Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label குறைபாடுகள். Show all posts
Showing posts with label குறைபாடுகள். Show all posts

குறை பாடுகள் 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 22, 2015 | , ,


எங்களூர் இரயிலடியிலும்
பறவைகளின் எச்சங்கள்
மச்சமெனக் கொண்டு
ஒரு சிமெண்ட் இருக்கை
அநாதையாக கிடக்கிறது
அமர்வோர் யாருமின்றி...

கல்யாண வீட்டு பந்திகளில்
உப்போ உவர்ப்போ
எப்படி யாயினும்
கூடியோ குறைந்தோவிடுகிறது

விருந்தினர் வருகை
எதிர் பாராமலிருந்தால்
கைகள் பிசையும்
கிராமத்து ஏழை
பின்வாசல் வழியே
அரிசியோ காய்கறியோ
கடன் வாங்கும் நிலை ..

வேண்டப்பட்டவரின்
கல்யாணம் நிராகரிக்கப்பட்டது
என்னால் - என்
மனைவியின் நகைகள்
வங்கியில் இருப்பதால் ...

பெரியவீட்டுக் கல்யாணத்தில்
பாட்டுக் கச்சேரி - அங்கே
கேமரா
தங்களை நோக்கி வரும்போது
பார்த்தும் பார்க்காததுமாய்
பள்ளிக் கால தோழியைப்
பாவம் காட்டி
நடிக்கும் பார்வையாளர்கள்..

விபரமறிந்த நாளிலிருந்தே
செய்து கொண்டிருக்கும் சாதனை
வாய்க்கு வெளியே
நுரைபடாமல்
பல் தேய்த்ததே இல்லை..

மனதைக் கட்டுப்படுத்தும்
வைராக்கியத்தில் தொழுதாலும்..
ஏதோ ஒரு
சிந்தனையில் தடுமாறாமல்
தடம் மாறாமல்
இதுவரை தொழுததில்லை!

ஆண் அழகனோ
அசத்தும் தோரனையோ
இல்லைதான் - ஆனாலும்
கண்ணாடி முன்னால்
தங்களை அலங்கரித்து
உவப்படையும் எல்லோரும்
காக்கைக்கும் தன் குஞ்சு
பொன் குஞ்சுவென
நினைவுப் படுத்துகிறார்கள் ..

பந்தலின் வெளியே
வந்திருக்கும் நபர்களில்
சரிபாதி அதிகமாகவே
காணப்படுகிற செருப்புகளின்
எண்ணிக்கை...

நல்ல கவிதைதான்! - எனினும்
பொறுமையின்மை யிலோ
பொருள் மயக்கத்திலோ
கருத்திடாமல் நகர்ந்திடும்
மனதோடும் குறைதான் !

ஷேக் முஹைதீன்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு