்தி
எப்படி...
வரிசையில் நிற்கின்றன
வார்த்தைகள்?!

நன்றி! என்னை பற்றிய செய்தி மிகையா? அன்பின் வெளிப்படா? ஆகினும் மீண்டும் நன்றி.என்னை முழுமையாய் அறிய மேலே உள்ளவரை கேட்டால் சொல்வார்(அபு இபுறாகிம் காக்கா).
-------------------------------------------------------------------------------------

எம் எஸ் எம் நெய்னா முஹம்மது:

மழை பெய்தால்
மண்மணக்கும்...
இவர்
எழுத்திலெல்லாம்
மனம் மயங்கும்!
நாம்
அறிந்த அதிரையைவிட
இவர்
அறிவித்த அதிரையே...
அழகோ அழகு!

இனியவர். நகைச்சுவைமன்னன், சமூதாய அக்கரையாளன்,சமாதான புறா.மண்ணை வர்னிப்பதில் மற்றொரு வைர முத்து,இவரின் ஒவ்வொரு வார்தையும் முத்தில் பதிந்த வைரம்.
-------------------------------------------------------------------------------------

சகோதரி அன்புடன் மலிக்கா:

தமிழ் மொழி தறித்து
தமிழ்நாட்டில் போரிட்டு
யுனிகோட் வள்ளல்
உமர்தம்பி காக்காவுக்கு
அங்கீகாரம் வென்றெடுத்த
எங்கூரு வேங்கை!
கவிதையை சுவாசித்து
கவிதையை உண்டு
கவிதையாய் வாழ்பவர்!

மல்லிகைச்சரமாய் வார்தை கோர்பவர். இனிய சகோதரி.மார்கம் வகுத்த கோட்டை தாண்டாதவர், கற்பனை கோட்டையை தாண்டியவர். நடமாடும் கவிக்குயில்.சாதனை பெண்.சளிக்காமல் கவிதை தருபவர்.மற்ற கலைகளிலும் தேர்ந்தவர். நம்மை சார்ந்தவர்.
---------------------------------------------------------------------------------

யாசிர்:

யாசிரின் பின்னூட்டம்
யாசிக்கவும் தயார்!
ஆக்கத்தைக் குறைத்து
ஊக்கத்தை பதிபவர்!
இவரின்
பின்னூட்டங்கள் தொகு...
பி ஹெச் டி பெறு!

மிகச்சரியாக சொல்லியுள்ளீர். கருவில் குழந்தை தாங்கி பின் பெற்றெடுப்பவள் தாயார்.இவரின் கருத்துக்கு பத்து மாதம் கூட காத்திருக்க தயார். வாழைப்பழத்தில் ஊசி ஏத்து"பவர்.ஊசி பட்டாசும் இவரே! அணுகுண்டும் இவரே. எளிய பண்பாளர். இவர் கருத்து எழுதுவார் என்றே கவனித்து எழுத வேண்டியுள்ளது.பள்ளிக்கூடத்துக்கு இன்பெக்ஸன் வரும் அதிகாரி போல இவரின் வரவு.
-------------------------------------------------------------------------------------

அப்துர்ரஹ்மான்:

கற்பனை செய்வதில்
விற்பன்னர் இவர்!
பூவோ பொண்ணோ
நதியோ நாற்றோ
இவர் கவிதைக்கு
உட்பட்டால்...
காலமெல்லாம் செழிப்பே!

என் பால்ய நண்பன்.என் முதல் வாசகன்,படிப்பாளி.பள்ளியில் படித்ததைவிட அனுபவ பாடம் அதிகம்.அறிவாளி.கற்று கொள்வதில் தாகம்மிக்கவன். கணவு கான்பவன்.கற்பனையின் உச்சம் காண்பவன்.ஒரு மரத்தை பற்றி எழுதும் முன் அந்த மரத்தின் மரபை படிப்பவன் பின் படைப்பவன். ஆணிவேரையும், சல்லிவேரையும் ஆழ்ந்து ஆராய்ந்து எழுதுபவன். நல்லவிமர்சகன்.இன்னும் கவனம் செலுத்தினால் நம் ஊரின் நாளைய மற்றொரு அதிரை கவி.
------------------------------------------------------------------------------------

ஹிதாயத்துல்லாஹ்:

உயிரூட்டப்பெற்ற
அறிவுக்களஞ்சியம் - இவர்
உரமேற்றப்பெற்ற
குறிஞ்சி பூதம்!
இவருக்கு
சின்ன கிரீடம் ஒன்று
செய்தணிவித்து...
குட்டி கிரவுன்
என்றே
கூப்பிட ஆசை!

என் இளவல்.உடன் பிறந்தவர்களில் என் அன்பை அதிகம் பெற்றவன். எத்தனை வயதானாலும் என் செல்லம்.அதிகாரம் மிக்கவன்,ரோசக்காரன்,பல நேரம் எனக்கு அண்ணன், ஆலோசனை சொல்லும் மந்திரி. நேர்மைக்கு எதிராக யார்வந்தாலும் விடான்.இவன் வளரும் வயதில் இவன் வயதை ஒத்தவர்கள் வண்ண கோழி குஞ்சு வளர்த்து வந்தனர்.இவனோ சமுதாயதின் மேலும், ஊடகத்துறைமேலும் எண்ணங்களை வளர்த்தான். பள்ளி படிப்பு படிக்கும் போதே பத்திரிக்கைத்துறையில் உயர்பதவியில் இருந்தவன். இவன் தேடிய பயணம் நான் அறிந்தவை வேறு. புரட்சியாளனால் வார்க்கபட்டவன்(காலம் கருதி சொல்லவில்லை-அபு இபுறாகிம் காக்கா போன்றோர் அறிவர்) சமுதாயத்தின் மேல் நிசமாய் கணவு கான்பவன்.உலக விசயம் விரல் நுனியில் வைத்திருக்கும் அன்பு தம்பி எனக்கும் பல விசயத்தில் ஆசான்.(அல்லாஹ் போதுமானவன். எல்லாப்புகழும் அல்லாஹுக்கே).
-----------------------------------------------------------------------------------

அதிரை முஜீப்:

இவர் ஒரு டாட் காம்
ஆனால் நாட் காம் (calm)
குறை சொல்லமுடியாத
கோபத்தில் கோமான்!
சமூக அக்கறையில்
சுயநலமற்ற சீமான்!

சமுதாயத்துக்கு எதிரான சமரில்(போர்களம்) இவர் அக்க போரல்ல ஆக்கபோர்! அமர்(வீரன்).இவரை பார்போரையும் ஈர்பாராய் இருப்பவர்.வேள்வி தீயை எரியவிட்டுகொன்டே அந்த தழல் தாழ்ந்துவிடாமல் கொழுந்துவிட்டு எரியச்செய்து சமுதாயத்துக்கு வெளிச்சம் தேடுபவர். கல்வி கண்ணை என்றும் மணக்கண்னாய் சுமந்து நல்ல நல்ல மாணாக்கன் வரவேண்டும் என்று பாடுபடுபவர். நாளை சமுதாயத்தூனனை நிறுவத்துடிக்கும் சிற்பி! மற்றவருக்கு பாடம் கற்பி,கற்பி என்று கதருபவர். சமுதாய ஊழியன் இவரின் அன்புக்கும், எண்ணத்துக்கும் இப்போதைக்கு அன்பு முத்தங்கள்.
-------------------------------------------------------------------------------------

ஷரபுதீன் நூஹு:

படித்த சமுதாயம்
இவருக்குப்
பிடித்த கனவாகும்...
கல்வி விழிப்புணர்வு
இவர்
வகுத்த வழியாகும்!

படிக்காமல் இருக்கலாம் என்ற எண்ணம் இருக்கலாகாது என்று எண்ணும் மற்றோரு அபுல் கலாம்.கணவு கான்பவர் கணவிலும் நம் சமுதாயம் படித்ததாய் கான கணவு கான்பவர்.இவரின் ஆதாங்கம் சமுதாயத்துக்கு ஆதாயம்.
------------------------------------------------------------------------------------

அதிரை மீரா:

மீரா வுக்கொரு
தீராக் கனவு
யாரா வது ஒரு
பேரா வது
ஊரா ளும்படி பயிலவேண்டும் என!
படித்தது பொறியியல்
படிப்பு மட்டுமே தம் பொறியில்!

மீரா! சமுதாய எண்ணம் மீறாத வீரா!உனக்குள்(உங்களுக்குள்) உள்ளபொறி! சமுதாயம் முன்னேற வேண்டும் என்கிற குறி! அது நன்மை பயக்கும் வெறி!வாழ்த்துக்கள்.
-----------------------------------------------------------------------------------

அப்துல் மாலிக்:

சமூக
அக்கறைத் தூரிகையால்
அழகு தமிழ் தொட்டு
இவர்
தீட்டியதெல்லாம்
சீர்திருத்த சிந்தனைகள்.

சமுதாயத்தின் நன்மைக்கு அறக்கூவலிடுவதில் தலைமை ஏற்பவன். இணையத்தின் வழியாக கருத்தாகவும்,மடலாகவும் சமுதாயதிற்கு தேவையான வழிமுறைகளை எல்லாருக்கும் கொண்டு சேர்ப்பவன்.சக சகோதரனின் முன்னேற்றத்தை தன் முன்னேற்றமாய் பார்பவன்.
------------------------------------------------------------------------------------

அபு ஆதில்:

இவர்
ஆக்கமெல்லாம் நல்
நோக்கம் நிரம்பிய நீர்
தேக்கம்போல!

மனதில் உள்ளதை சொல்லிவிடுகிறேன்.. இந்த சகோதரரை பற்றி அதிகம் தெரியாததால் .விபரமாக எழுதமுடியவில்லை. இவரிடம் இருந்து வந்த சில கருத்துகளை வைத்து.இவரின் எண்ணத்திலும் சமூதாயத்தின் அக்கரை சந்தனமாய் மணம்வீச காண்கிறேன்.
-------------------------------------------------------------------------------------

சின்னக் காக்கா:

சின்னக் காக்கா
ஒரு
பெரிய தம்பி,
பருவத்தில் தம்பி...
சமூக
பார்வையில் காக்கா!

அன்பு நண்பன் அழகிய எண்ணங்களுக்குச்சொந்தகாரன். இன்னும் இவரிடம் இருந்து நிறைய எதிர்பார்கிறேன்.மருந்துபோலும்,விருந்துபோலும் வராமல் தொடர்ந்து வந்து கருத்து சொல்லிவிட்டும். ஆக்கங்கள் அனுப்பியும் தொடர்பில் இருக்கவும்.
-------------------------------------------------------------------------------------

மீராஷாஹ் (எம் எஸ் எம்):

ஏறத்தாழ எமக்கு
செல்லப்பிள்ளை எனினும்
எடுத்துரைக்கும் திறமையிலே
யாருக்கும்
சலைக்காப் பிள்ளை.

இவரின் தகப்பனார் வித்தகர் என்றால் இவரோ மொழிவிற்பனர்.வார்தை செரிவும்,அடர்தியும் இவரின் எழுத்தில் தெரியும் முதிர்ச்சி.இவரிடம் கற்றுகொள்ளனும் ஊடக பயிற்சி.இவரைபோன்ற இளைஞர்களின் முயற்சி. நாளைய சமுதாயத்தின் வளர்ச்சி.
-------------------------------------------------------------------------------------

அபு ஈஸா:

திட்டமிடும் நேர்த்தியை
இவரிடம்
பிச்சையாய்க் கேட்கலாம்.

அப்பப்ப லேசா வந்துட்டுபோனாலும் கணமாய் தந்துட்டுபோகும் சிந்தனையாளர். இவரின்ஆராய்ச்சி பாணி ரொம்ப மனதை ஈர்க்கக்கூடியது. வாழ்துக்கள் இன்னும் எழுதவும்.
-------------------------------------------------------------------------

அதிரை ஷஃபாத்:

செக்கடிக் குளமும்
செல்ல அலைகளும்
முக்குளித் தாராவும்
முல்லை மலரும்
என
மயக்கியவர்
தொடர
தற்போது தயக்கம் ஏனோ?

தம்பியை பார்த்து பல வருடம் ஆகிவிட்டன. நல்ல படிப்பாளி.பார்பதற்கு நேப்பாளி.இவரின் அன்னாளய மேடைப்பேச்சு கேட்டு சந்தோச பட்டவன் நான். இன்னும் மழையின் சாரல் தலைக்கு மேலே! சில்லென்ற காற்று கண்ணத்தை வருடிச்செல்கிறது.('சி'ல்கிறது)வண்டின் ஓசையும் ,இடியின் மிரட்டல் தொனியும் இன்னும் கேட்டுகொண்டிருக்கின்றன.மின்னல் பளிச்சென்றுமின்னிச்செல்கையில் கண் இமைகள் அனிச்சையாய் மூடிக்கொள்கிறது. என்று வரும் அன்று பேய்ந்து விட்டு போன மழை மருபடியும். கவிதைத்தாகம் தீர்க்க வருமா>மேகம் வந்தால் வரும்.MAY COME?
---------------------------------------------------------------------------------

தாஜுதீன்:

யுத்த முடிவில்
பூத்த
புத்தம்புது பூ இவர்!
பதிவர் மனம் திரட்டி
அதிரைமணம் கண்டவர்!
இவர்
நாடுவது நலம்...
எனவே
இவரோடு
கூடுவரும் நலமே!

இளையவர்,இனியவர்,கிரிக்கெட்விளையாட்டில் நல்ல கேப்டனாய் செயல்பட்டவர். இங்கே சீரியஸாய் தலைமை பொறுப்பில் பார்க்கவே சந்தோசமாய் இருக்கிறது. காலம் இவ்வளவு பக்குவத்தை தமக்கு தந்திருக்கிறதா? சந்தோசத்திலும்,ஆச்சரியத்திலும் மனம் திண்டாடிபோகிறது.எத்தனை பொறுப்பு?பல நேரம் பணியின் நெருப்பு.இத்துடன் பொன்சிரிப்பு,அத்தனையும் தாண்டி இதை நடத்தும் பாங்கு தம்பி உடையான் படைக்கஞ்சான் அனால் இங்கு பெயரில் தம்பி தாங்கிய அண்ணன் உடையான் நீர் எதையும் தாங்குவீர்.
---------------------------------------------------------------------------------
அதிரை நிருபரின் ஆஸ்தான கவி

இவரைபற்றி தனியே இந்த ஆக்கம் வரும் போழுது கருத்து சொல்கிறேன். மாலுமி இவரை பற்றி காலனிலை ஆராய்ந்துதான் வடிக்க முடியும் இல்லையென்றால் எப்படி இருவரியில் முடியும்??

-------------------------------------------------------------------------------------

-- CROWN

குழந்தையின் கண்கள் 5

அதிரைநிருபர் | March 25, 2011 | , ,

கண் பார்வை விழிப்புணர்வு பதிவுகள் - 4

பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை கண்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்ற விழிப்புணர்வு தேவைப்படும் காலம் இது.

இந்த நிலையில், பிறந்த குழந்தையின் கண்களின் அமைப்பு பற்றியும் அதன் கண்களில் ஏற்படும் கோளாறுகள் பற்றியும் பேசுவோம்.

பிறந்த குழந்தையின் கண்கள், சிறிதாகக் கோடு கிழித்தாற்போல் இருக்கும். ஆனால், குழந்தையின் கண்களின் வளர்ச்சி, உடம்பில் உள்ள மற்ற பாகங்களை விட, வேகமாக இருக்கும். நான்கு வயதிற்குள் கிட்டத்தட்ட 80% வளர்ச்சி முடிவடைந்துவிடும்.

பிறந்த நிலையில் குழந்தைகளின் கண்கள் தூரப் பார்வை என்ற நிலையில் இருக்கும். கண்ணின் உருவ வளர்ச்சி ஏற்படும் போதுதான், அது இயல்பான நிலையை எட்டும்.

குழந்தைகளின் குறும்பான கரு வண்டு போன்ற கண்கள், நிறைய மேஜிக் வேலைகளையும் செய்யும். திடீரென்று மாறுகண் போல கண்களை உள்நோக்கிவைத்துக் காண்பிக்கும். ‘‘ஐயோ நம் குழந்தைக்கு மாறுகண் உள்ளதோ?’’ என்று பதறி தாய் பார்ப்பாள். ஆனால், அதற்குள் கண்களை நேராக்கி தாயைப் பார்த்து குறும்புச் சிரிப்பு ஒன்று சிரிக்கும். நாம் கண்டது கனவா? அல்லது நனவா? என்று தாய் தன் கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டு பார்ப்பது போல, அடிக்கடி இது போல் நடக்கும்.

பெற்றோர் இதைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. குழந்தைகள் பிறந்து 6 மாதத்திலிருந்து 9 மாதம் வரை தங்களது கண்களை, மூக்கை நோக்கி கொண்டு செல்வது மிகவும் இயல்புதான். அது வளர வளர இது குறைந்து கொண்டே வந்து பின்னர் இயல்பாகி விடும்.

அதென்ன துணிப்பை போல கண்ணீர்ப் பை?

புதிதாகப் பிறந்துள்ள பட்டுக் குழந்தை அழுதால், 3 மாதங்கள் வரை சத்தம்தான் வரும் கண்ணீர் வராது.

இந்த ரோஜாக்குட்டியின் கண்களில் கண்ணீர் வந்தால் அநேகமாக இது கண்ணீர்ப்பை அடைப்பு இருந்தால் வரும். கண்ணீர்ப்பை என்பது மூக்கும் கண்ணும் சந்திக்கும் இடத்தில் இருக்கும்.

கண்ணீர்ப்பை அடைப்பு ஏற்படும்போது, குழந்தையின் கண்ணில் கண்ணீர் தேங்கி நிற்கும். சில நேரம் வடியும். கண்களில் பூளை தள்ளும். இமையெல்லாம் ஒட்டிக் கொள்ளும். ‘‘ஐயோ, என் பட்டுக்குட்டியின் கண்ணுக்கு என்னாச்சு?’’ என்று தாய் பதற்றம் அடைவாள். ஆனால், இதுகுறித்து பயப்படத் தேவையில்லை. உடனடியாக கண் மருத்துவரை அணுகினால், அவர் சில சொட்டு மருந்துகளைக் கொடுத்து, கண்ணீர்ப்பையை மசாஜ் செய்வது எப்படி என்று சொல்லித் தருவார். இதைச் செய்துகொண்டே இருந்தால், பாப்பா வளர வளர, 9 மாதத்திற்குள்ளாக சரியாகப் போய்விடும்.

ஒன்பது மாதத்திற்குப் பின்னரும் கண்களில் நீர் வடிந்தால் கண் மருத்துவரிடம் தூக்கிச் செல்ல வேண்டும். அவர் Probing என்ற சிறு முறையினால் அதைச் சரிசெய்து விடுவார்.

அதன்பிறகு பட்டு பாப்பா பளீரென்ற கண்களுடன் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்.

பெற்றோர் இருவர் சொன்னார்கள். ‘‘ ‘குழந்தை வேணும் குழந்தை வேணும்னு கோயிலுக்குப் போனால் கோட்டானாய்ப் பிறக்கும்னு குழந்தைசாமி சொல்லுச்சாம்’ ’’ என்று. அவர்கள் மேலும், ‘‘டாக்டர், குழந்தையைத் தூக்கிக்கொண்டு கோயிலுக்குப் போனோமோ இல்லியோ, உங்கள் கண் மருத்துவமனைக்குத் தவறாது வந்துகொண்டு இருக்கிறோம். முதலில் கண்ணீர்ப்பை அடைப்பை சரி செய்தீர்கள். இப்போது திடீரென்று கண்ணில் ஒரே சிவப்பு. என்ன செய்வதென்றே தெரியவில்லை’’ என்று அங்கலாய்த்தார்கள்.

தெளிந்த நீரோடைப் போல உள்ள பளிங்குக் கண்களில், சிவப்பு நிறத்தைப் பார்க்கும்போது, சிலீர் என்ற பயம் மனதிற்குள் தோன்ற... அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஆயிரம் கதை சொல்வார்கள்.

‘‘அங்கு ஒரு வீட்டில் ஒரு குழந்தைக்கு கண் இப்படித்தான் இருந்தது. பார்வை போயே போச்சு’’ என்று பயமுறுத்துபவர்கள் ஏராளம். ஆனால், இது பயப்படும்படியாக இருக்காது. பிறந்து 3_4 மாதங்கள் ஆகும்போது, குட்டிப் பாப்பா, கை கால்களை அடித்துக் கொண்டு, நீந்தத் தொடங்கும். அப்படிச் செய்யும்போது, அதன் ரோஜாக் கைகளில் உள்ள மென்மையான நகம், கூர்மையான ஆயுதமாக மாறி, அதன் கண்களில் தானே குத்திக் கொள்ளும். பார்ப்பதற்குப் பயப்படும் அளவுக்கு கண் சிவந்து விடும். இதனால் ஒன்றும் ஆகாது. சொட்டு மருந்து போடப் போட, இந்த சிவப்பு கொஞ்சம், கொஞ்சமாக 15_20 நாட்களுக்குள்ளாக மாறி விடும். திரும்ப பளிங்கு வெள்ளைக் கண்களுடன் பொக்கை வாய் திறந்து பளீர்ச் சிரிப்புடன் ‘‘நல்லா பயமுறுத்திட்டேனா,’’ என்று வீட்டிலுள்ள எல்லாரையும் பார்த்துச் சிரிக்கும்.

நோய்த் தடுப்பூசி_கண் பரிசோதனை இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?

ஒவ்வொரு குழந்தைக்கும், நோய்த் தடுப்பூசி (Immuniratuen) எதற்காகச் செய்கிறோம். நோய்த் தடுப்பிற்காகத் தானே. நன்றாக நோய் நொடியில்லாமல் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. அதைத் தூக்கி கொஞ்சி ‘‘டாக்டர் மாமா கிட்டே போய் சாக்லெட்டும், ஐஸ்கிரீமும் வாங்கிட்டுவரலாம்’’ என்று ஏமாற்றி கூட்டிக் கொண்டு போகிறோம். ‘‘நறுக்’’ என்று ஒரு ஊசியைப் போட்டுக் கொண்டு வருகிறோம். தடுப்பூசி போட்ட பின்னர் இரண்டு நாட்களுக்கு, காய்ச்சல் அடிக்கிறது. ‘‘ஐயோ என் குழந்தைக்கு வலிக்கும். என் குழந்தைக்கு தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வரும். அழும். வேண்டவே வேண்டாம் தடுப்பூசி’’ என்று நாம் நினைத்தால், நம் குழந்தைகள் பலவிதமான விபரீதமான உயிர்ச்சேதம் விளைவிக்கும் நோய்களைச் சந்திக்க நேரிடும் அல்லவா.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், குழந்தைகளுக்கு மூன்றிலிருந்து ஐந்து வயதிற்குள் கண் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமானதாகும். அதாவது தடுப்பூசி போடும் அளவு அவசியமானதாகும். தடுப்பூசி போடாமல் நாம் இருப்பதில்லை. இருக்கவும் கூடாது. அதே போல்தான் குழந்தைகள் கண் பரிசோதனையும், இன்றியமையாதது. ஒரு குழந்தையின் கண்கள் பார்ப்பதற்கு ரொம்ப அழகாகவும், நோய் நொடி இல்லாததுபோல் தெரிந்தாலும் கூட 3_5 வயதிற்குள் கண்டிப்பாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் எவ்வளவோ பார்வை இழப்பை நாம் தடுக்க முடியும். இதை மனதில் கொண்டுதான் ‘‘மூன்றிலிருந்து 5 வயதிற்குள் குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்வது தடுப்பூசி போடும் அளவு முக்கியமானதாகும்’’ என்று சொல்லி வருகிறோம். அதைத் தாரக மந்திரமாகச் சொல்லத் தொடங்கினோம். அதுவே இப்போது பெற்றோர் மனதிலும் ஆசிரியர்கள் மனதிலும் பதியுமளவிற்கு நாங்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் நிறைய எடுத்துள்ளோம்.

நம் செல்லக் குந்தைகளின் கண்களில் உள்ள குறைபாட்டை 5 வயதிற்குள் கண்டுபிடித்து நிவர்த்தி செய்ய வேண்டும். தெளிவற்ற பார்வையிருந்தால் கண்ணாடி போட்டு, தெளிவான பார்வை கண்நரம்பில் விழுமாறு செய்ய வேண்டும்.

‘‘ இது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். சரியான பருவத்தில் கண்நோய்களைச் சரி செய்யாமல் குழந்தையிலேயே கண்பரிசோதனை செய்யாமல் விட்டுவிட்டீர்கள் என்று குழந்தைகளும் கேட்கக் கூடாது. பெற்றோரும் ‘‘என் குழந்தைகளுக்கு விலையுயர்ந்த பொம்மை வாங்கிக் கொடுத்தேன் வெளி நாடெல்லாம் கூட்டிச் சென்றேன். வீடு கட்டிக் கொடுத்தேன் ஆனால் கண் பரிசோதனை செய்யத் தவறி விட்டேனே, நானே என் குழந்தையின் எதிர்காலத்தைக் கெடுத்துவிட்டேன்’’ என்று காலம் கடந்து வருத்தப்படக் கூடாது.

கண் மருத்துவமனைக்கு வரும் பெரியவர்களுடன், சில நேரம் குழந்தைகளும் வருவார்கள். ‘‘அம்மா, உங்கள் குழந்தைகளின் கண்களை பரிசோதனை செய்தாகிவிட்டதா?’’ என்று கூறியவுடன் ‘‘ஐயோ, டாக்டர் என் கண்மணியின் கண்களுக்கெல்லாம் ஒன்றுமில்லை எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது’’ என்பார்கள். நாம் அனைவரும் ஒன்று மட்டும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு குழந்தையின் கண்களில் குறைபாடு ஒன்றுமில்லை என்பதை, முற்றிலும் முழுமையான கண் பரிசோதனைக்குப் பின்னர் ஒரு கண் மருத்துவரால் மட்டுமே சொல்ல முடியும்.

-- டாக்டர் ரமேஷ் மற்றும் டாக்டர் மீனா - திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை

தொகுப்பு : குமுதம் ஹெல்த்திலிருந்து


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு