சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் வரிசையில் அதிரைச் சூழலில் அதிகாலையும் அந்திமாலையும் அசத்தும் பகல் பொழுதும் ஒரே கேமராவில் சிக்கினால் இப்படித்தான் இருக்குமோ !?
கற்பனைக்கு கட்டுகள் இல்லை கற்பனைக்கு எட்டாததை எட்டிப்பிடிக்கும் சாமர்த்தியம், சாயும் பொழுதும் விழித்தெழும் பொழுதும் எப்படியிருந்தாலும் ரசனைக்கு கிடைத்த பரிசாகவே சிந்திக்கத் துணிந்தவர்களுக்குத் தெரியும்.
இனி உங்களின் ரசனைக்கு விட்டு விடுகிறேன்.
அஜ்மான் அழகிய கடற்கரை ஓரமாக அமைதியாக வாக்கிங் தாங்க போனேன் அப்படியே ரூட்டு மீன் மார்க்கெட்டை நோக்கி நடையை மாற்றியது!
வழிநெடுக சிதறிக் கிடந்த மீன்கள் என்னிடம் ஏதோ கேட்பது போன்று தோன்றியது, அது வேற ஒன்னுமில்லை...
"ஆக்குவாங்களா? பொரிப்பாங்களா? இல்லே காயப் போட்டுடுவாங்களா? ன்னு !?
நானும் உங்க கிட்டே விசாரிச்சு சொல்றேன்னு அப்படியே கேமராவில் புடிச்சுகிட்டு வந்துட்டேனுங்க !
ஷஃபி அஹ்மது






