Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label பேயோடு ஒரு ஹாய். Show all posts
Showing posts with label பேயோடு ஒரு ஹாய். Show all posts

பேயோடு ஒரு ஹாய் - குறுந்தொர்டர் - 4/4 23

அதிரைநிருபர் பதிப்பகம் | November 10, 2013 | , ,

மேலும் ஆவி கொடுத்த அட்ரஸுக்கு சென்று அந்த வீட்டில் விசாரித்ததில் இறந்து போனவர் ஐஸ் விற்பவர் என்றும் ஐஸ் பெட்டி இவர் காலில் விழுந்ததில் காலில் அடிபட்டு நீண்ட நாட்களாக ஆஸ்பத்திரியில் இருந்து இறந்து போனவர் என்றும் அந்த தெருவில் உள்ளவர்கள் சொன்னார்கள். இந்த செய்திகளைக் கேட்டதும் மனதில் பல குழப்பங்கள்; ஆவிகள், பேய்கள் என்று இருக்கத்தான் செய்யுமா ? என்ற எண்ணங்கள் மனதில் தோன்றவே. இந்த சந்தேகங்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க அண்ணன் N.A.S. அவர்களை அணுகி அனைத்து நடப்புகளையும் சொன்னேன் அனைத்தையும் கேட்ட அண்ணன். 

“அடேய், இது பெரிய சப்ஜெக்ட்.  இன்று இரவு பத்து மணிக்கு வெட்டிகுள படித்துறையில் நம்ம மீட்டிங்கை வைத்துக் கொள்வோம்” என்றார்.

அண்ணன் N .A .S. எங்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் இடம் அந்த வெட்டிக் குளப் படித்துரை தான் சொன்னது போல் அண்ணன் சரியா பத்து மணிக்கெல்லாம்  படித்துறைக்கு வந்து விட்டார் .

நடந்த சம்பவகளைத் திரும்பவும் ஒரு முறை  கேட்டுக் கொண்ட  அவர் சொன்னார்,  “ஆவி உங்களுடன் பேசியது என்பது உண்மையல்ல. அது நீங்களே உங்களுடன் பேசிக்கொண்டது. உங்களது உள்  மனதில் உள்ள விசயங்கள்  அங்கே உங்களுக்கே தெரியாமல் பரி மாறிகொள்ளப்பட்டது”  என்றார். 

“அப்படின்னா  இறந்து போனவர் பற்றிய விபரம் எங்களுக்கு தெரியாதே? அது எப்படி?”

என்று கிடிக்கி பிடி கேள்வி  கேட்டதும் அவர் சொன்னார், 

“டெலிப்பதி என்ற ஒன்று உண்டு அது என்னவென்றால் நமக்கு ஆர்வமுள்ள விசயங்கள் மற்றும் சம்பவங்கள் ஊரில் உலகத்தில் எங்கு  நடந்தாலும்  அது நம்மை அறியாமல் நம் மனதில் டெலிப்பதியாய் அந்த செய்தி பதிந்து  விடும் இது போன்று நீங்கள்  கேரம் போர்டில் செய்யும் போது அது  நம்மை அறியாது நம் ஆழ்  மனதில் பதிந்த செய்திகள் அங்கு வந்து விழும் அப்படி வந்து விழும் செய்திகள் நம்மை ஆச்சரியமடைய செய்யும் இந்தச் செய்திகள் நம்மிடம் இருந்து நமக்கே தெரியாமல்  நாம்  அறியும் போது  நாம் அதிர்ச்சியின் உச்சத்திற்குச் செல்வதில் எந்த வித ஆச்சரியமும் கிடையாது” என்று தெள்ளத் தெளிவாக  கூறினார்.

“இதை எல்லாம் நம்பி இதன் பின்னால் திரிந்தால் நாம் நம் ஈமானை இழந்து விடுவோம் அதனால் இதயெல்லாம் நம்பாதீர்கள்”  என்று அறிவுரை  வழங்கினார்.

மேலும் அவர் சொன்னார், “ பேய்கள் என்ற ஒன்று இருந்தால் தற்போது வாழ்ந்து கொண்டு இருப்பவர்களைவிட பேய்கள் மெஜாரிடியாக இருக்கும் காரணம் உலகம் தோன்றியதில் இருந்து தற்போதுவரை இறந்தவர்கள்தான் அதிகம் அப்படி இருக்கும்போது பேய்கள் என்ற ஒன்று இருந்து அதற்கு சக்தி என்ற ஒன்று இருந்தால் தற்போதைய உலகை அந்த பேய்கள் தான் ஆட்சி செய்யும் மனிதர்கள் எல்லாம் அதற்கு அடிமையாகவல்லவா இருக்க வேண்டும் அப்படி ஒன்றும் இந்த உலகில் பேய்கள் ஆட்சி நடக்கவிலையே” என்று சொல்லியவர் தொடர்ந்து “ஆவிகள், பேய்கள்  இல்லை என்பதற்கு மேலும்  இந்த அல் குரான்  வசனம் நல்தொரு எடுத்துகாட்டு” என்று சொல்லி கீழ் காணும் அல் குரான் வசனத்தை எடுத்துரைத்தார் 

23:100   لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ ۚ كَلَّا ۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا  ۖ وَمِن وَرَائِهِم بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ

23:100. “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒருதிரையிருக்கிறது.

பேய்கள் இருப்பதாக நம்புபவர்கள்  இறைவனது இந்த வசனத்தை மறுத்தவர்களாவார்கள்; அல்லது இறைவனது கட்டுப்பாடு வலுவற்றது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள். இரண்டில் எதை ஏற்றாலும் அவர்கள் இஸ்லாமிய வட்டத்திலிருந்து தாங்களாகவே வெளியேறி விடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஒரு பிரார்த்தனை இந்த வசனத்திற்கு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணுங்கள்.

உங்களில் யாரேனும் படுக்கைக்குச் சென்றால், ‘என் இறைவா! உன் திருப்பெயராலேயே திரும்பவும் எழுவேன் (உறக்கத்தில்) எனது உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ அருள் புரிந்திடு! அதை நீ திரும்ப அனுப்பினால் உனது நல்லடியார்களை நீ பாதுகாப்பது போல் எனது உயிரையும் நீ பாதுகாத்து விடு என்று கூறட்டும்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

திருக்குர்ஆனின் 39:42 வசனம் கூறும் அதே கருத்தை இந்த நபிமொழியும் கூறுகின்றது. உறக்க நிலையிலும், மரணித்த பின்னரும் மனிதர்களின் ஆவிகள் இறைவனது கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன என்று அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் இரண்டாவது கருத்துக்கு இடமில்லாத வகையில் அறிவித்து விட்ட பின் பேய்களிருப்பதாக எந்த ஒரு  முஸ்லிம்மும் நம்ப மாட்டான்  நம்பவும் கூடாது.

ஆகவே பேய்  பிசாசு என்பதெல்லாம்இல்லாத ஒன்றை  மனிதன் மனிதனை கோழைகளாக்க மனிதனால் கற்பனையாக  தோற்றுவிக்கப்பட்ட  வெறும் கட்டுக்கதைகளே  தவிர வேறு ஒன்றும் அல்ல.

குறிப்பு :- இந்த கட்டுரையின் நோக்கம் பேய் பிசாசு இல்லை என்பதை ஆணித்தரமாக எடுத்து சொல்வதற்காகவே  தவிர வேறு எதற்காகவும் அல்ல.

Sஹமீது

பேயோடு ஒரு ஹாய் - குறுந்தொடர் 3/4 48

அதிரைநிருபர் பதிப்பகம் | November 05, 2013 | , , ,

உருவத்தை நெருங்கியதும் கம்பை ஓங்கி ஒரே போடாக நண்பன் ஓங்கி அடித்தான் அந்த அடி  தாங்க முடியாமல் அந்த "அலையாத்தி" செடி சட சட வென்று முறிந்தது மேலும் பல அடிகளை அந்த அலையாத்தி செடியை அடித்து விட்டு நண்பர்கள் நின்ற இடத்திற்கு வந்ததும் அலையாத்தி செடி வாங்கிய அடி எல்லாம் பேயை காட்ட வந்தவருக்கு விழுந்தது போல் இருந்தது அவர் முகம். 

இரவு வீடு வந்து சேரும் போது அதிகாலை மூன்று மணி வீட்டில் கதவை தட்டியதும் உம்மா வந்து கதவை திறந்து விட்டு, “இப்படி நடு சாமத்துலே ஊற சுத்திகிட்டு வர்றியே பேயோ  பிசாசோ பின்னாடியே வந்து ஊட்டுக்குள்ள உட்காரப் போவுது”  என்று ஒரு திட்டு திட்டி கதவை திறந்து விட்டார்கள்.

ஒருவாரம் கழிந்த பின்னர் ‘ஆவிகள் தொடர்பும் அடையும் நன்மைகளும்’ என்ற புத்தகம் கைக்கு வந்து கிடைத்தது புத்தகம் வந்ததில் இருந்து நண்பர்களுடன் ஒரு வரி விடாமல் ஒரே நாளில் படித்து முடித்தோம். அந்த புத்தகத்தில் சொன்னபடி ஆவிகளோடு தொடர்பு கொள்ள அனைத்து ஏற்படுகளும் செய்தாகி விட்டது.

அதெப்படி என்றால் சிறிய கேரம் போர்டின் மேல்  பலகையில்  A B C D அனைத்து எழுத்துக்களையும் எழுதி  சுத்தி ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும் கேரம் போர்டின் நடு பகுதியில் ஒரு சிறிய கிளாசை தலை கீழாக கவுத்தி வைத்து கிழக்கு மேற்காக இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டு இருவரின் ஆள் காட்டி விரலை அந்த கிளாசின் மேல் வைத்து “புண்ணிய லோகத்தில் இருக்கும் ஆவியே எங்களோடு  பேச வாருங்கள்” என்று அழைக்க வேண்டும். 

அப்படி அழைத்ததும் கிளாஸ் மெல்ல  தானாக நகரும்  A B C D ஒவ்வொரு எழுத்தாக காட்டும் அந்த நேரத்தில் நாம் என்ன கேட்க விரும்புகின்றோமோ அதை நாம் வாய்விட்டு சொல்ல வேண்டும்  அப்படி நாம் கேட்கும் கேள்விகளுக்கு அது ஒவ்வொரு எழுத்தையும்  காட்டும் அதை ஒருவர் குறித்துகொண்டு வந்தால் வாக்கியங்கள் கிடைக்கும் என்று அந்த புத்தகத்தில் பதிந்து இருந்தது.

இதை செய்யும்  இடம் சுத்தமாக (சுத்தபத்தமா) இருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் நல்ல ஆவி வரும் என்றும் அந்த புத்தகத்தில் இருந்தது. சரி எப்படியும் ஆவியுடன் பேசிவிட வேண்டும் என்ற ஆவலில் நாங்கள் இதற்காக தேர்வு செய்த இடம் சின்ன புளிய மரத்தடிக்கு எதிரிலே இருந்த நூர் கடையின் பின் பகுதி-ரூம் அன்று மலை அந்த இடத்தை கழுவி சுத்தம் செய்து பத்தியெல்லாம் கொளுத்தி வைத்து அன்று இரவு ஆவியுடன் தொடர்பு கொள்ள ஆயத்தமானோம்.

இரவு மணி ஒன்பது ஆனது நண்பர்களில் ஒரு சிலர் ஒவ்வொரு ஆளாக செத்த மாட்டில் உண்ணி இறங்குவதுபோல் பயத்தால் மிஸ்ஸிங்  ஆனார்கள்.  கடைசியா மிஞ்சியது இருவர் தான் அதில் நானும் ஒருவன். இருவரும் கடையின் பின் பகுதி ரூமில் சென்று ரெடியாக இருந்த கேரம் போர்டை எடுத்து வைத்து அதில் கிளாசை கவுத்தி இருவரும் ஆள் காட்டி விரலை வைத்து புண்ணிய லோகத்தில் இருக்கும் ஆவிகள் எங்களுடன் பேச வாருங்கள் என்றதும்  கிளாஸ் மெல்ல நகர  ஆரபித்தது கிளாஸ் நகர ஆரம்பித்ததும் எங்களை அறியாது உடம்பு ஜில்லிட்டு சிலிர்த்ததுக்  கொண்டது கிளாஸ் மெல்ல நகர்ந்து எழுத்தை தொட்டதும் சொல்லி வைத்தார் போல் கரண்டு கட்டானது.

கொஞ்ச நேரத்தில் காற்று அடித்து மழை கொட்ட ஆரம்பித்தது இருவரது விரல்களும் அனிச்சையாக கிளாசை விட்டு விலகியது அந்த  நேரம் பார்த்து   நண்பருக்கு தலை சுற்றி மயக்கம் வந்து கீழே சரிந்து விட்டார். நான் பயந்து போய் கடை உள்ளே சென்று  மெழுகுதிரி எடுத்து கொளுத்தி ஒரு சோடாவை உடைத்து அவர் வாயில் ஊற்றினேன் சோடாவை குடித்து கண் முழித்தவர் “ஏதோ இரத்த  வாடை அடிக்கின்றது” என்று சொல்லி மேலும் பயத்தை காட்ட ஆரம்பித்தார் எனக்கோ பயத்தில் வேர்த்து விறுவிறுத்து  கை காலலெல்லாம் ஆட  ஆரம்பித்தது.

ஒருவாறாக தைரியத்தை வரவழைத்து கொண்டு அந்த இருட்டிலும் நண்பரை கைத்தாங்காளாக அவர் வீட்டுக்கு அழைத்து கொண்டு போய்  விட்டு விட்டு. அங்கிருந்து எடுத்த ஓட்டம் எந்த சாம்பியனும் என்னை ஜெயித்திருக்க முடியாது அப்படி ஒரு ஓட்டம். என் வீட்டில் வந்துதான்  நின்றேன். அன்று இரவு முழுதும் தூக்கம் இல்லை, அந்த கிளாஸ் நகர்ந்த விதம் என்னை பயம் காட்டிக் கொண்டே இருந்தது ஏண்டா இதை தனியாக செய்தோம் என்ற சிந்தனை வேறு மனதை போட்டு குழப்பியது ஒருவாறாக பொழுது விடிந்தது நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடினோம். இரவு நடந்த நிகழ்ச்சியை சொல்லிக் காட்டினேன் அவர்களுக்கோ ஆச்சர்யம் கிளாஸ் நகர்ந்ததா என்று ஆமாம் என்றதும் ஒரு முடிவுக்கு வந்தோம்.

அந்த முடிவு என்னவென்றால் இந்த ஆவிகள் தொடர்பு இரவில் வேண்டாம் பகலில் குறைந்தது 5 பேராவது இருக்கணும் இப்படியாக தீர்மானம் போட்டு ஆவியுடன் தொடர்பு  கொள்ளும் வேலையை ஆரம்பித்தோம். கேரம் போர்டை எடுத்து வைத்து கிளாசை கவிழ்த்து கை விரலை வைத்தது புண்ணிய லோகத்தில் இருக்கும் ஆவி எங்களுடன் (இணைப்பில்) தொடர்பு கொள்ளவும் என்று சொன்னதும்  கிளாஸ் மெல்ல நகர்ந்து வாக்கியங்களை (எழுத்துக்களை) காட்ட ஆரம்பித்தது.

அங்கே நடந்த உரையாடல் இதோ :-

கேள்வி : வந்திருக்கும் ஆவியின் பெயர் என்ன ?

ஆவி : "என் பெயர் “       ” [பெயரைச் சொன்னா கொட்டாவி விட்டுடுவீங்க]

கேள்வி : “நீங்கள் இறந்து எத்தனை நாட்கள் ?”

ஆவி  : 38 நாட்கள் ஆச்சு

கேள்வி : “நீங்கள் எந்த ஊர் ?”

ஆவி : “இந்த ஊர்தான் !”

கேள்வி;    எந்த தெரு 

ஆவி : “அந்த விபரம் எல்லாம் சொல்ல வேண்டும் என்றால் எனக்காக  யாசின் ஓதுங்கள் அப்போத்தான் பதில் சொல்லுவேன்”

கேள்வி : ஏன் எதற்காக உங்களுக்கு யாஸின் ஓத  வேண்டும் 

ஆவி : கபுரில் வேதனை தாங்க முடியவில்லை அதனால் எனக்கு யாசின் ஓதுங்கள் 

கேள்வி : என்ன மாதிரியான வேதனை கபுரில் நடக்கின்றது 

ஆவி : அதை இங்கே சொன்னால் உங்களுக்கு புரியாது அனுபவிக்கும் போதுதான் புரியும்.

இதற்கு மேல் கேள்வி கேட்காமல் நண்பரை வைத்து யாஸின் ஓதி முடித்ததும் கேள்வி தொடர்ந்தது...

கேள்வி : உங்களுக்கு  எந்த தெரு 

ஆவி : பெரிய தைக்கால்  தெரு 

கேள்வி : உங்கள் வீட்டு நம்பர் 

ஆவி : 23 தைக்கால்  தெரு.

கேள்வி : சரி இதல்லாம் உண்மையா என்று  நாங்கள் பார்த்துவிட்டு பிறகு உங்களை  தொடர்பு கொள்கின்றோம் போய்  வாருங்கள் 

ஆவி : நல்லது நீங்கள் அழைக்கும் போது வருகின்றேன் .

தொடர்பை துண்டித்துக்கொண்டு நண்பர்கள் அனைவரும் பெரிய தைக்கால் 23ம் நம்பர் வீட்டை நோக்கி படை எடுத்தோம் 23ம் நம்பர் வீட்டுக்கு சென்று, “உங்கள் வீட்டில் சமிபத்தில் யாரும் இறந்து போனார்களா?” என்று கேட்டோம் ஆமாம் இறந்து போய்  38 நாட்கள் ஆகின்றது நாளை மறுநாள் 40ம் ஹத்தம் சோறு ஆக்கத்தான் விறகு வந்து வாசலில் கிடக்கின்றது என்றார்கள் எங்கள் அனைவருக்கும் குடல் கொதவலை வரை வந்து சென்றது 

தொடரும்
Sஹமீது

1984ல் - பேயோடு ஒரு ஹாய் ! - குறுந்தொடர் - 2/4 40

அதிரைநிருபர் பதிப்பகம் | October 29, 2013 | , , , , ,

‘பூ’வின் வாடைதான் மூக்கிற்குத் தெரிந்ததே தவிர ‘பேய்’ கண்ணுக்கு தெரியவில்லையே என்று  பேயைக் காட்ட வந்தவரிடம்,

“என்ன காக்கா, பூ வாடைதான் வருது பேயைக் காணோமே?” என்றதும்…

“ நான் பல தடவை பேயை இங்கே பார்த்திருக்கிறேன் இன்னைக்கி பூ வைத்துக் கொண்டு வந்த பெண் பேய் நம்ம எல்லோரையும் பார்த்து பயந்துகிட்டு கடல் கரை பக்கம் போச்சு” என்றார்.

அது போச்சு என்றதும் நமக்கு தைரியம் வந்துரிச்சு.  திருப்பி அவரிடம்… 

“ நம்மளை பார்த்து பேய் ஏன் காக்கா பயப்படனும்?” என்று வினவ..

“நம்மளோடு யாரோ ஒருவன் நெருப்பு ராசிக்காரன் இருக்கான் அதான் பேய் பயந்து கிட்டு கடல் கரை பக்கம் போச்சு” என்றார்.

நாங்களும் தைரியத்தை தூக்கலாக வரவழைத்து கொண்டு அவர் வரமாட்டார் என்ற நம்பிக்கையில், “சரி வாங்க காக்கா கடல் கரைக்கு போய் அந்த பேயை பார்த்து விடுவோம்” என்று கூப்பிட்டதும்.

“சரி  வாங்கடா போவலாம்”  என்று ஸ்டடியாக நின்றதும் எங்களுக்கெல்லாம்  தூக்கி வாரி போட்டது.

இப்போ  கடல் கரையை நோக்கி நடை பயணம் தொடங்கியது. 

கஸ்டம்ஸ் பில்டிங் அந்த இருட்டில் தலைவிரி கோலமாய் காட்சி அளித்தது அதற்கு காரணம் உடைக்கப்பட்ட ஓடுகளும் களவாடப்பட்ட கதவுகளும் பேய் வீட்டை நினைவு காட்டியது. அங்கே நின்ற பாதாங்காய் மரத்தை காட்டி “இந்த மரத்தில்தான் பூ வாடையோடு போன அந்த பெண்  தூக்கு போட்டு கொண்டு இறந்தது” என்று மேலும் எங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக் கொண்டே கடற்கரை ரோட்டில் உள்ள முதல் பாலத்தை கடந்தோம் கடலை நெருங்க நெருங்க பயமும் எங்களை நெருங்கிக் கொண்டே  வந்தது.

“ஏன் காக்கா அந்த பெண் தூக்கு போட்டு கொண்டு செத்தது?” என்று நூறு நாள் நிற்காமல் ஓடின அந்தக்கால ரெக்கார்டு சத்தத்தில் கேட்டதுதான் தாமதம், சட்டென்று அவரே தொடர்ந்தார்

“அந்த பெண் ஒரு கல்லுரி மாணவனை காதலித்ததாம் அவன் இந்த பாதாங்காய் மரத்தடியில்  இருந்து தான் படித்துக் கொண்டிருப்பானாம். அவன் படிக்க வரும்போதெல்லாம் இந்த பெண்ணுக்கு  பூ வாங்கிக் கொண்டு வருவானாம். இவர்கள் இருவரும் வேறு வேறு ஜாதியம், அதனால் வீட்டில் எதிர்ப்பு கிளப்பியதால் இந்த பெண் இந்த பாலங்காய் மரத்தில் தூக்கு போட்டுக் கொண்டு செத்துவிட்டது”

என்று ஒரு முன் கதை சுருக்கம் சொன்னார்.

கதையைக் கேட்ட நண்பன் “காதலால் வாழ்ந்தது கொஞ்சம் பேராத்தான் இருக்கும்  காதாதலால் செத்தது அதிகம் பேரா இருக்குமோ?” என்று முணுமுணுத்தான்.

இந்த முணுணுப்போடு நாங்கள் இரண்டாவது பாலத்தை நெருங்கும் போது  மணி சரியாக ஒன்று. இரண்டாவது  பாலத்தை தாண்டி கடல் கரையை நெருங்கியதும் கொஞ்சம் தூரத்தில் கடல் தண்ணீருக்கும் கரைக்கும் நடுவே  ஒரு நிழல் போல் ஒரு உருவம் தென்பட்டது பேயை காட்ட வந்தவரோ…

”டேய் அங்கே பாருங்கடா பேய் நிற்கின்றது”  என்றார் 


அங்கே தென்பட்ட உருவத்தை காட்டி அனைவரும் அதையே உற்று நோக்கி கொண்டிருக்கையில் நடந்தது, அந்த ஆச்சர்யம் நின்ற உருவம் லேசாக அசைந்து அசைந்து ஆடியது நின்ற இடத்திலேயே. 

எங்களுக்கோ பயத்தில் வியர்க்க ஆரம்பித்து விட்டது பக்கத்திருந்த நண்பன் சொன்னான்.

“அந்த பேய் உயரம் கம்மியா இருக்கே இது பேயா அல்லது கடல் மோகினியா” என்ற சந்தேகத்தை கொத்திக் கிளைப்பினான். 

மற்ற நண்பனோ “இது மோகினிதான் இது நம்மளை சும்மா விடாது நல்ல மாட்டிக்கிட்டோம்” என்று மேலும் பயத்தை பத்தற்றதோடு கலந்தான். 

எங்களில் ஒருவன் மட்டும் வாயே திறக்காமல் வாயில் முனுமுனுத்தவாறு இருந்தான் “என்னடா முனுமுனுக்குறே” சீண்டியதுதான் தாமதம்.

“என்னை காப்பாத்திக் கொள்ள யாசின் ஓதி கொண்டிருக்கின்றேன்” அதே முனுமுனுப்போடு.

“அடப்பாவி ஒனக்கு மட்டும் ஒதிக்கிறியோ இது நியாயமா எல்லோருக்கும் சேத்து  ஒதுடா” என்றதும் யாசினை சத்தமிட்ட உரக்க ஓத ஆரம்பித்தான்.

பேயை காட்ட வந்தவர் “பேயை பாத்தாச்சு வாங்கடா  போவலாம்” என்றார்.

இவ்வளவு நேரமும் அமைதியா இருந்த இன்னொருவன் “அது பேயாக தெரியவில்லை வேறு ஏதோ” என்றான்.

பேயை காட்ட வந்தவரோ “அப்போ நீ அது கிட்டேயே  போய் பாரு அது கொடுக்குற அறையிலே ரெத்தம் கக்கி  சவாய்” என்று பயமுறுத்தினார்.

“அடிக்கப் போறது நானா என்று பார்ப்போம்” என்று சொல்லி கடல் கரை ஓரம் நின்று கொண்டிருந்த தோணியில்  போய் ஒரு கம்பை உருவிக் கொண்டு வந்து அந்த அசைந்து  ஆடிக் கொண்டிருந்த உருவத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் பின்னால் நானும் நடக்க தொடங்கினேன்…!
தொடரும்
Sஹமீது

1984ல் - பேயோடு ஒரு ஹாய் ! - குறுந்தொடர் - 1/4 43

அதிரைநிருபர் பதிப்பகம் | October 20, 2013 | , , , , ,

1984களில் வெளிவரும் வார இதழ்களில் ஒன்றான கல்கண்டு இதுதான் நான் முதன் முதலில் படித்த வார இதழ். அப்போது திங்கள் தோறும் வரும் என்று நினைவில் இருக்கிறது, மறு திங்கள் கிழமை வரும் வரை அந்த இதழையே திரும்பத் திரும்ப  படித்துக் கொண்டிருப்பேன்  விளம்பரம் உள்பட அப்படி படிக்கும் போது ஆவிகள் தொடர்பும் அடையும் நன்மைகளும் என்ற தலைப்பில் ஒரு புஸ்தகம் விற்பனைக்கு இருப்பதாக ஒரு விளம்பரம் பார்த்ததும் அந்த வயதில் அதில் ஒரு ஆர்வம் தொற்றிக் கொண்டது.


'15 பைசா'விற்கு போஸ்ட் கார்டு வாங்கி விளம்பரத்தில் கண்ட அந்த புஸ்தகத்தை வி.பி.பி.யில் அனுப்புமாறு எழுதி போஸ்ட் செய்து விட்டேன். இதற்கிடையில் பேய்கள் (ஆவி) இருக்கிறதா? இல்லையா? என்ற விவாதம் நண்பர்கள் மத்தியில் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. 

தொடர்ந்த விவாதம் என்  பெயரைக் கொண்ட ஒரு பெரியவரிடம் தீர்ப்புக்காக சென்றது. அவரும் “பேய்கள் இருக்குதுப்பா  நான் வேணும்னா உங்களுக்கு காட்டுறேன்” என்றார்.  

பேயை பார்க்கும் ஆர்வத்தில் “சரி எப்போ காக்கா பேயை காட்டுவீர்கள்” என்றதும். 

“இன்று இரவு சரியா பத்து மணிக்கு எல்லாரும்  புளிய மரத்தடிக்கு வந்துருங்கோ” என்றார்.

பேயை பார்க்கும் ஆர்வத்தில் சரியாக பத்து மணிக்கெல்லாம் நண்பர்கள் அனைவரும் புளிய மரத்தடியில் ஆஜர்.

பேயை காட்ட அந்த  காக்காவும்   அங்கு வந்து சேர்ந்தார். “சீக்கிரம் பேயை காட்டுங்கள்” என்று அவசர படுத்தவும். 

பேயைக் காட்ட வந்த காக்கா சொன்னார் “பேயை பார்க்க வருபவர்கள் தைரியமான ஆளா இருக்கணும் பேயை பார்த்ததும் பயந்து இரத்தம் கக்கினால் நான் பொறுப்பு கிடையாது” என்ற கன்டிஷனோடு  (100 ருபாய் பத்திரத்தில் கையெழுத்து மட்டும் வாங்கலே) “அப்படி இருந்தா வாங்க” என்றார்.

அதுவும் பேயை பார்க்க ரயில்வே கேட்டை தாண்டி கஸ்டம்ஸ் பில்டிங் அருகே தான் பேய் இருக்குது என்று ஒரு பொடியைத் தூவி வைத்திருந்தார். இதை கேட்ட என்னோடு வந்த நண்பர்கள் பலரும் பயந்தவர்களாக “அவ்வளவு தூரம் போயிட்டு வர நேரம் ஆகும் உம்மா பேசும் நான் வரலே” என்று ஒவ்வொருவராக கழன்று கொண்டார்கள் (அப்போது எங்களில் யாருக்கும் கல்யாணம் ஆகலே அதுனாலதான் உம்மா பேசும் என்றவர்களாக கழட்டிக் கொண்டார்கள்).

பேய் பார்க்க போகும் தைரியமான  குருப்பில் ‘தமிழ் தெரிந்த அடியேனும்’ ஒருவன் என்பதை இங்கு சொல்ல வேண்டியதில்லை AN வாசகர்களுக்கு அடியேனின் ‘தைரியம்’  பற்றி நல்லா தெரியும்! 10 பேரா இருந்த குருப் 4 பேரா மாறிப்போய் பேய் பார்க்க கிளம்பினோம். 


இரவு மணி  10.30 ஆகிவிட்டது ரயில்வே ஸ்டேஷனை தாண்டியதும் அனைவரையும்  ஒரு வகை பயம் கவ்விக் கொண்டது. பயத்துடன் ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு நடந்து போய் கொண்டிருக்கும்போது சட்டென்று ஒருவர் “கொஞ்சம் எல்லோரும் நில்லுங்கப்பா” என்றார்.

ஆகா ‘பேயை’ இவர் பாத்துட்டாரோ என்று அனைவரும் பயத்துடன் நின்றதும் அவர் தொடர்ந்தார் “எனக்கு ஒன்னுக்கு வருது” என்றதும். 

“சரி இருந்துட்டு வா நாங்கள் போய் கொண்டு இருக்கின்றோம்” என்றதும்.

“அதெல்லாம் முடியாது எல்லோரும் ஒன்னுக்கு இருங்கள் நான் மட்டும் ஒன்னுக்கு இருக்க பயமா இருக்கு” என்று பரிதாபமாக கெஞ்சியதும்.

“சரி” என்று அவருக்காக நாங்களும் ஒன்னுக்கு இருந்தோம்.

ரயில்வே கேட்டை தாண்டியதும் எங்களுக்குள் பயத்தால் நெருக்கம் அதிகமாகியது தொடர்ந்த நடையில் வலது புறம் கடைசிலும் இடதுபுறம் கடைசிலும் நடந்து வருபவர்கள் பயத்தில் முண்டியடித்துக் கொண்டு நடுவில் புகுந்துவிட ஒரு பெரிய போட்டியே நடந்தது. 

அந்த கும்மிருட்டில் ரயில்வே கேட்டிற்கும் கஸ்டம்ஸ் பில்டிங் கிற்கும் நடுவே சென்றதும் தீடீர் என்று “யாரும் அசையாதீர்கள் அப்படியே உட்காருங்கள்” என்றார் சொன்ன மறுகணம் எங்களுக்குள் பயத்தால் நடு ரோட்டில் அப்படியே உட்கார்ந்து விட்டோம். யாரு நடுவில் பாதுகாப்பாக  உட்காருவது என்பதில் ஒரு சிறு தள்ளு முள்ளு ஏற்பட்டு பிறகு சமாதானம் ஆனது.

கடல் காற்று தொன்றலாய் எங்களை வருடிச் சென்றது. பேயை காட்ட வந்தவரிடம் “எப்போ பேய் வரும்” என்றதும்.

“கொஞ்சம் சும்மா இருங்கடா” என்று சப்தமில்லாமல் சத்தம் போட்டார். என் பக்கத்தில் இருந்த நண்பன் சொன்னான் இல்லை இல்லை புலம்பினான் “நேரமாக ஆக மரியாதை கொறஞ்சி போவுது” என்று புலம்பியது என்  காதுக்கு மட்டுமே கேட்டது. இது அவரோட டைம்ன்னு நினைத்து கொண்டு முழங்காலை கட்டிப் பிடித்து கொண்டு அனைவரும் கப்சிப் என்று நடு ரோட்டில் உட்கார்ந்து இருந்தோம்.

மணி 11.30 ஆனது தொன்றலாய் வீசிக் கொண்டிருந்த காற்று சற்று ஓய்ந்தது அதோடு சேர்ந்து தென்னை மற தோகையின் சலசலப்பும் ஓய்ந்தது. அங்கு நாங்கள் விடும் மூச்சு காற்று சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று ஒரு சம்பவம் நடந்தது தென்னை மரத் தோகையிலிருந்து சடசடவென சத்தம்  வந்தது, காற்று திசை மாறி வீச ஆரம்பித்தது பேயை காட்ட வந்தவர் சொன்னார் “எல்லாம் தைரியமா இருங்கள் பேய் வரும் நேரம் ஆச்சு” என்று அவர் சொன்ன கணமே மூச்சு காற்று சத்தத்தோடு இதய துடிப்பு சத்தமும் வெளியே கேட்க ஆரம்பித்தது. சற்று நேரத்தில் மூக்கில் சொக்க வைக்கும் வாசம் நுகர ஆரம்பித்தது. பேயை காட்ட வந்தவரோ “இன்னைக்கு வந்து இருக்கின்ற பேய் பெண் பேய் அதான் வாசமா இருக்கு” என்றார்.

பேயை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் எங்களின் கண்கள் அந்த இருட்டிலும் நாலா பக்கமும் அலை பாய்ந்தது காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அந்த வாடையும் அதிகரித்தது.

ஹாய்யாக தொடரும்...
Sஹமீது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு