Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label முல்லைப் பெரியார். Show all posts
Showing posts with label முல்லைப் பெரியார். Show all posts

'அணை'யட்டும்... 33

அதிரைநிருபர் பதிப்பகம் | December 14, 2011 | , , , ,


ஒட்டிப் பிறந்தோமடி
ஒன்றாய் வளர்ந்தோமடி,அவரை
'குட்டி' என்பேனடி..என்னை
'குழந்தாய்' என்றாரடி..

இன்றோ..

சிந்தை இரங்காரடி..
செம்மை மறந்தாரடி..
விந்தை இதுவல்லவோ..
விளித்தல் இயலாதடி..

அண்டை நிலமல்லவோ.
அதனை விளங்காரடி..
பண்டை நட்பல்லவோ..
பாசம் இழந்தாரடி..

முல்லை பெரியாரடி..
மூட நினைத்தாரடி.
தொல்லை இதுதானடி
தொன்மை அறியாரடி..

நிலத்தைத் தந்தாரடி..
'அணை'த்து கொண்டோமடி..
நீரின் கரம்கொண்டுதான்
பிணைப்பைக் கண்டோமடி..

அகவை அதிகம்வரின்
ஆற்றல் குறைதலடி,
அணைக்கு மட்டுமின்றி
அத்தனைக்கும் இயல்பாமடி.

ஆய்வு செய்தாரடி.
'ஆகும் இத்துணை அடி'
அழகாய்ச் சொன்னாரடி- இருந்தும்
அச்சம் ஏந்தானடி?

புதிய அணைகட்டுதல்
விரயம், உணராரடி.
எதிலும் சுகம்கண்டிடும்
அரசியல் விளையாட்டடி.

நடுவண் அரசைத்தான்
நம்பி உள்ளோமடி..
விடியும் நாள்நோக்கித்தான்
வேட்கை கொண்டோமடி..

பேசலும் விளித்தளும்
பேதம் இல்லையடி..
கூடி வாழ்வோமடி.
கோடி நன்மையடி...

-அதிரை என்.ஷஃபாத்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு